Followers

Sunday, October 14, 2012

ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.

ஆதி மனிதனின் உயரம் என்ன? சில தேடல்கள்.

முதன் முதலாக கொரில்லாக்களை பற்றிய ஆராய்ச்சியை விரிவான முறையில் மேற் கொணடவர் போஸே தயான் (Fossey Dian) என்ற பெண்மணி ஆவார். இந்த போஸே தயான் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் வல்லுனர் ஆவார். இவர் கொரிலாக்களைப் பற்றிய ஆய்விற்காக தன் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தவர். இதற்கென காங்கோ மற்றும் ருவாண்டாவின் மலைக் காடுகளில் தன் பாதச் சுவடுகளை பதித்து கொரில்லாக்களைப் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர். இவர் மூலமாகத்தான் கொரில்லாக்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிய வந்தன. 1967 முதல் 1985 ஆண்டு வரை காட்டில் அமைந்த தன் ஆராய்ச்சி கூடத்தில் மர்மமான முறையில் கொல்லப்படும் காலம் வரை இந்த ஆராய்ச்சியில் மிக ஈடுபாட்டுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். சில ஆராய்ச்சியாளர்களால்தான் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விக்கி பீடியாவே கூறுகிறது. இவரது ஆராய்ச்சி முடிவு டார்வினின் பரிணாமவியலுக்கு குழி தோண்டும் விதமாக இருந்ததால் பரிணாமவியலாரே இவரை போட்டு தள்ளியிருக்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Dian_Fossey



இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் கொரில்லாக்களைப் பற்றிய ஒரு நல்ல தெளிவைக் கொடுத்துள்ளது. அவருக்கு பிறகும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த கொரில்லாக்கள் டார்வினை மயக்கியதற்கு காரணம் மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள உருவ ஒற்றுமை ஒன்றைத் தவிர வேறு அறிவியல் காரணங்கள் இல்லை. கடவுளை நேரிடையாக காட்டினால்தான் அந்த இறைவனை ஒத்துக் கொள்வேன் என்பவர்கள் பரிணாமம் நடந்து குரங்கு மனிதனாக மாறியதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்காமலே 'இல்லாமலா சொல்லுவாரு' என்று கற்பனை கதைகளை இன்று வரை ஒப்பேத்தி வருவது என்ன எழவு நியாயமோ தெரியவில்லை.

பரிணாமத்தின் அடிப்படை நியதியே ஒரு உயிரினம் மாற்றங்களை உள்வாங்கி அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே, அந்த மாற்றங்கள் உயிரினத்தின் தக்க வைத்தலுக்கு நன்மை பயக்கும் போது அது தொடரும், அதே போல மாற்றங்கள் தேவை இல்லாத போது அது நீக்கப்படும். அதே போல மாற்றங்களை நிகழ்த்துவதாலும், மாற்றங்களை உள்வாங்குவதாலுமே இனம் விருத்தியடைந்து வருகின்றது எனலாம். பரிணாமத்தை தூக்கிப் பிடிப்போர் வைக்கும் வாதங்களே இது.

நாம் கேட்பது ஒரு உயிரினத்திலிருந்து மற்ற உயிரனமாக மாற புறத் தோற்றத்தில் அந்த விலங்கு 1,2,3,4 என்று பல நிலைகளை அடைந்து தற்போதய நிலையை அடைந்திருக்க வேண்டும். இதற்கு பல மில்லியன் வருடங்கள் ஆனதாக பரிணாமத் தத்துவம் கூறுகிறது. ஒரு இனம் ஒன்றாவது நிலையிலிருந்து நான்காவது நிலையை அடைவதாகக் கொள்வோம். இதற்கு இடைப்பட்ட இரண்டு நிலைகளை அந்த உயிர் பரிணாமத்தால் அடைந்திருக்க வேண்டும். இப்பொழுது நாம் பார்க்கும் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் இன்று நாம் எப்படி பார்க்கிறோமோ அதே போன்ற நிலையில்தான் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் பல லட்ச வருடங்களுக்கு முன்பும் இருந்துள்ளன என்பதை விளங்குகிறோம். இதற்கு இடைப்பட்ட இனமான இரண்டாம் நிலையும், மூன்றாம் நிலையும் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை. இதை அவர்கள் சமர்ப்பித்து விட்டால் டார்வினுக்கு ஒரு 'ஜே' போடலாம் :-)

ஜீன்களின் மாற்றத்தினால் உயரத்திலும் பருமனிலும் பல வித்தியாசங்கள் நடந்துள்ளது. இதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். தண்ணீரில் நீந்தியது ஊர்வனவாக மாறியதற்கும், ஊர்வன பிறகு பறப்பனவாக மாறியதற்கும் படிம ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை.

//முதலில் ஆதி மனிதனின் 10 அடி எலும்புக் கூடுகள் எங்கே எப்போது கிடைத்துள்ளன எனக் கூற முடியுமா ? நல்ல காமடி பண்றீங்க சார் நீங்க.. படித்த உங்களைப் போன்றோரே இப்படியான சதிக் கோட்பாடுகளைப் பரப்ப நினைத்தால் பாமரர் பாடு அதோ கதி தான் !!!// - இக்பால் செல்வன்

மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் எலும்புக் கூடு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது.




மனிதன் 10 அடிக்கு மேல் உயரமாக முன்பு இருந்துள்ளான் என்பதற்கு இன்றும் சாட்சியாக சவுதி அரேபியாவில் அல் ஊலாவில் உள்ள 'மத்யன் சாலிஹ்' என்ற கிராமத்தை சொல்லலாம். இங்கு நானும் எனது நண்பர்களும் நேரிலேயே பார்த்த இடம் இது. முகமது நபிக்கு முன் அரபுகளுக்கு நபியாக அனுப்பப்பட்ட அரபியரான நபி சாலிஹ் அவர்களை பின்பற்றி மக்கள் வாழ்ந்த கிராமம் இது. கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது போன்ற மலை வீடுகளை நாம் பார்க்கலாம். இந்த மக்கள் மலைகளையே குடைந்து தங்கள் வீடுகளை அமைத்துள்ளனர். நானே ஆறடி உயரமுடையவன். என்னை விட மூன்று மடங்கு உயரமாக இந்த வீட்டின் வாசற்படி அமைந்துள்ளது. மலைகளை உடைக்கும் வசதியில்லாத அந்த காலத்தில் கைகளாலேயே உளியைக் கொண்டு இவ்வளவு பெரிய வாசற்படியை அந்த மக்கள் ஏன் உருவாக்க வேண்டும்? அந்த மக்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தார்களோ அந்த அளவு வாசற்படிகளையும் அமைத்துள்ளார்கள் என்ற காரணத்தைத் தவிர வேறு காரணம் இருக்க சாத்தியமில்லை. நாம் தற்போது சராசரியாக ஆறடி உள்ளதால் 6 அல்லது 7 அடிகளில் வாயிற்களை நமது வீடுகளுக்கு அமைக்கிறோம்.

ஒவ்வொருவருக்கும் தனித் தனி படுக்கை அறைகள். வீடுகளின் சுவர்களில் பூக்களின் படங்களை செகுக்கி வைத்துள்ளார்கள். சில வீடுகளின் சுவர்களில் நம் ஊர் கோவில்களில் காணப்படுவது போன்ற சில உருவங்களையும் செதுக்கியுள்ளனர். நம் ஊர் கடவுள்களுக்கு உறவினர்களாக இருக்கலாம்.


அடுத்து இந்த மக்களின் பிரார்த்தனைக் கூடம் எந்த அளவு உயரமாக கட்டப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். மனிதர்கள் 10 அடிக்கு மேல் உயரமானவர்களாக இருந்ததால்தான் இவ்வாறான உயரத்துக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

https://maps.google.com/maps/ms?ie=UTF8&hl=en&safe=on&msa=0&msid=113753071555606991078.0004748cfea43852a2b4a&ll=27.80021,41.19873&spn=9.322106,14.084473&z=6

மதாயின் ஸாலிஹ் செல்வதற்கு இந்த கூகுள் மேப் உங்களுக்கு வசதியாக இருக்கும்.

3000 அல்லது 4000 வருடங்களுக்கு முன்பு இந்த மக்கள் வாழ்ந்ததாக அறிகிறோம். எந்த ஒரு ஆராய்ச்சியாளரையும் அழைத்து வந்தால் நானே அவர்களை எனது செலவில் அழைத்து செல்கிறேன். எந்த பரிசோதனையையும் செய்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு கிராமமே இன்றும் ஆராய்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிறது..







கால் பாதத்தின் இந்த படிமமானது டெக்ஸாஸ் மாகாணத்தின் ஆற்றோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதன் 10 அடி உயரமும் 1000 பவுண்ட் எடை உள்ளவனாகவும் இருந்திருக்க வேண்டும். டெக்ஸாஸ் மாகாணத்தில் பிளாங்கோ அருங்காட்சியகத்தில் இன்றும் இது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கால்களின் அளவுகளில்தான் வித்தியாசம் உள்ளதே ஒழிய அதன் அமைப்புகளில் எந்த மாற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. குரங்குகளின் கால்களோடு கொஞ்சம் கூட இவைகள் ஒத்துப் போகவில்லை..

http://www.6000years.org/frame.php?page=giants

1950 வாக்கில் துருக்கியின் யூப்ரடீஸ் பள்ளத்தாக்கில் சாலைகளை பழுது பார்க்கும் பணி நடக்கும் போது ஒரு பெரிய ஒற்றை எலும்பின் பாகம் கிடைத்தது. இதன் அளவு 120 செமீ. பிளாங்கோ படிமங்கள் அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஜோ டைலர் ஆய்வுக்கு உட்படுத்தி இதனை உறுதி செய்துள்ளார். இந்த காலுக்குரிய மனிதன் கிட்டத்தட்ட 14 லிருந்து 16 அடி உயரம் உள்ளவனாக இருந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் இந்த எலும்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இந்த எலும்புப் பகுதியும் தற்போதுள்ள மனிதனின் காலெலும்போடு ஒத்துப் போகிறதே ஒழிய குரங்குகளோடு சற்றும் பொருந்தி வரவில்லை. இது ஒன்று மட்டும் அல்ல. தோண்ட தோண்ட பரிணாமத்துக்கு எதிரான தகவல்களே அதிகம் வந்து கொண்டிருக்கிறது.



அனைத்து ஆதாரங்களையும் ஒரே இடத்தில் இந்த யுட்யூபில் பார்த்துக் கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------
//ஆதி மனிதன் 60 முழம் என்றால் அவன் சந்ததிகள் இன்று சுருங்கிப் போனதேனோ ??? கடவுள் சிக்கன நடவடிக்கை செய்துவிட்டாரோ ????//

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர் டாக்டர் மார்தா லாகர் தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஓடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. அது கடந்த 1 லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களுடையது என தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.

அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போது வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டு பிடிக்கப் ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.-விக்கிபீடியா

http://www.dinamalar.com/News_Detail.asp?id=258195&Print=1

இத்தனை வருடம் பழமையான மண்டை ஓடுகள் கிடைத்தும் தற்போதுள்ள மனிதனின் அமைப்பில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. உயரமாக இருந்த மனிதன் புறத் தோற்றத்தில் ஆறடி ஐந்தடியாக குறைவாக்கப்பட்டிருக்கிறான். இதுவும் அவன் வாழ்ந்த சூழலினால் ஏற்பட்ட மாற்றம். இந்த இடத்திலும் வழக்கம்போல் நம் டார்வின் மாமாவின் பரிணாமம் தோற்றுப் போகிறது.

----------------------------------------------------


குகை மனிதனின் தாடை எலும்பு. தற்போதய மனிதனுக்கும் பழங்கால மனிதனுக்கும் அளவுகளில் உள்ள வேறுபாடு. இங்கும் இந்த தாடை எலும்புகள் கொரில்லாக்களோடு ஒதது வரவில்லை. மனிதனோடே ஒத்து செல்கின்றன.


---------------------------------------------------
இந்த படிமங்களின் வரலாறையும் இங்கு லேசாக பார்ப்போம்.

"Ever since Darwin there has been a disturbing void, both paleontological and psychological, at the base of the Phanerozoic eon. If his theory of gradualistic evolution be true, then surely the pre-Phanerozoic oceans must have swarmed with living animals—despite their conspicuous absence from the early fossil record" - N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125.

தொல்லுயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு குழப்பமான வெற்றிடம் டார்வினின் காலந்தொட்டே இருந்து வருகின்றது. படிப்படியாக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டும் என்ற அவருடைய கோட்பாடு உண்மையென்றால், கேம்ப்ரியன் காலத்திற்கு முன்பான காலக்கட்டம் விலங்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆரம்ப கால உயிரினப்படிமங்களில் அவை தென்படவே இல்லை - (extract from the original quote of) N. J. Butterfield, Terminal Developments in Ediacaran Embryology, Science Magazine, 23 December 2011, Vol. 334, no. 6063, pp. 1655-1656, DOI: 10.1126/science.1216125 (simplified for the easy understanding).

உயிரினப் படிமங்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளாகததான் நமக்கு கிடைக்கிறது. இங்கிருந்துதான் படிமங்களின் வரலாறு தொடங்குகிறது. கேம்பிரியன் காலமான இங்கிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் அனைத்தும் முழுமையான நாம் தற்போது பார்க்கும் வடிவிலேயே எடுக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு உயிரும் பரிணாமம் அடைந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இல்லை.

இந்த கேம்பிரியன் காலத்துக்கு முந்தய காலமான இடியக்காரா காலம் சென்று படிமங்களை ஆராய்ந்தால் ஏதும் கிடைக்குமா என்று உங்கள் ஆய்வாளர்கள் தேடினர். ஆச்சரியமாக இடியக்காரா காலத்தில் விலங்களின் படிமங்கள் சுத்தமாக இல்லை. அதாவது அந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான எந்த துப்பும் கிடைக்கவில்லை. இடியக்காரா காலத்தில் மறைந்த படிமங்கள் கேம்பிரியன் காலத்தில் திடீரென எவ்வாறு வந்தது? இதற்கு டார்வின் ஆதரவாளர்கள் என்ன பதிலை வைத்திருக்கின்றனர்?

திமிங்கிலத்தை எடுத்துக் கொண்டால் புறத் தோற்றம் மட்டும் அல்லாது சுவாச உறுப்புகளும் தரைக்கு ஏற்றவாறு பரிணாமம் அடைந்திருக்க வேண்டும். புறத் தோற்றத்தையே அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாமல் திணரும் நீங்கள் சுவாச உறுப்புகளின் பரிணாமத்தை எந்த காலத்தில் நிரூபிக்கப் போகிறீர்கள்? :-)

http://suvanappiriyan.blogspot.com/2011/06/blog-post_25.html
http://garry-nelson.hubpages.com/hub/Human-Giants
http://mtblanco.com/MtBlancoTour.htm

டிஸ்கி: இன்று வரை எனது இந்த வலைப்பூவுக்கு வந்த மொத்த பார்வையாளர்கள் கணக்கு 206908 என்று கூகுள் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் படிப்பவர்களின் எண்ணிக்கை சராசரியாக 800 லிருந்து 1000 மாக உள்ளது. திரட்டிகளில் தமிழ்மணத்தின் மூலமே அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர். இன்ட்லி, தமிழ்10 போன்ற திரட்டிகளிலிருந்தும் குறிப்பிட்ட பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

ஆபாசம், சினிமா, மொக்கை என்று வெகுஜன விருப்பத்தை புறந்தள்ளி இந்த அளவு வாசகர்கள் வருவது பெரிய விஷயம். நல்ல விஷயங்களை கொடுத்தால் அதை ஆர்வமுடன் படிக்க வாசகர்கள் உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு ஓட்டுக்களையும் வழங்கி வரும் வாசகர்களுக்கு நன்றி. அதேபோல் தமிழ் மணம், இண்ட்லி, தமிழ10 திரட்டிகளுக்கும் நன்றி!

88 comments:

Nizam said...

மாஷா அல்லாஹ் நல்ல அலசல் பதிவு சகோ, ஜெஸக்கல்லாஹ் ஹைர்

போஸே தயான் ஆராய்ச்சியாலரை கொன்று வந்தவழிகரார்கள் காட்டுமிரண்டிகள் என்று நிருப்பிக்கிறார்கள்.

Unknown said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்

இது ஒரு சாதாரண மனிதன் போட்ட பதிவு மாதிரி தெரியல... நாடி, நரம்பு ,ரத்தம் எல்லாத்துலையும் அறிவு நெறைஞ்ச ஒருத்தராலதான் இந்த மாதிரி பதிவு எல்லாம் போட முடியும்....

சொல்லுங்க ....சொல்லுங்க ....சொல்லுங்க ....

நீங்க யாரு ....நீங்க யாரு ....நீங்க யாரு...

சௌதில என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க .....

சொல்லுங்க ....சொல்லுங்க ....சொல்லுங்க ....

(பாட்சா பட எப்பெக்ட்....வேற ஒன்னும் இல்ல... )

நன்றியுடன்
நாகூர் மீரான்

suvanappiriyan said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//இது ஒரு சாதாரண மனிதன் போட்ட பதிவு மாதிரி தெரியல... நாடி, நரம்பு ,ரத்தம் எல்லாத்துலையும் அறிவு நெறைஞ்ச ஒருத்தராலதான் இந்த மாதிரி பதிவு எல்லாம் போட முடியும்....//

நான் சாதாரண மனிதன் தான் சகோ. ஆர்வமும் வாய்ப்பும் வசதிகளும் நேரமும் இருந்தால் யாரும் பதிவுக்ள் எழுதலாம். பரிணாமவியலில் என்னை விட அருமையாக ஆதாரத்தோடு எழுதக் கூடியவர் அஹமத் ஆஷிக். ஆஷிக், கார்பன் கூட்டாளி போன்ற என்னை விட திறமை மிக்கவர்களும இங்கு உள்ளார்கள். அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

//சௌதில என்ன பண்ணிக்கிட்டு இருக்கிங்க ....//

இப்போ உங்க பின்னூட்டத்துக்கு பதில் எழுதிக்கிட்டு இருக்கேன்.

(இது கல்யாண பரிசு தங்கவேலு போண்டா ஜோக் மாடல்) :-)

ஒரு கம்பெனியில் கணிணி ஆபரேடராக இருக்கேன்.

//சொல்லுங்க ....சொல்லுங்க ....சொல்லுங்க ....//

சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்....சொல்லிட்டேன்....



suvanappiriyan said...

சலாம் சகோ நிஜாம்!

//போஸே தயான் ஆராய்ச்சியாலரை கொன்று வந்தவழிகரார்கள் காட்டுமிரண்டிகள் என்று நிருப்பிக்கிறார்கள்.//

அவரது ஆராய்ச்சி முழுமை பெற்றிருந்தால் பல உண்மைகள் வெளி வந்திருக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இராஜகிரியார் said...

சலாம் சகோ.

அருமையான தகவல்கள். ஆணித்தரமான கேள்விகள். பார்ப்போம் - பரிணாமவாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று...

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நல்ல பதிவு,ஆனால் வழக்கம் போல உங்களுக்கு தேவையான பகுதிகளை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றவைகளை மறைத்துவிட்டீர்கள்.

ஆதி மனித நாகரீகம் பற்றி எனது திரும்பிப்பார் பதிவில் வருகிறது ,அப்போது சொல்லலாம் என இருந்தேன்.

கட்டிடத்தின் நுழைவு வாயில் உயரமாக வைப்பதால் ,மனிதன் அந்த அளவுக்கு உயரமாக இருந்தான் என பொருள் இல்லை. இப்போதும் 5 நட்சத்திர விடுதிகளில் நுழைவு வாயில் உயரமாக இருக்கிறது எனவே மனிதன் 10 அடி உயரம் என்பதா?

பழைய கோயில்கள், அரண்மனைகள் அனைத்திலும் வாசல்கள் உயரமாக தான் இருக்கும்.

கட்டிடக்கலையில் பிரம்மாண்டமாக கட்ட செய்வது.

பிக்மிஸ் எனப்படும் குள்ள மனிதர்களும் மிக நீண்ட கால பரிணாம மாற்றாம் இல்லாமல் இருக்கிறார்கள், எனவே மனித இனம் பல்வேறு உயர அளவில் செக்ரிகேட் ஆகி இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் பழமையான அடக்கம் செய்யும் தாழிகள் எனப்படும் மட்கலம் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள், அதன் அளவை வைத்து அப்போது மனிதர்கள் சுமார் 5 அடிக்கு கீழ் அல்லது பக்கம் வாழ்ந்திருக்கலாம் என சொல்கிறார்கள்.

மேலும் நிலம், நீர், ஆகாயம் என உயிர்னங்கள் பரிணாமம் அடைந்ததற்கு படிமங்கள் கிடைத்துள்ளது.

இப்பொழுதும் இமாலயன் லிசார்ட் எனப்படும் பல்லிக்கு இறகு போன்ற ஜவ்வுக
ள் உண்டு, காற்றில் சிறிது தூரம் கிளைடர் போல பறந்து வேறு மரம் செல்லும்.

இராஜகிரியார் said...

//கட்டிடத்தின் நுழைவு வாயில் உயரமாக வைப்பதால் ,மனிதன் அந்த அளவுக்கு உயரமாக இருந்தான் என பொருள் இல்லை. இப்போதும் 5 நட்சத்திர விடுதிகளில் நுழைவு வாயில் உயரமாக இருக்கிறது எனவே மனிதன் 10 அடி உயரம் என்பதா?

பழைய கோயில்கள், அரண்மனைகள் அனைத்திலும் வாசல்கள் உயரமாக தான் இருக்கும்.//

ஏனுங்கோ... 5 நட்சத்திர விடுதிகளும், அரண்மனைகளும் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் உயரமான வாயில்களா உள்ளன? குறைந்தபட்சம் நம்முர் கோயில்களை சுற்றியுள்ள வீடுகளில் கூட உயரமான வாயில்களை காண முடிவதில்லையே? ஏன்? முழுங்காலுக்கம் மொட்டை தலைக்கும் முடிச்சு போடாதீங்கண்ணா...

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//கட்டிடத்தின் நுழைவு வாயில் உயரமாக வைப்பதால் ,மனிதன் அந்த அளவுக்கு உயரமாக இருந்தான் என பொருள் இல்லை. இப்போதும் 5 நட்சத்திர விடுதிகளில் நுழைவு வாயில் உயரமாக இருக்கிறது எனவே மனிதன் 10 அடி உயரம் என்பதா?

பழைய கோயில்கள், அரண்மனைகள் அனைத்திலும் வாசல்கள் உயரமாக தான் இருக்கும்.//

ஹோட்டல்கள் , கோவில்கள் என்பது பலரும் கூட்டமாக வரக் கூடிய இடம். ஆனால் வீடுகளில் நான்கு பேரோ ஐந்து பேரோதான் இருப்பர். அதிலும் மலைகளை குடைந்து வீடுகள் அமைப்பது என்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல. இன்றைய காலத்தில் நவீன உபகரணங்களை வைத்து இலகுவாக கட்டி விடலாம். 2000 வருடங்களுக்கு முன்பு வெறும் கைகளால் குடைந்த மலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆடம்பரத்துக்காக அல்லாமல் அவசிய தேவைகளை ஒட்டியே இந்த வாயில்கள் அமைக்கப்பட்டடிருக்க வேண்டும்.

//பிக்மிஸ் எனப்படும் குள்ள மனிதர்களும் மிக நீண்ட கால பரிணாம மாற்றாம் இல்லாமல் இருக்கிறார்கள், எனவே மனித இனம் பல்வேறு உயர அளவில் செக்ரிகேட் ஆகி இருக்கிறார்கள் என ஆய்வாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்.//

மனிதனின் உயரம் கூடுவதோ குறைவதோ அவனது வாழ்வியல் சூழலுக்கேற்ப பரிணாமம் ஏற்படுகிறது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்த கதையைத்தான் அதற்குத்தான் படிம ஆதாரங்கள் கேட்கிறேன்.

//மேலும் நிலம், நீர், ஆகாயம் என உயிர்னங்கள் பரிணாமம் அடைந்ததற்கு படிமங்கள் கிடைத்துள்ளது.//

எங்கு கிடைத்துள்ளது? ஆதாரம் தர முடியுமா? முதலில் நீரில் உள்ள உயிரினம் நிலத்துக்கு வர முதலில் அதன் சுவாச உறுப்புகளில் பரிணாமம் நடக்க வேண்டும். இல்லை என்றால் நிலத்துக்கு வந்தவுடன் அவை இறந்து விட சாத்தியம் உண்டு. அவ்வாறு சுவாச ஒறுப்புகளில் மாற்றம் தென்படும் படிமங்கள் கிடைத்துள்ளனவா?

//இப்பொழுதும் இமாலயன் லிசார்ட் எனப்படும் பல்லிக்கு இறகு போன்ற ஜவ்வுக
ள் உண்டு, காற்றில் சிறிது தூரம் கிளைடர் போல பறந்து வேறு மரம் செல்லும்.//

அவை இரண்டும் தோற்றத்தில் ஒத்திருந்தாலும் இனங்கள் அடிப்படையில் வேறு வேறு ஆனவை. படிம ஆதாரங்கள் இல்லாமல் நமது அநுமானத்தை வைத்து கற்பனை குதிரையை தட்டி விடக் கூடாது.




suvanappiriyan said...

சலாம் சகோ ராஜகிரியார்!

//அருமையான தகவல்கள். ஆணித்தரமான கேள்விகள். பார்ப்போம் - பரிணாமவாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அஞ்சா சிங்கம் said...

/////ஆபாசம், சினிமா, மொக்கை என்று வெகுஜன விருப்பத்தை புறந்தள்ளி இந்த அளவு வாசகர்கள் வருவது பெரிய விஷயம். நல்ல விஷயங்களை கொடுத்தால் அதை ஆர்வமுடன் படிக்க வாசகர்கள் உள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது./////////////////////////

மற்றவர்கள் எப்படியோ நான் உங்கள் நகைச்சுவைக்காகத்தான் வருகிறேன் ....:-))

நம்பள்கி said...

தனிமரம் தோப்பாகாது! நான், "யாமே எல்லாம் அறிந்தவன், எமக்கு எல்லாம் தெரியும்," என்ற கொள்கையை உடையவன் அல்ல. பரிணாமத்தைப் பற்றி படித்து இருக்கிறேன்; ஆழ்ந்த அறிவு எனக்கு கிடையாது. ஆனால் சில உண்மைகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன்!

மனிதர்களில் பல வகை உண்டு. பிக்மி குடியினரை மட்டும் வைத்து மனிதர்கள் எல்லோரும் குள்ளம் என்று சொல்ல முடியுமா? பல பிக்மி மனிதர்கள் எலும்புகளை காட்டி அப்படி சொன்னாலும் பரவாயில்லை. ஒரே ஒரு பிக்மியின் எலும்பை வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லோரும் குள்ளம் தான் என்று சொல்வதை ஒத்துக் கொள்வீர்களா?

இப்பொழுது இந்தியாவில் மக்கள் நன்றாக வளருகிறார்கள். நான் படிக்கும் போது எங்கள் வகுப்பில் இரண்டு பேர் தான் ஆறடியார்கள்; நானும் எனது நண்பன் மட்டுமே!

என் Shoe சைஸ் 12 wide foot (UK size 11); 13 if shoes are narrow or pointed (12 UK size).

என் கால் அளவை வைத்துக் கொண்டு எல்லோருடய காலும் அப்படிதான் இரூந்திருக்கும் என்று சொல்லமுடியுமா?

Shakil Oneil. கூடைப்பந்தாட்ட வீரர் கால் அளவு 23 size. உயரம் ஏழு அடி ஒரு இன்ச். அமெரிக்காவில் இன்றும் பார்க்கலாம் நாலடியார்களையும் நெட்டக்காலனையும்.

Gigantism (பிட்யூட்டரி சம்பந்தமன்ன வியாதி)அதிகமான உயரத்தை அடையலாம். இன்றும் பலர் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு எல்லோரும் உலகத்தில் உயரம் என்று சொல்லமுடியுமா?
Shakil Oneil--க்கு Gigantism கிடையாது!

மறுபடியும்...தனிமரம் தோப்பாகாது!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//. அதிலும் மலைகளை குடைந்து வீடுகள் அமைப்பது என்பது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல. இன்றைய காலத்தில் நவீன உபகரணங்களை வைத்து இலகுவாக கட்டி விடலாம். 2000 வருடங்களுக்கு முன்பு வெறும் கைகளால் குடைந்த மலைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். //

நீங்கள் சொன்னது போல கல்லில் குடைவது கடினம் தான் இல்லை என சொல்லவில்லை,ஆனால் அவை பொதுமக்களின் வாழ்விடம் அல்ல, அப்போதைய இனக்குழுக்களின் தலைவன் மற்றும், பூசாரி நிலையில் இருந்தவர்கள், மற்றும் கோயில்களே, சாமனிய பொதுமக்களின் வாழ்விடம் எனில் அது போல பலாயிரக்கணக்கான குடைவறை வசிப்பிடங்கள் இருக்க வேண்டுமே?

எனவே அப்போதைய சமூகத்தின் உயர்குடியினருக்கு பிரம்மாண்டமான கட்டமைப்பாக செதுக்கியதில் வியப்பில்லை எனலாம்.

மேலும் இறந்த உடல்கலை அடக்கம் செய்யும் தாழிகள் சராசரி உயர மனிதர்களுக்கு தானே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் விரிவாக பதிவு போடும் போது சொல்கிறேன்.
---------

பல்லியினமும் ,டைனோசர் இனமும் ஒன்று தான், எனவே பறக்கும் டைனோசர் இருந்திருக்க வாய்ப்புண்டு.

நில நீர்வாழ்வினத்தின் இடை நிலையாக இன்றும் இருப்பது தவளைகள், ஆம்பிபியன் என சொல்வது அதனால் தான்.

முட்டையிட்டு பாலூட்டும் பிளாடிபஸ்,

பறவையினத்தில் பாலூட்டும் வவ்வால் ,

நீரில் இருந்தாலும் பாலூட்டி வகையில் இருக்கும் திமிங்கிலம், டால்பின்கள் என இடைப்பட்ட உயிரினங்கள் இன்றும் வாழ்வதிலிருந்து பரிணாம மாற்ரம் நடைப்பெற்றிருப்பதை அறியலாம்.

-----------

ராஜகிரியார்,

சு.பி சுவாமிகளுக்கு சொன்னப்பதிலைப்பார்க்கவும்.

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//Gigantism (பிட்யூட்டரி சம்பந்தமன்ன வியாதி)அதிகமான உயரத்தை அடையலாம். இன்றும் பலர் உள்ளனர். அவர்களை வைத்துக் கொண்டு எல்லோரும் உலகத்தில் உயரம் என்று சொல்லமுடியுமா?
Shakil Oneil--க்கு Gigantism கிடையாது!//

உயரமான மனிதர்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் கணக்கிலடங்காமல் உள்ளன. அனைத்தையும் ஒரு பதிவில் சொல்ல வந்தால் போரடித்து விடும். எனவேதான் அனைத்தையும் விரிவஞ்சி கொடுக்கவில்லை. தற்போது உள்ள அதிக உயரம் மொத்த மக்கள் தொகையில் 2 சதமே இருக்கும். இவ்வாறு உயரங்களில் மனிதன் ஏன் வித்தியாசப் படுகிறான் என்பதற்கும் காரணங்களை மேலே கொடுத்துள்ளேன்.

மற்றபடி பரிணாம ஆதரவாளர்கள் ஏதோ ஒன்றிரண்டு ஆதாரங்களாக சில படிமங்களை காண்பித்துதான் தங்களின் வாதங்களை வைப்பதையும் நாம் பார்க்கிறோம்.

தனி மரம் தோப்பாகாது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

அஞ்சா சிங்கம்!

//மற்றவர்கள் எப்படியோ நான் உங்கள் நகைச்சுவைக்காகத்தான் வருகிறேன் ....:-))//

நகைச்சுவை உணர்வு என்பது மனிதனுக்கு அவசியம். மன அழுத்தத்தை நகைச்சுவை வெகுவாக குறைக்கிறது. எந்த நேரம் பார்த்தாலும் நரசிம்மராவ் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கும். எனவே எனது எழுத்தால் ஒருவர் சந்தோஷம் அடைகிறார் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே! :-)

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

ராவணன் said...

அண்ணாச்சி சும்மா அடிச்சு ஆடுங்க...யாரு கேப்பாக?

அந்த அரேபிய அல்லா ஒரு மனுசரைப் படைச்சாராமே....அப்ப அவரது உசரம் எவ்வளவு அண்ணாச்சி? அதப் பத்தி அந்த ஈரான் புத்தகத்தில் ஏதாவது இருக்கா அண்ணாச்சி?

அத எடுத்துவிட்டா அம்புட்டுபேரும் அபீட் அண்ணாச்சி.

ஆனா....

அந்த அரேபிய அல்லா நம்ம முனியாண்டிசாமியின் கால் சுண்டுவிரலின் கால் பாகமாவது இருப்பாரா அண்ணாச்சி?

நம்பள்கி said...

[[தற்போது உள்ள அதிக உயரம் மொத்த மக்கள் தொகையில் 2 சதமே இருக்கும்.]]

அதிக உயரம்; என்ன உயரம்? ஒரு அளவு சொல்லுங்களேன்?

suvanappiriyan said...

வவ்வால்!

//அது போல பலாயிரக்கணக்கான குடைவறை வசிப்பிடங்கள் இருக்க வேண்டுமே?

எனவே அப்போதைய சமூகத்தின் உயர்குடியினருக்கு பிரம்மாண்டமான கட்டமைப்பாக செதுக்கியதில் வியப்பில்லை எனலாம்.//

இவ்வாறு ஒரு வீடு மாத்திரம் அல்ல. அந்த கிராமத்தில் நான் பார்த்த அனேக வீடுகளின் வாயில்கள் படத்தில் உள்ளது போல் மிக பிரமாண்டமாகவே உள்ளன. அனைத்து படங்ளையும் போட்டால் பதிவு நீண்டு விடும் என்பதால்தான் ஒன்றை மட்டும் பிரசுரித்தேன். கிட்டத் தட்ட ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இன்றும் கொஞ்சம் கூட உறுதி குலையாமல் இருக்கும் அந்த இடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

//நீரில் இருந்தாலும் பாலூட்டி வகையில் இருக்கும் திமிங்கிலம், டால்பின்கள் என இடைப்பட்ட உயிரினங்கள் இன்றும் வாழ்வதிலிருந்து பரிணாம மாற்ரம் நடைப்பெற்றிருப்பதை அறியலாம்.//

இவை எல்லாம் இப்படி இருக்கலாம் என்ற அனுமானம் தானே ஒழிய நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் கிடையாது.

suvanappiriyan said...

//அதிக உயரம்; என்ன உயரம்? ஒரு அளவு சொல்லுங்களேன்? //

ஏழரை அடி எட்டு அடி. ஆப்கானிஸ்தானத்திலும் பாகிஸ்தானிலும் அமெரிக்காவிலும் இதுபோல் சிலரை இணையத்தில் பார்க்கிறோமே. தற்போதுள்ள மனிதனின் சராசரி உயரம் 5லிருந்து 6 அடி வரையே!

நம்பள்கி said...

[[ஏழரை அடி எட்டு அடி. ஆப்கானிஸ்தானத்திலும் பாகிஸ்தானிலும் அமெரிக்காவிலும் இதுபோல் சிலரை இணையத்தில் பார்க்கிறோமே. தற்போதுள்ள மனிதனின் சராசரி உயரம் 5லிருந்து 6 அடி வரையே!]]

ஏழரை அடி எட்டு அடி உயரம் ; இரண்டு விழக்காடு இருக்கவே முடியாது; உங்கள் கணக்கு சரியல்ல!

ஏன்? உங்கள் கணக்குப் படி 140 மில்லியன் மக்கள் ஏழரை அடி எட்டு அடி உயரம் இருப்பார்கள்; ஒரு comparison - க்காக சவுதியின் மொத்த ஜனத் தொகையே 28 மில்லியன் தான்!

shakil oneil-இன் உயரமே 7 அடி 1 இன்ச். இது அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் படி ஒரு அசாதாரன உயரம். எனக்குத் தெரிந்து அமெரிக்காவில் ஏழரை அடி எட்டு அடி உயரம் இருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்!

வவ்வால் said...

சுபி.சுவாமிகள்,

//இவை எல்லாம் இப்படி இருக்கலாம் என்ற அனுமானம் தானே ஒழிய நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆதாரங்கள் கிடையாது.//

அச்சடித்த பொத்தகத்தில் ஆதாரம் வைத்திருக்கும் உங்களுக்கு எல்லாமே அனுமானங்களாக தான் தெரியும் :-))

அரேபியா மண்ணெடுத்து,
அமு டாரியா
தண்ணியவிட்டு

சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்மை...

இது பொம்மையில்லை பொம்மையில்ல

ஆதாம் ,ஏவாளு

அத்தனையும் உண்மை...

ஏ தன்னா னே தன்னானே தானா ...

suvanappiriyan said...

வவ்வால்!

//அச்சடித்த பொத்தகத்தில் ஆதாரம் வைத்திருக்கும் உங்களுக்கு எல்லாமே அனுமானங்களாக தான் தெரியும் :-)) //

அச்சடிச்ச புத்தகத்துல இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகளுக்கு எதிராக ஒரு தகவலையும் முழு உலகமும் இதுவரை வைக்க முடியவில்லையே? ஏன்?

'டார்வின் மாமா மண்ணெடுத்து...

பரிணாமம் என்ற தண்ணி விட்டு....

நாத்திகரெல்லாம் சேர்ந்து செஞ்ச பொம்மை....

இது பொம்மையில்ல...பொம்மையில்ல...வெறும் பிரம்மை....

ஏ ....வவ்வாலு....நமகிட்டே வேணாம் சவாலு...

ஏ..தன்னானே...தன்னானே...தானே...

ஹி ....ஹி....எங்களுக்கும் கவிதை வருமுல்ல... :-)

நம்பள்கி said...

புலவர்களே அமைதி! சண்டை வேண்டாம்!

Unknown said...

@அஞ்சா சிங்கம்..

///மற்றவர்கள் எப்படியோ நான் உங்கள் நகைச்சுவைக்காகத்தான் வருகிறேன் ....:-))///

சுவனப்பிரியன் பதிவுல நகைச்சுவை எழுதுறது இருக்கட்டும்...நீங்க பேருலயே கண்ணா பின்னான்னு நகைச்சுவை வச்சு இருக்கீங்களே!!!!....உண்மையிலேயே உங்க பேரையும் உங்க போட்டோவையும் பார்க்கும் போது எல்லாம் எனக்கு சிரிப்பு வராமல் இருந்தது இல்லை......

பெரிய ஆளு சார் நீங்க...

இராஜகிரியார் said...

//நீங்கள் சொன்னது போல கல்லில் குடைவது கடினம் தான் இல்லை என சொல்லவில்லை,ஆனால் அவை பொதுமக்களின் வாழ்விடம் அல்ல, அப்போதைய இனக்குழுக்களின் தலைவன் மற்றும், பூசாரி நிலையில் இருந்தவர்கள், மற்றும் கோயில்களே, சாமனிய பொதுமக்களின் வாழ்விடம் எனில் அது போல பலாயிரக்கணக்கான குடைவறை வசிப்பிடங்கள் இருக்க வேண்டுமே?//

எல்லா இனக்குழுக்களின் தலைவர்களும், பூசாரிகளும் ஒன்றாக 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்திருப்பார்களோ? :-))

இராஜகிரியார் said...

ஏனுங்கோ...வவ்வால், இந்த 5 நட்சத்திர விடுதிகள், அரண்மனைகள் மற்றும் கோயில்களை எல்லாம் சும்மா ஒரே இடத்தில் 5 கி.மீ. சுற்றளவிலா கட்டி இருக்கிறார்கள்?

suvanappiriyan said...

திரு நம்பள்கி!

//புலவர்களே அமைதி! சண்டை வேண்டாம்!//

ஹா..ஹா..சண்டை எல்லாம் இல்லை. அவர் கவிதையில் கேள்வி கேட்டால் நாமும் கவிதையில்தானே பதில் சொல்ல வேண்டும். வவ்வாலிடம் நிறைய விஷயங்கள் இருக்கும். அவ்வப்போது இப்படி காமெடியும் சேர்ந்து கொள்ளும். (பதில் இல்லாத போது) :-)

Unknown said...

சுவனம் அப்படியே உலகம் தட்டைன்னு நைஜீரியவுல ஒரு கும்பல் கிறிஸ்துவர்களை கொன்று கொண்டு இருக்கிறது. அதையும் ஒரு கை பாருங்க. யாரையும் விடவேண்டாம்

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//சுவனம் அப்படியே உலகம் தட்டைன்னு நைஜீரியவுல ஒரு கும்பல் கிறிஸ்துவர்களை கொன்று கொண்டு இருக்கிறது. அதையும் ஒரு கை பாருங்க. யாரையும் விடவேண்டாம் //

ஹி..ஹி..நீங்கள் சமணர்களையும் பவுத்தர்களையும் இன்று வரை தலித்களையும் போட்டு தள்ளியதும் சமூகத்தில் ஒதுக்கி வைத்ததைக் காட்டியுமா அவர்கள் அதிகம் செய்து விட்டனர். ஆப்ரிக்கா கிடக்கட்டும் ஹரியானாவுல ஒரே மாதத்தில் 15 பேர் வன்புணர்வாம். ஒரு தலித் தற்கொலை வேறு செய்து கொண்டுள்ளார். கொஞ்சம் உங்க கருணை பார்வையை நம்ம மக்கள் பக்கம் திருப்புங்க அப்பு.....

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//அச்சடிச்ச புத்தகத்துல இதுவரை நிரூபிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகளுக்கு எதிராக ஒரு தகவலையும் முழு உலகமும் இதுவரை வைக்க முடியவில்லையே? ஏன்?
//

ஒன்றா ரென்டா எல்லாமே கட்டுக்கதையாச்சே :-))

மண்ணை பிசைந்து முதல் மனிதர்களை உருவாக்கியதை அதற்கு தானே சொன்னேன், எந்த அறிவியலில் இது சாத்தியம் ?

அதுவும் மனிதனை உருவாக்கியதும் ,சலாம் அலைக்கும் சொல்லும் அளவுக்கு மொழி அறிவு வேறு :-))

அரேபிய மொழி என்பதே சுமார் 2000-2500 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லை :-))

அரபிய மொழிக்கு எழுத்து வடிவம் எந்த மொழி என்பது அறீவீர்களா?

அப்புறம் எப்படி ஆதாம் அரபியில் , அல்லாவுடன் பேசி இருப்பார்?

முதலில் அரேபிய மொழி 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான மொழின்னு நிறுபியுங்கள் அப்புறம் உங்க பொத்தகத்தின் சிறப்புகளை பேசலாம்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

நான் எப்போதாவது காமெடி செய்வேன்,ஆனால் எப்பொழுதும் காமெடி செய்றீங்கலே அது எப்பூடி?

//5000 அல்லது 6000 வருடங்களுக்கு முன்பு இந்த மக்கள் வாழ்ந்ததாக அறிகிறோம்.//

இந்த கால கட்டத்திற்கு என்ன சான்று?

ரோமன் பேந்தியன் பாணியில் முகப்பு இருக்கிறது அதை வைத்தே மிக பிற்பட்ட காலம் என சொல்ல முடியும்.

பெர்சோ போலிஸ் என இரானில் இருக்கும் இடத்தில் கிமு 243 இல் கட்டிய பெரிய மாளிகையின் மிச்சங்கள்,இது போன்ற குகைகள் மேலும் ஜோர்டான், பால்மைய்ரா என பல இடங்களிலும் இது போல குகைகள் இருக்கு.


எல்லாமே கிமு 400-கி.பி க்குள் தான்.

மிக பழமையான கட்டுமானம் என்றால் பிரமிட், ஸ்பின்க்ஸ் தான்.

ஒரு கல்லறையே அவ்ளோ பெருசா இருக்குன்ன மனிதன் பெருசா தானே இருந்து இருப்பான்னு ஏன் சொல்லவில்லை :-))

ஸ்பிங்க்ஸ் போல பெரிய மிருகம் இருந்து இருக்கும்ல :-))

மிகப்பழமையான மனித கட்டமைப்பு என்றால் துருக்கியில் உள்ள கோபெக்லி டெப் என்ற இடத்தில் உள்ளவை தான் சுமார் கிமு 5500 -6000 கால கட்டம்.

நீங்க சவுதி அரேபியாவில 5000-6000னு சொல்லிக்கிட்டு புதிய கட்டுமானங்களை சொல்லுறிங்க.

suvanappiriyan said...

திரு வவ்வால்!

//மண்ணை பிசைந்து முதல் மனிதர்களை உருவாக்கியதை அதற்கு தானே சொன்னேன், எந்த அறிவியலில் இது சாத்தியம் ?//

ஒவ்வொரு உயிரினத்தையும் இறைவன் நீரால் படைத்தான்..
குர்ஆன் 24:45

'உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்தே அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?'
குர்ஆன் 21:30

'அவனே தண்ணீரால் மனிதனை படைத்தான்'
குர்ஆன் 25:54

உயிர்களின் மூலம் தண்ணீர் என்கிறது குர்ஆன். இன்றைய அறிவியலும் அதையே மெய்ப்பிக்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும்போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும். 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும். நமது மொத்த உடல் எடையில் 12% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நமது உடலின் எந்த பகுதியை எடுத்துக் கொண்டாலும் நீர் சார்ந்த பொருட்களே ஆதிக்கம் செலுத்துகிறது.

//அரேபிய மொழி என்பதே சுமார் 2000-2500 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லை :-))

அரபிய மொழிக்கு எழுத்து வடிவம் எந்த மொழி என்பது அறீவீர்களா?

அப்புறம் எப்படி ஆதாம் அரபியில் , அல்லாவுடன் பேசி இருப்பார்?//

ஆதாம் அல்லாவுடன் அரபியில் பேசினார் என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்? விளக்கம் தரவும்.

//இந்த கால கட்டத்திற்கு என்ன சான்று?

ரோமன் பேந்தியன் பாணியில் முகப்பு இருக்கிறது அதை வைத்தே மிக பிற்பட்ட காலம் என சொல்ல முடியும்.

பெர்சோ போலிஸ் என இரானில் இருக்கும் இடத்தில் கிமு 243 இல் கட்டிய பெரிய மாளிகையின் மிச்சங்கள்,இது போன்ற குகைகள் மேலும் ஜோர்டான், பால்மைய்ரா என பல இடங்களிலும் இது போல குகைகள் இருக்கு.//

காலம் குர்ஆனில் வரையறுத்து சொல்லப்படவில்லை. சிலர் 1000 வருடங்களுக்கு முன் என்கின்றனர். சிலர் மோசே காலத்தவர் அதுவும் கிட்டதட்ட 4000 வருடங்கள் என்கின்றனர். அருதியிட்டு இன்னும் சொல்லவில்லை. ஆராய்ச்சியில் இருக்கிறது. நமக்கு தலைப்புக்கு காலம் முக்கியமல்ல. உயரமான மனிதர்கள் வாழ்ந்தார்களா என்பதே இங்கு நாம் விவாதிப்பது.





வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அப்போ ஆதாமை மண்ணில் நீர்விட்டு செய்த கதை?

மனிதனை நீரில் இருந்து அப்புறம் ஏன் படைக்கணும்?

எல்லாம் ஆதாம் ,ஏவால் வழியில் உருவாகினதாக சொல்கிறார்களே?

ஆதாம் ,ஏவாளை படைத்த பிறகு பின்னர் தனியாக மனிதர்கள் எனவும் படைத்தாரா?

ஏன் சுவாமி இப்போ அறிவியல் கண்டுப்பிடித்த பின்னர்,அதனை பழைய புரானத்துக்கு மேட்சிங்க் செய்யப்பார்க்கிறிங்க?

மனித உடலில் ரத்த ஓட்டம் நிகழுதுன்னு இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் ஹார்வி கண்டு பிடிக்கும் வரை அது யாருக்குமே தெரியலையே ஏன் ?

விலங்கு ரத்தமும் ,மனித ரத்தமும் ஒன்று என மனிதன் நம்பினான்,அப்புறம் எல்லா மனிதன் ரத்தமும் ஒரே வகைனும் நம்பினான், இதை எல்லாம் அறிவியல் தானே விளக்கிச்சு.

---------
//ஆதாம் அல்லாவுடன் அரபியில் பேசினார் என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்? விளக்கம் தரவும்.//


சலாம் அலைக்கும் எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க.

உங்களுக்கு விளக்கம் கிடைக்கும்.

5000-6000 ஆண்டு, வாசல்படி பெருசா இருக்கு ,அப்போ மனுசன் 10 அடி தான்னு சொல்லிட்டு இப்போ 1000 ஆண்டுகளா இருக்கலாம்னு பல்டி அடிக்குறிங்களே :-))

அதுக்குள்ள ராஜ கிரியார் வேறா துள்ளிக்கிட்டு வந்தார் , இப்போ என்ன சொல்லுவாரோ :-))

இப்போ வாசல் படி பெருசா இருக்கு ,மனுசன் பெருசா படைக்கப்பட்டான்னு போட்ட இந்த பதிவே அடிப்பட்ட்ப்போச்சூ :-))

suvanappiriyan said...

//5000-6000 ஆண்டு, வாசல்படி பெருசா இருக்கு ,அப்போ மனுசன் 10 அடி தான்னு சொல்லிட்டு இப்போ 1000 ஆண்டுகளா இருக்கலாம்னு பல்டி அடிக்குறிங்களே :-))//

பல்டி எல்லாம் அடிக்கவில்லை. :-)

ஆய்வுகளில் சிலர் கிபியை ஆதாரமாக வைத்து ஆணடுகளை கணக்கிட்டனர். சிலர் கிமுவை அடிப்படையாக வைத்து ஆண்டுகளை கணக்கிட்டனர்.இரண்டும் ஏறக்குறைய சம அளவிலேயே வருகின்றன.

suvanappiriyan said...

//ஆதாம் ,ஏவாளை படைத்த பிறகு பின்னர் தனியாக மனிதர்கள் எனவும் படைத்தாரா?//

ஆதாம் ஏவாளிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும்.

//மனித உடலில் ரத்த ஓட்டம் நிகழுதுன்னு இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் ஹார்வி கண்டு பிடிக்கும் வரை அது யாருக்குமே தெரியலையே ஏன் ?//

வில்லியம் ஹார்வி கண்டு பிடிப்பதற்கு முன்பே இறங்கியது குர்ஆன்.

//ஆதாம் அல்லாவுடன் அரபியில் பேசினார் என்று எந்த ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள்? விளக்கம் தரவும்.//

என்று நான் கேட்ட கேள்விக்கு குர்ஆனிலிருந்து விளக்கம் தரவும். அல்லது தெரியாமல் தவறாக சொல்லி விட்டேன் என்று ஒத்துக் கொள்ளவும்.

வருண் said...

***இந்த காலுக்குரிய மனிதன் கிட்டத்தட்ட 14 லிருந்து 16 அடி உயரம் உள்ளவனாக இருந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்.***

பாஸ்கட்பால் வெளையாட விட்டால் இவருதான் வின்னர்! :)))

suvanappiriyan said...

வாங்க வருண்!

//பாஸ்கட்பால் வெளையாட விட்டால் இவருதான் வின்னர்! :)))//

ஹா..ஹா...வேறு யார் கைக்கும் பந்து போக சான்ஸே இல்லை.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
'எதிர்க்குரல்' தற்காலிக சைலன்ட் மோடில் இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து பரிணாமப்பதிவுகளில் இறங்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சி சகோ. ஆனால்... பலருக்கு....?

மீண்டும் ஓர் அமர்க்களமான பதிவு. இதுபோன்ற பூமிக்கு மேலே இருக்கும் ஆதாரத்தை எல்லாம் கவனிக்காமல் இன்னும் ஆண்டுக்கணக்கில் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்..! என்னத்த சொல்ல..! நமது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

பின்னூட்டங்களை எல்லாம் படிக்கும் போது... யப்பா.. விளா நோக சிரிக்க வைக்கிறது. அதிலும்... அந்த களிமண் பொம்மை பாடல் எபிசொட்..! சூப்பர். இரண்டு பேருமே கலக்கிட்டீங்க..!

அப்புறம்...

17 ஆம் நூற்றாண்டில்,
வில்லியம் ஹார்வி,

ஹதீஸ் புத்தகங்களை படித்தாரோ இல்லை சொந்தமாக கண்டு பிடித்தாரோ... அவருக்கு பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே, 'நமது உடம்பில் இரத்தமானது இரத்தக்குழாயில் ஓடுகிறது' என்பதை அரேபியர்கள் அறிந்தே வைத்து இருந்தனர்..!

இதற்கு காரணம்...

இஸ்லாம்..!

"ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி),

நூல்கள்: புகாரி 3281, முஸ்லிம், அபூதாவூது. (குறிப்பு:-பிறர் மனை நோக்காதிருத்தல் பற்றிய நீண்ட ஹதீஸின் தேவையான பகுதி மட்டும்)

இராஜகிரியார் said...

வவ்வால், சகோ.சுவனப்பிரியன் - பண்டைய காலங்களில் மிக உயரமான மனிதர்கள் வாழ்ந்தனர் என்றும், அதற்கான ஆதாரங்களில் ஒன்றாக சுமார் 18 அடி உயர வாயில்கள் உள்ள வீடுகளையும் குறிப்பிட்டார். ஆனால் நீங்களோ, அது அவ்வாறல்ல என்றும் 5 நட்சத்திர விடுதிகள், அரண்மனைகள், கோயில்களில் வாயில்கள் உயரமாக இருக்கின்றன. அதனால் அவ்வாறு முடிவுக்க வர முடியாது என்றும் கூறினீர்கள்.

அதற்கு நான் அவ்வாறெனில் ஏன் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகள் உயரமாக இல்லை என்று கேட்டிருந்தேன். அதற்கு நீங்கள்,

//அவை பொதுமக்களின் வாழ்விடம் அல்ல, அப்போதைய இனக்குழுக்களின் தலைவன் மற்றும், பூசாரி நிலையில் இருந்தவர்கள், மற்றும் கோயில்களே, சாமனிய பொதுமக்களின் வாழ்விடம் எனில் அது போல பலாயிரக்கணக்கான குடைவறை வசிப்பிடங்கள் இருக்க வேண்டுமே?// என்று மழுப்பினீர்கள்.

அதற்கு நான் //
1. எல்லா இனக்குழுக்களின் தலைவர்களும், பூசாரிகளும் ஒன்றாக 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்திருப்பார்களோ? :-))
2. இந்த 5 நட்சத்திர விடுதிகள், அரண்மனைகள் மற்றும் கோயில்களை எல்லாம் சும்மா ஒரே இடத்தில் 5 கி.மீ. சுற்றளவிலா கட்டி இருக்கிறார்கள்?// என்றும் கேட்டிருந்தேன்.

இவ்விரண்டிற்கும் பதில் கூறாத நீங்கள்

//அதுக்குள்ள ராஜ கிரியார் வேறா துள்ளிக்கிட்டு வந்தார்,// என்று பதிலளிக்கிறீர்கள்.

நல்ல சொல்லாடல்... தொடருங்கள்.

பாஹிம் said...

அரபு மொழி பேசிய பண்டைய அரபியர் வரலாறு:

The earliest known events in Arabian history are migrations from the peninsula into neighboring areas. About 3500 bc, Semitic-speaking peoples of Arabian origin migrated into the valley of the Tigris and Euphrates rivers in Mesopotamia, supplanted the Sumerians, and became the Assyro-Babylonians. Another group of Semites left Arabia about 2500 bc and settled along the eastern shore of the Mediterranean Sea; some of these migrants became the Amorites and Canaanites of later times.

Microsoft ® Encarta ® 2009.

பாஹிம் said...

டைனசோர் என்பதும் பல்லிகளும் ஒரே இனத்தவை என்று இங்கு ஒருவர் கூறியுள்ளதைப் பார்த்தேன். அது அபத்தமான பேச்சு. அவற்றின் உயிரினப் பாகுபாட்டைப் பார்த்தாலே புரியும்.

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//மீண்டும் ஓர் அமர்க்களமான பதிவு. இதுபோன்ற பூமிக்கு மேலே இருக்கும் ஆதாரத்தை எல்லாம் கவனிக்காமல் இன்னும் ஆண்டுக்கணக்கில் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள்..! என்னத்த சொல்ல..! நமது ஆழ்ந்த அனுதாபங்கள்..!//

இவ்வளவு கொடுத்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் நேஷனல் ஜியாக்ரபி இந்த படங்கள் பொய்யென்று சொல்லி விட்டது என்று சார்வாகன் பதிவிடுகிறார். அங்கு சென்று பார்த்தால் நான் அளித்த படங்கள் எதையும் காணவில்லை. :-) படங்களை விடுங்கள். இன்று நம் முன் ஆதாரமாக நிற்கும் மதாயின் சாலிஹ் மலை வீடுகளைப் பற்றி மூச்சு விட வில்லை.

//இது சகோ சு.பியின் கருத்து மட்டுமே!!.இடைப்பட்ட படிமங்கள் நிறைய உண்டு. இது பற்றி பலமுறை விளக்கினாலும் அவர்களுக்கு புரிவதில்லை.சரி இந்த கருத்து எந்த ஆய்விதழில் பதிவிடப் பட்டுள்ளது?.இடைப்பட்ட படிமங்கள் பற்றி மீண்டும் ஒரு பதிவு எழுத சித்தமாகவே இருக்கிறோம்.//-சார்வாகன்

இது அடுத்த காமெடி! இடைப்பட்ட படிமங்கள் என்று பல மைல் தூரங்களில் கிடைத்த எலும்புகளை இவர்கள் கற்பனைக்கு தோதாக ஒட்ட வைத்து ஒப்பேத்தியதை முன்பு பலரும் விரிசித்துள்ளார்கள். இனி அதையே திரும்பவும் கொண்டு வருவார்.

இதற்கெல்லாம் பதில் இல்லை என்ற கோபத்தில் முகமது நபி வாழ்ந்ததற்கு என்ன ஆதாரம் என்று உச்ச கட்ட காமெடியில் பதிவை முடித்துள்ளார். மன திருப்திக்கு ஏதாவது அவரும் செய்து கொண்டிருக்கட்டும்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//என்று நான் கேட்ட கேள்விக்கு குர்ஆனிலிருந்து விளக்கம் தரவும். அல்லது தெரியாமல் தவறாக சொல்லி விட்டேன் என்று ஒத்துக் கொள்ளவும்.//

உங்களுக்கு தெரிந்தது மட்டும் தான் குரானா, இல்லை உங்களுக்கு தெரியாததை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள இப்படியா?

எனக்கும் குரான் தெரியாது, முன்னர் சாந்தியும், சமாதனமும் நிலவட்டும் என ஒரு விவாதம் ஓடிய போது சில மார்க்க பந்துக்கள் சொன்னது தான் , அல்லா ஆதாமை படைத்தபின் மேல் உலகு அனுப்பினார், பின்னர் ஆதாமுடன் பேசி இந்த வணக்கத்தினை உருவாக்கினார் என சொன்னார்கள்.

//The Prophet said, "Allah created Adam in his image, sixty cubits (about 30 meters) in height. When He created him, He said (to him), ‘Go and greet that group of angels sitting there, and listen what they will say in reply to you, for that will be your greeting and the greeting of your offspring.’ Adam (went and) said, ‘As-Salamu alaikum (Peace be upon you).’ They replied, ‘As-Salamu ‘Alaika wa Rahmatullah (Peace and Allah’s Mercy be on you).’ So they increased ‘wa Rahmatullah’ The Prophet added, ‘So whoever will enter Paradise, will be of the shape and picture of Adam. Since then the creation of Adam’s (offspring) (i.e. stature of human beings) is being diminished continuously up to the present time." (Sahih al-Bukhari, Volume 8, Book 74, Number 246)//

இப்போ அசலாம்மு அலைக்கும் என்பதை ஆதாம் அல்லாவிடம் சொன்னதாக வருகிறதே ,இது சரியா தப்பா என நீங்கள் தான் சொல்ல வேண்டும் :-))

ஆதாம் பேசிய மொழி என்ன, அல்லா மற்றும் ஆதாமுடன் என்ன மொழியில் உரையாடி இருப்பார்கள், நீங்களே சொல்லிடுங்க ?


----------------------------
இராஜகிரியார்,

//1. எல்லா இனக்குழுக்களின் தலைவர்களும், பூசாரிகளும் ஒன்றாக 5 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்திருப்பார்களோ? :-))/

இத்உ என்ன வகையான கேள்வின்னு பதிலே சொல்லவில்லைனு சொல்லிக்கிட்டு?

எல்லா இனக்குழு மக்களும் அப்போ 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசித்தார்களா நீங்க சொல்லி இருக்கீங்க? இல்லையே? அப்புறம் எப்படி இதை கேட்கறிங்க?

அப்போ அரேபியாவில் 5 கிமீ சுற்றளவில் மட்டும் தான் மக்கள் இருந்தாங்களா?

மொத்தம் எத்தனை குகை வீடுகள் இருந்தன என்ன்ற எண்ணிக்கையே சொல்லாத நிலையில் எப்படி எல்லா மக்களும் அங்கே இருந்து இருக்க முடியும்.

நான் ஜோர்டான், யேமன், சிரியா, பால்மைரா, பெர்சா போலீஸ் என பல இடங்களில் இதே போல மலையில் குடைந்தது ,கட்டுமானங்கள் ,மாளிகைகள் இருக்குன்னு சொல்லி இருக்கேனே.

நிறைய மக்கள் இல்லை என்றால் தான் நீங்கள் சொன்ன 5 கி.மி சுற்றளவு ஏன்னு யோசிக்கணும் ,பல இடங்களிலும் கட்டி இருக்கும் போது இப்படி கேட்பதால் நீங்கள் சொல்லவருவது என்ன என எனக்கு புரியவில்லை.

மேலும் அவை புராதானமானவை இல்லை ,அதற்கு ஆதாரமும் இல்லைனு ஆய்வு தான் நடக்குது இன்னும் ஆண்டுகள் தெரியவில்லைனு சு.பி சொல்லிட்டார் இனிமே ஆதி மனிதன் அதில் வாழ்ந்தான் 10 அடி உயரம் இருந்தான் என அதனை வைத்து பேசுவதே அடிப்பட்டுப்போச்சு.
--------------

வவ்வால் said...

பாஹிம்,

செமிட்டிக் ,மொழி அசிரியன் மொழின்னு சொல்லும் போது அங்கே அரேபியன் மொழின்னே ஏன் வரவில்லை, நான் கேட்டது அரேபிய மொழி 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்ததா என்பதே? அரேபிய மொழியின் எழுத்து வடிவம் எது என கேட்டேன்.

நேரடியாக பதில் இல்லை, அப்போ செமிட்டிக் மொழி தான் அரேபிய மொழியின் மூலம் சரி தானே.

நான் ஏற்கனவே அரேபிய மொழியின் மூலம் எது என்பதை எனது பதிவில் சொல்லியாச்சு. அக்காடியன்,அராமைக் இல் இருந்து அரேபிய மொழி ,பெர்சிய மொழியுடன் கலந்து உருவானது.

மேலும் 2000 ஆண்டுக்கு முந்தைய மொழி என உங்களால் நிறுவ முடியுமெனில் அரபியை செம்மொழி என அறிவிக்க செய்யலாம்.
---------------
டைனோசர் மற்றும் பள்ளிகள் ரெப்டைல் என்ற வகையின் உட்பிரிவு என்பதனை கூகிள் செய்து பார்த்தாலே தெரியும்.

டைனோசர் என்றால் பயங்கரமான பல்லி(word dinosaur means "terrible lizard".)

டைனோசரும் ,பல்லியும் ஒரே மூதாதையர் உயிரிலிருந்து வந்திருக்கலாம் என்பதாலேயே ரெப்டைல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

பல்லிக்கு கால் இருக்கு பாம்புக்கு கால் இல்லை அதனால் ரெப்டைல் இல்லைனு சொல்லிடுவிங்களா?

நான் சொல்ல வருவது என்ன என புரியாமல் டைனோசர் தான் பல்லி என சொன்னது போல நீங்கள் பேசுகிறீர்களே :-))

இராஜகிரியார் said...

//எல்லா இனக்குழு மக்களும் அப்போ 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசித்தார்களா நீங்க சொல்லி இருக்கீங்க? இல்லையே? அப்புறம் எப்படி இதை கேட்கறிங்க?//

மத்யன் என்ற ஒரு கூட்டத்தினர் மட்டும் வசித்ததாக தானே சுவனப்பிரியன் சொல்லி இருக்கிறார். நீங்கள் தானே அங்கு இன குழு தலைவர்களும், பூசாரிகளும் வசித்திருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். 5 கிமீ சுற்றளவில் இது போல் ஏராளமான வீடுகள் உள்ள போது - உங்கள் வாதப்படி அங்கு இன குழு தலைவர்களும், பூசாரிகளும் வசித்திருக்க வேண்டுமானால் அந்த பகுதிகளில் பல இனக்குழுக்கள் வசித்திருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் எல்லா இனக்குழுக்களின் தலைவர்களும், பூசாரிகளும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒன்றாக வசித்திருப்பார்களோ? என்று தான் கேட்டேன். இங்கு உங்கள் வாதம் தான் அடிபட்டு போகிறது.

//அப்போ அரேபியாவில் 5 கிமீ சுற்றளவில் மட்டும் தான் மக்கள் இருந்தாங்களா?//

பண்டைய காலங்களில் மக்கட்தொகை எவ்வளவு இருந்திருக்கும்? அந்த பகுதியில் அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே மக்கள் இருந்திருக்கலாம். இல்லை அதற்கு மேல் இருந்திருந்தால் கூட அவர்களுக்காக உண்டாக்கிக் கொண்ட வீடுகளில் - மலைகளில் உண்டாக்கிய வீடுகள் மட்டும் உருக்குலையாமல் மிச்சமிருக்கலாம்.

//நான் ஜோர்டான், யேமன், சிரியா, பால்மைரா, பெர்சா போலீஸ் என பல இடங்களில் இதே போல மலையில் குடைந்தது ,கட்டுமானங்கள் ,மாளிகைகள் இருக்குன்னு சொல்லி இருக்கேனே.

நிறைய மக்கள் இல்லை என்றால் தான் நீங்கள் சொன்ன 5 கி.மி சுற்றளவு ஏன்னு யோசிக்கணும் ,பல இடங்களிலும் கட்டி இருக்கும் போது இப்படி கேட்பதால் நீங்கள் சொல்லவருவது என்ன என எனக்கு புரியவில்லை//

நான் மறுக்க வில்லையே. நான் கேட்ட கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? பல காலகட்டங்களில் உலகில் பல பகுதிகளில் சி
றுசிறு குழுக்களாக மக்கள் வசித்து வந்தார்கள். அவரவர் தேவைக்கேற்றவாறு ஏற்படுத்திக் கொண்டவற்றின் எச்சங்களே இவைகள்.

வவ்வால் said...

இராஜகிரியார்,

//மத்யன் என்ற ஒரு கூட்டத்தினர் மட்டும் வசித்ததாக தானே சுவனப்பிரியன் சொல்லி இருக்கிறார்.//

எங்கே அப்படி பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது?

அப்புறம் உங்களை நினைச்சா சிரிப்பு தான் வருது, மத்யன் என்ற இனக்குழ்வை நீங்களே உருவாக்குங்க :-))

"Hegra". என்பதை Al-Hijr அல்லது Madâin Sâlih என அரபியில் பெயரிட்டு அழைக்கிறார்கள்,

Madâin என்றால் நகரம் என அரபியில் பொருள், உடனே மத்யன் என்ற இனக்குழு என அடித்து விடுங்கோ :-))

சாலிஹின் நகரம் அல்லது நகரங்கள் என அரபியில் பொருள்.

முதலில் ஜோர்டானிலும் ,சிரியாவிலும் உள்ளன என சொல்லிக்கொண்டிருந்தேன்,அப்போ Madâin Sâlih என்ற பெயர் தான் அந்த இடத்திற்கு புதிதாக சூட்டப்பட்டது என்பது நினைவில் இல்லை. மீண்டும் படித்தப்போது தான் ஜோர்டானில் இருப்பதாக நான் படித்த இடமும் இதுவும் ஒன்று தான் என்பதை அறிந்தேன்.

நபாதியான் மன்னர்கள் கட்டியது, அவர்கள் ரோமனிய ஆளுகைக்கு கீழ் வந்து விட்டார்கள், காலம் கி.மு 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி முதல் நூற்றாண்டு.அனைத்தும் ரோமானிய கட்டிடக்கலை.

யுனெஸ்கோ கணக்குப்படி 111 குடவறை அமைப்புகள் உள்ளன. சு.பி சுவாமிகள் சொன்னது போல அதில் மக்கள் வசிக்கவில்லை, அவை அனைத்தும் கல்லறைகள். நிறைய லத்தின் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

ஹெக்ரா என அக்காலத்தில் அநகரம் அழைக்கப்பட்டுள்ளது,மக்கள் அந்த குடவறை கல்லறை அமைப்புகளை சுற்றி வாழ்ந்துள்ளார்கள்.பிற்காலத்தில் அங்கு மக்கள் வசிக்காதப்போது கேரவான்ன் பயணிகள் அங்கு இளைப்பாறி சென்றுள்ளார்கள். மற்றபடி அவை வீடுகள் அல்ல.

மேல் விவரங்களுக்கு

http://whc.unesco.org/en/list/1293

-----------
சு.பி.சுவாமிகள்,

எதாவது ஒரு இணைய தளத்தில் இருந்து அரைகுறையாக எதையாவது எடுத்துப்போட்டு ,சொந்தமாக ஒரு கதைய கட்டுங்க ,அதுக்கும் இராஜ கிரியார் போல சிலர் வந்து என்ன சொல்லி இருக்காங்கன்னே தெரியாம ,கும்மி அடிப்பாங்க :-))

இராஜகிரியார் said...

வவ்வால்,

நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் வேறு என்னென்னவோ நிறைய எழுதியிருக்கிறீர்கள். நாம் இங்கு ஆதி மனிதர்களின் உயரம் பற்றி விவாதித்து கொண்டிருக்கிறோம். மத்யன் வாசிகளை பற்றியல்ல. சுவனப்பிரியனின் பதிவிற்கு நீங்கள் கொடுத்த மறுப்புகளில் ஒரே ஒரு Point பற்றி மட்டும் தான் நான் பேசுகிறேன். அதாவது, இந்த வீடுகள் உயரமான மக்களுடையது அல்ல - அவை சாதாரண மக்களின் தலைவர்களுடையது என்பது உங்கள் அனுமானம்.

ஆனால் என்னுடைய கேள்வி மிகவும் சுலபம். ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எத்தனை தலைவர்கள் இருப்பார்கள்? அவ்வாறு எண்ணற்ற தலைவர்களும், பூசாரிகளும் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் 5 கிமீ பரப்பில் ஒன்றாகவா இருப்பார்கள்?

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல் அவை எல்லாம் 5 நட்சத்திர விடுதிகள், அரண்மனைகள், கோயில்களில் போல் என்றால் -- ஏன் மற்ற 5 நட்சத்திர விடுதிகள், அரண்மனைகள், கோயில்கள் இருக்குமிடங்களில் உயரமான வீடுகள் இல்லை? அல்லது மதியன் சாலிஹ் கிராமத்தில் ஏன் சிறிய வாயில்கள் உள்ள வீடுகள் இல்லை?

ஆக அவையெல்லாம் உயரமான மனிதர்களின் வீடுகள் இல்லை என்ற உங்களுடைய இந்த அனுமானம் ஏற்று கொள்ள தக்க வகையில் இல்லை.

இராஜகிரியார் said...

//கும்மி அடிப்பாங்க :-))//

மீண்டும் நல்ல சொல்லாடல்... தொடருங்கள்.

suvanappiriyan said...



//அப்புறம் உங்களை நினைச்சா சிரிப்பு தான் வருது, மத்யன் என்ற இனக்குழ்வை நீங்களே உருவாக்குங்க :-))//

ரொம்பவும் சிரிக்காதீங்க சுளுக்கிக்கப் போவுது. ;-)


'மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷூஐபை ஆனுப்பினோம்'
-குர்ஆன் 7;85

மத்யன் என்ற நகருக்கு நபியை அனுப்பியதாக குர்ஆன் கூறுகிறது. சினாய் மலைக்கு அருகில் ஜோர்டான் சமீபமாக வரும். இவர்கள் ஆது கோத்திரத்தை சேர்ந்தவர்கள். இறைத் தூதர் ஆபிரஹாம் வழி வந்தவர்கள். அரபியில் மத்யன் என்றால் நகரம் என்று யார் உங்களுக்கு சொன்னது? :-) அது ஒரு இடத்தின் பெயர்.

http://en.wikipedia.org/wiki/Shuayb_%28prophet%29

'ஸமூது சமூகத்தினரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம்'
-குர்ஆன் 7:73

ஸமூது கோத்திரத்தை சேர்ந்த மக்களுக்கு அனுப்பப்பட்டவர் நபி சாலிஹ். அது நான் சொன்ன அல் ஊலாவில் உள்ளது.

எதையாவது அடிச்சு விட வேண்டியது. :-)

மத்யன் என்பதும் மதாயின் என்பதும் வேறு வேறு சொற்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் வவ்வால் சுவாமி. பிறகு இஷ்டம் போல் கூகுளில் தேடுங்கள்.

suvanappiriyan said...

சகோ பாஹிம்!

//டைனசோர் என்பதும் பல்லிகளும் ஒரே இனத்தவை என்று இங்கு ஒருவர் கூறியுள்ளதைப் பார்த்தேன். அது அபத்தமான பேச்சு. அவற்றின் உயிரினப் பாகுபாட்டைப் பார்த்தாலே புரியும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

குர்ஆன் குறிப்பிடும் சாலிஹ் நபியின் வழி வந்த ஸமூது கோத்திரத்தின் இடம்தான் மதாயின் சாலிஹ் என்று குறிப்பிடுகிறது விக்கி.

//According to the Qur’an, by the 3rd millennium BCE, the site of Mada'in Saleh had already been settled by the tribe of Thamud.[6] It is said that the tribe fell to idol worshipping; tyranny and oppression became prevalent.[19] The Prophet Saleh, to whom the site's name of Mada'in Saleh is often attributed,[13] called the Thamudis to repent.[19] The Thamudis disregarded the warning and instead commanded Prophet Saleh to summon a pregnant she-camel from the back of a mountain. And so, a pregnant she-camel was sent to the people from the back of the mountain by Allah, as proof of Saleh's divine mission.[11][19] However, only a minority heeded his words. The non-believers killed the sacred camel instead of caring for it as they were told, and its calf ran back to the mountain where it had come from, screaming. The Thamudis were given three days before their punishment was to take place, since they disbelieved they did not heed the warning.The prophet and the believers left the city, but the Thamudis were punished by Allah —their souls leaving their lifeless bodies in the midst of an earthquake and lightning blasts.[7][19]//

http://en.wikipedia.org/wiki/Mada%27in_Saleh

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

அப்போ மத்யன் என்று நீங்கள் சொன்னது மதாயின் என்ற சொல்லை தானே சொல்லி இருக்கிறீர்கள்,

அப்படி இல்லை எனில் ஏன் மதாயின் சாலிஹ் இடத்தில் உள்ள குடவறை டோம்களின் படத்தினை எடுத்து பயன்ப்படுத்தி இருக்கிறீர்கள்.


அப்புறம் நீங்களே, இடத்தின் பெயர் என்கிறீர்கள், நகரம் என்கிறீர்கள், எங்கே மத்யன் இனக்குழு என்று சொன்னீர்கள்?

எனது கேள்வி இது தான்,

மத்யன் சாலிக் என்பது வேறு மதாயின் சாலிக் என்பது வேறா?

ஆனால் நீங்கள் கொடுத்துள்ள படம் மதாயின் சாலிக் இடத்தினது,அது வசிப்பிடம் அல்ல, நினைவிட டோம்கள் கொண்ட குடவறைகள்.

அப்படியானால் ஏதோ ஒரு உயர்ந்த கட்டமைப்பினை எடுத்துக்கொண்டு ,மனிதன் உயரமாக இருந்தான் ,அதற்கான சான்று என சொல்வது திரிப்பு வாதம் அல்லவா?

மேலும் நபாதியன் மன்னராட்சி ,ரோமானிய முறைப்படி நடந்தது, கிமு முதல் நூற்றாண்டில் ரோமனியர்களே நேரடியாக ஆண்டனர், அது எப்படி குரானில் சொன்னதற்கு சான்றாகும் , குரானின் காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு.

உலகத்தில் இருக்கும் மற்ற மதத்தின் ,மக்களின் நாகரீகம், கட்டுமானங்களை எல்லாம் எங்களுதுனு சொல்லிக்கிட்டா உலகம் நம்பிடுமா?

தஞ்சாவூர் பெரிய கோயில் எல்லாம் குரானில் சொல்லி இருக்கான்னு ஒரு முறை செக் செய்து சொல்லிடுங்கோ :-))

தஞ்சாவுர் பெரிய கோயிலில் ஒரு காளை மாடு(நந்தி) இருக்கு அதான் ஆதாம்,ஏவாள் முதன் முதலில் வளர்ந்த மாடு என்று ஹதீத் கூட காட்டினாலும் காட்டுவீங்க :-))

//மத்யன் என்பதும் மதாயின் என்பதும் வேறு வேறு சொற்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் வவ்வால் சுவாமி. பிறகு இஷ்டம் போல் கூகுளில் தேடுங்கள்.//

சரி உங்களுக்கும் வேண்டாம்,எனக்கும் வேண்டாம்,

மத்யன் சாலிக் என்ற இடம் எங்கே இருக்குன்னு சொல்லிட்டு ,அதோட இடத்தின் படத்தினை போடுங்க, எதுக்கு நீங்க வேற இடத்தின் படத்தினை போட்டு அதான் இதுன்னு சொல்ல வேண்டும் ?

சு.பி.சுவாமிகளின் காமெடி டைம்:

கவுண்டமணி: சு.பி உங்கிட்டே என்ன வாங்கிட்டு வர சொன்னேன்,

சு.பி: பழம் வாங்கிட்டு வாங்கிட்டு வர சொன்னிங்க,

கவுண்டர்: எத்தனைப்பழம் சொன்னேன்,

சு.பி: ரெண்டு பழம்.

கவுண்டர்: கடைக்காரன் ரெண்டு பழம் கொடுத்தானா?

சு.பி: கொடுத்தான்...

கவுண்டர்: ஒன்னு இந்தா இருக்கு, இன்னொரு பழம் எங்கே?

சு.பி: அதான் இது ...

ஹி...ஹி காமெடி சூப்பரு :-))

--------------
இராஜகிரியார்,


//ஆக அவையெல்லாம் உயரமான மனிதர்களின் வீடுகள் இல்லை என்ற உங்களுடைய இந்த அனுமானம் ஏற்று கொள்ள தக்க வகையில் இல்லை.//


அவை வீடுகள் அல்ல டோம்கள். இறந்தவர்களின் நினைவிடங்கள் ,மற்றும் டுஷாரா என்ற நபாதியன் கடவுளின் கோயில் ,மற்றும் மன்னரின் அரசவை கவுன்சில் என விக்கியிலும் இருக்கிறது.

"The residential area is located on the middle of the plain, far from the outcrops.[5] The primary material of construction for the houses and the enclosing wall was sun-dried mudbrick.[5] Few vestiges of the residential area remain."

மக்கள் இடையில் இருந்த சமவெளியில் செங்கலால் கட்டிய வீட்டில் வாழ்ந்துள்ளார்கள்.

பல காலப்போக்கில் அழிந்துவிட்டன.

"Formerly known as Hegra it is the largest conserved site of the civilization of the Nabataeans south of Petra in Jordan. It features well-preserved monumental tombs with decorated facades dating from the 1st century BC to the 1st century AD. The site also features some 50 inscriptions of the pre-Nabataean period and some cave drawings. Al-Hijr bears a unique testimony to Nabataean civilization. With its 111 monumental tombs, 94 of which are decorated, and water wells, the site is an outstanding example of the Nabataeans’ architectural accomplishment and hydraulic expertise."

கல்லறை நினைவிட டோம்கள் அவை என்று போட்டு இருக்கும் போது ,எப்படி வீடு என சொல்கிறீர்கள்.

தாஜ்மஹாலில் ,மும்தாஜ் மற்றும் ஷாஜகான் வசித்தார்களா?

அவை வீடே இல்லைனு ஆனப்பிறகு ,மனிதன் உயரமாக இருந்தான் என்பது தான் பேச்சு , வாசப்படி உயரமாக இருக்கு என்றால் என்ன சொல்வது.

சுட்டிப்போட்டால் ஒன்று நீங்களாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ,அதையும் செய்ய மாட்டேன் என்கிறீர்கள், அப்படியானால் நீங்கள் போடும் பின்னூட்டங்கள் கும்மி வகை தானே,அதை சொன்னால் காண்டாவது ஏன்?

suvanappiriyan said...

//ஆனால் நீங்கள் கொடுத்துள்ள படம் மதாயின் சாலிக் இடத்தினது,அது வசிப்பிடம் அல்ல, நினைவிட டோம்கள் கொண்ட குடவறைகள்.//

கல்லறை என்று நீங்கள் கொடுத்த சுட்டி சொல்கிறது. சாலிஹ் நபியை பின்பற்றி வாழ்ந்த மக்களின் ஊர் என்று விக்கி சொல்கிறது. இதில் யாருடைய வாதம் பொருத்தமாக உள்ளது என்று பார்க்க வேண்டும்.

இறந்தவர்களை புதைக்கும் இடமாக அது இருக்க வாய்ப்பே இல்லை. அந்த இடங்களை நேரிலேயே சென்று பார்த்தவன் நான். மிக விஸ்தாரமான ஹால். சமையல் அறை. படுக்கைக்கு தனி அறைகள் என்று அருமையாக கட்டப்பட்ட ஒரு வீட்டை கல்லறை என்று சொல்வது பொருந்துவதாக இல்லை. நாம் இப்படித்தான் கல்லறைகளை கட்டுவோமா! :-)ஒருக்கால் சாலிஹ் நபி வாழ்ந்த மக்களின் இடத்தை நபாதியர்கள் மற்றும் ரோமர்கள் பிற்காலங்களில் அபகரித்திருக்கலாம்.

'அடர்ந்த தோப்புகளில் வசித்த மத்யன் வாசிகளும் அநீதி இழைத்தனர். அவர்களையும் தண்டித்தோம். அந்த இரண்டு ஊர்களும் அனைவருக்கும் தெரிந்த வழியில்தான் உள்ளன.

ஸமூது எனும் ஹிஜ்ர் வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர். நமது சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம் அவர்கள் அதைப் புறக்கணித்தனர். அவர்கள் மலைகளை வீடுகளாகக் குடைந்து அச்சமற்று இருந்தனர்'

-குர்ஆன் 15: 78,79,80,81,82

இந்த குர்ஆன் வசனங்கள் நமக்கு தெரிவிப்பது என்ன?. முகமது நபி வாழ்ந்த ஊருக்கு பக்கத்திலேயே மிக வசதியாக மலைகளை குடைந்து ஹிஜ்ர் என்ற ஊரில் சாலிஹ் நபி காலத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறிகிறோம்.

முகமது நபியும் அந்த வழியாக செல்லும் போது 'இறைவனின் சாபம் இறங்கிய இடம்' என்று சொன்னதாக ஹதீதுகளில் பார்க்கிறோம்.

ஆக...வாழைப்பழ கதை மாதிரி ஒரே இடத்தை இருவருமே நமக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து நிறுவ பார்க்கிறோம். நான் சொன்னது போல் சாலிஹ் நபி வாழ்ந்த இந்த ஊரை இறைவன் அழித்து விடுகிறான். மக்கள் நடமாட்டமே இல்லாத இந்த கிராமத்தை பின்னால் வந்த ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்து தங்களின் உபயோகத்துக்கு பயன்படுத்தியிருக்கலாம். இதுதான் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

எது உண்மையானாலும் இந்த பதிவுக்கு சம்பந்தமான உயரமான வாதில்கள் அனைத்து வீடுகளில் இருக்க என்ன காரணம்? அந்த மனிதர்கள் உயரமாக இருந்ததால்தான் வாதில்களையும் உயரமாக்கி கட்டியுள்ளார்கள்.

ஆறடியில் நமது சராசரி உயரத்தவர்களாக இருந்திருந்தால் 15 அடி, 18 அடியில் வாதில்களை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. முன்னர் வாழ்ந்த மக்கள் உயரமானவர்களாக இருந்ததை பல ஆய்வுகளும் உறுதி செய்கின்றது.

suvanappiriyan said...

//தஞ்சாவுர் பெரிய கோயிலில் ஒரு காளை மாடு(நந்தி) இருக்கு அதான் ஆதாம்,ஏவாள் முதன் முதலில் வளர்ந்த மாடு என்று ஹதீத் கூட காட்டினாலும் காட்டுவீங்க :-))//

'மோசேவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் எண்ணிப் பாருங்கள். அவருக்குப் பின் அநீதி இழைத்துக் காளைக் கன்றை கடவுளாக கற்பனை செய்தீர்கள்.'
-குர்ஆன் 2:51

மோசேயை பின்பற்றியவர்கள் யூதர்கள் என்பதும் எகிப்து நாட்டில் இந்த சம்பவம் நடந்ததையும் குர்ஆன் மூலமாக நாம் அறிகிறோம். பைபிளிலும் சொல்லப்பட்டிருக்கலாம். ஆரியர்கள் நம் நாட்டுக்குள் பிரவேசித்ததை படித்திருப்போம். ஆரியர்கள் எகிப்து, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள். அவர்கள் வரும் போது அவர்களின் வணக்க முறைகளையும் இங்கு கொண்டு வந்து புகுத்தினர். ராஜராஜ சோழன் ஆரிய அடிமையாகவே மாறிப் போனதை வரலாறுகளில் பார்க்கிறோம். அதனடிப்படையில் அமைந்ததுதான் இந்த நந்தி. நானும் குடும்பத்தோடு நேரில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

அடுத்து நெருப்பை கடவுளாக வணங்கும் பழக்கமும் தமிழர்களாகிய நமது முன்னோர்களிடம் இல்லை. ரிக் வேதத்தில் 'அக்னி' என்ற கடவுள் பல இடங்களில் கூறப்படுகிறது. இப்படி நெருப்பை வணங்குபவர்கள் ஈரானிலும், ஆர்மீனியாவிலும் எகிப்திலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. ஆரியர்களின் பூர்வீகம் இந்த நாடுகளாக இருந்திருக்கலாம்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//)ஒருக்கால் சாலிஹ் நபி வாழ்ந்த மக்களின் இடத்தை நபாதியர்கள் மற்றும் ரோமர்கள் பிற்காலங்களில் அபகரித்திருக்கலாம். //

கி.மு 4 ஆம் நூற்றாண்டில் ரோமானிய சிற்பக்கலையின் படிக்கட்டப்பட்டதை , எப்படி கி.பி ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குரானின் கூற்றுக்கு ,அப்படி இருக்கலாம்னு சொல்லுறிங்க, இதை ஆர்க்கியாலஜிஸ்ட்கள் எப்படி ஏற்பார்கள்.

//எது உண்மையானாலும் இந்த பதிவுக்கு சம்பந்தமான உயரமான வாதில்கள் அனைத்து வீடுகளில் இருக்க என்ன காரணம்? அந்த மனிதர்கள் உயரமாக இருந்ததால்தான் வாதில்களையும் உயரமாக்கி கட்டியுள்ளார்கள். //

சவுதி அரேபியா முழுக்க இப்படியான குடவறை அமைப்புகளே வேறு எதுவும் இல்லை. ஆதாரம் யுனெஸ்கோ தளம்.

இங்கே இருப்பது மொத்தம் 111 குடவறை அமைப்பு, அப்போ மொத்தம் எத்தனை மக்கள் சவுதி அரேபியாவில் வாழ்ந்திருக்க முடியும்?

நான் கொடுத்த சுட்டி யுனெஸ்கோவின் சுட்டி, அதில் இதனை கல்லறை என சொல்லி யுனெஸ்கோ ஹெரிட்டேஜ் சென்டர் ஆக அறிவித்துள்ளார்கள், சும்மா அப்படி செய்வார்களா?

//மத்யன் என்பதும் மதாயின் என்பதும் வேறு வேறு சொற்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் வவ்வால் சுவாமி. பிறகு இஷ்டம் போல் கூகுளில் தேடுங்கள்.//

//ஆக...வாழைப்பழ கதை மாதிரி ஒரே இடத்தை இருவருமே நமக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து நிறுவ பார்க்கிறோம்.//

மேற் சொன்ன இரண்டும் நீங்கள் சொன்னது,நீங்கள் படம் நான் சொன்னது தான் என சொன்ன போது அது வேறு ,நான் சொன்னது வேறு என சாதித்தீர்கள் :-))
எனக்கு ஒரு சந்தேகம் ஆரம்பத்தில் மதாயின் வேற, எனக்கு கூகிளில் தேட தெரியவில்லை என சொல்லிவிட்டு, இப்போ பல்டி அடிப்பது ஏன் :-))
----------

ஆரியர்கள் இந்தியா பக்கம் வரும் முன்னரே திராவிடர்கள் அக்னி வழிபாடு, உருவ வழிபாடு செய்தாச்சுன்னு ,சிந்து சமவெளி அகழ்வுகள் சொல்கிறது, காலம் கி.மு 1700.அப்போதே காளை மாடு, பன்றி எல்லாம் செதுக்கப்பட்டுள்ளது.

பின்னர் ஆரியர் வந்தப்போது அவை எல்லாம் வேதமாக்கப்பட்டது.

ஆரியர்களோ,திராவிடர்களோ எல்லாம் கி.முவில் உருவான மதம், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் உருவான மத நூல் அவர்களுக்கு காளை மாடு கொடுத்தேன் என சொல்வதை ஆதாரம் என்றால் எதால் சிரிப்பது.

கொஞ்சம் கூட சிந்திக்கவே மாட்டீர்களா?

suvanappiriyan said...

//ஆரியர்களோ,திராவிடர்களோ எல்லாம் கி.முவில் உருவான மதம், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் உருவான மத நூல் அவர்களுக்கு காளை மாடு கொடுத்தேன் என சொல்வதை ஆதாரம் என்றால் எதால் சிரிப்பது.//

அடடா...ஆதமிலிருந்து முகமது நபி வரை அனைத்து இறைத் தூதர்களையும் அனுப்பியது குர்ஆனை கொடுத்த ஒரே இறைவன் என்று யாராவது வவ்வாலுக்கு பாடம் எடுங்களேன். இனி நான் அரிச்சுவடியிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.

ஒளரங்கசீப் காலத்தில் ஒரு எழுத்தர் மொகலாய முதல் அரசர் பாபரைப் பற்றி ஒரு குறிப்பு சொன்னால் 'அது எப்படி? ஒளரங்கசீப் காலத்திய எழுத்தர் பாபரைப் பற்றி எப்படி சொல்ல முடியும?' என்று கேட்டால் அவருக்கு நாம் என்ன பதில் சொல்வது. அந்த எழுத்தர் பாபரைப் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்ட குறிப்புகளை படித்து அதன் அடிப்படையில் எழுதியதாக சொல்வோம். மனிதனுக்கு இது ஓகே. எல்லாம் அறிந்த இறைவன் இதுவரை நடந்தது இனி நடக்கவிருப்பது தற்போது நடந்து கொண்டிருப்பது போன்ற முக்காலத்தையும் அறிந்த ஒருவனுக்கு வேதத்தில் சொல்வது சிரமமா என்ன?

சிந்திக்க மாட்டீர்களா?

இராஜகிரியார் said...

வவ்வால்,

//அவை பொதுமக்களின் வாழ்விடம் அல்ல, அப்போதைய இனக்குழுக்களின் தலைவன் மற்றும், பூசாரி நிலையில் இருந்தவர்கள், மற்றும் கோயில்களே//
//அவை வீடுகள் அல்ல டோம்கள். இறந்தவர்களின் நினைவிடங்கள் ,மற்றும் டுஷாரா என்ற நபாதியன் கடவுளின் கோயில் ,மற்றும் மன்னரின் அரசவை கவுன்சில்//

இவை இரண்டுமே நீங்கள் சொன்னது. ஏதாவது ஒன்றில் உறுதியாய் இருங்கள்.

//சுட்டிப்போட்டால் ஒன்று நீங்களாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் ,அதையும் செய்ய மாட்டேன் என்கிறீர்கள்,//

இணையத்தில் எதையாவது நுனிப்புல் மேய்ந்து விட்டு - அதையும் இதையும் வெட்டி ஒட்டி, கண் காது வைத்து அரைகுறையாக உளறுவது என் பழக்கம் இல்லீங்கோ.

//நீங்கள் போடும் பின்னூட்டங்கள் கும்மி வகை தானே,அதை சொன்னால் காண்டாவது ஏன்?//

மீண்டும், மீண்டும் நல்ல சொல்லாடல்... தொடருங்கள். தொடருங்கள்.

சகோ. சுவனப்பிரியன்,

//மக்கள் இடையில் இருந்த சமவெளியில் செங்கலால் கட்டிய வீட்டில் வாழ்ந்துள்ளார்கள்.// - வவ்வால்.

சவுதியில் செங்கல் வீடுகளையோ இல்லை அதன் எச்சங்களையோ பார்த்திருக்கிறீர்களா? தெரிந்து கொள்வதற்காகத் தான் கேட்கிறேன்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//அடடா...ஆதமிலிருந்து முகமது நபி வரை அனைத்து இறைத் தூதர்களையும் அனுப்பியது குர்ஆனை கொடுத்த ஒரே இறைவன் என்று யாராவது வவ்வாலுக்கு பாடம் எடுங்களேன். //

ஏழாம் நூற்றாண்டில் ஒரு கடவுளையும், புத்தகத்தையும் எழுதிவிட்டு அதற்கு முன்னர் இருந்த மதம், கடவுள்,இறைத்தூதர் எல்லாம் என்னோடது தான்னு சொல்லும் பாடம் எடுக்கத்தான் நீங்க இருக்கீங்களே :-))

நித்தியானந்த கடவுளோட அவதாரம்னு சொன்னாலும் கொஞ்சம் பேரு நம்புறாங்க :-))
---------
// அந்த எழுத்தர் பாபரைப் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்ட குறிப்புகளை படித்து அதன் அடிப்படையில் எழுதியதாக சொல்வோம். //

அதைத்தான் நானும் சொல்லுறேன், முன்னாடியே இருந்தவற்றை அறிந்து கொண்டு ,இறைவன் செய்தியாக இறக்கினான் என சொல்லிக்கொண்டார் என.

// எல்லாம் அறிந்த இறைவன் இதுவரை நடந்தது இனி நடக்கவிருப்பது தற்போது நடந்து கொண்டிருப்பது போன்ற முக்காலத்தையும் அறிந்த ஒருவனுக்கு வேதத்தில் சொல்வது சிரமமா என்ன?//

ஹி...ஹி முக்காலமும் அறிந்த இறைவன் ஏன் ரோமானிய சாம்ராஜ்யம், அவர்கள் கட்டிடக்கலைன்னு கட்ட வச்சார், எல்லாம் அரபிய சாம்ராஜ்யம்,கட்டிடக்கலையில் கட்ட வச்சிருக்கலாமே ?

சரி அரபி மொழியையாவது மூல மொழியா படைச்சு இருக்கலாமே, அதுவே அக்காடியன் .அராமக்,பாரசீகம்னு கடன்வாங்கி பொறந்துடுச்சே, இப்போ பாருங்க மூத்த மொழியில ஏற்கனவே எழுதிய சமய நூல்கள் முன்னால் "புது கதை" எடுபட மாட்டேன்குது :-))
----------------

இராஜகிரியார்,

//இவை இரண்டுமே நீங்கள் சொன்னது. ஏதாவது ஒன்றில் உறுதியாய் இருங்கள். //

சு.பி சுவாமிகள் புதிய ஒரு இடத்தினை அரேபியாவில் காட்டுகிறார் ,என அக்கால பொதுவான கட்டமைப்பின் நோக்கம்,பயன்பாட்டினை சொன்னேன், அப்போவே ஜோர்டான் அருகே உள்ளது என சொல்லி இருந்தால் டோம்கள் என சொல்லி இருப்பேன்.

இப்போ அப்போ,இப்போ சொன்ன போதும் கோவில், அரண்மனை,பூஜாரிகளின் வசிப்பிடம் என சொல்லி இருந்தேன். அக்கால பூஜாரிகள் கோயிலில் வசிப்பதுண்டு.

இறந்தவர்களின் டோம்களை வழிபடவும் செய்தார்கள்.ரோமானிய ,கிரேக்க, எகிப்திய கலாச்சாரத்தின் படி மன்னர்கள் கடவுளின் வாரிசுகள், உயிருடன் இருக்கும் போதும் இறந்த பின்னரும்,ஆடம்பரமாக டோம்கள் கட்டி அதனையும் வழிப்படுவார்கள்.

எந்த இடம், எந்த நாட்டு கலாச்சாரம் என சொல்லாமல் மறைத்து சொன்னதால் பொதுவாக சொன்னே, இடம் எதுவென நானே தேடிப்பார்த்த பின் தான் உண்மை தெரிந்தது.

//இணையத்தில் எதையாவது நுனிப்புல் மேய்ந்து விட்டு - அதையும் இதையும் வெட்டி ஒட்டி, கண் காது வைத்து அரைகுறையாக உளறுவது என் பழக்கம் இல்லீங்கோ.//

சு.பி.சுவாமிகளை இப்படி போட்டு வாங்க்குறிங்களே :-))

இணையத்தில் ஒரு குடவறை அமைப்பினை பார்க்கிறார், அது என்ன எனக்கூட அறியாமல் ,வீடு,வாசல்ப்படி 14 அடி எனவே மனிதன் 10 அடி என வெட்டி ஒட்டி ஒரு கதை சொல்கிறார் :-))
//சவுதியில் செங்கல் வீடுகளையோ இல்லை அதன் எச்சங்களையோ பார்த்திருக்கிறீர்களா? தெரிந்து கொள்வதற்காகத் தான் கேட்கிறேன்.//

உங்களுக்கு இன்னமும் இணையத்தில் தேடிப்படிக்க சோம்பலாக இருந்தால் இது போன்ற கதைகளை நம்பத்தான் செய்வீர்கள்.

அவ்விடம் சவுதியுடன் தற்காலத்தில் தான் இணைந்தது, முன்னர் ஜோர்டானின் ஒரு பகுதி, ரோமானிய சாம்ராஜ்யத்தில் இருந்த இடம். எனவே அங்கு சவுதியில் இருப்பது போல எதுவும் இருக்காது.

சௌதி அரேபியா என இப்போது இருக்கும் அளவுக்கு உருவானது 1932 இல் தான். அதற்கு முன்னர் 1744 இல் ரியாத் ஒட்டிய ஒரு பகுதியை நெஜாத் என்ற சிறிய நாடாகவே ஆண்டு வந்தார்கள்,மற்றப்பகுதி எல்லாம் ஒட்டமான்கள் ஆண்டார்கள்.1902 வரைக்கும் ஒட்டமான்களால் தொறத்தப்பட்டு நாடில்லாமல் இருந்தார்கள், பிரிட்டன் உதவியுடன் தான் ஒட்டமான்கள் தோற்கடிப்பட்டார்கள். பின்னர் ஹெஜாஸ், ரியாத் எல்லாம் கைப்ப்பற்றி இணைத்துக்கொண்டார்கள்.

இதற்கு இக்வான் என்ற பிடாயுன் குழுவும், அல்-வாஹாபியும் உதவினார்கள்.

எனவே ஜோர்டான் எல்லையில் உள்ள மதாயின் சாலேக் பகுதியில் அரேபிய கலாச்சாரத்தில் கட்டுமானங்கள் இருக்காது.அனைத்தும் ரோமானிய கலாச்சார கட்டமைப்புகளே.
------------

மத்யன் சாலேக் வேற ,மதாயின் சாலேக் வேற என சொன்னது, மத்யன் இனக்குழு என சொன்னதுலாம் நீங்க,அதுக்குள்ள மறந்துட்டிங்களே :-))
--------

suvanappiriyan said...

//ஹி...ஹி முக்காலமும் அறிந்த இறைவன் ஏன் ரோமானிய சாம்ராஜ்யம், அவர்கள் கட்டிடக்கலைன்னு கட்ட வச்சார், எல்லாம் அரபிய சாம்ராஜ்யம்,கட்டிடக்கலையில் கட்ட வச்சிருக்கலாமே ?//

அப்படி கட்டினால் ஏன் இப்படி கட்டவில்லை என்ற கேள்வி எல்லாவற்றிற்குமே வரும். கேள்வி கேட்க எல்லை ஏது? :-)

//சரி அரபி மொழியையாவது மூல மொழியா படைச்சு இருக்கலாமே, //

உலக மூல மொழிகள் அனைத்தும் இறைவனே மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. உலக மொழிகள் அனைத்துமே இறைவன் கற்று கொடுத்தவையே! அரபு மொழிக்கும் மட்டும் ஏன் விஷேச அந்தஸ்தை கொடுக்கிறீர்கள்?

suvanappiriyan said...



//[Note: The documents you are about to consult were prepared by the concerned State Party aiming inscription of a property on the World Heritage List. The information included and the opinions expressed are not necessarily those of UNESCO and do not commit the Organization. The cartographic material presented do not imply the expression of any opinion whatsoever on the part of UNESCO concerning the legal status of any country, territory, city or area or of its authorities, or concerning the delimitation of its frontiers or boundaries//

வவ்வால் கொடுத்த யுனெஸ்கோ லிங்கில் வரும் ஒரு வாசகத்தை பார்ப்போம். அதாவது இந்த சைடில் வரும் தகவல்களின் நம்பகத்தன்மை யுனெஸ்கோவை சாராது என்று அழகாக நகர்ந்து கொள்கிறது யுனெஸ்கோ. எல்லாம் வாய் வழிச் செய்திகள்தான். அவரவர்க்கு தக்கவாறு அந்த வரலாற்றை திருத்திக் கொள்கின்றனர். அதுதான் யுனெஸ்கோவின் இந்த லிங்கிலும் நடந்துள்ளது. அப்படியே யுனெஸ்கோ சொல்வது உண்மையாக இருந்தாலும் நாம் வைக்கும் வாதத்துக்கு எந்த மறுப்பும் அதில் இல்லை.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகளே,

//he documents you are about to consult were prepared by the concerned State Party aiming inscription of a property on the World Heritage List. //

அதில என்ன சொல்லியிருக்குன்னா, மதாயின் சாலேக் எந்த நாட்டில் இருக்குன்னு நீங்க நினைக்கிறிங்களோ, அந்த நாட்டு அரசாங்கம் சொன்ன தகவல், யுனெஸ்கோவின் தகவல் அல்லனு.

இப்போ நீங்கலே சொல்லுங்க, மதாயின் சாலேக் எந்த நாட்டுல இருக்கு?

சவுதி அரேபியான்னு சொன்னால், அந்த கருத்து சவுதியின் கருத்து :-))

இப்போ அது கல்லறை இல்லைனு சொன்னா சவுதி அரசு சொன்ன கருத்துக்கு எதிராக சொன்னதாகிடும் :-))

மேலும் அதன் காலம் கி.மு 4- கி.பி 1 ஆம் நூற்றாண்டுன்னு தெளிவா இருக்கு ,அப்போ அக்காலக்கட்டத்தில் 10-12 அடி உயர மனிதன் இருந்தா வரலாற்றில் பதிவாகி இருக்காதா?


//உலக மூல மொழிகள் அனைத்தும் இறைவனே மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. //

வேற ஆதாரம்னு எதுவும் காட்ட முடியலைனா ,இதானே சொல்வீங்க :-))

7 ஆம் நூற்றாண்டு நூலை அதற்கு பலாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவற்றுக்கு எல்லாம் ஆதாரம்னு சொல்லும் கொடுமையை என்னவென்பது ?

உலகத்தில எந்த மொழியியல், தொல்லியியல் நிபுணர்களும் ஒத்துக்கவே மாட்டாங்க, நீங்க மட்டும் தனியா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியது தான் :-))

நாளைக்கே நான் ஒரு புத்தகம் எழுதி எல்லாம் நான் தான் உருவாக்கினேன் சொன்னாலும் நம்புவீங்களோ :-))

அஞ்சா சிங்கம் said...

நாகூர் மீரான் said... @அஞ்சா சிங்கம்..

///மற்றவர்கள் எப்படியோ நான் உங்கள் நகைச்சுவைக்காகத்தான் வருகிறேன் ....:-))///

சுவனப்பிரியன் பதிவுல நகைச்சுவை எழுதுறது இருக்கட்டும்...நீங்க பேருலயே கண்ணா பின்னான்னு நகைச்சுவை வச்சு இருக்கீங்களே!!!!....உண்மையிலேயே உங்க பேரையும் உங்க போட்டோவையும் பார்க்கும் போது எல்லாம் எனக்கு சிரிப்பு வராமல் இருந்தது இல்லை......

பெரிய ஆளு சார் நீங்க..............//////////////////////////////

யாருப்பா இது புதுசா எங்க வருண் மாமா இல்லாத குறையை தீர்க்க வந்திருக்காரு ..

suvanappiriyan said...

//அதில என்ன சொல்லியிருக்குன்னா, மதாயின் சாலேக் எந்த நாட்டில் இருக்குன்னு நீங்க நினைக்கிறிங்களோ, அந்த நாட்டு அரசாங்கம் சொன்ன தகவல், யுனெஸ்கோவின் தகவல் அல்லனு.//

//நான் கொடுத்த சுட்டி யுனெஸ்கோவின் சுட்டி, அதில் இதனை கல்லறை என சொல்லி யுனெஸ்கோ ஹெரிட்டேஜ் சென்டர் ஆக அறிவித்துள்ளார்கள், சும்மா அப்படி செய்வார்களா?//

இரண்டுமே வவ்வாலுடைய வாதம்தான். :-))))

//நாளைக்கே நான் ஒரு புத்தகம் எழுதி எல்லாம் நான் தான் உருவாக்கினேன் சொன்னாலும் நம்புவீங்களோ :-))//

குர்ஆனை சாதாரணமாக நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பவில்லை. எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் எல்லா மொழியினருக்கும் இன்றைய அறிவியலுக்கும் ஒத்து வருவதாலேயே அதனை இறை வேதமென நம்புகிறோம்.

வவ்வால் ஒன்றை இயற்றி கொண்டு வந்தால் அவரது வீட்டிலுள்ளவர்களே 'பையனுக்கு ஏதோ ஆயிடுச்சு' என்று ஆஸபத்திரியில் அட்மிட் பண்ணி விடுவார்கள். :-)

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

சவுதி அரசு கொடுத்த ஆவணங்கள், அதனை சரிப்பார்த்து யுனெஸ்கோ அறிவிக்கிறது, ஆனால் இவற்றின் மூலம் சம்பந்தப்பட்ட அரசின் அறிக்கை, என சொல்வது ஒரு நிர்வாக ரீதியான ஒன்று இதில் என்ன பிழை.

ஒரு இடத்தினை 2000 ஆண்டு பழமையானது யுனெஸ்கோ ஹெரிடேஜ் சென்டராக அறிவிக்க சொன்னால் ,உடனே கண்ணை மூடிக்கிட்டு அறிவிக்காது என்ற புரிதல் கூட இல்லையே.

நான் சொன்னது அதனை தான் யுனெஸ்கோ ஹெரிடேஜ் சென்ட்ரகா சும்மா அறிவித்துவிட மாட்டார்கள் என.

சரி முக்கியமான விடயத்தினை விட்டு நழுவுறிங்களே, வாசல்படி பெருசா இருக்கு மனுசன் 10-12 அடி உயரம்னு அதை வச்சு சொன்ன கதை சரியா ,தப்பா அதை சொல்லுங்க.

இடத்தினை மாத்தி மாத்தி சொன்னது, அதன் காலத்தினை மாத்தி சொன்னது, அதை வைத்து குரானில் சொன்னது போல மனிதன் உயரமா இருந்தான்னு சான்று சொன்னது எல்லாம் சாயம் வெளுத்து போன பிறகு ,இன்னுமும் இழுக்கிறிங்களே பலே சுவாமிகள் தான் போங்கோ :-))

//எல்லா காலத்துக்கும் எல்லா நாட்டு மக்களுக்கும் எல்லா மொழியினருக்கும் இன்றைய அறிவியலுக்கும் ஒத்து வருவதாலேயே அதனை இறை வேதமென நம்புகிறோம்.//

ஹி...ஹி நீங்களே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிட்டா ஆச்சா, அந்த புராண நூலை நம்பாதவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம் .


//வவ்வால் ஒன்றை இயற்றி கொண்டு வந்தால் அவரது வீட்டிலுள்ளவர்களே 'பையனுக்கு ஏதோ ஆயிடுச்சு' என்று ஆஸபத்திரியில் அட்மிட் பண்ணி விடுவார்கள். :-)//

ஹி...ஹி இதை அந்த காலத்திலே முகமது அய்யாவுக்கும் செய்திருந்தால் இப்படியான உளறல்கள் எல்லாம் கேட்க வேண்டியதே வந்திருக்காது :-))

முகமது அய்யாவுக்கு இறைவசனம் இறங்கினா அது உண்மை ,எனக்கு இறங்கினா பொய்யா?

அப்போ நீங்க சொல்லும் இறை வசனமும் பொய்யுனு தான் ஊருல ,உலபகத்தில பேசுறாங்க அதையும் கேளுங்களேன் :-))

இப்பவும் இறைத்தூதர் ஆவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை, கொஞ்சம் தாடி மீசைன்னு வளர்த்துக்கிட்டு ,கேசில புரியாத போல நாளு வசனம் எடுத்துவிட்டா நானும் இறைத்தூதர் தான் , என் பின்னாலும் ஒரு கூட்டம் கூடும், அந்த பொழப்பு எனக்கு வேண்டாம்னு பார்க்கிறேன் :-))

suvanappiriyan said...

//சரி முக்கியமான விடயத்தினை விட்டு நழுவுறிங்களே, வாசல்படி பெருசா இருக்கு மனுசன் 10-12 அடி உயரம்னு அதை வச்சு சொன்ன கதை சரியா ,தப்பா அதை சொல்லுங்க.

இடத்தினை மாத்தி மாத்தி சொன்னது, அதன் காலத்தினை மாத்தி சொன்னது, அதை வைத்து குரானில் சொன்னது போல மனிதன் உயரமா இருந்தான்னு சான்று சொன்னது எல்லாம் சாயம் வெளுத்து போன பிறகு ,இன்னுமும் இழுக்கிறிங்களே பலே சுவாமிகள் தான் போங்கோ :-))//

ஹி...ஹி..யார் சாயம் வெளுக்கப் போகிறது என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்து விடும். சவுதி அதிகாரிகளிடம் இது பற்றி பேசினேன். எனது கருத்தையே அவர்களும் ஆமோதித்தனர். நபாத்தியன்களுக்கும் சாலிஹ் நபிக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆதாரங்களை தருவதாக சொல்லியிருக்கின்றனர். கொஞ்சம் பொறுக்கவும் . :-)

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//ஹி...ஹி..யார் சாயம் வெளுக்கப் போகிறது என்பது நாளை அல்லது நாளை மறுநாள் தெரிந்து விடும். சவுதி அதிகாரிகளிடம் இது பற்றி பேசினேன். எனது கருத்தையே அவர்களும் ஆமோதித்தனர். நபாத்தியன்களுக்கும் சாலிஹ் நபிக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஆதாரங்களை தருவதாக சொல்லியிருக்கின்றனர். கொஞ்சம் பொறுக்கவும் . :-)//

ஹி...ஹி விடாம துருவின பிறகு இந்த வேலை , ஆனால் பதிவ போட்டப்போது ,சும்மா அக்கப்போரா எதையாவது சொல்லிடுவிங்க, நானே கேட்கலைனா இத எல்லாம் செய்வீங்களா?

சரி விடுங்க ... நாளைக்கு ஆதாரம் கொண்டுவரேன்னூ சொல்லிட்டிங்க ,அதில இருக்க ஓட்டைய நானே வெளிச்சம் போட்டு காட்டுறேன் :-))

இந்த ஆட்டம் நல்லா இருக்கு சுவாமிகளே :-))

suvanappiriyan said...

//ஹி...ஹி விடாம துருவின பிறகு இந்த வேலை , ஆனால் பதிவ போட்டப்போது ,சும்மா அக்கப்போரா எதையாவது சொல்லிடுவிங்க, நானே கேட்கலைனா இத எல்லாம் செய்வீங்களா?//

அது வருவது படி வரட்டும். நான் கேட்டது நபாதியன்களின் கல்லறை என்று நீங்கள் சொன்னதை. தாஜ்மஹாலின் உள்ளே மும்தாஜின் கல்லறை உள்ளது. ஆனால் மதாயின் ஸாலிஹ் வீடுகளில் எந்த சமாதியையும் நான் பார்க்கவிலலையே! ஒவ்வொரு வீடும் உள்ளே அருமையான கூடம். சமையல்அறை. படுக்கை அறை என்று தனித்தனியே இருந்ததே. இதைப்பற்றி உங்கள் கருத்தை சொல்லவே இல்லையே!

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

இதை மட்டும் கேளுங்க?

நான் ஆரம்பத்தில் நினைவிட கல்லறை(monumental tombs) என சொன்னதை கவனிக்கவில்லை போலும் மீண்டும் பெருசா எழுத சோம்பல் பட்டு கல்லறை என சுருக்கினேன்.

நினைவிட கல்லறைகளில் இறந்த உடல்கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என அவசியம் இல்லை, அவர்களின் அஸ்தி வைத்திருந்தாலோ அல்லது சும்மா கூட கட்டலாம் ,இதனை காலியான கல்லறை என்பார்கள்.

cenataph என்ற ஆங்கில சொல்லுக்கு நினைவிட கல்லறை டோம் எனப்பொருள். இச்சொல்லின் மூலம் இலத்தின்/கிரீக், தான்.

படுக்கையறை ,சமையலறை இருக்குன்னு நீங்க தான் சொல்லுறிங்க, அப்படியும் இருக்கலாம்,எகிப்திய மம்மிகள் வைக்கப்பட்ட பிரமிட்களில் இப்படி சகல வசதியும் இருக்கும், அக்கால கிரேக்க, ரோமானிய,எகிப்திய கலாச்சாரம் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது எனவே அதே முறையில் எல்லா வசதியுடன் மாளிகை போல அரசகுல மக்களுக்கு நினைவிடம் அமைத்து இருக்கலாம்.

நேரா போய்ப்பார்த்த நீங்க ,அங்கே இருக்கும் அதிகாரப்பூர்வ கைடிடம் உண்மையான வரலாற்றினை கேட்டீங்களா?

ஹி...ஹி வாசப்படி உயரமா இருக்கு ,அப்போ மனுசன் உயரமா இருப்பான்னு சொன்ன முதல் விஞ்சானி நீங்க தாங்கோ :-))

கிராமத்தில இருக்கும் கூறைவீடு,பழைய ஓட்டுவீடு ஆகியவற்றில் உயரம் குறைவான வாசல்படி இருக்கும், அதைப்பார்த்துட்டு தமிழர்கள் எல்லாம் 4 நான்கடி உயரம் தான் இருப்பாங்கன்னு சொல்லாத வரையில் உங்களுக்கு கோடி புண்ணியம் :-))

இராஜகிரியார் said...

//சு.பி சுவாமிகள் புதிய ஒரு இடத்தினை அரேபியாவில் காட்டுகிறார் ,என அக்கால பொதுவான கட்டமைப்பின் நோக்கம்,பயன்பாட்டினை சொன்னேன், அப்போவே ஜோர்டான் அருகே உள்ளது என சொல்லி இருந்தால் டோம்கள் என சொல்லி இருப்பேன்.

இப்போ அப்போ,இப்போ சொன்ன போதும் கோவில், அரண்மனை,பூஜாரிகளின் வசிப்பிடம் என சொல்லி இருந்தேன். அக்கால பூஜாரிகள் கோயிலில் வசிப்பதுண்டு.//

உங்களுக்கே ஏதாவது புரிகிறதா?

//சு.பி.சுவாமிகளை இப்படி போட்டு வாங்க்குறிங்களே :-))//

ஹி..ஹி.. நான் சுவனப்பிரியனை சொன்னேனா இல்லை யாரை சொன்னேன் என்பது உங்களுக்கு நிஜமாகவே தெரியாதாக்கும்?

வவ்வால் said...

இராஜகிரியார்,

//இப்போ அப்போ,இப்போ சொன்ன போதும் கோவில்//


இப்போ சொன்னது தான் அப்போவும் சொன்னேன், என வர வேண்டும், தட்டச்சு செய்யும் போது பிழையாகிவிட்டது.

சரி எதுவும் சொல்ல இல்லை என்பதால் தட்டச்சு பிழையை பிடிக்க ஆரம்பிச்சுட்டிங்களா?

இதுவரைக்குமே தவறான தகவலை வைத்து ஒரு கதை சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் சுத்தி வளைக்கும் பெரிய மனிதர்களாக இருக்கிறீர்களே :-))

அரேபிய கட்டிடக்கலை, கலாச்சாரத்துக்கு முன்னர் உருவானதை எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு ,எல்லாம் எங்களதுன்னு சொல்வதை இணையத்தில் உங்களைப்போல சிலர் நம்பி கை தட்டலாம், வரலாறு அறிந்தவர்கள் யாரும் அப்படி செய்யமாட்டார்கள்.

உங்களைப்போன்றவர்களுடன் உரையாடுவது நல்ல ஒரு காமெடி அனுபவமாக இருப்பதாலே நமக்கும் பிடித்திருக்கிறது :-))

இராஜகிரியார் said...

வவ்வால்,

நான் கேட்டிருந்ததில் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு மீதிக்கு பதில் சொல்லாமல் நழுவுவதிலும் சரி, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதை எதையோ சொல்லி மழுப்புவதிலும் சரி நீங்கள் பலே! பலே..!!

நான் கேட்டது அவ்வளவு ஒன்றும் புரியாத கேள்வி இல்லை. It is a very simple logical question. நான் இடம் வரலாறு கலாச்சாரம் பற்றி எல்லாம் ஒன்றுமே கேட்காதிருக்க நீங்களாக எதையாவது எழுதி திசை திருப்ப கூடாது.

சுவனப்பிரியன் கூற்று படி அந்த மலை வீடுகள் உயரமான மனிதர்களுடையது. உங்கள் கூற்று படி அது முதலில் பழைய கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பூஜாரிகளின் வசிப்பிடம். பிறகு பல்டி அடித்து அவை எல்லாம் இனக்குழு தலைவர்களுடைய வீடுகள் என்றீர்கள். பிறகு முன்றாவதாக அந்தர் பல்டி அடித்து அவை எல்லாம் குடவறைகள் என்கிறீர்கள். (இனியும் என்ன என்னவென்று சொல்வீர்களோ தெரியவில்லை. இதனால் தான் ஏதாவது ஒன்றில் உறுதியாக இருக்கள் என்றேன்) இதை பற்றி கேட்டால் நான் (வவ்வால்) சரியாக தேடிபார்க்க வில்லை அதற்கும் சுவனப் பிரியன் தான் காரணம் அவர் தான் இடம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்கிறீர்கள்.


ஆனால் சுவனப் பிரியனோ அல் ஊலா என்ற இடத்தை குறிப்பிட்டு விட்டு அதற்கான மேப்பையும் தெளிவாகவே கொடுத்துள்ளார். பிறகு ஏன் வழக்கம் போல் பொய்களை அள்ளி விடுகிறீர்கள்?

சரி போகட்டும். நான் இடத்தினை பற்றி அவ்வளவாக பேசவில்லை.

உங்கள் முதல் வாதப்படி அவைகள் அரண்மனைகள் கோயில்கள் என்றால் மற்ற இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் அரண்மனைகளை சுற்றி அவை போன்ற உயரமான வீடுகள் ஏன் இல்லை?

உங்கள் இரண்டாவது வாதப்படி அவைகள் இனக்குழு தலைவர்களுடைய வீடுகள் என்றால் எல்லா இனக்குழு தலைவர்களும் 5 கிமீ சுற்றளவில் ஒரே இடத்திலா வசித்திருப்பார்கள்?

அல்லது 5 கிமீ சுற்றளவில் ஏன் ஒரேயொரு சாதாரண உயர வீடு கூட அங்கு இல்லை?

உங்களது முன்றாவது வாதப்படி அவைகள் குடவறைகள் என்றால் அங்கு சுவனப்பிரியன் விஸ்தாரமான ஹால்கள் தனித்தனி படுக்கை அறைகள் சமையல் அறைகள் போன்றவற்றை பார்த்ததாக கூறுகின்றாரே. நீங்களோ அதை பிரமாண்டமாக கட்டி வழிபடுவார்கள் என்கிறீர்கள்? பிரமாண்டம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதில விஸ்தாரமான ஹால்கள் தனித்தனி படுக்கை அறைகள் சமையல் அறைகள் எதற்கு?

நான்காவதாக மக்கள் இடையில் இருந்த சமவெளியில் செங்கலால் கட்டிய வீட்டில் வாழ்ந்துள்ளார்கள் என்கிறீர்கள். நான் அறிந்தவரையில் பாலைவன பிரதேசங்களில் பாறை போன்ற கற்களால் தான் வீடு கட்டி இருப்பார்கள். இந்த மலை வீடுகள் இருப்பதும் அப்படிப் பட்ட பாலைவன பிரதேசம் போலவே தெரிகிறது. (I am not sure. Bro. Suvanap Piriyan pls confirm here) அதனால் தான் செங்கல் வீடுகள் பற்றி சவுதியில் உள்ள சுவனப் பிரியனிடம் விளக்கம் கேட்டேன். உங்களிடம் இல்லை. ஆனால் அதற்கும் கூட பதில் தருவதாக எண்ணிக் கொண்டு நான் கேட்காத விடயத்தினை பற்றி எல்லாம் எழுதி அனைவரையும் குழப்புகிறீர்கள். (பதில் இல்லை என்றால் இதை தானே செய்ய முடியும்)

ஒரு சாதாரண லாஜிக்கல் கேள்விக்கே இத்தனை வகையாக மாற்றி மாற்றி பேசும் நீங்கள் - நீங்கள் கொடுக்கும் மற்ற விடயங்கள் பற்றி எப்படி நம்பிக்கை கொள்வது என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இறுதியாக,

//உங்களைப்போன்றவர்களுடன் உரையாடுவது நல்ல ஒரு காமெடி அனுபவமாக இருப்பதாலே நமக்கும் பிடித்திருக்கிறது :-)) //
நமக்கும் தான் பிடித்திருக்கிறது சாரே. பொழுது போக வில்லை என்றால் தொடர்ந்து கொண்டே இருக்கலாம். ஆனால் விரயம் செய்வதற்கு நம்மிடம் அவ்வளவாக நேரம் இல்லை.:-)) :-))

suvanappiriyan said...


Nabataeans

There are various views of scientists on the origins of the Nabataeans. Some views that they came from the south of the Arabian Peninsula, they came from the north or northeast of Najd, they came from the north of the Gulf region, they come from Hejaz area, north-west of the Arabian Peninsula and some others opine that they are from Edom. However, the Assyrian Annals and Torah indicated that they lived in areas to the south of the territories of Beni Qeidar and the Greek historian Diodorus of Sicily described them as Bedouin shepherds who did not know agriculture i.e. they were unstable, they did not drink wine and their lands were mostly rough and rocky.
----------------------------------
http://www.pbase.com/adnan_masood/madain_saleh
Madain Salih (City of Prophet Salih (PBUH
During time of prophet Salih, Thamud was a famous tribe, who were named after their forefather Thamud, the brother of Jadis. Both are the sons of Athir bin Iram bin Shem bin Noah. They were Arabs, lived between Hijaz & Tabuk. They lived after the people of 'Ad and worship idols as 'Ad did. The prophet Mohammed PBUH passed this place, when he went to Tabuk.
(Source: Stories of the prophet - Imam Imaduddin Abul-Fida Ismail ibn khatir Ad-Dimashqi 700-774H, Translated in english - Rashad Ahmad Azami)
The long history of the place and the multitude of cultures to have occupied the site have led to the several names that are still in use to refer to the area. The place is currently known as Mada'in Saleh, Arabic for "Cities of Saleh," which was coined by an Andalusian traveler in 1336 AD.[10] The name "Al-Hijr," Arabic for "rocky place," has also been used to allude to its topography.[5] Both names have been mentioned in the Qur’an when referring to the settlements found in the locality.[11] The ancient inhabitants of the area, the Thamudis and Nabateans, referred to the place as "Hegra".
http://en.wikipedia.org/wiki/Mada%27in_Saleh
----------------------------
This site, in the north-west of Saudi Arabia, is known in the West as Mada'in Saleh, or the towns of Saleh, from the name of the prophet who, according to the Koran, tried long before Mohammed to convert the Thamud tribe to the religion of one God. The town was however not built by the Thamudis, whose presence at this site is not proven archaeologically, but by the Nabateans. Mada'in Saleh constituted the southern point of their kingdom which prospered between the third century BC and the fourth century AD and stretched from the south of Jordan to the north of the Arabian peninsula. The Nabateans also built Petra, their political capital.
http://observers.france24.com/content/20090907-saudi-arabia-hidden-city-cursed-islam-history-Meda-in-Saleh

----------------------------

சவுதி நண்பர் பல அரபு லிங்குகளை எனக்கு அனுப்பினார். ஆனால் நான் ஆங்கில லிங்குகளை கேட்டேன. அவருக்கு தெரிந்த சில லிங்குகளை அனுப்பியுள்ளார். நபாத்தியன்களைப் பற்றியும் ஸமூது இனத்தைப் பற்றியும் ஒரு தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் வரலாறுகளை பதிந்து வைக்கும் பழக்கம் அரபுகளிடத்தில் அன்றிலிருந்தே இல்லை. முகமது நபி காலத்துக்கு பிறகுதான் பதியும முறையே கொண்டு வரப்படுகிறது.கிறித்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஸமூது இனத்தவரின் வாழ்விடம்தான் இது என்கின்றனர் பல ஆய்வாளர்கள். அதன் பிறகு நபாத்தியன்கள் இந்த இடங்களை வெற்றி கொண்டுள்ளனர். இந்த குகைகளில் சிலவற்றை கல்லறைகளாகவும நபாத்தியர்கள் மாற்றியுள்ளனர். நபாத்தியர்கள் அரபுகளின் வழி வந்தவர்கள் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது.

மேலும் ஆதாரங்கள் கிடைத்தால் பின்னும் பகிருகிறேன்.

suvanappiriyan said...

சகோ ராஜகிரியார்!

//நான்காவதாக மக்கள் இடையில் இருந்த சமவெளியில் செங்கலால் கட்டிய வீட்டில் வாழ்ந்துள்ளார்கள் என்கிறீர்கள். நான் அறிந்தவரையில் பாலைவன பிரதேசங்களில் பாறை போன்ற கற்களால் தான் வீடு கட்டி இருப்பார்கள். இந்த மலை வீடுகள் இருப்பதும் அப்படிப் பட்ட பாலைவன பிரதேசம் போலவே தெரிகிறது. (I am not sure. Bro. Suvanap Piriyan pls confirm here) அதனால் தான் செங்கல் வீடுகள் பற்றி சவுதியில் உள்ள சுவனப் பிரியனிடம் விளக்கம் கேட்டேன். உங்களிடம் இல்லை. ஆனால் அதற்கும் கூட பதில் தருவதாக எண்ணிக் கொண்டு நான் கேட்காத விடயத்தினை பற்றி எல்லாம் எழுதி அனைவரையும் குழப்புகிறீர்கள். (பதில் இல்லை என்றால் இதை தானே செய்ய முடியும்)//

அந்த ஏரியாக்களில் வாகனத்தில் சுற்றி பார்த்தோம். நான் தோராயமாக சொன்னது ஐந்து மைல். அதை விட அதிகமாகவே இருக்கலாம். ஆனால் ஆங்கு எங்குமே இந்த மலை வீடுகளைத் தவிர கண்ணுக் கெட்டிய தூரம் வரை வேறு வீடுகளே இல்லை. இந்த கிராமத்தை தாண்டி அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நகரம் வருகிறது. அங்கு சவுதிகள் வழக்கமான வீடுகளையும் கடைகளையும் கட்டியுள்ளனர். இந்த கிராமத்தைச் சுற்றி செங்கல் வீடுகளோ வேறு மாதிரியான வீடுகளோ இல்லை. இவை அனைத்தும் கல்லறைகள் என்றல் மனிதர்கள் எங்கு வசித்திருப்பார்கள்.

நான் மேலே கொடுத்துள்ள பல லிங்குகளும் மனிதர்கள் வாழ்ந்த வீடுகளாகத்தான் பார்க்கின்றன. கிறித்து பிறப்பதற்கு முன் 2000, 3000 வருடங்கள் என்று சொல்கின்றனர். அதன் பிறகு பல ஆட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன.

இராஜகிரியார் said...

சலாம் சகோ. சுவனப் பிரியன்.

விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி.

வவ்வால் said...

இராஜகிரியார்,

அல் மூலா என சொன்னால் எப்படி தெரியும்? நான் அப்போதே சொன்னேன் ஜோர்டான் எல்லையருகில் என குறிப்பிட்டு இருந்தால் ,இந்த குழப்பம் வந்திருக்காது என, குழப்பத்திற்கு காரணம் சு.பி.சுவாமிகள்,

பின்னர் சரியான இடத்தினை பற்றியும் ,அதன் பின்புலம் பற்றியும் சொல்லியாச்சு,

ஆனால் அப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள் ,மத்யன் என இனக்குழு என ,எங்கே மத்யன் என்ற இனக்குழு பற்றி வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது?

இதை விட ஒரு படி போய் மத்யன் என்பது ஒரு இடம், மதாயின் சாலே என்பது ஒரு இடம் என சொன்னது ஏன்?

மதாயின் சாலே என்பது அரேபியர்கள் வாழ்ந்த பகுதியே இல்லைனு ஆதாரம் காட்டியபிறகும் அங்கே அரேபிய கட்டிடங்களை தேடினால் ,அதனை நான் எப்படி காட்ட முடியும், நீங்கள் தான் காட்ட வேண்டும்.

கட்டிடக்கலை ஆய்வுகள் வைத்து நபாதியன்கள் கட்டியது, சுவற்றில் இலத்தின் எழுத்துக்கள், அக்கால ரோமானிய கலாச்சாரத்தின் படி புடைப்பு ஓவியங்கள், சிற்பங்கள் இருக்கு என்பது தெள்ளத்தெளிவாக ஆய்வின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

நீங்க எவ்ளவு தான் குட்டிக்கரணம் அடித்தாலும் அதனை மாற்ற முடியாது.

மேலும் இதெல்லாம் வரலாற்றில் பதிவான சம்பவங்கள், அப்படி எனில் 12 அடி மனிதன் இருந்தால் அதுவும் பதிவாகி இருக்கும்.

எனவே நீங்கள் சொல்வது கட்டுக்கதை என்பதற்கு இதனை விட வேறு என்ன வேண்டும்?

செங்கள் வீடுகள் இன்றும் காணோமே என்றால் 2000 ஆண்டுகளுக்கு பின்னரும் எப்படி இருக்கும், எத்தனைப்போர்கள் , இயற்கை சீற்றங்கள் என வந்திருக்கும், அழிந்து போயிருக்காதா?

நம்ம ஊரிலும் செங்கலால் கட்டிய பழைய கட்டுமானங்கள் அழிந்து போனதை அறியாதவர் போல எங்கே வீடு என்றால் எப்படி.

செங்கல் கட்டுமானங்கள் மண்ணில் புதைந்து இருந்தால் மட்டுமே அழியாமல் இருக்கும், பல இடங்களிலும் புதையுண்டவற்றை தான் வெளிக்கொண்டு வந்துள்ளார்கள்.

இந்தியாவில் சாஞ்சி ஸ்தூபி எல்லாம் மண்ணில் புதையுண்டு ,மரம் செடிகளால் மூடப்பட்டு தான் இருந்தன, அதன் மேல் புறம் மட்டும் மண்ணுக்கு மேல் தெரியவே தோண்டி எடுத்து இன்று உள்ள நிலையில் காட்டினார்கள்.

பழைய செங்கல் கட்டுமானங்கள் மதாயின் சாலேயிலும் மண்ணுக்கு அடியில் தேடினால் கிடைக்கலாம்,அல்லது அஸ்திவாரம் , இன்ன பிற சிதைவுகள் கிடைக்கலாம்.

வரலாறு, தொல்லியல் குறித்த சிறிதளவு புரிதல் இருந்தாலும் பழைய செங்கல் கட்டுமானம் ஏன் அங்கு இப்போது இல்லை என்பது புரிந்துவிடும் ,ஆனால் உங்களுக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் :-))

-----------
இராஜ கிரியார் ,

உங்கள் வாதப்படி அங்க மக்கள் இருந்தார்கள் எனில் , அப்படியான குடைவுகள் மொத்தம் 111 மட்டுமே இருக்கு , சவுதி அரேபியா முழுவதும் வேறு எதுவுமே இல்லை, அப்படியானால் மொத்த மக்கள் தொகை 111 குகைகளில் வாழும் அளவுக்கு தான் இருந்ததா?

மேலும் இந்த இடம் அக்காலத்தில் ஜோர்டானில் இருந்தது, அப்படி எனில் சவுதி அரேபியாவில் மக்களே அப்போது வாழவில்லையா?

அவர்கள் வாழ்ந்த கட்டுமானங்கள் எங்கே?
-------------
சு.பி.சுவாமிகள்,

நான் சொன்னவற்றையே ஆங்கில மூலத்தில் இருந்து எடுத்துப்போடுகின்றீர்கள் :-))

//The town was however not built by the Thamudis, whose presence at this site is not proven archaeologically, but by the Nabateans.//

சு.பி.சுவாமிகள் இது நீங்க போட்ட காபி& பேஸ்ட்டில் தான் இருக்கு :-))

தடியை கொடுத்து அடி வாங்கிக்கொள்வது இதானா?

தமூடிஸ் பற்றி சொல்வது புராணம், நபாதியன்கள் பற்றி சொல்வது வரலாறு.

ஆர்க்கியாலஜி படி அந்த குடவறைகளின் வயதினை தீர்மானித்தே கி.மு நான்கில் இருந்து கி.பி 1 ஆம் நூறாண்டு என்கிறார்கள், எல்லா குடவறைகளூம் ஒரே காலத்தில் செதுக்கப்படவில்லை ஒவ்வொரு மன்னர் காலத்திலும் கொஞ்சம் என சில நூற்றாண்டு கால இடைவெளியில் செதுக்கப்பட்டது.

கி.மு 4 ஆம் நூற்றாண்டில் 12 அடி உயர மனிதன் இருந்தால் வரலாற்றில் பதிவாகி இருக்கும், அக்காலத்தின் வரலாறு எதிலும் அப்படி இல்லை, புத்தர்,600-400 bc ஆக இருக்கலாம்) அசோகர்(304-232.B.c) ,
அலெக்ஸான்டர் (கி.மு356-323)

ஆகியோரின் வரலாற்று காலம் நபாதியன்கள் காலத்துக்கு சம காலம், எங்கும் 12 அடி மனிதர்கள் என குறிப்புகள் இல்லை.

நீங்களாகவே ஒரு கதை விட்டால் அதற்கு ஆதாரம் வேண்டாமா?

இராஜகிரியார் said...

வவ்வால்,

//அல் மூலா என சொன்னால் எப்படி தெரியும்?//

அல் ஊலா என்றும் அதற்கான மேப்பையும் தெளிவாக கொடுத்திருக்கிறாரே. சுட்டிகாட்டிய பிறகும் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?

//இதை விட ஒரு படி போய் மத்யன் என்பது ஒரு இடம், மதாயின் சாலே என்பது ஒரு இடம் என சொன்னது ஏன்?
மதாயின் சாலே என்பது அரேபியர்கள் வாழ்ந்த பகுதியே இல்லைனு ஆதாரம் காட்டியபிறகும் அங்கே அரேபிய கட்டிடங்களை தேடினால் ,அதனை நான் எப்படி காட்ட முடியும், நீங்கள் தான் காட்ட வேண்டும்.//

இதெல்லாம் நான் எங்கே சொன்னேன்? ஏன் நீங்கள் சவுதியையும், அரபியர்களையும் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்கள். நான் தான் தெளிவாக சொல்லி உள்ளேனே - வரலாறு கலாச்சாரம் பற்றியெல்லாம் நான் பேசவில்லை என்று. என்னுடைய கேள்விகளுக்கு இவை தேவையுமன்று.

நீங்கள் முன்னுக்கு பின் முரணாக மாற்றி மாற்றி சொன்னது பற்றி நான் நான்கு கேள்விகள் கேட்டிருந்தேன். அவைகளுக்கு பதில் சொல்லாமல் நான் ஏற்கனவே சொன்னபடி எதை எதையோ சொல்லி ஏன் மழுப்புகிறீர்கள்?

செங்கல் வீடுகள் பற்றி நீங்கள் தான் பேச்சை ஆரம்பித்தீர்கள், நான் அறிந்தவரை பாலைவன பிரதேசங்களில் சில ஆண்டுகள் முன்பு வரை பாறை போன்ற கற்களால் கட்டிய வீடுகள் தான் உண்டு. இருப்பினும் இது பற்றி முழுதும் தெரியாததால் சுவனப்பிரியனிடம் கேட்டேன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டுமானத்தையா இன்னும் உள்ளதா என்று கேட்டேன். உங்கள் புரிதல் இவ்வளவு தானா? இதில் வேறு எனக்கு புரிய வாய்ப்பில்லை என்று தீர்ப்பு கொடுக்கிறீர்கள் :-))

//பழைய செங்கல் கட்டுமானங்கள் மதாயின் சாலேயிலும் மண்ணுக்கு அடியில் தேடினால் கிடைக்கலாம்,அல்லது அஸ்திவாரம் , இன்ன பிற சிதைவுகள் கிடைக்கலாம்.//

செங்கல் வீடுகள் பற்றி ஒரு தடயமும் இங்கு கிடைக்காத போது - இது உங்கள் கற்பனையே அன்றி வேறில்லை. காரணம் நிறைய ஆராய்சிகள் நடந்துள்ளதாக நீங்கள் உட்பட அனைவரும் கூறும் போது - மண்ணுக்கு அடியில் மட்டும் ஆராய வேண்டாம் என்று சவுதி அரசு தடை எதுவும் விதித்துள்ளதா?

//உங்கள் வாதப்படி அங்க மக்கள் இருந்தார்கள் எனில் , அப்படியான குடைவுகள் மொத்தம் 111 மட்டுமே இருக்கு , சவுதி அரேபியா முழுவதும் வேறு எதுவுமே இல்லை, அப்படியானால் மொத்த மக்கள் தொகை 111 குகைகளில் வாழும் அளவுக்கு தான் இருந்ததா? அவர்கள் வாழ்ந்த கட்டுமானங்கள் எங்கே?//

எனது கேள்விகளுக்கு நீங்கள் எந்த பதிலும் கூறாத போதும் நீங்கள் கேட்டுள்ள இந்த எதிர் கேள்வி மட்டும் தான் என் கேள்விகளோடு சிறிது சம்பந்த பட்டுள்ளது.
2012 ல் இந்தியாவின் மக்கள் தொகை சுமார். 120 கோடி. ஒரு 75 - 85 ஆண்டுகளுக்கு முன்னால் 30 கோடி. அதாவது நான்கில் ஒரு பங்கு. இப்படியே பின்னால் போய் கொண்டிருந்தால் ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை எவ்வளவு இருந்திருக்கும். எல்லா வளங்களும் நிறைந்த நமது நாட்டிலேயே மிக குறைவாக இருந்திருக்கும் போது பாலைவனத்தில் எவ்வளவு பேர் இருந்திருப்பார்கள்? மிக மிக குறைவாக மட்டுமே இருந்திருப்பார்கள். அவ்வாறு குறைவான எண்ணிக்கையில் இருந்த மக்கள் குழுக்களாகவும் சிறு சிறு கூட்டங்களாகவே வாழ்ந்திருக்க முடியும். இப்பொழுது உங்கள் கேள்வியை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். விடை கிடைக்கும்.


பின் குறிப்பு: உங்களுக்கான எனது கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளது.

suvanappiriyan said...

//மதாயின் சாலே என்பது அரேபியர்கள் வாழ்ந்த பகுதியே இல்லைனு ஆதாரம் காட்டியபிறகும் அங்கே அரேபிய கட்டிடங்களை தேடினால் ,அதனை நான் எப்படி காட்ட முடியும், நீங்கள் தான் காட்ட வேண்டும்.//

'மதாயீன் சாலிஹ்' என்றாலே சாலிஹ் நபியின் இடம் என்றுதானே பொருள். சாலிஹ் என்ற நபியன் பெயர் இந்த இடத்துக்கு வரக் காரணம என்ன?

நபாத்தியன்கள் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் அரபுகளின் வழி வந்தவர்கள் என்றும் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.

//கட்டிடக்கலை ஆய்வுகள் வைத்து நபாதியன்கள் கட்டியது, சுவற்றில் இலத்தின் எழுத்துக்கள், அக்கால ரோமானிய கலாச்சாரத்தின் படி புடைப்பு ஓவியங்கள், சிற்பங்கள் இருக்கு என்பது தெள்ளத்தெளிவாக ஆய்வின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.//

எந்த ஆய்வு சொல்கிறது?

//செங்கள் வீடுகள் இன்றும் காணோமே என்றால் 2000 ஆண்டுகளுக்கு பின்னரும் எப்படி இருக்கும், எத்தனைப்போர்கள் , இயற்கை சீற்றங்கள் என வந்திருக்கும், அழிந்து போயிருக்காதா?//

வீடுகளை உறுதியில்லாத செங்கல்லால் கட்டிக் கொண்டு தங்களின் சமாதிகளை மட்டும் மலைகளை குடைந்து இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்க கட்டினார்கள் என்று சொன்னால் எவருமே சிரிப்பர் வவ்வால்.

//மேலும் இதெல்லாம் வரலாற்றில் பதிவான சம்பவங்கள், அப்படி எனில் 12 அடி மனிதன் இருந்தால் அதுவும் பதிவாகி இருக்கும்.//

வாதில் ஒரு வீட்டில் மட்டுமல்லாமல் அனைத்து வீடுகளிலும் 12 அடி அல்லது 15 அடி உயரத்தில் கட்ட வேண்டிய அவசியம் என்ன?

//பழைய செங்கல் கட்டுமானங்கள் மதாயின் சாலேயிலும் மண்ணுக்கு அடியில் தேடினால் கிடைக்கலாம்,அல்லது அஸ்திவாரம் , இன்ன பிற சிதைவுகள் கிடைக்கலாம்.//

அதுபோல் அகழ்வாராய்ச்சி செய்தால் ஒருகால் உயரமான மனிதர்களின் எலும்புக் கூடுகளும் கிடைக்கலாம்.

http://etheses.dur.ac.uk/3293/1/The_Religious_Life_of_Nabataea.pdf?DDD3+
நபாத்தியன்களின் வாழ்வு முறையை சொல்லும் இந்த ஆதாரபூர்வமான சைடில் அவர்களின் வாழ்விடம் ஜோர்டானை ஒட்டியே வருவதாக சொல்கிறது. மத்யன் சாலிஹ்ல் உள்ள எந்த மலை வீடுகளையும் ஆதாரமாக காட்டவில்லை. மிகவும் அருமையான படங்கள். நம் ஊர் கோவில்களை ஒட்டி அமைந்துள்ளதை தகவலுக்காக பாருங்கள்.

//சு.பி.சுவாமிகள் இது நீங்க போட்ட காபி& பேஸ்ட்டில் தான் இருக்கு :-))

தடியை கொடுத்து அடி வாங்கிக்கொள்வது இதானா?

தமூடிஸ் பற்றி சொல்வது புராணம், நபாதியன்கள் பற்றி சொல்வது வரலாறு.//

தெரிந்தேதான் தகவலுக்காக போட்டேன். இரண்டுக்குமே அறுதியிட்டு சொல்லக் கூடிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

//கி.மு 4 ஆம் நூற்றாண்டில் 12 அடி உயர மனிதன் இருந்தால் வரலாற்றில் பதிவாகி இருக்கும்//

நன் சொல்லும் காலம் கிமு 3000.

//The community of al-Hijr mentioned in the Qur’an are thought to be the same people as Thamud. The other name of Thamud is “Ashab al-Hijr”. So, the word "Thamud" is the name of a people, while the city of al-Hijr is one of those cities founded by these people. The Greek geographer Pliny’s descriptions agree with this. Pliny wrote that Domatha and Hegra were the locations where Thamud resided, and this latter makes up the city of Hijr today.29//

http://harunyahya.com/en/works/904/perished-nations/chapter/3295

ஹாருன் யஹ்யா தளத்தில் தமூது கோத்திரத்தார் முதலில் கட்டிய இந்த ஊரே பின்னாளில் 'அல் ஹிஜ்ராக' மாறியதாக கூறுப்படுகிறது. கிரீக் ஆய்வாளரும் இதனை ஒத்துக் கொண்டுள்ளார்

http://www.mnh.si.edu/EPIGRAPHY/e_pre-islamic/thamudic.htm
http://www.britannica.com/EBchecked/topic/589948/Thamud
http://en.wikipedia.org/wiki/Thamud#See_also
தமூதிகளைப் பற்றி சொல்லும் மற்ற தளங்கள்.


வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//Investigations during the coming excavation seasons will go beyond the residential and oasis areas. Mada’in Salih holds 94 tombs with decorated façades, 35 plain funerary chambers and more than 1000 non-monumental graves and other stone-lined tombs. “We plan to excavate two or three monumental tombs that appear not to have been robbed, and we will be looking for other unviolated burial chambers,” explains Nehmé.//

//What is more puzzling still is that across the open desert plain amid Mada’in Salih’s clusters of carved tombs, there is not a single visible trace of a building of any kind. Answers lie unseen, near the quarries and sandstone outcrops, and underground, buried beneath layers of sediment borne over centuries by wind and water. One extensive, slightly sloping area is littered with a mixture of stones, sherds and other debris that shows clear signs of human settlement. It has been fenced off by the Department of Antiquities within the guarded and fenced main site (which encompasses 14.5 square kilometers, or 3583 acres) and it is here that the buried remains of the residential area of Hegra lie. A tennis court-sized area has already been partially excavated, revealing foundations and the lower stone parts of dwellings and other buildings, as well as remains of a wall.//

http://www.saudiaramcoworld.com/issue/200704/new.pieces.of.mada.in.salih.s.puzzle.htm

மேற்கண்டவாறு சொல்வது சவுதிஅராம்கோ என்னும் இணைய தளம் ஆகும்.

நபாத்இயன்ன்களும், ரோமானியர்களும் கட்டியதே அக்கல்லறை குகைகள். மேலும் அவற்றை போல ஆயிரம் கல்லறைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.

வசிப்பிடம் என்ன்பது இப்போது மண்ணுக்குள் மறைந்து இருக்கலாம் என கண்டுப்பிடித்துள்ளார்கள்.

எந்த இடத்திலும் அக்குடைவுகளை வசிப்பிடம் என சொல்லவில்லை.

நீங்கள் கொடுத்துள்ள பிரிட்டானிகா தளத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டு என்று தான் போட்டுள்ளது.

கி.மு 3000 ஆண்டு என சொல்வதற்கு என்ன ஆதாரம்.

அப்படி சொல்வது குரானில் வரும் வசனங்கள். அது வரலாற்று ஆதாரம் அல்ல.

ஆதிமனிதன் உயரமானவன் என குரான் அடிப்படையில் சொல்வதை இல்லை என்றால், நீங்கள் இன்னொரு குரான் கதை " சாலே நபி" சமூது சமூகம் என சொல்கிறீர்களே :-))

ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தில் சொல்லி இருப்பதற்கு அதே புத்தகத்தின் இன்னொரு பக்கத்தில் சொல்லியிருப்பதை ஆதாரம் என்னும் காமெடியை என்னவென்பது.

ஹெக்ரா, அல் ஹிஜிர், மதாய்யின் சாலே என எப்படி அழைக்கப்பட்டாலும் அதனை கட்டியது நபாதியன்கள், பின்னர் ரோமானியர்கள். அவை நினைவிட கல்லறை , புதைக்கும் இடம் என பலவாரு இருந்துள்ளது.மக்கள் வசிப்பிடம் அல்ல.
-----------

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//Investigations during the coming excavation seasons will go beyond the residential and oasis areas. Mada’in Salih holds 94 tombs with decorated façades, 35 plain funerary chambers and more than 1000 non-monumental graves and other stone-lined tombs. “We plan to excavate two or three monumental tombs that appear not to have been robbed, and we will be looking for other unviolated burial chambers,” explains Nehmé.//

//What is more puzzling still is that across the open desert plain amid Mada’in Salih’s clusters of carved tombs, there is not a single visible trace of a building of any kind. Answers lie unseen, near the quarries and sandstone outcrops, and underground, buried beneath layers of sediment borne over centuries by wind and water. One extensive, slightly sloping area is littered with a mixture of stones, sherds and other debris that shows clear signs of human settlement. It has been fenced off by the Department of Antiquities within the guarded and fenced main site (which encompasses 14.5 square kilometers, or 3583 acres) and it is here that the buried remains of the residential area of Hegra lie. A tennis court-sized area has already been partially excavated, revealing foundations and the lower stone parts of dwellings and other buildings, as well as remains of a wall.//

http://www.saudiaramcoworld.com/issue/200704/new.pieces.of.mada.in.salih.s.puzzle.htm

மேற்கண்டவாறு சொல்வது சவுதிஅராம்கோ என்னும் இணைய தளம் ஆகும்.

நபாத்இயன்ன்களும், ரோமானியர்களும் கட்டியதே அக்கல்லறை குகைகள். மேலும் அவற்றை போல ஆயிரம் கல்லறைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.

வசிப்பிடம் என்ன்பது இப்போது மண்ணுக்குள் மறைந்து இருக்கலாம் என கண்டுப்பிடித்துள்ளார்கள்.

எந்த இடத்திலும் அக்குடைவுகளை வசிப்பிடம் என சொல்லவில்லை.

நீங்கள் கொடுத்துள்ள பிரிட்டானிகா தளத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டு என்று தான் போட்டுள்ளது.

கி.மு 3000 ஆண்டு என சொல்வதற்கு என்ன ஆதாரம்.

அப்படி சொல்வது குரானில் வரும் வசனங்கள். அத்உ வரலாற்று ஆதாரம் அல்ல.

ஆதிமனிதன் உயரமானவன் என குரான் அடிப்படையில் சொல்வதை இல்லை என்றால், நீங்கள் இன்னொரு குரான் கதை " சாலே நபி" சமூது சமூகம் என சொல்கிறீர்களே :-))

ஒரு புத்தகத்தின் ஒரு பக்கத்தில் சொல்லி இருப்பதற்கு அதே புத்தகத்தின் இன்னொரு பக்கத்தில் சொல்லியிருப்பதை ஆதாரம் என்னும் காமெடியை என்னவென்பது.

ஹெக்ரா, அல் ஹிஜிர், மதாய்யின் சாலே என எப்படி அழைக்கப்பட்டாலும் அதனை கட்டியது நபாதியன்கள், பின்னர் ரோமானியர்கள். அவை நினைவிட கல்லறை , புதைக்கும் இடம் என பலவாரு இருந்துள்ளது.மக்கள் வசிப்பிடம் அல்ல.
-----------

வவ்வால் said...

இராஜ கிரியார்,

முன்னுக்கு பின் முரணாக பேசுவது நீங்கள் தான்.

முதலிலே சொல்லிவிட்டேன் நான் ஜோர்டான் அருகில் உள்ளது எனப்பார்த்தது நினைவில் இருந்ததை வைத்து சொன்னேன், அந்த இடம் இல்லை என சொல்லிவிட்டு ,பின்னர் அது தான் என சொன்னதால் ஏற்பட்ட குழப்பம்.

பின்னரும் அதையே சொல்லிக்கொன்டிருந்தால் எப்படி.

நீங்கள் இடையில்,

மத்யன் சாலே , மத்யன் இனக்குழு என்றெல்லாம் கதை சொன்னதை மறந்து விட்டது ஏன்.

எனவே இப்போது உங்கள் கேள்விகள் எதுவும் இல்லை, மேற்கொண்டு விரிவாக சு.பி.சுவாமிகளுக்கு சொன்ன பதிலையும் பார்க்கவும், அதற்கு சரியான வரலாற்று ரீதியான பதிலை இருந்தால் கூறவும்.

மீண்டும் குரானில் இருந்தே ஒரு கதையை ஆதாரமாக சொல்ல வேண்டாம். ஏன் எனில் அதில் சொல்லியிருப்பதை தான் மறுத்து பேசிக்கொண்டிருக்கிறேன், பின் அதனையே அதற்கு சுய ஆதாரமாக காட்டுவது எந்த ஊர் நியாயம் :-))

இராஜகிரியார் said...

வவ்வால்,

//முன்னுக்கு பின் முரணாக பேசுவது நீங்கள் தான்.//

எங்கே பேசுகிறேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

//முதலிலே சொல்லிவிட்டேன் நான் ஜோர்டான் அருகில் உள்ளது எனப்பார்த்தது நினைவில் இருந்ததை வைத்து சொன்னேன், அந்த இடம் இல்லை என சொல்லிவிட்டு ,பின்னர் அது தான் என சொன்னதால் ஏற்பட்ட குழப்பம்.//

சுவனப் பிரியன் மீது பழியை போட்டாலும் வேறு வார்த்தைகளில் தவறை ஒப்பு கொண்டதற்கு நன்றி.

//பின்னரும் அதையே சொல்லிக்கொன்டிருந்தால் எப்படி.//
சுவனப் பிரியன் தெளிவாக மேப் கொடுத்துள்ளார் என்று பலமுறை சுட்டிகாட்டிய பின்னரும் அதே பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டுள்ளீர்கள்.

//மத்யன் சாலே , மத்யன் இனக்குழு என்றெல்லாம் கதை சொன்னதை மறந்து விட்டது ஏன்.//

இஸ்லாமிய வரலாற்றில் வரும் இரு வேறு வரலாறுகள்:-

1. சுஐபு நபி சமுதாயத்தினர் மத்யன் வாசிகள்.
2. சாவிஹ் நபி சமுதாயத்தினர் மலைகளை குடைந்து வாழ்ந்து வந்த சமூகத்தினர். இந்த இடத்தில் மத்யன் சாலிஹ் என்ற இடம் பற்றிய வார்த்தை சற்றே என்னை குழப்பி விட்டது. தவறுதலாக சாலிஹ் நபி சமூகத்தினர் என்பதற்கு பதிலாக மத்யன் இனக்குழு என்று குறிப்பிட்டது என் தவறு தான். ஆனால் நான் ஏற்கனவே கூறியபடி வரலாறு கலாச்சாரம் என்பது பற்றி எல்லாம் நான் பேசவில்லை. நீங்கள் இனக்குழுக்களின் தலைவர்கள் வாழ்ந்த இடம் என்று சொன்னதால் - அங்கு ஒரு குழுவினர் மட்டுமே வாழ்ந்ததாக சுவனப் பிரியன் கூறியுள்ளதாக சொன்னேன். நீங்கள் வேண்டுமானால் எனது அந்த ஒரே ஒரு பின்னுாட்டத்தில் உள்ள மத்யன் இனக்குழு என்பதற்கு பதிலாக ஏதோ ஒரு இனக்குழு என்று மாற்றி வாசித்துக் கொண்டு என்து கேள்விக்கு பதில் கூற முயற்சிக்கவும்.

//எனவே இப்போது உங்கள் கேள்விகள் எதுவும் இல்லை//

எனது கேள்விகளுக்கு பதில் கூறி முடித்தபின் இந்த டயலாகை சொல்லலாம்.

//மீண்டும் குரானில் இருந்தே ஒரு கதையை ஆதாரமாக சொல்ல வேண்டாம். ஏன் எனில் அதில் சொல்லியிருப்பதை தான் மறுத்து பேசிக்கொண்டிருக்கிறேன்//

நான் எங்கே குர்ஆனை ஆதாரமாக காட்டி இருக்கிறேன் என்று கூறமுடியுமா? சும்மா அடித்து விடக்கூடாது. இங்கு வரும் நடுநிலையாளர்களை எல்லாம் முட்டாள்கள் என்று எடை போட்டு விடக் கூடாத. என் கேள்விகள் அனைத்தும் லாஜிக்கல் கேள்விகள். வரலாறு கலாச்சாரம் சம்பந்தப் பட்டது அல்ல என்று இத்தோடு பலமுறை சொல்லியாகி விட்டது.


பின் குறிப்பு: உங்களுக்கான எனது கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளது.

வவ்வால் said...

இராஜகிரியார்,

// இந்த இடத்தில் மத்யன் சாலிஹ் என்ற இடம் பற்றிய வார்த்தை சற்றே என்னை குழப்பி விட்டது.//

உங்களுக்கு எப்படி குழப்பும்,அதான் மேப் கொடுத்திருப்பதை பார்த்தீர்கள் அல்லவா?

பதிவு முதலில் போட்டப்போது மேப்பிற்கான சுட்டி இல்லை, ஏன் ஒரு மேப்பினை பதிவில் இணைத்திருக்கலாமே, மெதுவான இணையம் இருப்பவர்கள் கூகிள் மேப்பில் பார்க்க முடியாது.

மத்யன் சாலே என சொன்னதால் தான் எனக்கும் குழப்பம் வந்து ,பராம்பரியமான இனக்குழுக்களின் தலைவர்கள் (சிற்றரசர்கள்) வாழும் முறையை வைத்து சொன்னது, எனவே இடம் மதாய்யின் சாலே என தெரிந்ததும் அதற்கான வரலாற்றினை சொல்லியாச்சு.

பின்னர் மீண்டும் இடம் குழப்பியதால் நான் சொன்னதனையே நீங்கள் கேட்டுக்கொண்டிப்பது எப்படி.

உங்களுக்கு இடம் குழப்பியது என்றால் அது குழப்பம்,எனக்கு அதே இடம் குறித்து குழப்பம் வந்தது என்றால் அதான் மேப் இருக்கிறதே என்பதா?

நானாவது மேப்பினை ஆரம்பத்தில் பார்க்கவில்லை,நீங்கள் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டு குழப்பியது என்பது ஏன்?

ஏன் ஒரு இடத்தில் கூட முன்னாளில் ஜோர்டானுடன் இருந்த இடம், நபாதியான்கள் ஆட்சி என்பதை எல்லாம் சொல்லாமல் சு.பி தவிர்த்தார். நான் சொன்ன பிறகே நபாதியன்கள் பற்றி பேசுவது ஏன்?

அறைகுறையாக ஒரு இடத்தின் வரலாற்றினை சொன்னதால் ஏற்பட்ட குழப்பத்தினை தெளிவாக சொன்னபிறகும் ,அதனை வைத்து முன்னுக்கு பின் பேசுவதாக என்னை சொல்லும் நீங்கள் , உங்களுக்கு என வந்தால் இடக்குழப்பம் அதனால் அப்படி சொன்னேன் என்றால் எப்பூடி.

இப்போது நபாதியான்களின் கல்லறை,நினைவிடம்,கோயில்,அரசவை தர்பார் என்ற அடிப்படையில் பேசிக்கொண்டிருக்கிறேன், அதில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.

மேலும் நபாதியான்களிலேயே பல குழு இருந்து ஆளுக்கு ஒரு அமைப்பினை உருவாக்கி இருந்தார்கள் எனவும் சொல்லப்படுகிறது ,எனவே பல இனக்குழு கருத்தும் ஒத்துப்போகிறது.

அனைத்து விவரங்களும் ஆரம்கோ இணையதளத்தில் உள்ளது படித்து தெரிந்துக்கொள்ளவும்.

-------------
//நான் எங்கே குர்ஆனை ஆதாரமாக காட்டி இருக்கிறேன் என்று கூறமுடியுமா? //

பதிவு குரானில் கூறியப்படி ஆதிமனிதன் உயரமாக இருந்திருப்பான் என நிறுவ மதாயின் சாலே கட்டுமானத்தினை சான்றாக கூறுகிறது, நான் சு.பிக்கு அப்படி இல்லை என சொல்கிறேன்.

நீங்கள் இடையில் வந்து சு.பி சொன்னது சரி என்றால் , பதிவின் அடிப்படையில் நாம் பேசுவதன் அடிப்படையில் நீங்கள் குரானின் கூற்றினை உறுதிப்படுத்த முயல்கிறீர்கள்.

இப்போது நீங்கள் ஆதி மனிதன் உயரமாக இருந்தான் என்பதை நிறுவ பேசவில்லை எனில் எதற்கு இடையில் வந்துப்பேசிக்கொண்டு இருக்க வேண்டும், நானும் ,சு.பியும் பேசுவதை வேடிக்கை பார்க்கலாமே.

ஸ்ஷ்பா என்னத்தப்பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்னே தெரியாம , குறுக்க வந்துட்டு ,அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துக்கொண்டு முடியலை அவ்வ்வ் :-))

புரியாமலே நடுவில் ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்க உங்களுக்கு நேரம் இருக்கலாம், எனக்கு நேரமில்லை, மேலும் ஆதிமனிதன் உயரமாக இருந்தான் அதற்கு ஆதாரம்ம் தான் மதாயின் சாலே என சு.பி சொல்கிறார், அதனை இல்லை என்கிறேன், இதற்கு மூலம் குரான், எனவே அதனை நிறுபிக்க குரானையே சாட்சியாக வைப்பது போல எதுவும் சொல்லாமல் புதிதாக சொல்லவும், இல்லை எனில் வேடிக்கை பார்க்கவும்.

ஆரம்கோவர்ல்ட் தளத்தில் சென்று படித்துவிட்டு , அதில் இருப்பது தவறு என்றால் அதன் இணைய தள நிர்வாகிக்கு கடிதம் போடுங்கள் :-))

அந்த தளத்தில் கருத்துக்களை வெளியிட்டிருப்பது சவுதி அரசு உதவியுடன் ஆய்வு செய்தவர்களே.

suvanappiriyan said...

//ஏன் ஒரு இடத்தில் கூட முன்னாளில் ஜோர்டானுடன் இருந்த இடம், நபாதியான்கள் ஆட்சி என்பதை எல்லாம் சொல்லாமல் சு.பி தவிர்த்தார். நான் சொன்ன பிறகே நபாதியன்கள் பற்றி பேசுவது ஏன்?//

நான் முன்பு படித்த சுட்டிகளில் நபாத்தியன்களின் வரலாறு இல்லை. எனவே அதைப்பற்றி குறிப்பிடவில்லை. நீங்கள் சொன்ன பிறகு நபாத்தியன்களும் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்ற செய்தி தெரிய வந்தது. அதற்கு நன்றி.

அடுத்து மதாயீன் சாலிஹ் உள்ள மலை வீடுகள் நபாத்தியன்களுடையதோ அல்லது தமூதிகளுடையதோ யாருடையதாவது இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் அங்கு வாழ்ந்த மக்கள் உயரமானவர்களாக இருந்துள்ளார்கள். எனவே தான் இவ்வளவு உயரமான வாதில்களை அமைக்கும் படியான அவசியம் வந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இராஜகிரியார் said...

வவ்வால்,

உங்களுடைய இந்த பதில் நான் பின்னுாட்டம் இடும் போதே எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தாலும் நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள் என்று ஒரு நப்பாசை. ஆனால் அது பொய்த்து விட்டது.

சுஐபு நபியின் மத்யன் வாசிகள் - சாலிஹ் நபியின் சமூகத்தினர் - இவ்விரண்டு வரலாறுகளிலும் வரும் இரு சொற்களை கொண்டு ஒரு இடத்தின் பெயர் வரும்போது பலருக்கும் வரும் ஒரு சிறு குழப்பத்தினால் வந்தது என் தவறு.
எதையும் ஆதாரத்தோடு(!) கூறுவதாக கூறும் நீங்கள் செய்தது நான் ஏற்கனவே கூறியது படி நுனிப்புல் மேய்ந்ததால் வந்தது. இரண்டிற்கும் பெருத்த வித்தியாசம் உள்ளது.

நீங்கள் செய்த தவறால் நீங்களே பலமுறை மாற்றி மாற்றி பேச வேண்டி வந்தது.
நான் அங்கு சொல்ல வந்தது 'ஒரே ஒரு குழுவினர்' என்பதை மட்டும் தான். மத்யன் வாசிகளை முன்னிறுத்த அல்ல. ஆகையால் என் தவறால் ஒரு முரண்பாடும் வரவில்லை.

மேலும் என் தவறுக்கு நான் தான் காரணம். நான் யார் மீதும் பழி போடவில்லை. ஆனால் உங்களுக்கு தவறு ஏற்பட்டதற்கு சுவனப் பிரியன் தான் காரணம் :-)) பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்?

சரி விடு்ங்க பாஸ். டென்ஷனாகாதீங்க. :-))
---------
//இப்போது நபாதியான்களின் கல்லறை,நினைவிடம்,கோயில்,அரசவை தர்பார் என்ற அடிப்படையில் பேசிக்கொண்டிருக்கிறேன், .//

அப்பாடா...இது சம்பந்தமான கேள்விகளை தான் நான் கேட்கிறேன் என்பதை உங்களுக்கு புரிய வைக்க நான் 10 12 பின்னுாட்டங்கள் இட வேண்டியுள்ளது. என்னால முடியல. டைப் செய்து செய்து கையெல்லாம் வலிக்குது. :-))

//அதில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்//

என்ன சார். நான் தான் ஏற்கனவே நான்கு கேள்விகளை கேட்டுள்ளேனே. மறுபடியும் மொதலேந்தா...? அவ்வ்வ்....

//புரியாமலே நடுவில் ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்க உங்களுக்கு நேரம் இருக்கலாம்//

ஆமாமாம். நீங்கள் கூட என்னை போலவே 10 12 பின்னுாட்டங்கள் போட்டு எனக்கு புரிய வைத்து இருக்கிறீர்கள். பார்த்தேன் பார்த்தேன். இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல?

பிடித்திருக்கிறது சம்பந்தமாகவும் நேரம் சம்பந்தமாகவும் நான் முன்பே ஏதோ கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன். :-))

//பதிவின் அடிப்படையில் நாம் பேசுவதன் அடிப்படையில் நீங்கள் குரானின் கூற்றினை உறுதிப்படுத்த முயல்கிறீர்கள்.//

இது நீங்களாக நினைத்து கொண்டது. நான் பொறுப்பல்ல. சுவனப்பிரியனுக்கு நீங்கள் கொடுத்த ஒரு மறுப்பு எனக்கு லாஜிக்காக தோன்றவில்லை. அதானால் தான் அதை பற்றி மட்டும் கேட்டேன்.

//நடுவில் ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு//

இறைவன் நாடினால் உங்களுக்கு வரிக்கு வரி விளக்கம் தரமுடியும். ஆனால் அதற்கான ஆதாரங்களை உங்களுக்கு கொடுப்பதற்கு நிறைய உழைக்க வேண்டும். எம்மிடம் அதற்கான நேரம் இல்லாததே அனைத்தை பற்றியும் நான் பேசாதது.
தவிர ஒரே ஒரு கேள்விக்கே எனக்கு கண்ணை கட்டுகிறது. எல்லாவற்றிற்கும் என்றால்...? யப்பா... :-)) நம்புங்கள் அண்ணா. பிழைப்பையும் பார்த்து கொண்டு - எப்பொழுதாவது இடையில் கிடைக்கும் மிக சிறிய ஓய்வு நேரத்தில் இந்த பதிவுலகத்தில் பின்னுாட்டம் இடுகிறேன்.
---------------
வவ்வால், தங்களிடம் நட்போடு சில வார்த்தைகள்...உங்களுடைய எழுத்துகளை படித்த பிறகு உங்களை பற்றி எனது எண்ணம்... தவறாக நினைத்து கொள்ளாதீர்கள்.

நீங்கள் படித்தவர். சிந்திக்க தெரிந்தவர். இணையத்தில் நிறைய மேய்கிறவர். பிறகு ஏன் குர்ஆன் மீதும் இஸ்லாத்தின் மீதும் இவ்வளவு கோபம்? எதற்காக இவ்வளவு பொய்களும் - திரிபுகளும்? இவ்வளவு உழைக்கும் நீங்கள் ஏன் குர்ஆனையும் இஸ்லாத்தையும் விருப்பு வெறுப்பின்றியும் - முன் முடிவுகளின்றியும் பொறுமையாக ஆராய கூடாது? ஏற்கனவே செய்து விட்டேன் என்று மட்டும் தயவு செயது கூறாதீர்கள். உங்களுடைய இஸ்லாம் குறித்த அறிவு என்ன என்று (உங்கள் எழுத்துகளின் மூலம்) எனக்கு நன்றாக தெரியும். இங்கு ஆதிமனிதன் சம்பந்தமாக கூட நீங்கள் மறுப்பது - குர்ஆளையும் இஸ்லாத்தையும் சம்பந்தப் படுத்தி சுவனப் பிரியன் எழுதிவிட்டார் என்பதற்காகவே அன்றி வேறில்லை என்பது எனது எண்ணம். இது எனது தனிப்பட்ட கருத்து. தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள். என் மனதில் தோன்றியதை சொல்கிறேன். தங்களுக்கு ஆட்சேபனை என்றால் கூறுங்கள். எனது பின்னுாட்டத்தின் இந்த இறுதி பகுதியை நீக்கி விடுகிறேன். தங்களுக்கு நேர்வழி கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்தித்தவனாக...! -- நட்புடன் இராஜகிரியார்.

வவ்வால் said...

இராஜகிரியார்,

எனக்கு ஏன் குழப்பம் வந்தது என சொல்வது எப்படி பழியாகும், ஒரு இடத்தின் வேறு பெயரை சொன்னால் குழப்பம் வருவது இயல்பே.

அதான் மேப் கொடுத்தார் என்றால் முதலில் மேப் இல்லை ,அல்லது அந்த சுட்டியை கவனிக்கவில்லை என்றும் சொல்லிவிட்டேன்.

உங்களுக்கு தனக்கு தானே குழப்பம் வரும் போல :-))

தமிழ் நாட்டில், ஓட்டேரியில் உள்ள உயிரியியல் பூங்காவிற்கு சென்றுள்ளீர்களா?

அதனைப்பற்றி நான் சொன்னால் உங்களுக்கு உடனே புரியுமா?
------------
//இது நீங்களாக நினைத்து கொண்டது. நான் பொறுப்பல்ல. சுவனப்பிரியனுக்கு நீங்கள் கொடுத்த ஒரு மறுப்பு எனக்கு லாஜிக்காக தோன்றவில்லை. அதானால் தான் அதை பற்றி மட்டும் கேட்டேன். //

இன்னமும் எதன் அடிப்படையில் பேசிக்கொண்டிருக்கிறேன், எதற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறேன் என புரியவில்லை எனில் நான்ன் எதுவும் செய்ய இயலாது, புரியாமல் நீங்கள் கேட்பதில் பொருளும் இருக்காது என்பது உங்கள் பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது.
--------
உங்கள் கருத்துக்கு நன்றி!

நான் மனிதனை கடவுள் படைத்தான்ன் என சொல்லும் அனைத்து மத கருத்தினையும் ஏற்கவில்லை என்பதே இன்னும் உங்களுக்கு புரியவில்லையே.

குரான் சொல்வதை வைத்து பேசுபவர்களிடம் அதனை மறுத்து பேசுவதால் குரானுக்கு எதிராக மட்டும் பேசுவதாக நினைத்தால் அது உங்கள் நினைப்பு மட்டுமே.

பிரம்மாவின் நெற்றியில் இருந்து பிராமணன் பிறந்தான் என சொல்வதையும் மறுத்து தான் பேசி வருகிறேன் , நீங்கள் அதனை எல்லாம் கவைக்கவில்லை எனில் நான் என்ன செய்வது.

நீங்கள் படித்தவர் ,இணையத்தில் அதிகம் புழங்குபவர், சிந்திப்பவர் ,நீங்கள் ஏன் அறிவியல்,பரிணாமம் குறித்து நன்கு படித்து ஆராய கூடாது,ஏற்கனவே செய்துவிட்டேன் என்று சொல்லாதீர்கள் ,உங்கள் பின்னூட்டங்களை படிக்கும் போதே எந்த அளவுக்கு புரிந்திருப்பீர்கள் என தெரிகிறது.

பரிணாமவியல் கடவுள் படைக்கவில்லை என சொல்லிவிட்டது, நாம் இத்தனை நாளாக நம்பிவந்த நம்பிக்கை பொய்த்துவிட்டதே என்று மட்டும் நீங்கள் எல்லாம் எதிர்ப்பதாக தெரிகிறது. இது எனது மனதில் தோன்றிய கருத்து.உங்களுக்கு ஆட்சேபனை என்றால் நானும் நீக்கிவிடுகிறேன்.
-------------
mada'in= city ,
al-mada'in =the cities

http://en.wikipedia.org/wiki/Al-Mada'in

மதாய்யின் என்றால் நகரம் என நான் சொன்னதற்கு நீங்களும் ,சு.பி.சுவாமிகளும் வரிந்துக்கட்டிக்கொண்டு எதிர்த்தீர்கள்.

நான் சொன்னது,

//Madâin என்றால் நகரம் என அரபியில் பொருள், உடனே மத்யன் என்ற இனக்குழு என அடித்து விடுங்கோ :-))

சாலிஹின் நகரம் அல்லது நகரங்கள் என அரபியில் பொருள்.//

சு.பி சொன்னது,

//அரபியில் மத்யன் என்றால் நகரம் என்று யார் உங்களுக்கு சொன்னது? :-) அது ஒரு இடத்தின் பெயர். //

நான் மதாயின் என சரியாக சொன்னப்பிறகும் மத்யன் என்றால் ஒரு இடம் என கண்மூடித்தனமாக சொல்லிக்கொண்டு ,அரபியில் மதாயின் என்றால் நகரம் இல்லை என சொல்லிக்கொண்டு கடுமையாக எதிர்க்க ஒரே காரணம் மூட நம்பிக்கை தானே :-))
------------

இராஜகிரியார் said...

வவ்வால்,
எனது எழுத்துக்களை அப்படியே எனக்கெதிராக திருப்பி எழுதி இருக்கிறீர்கள். என்னை வெல்ல வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக தெரிகிறது. குழப்பம் சம்பந்தமாக நான் மேற்கொண்டு பேசவில்லை. வாசகர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

இஸ்லாம் குறித்து நான் உங்களை ஆராய சொன்னால் நீங்கள் என்னை பரிணாமம் குறித்து ஆராய சொல்கிறீர்கள். நான் பரிணாமம் பற்றி உங்களிடம் எந்த இடத்திலுமே பேசாத போது நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம். Mada'in பற்றியும் நான் எங்குமே பேசவில்லை என்னும் போது மீண்டும் மீண்டும் திசை திருப்பவே என் மீது இட்டு கட்டுகிறீர்கள்.


//இன்னமும் எதன் அடிப்படையில் பேசிக்கொண்டிருக்கிறேன், எதற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறேன் என புரியவில்லை எனில் நான்ன் எதுவும் செய்ய இயலாது//

நான் எதை பற்றி பேசுகிறேன் என்பதை உங்களுக்கு புரிய வைக்கவே 10-12 பின்னுாட்டங்கள் இட வேண்டியுள்ளது. யார் புரியாமல் பேசுகிறார்கள் என்பதை வாசகர்கள் தீர்மானித்து கொள்ளட்டும்.

//
நான் மனிதனை கடவுள் படைத்தான்ன் என சொல்லும் அனைத்து மத கருத்தினையும் ஏற்கவில்லை என்பதே இன்னும் உங்களுக்கு புரியவில்லையே.

குரான் சொல்வதை வைத்து பேசுபவர்களிடம் அதனை மறுத்து பேசுவதால் குரானுக்கு எதிராக மட்டும் பேசுவதாக நினைத்தால் அது உங்கள் நினைப்பு மட்டுமே.//

இதுவும் உங்கள் அறியாமை மட்டுமே. நீங்கள் மற்ற மத கருத்துக்கு ஆதரவாக பேசுவதாக நான் எங்குமே குறிப்பிடாத போது - இது நீங்கள் சுமத்தும் பழி - அபாண்டம்.
நான் பார்த்தவரை நீங்கள் ஒரு நாத்திகவாதி. ஒரு முஸ்லிமாக நல்லதை ஏவி தீயதை தடுக்க வேண்டும் என்ற கடமை எனக்கு உள்ளது. எனக்கு தவறென்று பட்டதை உங்களுக்கு சொன்னேன். அதை ஏற்று கொள்வதும் கொள்ளாததும் உங்கள் உரிமை. அதனால் நீங்கள் சரி என்றோ அல்லது முடியாது என்றோ கூறி இருக்கலாம். ஆனால் என் எழுத்துக்களை அப்படியே திருப்பி போடுவது - நாகரிகமும் இல்லை - புத்திசாலிதனமும் இல்லை. நீங்கள் உங்கள் கருத்தை சொன்னீர்கள் - நான் எனது கருத்தை சொன்னேன் என்பதும் சரியாகாது. உங்கள் நோக்கம் என்னை வெல்ல வேண்டும் என்பதே.

இங்கு ஒரு சிறிய தன்னிலை விளக்கம்...
உங்களை வாதத்தில் வெல்ல வேண்டும் என்றெல்லாம் எனக்கு எந்த நோக்கமும் இல்லை. நான் கேட்ட கேள்விகள் என்ன என்பது 100 க்கு 100 சதவீதம் உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தும் திசை திருப்புவதற்காக சம்பந்தம் இல்லாமல் பேசி கொண்டிருக்கிறீர்கள். பதிலை உங்கள் மனசாட்சி இடமாவது சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை புண்படுத்துவது எனது நோக்கமல்ல. உள்ளங்களில் உள்ளதை இறைவன் நன்கறிந்தவன். ஏற்கனவே கூறியது போல் விரயம் செய்ய என்னிடம் நேரம் இல்லை. நன்றி :-))

வவ்வால் said...

இராஜகிரியார்,

நீங்கள் விவாதத்தில் வெல்ல வேண்டும் என்று நினைப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் முடிந்த வரையில் திருப்பி விட முயல்கிறீர்கள் என இப்போது என்னால் சொல்ல முடியும்.

ஏன் எனில் முன் ,பின்னாக பேசிக்கொண்டு , விளக்கம் சொல் என்றீர்களே என பதில் சொன்னால் ,அதையே வளைத்து இழுத்துக்கொண்டு நிற்பதை காண்கிறேன்.

மதாயின் சாலே என்பதை தான் தவறாக மத்யன் என்று மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் அதனை குறிப்பிட்டு விளக்க சொன்னால் ,மீண்டும் நான் எங்கே மதாயின் பற்றி சொன்னேன் என ரிவர்ஸ் கியர் போடுகிறீர்கள், இது மீண்டும் , மதாயின் தான் மத்யன் என நீங்கள் தவறாக உச்சரித்து சொல்லும் இடம் என ஆரம்பத்திற்கே போகும்.

நீங்கள் குரானை வைத்து /சம்பந்தப்படுத்தி சு.பி எழுதியதால் நான் எதிர்க்கிறேன் என சொன்னதால் ,நான் அனைத்து மத படைப்பு வாதத்தினையும் எதிர்க்கிறேன் என விளக்க சொன்னதையும் மாற்றி என்னமோ நான் எப்போ சொன்னேன் என கேட்கிறீர்கள்.

உண்மையில் உங்களுக்கு தமிழ் தெரியுமா, என்ன பொருளில் நாம் பேசினோம், அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்பதும் புரியவில்லை எனில் , மேற்கொண்டு உங்களிடம் பேசுவது நேர விரயம்.

இனிமேல் திசை திருப்பவேண்டும் நோக்கில் நீங்கள் பேசுவதனை கடந்து சென்றுவிடுவதே சரியாக இருக்கும்.
---------

// ஆனால் என் எழுத்துக்களை அப்படியே திருப்பி போடுவது - நாகரிகமும் இல்லை //

உங்கள் நாகரீகத்தின் எல்லையை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

நீங்கள் ஒரு புக் படிச்சி பாருங்கன்னு எனக்கு பரிந்துரை செய்தால் ,நானும் ஒரு புக் படிச்சு பாருங்கன்னு பரிந்துரை செய்வதில் எந்த நாகரீக பிழழ்வும் இல்லை. மேலும் நீங்கள் எப்படி அணுகினீர்களோ அதே வழியில் நானும் அணுகினேன், மாற்றி அணுகி உங்களுக்கு பிடிக்காமல் போயிடக்கூடாதல்லவா :-))

நாம் பிறர்க்கு என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கும் கொடுக்கப்படும்!

இராஜகிரியார் said...

வவ்வால்,

//உங்கள் நாகரீகத்தின் எல்லையை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.//

நிச்சயமாக. நாம் உபயோகித்த சொல்லாடல்களை வைத்தே நம் இருவரின் நாகரிகம் பற்றி இங்கு வந்த அனைவருக்கும் புரிந்திருக்கும்.

//உண்மையில் உங்களுக்கு தமிழ் தெரியுமா,//

10-15 பின்னுாட்டங்கள் இட்டும் - பின்னும் புரியதாததால் அல்லது புரியாதது போல் நடிப்பதால் மீண்டும் மீண்டும் எடுத்து சொல்லியும் உங்களுக்கு இதுவரை புரியாத போதே நான் கேட்க நினைத்து நாகரிகம் கருதி நான் கேட்காமல் விட்ட கேள்வி.

//மதாயின் சாலே என்பதை தான் தவறாக மத்யன் என்று மாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் அதனை குறிப்பிட்டு விளக்க சொன்னால் ,மீண்டும் நான் எங்கே மதாயின் பற்றி சொன்னேன் என ரிவர்ஸ் கியர் போடுகிறீர்கள்,//

இந்த பதிவில் இடப்பட்டுள்ள பின்னுாட்டங்களே ஆதாரம். உங்களுக்கல்ல. நடுநிலையாளர்களுக்கு.

சொல்வதெல்லாம் பொய். பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற உங்கள் நிலைபாட்டிலிருந்து எப்பொழுது வெளியில் வர போகிறீர்கள்?

//இனிமேல் திசை திருப்பவேண்டும் நோக்கில் நீங்கள் பேசுவதனை//

அப்படியா..? இதற்கு ஒரு ஸ்மைலி மட்டுமே :-))

//நாம் பிறர்க்கு என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கும் கொடுக்கப்படும்! //

எனது நிலைபாடு:-

இஸ்லாத்தின் மூலம் நான் கற்று கொண்டது - “நல்லதை கொண்டு தீயதை தடுப்போம்”

தமிழின் மூலம் நான் கற்று கொண்டது - இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.

தற்போது உங்களை பற்றிய ஒரு முடிவுக்கு வர முடிகிறது. உள்ளங்களில் உள்ளதை இறைவன் நன்கறிந்தவன்.

OK Vavval. Good bye.