Followers

Tuesday, November 20, 2018

சேத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 500 குடும்பம்!

3 நாட்களாக தண்ணீர் இல்லாமல் தவித்த திருச்சி சேத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 500 குடும்பம்!
- தாகத்திற்கு குடிநீர் லாரி மூலம் தண்ணீர் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம்!
கஜா புயலில் ஏற்ப்பட்ட பாதிப்பால் திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுக்கா பகுதி முத்தாழ்வார்பட்டி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள சாத்தாம்பாட்டி
சேத்துப்பட்டி,வடுகபட்டி,சொரியம்பட்டி
ஆகிய நான்கு ஊர்களிலும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் கூட தண்ணீர் இல்லாமலும் சுமார் 3 நாட்களுக்கு மேலாக சிரமத்தில் இருந்த 1,000க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தார்கள் பாதிப்படைத்திருந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் சகோதரர் ஒருவரின் மூலம் TNTJ திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தவுடன் உடனடியாக அந்த பகுதியின் கள நிலவரத்தையும் சூழலையும் அருகாமையில் உள்ள 'வளநாடு கிளை' நிர்வாகத்தை அனுப்பி ஆய்வு செய்து உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு முயற்சி எடுத்து அல்லாஹ்வின் மாபெரும் அருளால் ,
* குடிநீர் லாரி மூலம் தண்ணீர் (8,000 லிட்டர்)
* மெழுகுதிரி
* கொசுபத்தி
* தீப்பெட்டி
* உணவு(150 நபர்களுக்கு) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆகியவை இன்று (20/11/18) காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை அந்த பகுதிக்கு சென்று நேரிடையே வழங்கப்பட்டது.
குறிப்பு : இறைதிருப்தியை எதிர்ப்பார்த்து நம் ஜமாஅத்தின் சார்பில் செய்யப்பட்ட இவ்வுதவி குறித்து அந்த பகுதி கிராம மக்கள் தெரிவித்த கருத்தும் , பாதிப்பில் இருந்து மீண்ட அவர்களின் ஆதங்கங்களும் உணர்வுகளும் வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.
இதற்காக உழைத்த அனைத்து கொள்கை சகோதரர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!




No comments: