Followers

Sunday, August 05, 2012

ஒரு பவுத்தன் என்ற வகையில் வெட்கித் தலை குனிகிறேன்!

எல்லா நாட்டிலும் எல்லா மக்களும் என்றுமே அக்கிரமத்துக்கு துணை போனவர்களாக இருந்ததில்லை. ஆங்காங்கே இருக்கும் சில நல்ல உள்ளங்கள் அக்கிரமத்துக்கு துணை போகாததனால் பல இன அழிப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இலங்கையில் சில விஷமிகளால் தம்புளை பள்ளிவாசல் பொய்யாக புணரப்பட்ட காரணங்களை வைத்து அகற்றுவதற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இலங்கையரான ஒரு பவுத்த காவல்துறை அதிகாரி இதற்கு என்ன மாதிரியான விமரிசனங்களை கொடுத்தார் என்பதை இனி பார்ப்போம்.
"எனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் காக்கிச் சட்டையைக் கழற்றி விட்டு பதவியையும் இராஜினாமா செய்வேன்" என அம்பாறை மாவட்ட காவல் துறை அதிகாரி பிரேமலால் ரணகல தெரிவித்தார்.



"உருவ வழிபாடற்ற உள்ளத்தையும் சிந்தயையும் ஒருமுகப்படுத்தி ஏக இறைவனை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் மாத்திரமே. உண்மையில் இஸ்லாம் ஒரு சிறந்த மார்க்கமாகும்" ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி அண்மையில் வரிப்பத்தான் சேனை ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்விலும் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "முஸ்லிம்களின் வேத நூலான புனித அல்குர்ஆனை நான் படித்து வருகின்றேன். முஸ்லிம்களின் சமய விடயங்களை தினமும் விளங்கி வருவதுடன் அவர்களின் சமயத் தலங்களையும் தரிசித்து வருகின்றேன். புனித மக்கா நகர் செல்லவும் பேரவா கொண்டுள்ளேன். மரணித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி இறந்த உடல்களை அடக்கம் செய்யும் முஸ்லிம்களின் பணியை ஏனைய சமயத்தவர்கள் இன்று வரவேற்றுப் பேசுகின்றனர். "


"இதுபோன்ற இஸ்லாத்தின் சிறந்த பழக்க வழக்கங்களால் இஸ்லாம் மார்க்கம் எதிர்காலத்தில் வேகமாகப் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைத் திருநாட்டில் முஸ்லிம்கள் காலா காலமாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வந்துள்ளனர். ஒரு சமயம் கொழும்பு புதுக்கடைப் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வாகன விபத்துக்குள்ளான போது அவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரத்தம் வழங்கியவர் முஸ்லிம் சகோதரர் ஒருவரேயாவார்."

"இவற்றையெல்லாம் மறந்து இன்று தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு எனது இனத்தைச் சேர்ந்த சில தீய சக்திகள் முயற்சிப்பதையிட்டு ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது."

"ஒற்றுமையுடன் வாழ்கின்ற சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிரிவினையையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதனை இலங்கையின் எந்தவொரு குடிமகனும் அனுமதிக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு இலங்கையின் எப்பாகத்திலும் சமயத் தலங்களை நிர்மாணிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு காவல் துறை அதிகாரி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பிரேமலால் ரணகல .

-----------------------------------------------------------------------------------

//வாங்க மக்கள்ஸ்...சிங்கள இனவாதிகளுடன் முஸ்லிம் மக்கள் ரொம்ப நாளா ஒண்ணா வாழ்றாங்களாம்! அது போல தமிழ் மக்களும் வாழப் பழகிக்கனும். ஈழ மக்கள் சிங்களவர்களை எதிரிங்க போல பார்ப்பதை நிறுத்திட்டு, ஓடும் புளியம் பழமும் போல ஒண்ணா இணைஞ்சிருக்கிற முஸ்லிம் மக்களைப் போல வாழக் கத்துக்கனும்! இப்படிச் சொன்னவர் வேறு யாரும் இல்லைங்க! நம்ம பதிவுலக தீர்க்கதரிசி - சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெறப் போகிற அண்ணன் சுவனப்பிரியன் தானுங்க! அவர் போன வருசம் அக்டோபர் மாசத்துல சொன்னாரு! இப்போ தானுங்க அந்த வார்த்தையை நம்ம சிங்கள இனவாதிங்க நெசமாக்கியிருக்காங்க.//

நான் நோபல் பரிசு வாங்குவது அல்ல இங்கு பிரச்னை. வன்னி காடுகளிலும் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த 30 வருடங்களாக அலைந்து திரியும் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்து ஒரு தீர்வு கண்டால் உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்க பலர் சிபாரிசு செய்யலாம். :-) அதை விடுத்து எஃப் எம்மில் வித விதமான பாடல்களை போட்டுக் கொண்டு, சில்மிச கதைகளை நாளொரு பதிவாகவும் போட்டு, ஒரு கையில் பெப்சியையும் மறு கையில் ஹம்பர்கரையும் வைத்துக் கொண்டு ஐரோப்பிய வீதிகளில் ஜோடியாக வலம் வந்தால் இன்னும் 100 வருடம் ஆனாலும் ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. :-(

நிரூபன் நினைப்பது போல் முஸ்லிம்களை அவ்வளவு லேசில் கை வைத்து விட முடியாது. அது ராஜபக்ஷேவுக்கும் நன்றாகவே தெரியும் என்பதால் நிரூபனின் கருத்துக்களை லேசாக எடுத்துக் கொள்வோம். இலங்கையைப் பொறுத்த வரை முஸலிம்களின் மேல் கை வைத்தால் அரபு நாடுகளின் விசாக்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இது ஏற்கெனவே நொடித்துக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி விடும். அடுத்து 90 சதவீதமான தமிழ் முஸ்லிம்களுக்கு சிங்களமும் தெரியும். அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக பண்ணும் எந்த ஒரு ரகசியமும் அடுத்த நிமிடமே முஸ்லிம்களை வந்தடைந்து விடும் என்று ஒரு சிங்கள முஸ்லிம் சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார். தற்போது சிங்கள பவுத்தர்கள் அதிகம் இஸ்லாத்தை ஏற்பதும் அதிகரித்திருக்கிறது. இதனால் அரண்ட பவுத்த பிக்குகள் ஆங்காங்கே சில பிரச்னைகளை உண்டு பண்ண முயற்ச்சிக்கிறார்கள். அது அரசாலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே முள்ளி வாய்க்கால் பிரச்னையில் உலக நாடுகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட இலங்கை இனி அத்தகைய ஒரு ஏற்பாட்டை தற்போது கையிலெடுக்காது. திராவிடக் கட்சிகள் ஹிந்தி படிக்க விடாமல் தமிழர்களை எவ்வாறு தடுத்ததோ அதே போல் இலங்கை இந்துக்களையும் மொழி வெறி ஊட்டி சிங்களத்தை கற்காமல் ஆக்கி விட்டது புலி நிர்வாகம். இந்த வகையிலும் தமிழ் இந்துக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தனி ஈழம் அமைந்து அதன் பிறகு நடக்கும் சாதி வெட்டு குத்துகளுக்கு பதில் சிங்களவர்களோடு சமாதானமாக சென்று அதிகார பகிர்வோடு ஆட்சி அமைப்பதுதான் சிறந்தது. எனக்கு தெரிந்த நிரந்தர தீர்வு இதுதான்.

-----------------------------------------------------------------------------------

அதேபோல் ஒரு தமிழ் முஸ்லிமின் சிறை மீட்புக்காக போன பதிவில் நான் கோரிக்கை வைத்த போது அதையும் கொச்சைப் படுத்தி 'இலங்கையில் இவர்கள் தமிழர்களோடு ஒட்டுவதில்லை. உதவி என்று வரும் போது தமிழன் என்ற போர்வையில் சுவனப்பிரியன் வருகிறார்' என்று கோவி கண்ணன் தனது கருத்தை வழக்கம் போல் வைத்தார். கமருதீன் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே அவர் ஒரு முஸ்லிம் என்பது யாருக்கும் தெரியும். எனவே உதவுபவர்களும் பெரும்பாலும் முஸ்லிம்களாகவே இருப்பர். நான் அந்த வார்த்தையை உபயோகப்படுத்தியதற்கான காரணம் இது போன்று வேறு யாரும் தமிழர்கள் சிரமப்பட்டால் உதவ ஒரு அமைப்பு உள்ளது என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே. கோரிக்கை வைத்து இரண்டு நாட்களில் 5000 ரியாலுக்கு மேல் ரியாத்திலேயே வசூலாகி அவரை மீட்கும் முயற்சியும் துரிதமாக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் உதவி செய்ய தயாராகவே உள்ளனர். எனவே கோவிக் கண்ணனைப் போன்ற காவி சிந்தனை உடையவர்களிடம் இருந்து எந்த உதவியும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

அடுத்து இலங்கையைப் பொறுத்த வரை ஆரம்ப காலங்களில் முஸ்லிம்கள் விடுதலைப் புலிககளை ஆதரித்தே வந்தனர். இளைஞர்களில் பலர் தீவிர உறுப்பினர்களாக பிரபாகரனுக்கு மிக நெருக்கமாகவே இருந்துள்ளனர். ஆனால் காலம் போகப் போக தனது தலைமையை எதிர்ப்பவர்கள் இந்துக்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் உயிரையும் எடுக்க தயாராக இருந்ததை நேரில் பார்க்கின்றனர். புலிகள் மட்டத்தில் எங்கு பார்த்தாலும் சர்வாதிகாரம் தலையெடுக்கவே இவர்களை நம்பி போனால் நிர்கதிதான் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு புலிகளிடம் இருந்து முஸ்லிம்கள் ஒதுங்க ஆரம்பித்தனர். பெரும் பெரும் வல்லரசுகளுக்கே தலைவணங்காத முஸ்லிம்கள் இந்த தீவிரவாதக் கும்பலுக்கு முன்னால் மண்டியிடுவார்களா என்ன? இதை பொறுத்துக் கொள்ளாத புலித் தலைமை அப்பாவி முஸ்லிம்களை நூற்றுக் கணக்கில் சுட்டுத் தள்ளியது. காத்தான்குடியில் இவர்கள் நடத்திய கோர தாக்குதலின் நினைவு நாள் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அந்த மக்களால் ரமலானில் நினைவு கூறப்பட்டது. கோடிக் கணக்கில் சொத்துக்களை வைததிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை ஒரே நாளில் கையில் 500 ரூபாய் செலவுக்கு கொடுத்து அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தது புலித் தலைமை. கோடிகளில் புரண்ட பல முஸ்லிம் தொழிலதிபர்களை அகதியாக வரிசையில் உணவுக்காக நிற்க வைத்தது புலித் தலைமை.

இவ்வளவு கொடுமைகளை புலிகள் முஸ்லிம்களுக்கு செய்தும் தனது இனமான தமிழ் மக்களோடு இன்றும் பரஸ்பரம் நட்பு பாராட்டியே வருகின்றனர் முஸ்லிம்கள். முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது புலித் தலைமைதானே ஒழிய அப்பாவி இந்துக்கள் அல்ல. எனவே ஒருவனுக்கு இனம் என்பது அவன் இறக்கும் வரை அழியாத ஒன்று. அவன் முஸ்லிமாக மாறினாலும், கிறித்தவனாக மாறினாலும் தமிழன் என்ற மொழி அடையாளமும், திராவிடன் என்ற இன அடையாளமும் என்றுமே அழியாது என்பதை கோவிக கண்ணன் போன்றவர்கள் விளங்கிக் கொண்டால் நல்லது.

-----------------------------------------------------------------------------------

அமைச்சர் ரிஷாத் பத்ருத்தீன் நீதிபதியை மிரட்டினாரா?

இலங்கை அமைச்சர் ரிஷாத் பத்ருதீனைப் பற்றி ஒரு செய்தி வந்தது. அவர் நீதி மன்றத்துக்கு நேரிடையாக சென்று நீதிபதியை மிரட்டினார் என்றும் எனவே அவரது அமைச்சர் பதவியை ரத்து செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. அமைச்சரைப் பற்றி பல செய்திகளில் சிறப்பாக படித்திருந்த எனக்கு இந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது.

இதன் உண்மை நிலையை அமைச்சரே இந்த காணொளியில் விளக்குகிறார்:


http://player.vimeo.com/video/46406829

இலங்கையில் நீதிபதிக்கும், நீதிமன்றத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சர்ச்சைக்கு காரணமான மன்னார் உப்புக்குளம் பகுதிக்கு சென்ற நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி.

-------------------------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு -15



107 comments:

Anonymous said...

நீங்கள் எழுதிய செய்தி மிகப்பழசு. இதோ இப்போதைய செய்தி!!!
ஸ்நேரம் இருக்கும்போது ஸ்ரீலங்காவில் ‘புனிதப் பிரதேசம்’ சட்டத்தை கொஞ்சம் ‘விளக்கமாக’ படிக்கவும்.
இந்தப் பதிவு யாழ்முஸ்லிம் இணையத்தில் இருந்து எடுத்தது. உண்மையும் அதுவே!
http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_773.html

Anonymous said...

’...அமைச்சரைப் பற்றி பல செய்திகளில் சிறப்பாக படித்திருந்த எனக்கு இந்த செய்தி ஆச்சரியமாக இருந்தது....’

அந்த வீடியோ ஏன் நீதிபதி கையைத்தூக்கியவுடன் அப்படியே வெட்டப்படுகிறது என்பதற்கும் விளக்கம் தந்தால் நல்லது!

"...அவர் நீதி மன்றத்துக்கு நேரிடையாக சென்று நீதிபதியை மிரட்டினார் என்றும் ..."

அப்படிச் செய்தி வரவில்லை. தொலைபேசியில் மிரட்டினார் என்பதே குறறச்சாட்டு. அதனை அமைச்சர்தான் திரிச்சு தனக்குச் சார்பாக சொல்லி தான் நீதிமன்றத்துக்கே செல்லவில்லை என ‘ஆதாரங்களுடன்’ விளக்கி உள்ளார்.

மேலும் இன்னொரு இனையத்தளத்தில் இந்த அமைச்சருக்கு ஆதரவாக எழுதிய ஒருவர் உண்மை நிலை அறிந்து எழுதிய பின்னூட்டம்....

மன்னார் பிரச்சனை தொடர்பாக முஸ்லீம்களுக்கு சார்பாக நீதிபதி நீதிமன்றத்தினுள் நீதி வழங்கிக் கொண்டிருந்த போது அது குறித்து எதையும் அறியாத முஸ்லீம்கள் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.

நீதிமன்ற வழக்குக்காக தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களை நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றத்துக்கு தமிழ் தரப்பினர் மட்டுமே சமூகமளித்துள்ளனர். முஸ்லீம்கள் சார்பாக ஒரு சட்டத்தரணி சென்றிருந்தாலும் அவரும் நீதிமன்றம் இவ்விடயம் குறித்து தீர்ப்பொன்றை வழக்கலாகாது என வாதாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் நீதிபதியோ தற்போதைய நிலையில் தமிழர்களுக்கு வாழ்வதற்கு வேறொரு இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒழுங்கு செய்து கொடுத்து விட்டு, முஸ்லீம் மக்கள் வாழ்ந்த இடத்தை மீளவும் முஸ்லீம்களுக்கே கொடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

இவை எதையும் தெரியாத முஸ்லீம்கள் நீதிமன்றத்துக்கு முன்; நீதிபதி தமிழர்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவார் எனக் கருதி அவரை மாற்றம் செய்யுமாறு தொடர்ந்தும்; நீதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் நீதிமன்றத்துக்கு இடையூராக இருந்தமையால் போலீசார் மூலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்களை துரத்துமாறு பணித்துள்ளார். அதையும் செவிமடுக்காத ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிபதிக் கெதிராக கோசமிடும் போது அவர்களை கண்ணீர் புகையடித்து துரத்துமாறு பணித்துள்ளார். அதையும் நிறைவேற்ற முடியாத போதே; நீதிபதி நேரடியாக தனது அங்கியோடு வெளியே வந்து கண்ணீர் புகையடித்து அல்லது தடியடிப் பிரயோகம் செய்து அல்லது காலின் கீழ் துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டக் காரர்களை துரத்துமாறு கட்டளை இட்டுள்ளார்.

முஸ்லீம்களுக்கு சார்பாக நீதிபதி தீர்ப்பு உள்ளே வழங்கியதை தெரிந்து கொள்ளாமல் இத்தனையும் இடம் பெற்றுள்ளது.

அதற்கான முக்கிய காரணம் முஸ்லீம் தரப்பு நீதிமன்றத்தின் வழக்கிற்கு; கடந்த 2012 .07. 15 மற்றும் 2012.07.18ம் ஆகிய இரு தினங்களும் தமிழ் – முஸ்லீம் இரு சாராரையும் வருமாறு நீதிமன்ற அழைப்பு இருந்தும்; முஸ்லீம்கள் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. தமிழர்கள் மட்டுமே பிரசன்னமாகி இருந்தனர்.

தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டும்; அதை அறியாத முஸ்லீம் மக்கள் செய்த செயலால் நடந்த விபரீதமே இந்தப் பிரச்சனை.

இது குறித்து திவயினவின் முக்கிய பிரமுகரும் கோட்டாஸ் வோர் ஏனம் புத்தகத்தை எழுதியவருமான சந்திரபிரேம அவர்கள், சிங்களத்தில் அப் பிரச்சைனையின் ஆரம்பம் தொட்டு நடந்த நிகழ்வுகளை கடந்த திங்கட்கிழமை (2012.0730) வம் இவுர எனும் தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

NB:-இது கட்டுரையில் உள்ள சுருக்க கருத்தாகும் மேலதிக கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

சிங்கள கட்டுரை இணைப்பு : -http://www.divaina.com/2012/07/30/feature01.html

கோவி.கண்ணன் said...

//"இவற்றையெல்லாம் மறந்து இன்று தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு எனது இனத்தைச் சேர்ந்த சில தீய சக்திகள் முயற்சிப்பதையிட்டு ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது."//

அவிங்களுக்கெல்லாம் நேர்மை என்றால் என்னவென்று தெரியும் போல,

எவனோ செய்த தவறுக்கு மதம் சார்ந்து பொறுப்பேற்றுக் கொள்கிறார், இங்கே இருக்கும் சப்பைக்கட்டாளர்கள். தனிமனித தவறுக்கு எங்கள் மதம் பொறுப்பேற்காது என்பார்கள்.

திருவாளர் சுபி அவர்களே எங்காவது இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்தப் பிறகு 'ஒரு இஸ்லாமியன் என்பதால் நான் இதற்கு வெட்கப்படுகிறேன்' என்று முன்பு எப்போதாவது எழுதி இருந்தால் இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதி இருக்க எல்லாவித முகாந்திரமும் இருக்கிறது.

வழக்கம் போலான இரட்டை வேடம் வாழ்க, தங்களது இறைப்பணி.

மற்ற மதக்காரர்களிடம் இருந்து இது போன்ற மதம் தாண்டிய மனித நேயம் நீங்களெல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

அதை நீங்கள் பின்பற்றாவிட்டாலும் எடுத்து எழுதியதற்கு பாராட்டுகள்.

suvanappiriyan said...

திரு கோவி கண்ணன்!

//திருவாளர் சுபி அவர்களே எங்காவது இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு வைத்தப் பிறகு 'ஒரு இஸ்லாமியன் என்பதால் நான் இதற்கு வெட்கப்படுகிறேன்' என்று முன்பு எப்போதாவது எழுதி இருந்தால் இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதி இருக்க எல்லாவித முகாந்திரமும் இருக்கிறது.//

இதற்கு நீங்கள் அல்லவா அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்? முஸ்லிம் பகுதிகளில் குண்டை வைத்து வெடிக்கச் செய்து பல முஸலிம்களின் உயிரை காவு வாங்கி முடிவில் உயிர் பிழைத்த மற்ற முஸ்லிம்களை 'நீ தான் குண்டு வைத்தாய்!' என்று கூறி அழைத்து செல்வது எந்த நாட்டிலாவது நடக்குமா? மாலேகான் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என்று வரிசையாக நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான இந்துத்வா செயலுக்காக நீங்கள் அல்லவா வெட்கப்பட்டிருக்க வேண்டும்?

நியாயமாக வேலை செய்து இந்துத்வாவினரை கைது செய்த ஹேமந்த கர்கரேயையும் திட்டமிட்டு கொன்றாகி விட்டது. நரேந்திர மோடி கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த அவரது மனைவிக்கு தெரிந்திருக்கிறது தனது கணவரை கொன்றது யார் என்று?

கோவி.கண்ணன் said...

//வரிசையாக நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான இந்துத்வா செயலுக்காக நீங்கள் அல்லவா வெட்கப்பட்டிருக்க வேண்டும்//

இந்துக்கள் நல்லாவே வெட்கப்பட்டாங்க, கோவை குண்டுவெடிப்பு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாமியன் புத்த சிலைகள் தகர்ப்பு உள்ளிட்ட செயல்களுக்காகவும், இரட்டை கோபுரம் தகர்ததற்காகவும், பார்லியில் குண்டு வைத்ததற்காகவும் நீங்கள் வெட்கப்பட்டு இருக்கிறீர்களா ?

suvanappiriyan said...

//இந்துக்கள் நல்லாவே வெட்கப்பட்டாங்க, கோவை குண்டுவெடிப்பு, ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாமியன் புத்த சிலைகள் தகர்ப்பு உள்ளிட்ட செயல்களுக்காகவும், இரட்டை கோபுரம் தகர்ததற்காகவும், பார்லியில் குண்டு வைத்ததற்காகவும் நீங்கள் வெட்கப்பட்டு இருக்கிறீர்களா ?//

கோவை குண்டு வெடிப்பை கண்டித்து அன்றே எனது கண்டனங்களை தெரிவித்திருக்கிறேன். பாமியான் சிலை தகர்ப்புக்கு என்ன காரணம் என்பதை தாலிபான்கள் விபரமாக விளக்கமளித்திருந்தார்கள். புத்தர்களின் சிலையை வணங்க இன்று ஆப்கானிஸ்தானில் எந்த பவுத்தரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்க உளவு துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று பல அமெரிக்கர்கள் இன்று எழுதி வருகின்றனர். ஒருக்கால் அதனை முஸ்லிம்கள் செய்திருந்தால் வன்மையாக கண்டிக்கிறேன். அப்பாவிகளை கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

Barari said...

கடைசியில் நீங்கள் முன் வைத்திருக்கும் கேள்விகள் காவி கண்ணனுக்கு உரைக்காது .காவி கும்பல் எப்போதும் ஒரே சிந்தனையிலேயே இருப்பார்கள் அது கோயபல்ஸ் தத்துவம் ௦

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//பேச நாதிக் கெட்டவர்கள்.. மைனஸ் ஓட்டினைக் குத்த மட்டுமே தெரியும் ... !!! குத்துங்க குத்துங்க... நல்லா குத்துங்க... சிங்களவன் இலங்கையில் மொத்தமா குத்தப் போறானுங்க//

விரக்தியில் உள் மனதில் உள்ளது அப்படியே வெளி வருகிறது. எண்ணம் போல்தான் வாழ்வு. கவலை வேண்டாம். முஸ்லிம்கள் மேல் கை வைத்தால் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவு வீழ்ச்சி அடையும் என்பதை அறியாதவரல்ல ராஜபக்ஷே! பல பவுத்தர்கள் இஸ்லாத்தை நோக்கி செல்வதை மட்டுப் படுத்தவே இது போன்ற நிகழ்வுகள். காலப் போக்கில் உண்மையே நிலைத்து நிற்கும்!

//நண்பர் சுகவனபிரியன் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூட்டுக்கு என்ன பதிவு போட்டாருன்னு எனக்கு தெரியாது. அதையும் ஞாயம்னு சொல்லுவருங்கறது மட்டும் எனக்கு நல்லா புரியுது.//

நண்பர் விருச்சிகன்!
அதையும் நியாயப்படுத்துவேன் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொண்டீர்கள். அந்த தாக்குதல் நடந்த பொழுது நான் இட்ட பதிவு.

........மூன்று இடங்களில் தொடர்ந்து குண்டு வெடிப்பு நிகழ்நததில் 20 க்கு மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த மனித குல எதிரிகளை இனம் கண்டு தூக்கில் ஏற்ற வேண்டும். எனது நாட்டு மக்களின் மீது அதுவும் அப்பாவி மக்கள் மீது கோழைத் தனமாக தாக்குதல் நடத்தியிருக்கும் பேடிகளை மனித ஜெனமம் என்றே கூற இயலாது.......

அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32
.
http://suvanappiriyan.blogspot.com/2011/07/blog-post_13.html

suvanappiriyan said...

என்ன நிரூபன் சௌக்கியமா! உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் வழியை இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். அதன்படி செயல்பட்டு பரிசை வெல்ல முயற்ச்சிக்கவும்.

http://suvanappiriyan.blogspot.com/2012/08/blog-post_5.html

இக்பால் செல்வன்!

//தனிநாடு உரிமை என்றெல்லாம் கேட்கக் கூடாது .. புத்தரை தெய்வமாக ஏற்றால் உங்களுக்கு அமைச்சர் பதவி முதல் அனைத்தும் கிடைக்கும். ... !!!//

ஹி..ஹி...ரிஷாத் பத்ருதீன் புத்த மதத்துக்கு எப்போங்க மாறுனாரு...சரியான காமெடி போங்க...

UNMAIKAL said...

அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!

28 Jul 2012

குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.

காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள்.

கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது.

அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது.

இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர்.

எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள்.

வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள்.

துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள்.

கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.

டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

இங்கே சொடுக்கி >>>> முஸ்லிம் இனப்படுகொலை 1 <<<<< படம் காணுங்கள்

நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர்.

கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை.

அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.

“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.

கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.

பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர்.

கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இங்கே சொடுக்கி >>>> முஸ்லிம் இனப்படுகொலை 2 <<<< படம் காணுங்கள்

ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.

இங்கே சொடுக்கி >>>> முஸ்லிம் இனப்படுகொலை 3 <<<< படம் காணுங்கள்

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.

UNMAIKAL said...

அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை! Part 2


உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர்.

கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர்.

5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கே சொடுக்கி >>>>> முஸ்லிம் இனப்படுகொலை 4 <<<< படம் காணுங்கள்

10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர்.

ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது.

தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள்.

வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.

SOURCE: http://www.thoothuonline.com/assam-muslim-genocide-has-same-model-as-gujarat-genocide/

Anonymous said...

K A V Y A says:
August 5, 2012 at 5:22 pm

கட்டுரையில் சொல்லப்பட்டதற்கும் மலர்மன்னனின் தற்போதைய பதிலுக்கும் தொடர்பில்லை. சொல்லப்பட்ட விடயத்தை இருட்டடிப்பு செய்யும் முயற்சிதான் வெளித்தெரிகிறது. மலர்மன்னன் சொன்னது ஆகம விதிகள் ‘பிராமணர்கள்’ என்று சொல்லும் அவர் ஜாதிக்காரகளை மட்டும்தான் கருவறைக்குள் நுழைந்து கடவுளை அர்ச்சனை பண்ணவிடுகின்றன என்றார். அவரைப்போல சுமிதா, சந்திரமவுளி, வேதம் கோபால் போன்றோரும் எழுதினர்.

இங்கு எழும் கேள்விகள் திண்ணையில் நம்மால் வைக்கப்படுகின்றன. ஈ வேரா, மற்றவெருமே இங்கில்லை. விடுதலைப்போராட்ட வரலாறு தேவையில்லை.

மலர்மன்னன் கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் வரும் விபரீத விளைவுகளைப்பாருங்கள்: எவ்வளவுதான் உயரிய ஆன்மநிலையை அடைந்து, அர்ச்சகராக ஒரு கோயிலில் தன் வாணாளைக் கழித்து இம்மதத்துக்கு தன்னால் ஆகமுடிந்த தொண்டைச்செய்ய பேராவாக்கொண்ட ஒருவனும், கருவறைக்குள் புகுந்த விலைமகளிரைப்புணர்ந்து சிவலிங்கத்தில் பின் க்ண்டோமை விட்டெறியும் தேவனாதனும் நம் முன்னே வந்து அரச்சகராக விழைவதைச்சொல்லும்போது முன்னவர் நிராகரிக்கப்படுவார்; தேவநாதன் அழைக்கப்படுவார். ஒரேகாரணம் ஆகம விதிகள் முன்னவர் அபார்ப்பனராக இருந்தபடியாலே தடுக்கின்றன; அதே விதிகள் பின்னவர் பார்ப்பனப்பெற்றோருக்குப்பிறந்ததனாலே தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் புராதனமான மச்சேசுவரர் திருக்கோயிலில் அரச்சனை பண்ண அழைக்கப்படுவார்.

இந்த கொடுமை ஏன்?

மெரிட் போகிறது இட ஒதுக்கீடு கொடுத்தால் என கூக்குரலிடுவோர்., இங்கே பிறப்பால் ஒருவனுக்குத் தகுதி வருகிறது என்கிறார்கள். இப்படிச்சொல்லும் இதே மலர்மன்னன் தான் ஹிந்து மதத்துக்காகப்பாடுபடுவதாக பெரிதும் பறைசாற்றி வருகிறார். எப்படி சாத்தியமாகும்? சாதிகள் அவசியமென்றும் ஆகம விதிகள் பார்ப்ப்னரைத்தான் விடுகின்றன எ\ன்றும் சொன்னால் மற்ற ஜாதியினர் ஹிந்து மதத்தில் ஏன் இருப்பார்கள்? இருக்க வேண்டும்? மதமே ஜாதிக்கொரு நீதியென்று சொல்லிவிட்டதே!

இந்துமதத்தில் பெரும் சாபக்கேடு இந்த ஜாதிகள். அவை அவசியமென்று சொன்னால், அஃது இந்துமதத்தை முடக்கிப்போடும். சாதிகள் அவசியமானால், சாதிகள் இருக்கும். சாதிகள் இருந்தால் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சாதிகள் இருக்கும்போது, மேல், இடை சாதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவர் அவர்களிடம் பலவகை பலங்கள் இருக்கின்றபடியால். கீழ்ச்சாதியினரான, பறையர்கள், பள்ளர்கள், சக்கிலியர்கள், குறவர்கள் நிலையென்ன? அவர்களை மேல், இடை ஜாதிகளின் இடத்தில் வைத்துப்பார்க்க முடியுமா? விடுவார்களா? அதைத்தானே பரமக்குடியில் பார்த்தோம் போனவாண்டு!

ஆக, மலர்மன்னன் செய்துகொண்டிருப்பது தலித்துக்களை இந்து மதத்திலிருந்து ஓட ஓட விரட்டும் செயலாகும். பார்ப்ப்னரகள் மட்டுமே இறைத்தொண்டு செய்யலாமென்றால், பார்ப்பனரல்லா இடை ஜாதியினரெர்ல்லாம் கூண்டோடு இழிவுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் ஒன்றும் அர்ச்சகர் தொழிலுக்கு ஏங்கவில்லை. வரவும் மாட்டார்கள்.. ஆனால் சொல்பவன் பார்ப்ப்னருக்கு மட்டுமே அதற்குத்தகுதி – சுமிதா எழுதியதைப்போல அவர்கள் மட்டுமே நல்ல பண்புடையோர் என்று_ சொல்லும்போது இடைஜாதியினருக்கு கண்டிப்பாக‌ வலிக்கத்தான் செய்யும்.

தமிழகத்தில் பார்ப்ப்ன எதிர்ப்பை முன்னின்று நடாத்தியவர்கள் தலித்துக்களல்ல. இடைஜாதியினரே. அவர்களை அனுசரிக்கத்தெரியாமல் தாம் அவர்களை விட மேல் ஜாதியெனற தமிழ்நாட்டுப்பார்ப்பன்ர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தமையால் அவர்களின் வெறுப்புக்காளானார்கள். இதுவே பார்ப்பன எதிர்ப்பின் அடிப்படையாகும். மற்றெல்லாம் செயல்கள் மட்டும்தான். அடிக்கருத்தே அல்லது உந்துக்கருத்தே நாம் பார்ப்பது.

மறற மாநிலங்களில், குறிப்பாக, குஜராத்தில், பார்ப்ப்னர்கள் விரும்பப்படுகிறார்கள். காரணம் அவர்கள் தலித்துகளை மட்டுமே தள்ளினார்கள். இடைஜாதியினரோடு அணுக்கலாக வாழ்ந்தபடியாலே அங்கு பார்ப்பன எதிர்ப்பு வரவேயில்லை.

ஆக, தலித்துகளைத் தள்ளினார்கள். ஒன்றும் பெரிய விடயமில்ல. காரணம் இடைசாதி அதை விரும்பியது. இடைஜாதியினரைத் தள்ளினார்கள் அதுவே பெரிய தவறு. அத்தள்ளளின் ஓரம்சமாகவே தேவநாதன் அர்ச்சகராகலாம். மற்றவர் எவரும் – எத்துணைதான் ஆன்மிகச்செம்மலாக இருந்தாலும் – ஆக முடியதென்பது.

இந்துமதத்துக்கு உதவியில்லாவிட்டாலும் உபத்திரம் இல்லாமல் இருக்க முடியாதா?

இந்துமதத்தைப்பற்றி வாய் திறக்கமறுக்கிறார். ஆனால் அவர் ஜாதியின் புகழைபபாட தய்ங்குவதில்லை என்பது மேலுள்ள அவர் பதிலில் தெளிவாகும். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.

suvanappiriyan said...

Kavya says:
August 4, 2012 at 12:09 pm

முதல்வரியே சர்ச்சைக்குறியது. ஆலயப்பிரவேசத்தை நடாத்தியது ஒரு தமிழ்ப்பார்ப்ப்னர் எனபது உண்மை. ஆனால், ‘ஒரு’ என்பதும் உண்மை. அவரைச்சிறையில் அடைக்க முயன்றது அன்றைய அரசு. அதன் தலைவரும் ஒரு தமிழ்ப்பார்ப்பனரே. எப்படி இதற்கப்பாலும் நாம் இந்தியாவில் இருப்பது நமக்கே நல்லதன்று என்று நினைத்து வெள்ளைக்காரன் போனானோ அதன்படியே இதற்குமேல் இந்த அசிங்கத்தை நாம் செய்தால் த்ம் மதமே காணாமல் போகும் என நினைத்துத்தான் அவரைச்சிறையில்டைககக்கூடாதென்றார் அந்தத்தலைவர். இதற்கிடையில் மிசுநோரிகள், மற்றும் இசுலாமிய மதமாற்றாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் போய்க்கொண்டிருந்தது. அவர்களெல்லாரும் தலித்துகளிடம் ‘பார்த்தீர்களா, உங்களை தீண்டத்தகாதவர்களென்று சொல்லி கோயிலுக்குள் நுழையவிடாமல் செய்கிறார்கள் இந்துமதத்தில். எங்களிடம் வந்து விடுங்கள். எல்லாரும் சமம்!’ என்று சொன்னார்கள். சுவனப்பிரியன் சொல்லிக்கொண்டேயிருக்கிறார் இன்னும் இல்லையா!. இப்படிப்பட்ட சங்கடமான காலகட்டத்தில் தாமிருப்பதாக உணர்ந்தபடியாலேயே ஆலயப்பிரவேசம் வெகுவாக சிரமத்தைச்சந்திக்கவில்லை. இஃதென் சொந்த கருத்து.

தலித்து, நாடார் இளைஞர்களோடு அவர் உள்ளே நுழைய ஆரம்பித்தவுடன் மீனாட்சி கோயில் ஆகம விதிகளின்படி ‘தகுதியுடைய’ அர்ச்சகர்கள் திரண்டுவந்து ஒரு சுவராக நின்றார்கள். போலீசுக்கு போன் போட்டுவரவழைத்தார்கள்.

தமிழ்ப்பார்ப்ப்னர்களுள் அரிசனநலத்துக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் உழைத்தோருண்டு. ஆனால் அவர்கள் எண்ணிக்கையை மற்ற தமிழ்ப்பார்ப்ப்னர்களோடு ஒப்பிடும்போது குறைவே. அன்றைய பார்ப்ப்னர்களுள் எத்தனை பேர் வைத்தியநாதையருக்கு ஆதரவளித்தார்கள்?

இன்றும் சுமிதா எழுதுகிறார்; சந்திரமவுளி சரியென்கிறார். வேதம் கோபால். மற்றவர்கள் ஆகக்கூடாதென்று சொல்லிவிட்டு இப்போது மாற்றிக்கொள்கிறார். மலர்மன்னன் ஆகம விதிகள் பார்ப்ப்னரை மட்டும்தான் ஏற்றுக்கொள்கின்றன என்கிறார்.

ஆலயப்பிரவேசம் தடைசெய்யப்பட்டது தலித்துகளுக்கு. அது தீண்டாமை என்கிறோம். அர்ச்சகர்களாவது பார்ப்ப்னர்கள் மட்டுமே என்றும் பிறருக்கு இறைவனருகில் செல்ல தகுதியில்லை என்பதும் தீண்டாமையே.

இவர்களைத்தவிர இறைவனுக்கு மற்ற மக்களைப்பிடிக்காதாம். அப்படி ஆகம விதிகள் சொல்கின்றனவாம். இறைவனை இப்படி ஆராவது இம்சைப்படுத்துவரா?

UNMAIKAL said...

யார் வந்தேறிகள்?
4 Aug 2012

அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.

நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை.

அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது.

இதுவரை ஏறத்தாழ நூறு பேர் மரணித்துவிட்டனர். நான்கு லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.

இங்கு உள்ள பிரச்சனைதான் என்ன?

இந்த அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பற்றி எரியவில்லை, மூன்று மாவட்டங்களில்தான் பிரச்சனை வெடித்துள்ளது.

அதிலும் இராணுவம் உடனடியாக களத்திற்கு வராததுதான், இந்த பிரச்சனை எல்லை மீறிய வன்முறையாக மாறுவதற்கு காரணம்.

ஆனால் அம்மாநிலத்தின் முதல்வர் தருண் கோகாய், இங்கு நடைபெற்று கொண்டிருப்பது “இன பிரச்சனைதான்” என்று கூறியுள்ளார்.

மற்றும் இந்திய தேசத்தில் இருந்தது முஸ்லிம்களை வேறோடு அழித்துவிட வேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளவர்களில் ஒருவரான அத்வானி,

“வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் இவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்” என்று தன் திருவாயில் இருந்து மொழிந்துள்ளார். இதனையே இவர்கள் பன்னெடுங்காலமாக கூறி வருகின்றனர்.

கூட்டணி குழப்பங்கள், உள்கட்சி குழப்பங்கள் என்று திணறி வரும் பா.ஜ.க.விற்கு, இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

பழங்குடி இன குழுக்கள் என்ற போர்வையில் செயல்பட்டு வரும் போடோ பிரிவினை வாத குழுக்கள் இவர்களின் சவாரிக்கு பயன்படுகின்றனர்.

அஸ்ஸாம், மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து வருகின்றனர்.

தங்களை இந்தியர்கள் என்று நிருபிக்க, இவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த பொய்யை காரணமாக வைத்தே இந்த அப்பாவி முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்தும், அவர்களின் உயிர்களை வன்முறை மூலம் பறித்தும் வருகின்றனர்.

இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றால் எப்போது வந்தார்கள்
இராணுவம், எல்லை பாதுகாப்பு படை, உளவுத்துறை என அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு இத்தனை பேர் எப்படி ஊடுறுவினார்கள்? என்ற கேள்விகள் எழுவது இயல்புதானே.

ஆனால் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமாக உள்ளது.

அஸ்ஸாமில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக வங்காளதேசத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து சென்றது, அப்போதைய ஆங்கில அரசு.

அவற்றில் பெருன்பான்மையினர் முஸ்லிம்கள்.
ஏறத்தாள ஒரு நூற்றாண்டிற்கு முன் சென்றவர்களைதான் இன்னும் ஊடுருவல்காரர்கள் என்று கூறுகின்றனர் இந்த குறுமதியினர்.

இவர்கள் அந்நியர்கள் என்றால் பாகிஸ்தானில் இருந்து வந்த அத்வானி எந்த ரகம்?

இதே அளவுகோலை வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களுக்கும் ஏன் பயன்படுத்தவில்லை?

அப்பாவிகளை அடித்து அதில் பிழைப்பு நடத்தி கொண்டிருக்கின்றன போடோ குழுக்கள்.

ஆயுதங்கள் தங்கு தடையின்றி அவர்களிடம் புரள்கின்றன. இதற்கு மாநில அரசும் உடந்தை, இந்த போடோ குழுக்கள் அரசிலும் பங்கு வகிக்கிறது.

முஸ்லிம்களை பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு இந்த உண்மையான பிரிவினைவாதிகள் மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்தகைய பிரிவினைவாதிகள் முஸ்லிம்களை மட்டும் குறிவைக்கவில்லை, சில வருடங்களுக்கு முன்னர் இதே அஸ்ஸாமில், பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது.

இதே போன்ற குறுமதியினர் மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் உள்ளனர்.

பரந்து விரிந்த நாட்டில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் மற்ற பகுதிகளில் வேலை பார்க்கக் கூடாது என்று கூறுவது வடிகட்டிய முட்டாள்தனம்.

இவர்களின் முட்டாள்தனத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்திய தேசத்தை துண்டாக்கி விடுவார்கள்.

அதன் பிறகு “வேற்றுமையில் ஒற்றுமை” என்பது பாட நூல்களில் மட்டும்தான் இருக்கும்.

சிந்தனைக்கு
-:ஏர்வை ரியாஸ்:-

Anonymous said...

http://www.kodangi.com/2012/08/truth-behind-the-dambulla-mosque-problems-in-srilanka.html

இந்தப் பதிவிற்கு தொடர்புடைய பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.. பார்க்கவும் ... !!!

Anonymous said...

////புத்தர்களின் சிலையை வணங்க இன்று ஆப்கானிஸ்தானில் எந்த பவுத்தரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரட்டை கோபுர தாக்குதல் அமெரிக்க உளவு துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று பல அமெரிக்கர்கள் இன்று எழுதி வருகின்றனர். ஒருக்கால் அதனை முஸ்லிம்கள் செய்திருந்தால் வன்மையாக கண்டிக்கிறேன். அப்பாவிகளை கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.////

வணங்க ஆள் இல்லை என்றால் எதையும் உடைப்பீர்கள் .. அப்போ எகிப்தின் பிரமிட், இராக்கின் பாபிலோனிய சின்னங்களை மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் உடைத்துத் தள்ளலாமே !!! இல்லை எதாவது ஸ்பெஸல் குரல் மேலிருந்து வரும் வரைக் காத்திருக்கின்றார்களா.. அல்லது அங்குள்ளவர்கள் உண்மை முஸ்லிம்கள் இல்லையா..

அப்போ விமானத்தைக் கடத்தி இரட்டைக் கோபுரத்தில் மோதப் பண்ணிய அந்த நால்வரும் முஸ்லிம்கள் இல்லை என சொல்ல வருகின்றீர்களா ... !!!

அப்பாவிகளான சிரிய மக்கள் கொல்லப்படுவதை இஸ்லாம் ஏன் இன்னும் வேடிக்கை மட்டும் பார்க்கின்றது .. !!! அவர்கள் முஸ்லிம்கள் இல்லையோ.. !!!

Anonymous said...

//பேச நாதிக் கெட்டவர்கள்.. மைனஸ் ஓட்டினைக் குத்த மட்டுமே தெரியும் ... !!! குத்துங்க குத்துங்க... நல்லா குத்துங்க... சிங்களவன் இலங்கையில் மொத்தமா குத்தப் போறானுங்க//

அப்போ மைனஸ் போட்டதில் நீங்களும் இருக்கின்றீர்கள் போல !!!

ரங்குடு said...

சரி, இவிங்கெல்லாம், "இன்று முதல் நான் எந்த மதத்தையும் சார்ந்தவனில்லை" ன்னு ஒரு அறிக்கை கொடுக்க மாட்டாங்களா?

suvanappiriyan said...

திரு ரங்குடு!

//சரி, இவிங்கெல்லாம், "இன்று முதல் நான் எந்த மதத்தையும் சார்ந்தவனில்லை" ன்னு ஒரு அறிக்கை கொடுக்க மாட்டாங்களா?//

நான எந்த மதத்தையும் சார்ந்தவனல்ல... போதுமா?

suvanappiriyan said...

//அப்போ மைனஸ் போட்டதில் நீங்களும் இருக்கின்றீர்கள் போல !!!//

யார் யார் மைனஸ் ஓட்டு குத்தியது என்பதை அழகாக பார்க்க வசதியுள்ளது இக்பால் செல்வன். நான் குத்தவில்லை.

//அப்போ விமானத்தைக் கடத்தி இரட்டைக் கோபுரத்தில் மோதப் பண்ணிய அந்த நால்வரும் முஸ்லிம்கள் இல்லை என சொல்ல வருகின்றீர்களா ... !!!//

கண்டிப்பாக...ஒரு உண்மையான முஸ்லிம் அப்பாவி மக்களை இலக்காக்க மாட்டான். அடுத்து உலகையே கண்காணிக்கும் வசதி கொண்ட அமெரிக்காவுக்கு நான்கு விமானத்தை கடத்தி அதனை உலக வர்த்தக மையத்தில் இடிக்கும் வரை எதுவமே அமெரிக்க உளவு நிறுவனத்தக்கு தெரியாது என்று சொல்கிறீர்களா? எல்லாம் கடைந்தெடுத்த நாடகம்.

//வணங்க ஆள் இல்லை என்றால் எதையும் உடைப்பீர்கள் .. //

அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை. அதில் நாம் போய் எவ்வாறு தலையிட முடியும். கோரிக்கை வேண்டுமானால் வைக்கலாம்.

Anonymous said...

Mr Iqbal Selvan,


///http://www.kodangi.com/2012/08/truth-behind-the-dambulla-mosque-problems-in-srilanka.html

இந்தப் பதிவிற்கு தொடர்புடைய பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.. பார்க்கவும் ... !!!///


உங்கள் வலைத்தளத்தில் அங்குமிங்கும் ஒவ்வொருவர் செய்தியாகப் போட்டதை அள்ளிப் போட்டிருக்கிறீர்கள்.

சில செய்திகள் உண்மைக்கு மாற்றமாக உள்ளன.

தம்புள்ள நகருக்கு ஒருமுறை போய், அங்கு வாழும் பௌத்த மக்களிடமே விசாரித்து, நிகழ்வின் யதார்த்தத்தை எழுதுங்கள். அப்போது என்ன நடந்தது என்று நன்கு புரியும்.

முஸ்லிம்களிடம் விசாரிக்க வேண்டாம். ஏனெனில், அவர்கள் சொல்லுவது உங்கள் அறிவிற்குப் பொருந்தாது!


- இஸ்மத்

Anonymous said...

//அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை. அதில் நாம் போய் எவ்வாறு தலையிட முடியும். கோரிக்கை வேண்டுமானால் வைக்கலாம்.//
அது போல தொல்லை கொடுப்பவர்களை தொலைத்து காட்டுவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் உரிமை . so உங்கள் இலக்கணப்படி பர்மாவில் நடப்பது தவறு இல்லை என்றே நினைக்கிறேன். அது அந்த நாட்டின் உரிமை. கேட்பதற்கு நாம் யார், வேண்டுமென்றால் கோரிக்கை வைக்கலாம்

Anonymous said...

//அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை. அதில் நாம் போய் எவ்வாறு தலையிட முடியும். கோரிக்கை வேண்டுமானால் வைக்கலாம்.//

@ சுவனப்பிரியன் -

சரி தான் .. அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை .. அப்போ ஏன் இலங்கையை பற்றி நீங்கள் எழுதுகின்றீர்.. அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை என விட்டுவிடலாம் தானே !!! சிங்கள நாட்டு மக்களின் சிங்கள் அரசின் உரிமைப் படி பள்ளிவாசலை நீக்கிவிட்டு போகட்டுமேன் !!!

உமக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா !!!

Anonymous said...

@ இஸ்மத் என்ற மகாமேதாவியாரே நீங்கள் தான் சரியான ஆள் -

//உங்கள் வலைத்தளத்தில் அங்குமிங்கும் ஒவ்வொருவர் செய்தியாகப் போட்டதை அள்ளிப் போட்டிருக்கிறீர்கள். //

சுவனப்பிரியனின் பதிவு மட்டும் எங்கும் எங்கும் எடுத்து போட்டுள்ளாரோ.

//சில செய்திகள் உண்மைக்கு மாற்றமாக உள்ளன.//

எந்த உண்மைக்கு மாற்றமாக உள்ளன.. நீங்கள் எதிர்ப்பார்ப்பவைகளுக்கு மாற்றமாக உள்ளனவோ. சரி எவை எவை எல்லாம் உண்மைக்கு மாற்றாக உள்ளன. அவை உண்மையா பொய்யா என்பது எப்படி உங்களுக்குத் தெரியும் ...

//தம்புள்ள நகருக்கு ஒருமுறை போய், அங்கு வாழும் பௌத்த மக்களிடமே விசாரித்து, நிகழ்வின் யதார்த்தத்தை எழுதுங்கள். அப்போது என்ன நடந்தது என்று நன்கு புரியும்.//

சுவனப்பிரியன் மட்டும் தம்புள்ளேக்கு போய் உண்மைகளை விசாரித்து யதார்த்தமாக எழுதினவரோ... ஏன் இஸ்மத் என்பவர் நேரில் போய் பிக்குகளை சந்தித்து உண்மையை எழுதி எமக்கு தெரியப்படுத்தலாமே.

//முஸ்லிம்களிடம் விசாரிக்க வேண்டாம். ஏனெனில், அவர்கள் சொல்லுவது உங்கள் அறிவிற்குப் பொருந்தாது!//

சரி தான். இலங்கையின் பிரபல பதிவர் எனக்கு நெருங்கிய தோழர் ஆவார். அவர் மிகவும் நடுநிலைவாதியான சிங்களவரும் கூட. அவர் ஊடாகவே தகவல்களைப் பெற்றேன். என்னால் முடிந்த அளவுக்கு கூற முடியும் நான் எழுதியவை நம்பகமான தகவல்களே !!!

தவறு எனில் விவாதிக்க தயார் ... !!!

Unknown said...

//இதற்கு நீங்கள் அல்லவா அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்? முஸ்லிம் பகுதிகளில் குண்டை வைத்து வெடிக்கச் செய்து பல முஸலிம்களின் உயிரை காவு வாங்கி முடிவில் உயிர் பிழைத்த மற்ற முஸ்லிம்களை 'நீ தான் குண்டு வைத்தாய்!' என்று கூறி அழைத்து செல்வது எந்த நாட்டிலாவது நடக்குமா? மாலேகான் குண்டு வெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு என்று வரிசையாக நம் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புக்கு காரணமான இந்துத்வா செயலுக்காக நீங்கள் அல்லவா வெட்கப்பட்டிருக்க வேண்டும்?//

இந்த செயல்களுக்காக இந்து என்ற முறையில் நாங்கள் வெட்கப்படுகிறோம். அதுபோல் அமைதி மார்க்கத்தவர்களால் இதுவரை செய்யப்பட்ட தீவிரவாத செயல்கள் மற்றும் குண்டு வெடிப்புகளுக்காக சுவனப்பிரியன் வெட்கப்படுவார் என்று நினைக்கிறேன்.
/

suvanappiriyan said...

ஆனந்தன் கிருஷ்ணன்!

//இந்த செயல்களுக்காக இந்து என்ற முறையில் நாங்கள் வெட்கப்படுகிறோம். அதுபோல் அமைதி மார்க்கத்தவர்களால் இதுவரை செய்யப்பட்ட தீவிரவாத செயல்கள் மற்றும் குண்டு வெடிப்புகளுக்காக சுவனப்பிரியன் வெட்கப்படுவார் என்று நினைக்கிறேன்.//

கண்டிபபாக. ஒரு முஸ்லிம் இது போன்ற காரியங்களை செய்தது சந்தேகமற நிரூபிக்கப்பட்டால் அதறகாக ஒரு முஸ்லிம் என்ற நிலையில் நானும் வெட்கப் படுகிறேன். இஸ்லாத்தை விளங்காமல் வளர்த்த அவனின் தாய் தந்தையரையும் நினைத்து வேதனைப்படுகிறேன்.

Anonymous said...

மீண்டும் யாழ் முஸ்லிம் சொல்கிறது...

http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_6655.html

suvanappiriyan said...
This comment has been removed by the author.
Anonymous said...

நன்றி இஸ்மத். நீங்கள் சொல்வது போல இக்பால் செல்வன் ஒருக்காலும் செய்ய மாட்டார். ஏனென்றால், அவர் எப்போதும் இஸ்லாத்தை எதிர்ப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார். ....................அது அவளது உரிமை என்றும் அதைத் தட்டிக் கேட்பது ஆணாதிக்கம் என்றும் சொன்னவர் தானே அவர். அப்படிப்பட்ட நடத்தையை ஆமோதிக்கும் ஒருவரது கருத்துக்களைக் கணக்கெடுக்க வேண்டியதில்லை.

- வள்ளுவன்

suvanappiriyan said...

@Iqbal Selvan!

//சரி தான் .. அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை .. அப்போ ஏன் இலங்கையை பற்றி நீங்கள் எழுதுகின்றீர்.. அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை என விட்டுவிடலாம் தானே !!! சிங்கள நாட்டு மக்களின் சிங்கள் அரசின் உரிமைப் படி பள்ளிவாசலை நீக்கிவிட்டு போகட்டுமேன் !!!

உமக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா !!! //

பாமியான் சிலைகளை வணங்க அங்கு ஒரு பவுத்தரும் இல்லை. அதனை சொந்தம் கொண்டாடி உரிமை கூறும் ஒருவரும் இல்லை. ஆனால் தம்புள்ள பள்ளிவாசல் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு பல வருடங்களாக வழிபாடு நடந்து வருகிறது. இன்று வரை அது தொடர்கிறது. இரண்டையும் ஒரே அளவு கோலில் பார்க்கச் சொல்லி உங்கள் அறிவு சொல்கிறதா?

@ Anany!

//அது போல தொல்லை கொடுப்பவர்களை தொலைத்து காட்டுவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் உரிமை . so உங்கள் இலக்கணப்படி பர்மாவில் நடப்பது தவறு இல்லை என்றே நினைக்கிறேன். அது அந்த நாட்டின் உரிமை. கேட்பதற்கு நாம் யார், வேண்டுமென்றால் கோரிக்கை வைக்கலாம் //

நாமும் இங்கு பர்மிய முஸ்லிம்களுக்கு நியாயம் வேண்டி பதிவின் மூலமாக கோரிக்கைதான் வைக்கிறோம்.

நிரூபன் said...

வணக்கம் சுவனப்பிரியன்,
வாங்க,
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது,..அர்த்தம் உள்ளது..

எனும் கவியரசர் கண்ணதாசனின் வரிகள் தான் எனக்கு நினைவிற்கு வருது நண்பா.

நான் உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன்! நீங்க எப்படி இருக்கீங்க?

நிரூபன் said...

சகோ.. நீங்க எந்த உலகத்தில இருக்கிறீங்க.
தம்புள்ள பள்ளிவாசல் கதை பழைய கதை!
இப்போ..
குருநாகல், நீர்கொழும்பு என இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் கைவைச்சிட்டாங்க.

இது லேட்டஸ் நியூஸ்..
செய்திகளை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது.

நிரூபன் said...

நமக்கு யார் தீங்கு செய்தாலும்,
அவர்கள் பக்கம் உள்ள (காவற்துறை அதிகாரி) சொல்வதை வேத வாக்காக நம்புறீங்க பாருங்க! ஹையோ! ஹையோ!

நிரூபன் said...

நான் நோபல் பரிசு வாங்குவது அல்ல இங்கு பிரச்னை. வன்னி காடுகளிலும் யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த 30 வருடங்களாக அலைந்து திரியும் இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்வது என்று யோசித்து ஒரு தீர்வு கண்டால் உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்க பலர் சிபாரிசு செய்யலாம். :-) //

செம காமெடி பண்றீங்க போங்க.
போன வாரம் நாம நார்வே நாட்டுக்கு போயி அங்கே அனைத்துலக தமிழ் அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து, சர்வசன வாக்கெடுப்பு, ஐநா சபை வாக்கெடுப்பு பற்றி ஒரு திட்டம் அலசிட்டு இருக்கோமே!
நீங்க அறியலையா சார்?

நிரூபன் said...

அதை விடுத்து எஃப் எம்மில் வித விதமான பாடல்களை போட்டுக் கொண்டு, சில்மிச கதைகளை நாளொரு பதிவாகவும் போட்டு, ஒரு கையில் பெப்சியையும் மறு கையில் ஹம்பர்கரையும் வைத்துக் கொண்டு ஐரோப்பிய வீதிகளில் ஜோடியாக வலம் வந்தால் இன்னும் 100 வருடம் ஆனாலும் ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. :-( //

அடடா...எத்தனை சில்மிசப் பதிவு போட்டிருப்பேன் சார்? எண்ணிக்கை வச்சிருக்கீங்களா?
பார்த்தீங்களா என்ன தான் தீவிரமாக மதத்தை நேசித்தாலும் கில்மா, சில்மிசம் என்று எழுதினால் ஓடி வந்து படிச்சு ஏமாறுறீங்க தானே;-))))

ஏன் நான் இப்படிச் சொல்றேன்னா...

கில்மா பதிவுக்கு முன்னாடி ஈழ மக்களின் எதிர்காலம், தமிழர்களின் வருங்காலம்
எப்படி அமையனும்? எந்த நாட்டின் தீர்வுத் திட்டத்தினை மாதிரியாக கொண்டு தமிழர்கள் தம் தீர்வு திட்டத்தை வரையனும் அப்படீன்னு பல பதிவுகள் எழுதியிருக்கேன்! அதெல்லாம் உங்களுக்கு தெரியல்ல!

கில்மாவும், சில்மிசமும் தான் கண்ணுக்கு தெரியுதா! வெளங்கிடும்!

நமக்கு புடிக்காத விடயம் என்று சொல்லிட்டு ஒருத்தன் அது பத்தி மறுபடியும் பேசுறான் என்றால் அதற்கு அர்த்தம்...அவனுக்கும் அந்த விடயம் மீது செம இன்ரஸ்ட்டிங்க்!
ஸோ...வாழ்க உங்க கொள்கை!

நிரூபன் said...

:-) அதை விடுத்து எஃப் எம்மில் வித விதமான பாடல்களை போட்டுக் கொண்டு, //

எப்.எம் இல வித விதமான பாடல் போடாட்டி அதுக்கு பேர் எப்படி எப்.எம் ஆகும்?
எப்.எம் இல் வித விதமான பாடல் போடாம நாள் முழுதும் குர் ஆனையும், திருச்சிற்றம்பலத்தையுமா ஓத முடியும்!

என்ன தான் தீவிர மத விசுவாசியா இருந்தாலும் ஒருத்தனால நாள் முழுதும் குர் ஆனையோ இல்ல, திருச்சிற்றம்பலத்தையோ ஊண் உறக்கமின்றி கேட்க முடியுமா? இல்ல உங்களால் தான் கேட்க முடியுமா?

எப்.எம் என்பது ஒரு தொழில் சார்! அது எப்பவுமே வியாபார நோக்கில தான் இருக்கும்!

நிரூபன் said...

நிரூபன் நினைப்பது போல் முஸ்லிம்களை அவ்வளவு லேசில் கை வைத்து விட முடியாது. அது ராஜபக்ஷேவுக்கும் நன்றாகவே தெரியும் என்பதால் நிரூபனின் கருத்துக்களை லேசாக எடுத்துக் கொள்வோம். இலங்கையைப் பொறுத்த வரை முஸலிம்களின் மேல் கை வைத்தால் அரபு நாடுகளின் விசாக்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் அபாயம் //

ஐயா..பெரியவரே! அது பக்ஸேவிற்கு தெரிந்தாலும்,
அவன் கூட இருக்கும் பிக்குகள் என்ன சும்மாவா இருந்தாங்க.

ரெண்டு மூணு நாளைக்கு என்ன பண்ணினாங்க?
முஸ்லிம் மக்கள் எப்படி பௌத்த மக்களை எச்சரித்தாங்க..

இனியும் இந் நிலமை தொடர்ந்தால்
இலங்கையில் முஸ்லீம் ஈழம் உருவாகுவதை தடுக்க முடியாதென்று
மௌலவி, மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர்களும் சொல்லியிருக்காங்க/ எச்சரித்திருக்காங்க.

