Followers

Wednesday, December 12, 2012

நரேந்திர மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவாரா?



குஜராத் சட்டமன்ற தேர்தலின் இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறோம். முன்பு எப்படியும் மோடி அருதி பெரும்பான்மை பலத்துடன் முதல்வராவார் என்று அனைவருமே எதிர் பார்த்தோம். ஆனால் நிலைமை அவ்வளவு சிறப்பாக மோடிக்கு இல்லை. அவர் போட்டியிடும் மணிநகர் தொகுதியிலேயே இரண்டு பெண்கள் மோடிக்கு பிரச்னையை கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.

அவர்களில் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சிவ் பட் மனைவி சுவேதா பட். மற்றவர் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்ட்யாவின் மனைவி ஜக்ருதி பாண்ட்யா.மணி நகர் தொகுதியில் முதல்வர் மோடியை எதிர்த்து போட்டியிட பல அரசியல் தலைவர்கள் தயங்கி பின் வாங்கியுள்ளனர். ஆனால் சுவேதா பட் அவரை எதிர்த்து போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். இது குறித்து சுவேதா பட் கூறுகையில், எனது கணவருக்கு நியாயம் கிடைக்க போட்டியிடுகிறேன். எனது கணவர், குடும்பம், மகள் உட்பட பலருக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும். எனவே எனது குரலை
வெளிப்படுத்தவே தேர்தலில்போட்டியிடுகிறேன் என கூறினார்.



ஸ்வேதா பட் பிரசாரம் செய்யும் இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி, முன்னாள் அமைச்சர் ஜக்ருதி பாண்டியா பிரசாரம் செய்கிறார். இவர் கொலை செய்யப்பட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ஹாரன் பாண்டியாவின் மனைவி ஆவார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜக்ருதி பாண்டியா கூறுகையில், மோடியை எதிர்த்து பா.ஜ., அல்லாத வேட்பாளராக போட்டியிடுகிறேன். தற்போது பிரச்னை மக்கள் மன்றத்தில் உள்ளது. உண்மை நிச்சயம் வெற்றி பெறும். இதற்கு சிறிது காலம் எடுத்து கொண்டாலும் நிச்சயம் உண்மை வெளிப்படும் என கூறினார்.

தங்கள் கணவருக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு பழி வாங்க இன்று இரண்டு பெண்களும் களத்தில் குதித்துள்ளனர். நரேந்திரமோடியை தோல்வியுறச் செய்தால்தான் உண்மையான விசாரணையை நடத்த முடியும். அடுத்து படேல் சாதியினரின் ஓட்டுக்கள் கணிசமாக பிரியும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கேசுபாய் படேல் இந்துத்வா ஓட்டுக்களை பாதியாக பிரித்து விடுவார் என்று நோக்கர்கள் கூறுகின்றனர். இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பும் மோடியை திணறச் செய்கிறது. சில இஸ்லாமியர்களை மிரட்டி மோடிக்கு(இர்ஃபான் பதான்) ஆதரவாக பிரசாரம் பண்ண வைத்தாலும் ஓட்டளிக்கும் சாமான்ய முஸ்லிமின் எண்ண ஓட்டத்தை நாமும் அறிவோம். இர்ஃபான் பதானுக்கும் என்ன நெருக்கடிகள் மோடியால் கொடுக்கப்பட்டதோ அதை இர்ஃபானே அறிவார்.


மொத்தம் உள்ள, 182 சட்டசபை தொகுதிகளில், 54 தொகுதிகளின், தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு, பலம் வாய்ந்த சமூகமாக, படேல் சமூகத்தினர் உள்ளனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த சமூகத்தினர், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளனர். பா.ஜ.,வின் ஓட்டு வங்கி என்று கூட, இவர்களை கூறலாம். படேல் சமூகத்தில், செல்வாக்கு மிக்க தலைவரும், குஜராத் முன்னாள் முதல்வருமான, கேசுபாய் படேல், பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக் கட்சி துவங்கி உள்ளார். நரேந்திர மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக, கட்சி பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார், கேசுபாய் படேல். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன், திடீரென, "குஜராத் பரிவர்த்தன் கட்சி' என்ற, கட்சியை துவக்கி, நரேந்திர மோடிக்கு, பெரும் சவாலாக விளங்கி வருகிறார்.

படேல் சமூகத்தில், கடவா மற்றும் லெயுவா என, இரு பிரிவு உண்டு. கேசுபாய் படேல், லெயுவா பிரிவைச் சேர்ந்தவர். படேல் சமூகத்தில், லெயுவா பிரிவினர் தான், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். தற்போது, கேசுபாய் படேல் துவங்கியுள்ள, புது கட்சிக்கு, லெயுவா பிரிவைச் சேர்ந்த, பெரும்பாலானோர், ஆதரவு தெரிவித்துள்ளனர். லெயுவா பிரிவில், செல்வாக்கு மிக்க தலைவரான, நரேஷ் படேல் என்பவர், மாநிலத்தின் பல இடங்களில், தொடர்ச்சியாக, தங்கள் பிரிவைச் சேர்ந்தவர்களின் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த கூட்டங்களில் எல்லாம், கேசுபாய் படேல் துவக்கியுள்ள கட்சிக்கு, இந்த தேர்தலில், ஆதரவு அளிக்க கோரி வருகிறார். இந்த கூட்டங்களில், கேசுபாய் படேலும், தவறாமல் பங்கேற்கிறார். நரேஷ் படேல்,"நம் சமூகத்தை சேர்ந்தவர்கள், 10 ஆண்டுகளாக, வளர்ச்சி பணிகளில் புறக்கணிக்கப்படுகிறோம். இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால், கேசுபாய் படேல் பின், அணி திரள வேண்டும்'என, தங்கள் பிரிவினருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

மோடி தனது வாழ்நாளில் செய்த அனைத்து அராஜகங்களுக்கும் உரிய தண்டனையை பெற வேண்டுமானால் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டும். குஜராத் மக்கள் என்ன தீர்ப்பை தருகிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். நீதி ஜெயிக்கிறதா! அல்லது மோடியின் அராஜக அரசியல் திரும்பவும் சபை ஏறுகிறதா? தேர்தல் முடிவுவரை பொறுப்போம்.

28 comments:

semmalai akash said...

அருமையான அலசல், இருந்தாலும் என்னைப் பொருத்தவரை மோடி திரும்பவும் வரவே வாய்ப்பு உள்ளது. அவர் வெற்றிப் பெற்றால் குஜராத் மக்களுக்கு நல்லது. அவர் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் அவருக்கு கவலை இருக்காது என்று நினைக்கிறேன். மீண்டும் பிரதமர் வேப்பாளராக போட்டியிடுவார் ஏற்று நினைக்கிறேன்.

ஹுஸைனம்மா said...

குஜராத்தில் படேல் சமூகத்தினர், பெரும்பாலும் பணக்காரர்கள், பெரிய தொழிலதிபர்கள். இவர்களால் ஏற்பட்ட முன்னேற்றமும், வளர்ச்சியும்கூட “மோடியால் கொண்டுவரப்பட்ட குஜராத்தின் வளர்ச்சி”யாகப் பறைசாற்றப்பட்டது. தற்போது இவர்களே எதிர்த்து நிற்பதிலிருந்து மோடியின் வித்தைகளை மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

Unknown said...

//நரேந்திர மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவாரா?//

எல்லாம் மனக்கற்பனை சுவனம். பகல் கனவு.

நரேந்திர மோடி பிரதமராக வருவார். இந்தியா இந்துஸ்தானாக மாறும்

Unknown said...

suvanam இந்தியாவில் இருந்து மட்டுமல்ல. உலகத்தில் இருந்தே இஸ்லாம் விரட்டி அடிக்கப்படும் நாள் வரும்.

suvanappiriyan said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//அருமையான அலசல், இருந்தாலும் என்னைப் பொருத்தவரை மோடி திரும்பவும் வரவே வாய்ப்பு உள்ளது. அவர் வெற்றிப் பெற்றால் குஜராத் மக்களுக்கு நல்லது. அவர் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் அவருக்கு கவலை இருக்காது என்று நினைக்கிறேன். மீண்டும் பிரதமர் வேப்பாளராக போட்டியிடுவார் ஏற்று நினைக்கிறேன்.//

குஜராத் மாநிலமானது மோடி வருவதற்கு முன்பே வளர்ச்சியடைந்த மாநிலம். அந்த மக்களும் இயற்கையிலேயே கடின உழைப்புடையவர்கள். நமது அண்டை மாநிலமான கேரள முனனேற்றம் உம்மன் சாண்டியால் வந்தது என்றால் எல்லோரும் சிரிப்பார்கள். ஆனால் மோடியை குஜராத்தின் முன்னேற்றத்துக்கு காரணமாக்குவது இந்துத்வவாதிகளே!

அடுத்து தனக்கு எதிராக பிஜேபியிலேயே யாராவது வாய் திறந்தால் அவர்களின் கதி படுபயங்கரமாக இருக்கும் என்பதுதான் நாம் பார்த்து வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு சைகோ முதல்வராக தொடர்வது நமது நாட்டுக்கு ஆபத்து.

மேலும் மோடி திரும்பவும் முதல்வரானால் முஸ்லிம்களை இனி கை வைக்க மாட்டார். ஏனெனில் அந்த அளவு உலகமே அவரது நடவடிக்கைகளை பாரத்துக் கொண்டுள்ளது. எனவே முஸ்லிம்களுக்கு இனி மோடியால் பிரச்னை வராது என்பதே எனது கணிப்பு. ஆனால் செய்த தவறுகளுக்கு தண்டனை கிடைக்க அவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து இறங்க வேண்டும். அதைத்தான் என்னைப் போன்றவர்கள் எதிர்பார்ப்பது.

நரேந்திர மோடியால் இந்து மதத்துக்கும் பின்னடைவே. இவரது வன்முறையை இந்துக்களில் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதையும் நோக்க வேண்டும்.

suvanappiriyan said...

சகோ ஹூசைனம்மா!

//குஜராத்தில் படேல் சமூகத்தினர், பெரும்பாலும் பணக்காரர்கள், பெரிய தொழிலதிபர்கள். இவர்களால் ஏற்பட்ட முன்னேற்றமும், வளர்ச்சியும்கூட “மோடியால் கொண்டுவரப்பட்ட குஜராத்தின் வளர்ச்சி”யாகப் பறைசாற்றப்பட்டது. தற்போது இவர்களே எதிர்த்து நிற்பதிலிருந்து மோடியின் வித்தைகளை மக்கள் புரிந்துகொள்ளட்டும்.//

சரியாக சொன்னீர்கள். கடைசி நேரங்களில் தகிடுதத்தம் செய்து வெல்வதாக இருந்தாலும் முன்பு போல் பெரும்பான்மை ஆதரவு இருக்காது என்பது மட்டும் நிச்சயம். பார்ப்போம் முடிவுகளை.

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//எல்லாம் மனக்கற்பனை சுவனம். பகல் கனவு.

நரேந்திர மோடி பிரதமராக வருவார். இந்தியா இந்துஸ்தானாக மாறும்//

ஹா..ஹா..நிறைய ஹாஸ்யமாக எழுதுகிறீர்கள். இதை பிஜேபியினரே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். முதலில் எழுபது சீட்டாவது கிடைக்கிறதா என்று பாருங்கள். எனது கணிப்பு பெரும்பான்மை பெற்ற காங்கிரஸின் கூட்டணி மந்திரி சபையில் ராகுலோ அல்ல நம்ம சிதம்பரமோ பிரதமராவதற்குத்தமான் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

//suvanam இந்தியாவில் இருந்து மட்டுமல்ல. உலகத்தில் இருந்தே இஸ்லாம் விரட்டி அடிக்கப்படும் நாள் வரும்.//

ஹா..ஹா..ஆரியம் தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் இஸ்லாம் எந்த அளவு வளர்ந்து வருகிறது என்பதை அரசு அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளவும். இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளவும்.

http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3

இது இந்த மாதத்திய கணக்கு மட்டுமே! கிறித்தவர்களைப் போல் திட்டமிட்ட எந்த பிரசாரமும் இல்லாமல் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

faizeejamali said...

Ippadiye solli ungal hindutva katchiyai konja nal vala vaiyungal
Hindukalukku hindusthan endral pallanuku pallasthan
Paranuku parayasthan
Sikiyanuku kalisthan
Jainanuku jainistan
Budhanuku budhistan
MILITARILY MATTUM ENNA KABRASTHANA?
Kurithu kol sankara ulaga makall thogayil sumar 180 il irundhu 200 kodi muslimgal
CIA report aagum.
Indhiyavil mattum 18 il irundhu 25 kodi muslimgal Indian national census board report vilithu kol sankara unnavarin maya valaigalil mayangi vidathe engal nabigal nayagathukage Chennai Anna salaiyai sthambikka seidhargal musligal
Thevai pattal delhiyai sthambikka?

suvanappiriyan said...

சகோ ஃபைஜி ஜமாலி!

//unnavarin maya valaigalil mayangi vidathe engal nabigal nayagathukage Chennai Anna salaiyai sthambikka seidhargal musligal
Thevai pattal delhiyai sthambikka?//

எதையும் ஸ்தம்பிக்க செய்ய வெல்லாம் வேண்டாம். இஸ்லாமியர்கள் குர்ஆனின் வழிகாட்டுதல் படி தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டால் அதுவே நிரந்தர வெற்றியாகும் முஸ்லிம்களுக்கு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஆஷா பர்வீன் said...

