Followers

Sunday, December 09, 2012

மன்னர் அப்துல்லாவின் ஒரு அழகிய வேண்டுகோள்!



சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் உலக இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது தற்போதய நவீன உலகின் பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும் போது அதற்கு அடிப்படையாக குர்ஆனும் நபி மொழிகளும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் வேல்ட் லீக் மற்றும் இஸ்லாமிய சட்ட கவுன்சிலும் இணைந்து நடத்திய விழாவில் மேற் கண்டவாறு மன்னர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு ஏற்படும் நவீன பிரச்னைகளுக்கு ஒரு தீர்வை எட்டும்போது அது இஸ்லாமிய அடிப்படையை தகர்க்காததாக இருக்க வேண்டும். இஸ்லாமிய தத்துவமானது எந்த காலத்துக்கும் எந்த நாட்டுக்கும், எந்த மொழி பேசுபவருக்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். இதற்கு காரணம் இந்த மார்க்கமானது இறைவன் புறத்திலிருந்து வந்ததாலேயே ஆகும்.

சமீபத்திய அரசியல் கலாசார மாற்றங்கள் நமது வாலிப ஆண்களையும் பெண்களையும் தடம் புரளச் செய்யாது கண்காணிக்க வேண்டும். இன்று முஸ்லிமகள் சந்திக்கும் பிரச்னைகளில் தலையாயது சொந்த சகோதரர்களே ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் சூழ்நிலைதான். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய நிகழ்வு. பிரிவுகளாகவும் இயக்கங்களாகவும் பிரிந்த ஒரு சில நபர்களின் தவறான வழி காட்டுதலால் இன்று முஸ்லிமகளுக்குள்ளேயே மோதிக் கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் இதற்கொரு தீர்வு கண்டு ஒன்றுபட்ட இஸ்லாமிய சமூகம் உருவாக முயற்சிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு மன்னர் அப்துல்லாவின் செய்தி உலக இஸ்லாமிய அறிஞர்களுக்காக மெக்கா கவர்னர் காலித் அல் ஃபெய்சலால் வாசித்தளிக்கப்பட்டது.

தகவல் உதவி அரப் நியூஸ்
09-12-2012

-----------------------------------------------------------

இது ஒரு புறம் இருக்க இன்று புதிய தலைமுறை செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் சமையல் கலை சம்பந்தமாக தொடர் நிகழ்ச்சியை ஒளி பரப்புகிறார்கள். அதில் நாகூரில் புலவு, இனிப்பு வகைகள் எவ்வாறு செய்வது என்பதை செய்முறை விளக்கமாக ஒருவர் செய்து கொண்டிருந்தார். இதன் இடையே நாகூர் தர்ஹாவின் சிறப்புகளைப் பற்றி தொலைக்காட்சி நிருபர் சில சம்பவங்களை சொன்னார்.

அதாவது கடலில் ஒரு கப்பலில் ஓட்டை விழுந்து மூழ்கும் அபாயத்தில் இருந்ததாம். அப்போது கப்பலில் இருந்தவர்கள் உதவி கோரினார்களாம். கடற்கரையோரம் சென்று கொண்டிருந்த நாகூர் பாவா உடனே தனது கையிலிருந்து ஒரு பொருளை எடுத்து வீசினாராம். அது சரியாக சென்று அந்த கப்பலின் ஓட்டையை அடைத்து விட்டதாம். உயிர் தப்பிய அந்த மக்கள் நாகூர் பாவாவை வெகுவாக புகழ்ந்நதனராம். இவ்வாறாக நிகழ்ச்சி வர்ணனையாளர் கதை அளந்து கொண்டிருந்தார்.

அந்த கதையைக் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறைதான். இஸ்லாத்தின் பெயரால் இப்படி ஒரு பொய்யான கதை. அறிவியல் பூர்வமான ஒரு அழகிய மார்க்கத்தை ஒரு சிலர் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக எந்த அளவு நகைப்பிற்குரியதாக ஆக்கி விட்டனர் என்று வருத்தமுற்றேன். ஷாகுல் ஹமீது என்ற இந்த பெரியவரைப் பற்றி இன்னும் நிறைய கட்டுக் கதைகள் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். இவை அனைத்தும் இவர் காலத்துக்கு பின்னால் வந்தவர்கள் கட்டி விட்டவையே.

ஒரு அரசருக்கு வயிற்று வலியை போக்கினாராம். ஒரு வாரிசு உருவாகவும் வைத்தியம் செய்தாராம். இதனால் சந்தோஷமடைந்த தஞ்சை அரசர் அவர் இறப்புக்குப் பிறகு நிறைய சொத்துக்களை நாகூர் தர்ஹா பேரில் எழுதி வைத்துள்ளார். ஒருக்கால் இது உண்மையாக இருக்கலாம். சில நபர்களுக்கு இஸ்லாமிய போதனையும் செய்திருக்கலாம். ஒரு மார்க்க போதகராகவும் ஒரு நாட்டு வைத்தியராகவும் பார்க்கப்பட வேண்டியவரை அநியாயத்துக்கு மகான் என்றும் பொய்யான கதைகளை இட்டுக்கட்டியும் ஒரு பெரும் கூட்டத்தையே உண்டாக்கி விட்டனர்.

இது போன்று தர்கா கட்டுவதும், அதற்கு மாலை மரியாதைகள் செய்வதும், சந்தனக் கூடு எடுப்பதும் முற்றிலுமாக இஸ்லாத்துக்கு மாற்றமான வழிமுறைகள். இது போன்ற கட்டடங்களை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்பது முகமது நபியின் கட்டளை. இறந்து போக சில நாட்களுக்கு முன்பே கூட தனது சமாதியில் கட்டடிடம் கட்ட வேண்டாம் என்றும் விழா நடத்தும் இடமாக ஆக்கி விட வேண்டாம் என்றும் சொன்னவர் நபிகள் நாயகம். அவருக்கு சமாதியில் கட்டிடமோ, அல்லது விழாவோ நடப்பதில்லை என்பது நாம் அறிவோம். அவ்வாறிருக்க முகமது நபியை விட நாகூரில் அடங்கியிருக்கும் ஷாகுல் ஹமீது பெரிய மகானாக ஆகி விட்டாரா? ஆக முடியுமா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும். தவறுகளிலிருந்து விடுபட்டு ஏக இறைவனை மட்டுமே வணங்கி இம்மை மறுமை பேறுகளை பெற்றுக் கொள்வார்களாக!.




19 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையில் மிக அழகிய வேண்டுகோள். அதை மன்னர் அவர்கள் தாம் ஆளுகின்ற சவுதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். சவுதியில் இருக்கிற சில சட்டங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டுமே சட்ட திட்டங்களை வகுத்து பின்பற்ற வேண்டும். சவூதி முழுமையான இஸ்லாமிய நாடாக ஆகவேண்டும் என்பதே எம்முடைய ஆசை. அரசியலுக்காகவும் , சுய நலனுக்காகவும் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாக நடக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய கட்சிகளை, இயக்கங்களை ஆதரிப்பதை விட்டும் இஸ்லாமிய அறிவு ஜீவிகள் விலகி நின்று உண்மையை மக்களுக்கு எடுத்து சொன்னாலே அதிகமதிகமான தவறான கொள்கைவாதிகள், இஸ்லாமிய குழப்பவாதிகள் பொது மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். ஆனால் பல அறிவுஜீவிகள் போலி ஒற்றுமை என்று பேசி குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம் இயக்கங்களையும் ஆதரிக்கும் வரை இந்த நிலையை அடைவது கடினம் தான்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையில் மிக அழகிய வேண்டுகோள். அதை மன்னர் அவர்கள் தாம் ஆளுகின்ற சவுதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். சவுதியில் இருக்கிற சில சட்டங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டுமே சட்ட திட்டங்களை வகுத்து பின்பற்ற வேண்டும். சவூதி முழுமையான இஸ்லாமிய நாடாக ஆகவேண்டும் என்பதே எம்முடைய ஆசை. அரசியலுக்காகவும் , சுய நலனுக்காகவும் குர்ஆன் ஹதீஸிற்கு முரணாக நடக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய கட்சிகளை, இயக்கங்களை ஆதரிப்பதை விட்டும் இஸ்லாமிய அறிவு ஜீவிகள் விலகி நின்று உண்மையை மக்களுக்கு எடுத்து சொன்னாலே அதிகமதிகமான தவறான கொள்கைவாதிகள், இஸ்லாமிய குழப்பவாதிகள் பொது மக்களால் ஓரங்கட்டப்படுவார்கள். ஆனால் பல அறிவுஜீவிகள் போலி ஒற்றுமை என்று பேசி குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம் இயக்கங்களையும் ஆதரிக்கும் வரை இந்த நிலையை அடைவது கடினம் தான்.

Unknown said...

வணக்கம் சகோ ,

நான் மாற்று மதம் ஆயினும் ,அறிந்ததை பகிர விரும்புகிறேன்

உண்மையோ பொய்யோ தெரியவில்லை..சமீபத்தில் என் வீட்டில் கதிர்காமம் சென்றனர்...அங்கு இது போல ஒரு சிறிய பள்ளிவாசலில் ஒருவர், ஒரு மரத்தை காண்பித்து ,"இது சாம்பிராணி மரம் னு வாசனை பாக்க சொல்லிருக்காங்க...ஒரு இடத்தில மட்டும் ஜவ்வாது பூசி மக்களை ஏமாத்துறதா கேள்வி..

அடுத்து 3 தென்னன்பிள்ளைகளை பக்கத்தில் நட்டு அது ஒரே தேங்காயில் உருவாகியது என கூறுகிறார்..
மற்றும் அங்கு உறங்கும் பாவா துண்டிக்கப்பட்ட கைகளை ஓட்ட வைக்கும் வல்லமை படைத்தவராம்..


எல்லாம் முடிந்து போகும் போது உங்களால முடிஞ்சத கொடுத்துட்டு போங்கனு சொல்லிருக்கார் அந்த காவலாளி ..

இவ் அற்புதங்கள் அல்லாவினால் நிகழ்ந்தது னு சொன்னா கூட பரவா இல்லை...சாய் பாபா சமாதி மாதிரி இறந்த ஒருவரின் அற்புதங்கள்னு காசு பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடியாதது.மேலும் இப்பள்ளிவாசல் ஆனது சர்வ மத பிரதேசம் ஆகிய கதிர்காமத்தில் அமைக்கப்பட்டுள்ளது ....

suvanappiriyan said...

சகோ விஜய்!

//உண்மையோ பொய்யோ தெரியவில்லை..சமீபத்தில் என் வீட்டில் கதிர்காமம் சென்றனர்...அங்கு இது போல ஒரு சிறிய பள்ளிவாசலில் ஒருவர், ஒரு மரத்தை காண்பித்து ,"இது சாம்பிராணி மரம் னு வாசனை பாக்க சொல்லிருக்காங்க...ஒரு இடத்தில மட்டும் ஜவ்வாது பூசி மக்களை ஏமாத்துறதா கேள்வி..//

இவை அனைத்தும் பித்தலாட்டங்கள். உழைக்காமல் வயிறு வளர்க்க நினைக்கும் போலி ஆன்மீக வாதிகள்.

//எல்லாம் முடிந்து போகும் போது உங்களால முடிஞ்சத கொடுத்துட்டு போங்கனு சொல்லிருக்கார் அந்த காவலாளி ..//

இதுதான அவர்களின் குறிக்கோள். முகமது நபி தனது வாழ்நாளில் இவ்வாறு புரோகித தொழில் ஒரு நாளும் செய்ததில்லை. உழைத்து சாப்பிட்டார். 100 ஆடுகள் கொண்ட ஒரு ஆட்டுப் பண்ணையை வைத்து அதன் மூலம் தமது குடும்ப செலவுகளை பார்த்துக் கொண்டார்.

//இவ் அற்புதங்கள் அல்லாவினால் நிகழ்ந்தது னு சொன்னா கூட பரவா இல்லை...சாய் பாபா சமாதி மாதிரி இறந்த ஒருவரின் அற்புதங்கள்னு காசு பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடியாதது.மேலும் இப்பள்ளிவாசல் ஆனது சர்வ மத பிரதேசம் ஆகிய கதிர்காமத்தில் அமைக்கப்பட்டுள்ளது ....//

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துக்கு இதன் உண்மை நிகழ்வுகளை அறிய வையுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அந்த போலி ஆசாமியையும் காவல் துறை வசம் ஒப்படைப்பார்கள். தமிழகத்தில் நிறைய மாற்றங்கள் வந்த வண்ணம் உள்ளது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சலாம் சகோ ஷேக் தாவுத்!

//உண்மையில் மிக அழகிய வேண்டுகோள். அதை மன்னர் அவர்கள் தாம் ஆளுகின்ற சவுதியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்//

கண்டிப்பாக! அதற்கான முயற்சிகள் படிப்படியாக நடந்து வருகிறது. மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும்போது சவுதி பல மடங்கு சேர்த்துக் கொள்ளலாம். இது போன்ற விஷயங்களில் மிக நுணுக்கமாக காரியங்களை சாதிக்க வேண்டும்.

//குர்ஆன் ஹதீஸ் வழியில் மட்டுமே சட்ட திட்டங்களை வகுத்து பின்பற்ற வேண்டும். சவூதி முழுமையான இஸ்லாமிய நாடாக ஆகவேண்டும் என்பதே எம்முடைய ஆசை. //

நம் எல்லோருடைய ஆசையும் அதுதான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.


Anonymous said...

மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது தீவிரவாதத்தின் நிறம் காவி என்று..................!!

அண்மையில் ஹைதராபாத் நகரில் இந்து, முஸ்லிம் மக்கள் இடையே பெரும் கலவரம் மூண்
டதாகச் வெளியாகின.

அதற்குக் காரணமாக கோவிலில் யாரோ மாட்டிறைச்சியை வீசியதால் முஸ்லிம்கள் தாம் அவ்வாறு வீசியிருக்க வேண்டும் என்று கருதி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தால் பலரும் படுகாயமடைந்தனர், பல சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்நிலையில் கலவரத்துக்குக் காரணமான மாட்டிறைச்சியை பகதூர் புரா கோவிலில் வீசி முஸ்லிம்கள் மீது பழியைத் திருப்பிவிட்ட G.சிவகுமார் (எ) ராகேஷ், வயது 19 என்னும் இந்துத்துவா பயங்கரவாதி பிடிபட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தொண்டரான சிவகுமார் என்கிற ராகேஷ், ஹைதராபாத் பகதூர்புரா கோவிலில் மாட்டுக்கறியை வீசியதோடல்லாமல், யாரோ கோவிலில் மாட்டுகறியை போட்டுள்ளனர் என மக்களிடம் விஷமம் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. காவி பயங்கரவாதி சிவகுமார் மீது இபிகோ 153/A மற்றும் 295 ஆகிய சட்டப்பிரிவுகளின்படி, (Crime No 83/2012) வழக்குப்பதிவு செய்துள்ளனர்,

முன்னதாக தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட சிவக்குமாரை நேற்று செய்தியாளர்கள் முன்பு, காவல்துறையினர் முன்னிலைப்படுத்தினர். 19 வயதாகும் சிவக்குமாருக்கு 18 வயதே ஆகிறது என்று கூறி சட்டத்தின் கடுமையிலிருந்து காப்பாற்றவும் சிலர் முயல்வதாகத் தெரியவந்துள்ளது.

UNMAIKAL said...

சுட்டிகளை சொடுக்கி விடியோ காணுங்கள்

>>>>> 1. தர்கா என்றால் என்ன?

>>>>>2. சமாதியை வழிபடுவது ஏன்?

>>>>> 3. தர்கா ஜியாரத் சுன்னத்தா?

>>>>>4. அவ்லியாக்களை வணங்குவது ஏன்?

>>>>>5. நாகூரில் கபுரை வணங்குவது ஏன்?

.
.

UNMAIKAL said...

இந்த நாட்டை உருவாக்கப் பாடுபட்ட,

இந்த நாட்டின் உருவாக்கத்துக்காக உயிர் நீத்த

இஸ்லாமிய சகோதரர்களைத்

தேசத்துரோகக் கூட்டமாக சித்தரித்து

‘சீன்’ போடுவதை

ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது.
திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்

இன்று நேற்றல்ல... இஸ்லாமியர்களை தேசவிரோத சக்தியாக சித்தரித்துப் படம் பிடிப்பது இங்கு நீண்டகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

‘ரோஜா’ படத்தில், தொழுகை நடத்திக் கொண்டே ‘அசைன்மென்ட்’க்கு உத்தரவு கொடுப்பதாக காட்சி இருக்கும்.

உலகநாயகன் படங்களில் இது உச்சக்கட்டம்.

‘ஹே ராம்’ படத்தில், ‘‘நீங்க உங்க நாட்டுக்கே போங்கடா,’’ என்பார்.

உன்னை போல் ஒருவனில், ‘‘ஒரு பொண்டாட்டி செத்தா என்ன பாய்? அதான், மூணு இருக்கே; அதுவும் மூணாவதுக்கு வயது பதினாறுதான்,’’ என இஸ்லாமியர்களின் சோகத்தையும்கூட ஏகடியம் செய்து வசனம் வைப்பார்.

அடுத்து இவர் ‘விஸ்வரூபம்’ எடுக்கிற படம் நிஜமாகவே, கதி கலக்குகிறது.

அந்த சினிமாவின் ‘டிரெய்லர்’ பார்த்த போது, நமது பயம் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாவதை தவிர்க்க முடியவில்லை.

‘‘விஸ்வரூபம் சினிமா இஸ்லாமியர்களுக்கு எதிரானதா?’’ என்று பிரெஸ்மீட்டில் கேள்வி பாய்ந்தபோது, ‘‘நானா...? இஸ்லாமியர்களுக்கு எதிராகவா? யாரைப் பார்த்து இப்படி கேள்வி கேட்கிறீர்கள்?’’ என்று உலகநாயகன் சீறியிருக்கிறார்.

‘‘நீங்கள் என்பதால்தான், இந்தக் கேள்வியே எழுகிறது,’’ என்று மீடியாகாரர்கள் யாரும் சொல்லவில்லை.

சொல்லியிருந்தாலும் அதில், தப்பில்லை.

ஆன்மீகத்தில் பழுத்த பழமான சூப்பர் ஸ்டார், படம் முடித்தது போக பாதிநேரம் இமயமலை, பாபா, கயிலாய குகை, ஆன்மீக தவம் என்றுதான் பழியாகக் கிடப்பார். அவர்கூட, மாற்றுச் சமூகங்களை விமர்சனம் செய்து எந்தப்படமும் செய்ததில்லை.

‘தீவிரவாதம் பற்றி ஆப்கானிஸ்தானில் படம் எடுக்கும் போது, அங்கிருப்பவர்களை இஸ்லாமியர்களாகத்தானே காட்டமுடியும்?’ என்பது உலகநாயகன் வாதம்.

தீவிரவாதம் பற்றி படம் எடுக்க ஏன் ஆப்கானிஸ்தான்வரை போகவேண்டும்?.

இன்றைய தேதிக்கு, மனித நாகரிகங்களை, மரபுகளை, நெறிமுறைகளை...

அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு கொத்துக் கொத்தாய் உயிர்களை கொன்று குவித்த,

குவிக்கிற உலக மகா தீவிரவாதம்,

பயங்கரவாதம் நமக்கு மிக அருகே நடந்து கொண்டிருப்பது உலகநாயகன் அறியாததா?


