Followers

Sunday, May 22, 2011

ஜனாதிபதி உமருடைய கடைசி நாட்கள்!

3700. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்.


உமர் இப்னு கத்தாப்(ரலி) கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன் மதீனாவில் அவர்களை பார்த்தேன். அவர்கள் ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அவர்களுக்கும், உஸ்மான் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களுக்கும் அருகில் நின்று கொண்டு (அவர்கள் இருவரையும் நோக்கி, 'சவாதுல் இராக் விஷயத்தில்) நீங்கள் எப்படிச் செயல்பட்டீர்கள்? அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்திவிட்டதாக நீங்கள் அஞ்சுகிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இருவரும், 'அந்த நிலத்திற்கு அதன் (உரிமையாளர்களின்) சக்திக்கேற்பவே (வரி) விதித்தோம். அதில் மிக அதிகமாக ஒன்றுமில்லை" என்றனர். அதற்கு உமர்(ரலி), 'அந்த நிலத்திற்கு (மக்களால்) சுமக்க முடியாத வரிச்சுமையை சுமத்தி விட்டீர்களா? என்று (நன்கு) யோசித்துப் பாருங்கள் என்றார்கள். அந்த இருவரும், 'இல்லை. அதன் சக்திக்கேற்பவே வரி சுமத்தினோம்)" என்று பதிலளித்தனர். அப்போது உமர்(ரலி), 'அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால் இராக் வாசிகளின் விதவைப் பெண்களை எனக்குப் பிறகு வேறெவரிடமும் கையேந்தத் தேவையில்லாத நிலையில் தான்விட்டுச் செல்வேன்" என்று கூறினார்கள். இப்படி அவர்கள் சொல்லி நான்கு நாள்கள் கூட சென்றிருக்காது. அதற்குள் (பிச்சுவாக் கத்தியால்) உமர்(ரலி) குத்தப்பட்டு வட்டார்கள்.


உமர்(ரலி) குத்தப்பட்ட நாளில் அதிகாலை(த் தொழுகைக்காக) நான் (தொழுகை அணியில்) நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் உமா(ரலி) அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை. உமர்(ரலி) (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு முன்) இரண்டு தொழுகை அணிகளுக்கு இடையில் சென்றால் (மக்களை நோக்கி), 'சீராக நில்லுங்கள்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். அணிகளுக்கிடையே சீர் குலைவு தென்படாத போதே முன் சென்று (தொழுகைக்காக) தக்பீர் (தஹ்ரீமா) கூறுவார்கள். சில சமயம் 'யூசுஃப்' அத்தியாயம் அல்லது 'நஹ்ல்' அத்தியாயம் அல்லது அது போன்ற (வேறோர் அத்தியாயத்)தை, மக்கள் தொழுகை;காக வந்து சேரும் வரையில் முதல் ரக்அத்தில் ஓதுவார்கள்.

(சம்பவ தினத்தன்று) அப்போது நான் தக்பீர் கூறியிருப்பாக்hள். 'என்னை நாய் கொன்றுவிட்டது... அல்லது தின்றுவிட்டது..." என்று கூறினார்கள். (அப்போது 'அபூ லுஸலுஆ ஃபைரோஸ்' என்பவன் பிச்சுவாக் கத்தியால் அவர்களைக் குத்தி விட்டிருந்தான்). உடனே, அந்த 'இல்ஜ்' (அரபில்லாத அந்நிய மொழி பேசும் இறைமறுப்பாளன்) தன்னுடைய பிச்சுவாக் கத்தியை எடுத்துக் கொண்டு தன்னுடைய வலப்பக்கம், இடப்பக்கம் நிற்கும் எவரையும் விடாமல் குத்திக் கொண்டே விரைந்தோடலானான். முடிவாக, பதின்மூன்று ஆண்களை அவன் குத்தி வட்டிருந்தான். அதில் ஏழுபேர் இறந்துவிட்டனர். இதைக் கண்ட (அங்கிருந்த) முஸ்லிம்களில் ஒருவர் தம் நீண்ட தொப்பியை (கழற்றி) அவன் மீது வீசி எறிந்தார். அந்த அந்நிய மொழிக்காரனான இறைமறுப்பாளன், தாம் பிடிபட்டு விடுவோம் என்று எண்ணிய தன்னைத் தானே அறுத்து (த் தற்கொலை செய்) கொண்டான். மேலும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களின் கரத்தைப் பிடித்து (மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தம்மிடத்தில்) முன்னிறுத்தினார்கள். நான் பார்த்த (இந்தச் சம்பவத்)தை உமர்(ரலி) அவர்களுக்கருகே இருந்தவர்களும் பார்த்தனர். ஆனால், பள்ளி வசாலின் மூலைகளில் (தொழுது கொண்டு) இருந்தவர்களுக்கு இது தெரியவில்லை. ஆயினும், (தொழுகை நடத்திக் கொண்டிருந்த) உமர்(ரலி) அவர்களின் சப்தம் நின்றுவிட்டபோது அவர்கள் 'சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன், அல்லாஹ் தூயவன்)" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (சிறிய அத்தியாயங்களை ஓதி) சுருக்கமாகத் தொழுகை நடத்தினார்கள்.

மக்கள் (தொழுது முடித்து) திரும்பியபோது உமர்(ரலி), 'இப்னு அப்பாஸ் அவர்களே! என்னைக் கொன்றவன் யார் என்று பாருங்கள்" என்று கூறினார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து, 'முகீராவின் அடிமை தான் (உங்களைக் குத்தியது)" என்று கூறினார்கள். உமர்(ரலி), 'அந்தத் திறமையான தொழில் கலைஞனா?' என்று கேட்டார்கள். 'ஆம்" என்று இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தார்கள். 'அல்லாஹ் அவனைக் கொல்லட்டும்! அவன் விஷயத்தில் நல்லதைத் தானே நான் உத்தரவிட்டேன்! ஆனால், என்னையே அவன் கொன்றுவிட்டானே)! தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கரத்தால் எனக்கு மரணம் நேரும்படிச் செய்து விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (மதீனா நகரத்தின் சில பணிகளுக்கு அரபுகள் அல்லாத அந்நியர்கள் அவசியம் எனக் கூறி) அரபுகள் அல்லாத அந்நிய(த் தொழிற் கலைஞ)ர்கள் மதீனாவில் அதிகம் இருக்க வேண்டுமென (இப்னு அப்பாஸ் அவர்களே!) நீங்களும் உங்கள் தந்தையார் (அப்பாஸ்) அவர்களுமே விரும்பக் கூடியவர்களாக இருந்தீர்கள்" என்று உமர்(ரலி) கூறினார். அவர்களிடையே அப்பாஸ்(ருலி) அவர்களே நிறைய அடிமைகள் உடையவராக இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (உமர் - ரலி அவர்களை நோக்கி), 'நீங்கள் விரும்பினால் (மதீனாவிலுள்ள அரபுகளல்லாத தொழில் கலைஞர்கள் அனைவரையும்) கொன்று விடுகிறோம்" என்று கூறினார்கள். உமர்(ரலி), 'நீங்கள் (இந்த எண்ணத்தினால்) தவறிழைத்து விட்டீர்கள். உங்களின் மொழியில் அவர்கள் பேசிய பின்பும், உங்களின் கிப்லாவை நோக்கித் தொழுத பின்பும், உங்களைப் போன்றே 'ஹஜ்ஜு' செய்த பின்புமா? (முஸ்லிம்களான அவர்களைக் கொலை செய்யப்போகிறீர்கள்?)' என்று கேட்டார்கள்.

பிறகு, (குற்றுயிராயிருந்த) உமர்(ரலி) அவர்களை அவர்களின் வீட்டுக்கு சுமந்து செல்லப்பட்டது. அவர்களுடன் நாங்களும் சென்றோம். அன்றைய நாளுக்கு முன்னால் எந்தத் துன்பமும் நிகழ்ந்திராதது போன்று மக்கள் (கடுந் துயரத்துடன்) காணப்பட்டனர். ஒருவர், 'அவருக்கு ஒன்றும் ஆம் விடாது" என்கிறார். மற்றொருவர், 'அவருக்கு (மரணம் சம்பவித்து விடும் என்று) நான் அஞ்சுகிறேன்' என்று கூறுகிறார். அப்போது, (காயத்தின் ஆழத்தைக் கண்டறிவதற்காக) பேரீச்சம் பழச்சாறு கொண்டு வரப்பட்டது. அதை உமர்(ரலி) அருந்தினார்கள். உடனே, அது அவர்களின் வயிற்றின் (காயத்தின்) வழியாக வெளியேறியது. (வெளியில் வந்தது பேரீச்சம் பழச் சாறா அல்லது உமரின் இரத்தமா என்று பாகுபடுத்த முடியாத விதத்தில் இரண்டும் ஒரே நிறத்தில் இருந்ததால்) பிறகு, பால் கொண்டு வரப்பட்டது. அதை அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக (வெள்ளை நிறத்தில்) வெளியேறிவிட்டது. அப்போது அவர்கள் இறக்கும் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று மக்கள் அறிந்து கொண்டனர்.

அவர்களின் அருகே நாங்கள் சென்றோம். மக்கள் வந்து உமர்(ரலி) அவர்களைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். ஓர் (அன்சாரி) இளைஞரும் வந்தார். அவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே!" அல்லாஹ்வின் தூதருடனான (உங்களுடைய) தோழமை, இஸ்லாத்தில் (உங்களுக்கிருக்கும்) நீங்களே அறிந்துள்ள சிறப்பு, பிறகு நீங்கள் (ஆட்சித் தலைவராகப் பதவியேற்று (குடி மக்களிடையே) நீதியாக நடந்து கொண்டது, பிறகு (இப்போது) உயிர்த் தியாகம் (செய்ய விருப்பது) ஆகியவற்றின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள நற்செய்தி கொண்டு நீங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்" என்று கூறினார். (இதைக் கேட்ட) உமர்(ரலி) 'இவையெல்லாம் எனக்கு (சாதகமாக இல்லாவிட்டாலும் பாதகமாக இல்லாமலிருந்தாலே போதும். எனவே, இவை எனக்கு) சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம். சரிக்குச் சமமாக இருப்பதையே விரும்புகிறேன்" என்று கூறினார்கள். அந்த இளைஞர் திரும்பிச் சென்றபோது அவரின் கீழங்கி பூமியைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர்(ரலி), 'அந்த இளைஞரை என்னிடம் திரும்ப அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), 'என்னுடைய சகோதரரின் மகனே! உன்னுடைய ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உன்னுடைய இறைவனுக்கு அஞ்சி நடப்பதுமாகும்" என்று கூறினார்கள்.

(பிறகு தம் மகனை நோக்கி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வே!என் மீது எவ்வளவு கடன் (பாக்கி) உள்ளது என்று பார்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள், கணக்கிட்டுப் பார்த்தனர். எண்பத்தாறாயிரம் (திர்ஹம்ஃதீனார்) அல்லது அது போன்றது இருப்பதைக் கண்டார்கள். உமர்(ரலி), 'இந்தக் கடன்களை அடைப்பதற்கு உமரின் செல்வம் போதுமென்றால் அதிலிருந்து கொடுத்து விடு. அவ்வாறு போதுமானதாக இல்லாவிட்டால் (நம் கூட்டத்தாரான) அதீ இப்னு கஅப் மக்களிடம் கேட்டு (வாங்கிக்) கொள். அவர்களின் செல்வமும் போதுமானதாக இல்லாவிட்டால் (நம்முடைய குலமான) குறைஷிக் குலத்தாரிடம் கேட்டு (வாங்கிக்) கொள். இவர்களையும் தாண்டி வேறு யாரிடமும் செல்லாதே. (இவர்களிடம் கேட்டு வாங்கிய) பின், என் சார்பாக இந்தக் கடன்களை நீயே அடைத்து விடு! (பிறகு) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, 'உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு. 'விசுவாசிகளின் தலைவர்' என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவனல்லன். மேலும், (அன்னை ஆயிஷா - ரலி - அவர்களிடம்) 'உமர் தம் இரண்டு தோழர்கள் (நபி - ஸல் - மற்றும் அபூ பக்கர் - ரலி - அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களின் அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்' எனக் கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் உமர்(ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா(ரலி) (உமர் - ரலி அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது, அவர்களைப் பார்த்து, '(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் தங்களுக்கு சலாம் கூறுகிறார். தம் இரண்டு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்" என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி), 'எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன். (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட அவருக்கே முதலிடம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்)" என்று கூறினார்கள்.

பிறகு அவர் (உமர் - ரலி - அவர்களிடம்) திரும்பி வந்தபோது, 'இதோ, உமர் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர்(ரலி), 'என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர்(ரலி) (தம் மகனை நோக்கி), 'உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?' என்று கேட்டார்கள். 'நீங்கள் விரும்பியது தான், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (ஆயிஷா (ரலி) அனுமதித்துவிட்டார்கள்" என்று அப்துல்லாஹ் கூறினார்கள். (அப்போது) 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்கு கவலையளித்துக் கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டு செல்லுங்கள். பிறகு, ஆயிஷா அவர்களக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடம்) உமர் இப்னு கத்தாப் (தம் இருதோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில்) அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒரு முறை) சொல். அவர்கள் அனுமதித்தால், என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (மண்ணறைகள் அமைந்திருக்கும் பொது) அடக்கலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள்' என்று கூறினார்கள். (உமர் - ரலி - அவர்கள் இருந்த அந்த இடத்திற்கு அவர்களின் மகள்) இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா(ரலி) வந்தார்கள். அவர்களுடன் பல பெண்களும் வந்தனர். அவர்களை நாங்கள் கண்டபோது நாங்கள் கண்டபோது நாங்கள் எழுந்து விட்டோம். உமர்(ரலி) அவர்களிடம் ஹஃப்ஸா(ரலி) வந்து, சிறிது நேரம் அவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்தார்கள். அப்போது ஆண்கள் (சிலர்) உமர்(ரலி) அவர்களிடம் வர அனுமதி கோரினர். ஹஃப்ஸா(ரலி) உடனே அவர்களுக்குள்ள நுழைவிடம் ஒன்றில் நுழைந்து கொண்டார்கள். உள்ளேயிருற்து அவர்கள் அழுகிற சப்தத்தை அப்போது நாங்கள் கேட்டோம்.

(அங்கிருந்த ஆண்கள் உமர்(ரலி) அவர்களை நோக்கி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! தங்களுக்கு ஒரு பிரதிநிதியை அறிவித்து, இறுதி உபதேசம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அந்தச் சிலர் அல்லது அந்தக் குழுவினர். தாம் இந்த (ஆட்சித் தலைமை) விஷயத்தில் (முடிவு செய்ய) வேறெவரை விடவும் மிகத் தகுதி படைத்தவர்களாக எனக்குத் தெரிகிறார்கள்." என்று கூறிவிட்டு, அலீ(ரலி), உஸ்மான்(ரலி), ஸுபைர்(பின் அவ்வாம் (ரலி), தல்ஹா(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) ஆகியோரின் பெயர்களையும் அப்போது குறிப்பிட்டார்கள். மேலும், உமர்(ரலி), 'உமரின் மகன் அப்துல்லாஹ்வும் உங்களுடன் இருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் அவருக்கு எந்தப் பங்குமீல்லை இதை மகன் அப்துல்லாஹ்வூக்கு ஆறுதல் போன்று கூறினார்கள். தலைமைப் பதவி ஸஅத் அவர்களுக்கு கிடைத்தால் அதற்கு அவர் அருகதையானவர் தாம். அவ்வாறு அவருக்கு கிடைக்கவில்லையாயின், உங்களில் ஆட்சித் தலைவராக ஆக்கப்படுகிறவர் (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் (ஆலோசனை) உதவி பெறட்டும். ஏனெனில், நான் ஸஅத் அவர்களை, அவர் இயலாதவர் என்பதாலோ, மோசடி செய்துவிட்டார் என்பதாலோ (கூஃபா நகரின் ஆளுநர் பதவியிலிருந்து) பதவி நீக்கம் செய்யவில்லை. மேலும், '(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று எனக்குப் பின்னர் (வரவிருக்கும்) ஆட்சித் தலைவருக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், (நபி - ஸல் - மற்றும் நபித்தோழர்கள் ஆகிய) அவர்கள் ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு, இறை நம்பிக்கையை (உறுதியாக)ப் பற்றிக் கொண்ட அன்சாரிகளுக்கு நன்மையை(ப் புரியும்படி)யும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன். அவர்களில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரின் நன்மை) ஏற்கப்பட்டு, அவர்களில் தவறிழைப்பவர் மன்னிக்கப்படவேண்டும். (இதே போன்று) நகர்ப்புற மக்களுக்கும் நன்மையை(ச் செய்யும் படி)யும் அவருக்கு நான் உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்திற்கு உறுதுணை ஆவர். நிதி திரட்டித் தருபவர்களாகவும், எதிரிகளை (தங்களின் வீரத்தாலும் பெரும் எண்ணிக்கையாலும்) ஆத்திரமடையச் செய்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடமிருந்து அவர்களின் (தேவைகளுக்குப் போக) எஞ்சியதை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதையும் அவர்களின் சம்மத்துடன் தான் எடுக்க வேண்டும்.
மேலும், கிராமப்புற அரபுகளுக்கும் நன்மையே புரியும்படியும் அவருக்கு நான் உபசேதம் செய்கிறேன். ஏனெனில், அவர்களே பூர்விக அரபிகளும், இஸ்லாத்தின் அடிப்படையும் ஆவார்கள். அவர்களின் செல்வத்தில் மலிவானவை மட்டுமே எடுக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ்வின் பொறுப்பிலும் அவனுடைய தூதரின் பொறுப்பிலும் இருப்பவர்க(ளான முஸ்லிமல்லாதவர்க)ளுக்கு அளிக்கப்படட் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் (அவர்களின் எதிரிகள் அவர்களைத் தாக்க வரும் போது) அவர்களுக்குப் பின்னாலிருந்து அவர்களுக்காகப் போர் புரிய வேண்டுமெனவும், (காப்பு வரி விதிக்கும் போது) அவர்களின் சக்திக்கேற்பவே தவிர அவர்கள் சிரமத்திற்குள்ளாக்கப்படக் கூடாது என்றும் நான் அவருக்கு உபதேசம் செய்கிறேன்' என்று உமர்(ரலி) கூறினார்.


(
கத்திக்குத்துக்கு உள்ளாம் மூன்று நாள்களுக்குப் பிறகு) உமர்(ரலி) இறந்துவிட்டார்கள். பிறகு அவர்களை (எடுத்துக்) கெண்டு (அவர்களின் இல்லத்திலிருந்து) நாங்கள் புறப்பட்டோம். (ஆயிஷா - ரலி - அவர்களின் அறைக்கு) வந்து சேர்ந்தோம். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (ஆயிஷா - ரலி - அவர்களுக்கு) சலாம் கூறினார்கள். பிறகு, '(உங்களுக்குரிய அறையில் தம் இரண்டு தோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்ய என் தந்தை) உமர் இப்னு கத்தாப் அவர்கள் (உங்களிடம்) அனுமதி கோருகிறார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்' என்று கூறினார்கள். உடனே அவர்களை உள்ளே கொண்டு செல்லப்பட்டு அந்த இடத்தில் அவர்களின் இரண்டு தோழர்களுக்கு அருகில் வைக்கப்பட்டது. அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலீ அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். பிறகு தல்ஹழ(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்" என்ற கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்" என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்மான்- ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்" என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)" என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்" என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
Volume :4 Book :62

மேலே உள்ள நீண்ட வரலாறு ஒரு ஆட்சித் தலைவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் ஜனாதிபதி இறந்து போகும் போது கடனோடு இறக்கிறார். அதனை அவரது மகன் ஏற்றுக் கொண்டு பின்னர் கடனை அடைத்த வரலாறை பார்க்கிறோம். நாட்டை ஆளுகிறோம் என்ற பெயரில் பல கோடிகளை சுருட்டும் அரசியல்வாதிகளையும் ஜனாதிபதி உமரையும் இங்கு நாம் ஒப்பிட்டு பார்க்கிறோம்.

தான் இறக்கும் போது தன்னுடைய அரவணைப்பில் வாழ்ந்த மாற்று மதத்தவர்களை பாதுகாப்பதும் தனக்கு பின்னால் வரும் ஆட்சியாளரின் கடமை என்று சொன்னதையும் பார்க்கிறோம். அன்னை ஆயிஷா அனுமதி தராவிடில் என்னை பொது பொது மைய வாடியில் மக்களோடு மக்களாக அடக்கம் செய்து விடுங்கள் என்று சொன்ன எளிமை இன்றைய ஆட்சியாளர்களிடத்தில் எத்தனை பேரிடத்தில் இருக்கிறது?

Friday, May 20, 2011

நாகூர் தர்ஹா-ஏ.ஆர்.ரஹ்மான்-நாகூர் ரூமி!


//ஆனால் சந்தனம் பூசும் அதிகாலை நேரத்துக்கு முந்திய நாள் இரவு நாகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கூடுகளும் அவற்றின் முன்னால் குத்துப்பாட்டுகளுக்கு நடனமாடிக்கொண்டே போகும் இளைஞர்களும் பார்க்க சகிக்கவில்லை. அமைதியாக ஒரு கூட்டில் சந்தனத்தை எடுத்துக் கொண்டு வந்து பூசினால் என்ன? இஸ்லாத்தை அவமதிப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது கொடுக்கிறது. பாட்டும் பரதமும் நமது கலைதான். ஆனால் அந்த இடத்தில் அவை இருக்கக் கூடாது.

நான் கந்தூரிகளுக்குப் போவதே இல்லை. தர்ஹாவுக்கும் போவதில்லை. அங்கே அடக்கமாகியுள்ள இறைநேசரின் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாகத்தான். ஆனால் கந்தூரிகள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டேன். ஏனென்றால் லட்சக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு சமூக நிகழ்வு அது. அதை இஸ்லாத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியதே இல்லை.// -நாகூர் ரூமி

நாகூரில் நடக்கும் ஹந்தூரியைப் பற்றி திரு நாகூர் ரூமி ஒரு பதிவு இட்டிருக்கிறார். அங்கு சந்தனம் பூசும் நாளில் குத்தாட்டத்துக்கு நடனம் ஆடிச் செல்லும் இளைஞர்களை பார்க்க சகிக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார். இது எதனால் ஏற்படுகிறது? மார்க்கம் அனுமதிக்காத ஒரு காரியத்தை நாம் வணக்கம் என்று செய்ய ஆரம்பிக்கும் போது வேறு செய்கைகளும் தானாகவே புகுந்து விடும். நாகூர் தர்ஹாவில் நடக்கும் எந்த செயலுமே குர்ஆனோ நபி மொழியோ அனுமதிக்க வில்லை. மாறாக இவற்றை எல்லாம் விட்டு முஸ்லிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் தடுக்கிறது.

வணக்கம் என்று எதை நாம் செய்தாலும் குர்ஆனோ நபிமொழியோ நமக்கு கட்டளையிட்டிருக்க வேண்டும். கீழே வரக் கூடிய நபி மொழியைப் பாருங்கள். இதன்படி ஒருவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அவன் வெற்றியடைந்து விட்டதாக நபி மொழி கூறுகிறது.

870. அலீ(ரலி) அறிவித்தார்.
"
அல்லாஹ்வின் வேதத்தையும் நபியவர்களிடமிருந்து கிடைத்த இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறு எதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இல்லை! (இந்த ஏட்டில் உள்ளதாவது); 'ஆயிர் என்ற மலையிலிருந்து இன்ன இடம் வரை மதீனா புனிதமானதாகும். இதில் யாரேனும் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்தினால் அல்லது அவ்வாறு ஏற்படுத்துபவருக்கு அடைக்கலம் தந்தால், அல்லாஹ்வின் - வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபம் அவன் மீது ஏற்படும்! அவன் செய்த கடமையான வணக்கம். உபரியானவணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது!

Volume :2 Book :29

2678. தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)" என்று பதில் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் 'இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?' என்று கேட்டார். 'இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்" என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்" என்றார்கள்.
Volume :3 Book :52

நபி மொழி இப்படி இருக்க நமக்கு எதற்கு தேவையில்லாத தர்ஹா வழிபாடு? சிலர் கூறலாம் இது போன்ற விழாக்கள் இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கிறது என்று. இது பொய்யான வாதம். ஏனெனில் முன்பு எங்கள் ஊரில் இதே தர்ஹா விஷேச நாளில் பல தகராறுகள் வரும். பெண்கள் கூட்டத்தில் சிக்குவதால் இதைப் பயன்படுத்தி பலர் தங்களது சில்மிஷங்களை ஆரம்பிக்கின்றனர். இதைப் பார்க்கும் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தவரை அடிக்க போய் பெரும் சண்டையாக மாறிய காட்சிகளும் உண்டு. ஒவ்வொரு முறை தர்ஹா விஷேச நாள் வரும்போது ஏதாவது ஒரு தகராறு வந்து விடும். இது எதற்கு? யாரை திருப்திபடுத்த?

'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியை நாம் வாரந்தோறும் பார்த்து வருகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் இந்து சகோதரர்கள் இஸ்லாத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான கொள்கைகளை களைய முற்படும். மீடியாக்களாலும், சினிமாத் துறையாலும் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்ட இஸ்லாமிய சமூகம் இன்று கேள்வி பதில் நிகழ்ச்சியினால் உண்மையை உணர்ந்திருக்கிறது. முன்பு போல் இந்து முஸ்லிம் கலவரங்களும் நடைபெறுவதில்லை. இது போன்ற வழிகளே இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கும். அவர்களைப் போல் நாமும் நமது மத சடங்குகளை காப்பி அடித்தால் அதனால் குழப்பம்தான் மிஞ்சும். இந்து மதத்தின் பல கொள்கைகளை கடன் வாங்கிய கிறித்தவ சமூகம் இன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே மாறி விட்ட கொடுமையை நாம் பார்க்கிறோம். தர்ஹா வழிபாடு தொடர ஆரம்பித்தால் இதே நிலை இஸ்லாத்திலும் ஏற்பட்டு விடும்.

//சந்தனம் பூசும் இரவு அன்று தர்காவுக்கு உள்ளே எப்போதும் இருக்கும் விஐபி-களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். அவர் இந்த ஆண்டு உள்ளே வந்தபோதுதான் நான் பார்த்தேன் (இன்னொருவர் எடுத்த செல்ஃபோன் வீடியோ மூலமாக). அவர் அணிந்திருந்த உடையும், தொப்பியும், பவ்யமாக அவர் அமர்ந்து கொண்ட விதமும் நமக்கு நிச்சயம் பாடம் கற்றுத் தருபவை. அவர் அதிகம் பேசுவதில்லை. அவருடைய நம்பிக்கையில் அவர் உறுதியாக இருக்கிறார். அவருடைய ஈமான் அசைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. அவருக்கு நிச்சயம் காதிர் வலீ அவர்களின் அன்பு கிடைக்கும். அதனாலேயே அவர் மேலும் மேலும் மேலே மேலே போய்க்கொண்டே இருக்கிறார். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.// -நாகூர் ரூமி

436. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
Volume :1 Book :8

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு புதிய முஸ்லிம். அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவர்கள் தவறாக விளக்கியிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் நாம்தான் அவரை திருத்த வேண்டும். அதை விடுத்து இஸ்லாத்துக்கு மாற்றமாக செய்யும் இது போன்ற செயல்களை நாம் ஊக்குவிக்கக் கூடாது. இது பலரும் தவறான வழிக்கு செல்ல வழி வகுத்து விடும். ஏனெனில் ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனது செயல்கள் அனைத்தும் உலகத்தோடு துண்டிக்கப்படுகிறது. அவரால் எந்த வொரு செயல்களையும் தனக்கோ பிறருக்கோ செய்ய இயலாது. இதைத்தான் குர்ஆனும் சொல்கிறது. தனக்கே எதுவும் செய்து கொள்ள முடியாத நாகூர் பாவா ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதைச் செய்து விட முடியும்?

அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். -குரஆன் 39:3

ஏக இறைவனையன்றி வேறு தெய்வங்களையும், இறந்த மகான்களையும் தங்களின் பாதுகாப்பாக கொண்டவர்கள் நேர்வழியில் செல்ல மாட்டார்கள் என்று இறைவன் குர்ஆனிலே கண்டிக்கிறான். நாகூர் ரூமி போன்ற சிந்தனையாளர்கள் சமாதி வணக்கத்தை தூரமாக்கி ஏக இறைவனை மாத்திரம் வணங்கக் கூடியவர்களாக ஆகி இறைப் பொருத்தத்தை அடைய வேண்டும் என்று இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.






Wednesday, May 18, 2011

இந்தியாவின் மிகப் பெரும் மசூதி!


இதுவரை சாஜஹான் கட்டிய டில்லி ஜூம்ஆ மசூதிதான் இந்தியாவின் மிகப் பெரும் மசூதியாக இருந்தது. ஆனால் இன்னும் சில நாட்களில் கேரளா கோழிக் கோட்டில் திறந்து வைக்கப் பட இருக்கும் புதிய மஸ்ஜித் டில்லி மசூதியின் இடத்தைப் பிடிக்கப் போகிறது. இனி இந்தியாவின் மிகப் பெரும் மசூதியாக கோழிக்கோடு மசூதி விளங்கும்.

கோழிக்கோட்டில் கட்டப்படும் இந்த பள்ளி 250000 ஸ்கொயர் பீட்டில் கட்டப்படுகிறது. 'இந்த பள்ளி உலக சகோதரத்துவத்துக்கு எடுத்துக் காட்டாக அமையும். ஒரு நூலகமும், இஸ்லாமிய ஆராய்ச்சி கூடமும், கான்பரன்ஸ் ஹால் ஒன்றும் சேர்த்து கட்டப்படுகிறது. இங்கு முஸ்லிம் அல்லாதவர்களும் தங்களின் சந்தேகங்களை போக்கிக் கொள்ளும் வகையில் மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.என்கிறார் இப்பள்ளியின் நிர்வாகி அபுபக்கர்.

இதுவரை 30000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குழந்தைகள் இங்கிருந்து கல்வி கற்று சென்றுள்ளனர். கலவரத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் குழந்தைகள், காஷ்மீர் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மாணவர்கள் சிறந்த கல்வியை கற்று சென்றிருக்கிறார்கள். இன்றும் கற்று வருகிறார்கள்.

'இந்த பள்ளி இன்னும் இரண்டு வருடத்தில் பூர்த்தியாகும். ஐந்து வருடங்களில் மத்ரஸா, நூலகம்,கான்பரன்ஸ் ஹால் என்று அனைத்தும் இன்ஷா அல்லாஹ் கட்டி முடிக்கப்படும். இப்பள்ளியில் ஒரே நேரத்தில் 250000 பேர் தொழ முடியும். பசுமை கட்டிடமாக இருக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகிறது. பள்ளியைச் சுற்றிலும் மரங்களும் செடிகளும் வைக்கப்பட்டு பரமரிக்கப்படுகின்றன. எட்டு ஏக்கரில் மொகல் பாரம்பரியத்தை விளக்கும் முகமாக மிகப் பெரும் தோட்டம் அமைக்கப்படுகிறது. இதன் மொத்த செலவின் மதிப்பீடு 40 கோடி' என்கிறார் இப்பள்ளியின் ஆர்க்கிடெக்சர் ரியாஸ் முகம்மது.

டிஸ்கி: இதெல்லாம் சரிதான். இவ்வளவு சிரமப்பட்டு திறக்கப் போகும் பள்ளியில் அமையவிருக்கும் மத்ரஸா பழைய மாடலில் இல்லாமல் தொழில் கல்வியும் அங்கு கற்று கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குர்ஆன், நபிமொழி, ஆங்கிலம், கணிணி, தொழிற்கல்வி, விளையாட்டு என்று அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றதாக மத்ரஸா கல்வி அமைய வேண்டும்.

ஏனெனில் முகமது நபியோ, அவரது தோழர்களோ புரோகிதம் செய்து தங்களின் வருமானத்தை பெறவில்லை. அனைவருக்கும் பல தொழில்கள் இருந்தன. முகமது நபியிடம் நூறு ஆடுகள் இருந்தன. அவை குட்டி போடும்போது அதனை விற்று தனது செலவுகளை பார்த்துக் கொண்டதாக நாம் படிக்கிறோம். ஆட்டின் எண்ணிக்கை நூறை விட குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். எனவே மதரஸா மாணவர்கள் கல்வி கற்று வெளியேறும்போது உலக போட்டியை சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

மத்ரஸா கல்வி வெறும் குர்ஆனையும் சட்டதிட்டங்களை மட்டும் கற்றுக் கொடுப்பதால் அந்த மாணவர்கள் வருமானத்துக்கு புரோகிதத்தை வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதை நியாயப்படுத்தவும் ரொம்பவும் மெனக்கிடுகிறார்கள். எனவே இனி வருங்கால இஸ்லாம் சிறப்புற வேண்டுமானால் கல்விக்கு இஸ்லாமிய சமுதாயம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதில் தொய்வடையாமல் கல்வியின் அவசியத்தை நம் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது நம்முன் உள்ள மிகப் பெரிய பணியாகும்.

Monday, May 16, 2011

உலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்!


சவூதி ரியாத் தலை நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பெண்களுக்கான பல்கலைக் கழகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மன்னர் அப்துல்லாஹ் 20 மில்லியன் ரியால் செலவில் கட்டப்பட்ட இப்புதிய வளாகத்தை எளிமையாக திறந்து வைத்தார். இப்பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகமாகும். பெண்களுக்கான இந்த பல்கலைக் கழகம் உலகிலேயே பெரிதாகும். 50000 மாணவிகள் ஒரே நேரத்தில் கல்வி கற்கும் விதமாக இந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்களுடன் மிகப் பெரும் நூலகமும் காட்சியளிக்கிறது. 12000 மாணவிகள் தங்கி கல்வி கற்க ஹாஸ்டல் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதை ஒட்டியே மாணவிகளுக்கான உடற்பயிற்சி கூடமும், விளையாட்டு மைதானமும் சிறந்த முறையில் கட்டப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகம் மிகவும் பெரிது என்பதால் அனைத்து துறைகளையும் இணைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவையை இங்கு பயன்படுத்துகிறார்கள். மன்னர் அப்துல்லாவும் ரெயிலில் அமர்ந்து அனைத்து இடங்களையும் பார்வையிட்டார்.

40000 ஸ்கொயர் மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல்: கான்ஃபரன்ஸ் ஹால்: பரிசோதனைக் கூடம்: நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு: தகவல் தொழில் நுட்பம்: உயிரியியல் போன்றவற்றிற்க்கான தனித்தனி துறைகள் இயங்குகின்றன.

சவூதிக்கான பிரிட்டிஷ் தூதர் டாம் பிலிப்ஸ் பேசும்போது, 'இன்று ஒரு முக்கியமான நாள். சவூதி அரசு தனது மக்களை முழு கல்வி பெற்ற சமூகமாக மாற்றும் முயற்ச்சிக்கு எனது வழ்த்துக்கள். இனி வரும் காலங்களில் சவூதியும், இங்கிலாந்தும் கல்வி மேம்பாட்டில் இணைந்து செயல்படும். உலகின் மிகப் பெரும் பல்கலைக்கழகமான இதன் வளர்ச்சி மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.' என்றார்.

மன்னர் அப்துல்லாஹ் பேசும் போது 'நமது நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பல்கலைக் கழகம் திறக்கப்பட்டுள்ளது. இதனை சரிவர பயன்படுத்தி அனைவரும் கல்வியாளர்களாக மாற வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

பெண் கல்வியை இஸ்லாம் வரவேற்கிறது. அதே சமயம் பெண்மைக்கு பங்கம் வராமல் பெண்மையின் பாதுகாப்போடு அவர்களின் கல்வித் தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பல முயற்ச்சிகளில் ஒன்றாகத்தான் இந்த பெண்கள் பல்கலைக் கழகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்த உன்னத நோக்கத்தை இறைவன் மேலும் சிறப்புற செய்ய வேண்டும்.

'அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?' என்று முஹம்மதே கேட்பீராக! அறிவுடையோர்தாம் நல்லறிவு பெறுவார்கள்.

-குர்ஆன் 39:10

'என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்துவாயாக!' என்று பிரார்த்திப்பீராக!'

-குர்ஆன் 20:114

2547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக் கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, திருமணமும் முடித்து வைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். மேலும், ஓர் அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எஜமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுவானாயின் அவனுக்கும் இரண்டு நன்மைகள் கிடைக்கும்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். -புகாரி

7066. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளுக்கு முன்பாகக் கொலைகள் மலிந்த ஒரு காலக்கட்டம் வரும். அப்போது கல்வி மறைந்துபோய் அறியாமை வெளிப்படும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். -புகாரி

JEDDAH: Saudi Arabia’s consistent effort to raise the status of women has impressed Indian parliamentarian Najma Heptullah.

“During my brief visit to the Kingdom, I interacted with women and their organizations in Riyadh and Jeddah, and am convinced about the manner in which the Kingdom is going ahead with tackling women’s issues, especially in further improving their position in society and creating employment opportunities,” she said in an interview with Arab News over the weekend.

Najma, who performed Umrah recently, said a major stride taken by the Kingdom is in appointing a woman as minister.

“I was pleasantly surprised when I heard that Nora bint Abdullah Al-Fayez, a well educated former teacher, was made deputy education minister in charge of a new department for female students. This is just one example to show that women can look forward to better opportunities in the future,” said Najma,

-Arab News

டிஸ்கி: உலகிலேயே மிகப் பெரும் பல்கலைக் கழகம் மிக எளிமையாக திறந்து வைக்கப்பட்டது. நம் தமிழகத்தில் ஜெயலலிதா தனது வறட்டு பிடிவாதத்தினால் 1000 கோடியில் கட்டப்பட்ட சட்டமன்ற வளாகத்தை விட்டு விட்டு பழைய கட்டிடத்திலேயே இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார். பழைய கட்டிடத்தை புதுப்பிக்க பல கோடி செலவுகள். ஆடம்பரமான பதவி ஏற்பு விழாவால் பல கோடி வீண். எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போட வந்து சென்னையில் ஒரு மணி நேரம் நேற்று டிராஃபிக் ஜாம், இனி ஐந்து வருடத்துக்கு விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் நடக்கும் ஈகோ போர் வேடிக்கைகளை தாராளமாக பார்த்து மகிழலாம்: சென்னை மெட்ரோ ரெயில் இனி கிடப்பில் போடப்படும், இவை எல்லாம் மாறிய ஜெயலலிதாவாக நமக்கு தெரியவில்லை.

வழக்கம் போல் தமிழனும் இதைப்பற்றிய கவலை எல்லாம் இல்லாமல் டாஸ் மார்க் கடையில் நன்றாக குடித்து விட்டு மானாட மயிலாட, மிட்நைட் மசாலாவையும் பார்த்து விட்டு ஹாய்யாக பொழுதை கழிப்பான்.

வாழ்க ஜனநாயகம்.