Followers

Saturday, May 03, 2014

மோடி ஒரு கிரிமினல் குற்றவாளி- பூரி சங்கராச்சாரியார்



Puri Shankaracharya Swami Adhokshjanand Devtirath on Thursday said that he would go to Varanasi to ask religious leaders to oppose Narendra Modi, whom he held responsible for the 2002 riots in Gujarat.

Speaking to reporters here, the Shankaracharya claimed that Mr. Modi was trying to mislead the people in Varanasi from where he is contesting the Lok Sabha elections.

http://www.thehindu.com/elections/loksabha2014/north/puri-seer-to-campaign-against-modi-in-varanasi/article5966260.ece

புது டெல்லி: "பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாரணாசி தொகுதியில் போட்டியிடும் நரேந்திரமோடி ஒரு மோசமான கிரிமினல் குற்றவாளி. அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போகிறென்" என பூரி சங்கராச்சாரியார் அதிரடியாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

பூரி சங்கராச்சாரி சுவாமி அதோக்ஸ் ஜனானந்த் தேவிராத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே வன்முறை வெடித்தது. 2002 குஜராத் வன்முறைகளுக்கு நரேந்திர மோடிதான் பொறுப்பு. வாரணாசியில் போட்டியிடும் மோடி ஒரு மோசமான கிரிமினல் குற்றவாளி. அவரை அம்பலப்படுத்த வாரணாசி தொகுதிக்குப் போய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்யவில்லை.

ஆனால் இந்த நாட்டில் மதச்சார்பற்ற கட்சிகள் வெல்ல வேண்டும் என்பதுதான் என் இலக்கு. எல்லா பாவங்களையும் செய்திருக்கிறார் மோடி. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் வெளியிடும் அறிக்கைகளால் நாட்டில் பதற்றமான நிலைமைதான் நீடிக்கிறது. மதத்தின் பெயரால் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். சமாஜ்வாடி கட்சியின் ஆஸாம் கான் மீது தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் தடைகளை நீக்க வேண்டும்."

மேற்கண்டவாறு பூரி சங்கராச்சாரி கூறியுள்ளார்.

இந்துக்களின் ஆன்மீகத்தலைவராக போற்றப்படும் சங்கராச்சாரியார் ஒருவர் இவ்வளவு வெளிப்படையாக மோடியை மோசமான கிரிமினல் என அறிவித்து அவருக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி ஒரு டீ வியாபாபாரி என்பதெல்லாம் பொய். அவர் மிகப்பெரும் கோடீஸ்வரன் - துவாரகா சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந் சரஸ்வதி

சங்கராச்சாரியார்கள் அனைவரும் இன்று மோடிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது தேர்தலில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தேர்தல் முடிவில் தெரிய வரும். இப்போவாவது உண்மையை இந்த ஆன்மீகத் தலைவர்கள் உணர்ந்தார்களே!


No comments: