'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
சிலர் தொழுகைக்கு
தயாராகும் போது அளவுக்கதிகமாக தண்ணீரை வீணாக்குவதை பார்க்கிறோம். பெரும் மாநாடு, ஹஜ், உம்ரா போன்ற நெருக்கமான இடங்களில் மற்றவர்களின் தேவை மற்றும் நேரத்தை அறிந்து
சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
இந்த முதியவர் ஒரு குவளை தண்ணீரில் முகம் கை கால்களை
கழுவிக் கொள்வதைப் பாருங்கள். இதனை நாமும் நம் வாழ்வில் பின் பற்றி மற்றவர்களுக்கு
இடைஞ்சல் தராமல் நடந்து கொள்வோம்.
குளியலறைக்குச் சென்று குழாயை
திறந்து வைத்துக்கொண்டு குளிப்பதால் எந்தளவு நீரை பயன்படுத்தி குளிக்கிறோம் என்பதை
அறியாமல் இருந்து வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் குளிப் பதற்காக எந்தளவு நீரை
பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.
அபூஜஃபர்(ரஹ்)
அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஜாபிர்(ரழி) அவர்கள் கூறினார்கள். உன் தந்தையின்
சகோதரரின் புதல்வர் வந்து பெருந் துடக்கிற்காகக் குளிப்பது எப்படி? என்று
கேட்டார். அதற்கு நான் நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி அதை தமது
தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்று வார்கள் என்று சொன்னேன்.
அதற்கு ஹசன் அவர் கள் நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத்
தண்ணீர் போதாதே) என்று கேட்டார். அதற்கு நான் நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக
முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந்ததே) என்று
கூறினேன். நூல்: புகாரீ : 256
நீளமாக முடி வைத்திருந்த நபி(ஸல்) அவர்களே கடமையான
குளிப்பின்போது தலையை கழுவு வதற்கு சுமார் மூன்று கை நிறையத் தண்ணீரையே
பயன்படுத்தியுள்ளார்களே எனும்போது, தண்ணீர்
பற்றாக் குறையின்போதும் கூட நாம் தலையை கழுவுவதற்கு மட்டுமே பல லிட்டர் தண்ணீரை
பயன்படுத்துவது முறைதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
பல குழந்தைகளின் உயிரை
காப்பாற்றிய கஃபில் அஹமது கான்!
கோரக்பூரில் உள்ள
மருத்துவமனையில் ஆகஸ்ட் 10 அன்று ஆக்சிஜன் பைப்
லைன் 'பீப்... பீப்' என்ற அபாய ஒலியை எழுப்பியது. இரண்டு மணி நேரமே வேலை
செய்யும் என்பதை அங்குள்ள மருத்துவர்களும் நர்ஸூகளும் இதனை அறிந்திருந்தனர். என்ன செய்வதென்று
தெரியாமல் திகைத்து நின்றனர்.
அதே நேரம் குழந்தைகள்
வார்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத டாக்டர் கஃபில் அஹமது கான் நிலைமையை புரிந்து
கொண்டு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டுள்ளார். பழைய பாக்கியை
கொடுத்தாலே புதிதாக சிலிண்டர் தருவோம் என்று கூறி விட்டனர். நிலைமையை புரிந்து கொண்டு
சமயோஜிதமாக தனது காரில் இரண்டு மருத்துவ மனை ஊழியர்களை அழைத்துக் கொண்டு மூன்று சிலிண்டர்களை
தனியார் மருத்துவமனையிலிருந்து வாங்கி வந்தார். வரும் வழியிலேயே செல் போன் மூலமாக பைப்
லைனை தயாராக வைக்கும் படி மருத்துவமனை ஊழியர்களிடம் சொல்லியுள்ளார். அதன்படி உடன் ஆக்சிஜன்
பொருத்தப்பட்டு செயல்பட தொடங்கியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பல குழந்தைகளை
அந்த நேரம் உயிர் பிழைத்தன். ஆனால் அவர் கொண்டு வந்தது அரை மணி நேரம் வரையே தாங்கும்.
பிறகு வேகமாக திரும்பி
சென்று மேலும் 12 சிலிண்டர்களை தனது வாகனத்தில் சுமந்து வந்து பல குழந்தைகளை காப்பாற்றியுள்ளார்.
ஃபைஸாபாத்திலிருந்தும் பல சிலிண்டர்களை வரவழைத்துள்ளார். அனைத்து செலவுகளையும் தனது
சொந்த செலவிலேயே செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் வழக்கமாக ஆக்சிஜன்
அனுப்பும் நிறுவனம் உடனடி பணம் கொடுத்தால் மேலும் சிலிண்டர்களை அனுப்புவதாக கூறியது.
உடனே அஹமது கான் தனது ஏடிஎம் கார்ட் மூலமாக 10000 ரூபாய் எடுத்து அந்த நிறுவனத்திடம்
அளித்தார். உடன் பல சிலிண்டர்கள் மருத்துவமனை நோக்கி வந்தன. இறந்து கொண்டிருந்த பல
குழந்தைகளின் உயிர் இவரது சமயோஜித முயற்சியால் காப்பாற்றப்பட்டது.
'மற்ற மருத்துவர்கள்
எல்லாம் நமக்கென்ன வந்தது என்று அலட்சியமாக இருந்த போது டாக்டர் அஹமது கான் தனது சொந்த
முயற்சியில் பல உயிர்களை காப்பாற்றியது வாழ்வில் மறக்க முடியாதது' என்று கவுரவ் திரியாதி என்பவர் செய்தியாளர்களிடம்
கூறினார்.
இந்துத்வாக்கள் கூறுவது போல் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தால்
இன்னும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் வாழ்வை முடித்திருக்கும். 'பாரத் மாதா கீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் வாயளவில் சொல்வதல்ல தேசபக்தி. நாட்டு மக்களை காப்பதில் இருக்க வேண்டும்.
அதுதான் உண்மையான தேசபக்தி.
இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!
கரூர் மாவட்டம் தோகைமலை தெற்குத் தெருவில் ஹோட்டல்
நடத்திவரும் மனோகரன் என்பவர், தனது மகன்களான ராமமூர்த்தி மற்றும்
மீனாட்சிசுந்தரம் இருவரையும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஏற்கெனவே
இஸ்லாமிய மதத்துக்குமாறிய சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான்
மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்துவிட்டதாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் நேற்று
புகார் கொடுத்தார். அதில். 'தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம், நடவடிக்கை
இல்லை. எங்க பகுதியில் உள்ள மசூதியில் உள்ள இஸ்லாமியப் பெரியவர்களும், எங்க
பசங்களை 'மசூதிக்கு வர வேண்டாம்'னு
சொல்லிட்டாங்க. அப்படினா, எங்க மகன்களை மதம் மாத்துனது எதுவும் பயங்கரவாத கோஷ்டியா
என்பது தெரியவில்லை. நீங்கதான் எனது மகன்களைப் பழையபடி மீட்டுத் தரணும்"
என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.
மனோகரன் புகார் கொடுத்த அன்றே, அதே
தோகைமலைப் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தன் பங்குக்கு கலெக்டரிடம், 'அய்யா
அந்த சுரேஷ், என் மகன் சரவணக்குமாரையும் இஸ்லாமிய மதத்துக்குமாத்திட்டார்.
என் மகனையும் நீங்கதான் மீட்டுத் தரணும்' என்று
கண்ணீரும் கம்பலையுமாக புகாரை நீட்டினார். இந்தச் செய்தியைவிகடன்
இணையதளத்தில் செய்தியாகப் பதிந்திருந்தோம்.
இந்நிலையில் இந்தச் செய்தி பரபரப்பாக, மதமாற்றிய
காரியதரிசியாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான், நேற்று
எட்டு மணி போல், சரவணக்குமார், மீனாட்சிசுந்தரம்
மற்றும் ராமமூர்த்தி ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு கரூர் பிரஸ் கிளப் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம்,
"நான் அவர்களை மூளைச்சலவை எல்லாம் செய்து மதமாற்றம் செய்யவில்லை. அவர்கள்
மூவரும் தாங்களாக விருப்பப்பட்டுதான் இஸ்லாமிய மதத்துக்குமாறியிருக்கிறார்கள். நானும் இஸ்லாமியம்
பிடித்து, தன்னிச்சையாகத்தான்
மதம் மாறினேன். அதுபோல்தான், இவர்கள் மூவரும் இஸ்லாமிய மதம் பிடித்துப்போய், மதம் மாறியிருக்கிறார்கள். என்மீது எந்தத்தவறும் இல்லை. நான் ஒரு கௌரவமான
குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்.
தேவையில்லாமல் என்மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள், நான் அவர்களை மூளைச்சலவைசெய்து, மதம் மாற்றினேனா என்று" என்பதோடு
ஒதுங்கிக்கொண்டார்.
தகவல் உதவி
விகடன்
09-08-2017
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.
இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும்
இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து
அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ்
செவியுறுபவன்; அறிந்தவன்.
(அல்குர்ஆன் 2 : 256)
மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ்
கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி
தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாக சொல்லப்பட்டு
விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல்
இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய
அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது.
//எதை சொன்னாலும், மதத்துடன்
சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி
மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//
என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த
பதிவை தருகிறேன்.
அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன்
கூறுகிறான்
'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது.
அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ
அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ
அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால்
மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73
மற்றோர் இடத்தில்....
'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக்
கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது.
வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41
இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம்
புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம்
கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள்
இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான
ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.
இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக
இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.
'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன்
வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'
-குர்ஆன் 2:26
அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப
உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு
அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு
நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.
1. அது பெண்கொசு.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர்
பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது.
அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது
யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை
மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி
முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து
உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை
அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால்
பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு
பிடித்துள்ளது.
அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக்
கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ)
உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது
சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு
அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும்
அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு
அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.
இதில் நூறு
கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம்.
அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக்
காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும்
ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.