இம்முறை மோடிக்கு பலத்த சறுக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது...
மீடியாக்கள் சொல்வதெல்லாம் புரூடா...

ஆஷா பர்வீன் said...

மோடிக்கு இம்முறை பலத்த சறுக்கல் கண்டிப்பாக இருக்கும்....
மீடியாக்கள் சொல்வதெல்லாம் என்றுமே உண்மையாகாது

suvanappiriyan said...

சகோ ஆஷா ஃபர்வீன்!

//மோடிக்கு இம்முறை பலத்த சறுக்கல் கண்டிப்பாக இருக்கும்....
மீடியாக்கள் சொல்வதெல்லாம் என்றுமே உண்மையாகாது//

உங்கள் வாக்கு பலிக்கட்டும். நாட்டு நலனில் அக்கறை உள்ள எல்லோரும் விரும்புவதும் அதுவே!

Anonymous said...

சமீபத்திய கருத்து கணிப்பில், வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவு காங்கிரஸ் பக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. 115 இடங்களுடன் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றும், பாஜக-வுக்கு 58 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேலும், இருப்பதிலேயே மோசமான ஊழல் கட்சி என்று பாஜக-வை நோக்கி மக்கள் கைநீட்டி இருக்கின்றனர்.

இந்த ஆய்வு தொடர்பான முழு விபரத்தையும் படிக்க.. http://tamil.oneindia.in/news/2012/12/13/india-survey-says-congress-will-be-back-166258.html

suvanappiriyan said...

Samutra!

//பின் ஆண் என்று முடிவெடுத்து அவனுக்கு ஆணின் பிரத்யேக உறுப்புகள் வளரத் தொடங்கினாலும் நிப்பிள் அப்படியே மார்பில் நின்று விடுகிறது.ஆண் தான் prototype என்று இருந்தால் எதற்கும் பயனற்ற நிப்பிளை ஆணுக்கு இயற்கை உருவாக்கி இருக்காது...//

அதனை அழகுக்காக என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? ஆணழகர்கள் தேர்வாவது அனேகமாக இந்த மார்பு கட்டை வைத்துதானே!

தலைமுடி, நகம், தாடி, மீசை என்பதெல்லாம் கூட ஒரு மனிதனுக்கு அவசியமில்லைதான். ஆனால் அது அந்த மனிதனின் உருவத்தை மேலும் மெருகூட்டுகிறதே

--------------------------------------------------------

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் வெளிப்படுத்தி உலகில் பரவச் செய்தான்;
குர்ஆன் 4:1

சிராஜ் said...

// மோடி தனது வாழ்நாளில் செய்த அனைத்து அராஜகங்களுக்கும் உரிய தண்டனையை பெற வேண்டுமானால் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் அமர்த்தப்பட வேண்டும். //

காங்கிரஸ் வந்து என்ன பண்ண போறாய்ங்க?? நீதி கிடைக்கவா போகுது?? யார் வந்தாலும் ஒன்னு தான்...

மோடி தான் வெற்றி பெறுவார்... அது தான் குஜராத்தின் சூழல்... நாடாளுமன்ற தேர்தலில் வேண்டுமானால் காங்கிரஸ் டப் கொடுக்கலாம்....

suvanappiriyan said...

சகோ சிராஜ்!

//காங்கிரஸ் வந்து என்ன பண்ண போறாய்ங்க?? நீதி கிடைக்கவா போகுது?? யார் வந்தாலும் ஒன்னு தான்...//

மோடி அளவுக்கு மோசம் இல்லை அல்லவா? அடுத்து முஸ்லிம்கள் அரசியல் கட்சிகளை நம்புவதை விட்டு விட்டு படிப்பதிலும் அரசு வேலைகளை பெறுவதிலும் முனைப்பு காட்டினாலே மோடி போன்றவர்களை சமாளித்து விடலாம்.

//மோடி தான் வெற்றி பெறுவார்... அது தான் குஜராத்தின் சூழல்... //

குஜராத்தின் தலை எழுத்து அதுதான் என்றால் யாரால் என்ன செய்ய முடியும்? இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட வேண்டியதுதான்.


Unknown said...

சுவனம்

குரான் என்பது ஒரு படிப்பறிவில்லாத வியாபாரியின் தந்திரம். அதே காலகட்டத்தில் 10 பேரு இறைவனின் தூதர் என்று சொல்லிகொண்டார்கள். அவர்களில் ஒருவர் தான் முகம்மது நபி.

அவரால் எதிரியை ஜெயிக்க முடிந்தது. அவ்வளவே. அதனால் அவர் எப்படி நபி ஆனார்?

Unknown said...

//தமிழகத்தில் இஸ்லாம் எந்த அளவு வளர்ந்து வருகிறது என்பதை அரசு அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளவும். இல்லை என்றால் இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளவும்.
//

தெருக்கூத்து பாக்கக்கூட கூட்டம் கூடும். அது எல்லாம் ஒரு விஷயமா?

Unknown said...

நீங்கள் கொடுத்த லிங்கில் படித்தேன். டிராகுலா கடிச்சா நாமும் டிராகுலாவாக மாறிடுவோமா?

Sathish Murugan . said...

என்ன சூனா பானா சாமியாரே, இன்னைக்கும் சொம்பு சத்தம் தூக்கலா இருக்கு? அல்லா கிட்ட கேட்டு சொல்லுங்களேன் குஜராத்துல யாரு ஜெயிப்பாங்கன்னு? அவரு ஜெயிச்சதுக்கு அப்புறம் நீரு "மோடி ஏமாத்தி ஜெயிச்சாரு"ன்னு எழுத தான் போறீரு....என்னமோ போங்க, நாடு நாசமா போனாலும் மதம்தான் முக்கியம்னு நினைக்கிற சைக்கோ கூமுட்டையா நம்ம சூனா பானான்னு நினைக்கிறப்போ...

Unknown said...

//இது இந்த மாதத்திய கணக்கு மட்டுமே! கிறித்தவர்களைப் போல் திட்டமிட்ட எந்த பிரசாரமும் இல்லாமல் தாங்களாகவே முன் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். //நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.//

அளந்து விடுவதற்கும் அளவு வேண்டும் சுவனரே, உங்கள் தாவா கூட்டத்தினர் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யாமல் குவாட்டரும், கோழி பிரியாணியும் தின்றுவிட்டு கவிழ்ந்து படுத்து கொள்கிறார்களா? அல்லது தாவா கூட்டமே இல்லை என்று கூற போகிறீர்களா? கிறிஸ்தவர்கள் உங்களை விட யோக்கியர்கள், அவர்கள் எல்லாம் வெளிப்படையாகவே செய்வார்கள். உங்கள் கூட்டம் செய்வது வெளிப்படையாக தெரிவதில்லை அவ்வளவே, அதற்காக இல்லை என்று கூறுகிறீர்களே அண்ணாச்சி,

//indhiyavil mattum 18 il irundhu 25 kodi muslimgal Indian national census board report vilithu kol sankara unnavarin maya valaigalil mayangi vidathe engal nabigal nayagathukage Chennai Anna salaiyai sthambikka seidhargal musligal
Thevai pattal delhiyai sthambikka?//

அப்படியா! டில்லியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு நீங்கள் பெரிய இவர்களா? அடேயப்பா கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அண்ணாச்சி இப்படி எல்லாம் பயமுருத்தாதீங்க. சென்னையை மட்டுமா ஸ்தம்பிக்க வைத்தீர்கள், உலகமே உங்கள் கூட்டத்தின் ஆட்டத்தை எல்லா நாடுகளிலும் பார்த்ததே, எல்லாரும் மனதில் நினைத்தது என்ன தெரியுமா "இந்த காலத்திலும் இப்படியுமா ஒரு முட்டாள் சமூகம் இருக்கும்" இதைதான். நிஜமாகவே நீங்க பெரிய ஆளுங்க தான்.

//இம்முறை மோடிக்கு பலத்த சறுக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது...
மீடியாக்கள் சொல்வதெல்லாம் புரூடா...//

கவலை படவேண்டாம் சகோதரி, மோடி தான் மறுபடியும் குஜராத் முதல்வர்

//குரான் என்பது ஒரு படிப்பறிவில்லாத வியாபாரியின் தந்திரம். அதே காலகட்டத்தில் 10 பேரு இறைவனின் தூதர் என்று சொல்லிகொண்டார்கள். அவர்களில் ஒருவர் தான் முகம்மது நபி.

அவரால் எதிரியை ஜெயிக்க முடிந்தது. அவ்வளவே. அதனால் அவர் எப்படி நபி ஆனார்?//

இந்த கேள்விக்கு அல்லாவின் பிள்ளைகளின் ரெடிமேட் பதில் "குரானை படி, அதில் இருக்கு அவர்தான் நபி என்று"

//தமிழகத்தில் இஸ்லாம் எந்த அளவு வளர்ந்து வருகிறது என்பதை அரசு அறிவிப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளவும். //

அப்படியா! சீக்கிரம் இந்தியா அல்லாவின் தேசம் ஆகிவிடும். உங்களுக்கு சந்தோசம் தானே.

suvanappiriyan said...

சதீஷ் முருகன்!

//அல்லா கிட்ட கேட்டு சொல்லுங்களேன் குஜராத்துல யாரு ஜெயிப்பாங்கன்னு? அவரு ஜெயிச்சதுக்கு அப்புறம் நீரு "மோடி ஏமாத்தி ஜெயிச்சாரு"ன்னு எழுத தான் போறீரு....என்னமோ போங்க, நாடு நாசமா போனாலும் மதம்தான் முக்கியம்னு நினைக்கிற சைக்கோ கூமுட்டையா நம்ம சூனா பானான்னு நினைக்கிறப்போ... //

ஹி...ஹி...கூமுட்டை யார் என்று கொஞ்சம் சிந்தித்திருந்தால் இப்படி ஒரு பின்னூட்டம் உங்களிடமிருந்து வந்திருக்காது.

மோடி திரும்பவும் ஆட்சியைப் பிடித்தால் அதனால் தற்போது முஸ்லிம்களை ஒன்றும் பண்ணி விட முடியாது. ஏனெனில் இஸ்லாமியர்களை பகைத்துக் கொண்டு நெடுநாள் முதல்வராக காலம் தள்ள முடியாது என்பதை நன்றாகவே உணர்ந்த மோடி தற்போது நிறையவே இறங்கி வருகிறார். இர்ஃபான் பதானோடு தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்கிறார். பழையபடி இஸ்லாத்துக்கு எதிராக அவர் வருங்காலத்தில் மாறினாலும அதனை எவ்வாறு எதிர் கொள்வது என்பது முஸ்லிம்களுக்கும் தெரியும். அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தண்ணி காட்டுபவர்கள் முஸ்லிம்கள். மோடி போல் இன்னும் நூறு பேர வந்தாலும் தூய இறை பக்திக்கு முன்னால் அற்ப பதர்களே முஸ்லிம்களுக்கு.

இதை இன்னொரு வகையிலும் பாருங்கள். பெயரையும் உங்களின் போட்டோவையும் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட சாதியாக தெரிகிறது. இதன்படி மோடி போல் இந்தியா முழுவதும் ஆட்சி நடந்து .ந்தியா முழுக்க இந்துத்வம் ஆனால் மீண்டும் பழைய காலம் திரும்பும். சதீஷ் முருகன் இந்து மத சட்டத்தின் படி சூத்திரன் என்ற நிலைக்கு தள்ளப்படுவார். கல்வி மறுக்கப்படும். கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார். பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்ய சதீஷ் முருகன் தயாராக இருக்க வேண்டும். மீண்டும் அடிமை முறை புகுத்தப்படும்.வேதம் படித்தால் மனு தர்ம சட்டத்தின் படி ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும். அக்ரஹாரம் மேலும் வளர்ச்சியுறும். தலித் சேரிகள் இன்னும் அதிகமாகும். தர்மபுரி போன்ற கலவரங்கள் நாடு முழுக்க நடந்தேறும். எனவே கஷ்டமும் நஷ்டமும் சதீஷ் முருகனுக்குத்தான்.

இஸ்லாமியர்களுக்கு அல்ல. :-) ஏனெனில் ஒரு முறை இஸ்லாத்தை தழுவியவன் மறுமுறை இந்து மதத்தையோ அதன் சனாதன சட்டங்களையோ திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.

suvanappiriyan said...

அனந்தன் கிருஷ்ணன்!

//கவலை படவேண்டாம் சகோதரி, மோடி தான் மறுபடியும் குஜராத் முதல்வர்//

வரட்டுமே! அப்படியே வந்தால் மோடியை எதிர் கொள்வது எப்படி என்பதை கடந்த காலத்தை வைத்து நன்கு பாடம் எடுத்துள்ளனர் முஸ்லிம்கள். எதையும் தாங்கும் வலிமையை குர்ஆன் முஸ்லிம்களுக்கு கொடுத்துள்ளது.

//அப்படியா! சீக்கிரம் இந்தியா அல்லாவின் தேசம் ஆகிவிடும். உங்களுக்கு சந்தோசம் தானே.//

அப்படி மாறாமல் தக்க வைக்க வேண்டுமானால் உங்களிடம் உள்ள சாதி மேட்டிமைத்தனத்தை தூர எறிய வேண்டும். இன்று தர்மபுரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது தெரியுமா? இதுதான் இந்து மதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுக்கும் மரியாதை.

Unknown said...

// ஏனெனில் ஒரு முறை இஸ்லாத்தை தழுவியவன் மறுமுறை இந்து மதத்தையோ அதன் சனாதன சட்டங்களையோ திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.//

டிராகுலா மனுஷனா மாறுமா?

MOULAVI KADARBASHA MANBAYEE said...

இஸ்லாம். இது தான் நேர்வழி

Unknown said...

//வரட்டுமே! அப்படியே வந்தால் மோடியை எதிர் கொள்வது எப்படி என்பதை கடந்த காலத்தை வைத்து நன்கு பாடம் எடுத்துள்ளனர் முஸ்லிம்கள். எதையும் தாங்கும் வலிமையை குர்ஆன் முஸ்லிம்களுக்கு கொடுத்துள்ளது.//

அப்படியா! நல்லது சார், பிறகு ஏன் மோடி முதல்வராக கூடாது என்று இவ்வளவு துடிப்பாக இருக்கிறீர்கள்

//அப்படி மாறாமல் தக்க வைக்க வேண்டுமானால் உங்களிடம் உள்ள சாதி மேட்டிமைத்தனத்தை தூர எறிய வேண்டும்.//

அதை நாங்கள் தூர எரிந்து கொள்கிறோம் அண்ணாச்சி, அது எப்போதும் அப்படியேவா இருக்க போகிறது. சாதியை வைத்து எங்களை விட நீங்கள் தான் அதிகமாக பிளைப்பு நடத்தி கொண்டிருக்கிறீர்கள்.

//இன்று தர்மபுரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது தெரியுமா? இதுதான் இந்து மதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் கொடுக்கும் மரியாதை.//

அட போங்க சுவனம், உங்கள் பள்ளிவாசல்களுக்கு பிற மதத்தவருக்கு அனுமதி இல்லை. உங்கள் காபாவிற்கு இந்துவை அழைத்து போக முடியுமா என்று முன்பு கேட்டிருந்தேன். அதற்கு இன்றுவரை பதில் இல்லை. இப்படி ஆயிரத்துஎட்டு 144 உங்ககிட்ட இருக்கு. அத உடைத்து விட்டு அடுத்தவங்கள சொல்லுங்க. உங்கள் மதம் அடுத்த மதத்தவருக்கு குடுக்கும் மரியாதை தான் எல்லாருக்கும் தெரியுமே. நீங்க சாதி பத்தி பேசாதிங்க, கேவலமா இருக்கு.

Sathish Murugan . said...

//
இதை இன்னொரு வகையிலும் பாருங்கள். பெயரையும் உங்களின் போட்டோவையும் பார்த்தால் பிற்படுத்தப்பட்ட சாதியாக தெரிகிறது. இதன்படி மோடி போல் இந்தியா முழுவதும் ஆட்சி நடந்து .ந்தியா முழுக்க இந்துத்வம் ஆனால் மீண்டும் பழைய காலம் திரும்பும். சதீஷ் முருகன் இந்து மத சட்டத்தின் படி சூத்திரன் என்ற நிலைக்கு தள்ளப்படுவார். கல்வி மறுக்கப்படும். கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார். பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்ய சதீஷ் முருகன் தயாராக இருக்க வேண்டும். மீண்டும் அடிமை முறை புகுத்தப்படும்.வேதம் படித்தால் மனு தர்ம சட்டத்தின் படி ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும். அக்ரஹாரம் மேலும் வளர்ச்சியுறும். தலித் சேரிகள் இன்னும் அதிகமாகும். தர்மபுரி போன்ற கலவரங்கள் நாடு முழுக்க நடந்தேறும். எனவே கஷ்டமும் நஷ்டமும் சதீஷ் முருகனுக்குத்தான்.

இஸ்லாமியர்களுக்கு அல்ல. :-) ஏனெனில் ஒரு முறை இஸ்லாத்தை தழுவியவன் மறுமுறை இந்து மதத்தையோ அதன் சனாதன சட்டங்களையோ திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.//

அட செம காமடி சூனாப்பானா... இந்துக்கள் முதலில் மனிதர்கள் பின்பு தான் மத வியாதிகள். ஆனால் சில முஸ்லீம்கள் எப்போதும் வியாதிகள் தான். அன்பான தாய்லாந்திலும் குண்டு வைப்பவன் மட்டும் முஸ்லீமாகவே இருக்கிறான். என்னை கோவிலுக்குள் விட மாட்டேன் என்று சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை, ஆனாலும் கடவுள் கோவில் கருவறையில் மட்டுமே உள்ளான் என்று நம்பும் முட்டாளும் நான் அல்ல. நம்மை விட வலிமை மிகுந்த இயற்கையே கடவுள், அதன் பெயர் எதுவாக இருபினும். ஆனால் அந்த இயற்கையின் பெயரால் அடுத்தவனை சிறுமை படுத்த நினைக்கும் சில ஆட்டு தாடி கூட்டமும், அங்கி கூட்டமும் இன்னும் சில காவி கூட்டமும் குடிநீரில் கலந்த சாக்கடைகள். எனக்கு எல்லாக்கடவுளும் ஒன்று தான், நான் மசூதிக்கும் சென்று இருக்கிறேன், தேவாலயத்துக்கும் சென்று இருக்கிறேன். என் அன்பு தம்பியும், அருமை நண்பனும் இஸ்லாமியரே... நான் மதிப்பவரை தவிர எவனுக்கும் நான் சேவகம் செய்யமாட்டேன் எந்த கடவுள் ஆணை இட்டாலும். இந்துத்துவா என்பது மனு தர்மம் என்று நீர் நினைப்பீரேயானால், என் சொந்த செலவில் உம்மை மனநல மருத்துவ மனைக்கோ அல்லது நல்ல அறிந்கரிடமோ அலைத்து செல்கிறேன். நாகரீகம் வளர்ந்த காலத்திலும் சூனா பானா பழங்கதை பேசுவதன் நோக்கம்? ஏன் கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்ட பெண்களுக்கு மீண்டும் அனுமதி வழங்க உங்கள் மன்னர் முயற்சிக்கிறார்? நாகரிக ஓட்டம் தானே காரணம்? இந்து மத சட்டம் ஆட்சிமுறைபடுத்தப்படுமாயின் நீங்களும் இந்திய குடிமகனுக்கு உண்டான சட்டத்திற்கு உட்பட வேண்டும், தனி ஆவர்த்தனம் பாட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்...

suvanappiriyan said...

//இந்துத்துவா என்பது மனு தர்மம் என்று நீர் நினைப்பீரேயானால், என் சொந்த செலவில் உம்மை மனநல மருத்துவ மனைக்கோ அல்லது நல்ல அறிந்கரிடமோ அலைத்து செல்கிறேன். நாகரீகம் வளர்ந்த காலத்திலும் சூனா பானா பழங்கதை பேசுவதன் நோக்கம்?//

நாகரிகம் வளர்ந்த இந்த காலத்தில் தான் காதலுக்காக தர்மபுரியில் 300 குடிசைகள் எரிந்து நாசமானது. நேற்று கருவறை புகுவதாக திராவிடர் கழகம் அறிவித்து அது கொந்தளிப்பான நிலையை உண்டாக்கியிருப்பதை நீர் அறியவில்லையா? நீங்கள் நாத்திகர் என்று சொன்னாலும் இந்து மத சட்டத்தின் படி நீர் சூத்திரரே! இதை மறுக்க முடியுமா?

//இந்து மத சட்டம் ஆட்சிமுறைபடுத்தப்படுமாயின் நீங்களும் இந்திய குடிமகனுக்கு உண்டான சட்டத்திற்கு உட்பட வேண்டும், தனி ஆவர்த்தனம் பாட முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்...//

இஸ்லாம் கிறித்தவம், அல்லாத மற்ற மதத்தை பின் பற்றுபவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே நமது நாட்டு சட்டமும் சொல்கிறது. இந்துத்வ ஆட்சி வந்தாலுமே அது உம்மைத்தான் கட்டுப்படுத்தும். ஒரு இஸ்லாமியனைக் கட்டுப்படுத்தாது. இஸ்லாமியனை கட்டுப் படுத்தும் தைரியமும் முதலில் இந்துத்வாவுக்கு வராது.

//என்னை கோவிலுக்குள் விட மாட்டேன் என்று சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை, //

இந்து மதத்தில் உம்முடைய தகுதியை நீர் தீர்மானிக்க முடியாது. அதனை பார்ப்பணர்களே தீர்மானிக்க முடியும்.


ஸ்ரீரங்கம் கோவிலின் உள்ள கருவறைக்கு செல்ல முயற்சித்து பாரும். அப்பொழுது தெரியும் உமக்கு இந்து மதம் கொடுக்கும் மரியாதை.

உண்மையிலேயே பரிதாபமாக இருக்கிறது உமது நிலையை நினைத்தால்.