Followers

Saturday, December 15, 2012

அமெரிக்க துப்பாக்கி சூடு நமக்கு தரும் படிப்பினை!

அமெரிக்க துப்பாக்கி சூடு நமக்கு தரும் படிப்பினை!



அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 27 என்று மற்றொரு செய்தி கூறுகிறது. துப்பாக்கிதாரி கொல்லப்பட்டு விட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.




5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பராக் ஒபாமா தனது வருத்தங்களையும், அனுதாபங்களையும் வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," எமது இதயங்கள் நொறுங்கிவிட்டன " எனக் கூறியுள்ளார்.

ஆடம் லான்சா என்ற 20 வயது இளைஞன் செய்த கொடூர சம்பவமே இது. இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பள்ளியின் ஆசிரியராக பணி புரிந்த லான்சாவின் தாயும் இறந்துள்ளது அடுத்த கொடுமை. அமெரிக்க முழுக்க இது போன்ற கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்நாட்டு ஆள்வோரை கதி கலங்க வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்கிறேன் என்று மல்லு கட்டும் அமெரிக்கா தனது நாட்டை ஏனோ கவனிப்பதில்லை. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இந்த எண்ணிக்கை தினமும் பெருகி வருகிறது.




ஒரு வருடத்தில் துப்பாக்கி சூட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை:

பினலாந்து - 17

ஆஸ்திலேலியா - 35

இங்கிலாந்து - 39

ஸ்பெயின் - 60

ஜெர்மனி - 194

கனடா - 200

அமெரிக்கா – 9484

http://www.bradycampaign.org/xshare/Facts/2010-09_GBA_Overview_FINAL.pdf



(துப்பாக்கி சூடு நடத்திய ஆடம் லான்சாவின் இளமைக் கால புகைப்படம். கள்ளம் கபடமற்ற இந்த பாலகனை கொலைகாரனாக மாற்றியது அமெரிக்க வாழ்வு முறையே!)

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக்கில் வாழும் அமெரிக்க படையினர் தினமும் ஒரு வித அச்சத்திலேயே வாழ்கின்றனர். எந்த நேரத்தில் நமது உயிர் பிரியுமோ என்ற பயத்தில் வாழ்வதால் மன சிதைவுக்கு ஆளாகின்றனர். இங்கிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தொட்டுள்ளது. இந்த மனச்சிதைவு முற்றி முடிவில் சமூகத்தின் மேல் வெறுப்புற்று கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுட ஆரம்பித்து விடுகின்றனர். நாத்திகத்தின் தாக்கமும் இந்த மக்களை அதிகம் மன நோயாளிகளாக ஆக்குகிறது. உண்மையான இறை பக்தியில் மனம் அமைதி அடைவதை பலர் உணர்வதில்லை.

துப்பாக்கியின் உரிமத்தை ஒழித்தால் குற்றம் குறையும் என்பவர்கள் அவன் வேறு வழியை நாடினால் என்ன செய்வார்கள். அவனுக்கு தேவை மன அமைதி. அதைக் கொடுத்தாலே பல பிரச்னைகள் முடிவுக்கு வரும்.

ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, பாலஸ்தீன், மற்றும் ஆப்ரிக்க நாடுகள் என்று பல நாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை நிறைய சம்பாதித்துள்ளது அமெரிக்கா. அதன் பலனாக தனது நாட்டு அப்பாவி மக்களை தினமும் பலி கொடுத்து வருகிறது. ஆயுத விற்பனைக்காக மற்ற நாட்டில் மூக்கை நுழைப்பதை குறைத்துக் கொண்டு நாட்டு மக்களின் மன அமைதிக்கு என்ன வழி என்பதை அதிபர் ஒபாமா யோசித்தால் அதுவே நிரந்தர தீர்வாகும்.

துப்பாக்கி சூட்டில் இறந்த அனைத்து அப்பாவி உயிரிகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

துப்பாக்கிச் சூட்டில் இறந்த இளம் பிஞ்சுகளும் ஆசிரியர்களும் பெயர், வயது வாரியாக...

Charlotte Bacon, 6
Daniel Barden, 7
Olivia Engel, 6
Josephine Gay, 7
Ana Marquez-Greene, 6
Dylan Hockley, 6
Madeleine Hsu, 6
Catherine Hubbard, 6
Chase Kowalski, 7
Jesse Lewis, 6
James Mattioli, 6
Grace McDonnell, 7
Emilie Parker, 6
Jack Pinto, 6
Noah Pozner, 6
Caroline Previdi, 6
Jessica Rekos, 6
Avielle Richman, 6
Benjamin Wheeler, 6
Allison Wyatt, 6
Rachel Davino, 29
Teacher
Dawn Hochsprung, 47
School principal
Nancy Lanza, 52
Mother of gunman
Anne Marie Murphy, 52
Teacher
Lauren Rousseau, 30
Teacher
Mary Sherlach, 56
School psychologist
Victoria Soto, 27
Teacher



---------------------------------------------------------

குறிஞ்சி: மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை: காடும் காடு சார்ந்த இடமும்

மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்:கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை: மணலும் மணல் சார்ந்த இடமும்

தமிழகம்: இருளும் இருள் சார்ந்த இடமும்.

வருங்காலங்களில் பாடப் பபுத்தகங்களில் ஆறாவதாக தமிழகத்தையும் சேர்க்கலாம் இல்லையா?


13 comments:

வலையுகம் said...

உலக மக்களை பற்றியும் குழந்தைகளை பற்றி அமெரிக்கா போலி அக்கறை கொண்டிருக்கும் இவ்வேளையில்

நாம் அமெரிக்க குழந்தைகளை பற்றி உண்மையான அக்கறை கொண்டிருக்கிறேம் என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது வாழ்த்துகள்

semmalai akash said...

குழந்தைகள் என்று சொல்லும்போது எல்லோருடைய மனமும் பதைக்கிறது, அருமையான விளக்கத்துடன் உள்ளது உங்களது பதிவு வாழ்த்துகள்.

suvanappiriyan said...

சகோ ஹைதர் அலி!

//நாம் அமெரிக்க குழந்தைகளை பற்றி உண்மையான அக்கறை கொண்டிருக்கிறேம் என்பதை உங்கள் பதிவு உணர்த்துகிறது வாழ்த்துகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Anonymous said...

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - காவி தீவிரவாதி ராஜேஷ் கைது...............!!

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தீவிரவ
ாதி ராஜேஷைத் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி மற்றும் பாகிஸ்தானிலுள்ள லாகூர் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அரியானா மாநிலம் பானிப்பட் அருகே பாகிஸ்தான் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி ரயில் பயணிகள் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்தக் காயமுற்றனர். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
இந்தக் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற தீவிரவாதியை மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த ராஜேஷ் சவுதாரி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்ச் சன்மானம் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு நடந்த காலத்தில், இந்த நாசகார வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில், இந்துத்துவ காவி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாறி, அதில் ஈடுபட்டவர்களாக சுவாமி அசிமானந்தாவையும் மேலும் நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளையும் அடையாளம் காட்டியது தேசிய புலனாய்வு அமைப்பு.

இதனைத் தொடர்ந்து சுவாமி அசிமானந்தா வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகே, இந்தக் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட உண்மயான தீவிரவாதிகள் யாரென்பது வெளியாக ஆரம்பித்தது.

suvanappiriyan said...

சகோ செம்மலை ஆகாஷ்!

//குழந்தைகள் என்று சொல்லும்போது எல்லோருடைய மனமும் பதைக்கிறது, அருமையான விளக்கத்துடன் உள்ளது உங்களது பதிவு வாழ்த்துகள்.//

ஒனறுமறியாத குழந்தைகள் எனும் போது மனது மேலும் கனக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அஸ்மா said...

டிவியில் இந்த செய்தியைப் பார்த்ததுமுதல் மனதிற்கு ரொம்ப கஷ்டமாகிவிட்டது சகோ :( ஏன் அங்கே மட்டும் இது தொடர் கதையாக உள்ளது? சிந்தித்தால் உங்களின் இந்த‌ வரிகளே பதிலாக கிடைக்கும்.

//கள்ளம் கபடமற்ற இந்த பாலகனை கொலைகாரனாக மாற்றியது அமெரிக்க வாழ்வு முறையே!//

அது எங்கே அவர்களுக்கு புரியப் போகிறது? தன் நாட்டு அப்பாவி உயிர்கள் பழியாகும்போது மட்டும் வருத்தப்பட்டு, பிறகு அதேபோன்ற அப்பாவி உயிர்களை இன்னொரு பக்கம் கொன்று குவிப்பதில் கவலைப்படுவதில்லை அவர்கள். ஆனால் நமக்கு எல்லா உயிர்களும் சமமானவையே! அந்த பிஞ்சுகளின் முகங்களைப் பார்க்கும்போது மனம் கலங்குகிறது :(

Unknown said...

சுவனம்,

அப்படியே சிரியாவில் இறந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்காவும் ஒரு பதிவு போடுங்க

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

முதலில் இறந்த அந்த அப்பாவி குழந்தைகளுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.


அருமையா சொல்லி இருக்கீங்க சகோ.தன நாட்டு மக்களுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகலை கண்டுகொள்ளாமல் உலகில் அமைதியை ஏற்ப்படுத்த போகிறோம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கு இது ஒரு நல்ல படிப்பினை.இனியாவது இந்த அமெரிக்க அரசாங்கம் திருந்தி தன நாட்டு மக்களின் பிரச்சனைகலுக்கு தீர்வு காண முயற்சி செய்யவேண்டும்.

suvanappiriyan said...

சகோ அஸ்மா!

//அது எங்கே அவர்களுக்கு புரியப் போகிறது? தன் நாட்டு அப்பாவி உயிர்கள் பழியாகும்போது மட்டும் வருத்தப்பட்டு, பிறகு அதேபோன்ற அப்பாவி உயிர்களை இன்னொரு பக்கம் கொன்று குவிப்பதில் கவலைப்படுவதில்லை அவர்கள். ஆனால் நமக்கு எல்லா உயிர்களும் சமமானவையே! அந்த பிஞ்சுகளின் முகங்களைப் பார்க்கும்போது மனம் கலங்குகிறது :(//

அமெரிக்க அரசாங்கம் இனியாவது தனது வெளியுறவு கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்து நாட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இஸ்ரேலோடு கூட்டு வைத்திருக்கும் காலமெல்லாம் அமெரிக்கா அழிவை நோக்கியே போகும் என்பதை இனியாவது உணர்வார்கள். அல்லது அந்த மக்கள் தங்கள் அரசாங்கத்துக்கு உணர வைக்க வேண்டும்.

suvanappiriyan said...

ஜெய்சங்கர்!

//அப்படியே சிரியாவில் இறந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்காவும் ஒரு பதிவு போடுங்க//

அங்கு நடப்பது ஆட்சியில் யார் அமர்வது என்தை வைத்து. அது உள் நாட்டு கலவரம். சரியான தலைமை அமைந்தவுடன் அமைதி திரும்பி விடும்.

தர்மபுரி, மதுரை கலவரங்கள் எதனால் ஏற்படுகின்றன. அதற்கு உங்களைப் போன்ற மேல் சாதிகாரர்கள் முன்பு என்னவெல்லாம் செய்தீர்கள். இந்த கலவரம் தீர என்ன வழி என்று கொஞ்சம் யோசித்தால் புண்ணியமாக போகும்.

suvanappiriyan said...

சலாம் சகோ முஹம்மத்!

//அருமையா சொல்லி இருக்கீங்க சகோ.தன நாட்டு மக்களுக்கு ஏற்ப்படும் பிரச்சனைகலை கண்டுகொள்ளாமல் உலகில் அமைதியை ஏற்ப்படுத்த போகிறோம் என்று சொல்லிக் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கு இது ஒரு நல்ல படிப்பினை.இனியாவது இந்த அமெரிக்க அரசாங்கம் திருந்தி தன நாட்டு மக்களின் பிரச்சனைகலுக்கு தீர்வு காண முயற்சி செய்யவேண்டும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Unknown said...

//இனிமேலாவது குண்டு வைத்து முஸ்லிம்களை பலிகடா ஆக்காமல் சாதி வேற்றுமைகளை களைய பாடுபடவும்//

சாதி வேற்றுமை எங்கே இருக்கிறது சுவனம்?

அது மக்களின் மனதில் தான் இருக்கு. பல்லவன் பஸ்ஸில் ஏறி போய் ஜாதி தெரிஞ்சு தான் பக்கத்துல இருக்குறவன் சீட்டுல உக்காருவீங்களா?

முதல்ல ஷியா, சன்னி வேறுபாட்டை அகற்றூங்கள்.

suvanappiriyan said...

//அது மக்களின் மனதில் தான் இருக்கு. பல்லவன் பஸ்ஸில் ஏறி போய் ஜாதி தெரிஞ்சு தான் பக்கத்துல இருக்குறவன் சீட்டுல உக்காருவீங்களா?//

பல்லவன் பஸ்ஸில் ஜாதி பார்க்காமல் உடகாருகிறீர்கள். ஓகே. ஆனால் கோவிலில் ஏன் சாதி பார்க்க வேண்டும்? புரோகிதராக பார்ப்பணர்கள் மட்டும் தான் வர வேண்டும் என்று ஏன் அடம் புடிக்க வேண்டும்? கோவில் கருவறைக்கு ஒரு தாழ்த்தப்பட்டவன் போனால் அந்த சாமி அங்கிருந்து ஓடி விடுமா? எல்லா சாதியினரும் அர்ச்சராகவதற்கு கோர்ட்டில் சென்று ஸ்டே ஆர்டர் ஏன் வாங்குகிறீர்கள்?

இதனால் வெறுப்புற்று அவன் இஸ்லாத்தை நாடினால் அங்கும் இந்துத்வா வாதிகள் வந்து மதம் மாறியவர்களை சிரமப்படுத்துகிறீர்களே! அவர்களுக்கு என்னதான் வழி. நீங்களே சொல்லுங்கள்.

//முதல்ல ஷியா, சன்னி வேறுபாட்டை அகற்றூங்கள்.//

இஸ்லாத்தை சரியாக விளங்கியவர்கள் மத்தியில் இந்த வேறுபாடு தற்போது அகன்று வருகிறது.