Followers

Tuesday, December 11, 2012

விஞ்ஞானி ஹெர்ஷலின் தவறை சுட்டிக் காட்டிய குர்ஆன்!


வில்லியம் ஹெர்ஷல் என்ற விஞ்ஞானி விண்வெளியை ஆராய்ந்து பல உண்மைகளை கண்டு பிடித்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவருக்கு முன்னால் 1609ல் விஞ்ஞானி கலீலியோ பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் அந்த அளவு விண்வெளித்துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் அந்த காலத்தில் அவ்வளவாக புழக்கத்தில் இல்லாததே காரணம். நமது பால்வழி மண்டலம் வெறும் கண்களுக்குப் புலப்படாத ஏராளமான நட்சத்திரங்கள் நிறைந்த விசாலமான பெருவெளி என்ற வரையில்தான் கலீலியோவால் கண்டு பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் முனனேற முடியவில்லை.

விஞ்ஞானி ஹெர்ஷல் 1783 வாக்கில் தொலைநோக்கியில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி குறிப்பிடப்படும்படியான பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஒருநாள் அவர் ஆகாயத்தின் வட திசைக் கோளத்தில் தமது ஆய்வை மேற்கொண்டிருந்த போது அவரது பார்வை ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. 'அதோ ஆகாயத்தில் ஒரு ஓட்டை. வெளி உலகிற்கு ஒரு ஜன்னல்' எனக் கூக்குரலிட்டார். அடக்க முடியாத ஆச்சரியத்தால் தனது சகோதரியை அழைத்து வந்து தான் கண்ட காட்சியை அவருக்கும் காட்டினார். இதே போல் இவரது மகன் ஜான் என்பவரும் இதைப் போன்று ஆகாயத்தில் கருநிறக் கோடுகளைக் கண்டதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு அறிவுடைய விஞ்ஞானியின் கண்டு பிடிப்பிலும் கோளாறு ஏற்பட்டதையே இது காட்டுகிறது. தான் பார்த்தது விண்வெளியின் ஓட்டை என்ற நம்பிக்கையிலேயே ஹெர்ஷல் இறந்து விடுகிறார்.

அவர் பார்த்தது விண்வெளியில் ஏற்பட்ட ஓட்டைதானா? கண்டிப்பாக இல்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேலும் அதி நவீன தொலை நோக்கிகள் நமக்கு கிடைக்கப் பெறுகின்றன. இதன் மூலம் ஹெர்ஷலின் கண்டு பிடிப்பு தவறு என்ற முடிவுக்கு அறிவியலார் வருகின்றனர். இதைப் பற்றி "New Hand Book Of Heaven" என்ற புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

"for many years these irregular areas in the heavens were thought to be holes in the sky in which there were no stars but we know that the dark regions are silhouttes of unilluminated nebulas that hide the stars behind." Page 93-94

(பல வருடங்களாக ஆகாயத்திலுள்ள இந்த ஒழுங்கற்ற பெரும் பிரதேசங்கள் நட்சத்திரங்களே இல்லாத ஓட்டைகளாக கருதப்பட்டன. ஆனால் அந்த இருண்ட பகுதிகள் நட்சத்திரங்களைப் பின் பக்கம் மறைத்துக் கொண்டிருக்கும் ஒரு வித நெபுலாக்களின் நிழல் உருவங்களே)

பல விஞ்ஞானிகள் வான்வெளியானது பல ஓட்டைகளும் விரிசல்களும் கொண்ட ஒரு சூன்யமான பகுதி என்றே நினைத்து வந்தனர்.ஆகாயத்தில் ஏராளமான இருண்ட நெபுலாக்கள் இருப்பதால் அவை யாவும் ஆகாயத்தில் உள்ள குழிகளும் விரிசல்களும் என்றே பல நூற்றாண்டுகளாக அறிஞர்கள் நம்பி வந்தனர். ஆனால் இந்த விண்வெளியானது எந்த பள்ளங்களோ ஓட்டைகளோ இல்லாது கண கச்சிதமாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

இனி குர்ஆனின் வசனத்துக்கு வருவோம்......

'அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளானனின் படைப்பில் எவ்வித ஏற்ற இறக்கங்களையும் நீர் காண மாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! ஏதேனும் பிளவை நீர் காண்கிறீரா? பிறகு இருமுறை பார்வையைச் செலுத்துவீராக! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மை திரும்பி வந்தடையும்.'
-குர்ஆன் 67:3,4


பிற்காலங்களில் வானத்தில் ஓட்டை இருப்பதாக சிலர் சொல்லக் கூடும். அந்த ஆய்வுகள் பிற் காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டு உண்மை உலகுக்கு வெளிக் காட்டப்படும் என்ற உண்மையை சொல்வது போல் அமைந்துள்ளது இந்த வசனம். இந்த வசனத்தில் கூறப்பட்டது போலவே விஞ்ஞானி ஹெர்ஷல் தனது ஆய்வில் வானத்தில் ஓட்டை இருப்பதாக நினைத்து எழுதி வைத்து விட்டு இறந்தும் விடுகிறார். ஆனால் அதன் பிறகு வந்த விஞ்ஞானிகள் ஹெர்ஷல் தவறாக விளங்கி விட்டார். வானத்தில் எந்த ஓட்டையும் இல்லாது அருமையாக கட்டப்பட்டுள்ளது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றனர்.



அதோடு கடவுளை மறுக்கும் நாத்திகர்களுக்கும் இந்த வசனம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது. முன்பு ஒன்றாக இருந்த கோள்கள் பெரு வெடிப்பு நிகழ்ந்து தனித்தனியாக பிரிந்து விண்வெளியில் சூரியனை மையமாக வைத்து சுழல்வதாக அறிவியல் கூறுகிறது. அவ்வாறு விண்வெளியில் சுழலும் இந்த கோள்களும் அதை தாங்கி நிற்கும் விண்வெளியும் எந்த மேடு பள்ளங்களும் இல்லாமல் ஒரே சீராக எவ்வாறு அமைய முடியும்? இவை எல்லாமே தானாகவே தங்களுக்குள் பேசிக் கொண்டு அவைகளின் பாதையில் அமர்ந்து கொண்டனவா என்ற கேள்விக்கும் விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியவில்லை. இவ்வளவு நேர்த்தியாக இவ்வளவு வழவழப்பாக இந்த பேரண்டத்தை அமைத்தது யாராக இருக்க முடியும் என்று ஹாக்கிங் தனது பல புத்தகங்களில் ஆச்சரியத்தோடு கேள்வி எழுப்புகிறார்.

'வானங்களையும் பூமியையும் அவற்றிற்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.'

'தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்'
-குர்ஆன் 44: 38,39

http://archive.org/details/AstronomyForEveryman
திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்
http://en.wikipedia.org/wiki/A_Brief_History_of_Time
new hand book of heaven

---------------------------------------------------------

டிஸ்கி:இன்று உலக நடப்பில் பிறந்த நாள் கொண்டாடுபவர்களில் முக்கியமானவராக நான் பார்ப்பது ஹேமந்த் கர்கரே என்ற வீரத் திருமகனைத்தான். இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. உலக நடைமுறையில் கூத்தாடிகளுக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்து கூறுபவர்கள் சற்று இவரையும் ஞாபகம் வைத்துக் கொண்டால் நல்லது. தனது உயிர் இந்துத்வ வாதிகளால் போக்கப்படலாம் என்று தெரிந்தும் மாலேகான் குண்டு வெடிப்பு உண்மைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் பிறந்த நாள் உலக வழக்கில் இன்றுதான்.




Hemant Karkare (Marathi: हेमंत करकरे About this sound pronunciation (help·info)) (12 December 1954 – 26 November 2008) was the chief of the Mumbai Anti-Terrorist Squad (ATS). He was killed in action during the 2008 Mumbai attacks after being shot three times in the chest.[2] His bravery was honoured generously with the Ashoka Chakra on 26 January 2009.[3]

Karkare succeeded K. P. Raghuvanshi as the Chief of ATS in January 2008 and was eventually succeeded by Raghuvanshi after he was killed on 26 November 2008. He was credited with solving the serial bombing cases in Thane, Vashi and Panvel, and led the investigation of the 29 September Malegaon blasts.[4]

http://en.wikipedia.org/wiki/Hemant_Karkare

14 comments:

faizeejamali said...

Superb article it also criticise bigbang theory. Excellent article.

rajamelaiyur said...

//உலக நடைமுறையில் கூத்தாடிகளுக்கெல்லாம் பிறந்த நாள் வாழ்த்து கூறுபவர்கள் சற்று இவரையும் ஞாபகம் வைத்துக் கொண்டால் நல்லது
//

உலக வாழ்க்கையில் நாம் எல்லாருமே கூத்தாடிகள் தான்

suvanappiriyan said...

ஃபைஜ் ஜமாலி!

//Superb article it also criticise bigbang theory. Excellent article.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ "என் ராஜ பாட்டை" ராஜா!

//உலக வாழ்க்கையில் நாம் எல்லாருமே கூத்தாடிகள் தான் //

இருக்கலாம்! ஆனால் நமது பிறந்த நாளுக்காக எங்கோ இருக்கும் ஒரு ரசிகன் உணர்ச்சி வசப்பட்டு 'தலைவா!' என்று கத்திக் கொண்டு கைகளை கீறிக் கொள்வதில்லை. சினிமா கூத்தாடிகள் சமூகத்தை கெடுத்து இளைஞர்களை அலைக்கழிப்பது போல் நீங்களோ நானோ எந்த முயற்சியும் எடுப்பதில்லை. தான் பணம் பண்ண வேண்டும் என்ற குறிக்கோளில் சமூகத்தை கூத்தாடிகள் பிளப்பது போல் நீங்களோ நானோ செய்வதில்லை. எனவே நிறைய வித்தியாசம் உள்ளது.

suvanappiriyan said...

” பாபா படுதோல்வி ” என்று நிச்சயமானவுடன், ரஜினி புகழ் பாடுவதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருந்த பத்திரிகைகளும் ரஜினிக்கு சில ஆலோசனைகள் கூறுமளவு தைரியம் பெற்று விட்டனர். செத்த பாம்புதான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கோடம்பாக்கத்திலிருந்தும் கூட சில சூரப்புலிகள் களமிறங்கியிருக்கிறார்கள். ‘ படத்தில் கட்டமைக்கப்படும் புனைவுகள், குறியீடுகள், சொல்லாடல்கள்’ இந்துத்வ அரசியலை முன் நிறுத்துவதாகக் கூறி, பாபா படத்தைக் கட்டுடைப்பதன் மூலம் ரஜினியின் அரசியலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சில அறிஞர் பெருமக்கள் இறங்கி விட்டனர்.

தன்னை அவதார புருசனாகவும் தனது ரசிகர்களைப் பக்தகோடிகளாகவும், தன்னை ஒரு மீட்பனாகவும் தமிழக மக்களைக் கடைத்தேற்றம் பெறக் காத்திருக்கும் மந்தையாகவும் சித்தரிக்கும் துணிச்சல் ரஜினி என்ற காரியக் கிறுக்கனுக்குத் தீடிரென்று வந்து விடவில்லை. ராமதாஸ் இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் துணிந்து அதைச் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்ட அஞ்சிச் சும்மாயிருந்திருந்தால் பரவாயில்லை. பூனையைப் புலியாகச் சித்தரித்தனர். பிறகு “புலி வருது… புலி வருது” என்று எல்லா ஓட்டுக்கட்சிகளும் பத்திரிகைகளும் பெரிதாக ஊதிவிட்டனர். பிறகு தாங்கள் ஊதிப் பெதிதாக்கிய பலூனைக் கண்டு தாமே மிரண்டனர்; வணங்கினர். அந்தப் பலூனின் மீது ஒரு சிறிய குண்டூசியை வைத்துப் பார்க்கும் தைரியம் மட்டும் யாருக்கும் வரவில்லை – மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தவிர.