தீவிரவாதம் பற்றி மிக உண்மையாக படம் எடுக்கிற நேர்மையோ, துணிச்சலோ, ஆண்மையோ அவருக்கு இருந்தால், ஏன் சிங்களத் தீவிரவாதம் குறித்து ஒரு சினிமா எடுக்கக் கூடாது?

ஒரு பாவமும் அறியாமல் தூங்கிக் கொண்டிருந்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் பாதிரியாரும், அவரது பச்சிளம் குழந்தைகளும் ஒரிசாவில் மதவெறியர்களால் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் மறந்திருக்க முடியாது.

பஜ்ரங்தளப் பாவிகள் நடத்திய அந்தப் படு பயங்கர சம்பவத்துக்காக, "இந்துக்கள் அனைவருமே பழி பாவத்துக்கு அஞ்சாத பாதகர்கள்" என யாரும் அறிக்கை வெளியிடவில்லை;

சினிமா எடுக்கவில்லை.

எரித்துக் கொன்றவனை ஒரு மத அடிப்படைவாதியாக, பயங்கரவாதியாக மட்டுமே பார்த்தார்களே தவிர, அவனது மதத்துடன் தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை.

மசூதி இடிப்பிலும் அப்படியே. இடித்தவனின் மதத்தவரை யாரும் விரோதக் கண் கொண்டு பார்க்கவில்லை.

அப்படி இருக்கையில், இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி நடைமுறை ஏன்?


அவர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிப்பதை சினிமா சகோதரர்கள் இனியாவது நிறுத்திக் கொள்வது, சமூக ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்கும் நல்லது.

நன்றி : திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்
( yes.krishnakumar@yahoo.in)

கீற்று இதழில்.


கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது.
முழு கட்டுரையும் >>> இங்கே <<<<<<<

UNMAIKAL said...

விஸ்வரூபத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாவிட்டால் 10000 பேருக்கு பிரியாணி- முஸ்லிம் லீக்

சென்னை: விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் காட்சிகள் இல்லாவிட்டால் 10000 ஏழை சகோதரர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்க தயார் என்று தேசிய முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, அப்படத்துக்கு சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த கமல், படத்தை பார்த்த பிறகு மனம் மாறி என்னை சந்தேகப்பட்டதற்கு பிராயசித்தமாக பசித்த பிள்ளைகளுக்கு முஸ்லிம் சகோதரர்கள் பிரியாணி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹிர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"சகோதரர் கமலஹாசன் தயாரித்து நடித்து வெளிவரும் 'விஸ்வரூபம்' படத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான காட்சிகளும் வசனங்களும் உள்ளதாக செய்திகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில்

கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்கள் இப்படத்தைப் பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதில் வருதப்படுவார்கள் என கூறியுள்ளார்.

'ஹேராம்' மற்றும் 'உன்னைப்போல் ஒருவன்' படம் வெளிவந்தபோதும் இப்படியே கூறினார்.

ஆனால் அத் திரைப்படங்களில் இஸ்லாமியர்களை காயப்படுத்தும் வகையில் வசனங்களும் காட்சிகளும் அமைந்திருந்தது.

ஆனால் அச்சமயம் எங்களுக்குள் வலுவான ஒற்றுமை இல்லாததினால் பெரிய அளவில் எங்களின் எதிர்ப்புகளை காட்டவில்லை.

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்துக்குள் மிகப் பெரிய வலுவான ஒற்றுமையும் உணர்வும் வந்திருப்பதால் முஸ்லிம்களை காயப்படுத்தும் வசனங்களோ, காட்சிகளோ எந்த திரைப்படத்தில் இடம் பெற்றாலும் அதை எதிர்க்க தயங்க மாட்டோம்.

'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லாமல் இருந்தால் சகோதரர் கமலஹாசன் கூறுவதுபோல் அவர் முன்னிலையில் ஏழைகள் 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்க இந்திய தேசிய முஸ்லீம் லீக் தயாராக உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2012/12/viswaroopam-row-muslim-league-accepts-166035.html

Unknown said...

//
"மன்னர் அப்துல்லாவின் ஒரு அழகிய வேண்டுகோள்!"//

அப்படியே இந்துக்கள் இருக்குமிடத்தில் பாம் வச்சு கொண்டாடுவதையும் வேண்டுகோளில் சேத்துக்கலையா?

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//அப்படியே இந்துக்கள் இருக்குமிடத்தில் பாம் வச்சு கொண்டாடுவதையும் வேண்டுகோளில் சேத்துக்கலையா?//

மாலேகானில் அப்பாவி முஸ்லிம்கள் இடத்தில் பாம் வைத்து கொன்று விட்டு அதற்கு காரணமாக முஸ்லிம்களையே கைது பண்ணினீர்களே! அது போலவா! ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் இல்லாது போனால் சாது பிரக்யாசிங்கும், புரோகிதும் தேசபக்தர்களாக வலம் வந்து கொண்டல்லவா இருப்பார்கள்?

எவ்வளவுதான் யூத மூளையை கடன் வாங்கி பாம் வைத்தாலும் உண்மை அதிக நாள் உறங்காது ஜெய்சங்கர்.

Unknown said...

கருத்துக்கு நன்றி சகோ ,

தங்களால் முடியும் எனின் அவர்களின் மின் அஞ்சல் முகவரியை தாருங்கள் ....


..சூபி முறை போல சாய் பாபா இப்போ சமாதியாக அருள் புரிகிறார்..விரைவில் வர இருக்கும் இதர பகவான்களும் அருள் புரிவார்களாக ......

Anonymous said...

//ஒரு மரத்தை காண்பித்து ,"இது சாம்பிராணி மரம் னு வாசனை பாக்க சொல்லிருக்காங்க...ஒரு இடத்தில மட்டும் ஜவ்வாது பூசி மக்களை ஏமாத்துறதா கேள்வி//

நீங்கள் குறிப்பிடும் மரம் எதுவோ தெரியவில்லை. எனினும், இலங்கையின் சில இடங்களில் சாம்பிராணி மரங்கள் காணப்படுவது உண்மையே. பொதுவாக சாம்பிராணி மர இனங்கள் அனைத்துக்கும் தாயகம் யெமன் நாடு ஆகும். அத்துடன், அவை பெரும்பாலும் யெமனில் மட்டுமே வளர்கின்றன. எனினும், ஆபிரிக்காவில் மட்டுமே வளரும் பெருமரம் (Baobab) இலங்கையின் மன்னார்ப் பகுதியில் அக்கால அரபு வணிகர்களாற் கொண்டு வந்து நடப்பட்டிருப்பது போன்று, சாம்பிராணி மரமும் யெமனில் இருந்து கொண்டு வந்து இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் போர்வை போன்ற சில இடங்களில் நடப்பட்டுள்ளது. போர்வையில் மாத்திரமே சாம்பிராணி மரங்கள் இலங்கையில் நிறைந்து காணப்படுகின்றன. நீங்களே சென்று அங்குள்ள சாம்பிராணி மரங்களில் ஒன்றை உங்களுக்கு நினைத்த இடத்தில் சிறிது கீறி அல்லது சிறிது வெட்டி அதன் மணத்தை நுகர்ந்து பார்க்கலாம்.

- வள்ளுவன்

suvanappiriyan said...

சகோ விஜய்!

//தங்களால் முடியும் எனின் அவர்களின் மின் அஞ்சல் முகவரியை தாருங்கள் //

http://www.sltjsammanthuraibranch.blogspot.com/

http://www.sltjweb.com/2011/03/08/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-sltj/

இந்த லிங்குகளில் சென்று தேவையான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

//..சூபி முறை போல சாய் பாபா இப்போ சமாதியாக அருள் புரிகிறார்..விரைவில் வர இருக்கும் இதர பகவான்களும் அருள் புரிவார்களாக ......//

தமிழகத்தில் முத்துப் பேட்டை என்ற இடத்தில் 60 அடியில் ஒரு சமாதியை கட்டி வைத்துக் கொண்டு 60 அடி பாவா என்று தமாஷ் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். படிக்கும் காலங்களில் மிக பய பக்தியாக அங்கு நின்றதுண்டு. :-)

தற்போதுதான் மக்கள் உண்மையை விளங்கி சரியான கொள்கையின் பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

suvanappiriyan said...

