Followers

Wednesday, December 05, 2012

இந்தியன் முஜாஹிதீன் அலுவலகம் எங்கே இருக்கிறது........???



பிரதமரை பார்த்து எம்பிக்கள் சரமாரி கேள்வி...........!!

அப்பாவிகளின் விடுதலைக்கு அணிதிரண்ட எம்பிக்கள
- 40 நிமிட சந்திப்பில் பிரதமரிடம் கேள்வி............!!

இந்தியாவில் இந்தியன் முஜாஹிதீன் அலுவலகம் எங்கே இருக்கிறது ? அதன் நிர்வாகிகள் யார் யார் ? என்று சொல்ல முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளால் பிரதமரை துளைத்தெடுத்தனர் எம்.பி.க்கள்.

அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும் - கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் - பல ஆண்டுகள் சிறையில் கழித்த பின் நிரபராதிகள் என விடுவிக்கப்படுபவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கிடவும் - பொய் வழக்குகளில் சிக்க வைக்கும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட விஷயங்களுடன் 16 எம்பிக்களின் குழு நேற்று பிரதமரை சந்தித்தது,

ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் சென்ற குழு 2 பக்கங்களை மட்டுமே கொண்ட மனுவை கொடுத்துவிட்டு தீவிர விவாதத்தில் ஈடுபட்டனர்,

ராம்விலாஸ் பாஸ்வான் :-

2 வருடங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், அப்பாவிகள் விடுவிக்கப்பட்டு வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள் என அளித்த உத்தரவாதம் என்ன ஆனது ?

ஒரு நேரத்தை கெடுவாக நிர்ணயித்து அதற்குள் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றார்,

பிரதமர் மன்மோகன்சிங் :

இம்முறை இந்த விஷயத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பாமல் நானே - நேரடியாக கவனிக்கிறேன்,

மேலும் எதிர்காலத்தில் அப்பாவிகள் கைது செய்யப்படாமல் தடுக்கவும் - கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு - நிரபராதிகளின் மறுவாழ்வு - தவறான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்றவைகளுக்கு வலுவான மெக்கானிசம் தயாரிக்கப்படும் என்றார் பிரதமர்.

ராம்கோபால் யாதவ் :

உத்தரபிரதேச அரசு அப்பாவிகளை விடுதலை செய்ய முயன்றால் இன்று இவர்களை விடுதலை செய்யும் நீங்கள் நாளை இவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுப்பீர்கள் என நீதிபதிகள் கமென்ட் அடித்து அப்பாவிகளை விடுவிக்க மறுத்த செயலை சுட்டிக்காட்டினார்,

முஹம்மத் அதீப் :

முஸ்லிம்களை தீவிரவாத இயக்கங்களின் பெயர்களோடு தொடர்பு படுத்துவது, முஸ்லிம்களுக்கு எதிரான சர்வதேச சதி, இந்த சதிவலையில் இந்தியா விழுந்து விடக்கூடாது என்றார்,

மணிசங்கர் அய்யர் :

அப்பாவிகளை பொய் வழக்குகளில் சிக்கவைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என்றார்,

பா.ஜ.க.வைத்தவிர, அனைத்துக்கட்சிகளின் எம்பிக்களும் இணைந்து சென்று முஸ்லிம்களுக்கு குரல் கொடுத்ததது குறிப்பிடத்தக்கது.

நன்றி: உணர்வு வார இதழ்
------------------------------------------------------



அயோத்தி ராமன் அழுகிறான் -கவிஞர் வைரமுத்து


கங்கை காவிரி இணைக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா
காடுகள் மலைகள் திருத்த வேண்டும்
கர சேவகரே வருவீரா
வறுமைக் கோட்டை அழிக்க வேண்டும்
கர சேவகரே வருவீரா

மாட்டீர்கள் சேவகரே மாட்டீர்கள்
நாம் உடைப்பதற்கே பிறந்தவர்கள்
படைப்பதற்கில்லை
வித்துன்னும் பறவைகள்
விதைப்பதில்லை

விளைந்த கேடு
வெட்கக் கேடு
சுதந்திர இந்தியா
ஐம்பதாண்டு உயரத்தில்
அடிமை இந்தியன்
ஐநூறு ஆண்டு பள்ளத்தில்

ஏ நாடாளுமன்றமே
வறுமைக் கோட்டிற்குக் கீழ்
நாற்பது கோடிப் பேர் என்றாய்
அறிவுக் கோட்டின் கீழ்
அறுபது கோடிப் பேர்
அதை மட்டும் ஏன்
அறிவிக்க மறந்தாய்

மதம் ஓர் பிரம்மை
மதம் ஓர் அருவம்
அருவத்தோடு என்ன
ஆயுத யுத்தம்
மதம் என்பது ஓர்
வாழ்க்கை முறை, சரி
வன்முறை என்பது
எந்த முறை

கட்டிடத்தின் மீது எப்போது
கடப்பாரை விழுந்ததோ
அப்போதிருந்தே
சரயு நதி
உப்புக் கரித்துக் கொண்டு
ஓடுகிறது..
சீதை சிறைப் பட்டப்பின்
இப்போதுதான் ராமன்
இரண்டாம் முறை அழுகிறான்

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா

அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கற்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்

போதும்
இந்தியாவில்
யுகம் யுகமாய்
ரத்தம் சிந்தியாயிற்று
இனிமேல்
சிந்தவேண்டியது
வியர்வைதான்
நம் வானத்தை
காலம் காலாமாய்
கழுகுகள் மறைத்தன

போகட்டும்
இனிமேலேனும்
புறாக்கள் பறக்கட்டும்

( பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நாளில்
இடிந்து போய் எழுதியது என்று
கவிப் பேரரசு எழுதிய இந்த கவிதை
தமிழுக்கு நிறமுண்டு என்ற நூலில்
வெளிவந்துள்ளது..)

---------------------------------------------------



ராமருக்கு கோவில் கட்ட பாபரி மசூதியை இடித்தவர் இன்று தனது தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மகத்தான நிகழ்வை இந்த பேட்டியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

15 comments:

Anonymous said...

”பாபர்மஸ்ஜித் டிசம்பர்6” கேப்டன் செய்தி டிவியில் விஹெச்பியுடன் பி.ஜே அவர்கள்நேரடிவிவாதம்

டிசம்பர் 6 (வியாழன் 6-12-2012) மாலை 4 மணி முதல் 5 மணி வரை கேப்டன்செய்திடிவியில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த நேரடி ஒளிபரப்பில் VHP தலைவர்களுடன் பி.ஜே அவர்கள் விவாதிக்க உள்ளார்கள்

கேப்டன் செய்தி டிவியில் இந்தநேரடி ஒளிபரப்பை காணத்தறாதீர்கள்

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் ...சகோஸ்
டிசம்பர் 6...இந்திய முஸ்லிம்களுக்கு கருப்பு நாள் ....
எம்.பி களின் சந்திப்பு ஆறுதலான விஷயம் இவ்விஷயத்தில் பிரதமர்
வழக்கம் போல மவுனியாக இல்லாமல் விரைந்து செய்யல்பட்டால்
" இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை " காப்பாற்றப்படும் ,காப்பாற்றப்படனும் இதுவே என் பிரார்த்தனை ........
கவிப்பேரரசுவின் வைர கவிதை வரிகள் ஒவ்வென்றும் முத்துக்கள் .
நெஞ்சை நெகிழ வைக்கும் கவிதை ........

suvanappiriyan said...


'தீமை விரும்பிகளை அல்லாஹ் விரும்புவதில்லை ; ஒரு சிறந்த முஸ்லிம் என்பவன் முதலில் ஒரு நல்ல மனிதன்' என்றெல்லாம் மனித நேயத்தை வலியுறுத்தும் மதத்தை ஏனோ தீவிரவாதிகளின் மதமாக சித்தரிக்கிறோம்! தீவிரவாதத்தின் விதை மிக மிகச் சிறியது தான் ; அது எங்கு வேண்டுமானாலும் விதைக்கப்படலாம் ..பசி, வேலையின்மை, தீண்டாமை, Rejection என்று எது வேண்டுமானாலும் அதன் விதையாக இருக்கலாம்... சும்மா விளையாட்டுக்கும் ஹாபியாகவும் தீவிரவாதம் யாரும் செய்வதில்லை..எனவே 200 ரூபாய் கொடுத்து தியேட்டருக்கு சென்று ஹீரோ தீவிரவாதியை அடிப்பதைப் பார்த்து கைதட்டுவதை விட பசியால் வாடும் ஒருத்தருக்கு சாப்பாடு வாங்கித் தந்தால் அல்லது அவருக்கு சாப்பாடு நிரந்தரமாகக் கிடைக்க நம்மால் ஆன ஏற்பாடு செய்தால் தீவிரவாதத்தின் விதை ஒன்றை முளைவிடாமல் நசுக்கிய புண்ணியம் நமக்குக் கிடைக்கும்...

http://samudrasukhi.blogspot.com/2012/12/79.html

suvanappiriyan said...

சலாம் சகோ நாசர்!

//கவிப்பேரரசுவின் வைர கவிதை வரிகள் ஒவ்வென்றும் முத்துக்கள் .
நெஞ்சை நெகிழ வைக்கும் கவிதை ........ //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

பேதங்களை வளர்க்கும், ஊக்குவிக்கும் ஜாதிகளை நிரந்தரப்படுத்தும் முக்கியமான இன்றைய நிறுவனங்கள் கோவில்கள்தான்.
இந்தக் கோவிலுக்குள் எந்தெந்த ஜாதி யினர், எந்தெந்த இடம்வரை செல்லலாம் என்பதுகூட வரையறுக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட ஜாதியினர் அறவே கோவிலுக் குள் நுழையக்கூடாது என்ற நிலை இருந்த துண்டு. இவையெல்லாம் பல்வேறு போராட்டங் களின் காரணமாக அதனைத் தொடர்ந்து அரசின் ஆணைகள், செயல்பாடுகள் காரண மாக மாற்றப்பட்டுள்ளன.
இருந்தாலும் கோவில் கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியினர் செல்லக் கூடாது; அர்ச்சகராகக் கூடாது என்ற நிலை இன்றுவரை பாதுகாப்புடன் இருந்து வருகிறது.
இதனை எதிர்த்துத்தான் தந்தை பெரியார் மரண சாசனம்போல போர்க்களத்தில் நின்றார்.
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் தலைமை யிலும், அதனைத் தொடர்ந்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமை யிலும் தொடர்ந்து பல்வகைப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், தந்தை பெரியார் மறைந்த பின்பு, தமிழர் தலைவர் காலகட்டத்திலும் இரண்டு முறை இதற்கான சட்டங்கள் தி.மு.க. அரசால் மானமிகு கலைஞர் அவர்களின் தலைமை யிலான அரசால் இயற்றப்பட்டும், பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று சட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் முடக்கி யுள்ளனர்.
தமிழ்த் தேசியம் பேசுவோர், ஜாதியவாதம் பேசுவோர் இவற்றைப்பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. ஒட்டுமொத்தமாக எல்லா ஜாதி தமிழர்களையும் சேர்த்துத்தான் சூத்திரன் (கீழ்ஜாதி மகன், வேசி மகன்) என்று சொல்லும் கேவலம் இன்றுவரை நீடிக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கிட்டும் போது, ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் உள ரீதியான பெரிய மாற்றம் நிகழும் - இதனை சென்னையில் கடந்த முதல் தேதி நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆழ்ந்த பொரு ளோடு சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர் களை கீழ்ஜாதியினர் என்று நோக்கும் பார்வை அடிபட்டு வீழும்.
இன்னொரு கொடுமையை தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கையின்மூலம் செய்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் கோவிலில் வழிபட உரிமை இல்லை என்பதுதான் அந்தச் சுற்றறிக்கை.
சிவபெருமானே புலித்தோலை இடுப்பில் அணிந்துள்ளான் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன் செல்லக் கூடாது என்பது முரண்பாடு அல்லவா என்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் தீர்மானத் திற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
இந்தச் சுற்றறிக்கை உடனே விலக்கிக் கொள்ளப்படவேண்டும். இல்லையெனில், இந்தப் பிரச்சினையை திராவிடர் கழகம் கையில் எடுத்துக்கொள்ளும் என்பதை எச்சரிக் கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

http://viduthalaidaily.blogspot.com/2012/12/blog-post_3075.html

suvanappiriyan said...

திரு க்ருஷ்ண குமார்!

//ஏன் அன்பார்ந்த ஹாஜி சுவனப்ரியன் அவர்கள் இந்த க்ஷணம் வைதிக வழியைப் பின்பற்றத் தயார் என்றால் சொல்லுங்கள். வேதம் பௌரோஹித்யம் இவையெல்லாம் உங்களுக்கு சொல்லிவைப்பதற்கு அடியேன் ஜவாப்தாரி.//

குர்ஆன் தவ்ராத்தையும், இன்ஜீலையும், ஜபூரையும், இப்றாஹீமின் ஆகமங்களையும் தவிர்த்து முதல் வேதம் (ஸீஹீஃபில் உலா), முன்னோர்களின் வேதம் (ஜீபூருல் அவ்வலீன்) என்ற பெயர்களையும் குறிப்பிடுகிறது. முதல் வேதம், முன்னோர்களின் வேதம் என்றால் குர்ஆன், பைபிள், தோரா, ஸபூர், ஆப்ரஹாமின் ப்றாகீமின் ஆகமங்களுக்கு முந்தியதாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வேதங்கள் அருளப்பட்ட தூதர்களுக்கு முந்தைய தூதர் நோவா தான். நோவா (நூஹ்) நபியின் சமுதாயம் தான் ஸாபியின்கள். ஸாபியீன்கள் தான் இக்காலத்தில் இந்துக்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்துக்கள் தங்களிடையே உள்ள வேதங்களை 'ஆதிகிரந்தம்' என்றும் ' ஆதி கியான்' என்றும் கூறுகின்றனர். 'ஸீஹீபில் உலா' 'ஜீபூருல் அவ்வல்' என்னும் பெயர்களுக்கு இணையான சமஸ்கிரத சொல் 'ஆதி கிரந்', 'ஆதி கியான்' ஆகும். இதன் மூலம் குர்ஆன் கூறும் முன்னோர்களின் வேதம் என்பது 'ஆதி கிரந்தம்', 'ஆதிகியான்' என்பது தெளிவாகிறது.

எனவே இன்று வரை நான் இந்து மதம் கூறும் வைதீக வழியில்தான் சென்று கொண்டிருக்கிறேன். தாங்கள் என்னைப் பற்றி கவலைப்படுவதை விட ஆதி திராவிடர்களுக்கு இந்த வேதங்களை பயிற்று வித்து புரோகிதராக்கினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். அவர்களின் மதமாற்றமும் நிற்கும் வழி உண்டாகும். ஆனால் இவ்வாறு பார்ப்பணர்களை தவிர மற்றவர்களுக்கு வேதம் கற்பிக்கக் கூடாது என்று செந்தில் என்ற பார்பணர் தமிழ் இந்துவில் எழுதியதை இங்கு நான் தருகிறேன். இதற்கு தங்களின் பதில் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

இனி செந்தில் என்ற பார்பணரின் பின்னூட்டத்தைப் பார்ப்போம்.

3. வேதம் கற்பது என்றால் கிறித்துவர்கள் பைபிள் படிப்பது போல எண்ணிக்கொள்வதை நிறுத்துங்கள்.. பைபிளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.. அது போல, வேதத்தையும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதுதான் உங்கள் சித்தாந்தமும் நிலைப்படும்.. இது ஒரு ரியாக்ஷனரி வேலை என்பதை அறிவீர்களா?

4. வேதத்தை யார் படிக்கலாம்.. படிக்க கூடாது என்பது சாஸ்திரத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.. அதை மாற்ற நீங்கள் யார்.. உங்களுக்கு என்ன தகுதி.. அதை முதலில் சொல்லுங்கள்.. காலம் காலமாக பிராமனர்கள் தான் முறையாக வேதத்தை பயின்று பாதுகாத்து வந்துள்ளார்கள்.. அவர்களுக்கே சாஸ்திரத்தை மாற்றும் உரிமை இல்லதபொழுது, இங்கே இருக்கும் துபாஷி பிராமணர்களுக்கும் மற்ற இந்துதுவவாதிகளுக்கும் எப்படி உரிமை வந்தது..


suvanappiriyan said...

வசந்த் மூன் என்பவர்தான் அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறிப்புகளை எல்லாம் தொகுத்துக் கொடுத்தவர். எழுதியவர். நாக்பூர் அரசில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரான `வசந்த் மூன் என்பவர் அதிகாரியாக இருந்தவர். அவர் ஓய்வுபெற்ற பின் அம்பேத்கர் அவர்கள் எழுதிய ஆங்கில எழுத்துக்களுக்கு ஆசிரியராக வருகின்றார்.

`சம்தா சைனிக்தல் என்று சொல்லக்கூடிய சமத்துவ சமுதாயத் தொண்டர்கள் அணியிலே அவர் இருந்து இவர்களை வரவேற்று எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்கின்றார்.
Sangaraksaga is the English Buddist monk, founder of the ‘Friends of the western Buddhist order’. He was to play an important role in spreading Buddhism.

(சங்கரக்சகா என்பவர் ஆங்கிலேய புத்த பிக்கு ஆவார். மேலை நாடுகளின் புத்த நெறி நண்பர்கள் அமைப்பு என்பதன் நிறுவனர் அவர். புத்த நெறியைப் பரப்புவதில் மிகவும் தலையாய பங்கினை அவர் ஆற்றவிருந்தார்.)

வெள்ளைக்காரருக்கு ஜாதி உணர்ச்சி எல்லாம் இல்லை. ஆனால், இங்கே இருந்த புத்த பிக்குகள் ஜாதி உணர்ச்சிக்கு ஆளானவர்கள் என்று நினைத்தது மாத்திரமல்ல, பார்ப்பனீய இந்து மதம் என்பதே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் நினைக்கின்றார். அதனால் வெளிநாட்டு வெள்ளைக்கார புத்திஸ்ட் உதவியை நாடி, புத்த நெறிக்குச் செல்ல அம்பேத்கர் தயாராகிறார்.

இந்தியாவில் மிகவும் மூத்த பிக்கு யார் என்று இவர் ஆய்வு செய்கிறார். பர்மாவிலே இருந்து வந்த சந்திராமணி என்பவரிடத்திலே சென்று பேசுகிறார்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
என்ற மூன்று உறுதி மொழிகளுக்கு மேலே அம்பேத்கர் அவர்கள் மேலும் 22 உறுதிமொழி களை எழுதுகின்றார்.

மகாபோதி சங்கம் அதிர்ச்சி

மகாபோதி சங்கத்துக்கு (சொசைட்டிக்குப்) பவுத்தத்தைத் தழுவப் போகிறேன் என்று அம்பேத்கர் எழுதுகிறார். அப்பொழுது அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்கத்தாவில் உள்ள மகாபோதி சொசைட்டியின் செயலாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குத் தந்தி மூலம் ஒரு செய்தியை அனுப்புகின்றார். அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தைத் தழுவப் போவதாகச் சொன்னதைப் பாராட்டித் தந்தி வரவில்லை. என்ன செய்திருக்க வேண்டும் அவர்கள்? நீங்கள் தழுவ வருவதை நாங்கள் பாராட்டுகிறோம் வரவேற்கிறோம் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக தந்தியில் என்ன குறிப் பிட்டிருந்தார்கள் என்றால் `நீங்கள் பவுத்தத்தைத் தழுவப் போவதாக எடுத்த முடிவைக் கண்டு இந்து மதத்தை விட்டு வெளியே வருவதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியுற் றோம். தயவு செய்து உங்களுடைய முடிவை மறுபரிசீலனை பண்ணுங்கள் என்று தந்தியில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இப்படி எழுதியவர் யார்? இவரென்ன ஆர்.எஸ்.எஸ்.காரரா? இப்படிப்பட்டவர் பவுத்த சங்கத்தில் இருந்திருக்கிறார் என்றால், பார்ப்பான் உள்ளே நுழைந்தான் என்றால் என்னென்ன கேடுகள் வரும் என்பதற்கு இதைவிட பெரிய எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது.

பார்ப்பனீயம் புத்தமதத்தில் நுழைந்தது, . கடவுளாக ஆக்கியது, ஆத்மாவைக் காட்டிய தெல்லாம் அப்புறம். ஆனால், அம்பேத்கர் அவர்களி டமே இந்த வேலையைக் காட்டினார்கள். இவருக்கே அந்த அனுபவம் ஏற்பட்டதால் தான் அம்பேத்கர் அவர்கள் - இவர்கள் மூலம் பவுத்தத்தை ஏற்காமல் வெளிநாட்டு, வெள்ளைக்கார பிக்கு மூலம் பவுத்த நெறியைத் தழுவுகிறார்.

`சங்கராட்சகா என்பவரிடம் நெருங்கிப் பழகியிருக்கின்றார். அவரைப்பற்றி நிறைய குறிப்பு களை அம்பேத்கர் அவர்கள் எழுதியிருக்கின்றார். அப்பொழுது அம்பேத்கர் அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள்தான் மிக முக்கிய மானவை.

அம்பேத்கருக்கு மாபெரும் துரோகம்
நண்பர்களே! நம்முடைய நாட்டில் நம் நண்பர்களில் பலபேர் கூட பவுத்தத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அம்பேத்கரைப் பின்பற்றிவிட்டோம். நாங்களும் பவுத்தத்தைப் பின்பற்றி விட்டோம் என்று சொல்லிவிட்டு, எல்லா இந்துக் கடவுளின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். எல்லா இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடு கின்றார்கள். கடவுள் படங்களை மாட்டி வைத்துக் கொண்டு, அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்துக் கொண்டிருந் தால், இதைவிட அம்பேத்கர் அவர்களுக்குச் செய்யக்கூடிய மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது. ஏனென்றால் தலைவர்களுக்குப் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, அம்பேத்கர் ஜெயந்தி என்று சொல்வது, சிலைக்கு மாலை போடுவது - இதுதான் அம்பேத்கர் அவர்களுக்கு நாம் காட்டுகின்ற மரியாதையா? அவருடைய கொள்கைக்குத் திரிபுவாதம் இல்லாமல் நடக்கவேண்டும். அம்பேத்கர் அவர்கள் எதைச் சொன்னாரோ அதைக் கடைபிடிக்கவேண்டும்.

(நூல்:அம்பேத்கர் புத்த நெறியைத் தழுவியது ஏன்?)

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//பரவாயில்லையே. எந்த இந்து ஒரு முஸ்லீம் மாதிரி பேசுகிறாரோ அவருடைய பின்னூட்டத்தை நன்றாக நினைவு படுத்திகொள்கிறார்.//

செந்தில் சொல்வது உண்மையா இல்லையா? அதற்கு பதில் சொல்லுங்கள்.

//இந்து மதத்தில் யார் பிற்போக்காளர்களாக இருக்கிறார்களோ அவர்களையே இந்து மதத்தின் ராயல் அத்தாரிட்டி போல காட்டும் வேலையை சுவனப்பிரியன் போன்றோரும், கிறிஸ்துவ மதமாற்றிகளும் வெகுகாலமாக செய்து வருகிறார்கள்.//

இந்து மதத்தின் விவேகானந்தரை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது பல சிந்தனைகள் அருமையானவை. அதே அளவு அத்வானியையும் மோடியையும் வெறுக்கிறேன். காரணம் அவர்களின் செயல்பாடு

//இந்து மதத்திற்கோ யாரும் ”போப்பாண்டவர்” கிடையாது என்பது மட்டுமல்ல, அதற்கு “இறுதி இறைமகன்” என்பது கிடையாது//

இஸ்லாத்திலும் எந்த போப்பாண்டவரும் கிடையாது. உலக முஸ்லிம்களை கட்டுப்படுத்த எந்த அமைப்பும் கிடையாதே! இறை மகனும் இஸ்லாத்தில் கிடையாது. 'உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான் நான். ஒரே வித்தியாசம் எனக்கு இறைச் செய்தி வருகிறது' என்றுதானே முகமது நபி கூறினார்?


suvanappiriyan said...


திரு சந்திரமௌலி!

//சுவனப்பிரியன் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார். அடக்கி வாசித்தல் நல்லது//.

மிரட்டல் தொனி தெரிகிறதே! அது சரி பதில் இல்லாத போது அறிவு மங்கி ஆத்திரம் வெளிப்படுவது மனித இயல்புதானே! :-)

Anisha Yunus said...

Salaam Bhai,

கவிதையை இப்போதுதான் படிக்கிறேன்... என் பதிவுக்கு காப்பி செய்து கொள்கிறேன். :)

பாபரிலிருந்து பாபர் மஸ்ஜித் வரை.... ஒரு மீள்பார்வை.



1992 ம் வருடம் ‘கரசேவகர்கள்’ என்னும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் ஒரு கூட்டம் பல்லாண்டு காலமாக முஸ்லிம்கள் இறைவனைத் தொழுது கொண்டிருந்த ஒரு பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கி, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஒரு சேர கலகங்களை பற்ற வைத்த நாள். இன்றுடன் இருபது வருடங்களாகின்றது, இந்தக் கருப்பு நாளுக்கு.

வாருங்கள் பாக்கலாம் - ஒரு மீள்பார்வை இந்தியாவின் முகத்தை கருப்பாக்கிய இந்த விவகாரத்தில்... (நிகழ்கால சார்மினார், இன்னொரு பாப்ரி மஸ்ஜிதாய் ஆவதன் முன்


Jazakallaahu Khayr :)

suvanappiriyan said...

சலாம் சகோ அன்னு!


//பாபரிலிருந்து பாபர் மஸ்ஜித் வரை.... ஒரு மீள்பார்வை.//

உங்கள் பதிவையும் பார்த்தேன். ஆரம்ப கட்டத்திலிருந்து இன்று வரை முஸ்லிம்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டனர் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

UNMAIKAL said...

குற்றம் நிரூபிக்கப்படாமல் 51,206 முஸ்லிம்கள் ஜெயிலில் உள்ளனர் :

நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்!


Thursday, 06 December 2012 06:05
DEC6, 2011 டிசம்பர் வரை "நேஷ்னல் கிரைம் ரெக்கார்டு பீரோ" கணக்கீட்டின்படி,

நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் 51,206 முஸ்லிம்கள் குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் அடைக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என்.சிங், நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

முஸ்லிம் சிறைவாசிகள் குறித்து ராஜ்யசபை உறுப்பினர் "சாபிர் அலி" கேட்ட கேள்விக்கு எழுத்து மூலம் நேற்று வழங்கப்பட்ட பதிலில் அமைச்சர் இந்த கணக்கை சொல்லியிருக்கிறார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மொத்த சிறை கைதிகளில் 56.7% முஸ்லிம்கள் உள்ளனர்.

10% முஸ்லிம்கள் உள்ள குஜராத்தில் 22% முஸ்லிம்கள் ஜெயில்களில் உள்ளனர்.

25% முஸ்லிம்கள் வாழும் மேற்குவங்கத்தில் 48% முஸ்லிம்கள் சிறைகளில் உள்ளனர்.

10% முஸ்லிம்கள் உள்ள "ஜல்பைகுரி மாவட்டத்தில்" 34% முஸ்லிம்கள் ஜல்பைகுரி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பு :- 3% முஸ்லிம்கள் மட்டுமே அரசுப்பணிகளில் உள்ள நிலையில், சிறைகளில் 50% முஸ்லிம்கள் உள்ளதாக "சர்ச்சார் கமிட்டி"யில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இங்கு நினைவு கூறத்தக்கது.

SOURCE: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/658--28263-

suvanappiriyan said...

திரு தங்கமணி!

//இல்லை.//

பொத்தாம் பொதுவாக சொன்னால் எப்படி? அதற்கு வேதங்களிலிருந்தோ ஸ்மிருதிகளில் இருந்தோ ஆதாரத்தை சமர்ப்பியுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன்.

//அப்படி இறைச்செய்தி வருகிறது என்று சொல்கிறவர்கள் எல்லாரும் டெம்போரல் லோப் எபிலப்ஸி//

யார் கூறுகிறார்கள்?

இஸ்லாமிய எதிரிகள் அதன் கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக எடுத்த ஆயதமே முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்ததாக கதை கட்டி விட்டது. முகமது நபிக்கு தலையில் எத்தனை நரை முடிகள் இருந்தது என்பதைக் கூட அவரது தோழர்கள் ஹதீதுகளில் குறித்து வைத்துள்ளனர். அது பொல் முகமது நபி எப்பொழுதெல்லாம் நோய் வாய் பட்டார்களோ அவை அனைத்தும் தேதி வாரியாக ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு முறை கூட முகமது நபிக்கு வலிப்பு நோய் இருந்த ஒரு குறிப்பையும் காணவில்லை. அன்றைய இஸ்லாமிய எதிரிகள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தவில்லை. வழக்கமான திசை திருப்பும் வேலையே வலிப்பு நோய் என்பது. இமை எல்லாம தாண்டி இஸ்லாம் இன்று வெகு தூரத்துக்கு வந்து விட்டது.

suvanappiriyan said...


திரு க்ருஷ்ண குமார்!

//இங்கு முக்யமான பேசுபொருள் இஸ்லாமும் நாத்திகமும். நாத்திகமென்ன ஐயா, இஸ்லாமிய சமூஹத்தில் மாற்றுக்கருத்துக்கள் கூட கொலைவெறியுடன் எதிர்கொள்ளப்படும் என்பதை இந்நிகழ்வுகள் காண்பிக்கின்றனவே. இத்தளத்திலேயே சவூதியில் ஷியா முஸல்மான் சஹோதரர்கள் வழிபடும் மஸ்ஜிதுகளை சவூதியினர் இடித்து நொறுக்கியதாக செய்திகள் வந்துள்ளனவே. தாங்கள் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இவை முறையானவை என தாங்கள் கருதுகிறீர்களா?//

ஷிஆக்கள் எனப்படுவோர் யார்? முகமது நபி காலத்துக்கு பின்னால் உருவானதே ஷியா கொள்கை. இவர்கள் முகமது நபிக்கு பிறகு அலிதான் ஜனாதிபதியாக வந்திருக்க வேண்டும் என்பார்கள். அன்னை ஆயிஷா, அபுபக்கர், உமர் போன்ற முக்கிய தலைவர்களை இழிவாக பேசுவர். இறந்த சமாதிகளை கட்டிக் கொண்டு அழுவர். முஹர்ரம் 10 அன்று ஹூசைன் இறந்த நாள் என்று உடம்பை கீறிக் கொண்டு நடப்பார்கள். தீ மிதிப்பார்கள். முகமது நபியின் மருமகன் அலியை தகுதிக்கு மீறி புகழ்வார்கள். சில நேரங்களில் முகமது நபிக்கு சரி சமமான இடத்தை கொடுக்க முயற்சிப்பார்கள். இவை அனைத்தையுமே இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றுவார்கள். மேலே கூறிய அனைத்து நடவடிக்கைகளையும் முகமது நபி கடுமையாக கண்டித்து இருக்கிறார். முகமது நபி சொல்லாத ஒரு செயலை இஸ்லாம் என்று நடைமுறைபடுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே தான் சவுதி அரசு இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

ஷியாக்கள் விரும்பினால் தனி மதமாக இருந்து கொள்ளட்டும். இஸ்லாத்துக்குள் புகுந்து குழப்பினால் அதனை கண்டிப்பாக முஸ்லிம்கள் எதிர்ப்பர். ஷியாக்களின் தவறான கொள்கைகளை விளங்கிய பலர் தற்போது சன்னி பிரிவில் சேர்ந்து வருகின்றனர். சவுதியில் தமாம் போன்ற பகுதிகளில் ஷிஆக்கள் கணிசமான அளவு இன்றும் உள்ளனர். அவர்களை யாரும் மிரட்டி அடி பணிய வைக்கவில்லை. இன்றும் பெரும் செல்வந்தர்களாக பலரை வைத்து வேலை வாங்கும் தகுதியில்தான் உள்ளனர்.

இவர்களுக்கும் குர்ஆன், முகமது நபி, ஐந்து கடமைகள் எல்லாம் ஒன்றாகவே வரும். கர்பலா யுத்தத்தினால் சில நயவஞ்சகர்களின் செயலினால் இன்று ஷியாக்களாக பிரிந்துள்ளனர். காலப் போக்கில் ஒன்றினைவார்கள்.

Anonymous said...

//இந்து மதத்தின் விவேகானந்தரை நான் மிகவும் மதிக்கிறேன். அவரது பல சிந்தனைகள் அருமையானவை. அதே அளவு அத்வானியையும் மோடியையும் வெறுக்கிறேன். காரணம் அவர்களின் செயல்பாடு//

விவேகானந்தரை போல் மோடியும், அத்வானியும் தங்கள் மதத்தை பின்பற்றி கொண்டு க்ரிஷ்ணரையோ இராமரையோ நினைத்து பஜனை பாடிக்கொண்டு இருக்க வேண்டியது தானே, இவர்களின் செயல் பாடுகளால், அல்லாவின் பிள்ளைகள் வெளிப்படையாக தங்கள் மத மாற்ற வியாபாரத்தை செய்வது சற்று சிரமமாக அல்லவா இருக்கிறது. இது போன்றவர்கள் இருந்தால் இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் திட்டம் சிரமமாக அல்லவா இருக்கிரது. இது போன்றவர்கள் அதிகரித்தால் எந்த காலத்தில் இந்தியாவை அல்லாவின் நாடாக்குவது, ஷரியாவை கொண்டு வருவது. தலித்துகளையும், நடுநிலை வகிக்கும் ஹிந்துக்களையும் இஸ்லாமுக்கு இழுப்பதில் ஓரளவு வெற்றி கண்டு வரும் நேரத்தில், இது போன்றவர்களின் செயல்பாடுகள் அதில் சிறிது தடங்களை ஏற்படுத்துமே, அதனால் நீங்க அவர்களை வெறுப்பது நியாயம் தான் சுவனரே.