இதைப் பெருமைக்கு கூறவில்லை. தமிழகத்தின் அருவெறுக்கத்தக்க நிலையை எண்ணி வெட்கி வேதனைப் பட்டுக் கூறுகிறோம். 1995 இல் ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களின் வெறுப்பு உச்சத்தில் இருந்தபோதுதான் பாட்ஷா அரசியல் பேசத் தொடங்கினார். “கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் ” என்ற பாடிக் கொண்டிருந்த நடிகர்களை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும். காரணம் ” ஆன்மீகமும் தேசியமும் இணைந்த பாரதீதய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு உகந்த அரசியல் கண்ணோட்டத்தை ரஜினி கொணடிருந்தார் ” என்பதுதான் – அப்போதே கூறினோம். ” கழிசடை அரசியல் நாயகன் ரஜினி “என்று சிறு வெளியீடு போட்டு 50,000 பிரதிகளைத் தமிழகமெங்கும் பேருந்துகள், கடைவீதிகள், குடியிருப்புக்களில் விற்றோம்; பொதுக்கூட்டங்களில் பேசினோம்.

http://www.vinavu.com/2012/12/12/basha-baba/

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

எனக்கு ஒரு டவுட் சுவனப்பிரியன். ஏன் எதுக்கு எடுத்தாலும் குண்டு வெடிப்பு இந்துத்துவா பண்ணினதுன்னு சொல்லுறீங்க?

சிரியாவில் சாகும் முஸ்லீம்கள் எல்லோரும் இந்துத்துவாவினால் தான் சாகிறார்களா?

Unknown said...

jaisangar,
///சிரியாவில் சாகும் முஸ்லீம்கள் எல்லோரும் இந்துத்துவாவினால் தான் சாகிறார்களா?///

இந்தியாவில் குண்டுவெடிப்பென்றால், ஏன் சிரியாவிற்குத் தாவுகிறீர்கள்?

சிரியாவைவிட, காஷ்மீரில் தினந்தினம் அதிகளவு கொலைகள் இந்திய இராணுவத்தினால் அரங்கேற்றப்படுகின்றன.

suvanappiriyan said...

திரு ஜெய்சங்கர்!

//சிரியாவில் சாகும் முஸ்லீம்கள் எல்லோரும் இந்துத்துவாவினால் தான் சாகிறார்களா?//

அங்கு நடக்கும் மோதல் இன அழிப்பு அல்ல. அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதில் எழுந்த மோதல். இதற்கு பின்னால் அமெரிக்காவும், சீனாவும், ரஷ்யாவும் உள்ளன. அவர்களுக்கு எப்படியாவது hணுவ தளவாடங்களை விற்க ஒரு சந்தை வேண்டும். அதுதான் நடந்து வருகிறது.

ஆனால் நமது இந்தியாவில் நடப்பதோ வேறு வகை. நெற்றியில் பிறந்தவர்கள் தங்கள் மேட்டிமைத்தனத்தை தக்க வைத்தே ஆக வேண்டும். அதற்கு எதிராக இருப்பவை கிறித்தவமும் இஸ்லாமும். எனவே தான் இந்துத்வா வாதிகள் முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் குறி வைக்கின்றனர். இந்த இரு பிரிவினரும் இந்துத்வாவை ஏற்றுக் கொண்டு அனைத்து தெய் வங்களையும் வணங்குகிறோம். பார்ப்பனர்களை உயர்வாக மதிக்கிறோம் என்று அறிக்கை விட்டால் அன்று முதல் இந்திய முஸலிம்கள் அனைவரும் தேச பக்தி மிக்கவர்கள் என்று தின மலர் தலையங்கம் எழுதும். சோவும் தலையங்கம் எழுதுவார். இது தான் உண்மை.

Anonymous said...

இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகட்டிய பகுதியில் ஜீவனாலோக சபை என்ற கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையில் வந்த கூட்டம் ஒன்றினால் ஞாயிறன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதெனக் குற்றம்சாட்டபடுகிறது.

காலை வேளையில் தேவாலயத்தில் பூசை நடந்துகொண்டிருந்த நேரத்தில் பௌத்த பிக்குகள் சுமார் 80 பேர் தலைமையில் வந்த ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் ஒன்று தேவாலயத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அங்கிருந்த வாகனங்களுக்குத் தீவைத்தும் தேவாலயத்துக்குள் இருந்த கண்ணாடிகளையும் பிற பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர் என்று பெயர் வெளியிட விரும்பாத தேவாலய பிரதிநிதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது பெயர் இங்கு வெளியிடப்படவில்லை.
தேவாலய பிரதிநிதியின் செவ்வி


தாக்குதலின்போது தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், பலர் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 6 லட்சம் அளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

11 வருடங்களாக இத்தேவாலயம் வீரகட்டிய பகுதியில் இருந்துவருகிறது என்றாலும் பௌத்த பிக்குகளின் அனுமதி பெற்றே அது செயலாற்ற முடியும் என்பதுபோன்ற அழுத்தங்களை அது சமீபகாலமாக எதிர்கொண்டு வருகிறது என்று அந்த தேவாலயத்தின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இந்த பின்னணியில் ஞாயிறு காலை நடந்த தாக்குதலைப் பொலிசார் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும் சேதங்கள் மேலும் அதிகமாகாமல் பொலிசார் கட்டுப்படுத்தினர் என்று அவர் கூறினார்.

சம்பவ நேரத்தில் பொலிசாரும், இராணுவத்தினரும் இருந்தனர் என்றபடியால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேவாலய நிர்வாகம் தற்சமயம் இத்தாக்குதல் சம்பந்தமாக எவ்வித சட்ட நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

-bbc

Anonymous said...

வீரக்கெட்டிய என்பது மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர். அங்கேயா இப்படி? அப்படியானால் அவர் எதற்கு அதிபராக இருக்கிறார்? சும்மா தேங்காய் துருவுவதற்காகவா?

- வள்ளுவன்

Anonymous said...

///வீரக்கெட்டிய என்பது மகிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊர். அங்கேயா இப்படி? அப்படியானால் அவர் எதற்கு அதிபராக இருக்கிறார்? சும்மா தேங்காய் துருவுவதற்காகவா?///


பௌத்தர்களுக்குத்தான் மஹிந்த மாமா அதிபர்.

மற்ற இன, மத மக்கள் எக்கேடு கேட்டால் என்ன?

Sathish Murugan . said...

ஹி ஹி ஹி ஹி... //அங்கு நடக்கும் மோதல் இன அழிப்பு அல்ல. // வொய் சூனா பானா வொய்? தடுமாற்ற புத்தி தடுக்கி விழும். ஈழத்தில் எம் தமிழர்களை சிங்கள நாய்கள் அழித்த போது மனம் மகிழ்ந்த சூனா பானாவுக்கு காஷ்மீர் மாத்திரம் சுடுகிறதோ? ஏன் உலகம் முழுவதுமே உங்களை கொள்ளைக்காரர்களாகவும் தீவிரவாதிகளாகவும் பார்ப்பதன் மூலம் என்ன சூனாப்பானா? (இஸ்லாத்தை கண்டு என ஜல்லி அடிக்காதீர்....)

suvanappiriyan said...

//தடுமாற்ற புத்தி தடுக்கி விழும். ஈழத்தில் எம் தமிழர்களை சிங்கள நாய்கள் அழித்த போது மனம் மகிழ்ந்த சூனா பானாவுக்கு//

நான் எங்கு மனம் மகிழ்ந்தேன். சிங்களர்களின் வன்முறையை கண்டித்து பல பதிவுகள் எழுதியுள்ளேனே!

நல்ல மன நல டாக்டரை பாரும் ஓய்....