Followers

Monday, May 12, 2014

பிறந்த குழந்தை கையில் குர்ஆனா? இது உண்மைதானா?





சகோதரர் யாழாழி!

//May allah bless you for your valuable posts with authentic references.//

எல்லா புகழும் இறைவனுக்கே! அலுவலக வேலை முடிந்தவுடன் சினிமா போன்ற பொழுது போக்கு சாதனங்களில் மூழ்காமல் நான் அறிந்து கொண்ட விபரங்களை பதிவுகளாக தந்து கொண்டிருக்கிறேன். இந்த பதிவுகள் மூலம் ஒரு நபராவது உண்மை மார்க்கத்தை விளங்கி வந்தால் நான் எடுத்த முயற்சிகளுக்கு ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்கும். அதுவும் அல்லாமல் இதற்காக மறுமையில் எனக்கு கிடைக்கும் பலன்களையும் கணக்கில் கொண்டே இது போன்ற பதிவுகளில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி! இறைவன் உங்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வானாக!!

//Could you please research the authenticity of this and comment on this on your site for all your followers and viewers to know.//

குர்ஆனானது முகமது நபிக்கு ஒலி வடிவில் அருளப்பட்டது. தற்போதுள்ள புத்தக வடிவில் நமக்கு தரப்படவில்லை. நமது வசதிக்காக இது போன்று தாள்களில் அச்சடித்து படித்து வருகிறோம்.

அகில உலகத்தையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனுக்கு ஒரு குழந்தை கையில் சிறிய குர்ஆனோடு வெளியாக்குவது என்பது மிக சாதாரணமே! ஆனால் அதற்கு தற்போது எந்த அவசியமும் ஏற்படவில்லை. ஏற்கெனவே 'குர்ஆனை நாமே பாதுகாப்போம்' என்று இறைவன் குர்ஆனிலேயே அறிவிக்கிறான். அதன்படி புதிதாக பிறக்கும் குழந்தை கையில் கொடுத்தனுப்ப வேண்டிய எந்த அவசியமும் தற்போது ஏற்படவில்லை. அந்த குழந்தையின் தாயார் தன்னை உலகம் முழுக்க பிரபலப் படுத்திக் கொள்வதற்காக செய்யப்பட்ட ஒரு ஏமாற்று வேலையாகவே இதனை நான் பார்க்கிறேன். அந்த குர்ஆனின் பக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் எந்த வருடத்திய குர்ஆன்: அது எந்த நாட்டில் அச்சடிக்கப்பட்டது என்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். முகமது நபியிடம் பைஅத் செய்தது ஒரு மரத்தடியின் கீழ் என்பது நாம் அறிவோம். அந்த மரத்தை பிற்காலத்தில் மக்கள் புனிதமாக கருத ஆரம்பித்தனர். பின்னால் வந்த கலீபா இதனை செவியுற்று அந்த மரத்தையே வெட்டி வீழ்த்தியதை நாம் வரலாறுகளில் பார்க்கிறோம்.

அதிலும் 'குர்ஆனை முழுமைபடுத்தி விட்டேன்' என்றும் இறைவன் கூறுகிறான். புதிதாக எந்த சட்டமும் இனி வரப் போவதில்லை. அவ்வாறு குழந்தை கையில் குர்ஆன் வந்தால் அதனை இறைவன் நம் கையில் இருக்கும் குர்ஆனிலேயே குறிப்பிட்டு இருப்பான். மீன் வயிற்றில் 'அல்லாஹ்' என்ற எழுத்து. ஆடு வயிற்றில் 'முஹம்மது' என்ற அரபி எழுத்து என்று தினமும் நாம் இணையத்தில் பார்க்கிறோம். இது போன்ற மூடப்பழக்கங்களுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. உண்மையிலேயே ஒரு நபர் குர்ஆனுக்கு மரியாதை செலுத்துபவராக இருந்தால் அந்த குர்ஆன் என்ன கட்டளையிடுகிறதோ அதன்படி தனது வாழ்நாளை கொண்டு செல்ல வேண்டும். அதை விடுத்து இது போன்ற பொய் செய்திகளை நாம் நம்ப ஆரம்பித்தால் நமது நம்பிக்கையே நாளடைவில் சிதைந்து விடும். எனவே இது போன்ற பொய் செய்திகளை நம்புவதில் இருந்து இறைவன் நம்மை காப்பானாக!

//My wife is the one who intereduce your blog to me and she ask me to print most of the articles relating to Islam and science. She conveys her salamis to you and your family.//

உங்களின் மனைவிக்கு எனது சலாத்தையும் வாழ்த்துக்களையும் கூறுங்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதிய பல அறிவியல் பதிவுகள் குர்ஆனோடு சம்பந்தப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதனையும் படித்து பாருங்கள். உபயோகமாக இருக்கும். இது போன்ற உணர்வு பூர்வமான கடிதங்கள் தான் என்னை நேரம் ஒதுக்கி பிளாக்கில் எழுதவும் தூண்டுகிறது. தொடர்ந்து எனது எழுத்துக்களை படித்து கருத்துக்களையும் பதிந்து வாருங்கள்.

2 comments:

Anonymous said...

We read quraan in Arabic to preserve the real meaning of what was told by Mohamed (SAW). It doesn't mean that God doesn't reveal in other languages. God communicates to us in an universal language, which doesn't require letters, or sounds. It's a thought process.

I see when people show some natural markings in animals which resembles the Arabic word Allah as miracle, I worried about their ignorance about God. For the same reason God has sent Mohammed(SAW) to bring out the community from the darkness. But they are keep going back there.

Priests who stoke these claims and uphold this as Miracle brings more harms to the religion and society. They do it for Money, Authority and Fame. We need to identify and discourage them. This is what Tawheed Jamad is doing today in Tamil Nadu.

Thanks for the explanation.

-Jamal Sheik Abdulla

Meezan - தராசு said...

Dear brother,
Thank you for your explanation. Now i am posting a link which deals with "Kalki avatar according to hindu vedas"
If you could gothrough and post your analytical view for all to know this important truth.

https://sites.google.com/site/amininbox/home2