சகோ வள்ளுவன்!

//நீங்கள் குறிப்பிடும் மரம் எதுவோ தெரியவில்லை. எனினும், இலங்கையின் சில இடங்களில் சாம்பிராணி மரங்கள் காணப்படுவது உண்மையே.//

விஜய்க்கு தேவையான விளக்கங்களை அளித்தமைக்கு நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//சுட்டிகளை சொடுக்கி விடியோ காணுங்கள்

>>>>> 1. தர்கா என்றால் என்ன?

>>>>>2. சமாதியை வழிபடுவது ஏன்?

>>>>> 3. தர்கா ஜியாரத் சுன்னத்தா?

>>>>>4. அவ்லியாக்களை வணங்குவது ஏன்?

>>>>>5. நாகூரில் கபுரை வணங்குவது ஏன்?//

பல விளக்கங்களை பின்னூட்டத்தில் அளித்து பலரது சந்தேகங்களை தெளிவாக்கியமைக்கு நன்றி!

Anonymous said...

ஆரா: பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பார்வை பறிபோயுள்ளது. பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச்சேர்ந்தவரகள், கடந்த நான்கு நாட்களுக்கு கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இதுவரை 5 பெண்கள் உள்பட 20 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்ததாகவும், மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்ததாகவும், மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ். வர்மா கூறினார்.

-dinamalar
10-12-2012

Anonymous said...

சகோ ஜெய் சங்கர்.
"அப்படியே இந்துக்கள் இருக்குமிடத்தில் பாம் வச்சு கொண்டாடுவதையும் வேண்டுகோளில் சேத்துக்கலையா?"
முன்புதான் உங்கள் சரக்குகளை ஊடகங்களில் ஏற்றி விற்றுக்கொண்டு இருந்தீர்கள்.எத்தனை காலம் தான் இப்படி பொய் சொல்லி திரியப்போகிறீர்களோ? அசீமானந்தாவையாவது அவர் தாடி வைத்துள்ளதால் முஸ்லிம் என்று கூறி மக்களை ஏமாற்றினாலும் ஏமாற்றுவீர்கள். பிரக்யா,கர்னல் இவர்களை யார்?என்று மக்களிடம் அறிவிப்பீர்கள்.இவர்களிடம் அப்துல்லாஹ் வந்து நீங்கள் கூறியதுபோல் கூறி கொண்டாடச்சொன்னாரோ? :-)))
kalam

Sathish Murugan . said...

//மாலேகானில் அப்பாவி முஸ்லிம்கள் இடத்தில் பாம் வைத்து கொன்று விட்டு அதற்கு காரணமாக முஸ்லிம்களையே கைது பண்ணினீர்களே! அது போலவா! ஹேமந்த் கர்கரே என்ற நியாயவான் இல்லாது போனால் சாது பிரக்யாசிங்கும், புரோகிதும் தேசபக்தர்களாக வலம் வந்து கொண்டல்லவா இருப்பார்கள்?

எவ்வளவுதான் யூத மூளையை கடன் வாங்கி பாம் வைத்தாலும் உண்மை அதிக நாள் உறங்காது ஜெய்சங்கர்.//
பாருங்க சூனாப்பானா, இந்த காவிங்களுக்கு வந்த மூளைய, நாம் மட்டும் தானே குண்டு வைப்போம், விமானத்தை கடத்தி மோதுவோம்... உங்களால எவ்ளோ காவி குண்டுவெடிப்பை பட்டியலிட முடியும் சூனாப்பானா? மற்றவையெல்லாம்? யூத மூளையை கடன்வாங்குவது நீங்கள் தான்.. ஏன்னா நீங்களும் அவிங்களும் தான் பக்கம் பக்கம், நாங்க எப்போவுமே சொந்த மூளை தான்....