அவங்க பேச்சிற்கு மேலால நீங்க இன்னோர் விதமா பேசுறீங்க..என்னா கொடுமை சரவணா?
உங்களுக்கு திருச்சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்!

Nizam said...

சுவனப் பிரியன்,

//வெட்கங் கெட்ட விபசாரிகள் கும்பலாக வந்து மேலாடையை கழட்டி போராட்டத்தில் ஈடுபட்டதை லண்டன் காவல்துறை அனுமதிக்காமல் அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளது. லண்டன் காவல் துறை மோசமாக நடந்து கொண்டதாக இக்பால் செல்வன் வேறு குறைபட்டுக் கொள்கிறார்.//

சகோதரே உங்கள் பதிவு படித்து டென்ஷாஆகி சகோதரா இக்பால் செல்வன் ஆவார்கள் தமிழ்மணம் முன்பு கிழ்ஆடை இல்லம்மல் அம்மணமா ஆர்பாட்டம் செய்தலும் ஆச்சிரியபடகில்லை. பாவம் கொஞ்ச காலமாக ஆவார் எதோ காளன்று போனதை போலத்தான் இருக்கிறார்.

Nizam said...

இக்பால் செல்வன் said...

//எனது சகோதரி மார்புகளை திறந்து போராடினால் முதலில் ஓடிப் போய் அவரின் பிரச்சனை என்ன.. அதனை எப்படி தீர்ப்பது என்று தான் யோசிப்பேனே ஒழிய !!! அவற்றைப் பார்த்து ஜொள்ளுவிடுவதையோ. அல்லது கேடு கெட்டவள் என திட்டுவதையோ நான் செய்ய மாட்டேன்.//

வீட்டுக்கு ஓர் விதிகள். ஊர்க்கு ஓர் நிதியா?

உங்க வீட்டில் நடந்தால் தீர்க்க யோசிபிங்கா. ஊர்க்குன்னா ஜொள்ளுவிடுவாங்கா நல்ல இருக்கு உங்கள் வாதம்.

சகோதரா பக்க வாதம், மூளை வாதம், முடக்கு வாதம் இதுபோன்ற வாதத்திற்கு மருந்து இருக்கு உங்க மிதண்டவாதக்கு மருந்து இல்லை.

Nizam said...

இக்பால் செல்வன் said...

//வணங்க ஆள் இல்லை என்றால் எதையும் உடைப்பீர்கள் ..//
நான் இருந்தா கண்டிப்பாக உடைப்பேன் அம்மாணமாக இருப்பது உங்கள் சித்தாந்தாம் இருக்கலாம் அதற்காக அடுத்தவார் வீட்டில் இப்படித்தான் இருப்பேன் என்றால் இது ஒரு மணநோய்.

//அப்போ எகிப்தின் பிரமிட், இராக்கின் பாபிலோனிய சின்னங்களை மட்டும் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் உடைத்துத் தள்ளலாமே !!!// இந்த சின்னங்கள் எல்லாம் உங்கள் சித்தாந்தந்திற்கு கட்டுபாடதவை.

Nizam said...

இக்பால் செல்வன் said...

//அப்போ விமானத்தைக் கடத்தி இரட்டைக் கோபுரத்தில் மோதப் பண்ணிய அந்த நால்வரும் முஸ்லிம்கள் இல்லை என சொல்ல வருகின்றீர்களா ... !!!//

நான் நினைக்கிறேன் ibnukasir, Iqbal selvan இவர்களை போல போலி பெயரில் விமானத்தில் சென்றிப்பார்கள். (உ,ம்) நீ விமானம் ஒட்டிசென்றிந்தால் இதற்கு எப்படி முஸ்லீம் பொருப்பகா முடியும்

//சரி தான் .. அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை .. அப்போ ஏன் இலங்கையை பற்றி நீங்கள் எழுதுகின்றீர்.. அது அந்த நாட்டு மக்களின் அரசின் உரிமை என விட்டுவிடலாம் தானே !!! சிங்கள நாட்டு மக்களின் சிங்கள் அரசின் உரிமைப் படி பள்ளிவாசலை நீக்கிவிட்டு போகட்டுமேன் !!!//

ஆப்கானிஸ்தானில் புத்தபிக் இருக்கிறார்களா நீ காட்டு. இலங்கையில் முஸ்லீம் இருப்பதை நான் காட்டுகிறேன்.

//சுவனப்பிரியன் மட்டும் தம்புள்ளேக்கு போய் உண்மைகளை விசாரித்து யதார்த்தமாக எழுதினவரோ... ஏன் இஸ்மத் என்பவர் நேரில் போய் பிக்குகளை சந்தித்து உண்மையை எழுதி எமக்கு தெரியப்படுத்தலாமே.//

அப்போ நீங்கா பர்மா முஸ்லீம் என்று எழுதுநாயே நீங்கள் பார்மா சென்றிர்களா அல்லது உங்கள் சித்தந்தா நன்பர்கள் உங்கள் தகவள் அளித்தாரா

Anonymous said...

Mr Nirupan,

///போன வாரம் நாம நார்வே நாட்டுக்கு போயி அங்கே அனைத்துலக தமிழ் அமைப்புக்களுடன் கலந்தாலோசித்து, சர்வசன வாக்கெடுப்பு, ஐநா சபை வாக்கெடுப்பு பற்றி ஒரு திட்டம் அலசிட்டு இருக்கோமே!
நீங்க அறியலையா சார்?///


எரிக் சொல்கைமே கைவிட்டு விட்டார்.

எத்தனை தடவை கலந்து ஆலோசிக்கறதாம்?

நீங்கள் அது, இது என்று கலந்து ஆலோசித்துவிட்டு, வடையும் டீயும் குடித்துவிட்டு வந்தால், அரசாங்கம் வாக்கெடுப்பை நடத்திடுமா? வட, கிழக்கை இணைத்திடுமா?

நடக்கிறதை கதைக்க வேண்டும் நிரூபன்.


///ஈழ மக்களின் எதிர்காலம், தமிழர்களின் வருங்காலம்
எப்படி அமையனும்? எந்த நாட்டின் தீர்வுத் திட்டத்தினை மாதிரியாக கொண்டு தமிழர்கள் தம் தீர்வு திட்டத்தை வரையனும் அப்படீன்னு பல பதிவுகள் எழுதியிருக்கேன்!///

தீர்வுத் திட்டம் அப்படி இப்படியென்று, நீங்கள் மட்டுந்தானா எழுதியிருக்கிறீர்கள்?

30 வருட காலமாக எழுதிக் குவித்தார்களே! ஒரு பயனும் இல்லை. எல்லாம் முள்ளி வாய்க்காலோடு சங்கமம் ஆகிவிட்டது.

///தம்புள்ள பள்ளிவாசல் கதை பழைய கதை!
இப்போ..
குருநாகல், நீர்கொழும்பு என இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களிலும் கைவைச்சிட்டாங்க.///

அட, நீர்கொழும்பிலுமா? பொய் பேசுவதென்றாலும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். அங்கு, அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

நீர் கொழும்பில் எத்தனை பள்ளிவாசல்கள் உண்டு. பள்ளிவாசல்கள் அமைந்துள்ள வட்டாரங்களின் பெயர்கள் என்ன? இதையாவது சொல்ல முடியுமா?

- Ismath

Anonymous said...

//ஆப்கானிஸ்தானில் புத்தபிக் இருக்கிறார்களா நீ காட்டு. இலங்கையில் முஸ்லீம் இருப்பதை நான் காட்டுகிறேன்.//

சரி தான்.. அப்போ மாலியில் சுபிக்கள் இருக்கும் போதே அவர்களின் தர்க்காக்களை உடைத்தீர்கள் .. சௌதியில் இருந்த சினகோக்குகள் எல்லாம் காக்காத் தூக்கிக் கொண்டு போய்விட்டதோ. சென் சோபியா கத்தீட்ரல் மசூதியாக மாற்றப்படும் போது கிருத்தவர்கள் எல்லாம் வேறு கிரகத்துக்கு ஓடி போய் இருந்தனரோ.. பட்டியல் போட தொடங்கினால் போட்டுக் கொண்டே போகலாம். இது சுபி ஐயாவுக்கும் தெரியும் ..

// அப்போ நீங்கா பர்மா முஸ்லீம் என்று எழுதுநாயே நீங்கள் பார்மா சென்றிர்களா அல்லது உங்கள் சித்தந்தா நன்பர்கள் உங்கள் தகவள் அளித்தாரா//

நான் செல்லவில்லை. ஆனால் சென்று தான் பதிவு எழுதவேண்டும் என இஸ்மத் உட்பட உற்றத் தோழர்கள் விரும்புகின்றார்கள்.. ஒருவேளை சுபி ஐயாவுக்கு மட்டும் வானில் இருந்து விதிவிலகல்கள் கொடுக்கப்பட்டனவோ என்னவோ...

Anonymous said...

@ நிஜாம் .//நான் இருந்தா கண்டிப்பாக உடைப்பேன் அம்மாணமாக இருப்பது உங்கள் சித்தாந்தாம் இருக்கலாம் அதற்காக அடுத்தவார் வீட்டில் இப்படித்தான் இருப்பேன் என்றால் இது ஒரு மணநோய்..//

பாமியன் புத்தர் சிலைகள் அம்மணமாக இருந்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா ... !!! பாமியன் புத்தர் சிலையை ஏன் உடைத்தீர்கள் என்பதற்கு சரியான விளக்கங்கள் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கின்றேன் ... !!!

Anonymous said...

லேற்ற்ஸ்ற்....
சொல்லுவது நானல்ல யாழ்முஸ்லிம் இணையத்தளம்

http://www.jaffnamuslim.com/2012/08/blog-post_1685.html

Anonymous said...

@ சுவனப்பிரியன் - ////புத்தர்களின் சிலையை வணங்க இன்று ஆப்கானிஸ்தானில் எந்த பவுத்தரும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்////

மலேசியாவில் வணங்க ஆட்கள் இருந்த போதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோவில்களை அப்புறப்படுத்தினீர்களே.. அது எந்த கணக்கில் வரும். கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் ....

Anonymous said...

Mr Anonymous,

///அது போல தொல்லை கொடுப்பவர்களை தொலைத்து காட்டுவது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்தின் உரிமை . so உங்கள் இலக்கணப்படி பர்மாவில் நடப்பது தவறு இல்லை என்றே நினைக்கிறேன். அது அந்த நாட்டின் உரிமை. கேட்பதற்கு நாம் யார், வேண்டுமென்றால் கோரிக்கை வைக்கலாம்///

இலங்கை நாட்டுக்கு தமிழ் பயங்கரவாதிகள் தொல்லை கொடுத்ததனால், அந்த நாட்டு அரசு அவர்களைப் பூண்டோடு அழித்தது.

இதனால், தமிழ் நாட்டுத் தமிழனுக்கு என்ன உரிமை இருக்கிறது, முள்ளி வாய்க்கால் கொலைக்களத்தை பற்றிக் கதைப்பதற்கு.

- Ismath

Anonymous said...

Mr Iqbal Selvan,

// அப்போ நீங்கா பர்மா முஸ்லீம் என்று எழுது நீங்கள் பார்மா சென்றிர்களா அல்லது உங்கள் சித்தந்தா நன்பர்கள் உங்கள் தகவள் அளித்தாரா//

///நான் செல்லவில்லை. ஆனால் சென்று தான் பதிவு எழுதவேண்டும் என இஸ்மத் உட்பட உற்றத் தோழர்கள் விரும்புகின்றார்கள்..///


தான் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே எழுதும் இவரின் பதிவுகள் தரக் கீழான வையாக இருக்கின்றன.

பர்மா போய் எழுதினால், கூவம் நதிகூடத் தோல்விதான்.

- Ismath

suvanappiriyan said...

//மலேசியாவில் வணங்க ஆட்கள் இருந்த போதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோவில்களை அப்புறப்படுத்தினீர்களே.. அது எந்த கணக்கில் வரும். கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் ....//

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது 6 நாட்கள் தங்கி அங்குள்ள நிலைமைகளை எல்லாம் நோட்டமிட்டேன். நம் இந்தியாவை விட இந்து மக்கள் சகல சுதந்திரமாக இருந்ததை பார்த்துள்ளேன். அனுமதி இன்றி எலலையோர பிள்ளையார் மாதிரி கட்டிய கோவில்களைத்தான் அப்புறப்படுத்தியது மலேசிய அரசு. அதுவும் ரோடுகளை அகலப்படுத்த வேண்டியே இதனை செய்தது. அங்குள்ளவர்களை கேட்டுப் பாருங்கள்.

கோவி.கண்ணன் said...

//ஒருக்கால் அதனை முஸ்லிம்கள் செய்திருந்தால் வன்மையாக கண்டிக்கிறேன். அப்பாவிகளை கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.//

ஐயா சுவனப்பிரியன் உங்கள் கண்டன லட்சனம் ஏற்கனவே தெரிந்தவை தான், ஒருவேளை செய்திருந்தால், இரண்டாம் வேளை செய்திருந்தால் என்று இழுத்துக் கொண்டு போய் கண்டனம் தெரிவிப்பீர்கள், உங்கள் மற்றும் உங்கள் கண்டன பிரசித்தம் பதிவுலகம் அறிந்தவையே.

ஆனால் நான் கேட்டது 'ஒரு இஸ்லாமியன் என்ற அளவில் வெட்கப்பட்டீர்களா ?' என்பதைத்தான் தமிழ் புரியாதது போல் திரித்து பதில் சொன்னால் எங்களுக்கு கண்டனத்திற்கும், வெட்க்கப்படுவதற்கும் வேறுபாடுகள் தெரியாது என்று தங்கள் நினைத்திருந்தால், இந்தப் பதிவை நீங்கள் எதன் பொருட்டு எழுதினீர்கள் என்று நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், படிப்பவர்கள் அறிவாளிகள் தான் என்பதை ஒப்புக் கொள்ளவும்.

கண்டனம் தெரிவிப்பது என்பது கூட்டத்தோடு கூட்டமாக 'நானும் கண்டித்தேன்' என்று கூலிக்கு மாறடிப்பது போன்றது.

வெட்க்கப்படுகிறேன் என்பது தனிமனித உணர்ச்சியில் இந்தமதத்தில் இவ்வளவு கேவலமானவர்களும் இருக்கிறார்கள் என்று மனம் புழுங்கி அதனை வெளிப்படுத்திக் காட்டுவது. வெட்க்கப்படுகிறேன் என்று சொன்னால் உங்கள் மதத்தை நீங்களே வெறுக்கிறீர்கள் என்று பொருள், ஒரு முசல்மானான தாங்கள் அவ்வாறு கூற வாய்ப்போ, அனுமதியோ இல்லை என்பது எமக்கும் தெரியும், அதை ஒப்புக் கொள்ளத் துணிவும், நேர்மையும் தங்களிடம் இல்லை என்பதாலும், மற்றமதத்தினர் மதவாதச் செயல்களுக்கு வெட்க்கப்படுவது போல் இவர்கள் வெட்க்கப்படுவதற்கு நினைத்துப் பார்ததே இல்லை என்பதைத்தான் நான் பதிவில் எழுதினேன்.

முடிந்தால் நேர்மையான பதிலைச் சொல்லுங்கள், அதை உங்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது என்பது எமக்கும் தெரியும்.

//புத்தர்களின் சிலையை வணங்க இன்று ஆப்கானிஸ்தானில் எந்த பவுத்தரும் இல்லை //

உலகவில் உள்ள பிரமீடு உள்ளிட்ட எந்த ஒரு பழமையான பொக்கிசங்களையும் யாரும் வணங்குவதில்லை, யாரும் வணங்காத பாப்ரி மஸ்ஜித் உடைபட்டதை நீங்கள் ரசிக்காத போது இவ்வாறு பேசுவது உங்களிடன் அடிப்படை நேர்மை குறித்து ஐயம் கொள்ளவே வைக்கிறது.

//அதனை சொந்தம் கொண்டாடி உரிமை கூறும் ஒருவரும் இல்லை. //

அவை ஏற்கனவே உலக பாரம்பரிய சின்னம் என்று யுனஸ்கோ அறிவித்திருந்தவை தான், அது யுனஸ்கோவிற்கு சொந்தமானவையே.

பாலி குண்டுவெடிப்பு, பார்லி குண்டுவெடிப்பு என்று உங்களவர்கள் நடத்திய குண்டுவெடிப்புக்கெல்லாம் வெட்க்கப்படாதவர், ஒரு பவுத்தர் வெட்க்கப்பட்டதை எடுத்துச் சொல்கிறாராம், கேட்பவன் கேனையனாக இருந்தால் கேபிசுந்தராம்பாள் ஒரு இஸ்லாமியர் என்று கூடச் சொல்லுவீர்.

suvanappiriyan said...

@ Govi Kannan

//முடிந்தால் நேர்மையான பதிலைச் சொல்லுங்கள், அதை உங்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது என்பது எமக்கும் தெரியும்.//

நான் அவ்வாறு சொல்லக் காரணம் இந்தியாவில் ஏன் உலகிலேயே அதிக தீவிரவாத செயல்களை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய எதிரிகளே செய்கின்றனர். ஏனெனில் அவர்களால் கருததுகளை கொண்டு இஸ்லாத்தை வெல்ல முடியாது. ஹேமந்த் கர்கரே என்ற ஒரு நீதிமான் இல்லாதிருந்தால் இன்றும் நமது நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் முஸ்லிம்களையே காரணமாக்கியிருப்பீர்கள். எனவே தான் நிரூபிக்கப்பட்ட குற்றத்திற்கு அவன் இஸ்லாமியன் என்பதால் கண்டனம் தெரிவிக்கிறேன் மேலும் வெட்கமும் படுகிறேன்.

//உலகவில் உள்ள பிரமீடு உள்ளிட்ட எந்த ஒரு பழமையான பொக்கிசங்களையும் யாரும் வணங்குவதில்லை, யாரும் வணங்காத பாப்ரி மஸ்ஜித் உடைபட்டதை நீங்கள் ரசிக்காத போது இவ்வாறு பேசுவது உங்களிடன் அடிப்படை நேர்மை குறித்து ஐயம் கொள்ளவே வைக்கிறது.//

குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல மடியும் போது பொருளாதார உதவி கேட்டால் சில சிலைகளை புணரமைக்க கோடிகளைத் தருகிறேன் என்றால் யாருக்குத் தான் கோபம் வராது.

//பாலி குண்டுவெடிப்பு, பார்லி குண்டுவெடிப்பு என்று உங்களவர்கள் நடத்திய குண்டுவெடிப்புக்கெல்லாம் வெட்க்கப்படாதவர், ஒரு பவுத்தர் வெட்க்கப்பட்டதை எடுத்துச் சொல்கிறாராம், கேட்பவன் கேனையனாக இருந்தால் கேபிசுந்தராம்பாள் ஒரு இஸ்லாமியர் என்று கூடச் சொல்லுவீர்.//

நான் ஏற்கெனவே பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். அப்பாவிகளை அநியாயமாக கொல்பவர்கள் மனித குல விரோதிகள். அவர்களை தூக்கில் இட்டாலும் தகும் என்று இன்னும் எத்தனை முறை சொல்வது?

ஆத்மா said...

நண்பர்களே இந்த பதிவுக்கு மேலுள்ள தலைப்பு பொருத்தமில்லை என கருதுகிறேன்......நிரூபனின் பதிவுக்கு எதிர் பதிவு என்று தலைப்பு வச்சிருக்கலாமே.........

Anonymous said...

சுவனப்பிரியன்
உங்களுக்கு தெரியுது.

//நம் இந்தியாவை விட இந்து மக்கள் சகல சுதந்திரமாக இருந்ததை பார்த்துள்ளேன்.//

மலேசியாவில் இந்துக்களுக்கு இருக்கும் சுதந்திரம் , உரிமை கூட இந்தியாவில் இந்துக்களுக்கு இல்லை என்று உங்களுக்கு தெரியுது.
இந்தியாவில் இருக்கும் இந்த பெயர்தாங்கி இந்துக்களுக்கு தெரியவில்லையே!

ஆத்மா said...

எழுதும் கருத்துக்களை ஒழிப்பு மறைப்புச் செய்யவது தண்டனைக்குறிய குற்றம்...... ஒK இதை அப்படியே போடுங்க...

நான் கேக்குறன் இலங்கையில நிரூபன் சார் இருக்காரா அல்லது சுவனப் பிரியந்தான் இருக்காரா....?

வெறும் இணையத்தள செய்திகளை மட்டும் வைத்து நீங்கள் எப்படி பதிவிடுவீர்கள் இருவரிடமுமே கேட்கிறேன்.....

மேலே இணைத்திருக்கும் செய்தியில் கூட எவ்வளவோ கில்மா வேலைகள் நடந்திருக்கிறது என்ற உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா.....?



அடுத்து..... இதில் நீங்கள் ஏன் தொடர்பில்லாத விடயங்களை சம்பந்தப் படுத்துகிறீர்கள் ஏன் பதிவினை டைவேர்ட் பன்னி உங்களுக்குள் பிரச்ச்னையை மேலும் வளர்க்கிறீர்கள்.....



சிறுபாண்மையினரின் மீதான கெடுபிடி இலங்கையில் ஒன்றும் புதிதில்லையே.... அது சீசனுக்கு சீசன் நடப்பது போல் நடந்து கொண்டுதானே இருக்கிறது......

அல்லது இந்த அரசியலை மாற்ற அரசியல் வாதிகளை மாற்றக் கூடிய சக்தி உங்களிடம் இருக்கா அப்படி இருந்தால் ஈழத்து முஸ்லிகள் தமிழ் மக்கள் மீது அக்கரை கொள்ளும் நீங்கள் அதற்கான நடவடிக்கையை எடுக்கிறீகளா....அது முடியாதே ஏன் என்றால் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் இங்கில்லையே.....

உங்களுக்கு நேரம் போகல்ல போரடிக்கிறது எங்கிரத்திக்காக இலங்கையை வச்சி விளையாடுரீங்க...

என்ன கொடும சார் இது....

Unknown said...

இந்த பிரச்சனை பற்றி தெரியாவிட்டால் சும்மா இருக்கலாமே!பதிவுலகில் உங்களது தனிப்பட்ட கோபங்கள் மட்டும்தான் இதில் வெளிப்பட்டு உள்ளது.தம்புள்ள பிரச்சனை பற்றி ஊடகங்களில் வருபவை 100% உண்மையானவை இல்லை.நீங்கள் இங்கே இப்படி சண்டை போடுவதனால் ஏதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை,மாறாக எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுவது போல் உள்ளது.இங்கு கருத்துப் பதிந்துள்ள பலர் ஏதாவது சொல்ல வேணும் என்பதற்காக சொல்லி உள்ளனர்.தயவு செய்து இவ்வாறான பதிவுகளை தவிர்த்துகொள்ளுங்கள் அதுதான் நீங்கள் இலங்கையில் உள்ள தமிழ்,முஸ்லிம்களுக்கு செய்யும் சிறு உதவி.

UNMAIKAL said...

//இக்பால் செல்வன் said...

மலேசியாவில் வணங்க ஆட்கள் இருந்த போதும் நூற்றுக் கணக்கான இந்துக் கோவில்களை அப்புறப்படுத்தினீர்களே.. //

மலேசியாவின் வந்தேறி தமிழர்கள்

மலேசியாவில் வந்தேறி த‌மிழர்க‌ள் நாச‌மாய் போகிறார்க‌ளா? அல்ல‌து ம‌லேசியாவை ந‌ன்றி கெட்ட வந்தேறி த‌மிழர்க‌ள் நாச‌மாக்குகிறார்க‌ளா?


மலேசியாவில் வந்தேறி தமிழர்கள் பெரும்பாலோர் அந்நாட்டு பூர்வ குடிகளான மலாய்க்காரர்களை விட சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பல வந்தேறி தமிழர்கள் அரசாங்கத்தால் கௌரவ பட்டங்கள் அளிக்கப்பட்டு ஆரம்பத்திலிருந்து இதுவரையிலும் மலேசியாவில் சட்ட சபையில் உறுப்பினர்களாகவும், ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் வந்தேறி தமிழர்கள் அங்கம் வகிப்பதுடன் அன்றிருந்து இன்று வரை ஆட்சியில் வந்தேறி தமிழர்களும் அமைச்சர்களாக இருந்து வருகின்றனர்

மலேசியாவில் வந்தேறி தமிழர்கள் அமைச்சர்களாக இல்லாத அரசாங்கமே இதுவரையிலும் மலேசியாவில் கிடையாது.

மலேசியாவில் வந்தேறி தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கும்பொழுது "ஊழல்" ப‌ய‌க்க‌வ‌ய‌க்க‌ங்க‌ளை த‌வ‌றாது க‌டைபிடிப்ப‌துட‌ன் ம‌ற்ற‌ இன‌ அமைச்ச‌ர்க‌ளுக்கும் "ஊழ‌ல்" ப‌ய‌க்க‌வ‌ய‌க்க‌ங்க‌ளை கற்று த‌ந்து அதிலும் ராய‌ல்டி தான்.

கைதிகளாகவும் கூலிகளாகவும் மலேசியாவில் குடியேறிய வந்தேறி தமிழர்களின் சந்ததிகளில் கணிசமானவர்கள் இன்று மலேசியாவில் மிக செல்வாக்குடன் உள்ள உயர்ந்த பணக்காரர்களின் வரிசையில் இருந்து வருகிறார்கள்.

மலேசியாவின் பெரும் நகரங்களிலும் பிரதான சாலைகளுக்கு குடியிருப்புகளுக்கு வந்தேறி தமிழர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது.

எத்தனையோ அரசாங்க தமிழ் பள்ளிக்கூடங்கள் இருப்பதுடன் மேலும் உருவாககப்பட்டு வருகின்றன

மலேசியாவில் வந்தேறி தமிழர்கள் கண்ட கண்ட காலி பொது இடங்களில் முதலில் இரும்பு கம்பி ஊன்றி அதற்கு பொட்டு வைத்தும் ,

மரங்களை சுற்றி துணி கட்டி வைத்தும்,

முதலில் நாலே நாலு செங்கலை வைத்து அதற்கு குங்குமம் விபூதி பூசி,

போக போக சில நாட்கள் கழித்து விரிவாக கம்பியை, மரத்தை , செங்கல்களை சுற்றி சுவரெழுப்பி கதைகள் பல கட்டி பூசை புணஸ்காரங்கள் என பழக்கி ஆயிரக்கணக்காண கோயில்களாக்கினார்கள்.

அவ்வாறு உள்ள ஆயிரக்கணக்கான‌ கட்டுகளில் சிலவற்றை பொது நலத்தை கருதி அரசாங்கம் அகற்ற வேண்டிய சூழ்நிலைகளில் அதற்கு பிரதி மாற்றிடம் கொடுத்த பின்னர் தான் செயலாற்றுகிறது.

நூற்றுக்கணக்காண இதுபோன்ற நிகழ்வுகள் மாற்றிடம் கொடுக்காமல் தமிழக‌த்தில் வட்டாட்சியர், மாஜிஸ்ட்ரேட்களின் ஆணைகளை கொண்டே அன்றாடம் நிகழ்ந்து வருகின்றது.

மலேசியாவில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவில் இன்ட்ராஃப் எனப்படும் ஒரு காவி மதவாத இயக்கம் உருவாக்கப்பட்டு மலேசியாவில் வந்தேறி தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள், கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன என்று மிக மிக உத்வேகத்துடன் ஊடகங்களின் மூலமாக நச்சு செய்திகளை பரப்பி வருகின்றது.

இந்தியாவில் ஆர்.எஸ். எஸ். வழிமுறையில் அந்நாட்டு பூர்வ குடிகளான மலாய் முஸ்லீம்களின் தொழுகை இடங்களில் பன்றி தலைகளையும் பன்றி இறைச்சியும் போடுவதுடன் தாங்களாகவே தங்கள் இடங்களில் மாட்டுத்தலையை வெட்டி போட்டுக்கொண்டு மதக்கலவரங்களை உருவாக்க எத்தனித்தவற்றை எல்லாம் மலேசிய அரசாங்கம் முலையிலே கிள்ளி எறிந்த நிகழ்வுகள் பல உண்டு

வந்தேறி தமிழர்கள் வாழும் சிறப்பான வாழ்வை மலேசியாவுக்கு வந்து செல்லும் நடிகர்கள், படபிடிப்பு குழுவினர், பல நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் தமிழர் பிரபலங்கள், வருடத்திற்கு பல முறை வந்து செல்லும் திராவிட கழக தலைவர் கீ வீரமணி, இத்யாதி இத்யாதி அனைவரும் நன்கு அறிவர்.

பல இனம் வாழும் மலேசியாவில் கடும் கொள்ளைகள், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் வழிநடத்தல்களில் நீண்ட காலமாக வந்தேறி தமிழர்களே அதிகமாக தவறாது இன்று வரை முன்னிலை வகித்து வருவதால் மற்ற சமூகத்தினர்கள் ஒட்டுமொத்த‌ தமிழர்களை அச்சத்துடனே நோக்கும் சூழ்நிலை தெளிவாகி இருக்கிறது.

வந்தாரை வளத்துடன் வாழ வைத்துக்கொண்டிருக்கும் மலேசியாவை மலேசியாவின் வந்தேறி தமிழன்
நன்றியுடன் சிரம் தாழ்த்தி போற்ற வேண்டும்
.

கோவி.கண்ணன் said...

//இலங்கையைப் பொறுத்த வரை முஸலிம்களின் மேல் கை வைத்தால் அரபு நாடுகளின் விசாக்கள், உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.//

அரபு நாடுகள் ஈராக்கை காப்பாற்றிவிட்டார்கள், அடுத்து பாலஸ்தீனத்தை காப்பாற்றிவிட்டார்கள் பிறகு கடைசியாக லிபியாவைக் காப்பாற்றினார்கள், அடுத்ததாக அவங்க கவனம் இலங்கை முஸ்லிம்கள் மீதும் திரும்பி இருக்கிறதா ?

நம்பிக்கை தான் வாழ்க்கை. நடத்துங்க சார், கூலி வாங்கமல் எப்படித்தான் அரபுநாடுகள் பற்றி தாரளமாகப் பேச முடிகிறதோ !

UNMAIKAL said...

புனே குண்டுவெடிப்பு: சிக்கிய தயானந்த பட்டீலுக்கு இந்து பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா?

Published: திங்கள்கிழமை, ஆகஸ்ட் 6, 2012, 12:10 [IST]

டெல்லி: புனே தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன் அமைப்பினரின் கைவரிசை இருக்கலாம் என்பதுதான் அனைத்து ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இருக்கிறது.

அதே நேரத்தில் அனைத்து ஊடகங்களின் செய்திகளிலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையை மறுப்பதற்கில்லை என்ற தகவலும் ஒருவரியில் அடக்கப்பட்டிருக்கிறது.

இந்து பயங்கரவாதிகள் இதற்கு முன்பு இதே மகாராஷ்டிராவின் மாலேகானில் குண்டுவெடிப்பு சதியை அரங்கேற்றினர்.

முதலில் இதில் இந்தியன் முஜாஹிதீன், சிமி என பிற பெயர்கள்தான் அடிபட்டு வந்தன.

ஆனால் அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் தொடர்பு இதில் இருப்பது பின்னர் அம்பலமானது.

மாலேகானில் எப்படி சைக்கிள் மூலம் மிகவும் சக்தி குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனரோ அதே பாணியில்தான் தற்போது புனேயிலும் வெடிக்கச் செய்திருக்கின்றனர்.

அதுமட்டுமில்ல இந்து பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தானே, நவி மும்பை ஆகிய சம்பவங்களிலும்கூட சைக்கிள்கள் மூலம் குறைவான சக்தி கொண்ட வெடிகுண்டுகளைத்தான் பயன்படுத்தியிருக்கின்றனர்.

தற்போது புனே குண்டுவெடிப்பில் குடும்பத்துடன் சிக்கியிருப்பவர் தயானந்த பட்டீல்.

சைக்கிளில் வந்த இவரது கைப்பையில் இருந்துதான் ஒரு குண்டு வெடித்தது என்பது உறுதியாகிவிட்டது.

அதுவும் தயானந்த பட்டீலின் குடும்பத்தினர் நடத்தி வரும் சைக்கிள் கம்பெனியில் இருந்தே புதிய சைக்கிள்கள் கொண்டுவரப்பட்டு அதன் மூலமே அனைத்து குண்டுகளும் வெடிக்க வைக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

புனே குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்திய முஜாஹிதீன்களுக்கு தொடர்பிருக்கிறது, ஜோர்டானுக்கு தொடர்பிருக்கிறது என்று செய்திகள் வெளியானாலும் இந்து பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

http://tamil.oneindia.in/news/2012/08/06/india-pune-serial-blasts-hours-after-explosions-theories-159107.html

Nizam said...

இக்பால் செல்வன் said...

//பாமியன் புத்தர் சிலைகள் அம்மணமாக இருந்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா ... !!!//
அம்மணமாக இருந்தாரோ கோமணமாக இருந்தரோ அவர்க்கு யார்மே ஆதராவாக இல்ல இடத்தில் ஒத்தக்கால் நின்னுக்கிட்டு இருந்தா அங்கு இருக்கின்றா மக்கள் எப்பவேனும்நாளும் அவர்களின் மேழ் விழும்முன்னு ஆவார்களே அளித்திருக்கராம். இதை நிரூப்பிக்கிருந்தா உங்களை பாதி வாழ்க்கை நீங்கள் நிரூப்பிச்சுக்கிட்ட இருக்கவேண்டியதுதான். உங்கள் புகைப்படத்துக்குன்டன பெயர்தான் இக்பால் செல்வன் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

//பாமியன் புத்தர் சிலையை ஏன் உடைத்தீர்கள் என்பதற்கு சரியான விளக்கங்கள் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கின்றேன் ... !!!//
நான் ஒரு இந்து சகோதராயிடமோ அல்லது கிருஸ்தவா சகோதராயிடமோ வீட்டை வாங்கினால் அவர்கள் சாமி அறை என்று வைத்திருப்பார் இங்கு சிலைகள் வைத்துர்பார்கள் விட்டை ஒப்படைக்கும் போது அந்த விக்கிரங்களை அவர்கள் எடுத்து சென்றால் சாரி இல்லை என்றால் அதை அப்புறபடுத்திவிட்டு நான் அந்த அறையை தொழுகை அறையாகவோ அல்லது லைபேரியாகவோ உபயோப்பேன்.

மொத்தத்தில் அங்கு முகமது நபியை சிலையாக வடித்திருந்தாலும் அதை அவர்கள் சேதகப்படுத்திருப்பார்கள்.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//அரபு நாடுகள் ஈராக்கை காப்பாற்றிவிட்டார்கள், அடுத்து பாலஸ்தீனத்தை காப்பாற்றிவிட்டார்கள் பிறகு கடைசியாக லிபியாவைக் காப்பாற்றினார்கள், அடுத்ததாக அவங்க கவனம் இலங்கை முஸ்லிம்கள் மீதும் திரும்பி இருக்கிறதா ?//

ஈராக்கோ, பாலஸ்தீனமோ, லிபியாவோ சவுதி அரேபியாவின் தயவை நாடி இல்லை. அதிலும் ஈராக்கும் லிபியாவும் செல்வந்த நாடுகள். அந்த நாட்டு மக்கள் சவுதியில் வேலைக்காக க்யூவில் நிற்கவில்லை. ஆனால் இலங்கையின் பொருளாதாரம் பெரும்பாலும் வளைகுடாவை சுற்றியே உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இலங்கை மக்கள் மாதா மாதம் அனுப்பும் வெளி நாட்டு பணமே இன்று இலங்கையின் மிகப் பெரும் வருமானக இருக்கிறது. மற்ற வெளி நாட்டு அமைப்புகள் தற்கால உதவி செய்தாலும் அவை அனைத்தும் வட்டியை அடிப்படையாக கொண்ட கடன்களே! பிறகு திருப்பி செலுத்தியே ஆக வேண்டும். சவுதி அரசாங்கம் சில குடியிருப்புகளை கட்டித்தரவும் முன் வந்துள்ளது. இவை எல்லாம் நிறுத்தப்பட்டால் அது தற்போதய அரசை எத்தகைய இக்கட்டில் கொண்டு செல்லும் என்பதை நீங்களும் அறியாதவரல்ல.

//நம்பிக்கை தான் வாழ்க்கை. நடத்துங்க சார், கூலி வாங்கமல் எப்படித்தான் அரபுநாடுகள் பற்றி தாரளமாகப் பேச முடிகிறதோ !//

அரபுகளை தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இவர்களிலும் தங்களின் பொறுப்பை உணராமல் கேளிக்கைகளில் வாழ்க்ககையை ஓட்டுவதாக பல சவுதிகளிடம் விவாதித்தும் இருக்கிறேன். அதே சமயம் அவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை வெளி உலகுக்கு கொண்டு செல்வதும் நடுநிலையாளர்களின் பொறுப்பு. அதைத்தான் அவ்வப்போது நான் செய்து வருகிறேன்.

தருமி said...

//இந்தியாவில் ஏன் உலகிலேயே அதிக தீவிரவாத செயல்களை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய எதிரிகளே செய்கின்றனர்.// -- சு.பி.

இந்த ‘நேர்மை’ தான் எனக்குப் பிடிச்சிருக்கு!

suvanappiriyan said...

@ அஹமத் ஜதீர்!

//இந்த பிரச்சனை பற்றி தெரியாவிட்டால் சும்மா இருக்கலாமே!பதிவுலகில் உங்களது தனிப்பட்ட கோபங்கள் மட்டும்தான் இதில் வெளிப்பட்டு உள்ளது.தம்புள்ள பிரச்சனை பற்றி ஊடகங்களில் வருபவை 100% உண்மையானவை இல்லை.நீங்கள் இங்கே இப்படி சண்டை போடுவதனால் ஏதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை,மாறாக எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுவது போல் உள்ளது.இங்கு கருத்துப் பதிந்துள்ள பலர் ஏதாவது சொல்ல வேணும் என்பதற்காக சொல்லி உள்ளனர்.தயவு செய்து இவ்வாறான பதிவுகளை தவிர்த்துகொள்ளுங்கள் அதுதான் நீங்கள் இலங்கையில் உள்ள தமிழ்,முஸ்லிம்களுக்கு செய்யும் சிறு உதவி.//

சிறுபாண்மையினரின் மீதான கெடுபிடி இலங்கையில் ஒன்றும் புதிதில்லையே.... அது சீசனுக்கு சீசன் நடப்பது போல் நடந்து கொண்டுதானே இருக்கிறது......

@சிட்டுக் குருவி!

//அல்லது இந்த அரசியலை மாற்ற அரசியல் வாதிகளை மாற்றக் கூடிய சக்தி உங்களிடம் இருக்கா அப்படி இருந்தால் ஈழத்து முஸ்லிகள் தமிழ் மக்கள் மீது அக்கரை கொள்ளும் நீங்கள் அதற்கான நடவடிக்கையை எடுக்கிறீகளா....அது முடியாதே ஏன் என்றால் உங்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் இங்கில்லையே.....//

எனக்கு நோபல் பரிசு வாங்கிக் கொடுக்க நிரூபன் முயற்ச்சித்ததாலேயே இந்த எதிர் பதிவு. அடுத்து இங்கு நான் வெளியிட்டுள்ள இலங்கை சம்பந்தமான செய்திகள் ஏற்கெனவே இலங்கை பதிவர்கள் பதிவிட்ட பழைய செய்திகளே...செய்தியில் தவறுகள் இருக்குமானால் சுட்டிக் காட்டுங்கள். நீக்கி விடுகிறேன்.

அடுத்து தமிழ்நாட்டு தமிழனான உனக்கு இலங்கை தமிழர்களைப் பற்றி ஏன் அக்கறை என்ற ரீதியில் பின்னூட்டம் உள்ளது. இலங்கை பிரச்னையானது அந்த நாட்டோடு முடிந்து விட்டால் எங்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சிங்களவன் ஆயுதத்தை கையிலெடுத்து பிரச்னை செய்தால் அடுத்து நீங்கள் நிற்பது மண்டபம் முகாமில். தமிழகத்தின் பல மாவட்டங்களில் லட்சக் கணக்கில் இலங்கை அகதிகள் பல வருடங்களாக தங்களின் வாழ்வை கழித்து வருகின்றனர். சிறுவனாக வந்து படித்து பலர் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அனைத்தையும் கொடுப்பது ஒவ்வொரு இந்தியனின் வரிப் பணம் என்பதை மறந்து விட வேண்டாம். எனவே இலங்கைப் பிரச்னையை பற்றி பேசுவதற்கு மற்ற நாட்டு மக்களை விட தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

பூகோள ரீதியாக தனி ஈழம் என்பது சாத்தியமே இல்லை என்பது தான் பலரின் கணிப்பு. அடுத்து முஸ்லிம்கள் தங்களையும் தனியாக பிரிக்க கூறுகின்றனர். இந்துக்களிலும் புரையோடிப்போன வழமையான சாதி வெறி தமிழகத்தை விட அதிகமாக உள்ளதை பல முறை இணைய கட்டுரைகளில் பார்த்துள்ளேன். எனவே டெஸோ, வைகோ, நெடுமாறன், சீமான் என்ற மேல் பூச்சுகளெல்லாம் நிரந்தர தீர்வாகாது. அதிகார பகிர்வை இந்திய அரசின் உதவி கொண்டு செயல்படுத்துவது ஒன்றுதான் நிரந்தர தீர்வாக அமைய முடியும்.

ஒவ்வொருவரும் தஙகளின் கருத்தை வைப்பதற்கு முழு உரிமை உண்டு. எனது கருத்துகளால் மிகப் பெரிய மாற்றம் வந்து விடப் போவதில்லை என்பதும் தெரியும். எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவே... உலகில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பற்றி எழுத அந்நாட்டு குடி மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது என்று சொல்வது எந்த வகை சுதந்திரம்? அப்படி என்றால் உங்கள் பதிவுகளில் இலங்கையை தவிர்த்து வேறு எந்த செய்தியும் இடம் பெறாமல் பார்ததுக் கொள்வீர்களா?

எனது நாட்டின் பிரதமராக வர இருந்த ராஜீவ் காந்தியையும் அவரோடு பல தமிழர்களையும் கொன்றது இதே இலங்கை மக்களல்லவா? இதற்கு யார் அனுமதி கொடுத்தது? ராஜீவ் காந்தியின் கொலை நடைபெறாமல் இருந்திருந்தால் இன்று இலங்கை தமிழர்களின் வாழ்வு மிகச் சிறப்பாக மாறியிருக்கும். இதை எல்லாம் கெடுத்தது உங்கள் நாட்டு ஆட்களல்லவா? இதையும் விமரிசிக்கக் கூடாது என்று சொல்வீர்களா?

suvanappiriyan said...

@ அனானி!

//மலேசியாவில் இந்துக்களுக்கு இருக்கும் சுதந்திரம் , உரிமை கூட இந்தியாவில் இந்துக்களுக்கு இல்லை என்று உங்களுக்கு தெரியுது.
இந்தியாவில் இருக்கும் இந்த பெயர்தாங்கி இந்துக்களுக்கு தெரியவில்லையே!//

பிராமணர்கள், மற்றும் சாதி இந்துக்களை விட தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் அதை விட கீழ் மட்டத்தில் உள்ளார்கள். எனவே இந்தியாவில் பரிதாபத்திற்குரிய மக்களாக தலித்துகளும், முஸலிம்களும் உள்ளனர். இவர்களை விட சாதி இந்துக்கள் சகல சௌகரியங்களோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை மறக்க வேண்டாம் அனானி. மலேசியாவோடு ஒப்பிடும் போது இங்குள்ள இந்துக்களை விட நன்றாக உள்ளதாகவே சொன்னேன்.

suvanappiriyan said...

திரு தருமி!

//இந்தியாவில் ஏன் உலகிலேயே அதிக தீவிரவாத செயல்களை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமிய எதிரிகளே செய்கின்றனர்.// -- சு.பி.

இந்த ‘நேர்மை’ தான் எனக்குப் பிடிச்சிருக்கு!//

இஸ்லாமியர்கள் எங்குமே தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை என்று நான் சொல்ல வரவில்லை. இஸ்ரேலிய அமைப்பான மொசாத்தும் நமது நாட்டின் இந்துத்வா வாதிகள் இஸ்லாமியர்களின் பெயரில் நடத்தும் குண்டு வெடிப்புகளும் அதிகார வர்க்கத்தால் தெரிந்தே இஸ்லாத்தின் மேல் ஏற்றப்படுகிறது. அதிகாரத்தில் அவர்கள் இருப்பதால் அது சாத்தியமாகிறது.

அஜ்மல் கசாபுக்கு இந்தியாவின் மேல் என்ன கோபம்? இன்னும் சரியாக அவனுக்கு மீசை கூட முளைக்கவிலலை. பாகிஸ்தானில் சிஐஏவும், மொசாத்தும் பல கள்ள மௌலவிகளை சம்பளத்துக்கு அமர்த்தி இளைஞர்களை இஸ்லாத்தின் பெயரால் வழி கெடுக்கிறது. இப்படி பலர் மூளை சலவை செய்யப்படுவதை எனது பாகிஸ்தானிய நண்பர் தெளிவாக விளக்கினார். இதற்கு சில அரசியல்வாதிகளும் உடந்தை. நம் நாட்டு பிஜேபியைப் போல். இந்தியாவும் பாகிஸ்தானும் முறுகல் நிலையில இருந்தால்தான் அமெரிக்காவின் ஆயுத வியாபாரம் இந்த பிராந்தியத்தில் கொடி கட்டிப் பறக்கும்.

அஃசல் குரு எவ்வாறு பாராளுமன்ற தாக்குதலுக்கு பலி கடா ஆக்கப்பட்டார் என்பதை எனது பழைய பதிவுகளில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2012/05/blog-post_08.html

மாலேகானிலிருந்து மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வரை முதலில் யார் கைது செய்யப்பட்டது, பிறகு எவ்வாறு சாது பிரக்யாசிங் கொண்டு வரப் பட்டார் என்பது உங்களுக்கும் தெரியும். ஹேமந்த் கர்கரே போல் ஒரு நியாயவான் காவல் துறை அதிகாரியாக உலகம் முழுவதும் இருந்தால் நான் சொன்னதை உண்மை என்று நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//இலங்கை வரலாறோ முஸ்லிம்களின் வரலாறோ சுபிக்கு தெரியவில்லை என்பதை இதுக் காட்டுகின்றது. இலங்கை எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள் ஒரே இனமாக இல்லை//

ஒரே இனமாக இருப்பதாக யார் சொன்னது? இன்று தமிழகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அரபு முஸ்லிம்கள் தமிழர்களை திருமணம் செய்து இங்கேயே தங்கியதால் அது ஒரு தனி இனமாகியது. இந்து மதத்தின் பல சாதிகளை திருமணம் செய்ததால் பல வண்ணங்களில் தமிழ் முஸ்லிம்களை பார்க்கலாம். 500, 600 ஆண்டுகள் இந்த கலப்பு தொடரும் போது பெரும்பான்மை இனத்தோடு ஐக்கியமாகி விடுவர். உலக நடைமுறை இதுதான். பிராமணர்கள் எவரோடும் திருமண பந்தம் வைக்காததால் தனித்து காட்டப்படுகிறார்கள். அதே போல்தான் இலங்கையிலும் பல இனங்களை இஸ்லாம் சுவீகரித்திருக்கிறது. இரண்டு இனங்கள் கலக்கும் போது சம்பந்தப்பட்டவர் எந்த இனத்தை தேர்ந்தெடுக்கிறாரோ அதில் ஐக்கியமாகி விடுவார்.

//கை விட்டு எண்ணுமளவான சிங்களவர்களைத் தவிர முஸ்லிமாக பெரும் அளவில் சிங்களவர்கள் மாறுவதாக எனக்குத் தெரியவில்லை.//

பள்ளி உடைப்புக்கு தலைமை தாங்கிய புத்த பிக்கு செய்தியாளர்களிடம் சொன்னபோது 'உலகம் முழுவதும் இஸ்லாமிய எழச்சி அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இலங்கையிலும் தென்படுகிறது.' என்று பேட்டியளித்ததை நீங்கள் மறுக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு சொன்னது பல இலங்கை இணைய தளங்களில் வந்துள்ளது.
//சிங்களவர்கள் மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தோர் என பலர் அரபு நாடுகளில் வேலைப் பார்ப்பது உண்மை தான். ஆனால் அவர்களை நம்பித் தான் இலங்கை இயங்குவதாக எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை.//

உங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது?

According to the Department of Commerce of Sri Lanka, the overall value of Sri Lanka-Saudi Arabia trade currently stands at US $ 142 million. In 2011, Sri Lanka’s exports to Saudi Arabia stood at US $ 62 million while Sri Lanka’s imports amounted to US $ 79 million. Among the main export items from Sri Lanka to Saudi Arabia are tea, edible fruits and nuts, articles of apparel and clothing accessories, rubber and related articles, edible vegetables and certain roots and tubers, paper and paper board, articles of paper pulp, miscellaneous edible preparations, inorganic chemicals while primarily import being mineral fuels and mineral oils. Other imports are plastics and articles thereof, sugar and sugar confectionery, copper and articles and fertilisers. –Risad badruddheen- minister

In conclusion, I wish to add that while maintaining Sri Lanka's traditional commercial links with this part of the world, we are committed to building upon these ties for further enhancement of our economic cooperation. I wish a successful conclusion of the discussions at this Forum and take this opportunity to express our hope for the consolidation of our historical links with the Arab world. -said President Mahinda Rajapaksa, in his statement at the opening of the 12th Doha Forum at Qatar on Sunday (May 20).

தற்போது வெளிநாட்டு பணியாளர் ஊடான வருவாயே இலங்கை பொருளாதாரத்தின் பிரதான அங்கமாகியுள்ளது. கல்வி கற்காதோர் முதல், உயர் தரம் கற்றோர் வரை ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் எளிதாக தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு துறையாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைந்துள்ளப் படியால், பெரும்பாலானோரின் தெரிவு வெளிநாட்டு வேலை வாய்ப்பாகவே மாறி வருகின்றது. உள்நாட்டில் தொழில் புரிவோரும் அத்தொழில்கள் ஊடாக போதிய வருவாயை ஈட்ட முடியாத நிலையும், இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விலைவாசி அதிகரிப்பிற்கு முகம் கொடுக்க முடியாத நிலையும் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுகமாக இலங்கை சமூகம் மாற்றமாகி வருகிறது. இந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பில் பெரும்பாலானோர் வீட்டுப் பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்தியக் கிழக்காசிய நாடுகளில் இலட்சக் கணக்காணோர் வீட்டு பணியாளர்களாகவே தொழில் புரிகின்றனர். மத்திய கிழக்காசிய நாடுகளைத் தவிர உலகின் பலவேறு நாடுகளிலும் வீட்டுப் பணியாளர்களாக இலங்கையர் தொழில் புரிகின்றனர். இவ்வாறான வெளிநாட்டு வேலை வாய்ப்பின் ஊடாகவே தற்போதைய இலங்கையின் பிரதான பொருளாதாரம் ஈட்டப்படுகின்றது.

-http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

ஆத்மா said...

@ சுவனப் பிரியன்.....
சார் நீங்க சொல்லுவது புரியுது.உங்களை சகோதர மனப்பங்கினை நான் மதிக்கிறேன் மற்றவர்களின் பிரச்ச்னையை சொந்த பிரச்ச்னையாக நோக்கும் உங்கள் நல்ல மனது யாருக்குவரும்.....

இப்ப நான் சொல்லுறேன் இங்கே இலங்கையில் 30 வருடகாலமாக தனி ஈழத்துக்குப் போராடிய போராளிகளுக்கு உதவியவர்களே

ஈழம்பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசுவதற்கு என்ன உரிமையிருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை மேடைகளிலும் பத்திரிகைகளிலும் மொழிகிறார்கள்...30 வருடமாக போராடிய அவர்களே இப்படி சொல்லும் போது வெறும் ஒரு ப்ளாக்கினை வைத்துக் கொண்டு நாம் இங்கு புலம்புவதால் என்ன பயன் கிட்டப் போகுது......

மேலும் இப்படி மாறி மாறி நீங்கள் பதிவிடுவதால் ஈழத்தில் இருக்கும் பிற மத சகோதரர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள அவர்களின் தவறான எண்ணம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கொண்டே போகிறது...இது மீண்டும் மீண்டும் எங்களுக்குள் கொரோதத்தையும் பிரச்ச்னையையும் வளர்க்கிறது......

உங்கள் பதிவின் நோக்கமும் இதுது தான் என்றால் நீங்கள் அதில் வெற்றி பெறும் காலம் தொலைவில்லை......

இப்ப மறுபடி பாருங்க உங்க பதிவுக்கு எதிர்ப்பதிவ இங்க இக்பால் செல்வன் போட்டிருப்பான் அத இன்னுமொருவர் பார்த்து அதுக்கு எதிர்ப்பதிவு இது இப்படியான தொடர்கதைதானா.......

ஈழப் பிரச்ச்னையை வைத்து பிழைப்புநடத்தும் தமிழக அரசியல்வாதிக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போகிறதே......

suvanappiriyan said...

சிட்டுக் குருவி!

தமிழ் முஸ்லிம்களுக்கு ஏதோ மிகப் பெரிய அழிவை இலங்கை அரசு ஏற்படுத்தப் போவதாக நிரூபன் பதிவில் எழுதியுள்ளது தவறான தகவல் என்பதை பதிவுலகுக்கு எடுத்துக் காட்டவே எனது பதிவு அமைந்திருந்தது. நிரூபனும், இக்பால் செலவனும் நினைப்பது போல் இலங்கை முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக திரும்ப மாட்டார்கள் என்பதை விளக்குவதே எனது பதிவு. முஸ்லிம்களைப் போல் இந்துக்களும் பெரும்பான்மை சமூகத்தோடு ஒத்து வாழ்ந்து இலங்கையின் அமைதி வாழ்வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது பதிவின் நோக்கம். இவர்களுக்கு பதில் தராமல் இருந்தால் அவர்கள் சொல்வது உண்மை என்று பலர் நினைக்க வாய்ப்புள்ளது அல்லவா!


மேலும் நான் 500 பதிவுகளை எழுதியுள்ளேன். இலங்கை சம்பந்தமாக வெறும் ஐந்தோ அல்லது ஆறோ பதிவுகள் தான் எழுதியிருப்பேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

எனது பதிவுகளுக்கும் இக்பால் செல்வன், நிரூபன், கோவி கண்ணன் போன்றவர்களின் பதிவுகளுக்கும் வித்தியாசம் உண்டு. நான் விரும்புவது அனைத்து மக்களின் அமைதியை. அவர்கள் விரும்புவது என்ன என்பதை அவர்களே அறிவர்.

Anonymous said...

//அதற்காக அடுத்தவார் வீட்டில் இப்படித்தான் இருப்பேன் என்றால் இது ஒரு மணநோய்.//
உங்கள் கூட்டம் மூளை சலவை செய்யப்பட்டது என்று பரவலாக கூறப்படுவது உண்மைதான் போலிருக்கிறது. உலகம் முழுக்க நீங்களும் இதை தானே செய்து கொண்டிருக்கிறீர்கள். பிரிட்டனுக்கும் கனடாவிற்கும் போய் ஷரியாவ்வை கொண்டுவா என்கிறீர்கள். இஸ்லாம் வந்துவிடும், விழுங்கி விடும், உலகத்தை ஆள போகிறது என்கிறீர்கள். போகிற இடம் எல்லாம் இதே அக்கபோரை தான் செய்கிறீர்கள் அப்படி என்றால் உங்கள் கூட்டத்திற்கு மூளை சலவையுடன் சேர்த்து மன நோயும் உள்ளதா. முத்தத்தில் உங்கள் மன நோயை சரி படுத்துங்கள் தலைவரே

suvanappiriyan said...

அனானி!

//முத்தத்தில் உங்கள் மன நோயை சரி படுத்துங்கள் தலைவரே//

இது இக்பால் செல்வனுக்கு செல்ல வேண்டிய பின்னூட்டம். இடம் மாறி வந்து விட்டது என்று நினைக்கிறேன். :-)

Anonymous said...

சகோதரர் சுவனப்பிரியன்,

///தமிழ் முஸ்லிம்களுக்கு ஏதோ மிகப் பெரிய அழிவை இலங்கை அரசு ஏற்படுத்தப் போவதாக நிரூபன் பதிவில் எழுதியுள்ளது தவறான தகவல் என்பதை பதிவுலகுக்கு எடுத்துக் காட்டவே எனது பதிவு அமைந்திருந்தது.///


அழிந்துபோன தமிழ்ப் பயங்கரவாதிகளின் எச்சங்கள், தங்களை வருடி, தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறார்கள்.

தற்போது, இலங்கை வாழ் முஸ்லிம்களின்மேல், இந்த புலித்தோல் போர்த்திய பசுக்கள் சகோதர பாசம் கொண்டாடுகிறார்கள்.

தமிழ்ப் பயங்கரவாத எச்சங்களின் இணைய தளங்கள்கூட, முஸ்லிம்களின் பிரச்சனைகளை ஊதிப் பெருக்கி, வருந்துவதுபோல நடிக்கின்றனர்.

இது முஸ்லிம்களால் ஒருபோதும் எடுபடாது.

- Ismath

Anonymous said...

ஹலோ சிட்டுக்குருவி,


///மேலும் இப்படி மாறி மாறி நீங்கள் பதிவிடுவதால் ஈழத்தில் இருக்கும் பிற மத சகோதரர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள அவர்களின் தவறான எண்ணம் மேலும் மேலும் வலுப்பெற்றுக் கொண்டே போகிறது...இது மீண்டும் மீண்டும் எங்களுக்குள் கொரோதத்தையும் பிரச்ச்னையையும் வளர்க்கிறது......///

30 வருட காலமாக அப்பாவித் தமிழ் மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய நச்சுக் கருத்துக்களை தமிழ் மீடியாக்கள் மூலம் விதைத்து குரோதத்தையும் பகைமையையும் ஏற்படுத்தியது போதாதா?

முள்ளி வாய்க்கால் அடியோடு, இந்த மீடியாக்களின் கொட்டம் சிறிது அடங்கினாலும், புலம் பெயர்ந்த நாடுகளில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பான அபிப்பிராயம் தொடரத்தான் செய்கிறது.

தமிழ் நாட்டு முஸ்லிம்கள்கூட, இலங்கை முஸ்லிம்களுக்கு தமிழ்ப் பயங்கரவாத மிருகங்களினால் செய்த கொலைகள், கொள்ளைகள், அட்டூழியங்கள் கூட, அந்த மிருகங்களின் ஊடகங்களால் இரட்டடிப்பு செய்யப்பட்டு முஸ்லிம்கள் படும் அவல நிலையை வெளியுலகம் அறியாமல் செய்த கொடுமையைச் செய்தன.

சிட்டுக்குருவி போன்ற தமிழ்ப் பயங்கரவாத எச்சங்கள், எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாது என்று நமது சகோதரர்களிடமே வந்து ஆலோசனையையும் செய்கிறார்கள்.

முஸ்லிம்களைப் பற்றி எதையும் தமிழ் ஊடகங்களில் எழுதலாம். தமிழ்ப் பயங்கரவாதிகள், எமக்குச் செய்த அநியாயங்களைப்பற்றி எழுதினால், இவர்களுக்குப் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது.

சிறி லங்கா அரசுடனோ இராணுவத்துடனோ முஸ்லிம்கள் சேர்ந்திருந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கி விடுவார்கள்.

தமிழர்களின் பிரிவினைவாத அரசியலில், ஒருபோதும் இலங்கை முஸ்லிம்கள் கை கோக்கமாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

- ismath

Anonymous said...

@ நிஜாம் - // அப்புறபடுத்திவிட்டு நான் அந்த அறையை தொழுகை அறையாகவோ அல்லது லைபேரியாகவோ உபயோப்பேன். மொத்தத்தில் அங்கு முகமது நபியை சிலையாக வடித்திருந்தாலும் அதை அவர்கள் சேதகப்படுத்திருப்பார்கள். //

சரி தான் ! அப்போ ஏன் இன்னும் பிரமிடுகளையும் இராக் , இரான், துருக்கி, ஜோர்டான் போன்ற நாடுகளில் யாரும் வழிப்படாத சாத்தான்களின் சின்னங்களையும் சிலைகளையும் விட்டு வைத்துள்ளீர்கள். அங்குள்ளவர்கள் உண்மையான முஸ்லிம்கள் இல்லையோ என்னவோ ?? !!!

Anonymous said...

@ சுபி - // பூகோள ரீதியாக தனி ஈழம் என்பது சாத்தியமே இல்லை என்பது தான் பலரின் கணிப்பு. //

சுபி ஐயா !!! சரி தான் !!! அதே பூகோள ரீதியாக பாலஸ்தீனம் மற்றும் மேற்குக் கரை என்பதும் சாத்தியமில்லாத ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா ???

அப்போ தனி ஈழத்துக்கு ஒரு நியாயம் , பாலஸ்தீனத்துக்கு ஒரு நியாயமா ?

Anonymous said...

@ சுபி - // ஒவ்வொருவரும் தஙகளின் கருத்தை வைப்பதற்கு முழு உரிமை உண்டு. எனது கருத்துகளால் மிகப் பெரிய மாற்றம் வந்து விடப் போவதில்லை என்பதும் தெரியும். எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவே... உலகில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பற்றி எழுத அந்நாட்டு குடி மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது என்று சொல்வது எந்த வகை சுதந்திரம்? அப்படி என்றால் உங்கள் பதிவுகளில் இலங்கையை தவிர்த்து வேறு எந்த செய்தியும் இடம் பெறாமல் பார்ததுக் கொள்வீர்களா? //

ஆமோதிக்கின்றேன் ! ஆமோதிக்கின்றேன் !

:)

Anonymous said...

@ சுபி - // பிராமணர்கள், மற்றும் சாதி இந்துக்களை விட தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் அதை விட கீழ் மட்டத்தில் உள்ளார்கள். எனவே இந்தியாவில் பரிதாபத்திற்குரிய மக்களாக தலித்துகளும், முஸலிம்களும் உள்ளனர். //

முற்றிலும் உண்மையே !!! அப்படியே மலேசியாவுக்கு போவோம் ...

மலாயர்கள் மற்றும் சீனர்களை விட அங்குள்ள தமிழர்கள் பொருளாதாரத்தில் கீழ் மட்டத்திலேயே உள்ளார்கள்.. தமிழ்நாட்டு தமிழர்களோடு - மலேசியாத் தமிழர்களை ஒப்பிடுவதை விட்டுவிட்டு !!

மலேசியாவுக்குள் மலாயர்கள், சீனர்களோடு தமிழர்களை ஒப்பிட்டுப் பாருங்கள் - உண்மை விளங்கும் !!!

Anonymous said...

@ சுபி - // //அதற்காக அடுத்தவார் வீட்டில் இப்படித்தான் இருப்பேன் என்றால் இது ஒரு மணநோய்.// //

அடுத்தவர் வீட்டிற்கு போனால் அவர்களைப் போலத் தானே இருக்க வேண்டும் !!! அப்போ என்ன மண்ணுக்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வந்துக் கொண்டு !!! புர்க்கா போடுவோம், ஹலால் உணவு கேட்போம், பள்ளிக் கூடங்களில் தொழுகை நடத்துவோம் என்கின்றீர்கள். அடுத்தவன் வீட்டுக்கு வந்துவிட்டால் அவனைப் போல மாறாமல் இருப்பவர்கள் எல்லாரும் மன நோயாளிகள் தான் என்பதை புரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள் !!!

Anonymous said...

@ இஸ்மத் - // தமிழ்ப் பயங்கரவாதிகள், எமக்குச் செய்த அநியாயங்களைப்பற்றி எழுதினால், இவர்களுக்குப் பொத்துக்கொண்டு கோபம் வருகிறது. //

ஒத்துக் கொள்கின்றேன் !!!

ஆனால் முஸ்லிம் பயங்கரவாதிகள் தமிழர்களுக்கு செய்த கொடூரங்களை சொன்னால் மட்டும் பொத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு கோபம் வருவதேனோ ??? !!!

Nizam said...

இக்பால் செல்வன் said...

//அப்போ ஏன் இன்னும் பிரமிடுகளையும் இராக் , இரான், துருக்கி, ஜோர்டான் போன்ற நாடுகளில் யாரும் வழிப்படாத சாத்தான்களின் சின்னங்களையும் சிலைகளையும் விட்டு வைத்துள்ளீர்கள்.//

உரிமைகூற ஆட்கள் இல்லம்மல் இங்கு 100 சதவீதம் முஸ்லீம்கள் மட்டும் இருந்தால் சத்தியப்படும்.

மின் வாசகம் said...

@ நிஜாம் - //உரிமைகூற ஆட்கள் இல்லம்மல் இங்கு 100 சதவீதம் முஸ்லீம்கள் மட்டும் இருந்தால் சத்தியப்படும்//

நல்லா சுத்துங்க காதுல பூ !!! எகிப்தில் சாத்தானின் சின்னம் தான் சோறு போடுகின்றது, அதனால் தான் அதனை இடிக்கவில்லை .... !!!

பிரேம்லால் ரணகல ஒரு பௌத்தர் இல்லை என சொல்லியும் சுபி ஐயா இன்னும் அதனை நீக்கவில்லை .. பொய்களில் பிரச்சாரம் பண்ணுவதும் ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதும் ஒன்று !!!

suvanappiriyan said...

//பிரேம்லால் ரணகல ஒரு பௌத்தர் இல்லை என சொல்லியும் சுபி ஐயா இன்னும் அதனை நீக்கவில்லை .. பொய்களில் பிரச்சாரம் பண்ணுவதும் ஆகாயத்தில் கோட்டைக் கட்டுவதும் ஒன்று !!!//

நான் பல இலங்கை பதிவர்களின் பதிவுகளை படித்து அங்கிருந்து எடுத்துப் போட்டதுதான் இந்த செய்தி. நான்கு தளங்களில் இந்த செய்தி பவுத்தராகத்தான் வந்துள்ளது. இக்பால் செல்வன் சொல்வதால் பவுத்தர் கிறித்தவராக மாறி விட மாட்டார். இவரது பெயரே இவரை பவுத்தராக காட்டிக் கொண்டிருக்கிறது.

suvanappiriyan said...

@Iqbal Selvan!

//@ சுபி - // //அதற்காக அடுத்தவார் வீட்டில் இப்படித்தான் இருப்பேன் என்றால் இது ஒரு மணநோய்.// //

அடுத்தவர் வீட்டிற்கு போனால் அவர்களைப் போலத் தானே இருக்க வேண்டும் !!! அப்போ என்ன மண்ணுக்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வந்துக் கொண்டு !!! புர்க்கா போடுவோம், ஹலால் உணவு கேட்போம், பள்ளிக் கூடங்களில் தொழுகை நடத்துவோம் என்கின்றீர்கள். அடுத்தவன் வீட்டுக்கு வந்துவிட்டால் அவனைப் போல மாறாமல் இருப்பவர்கள் எல்லாரும் மன நோயாளிகள் தான் என்பதை புரிய வைத்தமைக்கு மிக்க நன்றிகள் !!!//

இப்படி நான் எங்கும் கூறவில்லையே?

நன்னயம் said...

@சுவனப்பிரியன்
"மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது 6 நாட்கள் தங்கி அங்குள்ள நிலைமைகளை எல்லாம் நோட்டமிட்டேன். நம் இந்தியாவை விட இந்து மக்கள் சகல சுதந்திரமாக இருந்ததை பார்த்துள்ளேன். அனுமதி இன்றி எலலையோர பிள்ளையார் மாதிரி கட்டிய கோவில்களைத்தான் அப்புறப்படுத்தியது மலேசிய அரசு. அதுவும் ரோடுகளை அகலப்படுத்த வேண்டியே இதனை செய்தது. அங்குள்ளவர்களை கேட்டுப் பாருங்கள்." பொய்க்கும் ஒரு அளவு இருக்க வேண்டும் சு பி . 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கோலாலம்பூரில் புகழ்பெற்ற மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோயிலை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மண்தகரிகள் (bulldozers) இடித்து மண்மேடாக்கியது. 2006ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகாரிகள் ஓர் அறுபது ஆண்டு கால இந்துக் கோயிலை இடித்துத் தள்ளினர். அந்தக் கோயிலை 1000 இந்துக்கள் பயன்படுத்தி வந்தனர்.கோயில்கள் உடைப்பதை நிறுத்தும்படி மலேசியப் பிரதமருக்கு இண்ட்ராப் பல முறையீடுகளைச் செய்தது. இருப்பினும், சரியான எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள் திட்டமிடப்பட்டு அப்புறப்படுத்தப் படுகின்றன என்று பல இந்து பரிந்துரைக் குழுமங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவற்றுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கும் ஒரே அதிகாரப்பூர்வ காரணம், கோயில்கள் சட்டத்திற்கு புறம்பாகக் கட்டப்பட்டுள்ளன என்பதாகும். இருப்பினும் சில கோயில்கள் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்னயம் said...

@சுவனப்பிரியன்,
"மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது 6 நாட்கள் தங்கி அங்குள்ள நிலைமைகளை எல்லாம் நோட்டமிட்டேன். நம் இந்தியாவை விட இந்து மக்கள் சகல சுதந்திரமாக இருந்ததை பார்த்துள்ளேன். அனுமதி இன்றி எலலையோர பிள்ளையார் மாதிரி கட்டிய கோவில்களைத்தான் அப்புறப்படுத்தியது மலேசிய அரசு. அதுவும் ரோடுகளை அகலப்படுத்த வேண்டியே இதனை செய்தது. அங்குள்ளவர்களை கேட்டுப் பாருங்கள்".

பொய்க்கும் ஒரு அளவு வேண்டும் சு பி . 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல இந்துக் கோயில்களை இடித்துத் தள்ளியது. 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கோலாலம்பூரில் புகழ்பெற்ற மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோயிலை, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் மண்தகரிகள் (bulldozers) இடித்து மண்மேடாக்கியது.
சிலாங்கூர் ஷாஆலாம் நகரில் உள்ள 107ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓர் இந்துக் கோயிலை உடைப்பதில் இருந்து தவிர்ப்பதற்கு சுபாங் பயனீட்டாளர் சங்கத் தலைவர் அரும் முயற்சிகளை மேற்கொண்டார். மலேசியாவில் தீவிரம் அடைந்து வரும் இஸ்லாமியத்தைக் கண்டு, இங்குள்ள சிறுபான்மை சமயத்தைச் சார்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகாரிகள் ஓர் அறுபது ஆண்டு கால இந்துக் கோயிலை இடித்துத் தள்ளினர். அந்தக் கோயிலை 1000 இந்துக்கள் பயன்படுத்தி வந்தன

நன்னயம் said...

@ UNMAIKAL
"மரங்களை சுற்றி துணி கட்டி வைத்தும்,

முதலில் நாலே நாலு செங்கலை வைத்து அதற்கு குங்குமம் விபூதி பூசி,

போக போக சில நாட்கள் கழித்து விரிவாக கம்பியை, மரத்தை , செங்கல்களை சுற்றி சுவரெழுப்பி கதைகள் பல கட்டி பூசை புணஸ்காரங்கள் என பழக்கி ஆயிரக்கணக்காண கோயில்களாக்கினார்கள்."

ஆமா நீங்க தகர கொட்டாயை போட்டுட்டு நீண்ட கால பள்ளிவாசல் என்று சொல்லு வீங்க இந்துக்கள் சொன்னால் தப்பு. நல்ல நியாயம்

நன்னயம் said...

"மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது 6 நாட்கள் தங்கி அங்குள்ள நிலைமைகளை எல்லாம் நோட்டமிட்டேன். நம் இந்தியாவை விட இந்து மக்கள் சகல சுதந்திரமாக இருந்ததை பார்த்துள்ளேன். "


மலாய்\சீன கலவரத்துக்குப் பிறகு மலேசியாவில் 'பூமிபுத்திரர்கள்' என்ற மண்ணின் மைந்தர்களுக்கான திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மலாய் காரர்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை, மற்றவர்கள் எல்லோரும் இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்தப் பட்டனர். இந்தக் கொள்கையால் பொதுத்துறை நிறுவனங்கள் மலாய்காரர்கள் வசம் சென்றன. தனியார் துறையோ சீனர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் எதுவுமில்லாமல் நடுத்தெருவில் விடப் பட்டவர்கள் தமிழர்கள்தான். இந்நாட்டில் எல்லா இனத்திற்கும் அரசாங்கம் சமமான வாய்ப்புகளையே வழங்கி வருகின்றது என்று மக்களின் வரிப் பணத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. 1. நாட்டில் உள்ள 5 முக்கிய வங்கிகளில் 4 (அரசாங்கத்தின் கோட்பாட்டின் காரணமாக) மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது.
2. பெட்ரோனாஸில் உயர் அதிகாரிகளில் 99% மலாய்க்காரர்கள். இந்நிருவன வேலை வாய்ப்பில் 3% சீனர்களும், 0.1% இந்தியர்களும் உள்ளனர். இந்த 0.1%த்தில் 70% முசுலிம் இந்தியர்கள் ஆவர்.

3. நாட்டில் உள்ள 2000 பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையங்களில் 99% உரிமையாளர்கள் மலாய்க்காரர்களே.

4. பெட்ரோனாஸில் பதிவுப் பெற்றக் குத்தகையாளர்கள் 100% மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும்.

5. மலாய்க்காரர்களின் நிருவனங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால் ஆனால் மற்றவர்கனின் நிருவனங்களில் 30%அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உண்டு.

நன்னயம் said...

6. அரசாங்கத் துறைகளான, காவல்துறை, தாதிமை, தற்காப்பு ஆகியவைகளில் புதிதாக வேலைக்கு அமர்த்தப் படுபவர்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 4%க்கும் குறைவானவர்களே.

7. ஆகாயப் படையில்1960ல் சீனர்கள் 40%மும், இந்தியர்கள் 50%மும் இருந்தவர்கள் இன்று சீனர்கள் 2% இந்தியர்கள் 0.4% மட்டுமே உள்ளனர்.

8. புத்ராஜெயாவில் உள்ள அரசாங்க நிர்வாகங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 2%த்திற்கும் குறைவானவர்களே.

9. 95% அரசாங்கக் குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கே. ரி.ம. 100,000.00 வரை மதிப்புக் கொண்ட அரசாங்க குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே.

10. எல்லா வியாபார உரிமங்களும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில்.

11. மலாய்க்காரர்கள் அல்லாதவர்களினால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பல நிருவனங்கள் அரசாங்கத்தின் மிரட்டலின் மூலம் அவை மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டுக்கு மாற்றப்பட்டன. உதாரணம். UTC, UMBC, MISC, SOUTHERN BANK, WORKERS BANK,

12. கடந்த 40 வருடங்களில் சீன, இந்தியர்களுக்குச் சொந்தமான குறைந்தது 15 பேருந்து நிருவனங்கள் கட்டாயம் மற்றும் அதிகாரத்துவ மிரட்டலாலும் மலாய்க்காரர்களுக்கு மாற்றப் பட்டுள்ளன.

13. மூவார் பேருந்து நிலையத்தில் 2004 இல் மலாய்க்காரர்கள் அல்லாதவர் ஒருத்தருக்குக் கூட அங்கு கடை கொடுக்கப்பட வில்லை.

14. புதியப் பொருளாதாரக் கொள்கையில் கீழ் கடந்த 34 ஆண்டுகளில் ரிங்கிட் மலேசியா 8,000.00 கோடியை, ASB, ASN, MARA, TABUNG HAJI, சில அரசாங்க நிருவனங்களைத் தனியார் நிருவனமாக மாற்றி அமைத்ததன் மூலம் அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

15. 1968லிருந்து 2000வரை, 48 சீன தொடக்கப் பள்ளிகளும், 144 தமிழ்ப் பள்ளிகளும் மூடப்பட்டு இதேக் காலக் கட்டத்தில் 2637 theesiya ஆரம்பப் பள்ளிக் கட்டப் பட்டுள்ளன.

16. பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடுகளில், மலாய்ப் பள்ளிகளுக்கு 96.5%மும், சீனப்பள்ளிகளுக்கு 2.5%மும், தமிழ்ப் பள்ளிகளுக்கு 1%மும் ஒதுக்கப் பட்டுள்ளது

17. எல்லா அரசாங்கப் பல்கலைக் கழகங்களிலும் உதவி தலைமை அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.1965ல் 70%மாக இருந்த மலாய்க்காரர்கள் அல்லாத விரிவுரையாளர்களில் இன்று 5%மட்டுமே உள்ளனர்.

18. இதுவரை STPMஇல் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் விருப்ப தொடர்கல்வியை அரசாங்கம் திட்டமிட்டே மறுத்திருக்கின்றது.

19. கடந்த 40 வருடங்களில் 2 மில்லியன் சீனர்களும், 0.5 மில்லியன் இந்தியர்களும் வேறு நாடுகளுக்குத் தஞ்சம் புக, 3 மில்லியன் இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பினோக்களுக்கு இங்கே குடியுரிமை வழங்கப்பட்டதோடு, பெரும்பாலானோருக்கு பூமிபுத்ரா தகுதியும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த 6 இலட்சம், சீனர் மற்றும் இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை மறுக்கப் படுகின்றது.

20. அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைகாட்சி நிலையங்களான TV1, TV2,TV3ன் நிர்வாக அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.

நன்னயம் said...

21. வைப்புத் தொகைக்கான வட்டி 2%லிருந்து 3.5% பேங்க் நெகாரா நிர்ணயித்திருக்கும் போது ASB மற்றும் ASN போன்றவைகள் 12.5%வரை தங்கள் அங்கத்தினர்களுக்கு வட்டியாகக் கொடுத்திருக்கின்றன.

இதுமட்டுமல்ல. நாட்டின் பொன் முட்டை இடும் வாத்து என்றுக் கருதப்படும் நிருவனங்கள் அம்னோ புத்ரா கட்டுப் பாட்டில் உள்ளன.

அ. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிருவனம் (KHAZANAH)
ஆ. நீர் வினியோகம் மற்றும் கட்டுமானத் துறை (GAMUDA, MMC, HI-COM)
இ. தொடர்புத் துறை (CELCOM, TM)
ஈ. அரிசி இறக்குமதிக்கான உரிமம் (BERNAS, SYED MOKTAR)
உ. அன்றாட தேவைக்கான இறக்குமதி உரிமம் (UMNO TENAGA பேங்க்)

நன்னயம் said...

மலேசியாவில் வாழும் மூன்றாவது பெரிய இனமாகத் தமிழர்கள் இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பாலும் கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியர்கள் வேறு இப்போது அதில் போட்டிக்கு வந்து விட்டதால் தமிழர்களுக்கு கூலி வேலை கூட கிடைப்பது அரிதாகி விட்டது. கல்வியிலும் அவர் களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களுக்கான 'பூமிபுத்திரர்கள்' கொள்கையால் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான இடங்கள் மலாய் காரர்களுக்கே அளிக்கப்படுகின்றன.

2001&ம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய உண்மை களும்கூட வெளி உலகுக்குத் தெரியாதபடி மறைக்கப் பட்டன. அதைப்பற்றி ஆறுமுகம் என்பவர் கடந்த ஆண்டு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். 'மார்ச்\8' என்று தலைப்பிடப்பட்ட அந்தப் புத்தகத்தை மலேசிய அரசு உடனடியாகத் தடை செய்துவிட்டது. கடந்த ஆண்டில் மட்டும் மலேசிய அரசு ஐம்பத்தாறு நூல்களைத் தடை செய்திருக்கிறது. அதில் குண்டலினி பற்றிய புத்தகமும் ஒன்று. இன்ஜினீயராக இருந்து வழக் கறிஞராக மாறியிருக்கும் ஆறுமுகம், தனது நூலைத் தடை செய்ததை எதிர்த்து இப்போது நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார்.

நன்னயம் said...

யாரோ கல்லை ௭றிந்துவிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாட்டிலுள்ள ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சகலமத சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது ௭ன்பதை சவால்விட்டுக் கூறுகிறேன் ௭ன்று ஆளும் கட்சி ௭ம்.பி.யான ஏ.௭ச்.௭ம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார்.

எது உண்மை

Maruthan said...

பிரேம்லால் ரனகல பிறப்பால் பவுத்தர், ஆனால் கிறிஸ்தவர்...

http://www.stanthonyshrinekochchikade.org/faithExperiences_details.php?id=5

suvanappiriyan said...

சகோ எதிகாலிஸ்ட்!

உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. ஒரு நாட்டின் பூர்வீக குடி மக்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின் தள்ளப்பட்டு வெளி நாடுகளிலிருந்து வேலைக்காக குடியேறியவர்கள் அபரிமிதமான வளர்ச்சியை காணும் போது அரசு சில நடவடிக்கைகளை எடுக்கும். அப்படி எடுக்கா விட்டால் வறுமையினால் பெரும்பான்மையினர் இனக் கலவரத்தில் ஈடு பட வாய்ப்புண்டு. இங்கு சவுதியிலும் கூட 60 சதவீதம் சவுதி நாட்டவரும் 40 சதவீதம் வெளி நாட்டவரும் இருக்க வேண்டும் என்று கட்டாய சட்டம் இயற்றி அமுல்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் தற்போது நடந்து வரும் துப்பாக்கி சூடுகள் இதை மையமாக வைத்தே நடைபெறுகின்றன. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் போது இது இன்னும் அதிகமாகலாம். எனவேதான் அமெரிக்க அரசும் தனது நாட்டு மக்களுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. முன்னுரிமை தனது நாட்டு குடி மக்களுக்கே என்பது எல்லா நாடுகளும் கடை பிடிக்கும் ஒன்றே!

இதற்காக அந்த அரசு வெளிநாட்டு தொழிலாளர்கள் மேல் எடுக்கும் நடவடிக்கையை குறை காண முடியாது. எனது குடும்ப அங்கத்தினர்களும் மலேசியா சிங்கப்பூர்களில் குடும்பத்தோடு இருக்கின்றனர். அங்குள்ள நிலைமை எனக்கும தெரியும். நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற போது இநது மக்கள் மிக மகிழ்ச்சியுடனேயே இருந்ததை நான் பார்த்தேன். கோவில்கள் அப்புறப்படுத்தப்பட்டதற்கு மறு இடம் ஒதுக்கி தந்ததையும் நான் பார்த்துள்ளேன். அனுமதி இல்லாமல் கோவில்களை கண்ட இடங்களிலும் கட்டுவது நமது தவறும் அல்லவா? அவ்வாறு பொது இடங்களில் கட்டப்பட்ட கோவில்களுக்கு சில பிரச்னைகள் வந்துள்ளதை மறுப்பதற்கில்லை: அதேபோல் அனுமதி இன்றி கட்டப்பட்ட பள்ளிகளையும் அப்புறப்படுத்தியுள்ளது அரசு.

எவ்வளவு நாட்கள் நாம் வெளிநாட்டில் குடியுரிமையோடு வாழ்ந்தாலும் நாம் இரண்டாம் தர குடி மக்கள்தான் சொந்த நாட்டு மக்கள் பார்வையில்.

அந்த நாடு அதற்காக அநியாயமாக தமிழர்களை பழி வாங்கினால் அதை நான் கண்டிக்கிறேன். பூர்வீக குடி மக்களுக்கு பிரச்னை உண்டு பண்ணாமல் நம்முடைய வாழ்வாதாரத்தை வைத்துக் கொண்டால் எல்லோரும் இன்பமாக வாழலாம்.

ஆரியர்கள் வெளி நாட்டிலிருந்து நம் நாட்டில் புகுந்து நமது மக்களையே அடிமையாக்கியதால்தான் இன்று அவர்களுக்கு எதிராக அனைத்து சாதியினரும் எதிர்ப்பதில் ஓரணியில் நிற்கிறார்கள். அதே ஆரியரகள் தங்கள் கலாச்சாரத்தை தங்களிடம் மட்டும் வைத்துக் கொண்டு பாரத நாட்டின் பூர்வீக குடி மக்களின் உரிமைகளில் வேலை வாய்ப்புகளில் கை வைக்காமல் இருந்திருந்தால் பெரியாருக்கோ, வீரமணிக்கோ வேலையில்லாமல் போயிருக்கும். இலங்கையிலிருந்து பர்மா, அஸ்ஸாம், மலேசியா வரை நடக்கும் பிரச்னைகளுக்கு ஆணி வேர் இதுதான்.

Anonymous said...

///அப்போ தனி ஈழத்துக்கு ஒரு நியாயம் , பாலஸ்தீனத்துக்கு ஒரு நியாயமா ?///

பலஸ்தீனத்திற்கு நியாயம் இருப்பதால்தான், ஓரிரண்டு நாடுகளைத் தவிர, உலகம் முழுவதும் ஆதரவு இருக்கிறது.

தமிழர்கள் மூன்றாவது இனமாக இலங்கையில் இருக்க, ஈழம் என்னும் கனவு அறவே சாத்தியப்படாது.

வடபகுதியில் மட்டுமே தற்போது, தமிழர் பெரும்பான்மை. அதையும், அரசு இன்னும் சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளிவிடும் குடியேற்றங்களை மேற்கொள்கிறது. இது நாட்டுக்கும் நல்லது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் நல்லது.

நாடற்ற தமிழ் ஈழம் வெளிநாட்டில் இருக்க, இலங்கையில் ஈழம் அமைக்க நாடுவது கோமாளித்தனமானது.

Anonymous said...

///ஆனால் முஸ்லிம் பயங்கரவாதிகள் தமிழர்களுக்கு செய்த கொடூரங்களை சொன்னால் மட்டும் பொத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு கோபம் வருவதேனோ ??? !!///

தமிழ்ப் பயங்கரவாதிகள் முஸ்லிம்களைக் கொல்லலாம், கொள்ளையடிக்கலாம், கப்பம் வாங்கலாம், வீடு, வாசலில் இருந்து வாசலிருந்து துரத்தியடிக்கலாம்.

அவர்களை எதிர்த்து நின்றால், முஸ்லிம்களுக்கு நாமம் சூட்டுவது பயங்கரவாதிகள். அப்படித்தானே!

தமிழன் முஸ்லிமைக் கொல்லலாம். முஸ்லிம் தமிழனை திருப்பித் தாக்கக் கூடாது.

இந்த தாரக மந்திரம், எல்லாராலும் எடுபடாது!

சீனு said...

//நியாயமாக வேலை செய்து இந்துத்வாவினரை கைது செய்த ஹேமந்த கர்கரேயையும் திட்டமிட்டு கொன்றாகி விட்டது.//

நல்ல வேளை. கசாப் இந்துன்னு சொல்லாம போனீங்களே... :))))))))))))))))))))

Anonymous said...

@ சுவனப் பிரியன் - பிரேம் லால் ரணகல ஒரு பவுத்தர் இல்லை என்பதை அவர் அடிக்கடி போகும் கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோணியார் ஆலயத்தில் உள்ளோரிடம் கேட்டாலே தெரியும் !!!

நீங்கள் குறிப்பிடும் அந்த நான்கு வலைப்பதிவுகளும் இலங்கை முஸ்லிம்களால் எழுதப்படுபவை வழக்கம் போல தப்பும் தவறுமான செய்திகள் அவை !!!

இதற்கு மேலும் அவரே நேரில் வந்து சொன்னால் தான்.. வெளிச்சம் ... !!! என்னால் முடிந்த பிழைகளை சுட்டிக் காட்டிவிட்டேன் .. திருத்துவதும் திருத்தாதும் உங்கள் விருப்பம் ..!!!

இலங்கையில் பெயரை வைத்துக் கொண்டு அவர் இந்துவா பௌத்தரா கிருத்தவரா எனக் கணிப்பது கடினம். ஏனெனில் பல கிருத்தவர்கள் தமது சிங்கள - தமிழ் பெயர்களிலேயே இருப்பார்கள். உதா. ஈழத் தந்தை வேலுப்பிள்ளை செல்வநாயகமும் ஒரு கிருத்தவரே.

சுவனப்பிரியன் ஐயா ! உண்மையில் நீங்கள் அப்பாவியாகத் தான் இருக்கின்றீர்களா ? இல்லை ... !!???

Anonymous said...

///வடபகுதியில் மட்டுமே தற்போது, தமிழர் பெரும்பான்மை. அதையும், அரசு இன்னும் சில ஆண்டுகளில் பின்னுக்குத் தள்ளிவிடும் குடியேற்றங்களை மேற்கொள்கிறது. இது நாட்டுக்கும் நல்லது. இந்தியாவின் பாதுகாப்புக்கும் நல்லது.///

அப்படியா சகோ. அப்போ யூதர்கள் தமது பாதுகாப்புக்காக மேற்குக் கரைகளில் குடியேற்றங்களை மேற்கொள்வதிலும் தவறே இல்லையே !!! கொஞ்சக் காலத்தில் மேற்கு கரையில் யூதர்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள். மத்தியக் கிழக்கும் அமைதிப் பூங்காவாக திகழும் !!!

:)

suvanappiriyan said...

@Iqbal Selvan!

//நீங்கள் குறிப்பிடும் அந்த நான்கு வலைப்பதிவுகளும் இலங்கை முஸ்லிம்களால் எழுதப்படுபவை வழக்கம் போல தப்பும் தவறுமான செய்திகள் அவை !!!

இதற்கு மேலும் அவரே நேரில் வந்து சொன்னால் தான்.. வெளிச்சம் ... !!! என்னால் முடிந்த பிழைகளை சுட்டிக் காட்டிவிட்டேன் .. திருத்துவதும் திருத்தாதும் உங்கள் விருப்பம் ..!!!//

பிரேம்லால் ரனகல பிறப்பால் பவுத்தர், ஆனால் கிறிஸ்தவர்...

http://www.stanthonyshrinekochchikade.org/faithExperiences_details.php?id=5

சகோ மதுரன் கொடுத்த சுட்டியை நன்றாக படித்து விட்டு 'பொய் சொன்ன சுவனப்பிரியன்' என்ற தலைப்பை நீங்கள் தான் மாற்ற வேண்டும்.

Anonymous said...

///கொஞ்சக் காலத்தில் மேற்கு கரையில் யூதர்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள். மத்தியக் கிழக்கும் அமைதிப் பூங்காவாக திகழும் !!!///

அரை நூற்றாண்டுகளாக யூதர்கள் செய்கிறார்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த செய்தி.

ஆனால், முஸ்லிம்கள்தான் அங்கு பெரும்பான்மை இன்றுவரை.

ஆக, ஒரு தசாப்தத்தில், இலங்கைத் தமிழர்களின் நிலை தலை கீழாக என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமென்பதில்லை.

Anonymous said...

Iqbal selvan,

///நீங்கள் குறிப்பிடும் அந்த நான்கு வலைப்பதிவுகளும் இலங்கை முஸ்லிம்களால் எழுதப்படுபவை வழக்கம் போல தப்பும் தவறுமான செய்திகள் அவை !!!///


பல உண்மைகளை அப்படியே எழுதுவதால், இலங்கை முஸ்லிம்களால் எழுதப்படும் வலைப்பதிவுகளை நாடி வருபவர்கள், அதிகமாக பிற மத சகோதரர்களாக இருக்கின்றனர்.

தப்பும் தவறுகளும் நிறைந்த வலைப்பதிவை தாங்கள் கொண்டிருப்பதால்தான் என்னவோ, தங்கள் தளமும் வறண்டு இருக்கிறது.


- Ismath

Anonymous said...

Iqbal Selvan

///பிரேம் லால் ரணகல ஒரு பவுத்தர் இல்லை என்பதை அவர் அடிக்கடி போகும் கொழும்பு கொச்சிக்கடை தூய அந்தோணியார் ஆலயத்தில் உள்ளோரிடம் கேட்டாலே தெரியும் !!!///


கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயத்திற்கு கிறிஸ்தவர் மட்டுந்தான் அடிக்கடி போவார்கள் என்று விளங்கி வைத்திருக்கிறீர்.

இந்து, கிறிஸ்தவ, பௌத்தர்கள் எல்லாருமே போகிறார்கள். நேர்த்திக்கடன் வேண்டி, செல்பவர்களும் ஏராளம்.

நேர்த்திக்கடன் நிறைவேறாமல் போகும் பக்தர்கள், அந்தோணியாரைத் தூஷித்துச் செல்லுவதும் குறைச்சலில்லை.

ரணகல என்ற பெயர், பார்க்கும்போதே ஒரு பௌத்த பெயர். கிறிஸ்தவ கோயிலுக்கு அடிக்கடி போகும் ஒருவரை, அந்த மதத்தைச் சார்ந்தவர் என்று முடிவு கட்டுவது அறியாமையின் வெளிப்பாடு.

இவர் பௌத்த மதத்தையோ அல்லது கிறிஸ்தவ மதத்தையோ சார்ந்திருப்பது அவரின் இஷ்டம்.

இக்பால் செல்வன் என்ற நபருக்கு என்ன அக்கறையோ!


///ஈழத் தந்தை வேலுப்பிள்ளை செல்வநாயகமும் ஒரு கிருத்தவரே.///

அதென்ன அவர் ஈழத் தந்தையா? தமிழினப் பேரினவாதிக்கு ஒரு நாமம் வேறு!

- Ismath

Anonymous said...

@ சுவனப்பிரியன் - தாங்கள் தந்த சுட்டியைப் போய் பார்த்தேன். அவர் எங்குமே தம்மை பௌத்தர் என தெரிவிக்கவில்லையே... !!! பிறப்பால் அவர் பௌத்தரா அல்லது கிருத்தவரா என்று தெரியாத நிலையில் பதிவினை தெரிந்தது போல எழுதியது யார் ??? !!! நானா நீங்களா ???

அவர் பௌத்தர் என்று உறுதியாகாதவரையில் நீங்கள் தான் பதிவின் தலைப்பை மாற்ற வேண்டி இருக்கு !!! சகோ ... !!!

:)

Anonymous said...

அது மட்டுமல்ல.. நீங்கள் சொன்ன பல பொய்களில் இது ஒன்று மட்டுமே !!! உங்களின் பொய்களுக்கு ரியாஸின் பதில்களை பாருங்கள் தெரிந்துவிடும் உண்மை !!!

Anonymous said...

//அதென்ன அவர் ஈழத் தந்தையா? தமிழினப் பேரினவாதிக்கு ஒரு நாமம் வேறு!//

சொன்னாலும் சொல்லா விட்டாலும் செல்வநாயகம் ஈழத் தந்தையும், அமைதி வழி மனிதருமே ஆவார் !!! இதனை உங்கள் மு.க தலைவர் அஷ்ரஃபே ஏற்றுக் கொண்ட ஒன்று தான் சகோ.. உங்களுக்குத் தான் வரலாறுகள் தெரியவில்லை ... !!!

//ரணகல என்ற பெயர், பார்க்கும்போதே ஒரு பௌத்த பெயர். கிறிஸ்தவ கோயிலுக்கு அடிக்கடி போகும் ஒருவரை, அந்த மதத்தைச் சார்ந்தவர் என்று முடிவு கட்டுவது அறியாமையின் வெளிப்பாடு.//

ரணகல என்பது பௌத்த பெயர் தான் என்பதை உங்களால் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் .. ஏராளமான கிருத்தவர்கள் இலங்கையில் சிங்கள பௌத்த பெயர்களைக் கொண்டுள்ளார்கள். அப்படியே அவர் பௌத்தர் இல்லை என்றாலும், பௌத்ததை கடைப்பிடிக்காத ஒருவர் வெட்கப்படுவதாக சுவனப் பிரியன் பதிவு எழுதுவது மட்டும் எந்த நியாயம் !!!

பொய்களை எழுதிக் கொண்டே போங்கள் !!! அனைத்தும் உண்மைக்கு முன்னாள் உடைப்பட்டு தூசாகிவிடும் !!!!

வயதில் மூத்த சுவனப் பிரியன் தம் மதம் சார்ந்த பற்றுள்ளவர் என்று தான் நினைத்திருந்தேன்.. அதனால் ஒருவகை மரியாதை இருந்தது. ஆனால் மதத்துக்காக எப்படிப் பட்ட பொய்களையும் எழுதி பிரச்சாரம் செய்பவர் என்பதை இப்போது தான் அறிந்துக் கொண்டோம். அத்தோடு மட்டுமில்லாமல் அனானியாக வந்து எதிர்மறைக் கருத்திடுவதும் அவரின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றது !!!

அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும் ... !!!

:)

Anonymous said...

///ரணகல என்பது பௌத்த பெயர் தான் என்பதை உங்களால் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும் ..///

சிங்கள மொழியறிவு முதலில் அவசியம். அத்தோடு பௌத்த மக்களோடு சேர்ந்து பழகியாவது இருக்க வேண்டும்.

தங்களுக்கு ஒன்றுமே இல்லாது, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, எப்படி உறுதியாகச் சொல்லமுடியும் என்று கேட்டால்!

///சொன்னாலும் சொல்லா விட்டாலும் செல்வநாயகம் ஈழத் தந்தையும், அமைதி வழி மனிதருமே ஆவார் !!! இதனை உங்கள் மு.க தலைவர் அஷ்ரஃபே ஏற்றுக் கொண்ட ஒன்று தான் சகோ.. உங்களுக்குத் தான் வரலாறுகள் தெரியவில்லை ... !!!///

முஸ்லிம்களின் மேல் இனவாதக் கருத்துக்களை உமிழ்ந்த இனவாதிதான் செல்வா என்பவர். அந்த வரலாறு தெரிந்தாலும் சொல்லவா போகிறீர்கள்?

அரசியல்வாதிகள் தமது நலனுக்கு ஏற்றபடி தங்களுக்குள் விரோதம் பாராட்டுவதும் இணைந்து கொள்வதும் இயல்பு. அதுபோல்தான், அஷ்ரபின் ஏற்றுக்கொள்தலும்!

தமிழினம் இந்தளவுக்கு வாங்கிக்கட்டுவதற்கு செல்வாவின் உசுப்பேற்றல் ஒரு காரணம்.

இறுதியில் அவர் வழியில் வந்த தமிழ் இனவாதிகள், உசுப்பேற்றப் பட்டவர்களாலே கொலையுண்டனர்.

அப்பாவித் தமிழ் வாலிபர்களை உசுப்பேற்றி நாட்டையும் தமிழினத்தையும் ரணகளமாக்குவதற்கு மூலகர்த்தாதான் இந்த செல்வா.

///வயதில் மூத்த சுவனப் பிரியன் தம் மதம் சார்ந்த பற்றுள்ளவர் என்று தான் நினைத்திருந்தேன்.. அதனால் ஒருவகை மரியாதை இருந்தது. ஆனால் மதத்துக்காக எப்படிப் பட்ட பொய்களையும் எழுதி பிரச்சாரம் செய்பவர் என்பதை இப்போது தான் அறிந்துக் கொண்டோம்.///

மதத்திற்காக பொய்களை எந்த முஸ்லிமும் எழுதுவதில்லை, சுவனப்பிரியன் உள்பட!

- Ismath

Anonymous said...

//சிங்கள மொழியறிவு முதலில் அவசியம். அத்தோடு பௌத்த மக்களோடு சேர்ந்து பழகியாவது இருக்க வேண்டும்.

தங்களுக்கு ஒன்றுமே இல்லாது, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, எப்படி உறுதியாகச் சொல்லமுடியும் என்று கேட்டால்!//

இஸ்மத் அவர்களே ! சிங்கள மொழியறிவு எனக்கு பூரணமாக இல்லை தான். ஆனால் பௌத்த மக்களோடு குறிப்பாக சிங்களப் பௌத்தர்களோடு நன்றாகவே பழகி உள்ளேன்.. இலங்கைக்கும் சென்று வந்துள்ளேன். கனடாவில் பல சிங்கள நண்பர்களும் உண்டு, பக்கத்து வீடு கூட சிங்களக் குடும்பம் தான் ... !!! போதுமா சகோ. ?

எங்கோ உட்கார்ந்து கொண்டு மியன்மாரை பற்றி சுவனப்பிரியன் எழுதும் போது, சிங்களவர்களோடு பழகிய என்னால் இலங்கையை பற்றி எழுத முடியாத என்ன ?!!

//முஸ்லிம்களின் மேல் இனவாதக் கருத்துக்களை உமிழ்ந்த இனவாதிதான் செல்வா என்பவர். அந்த வரலாறு தெரிந்தாலும் சொல்லவா போகிறீர்கள்?//

இதை நீங்கள் தான் சொல்லுகின்றீர்கள் .. இலங்கை முஸ்லிம் காங்கிரசோ, அஷ்ரபின் மனைவியாரின் கட்சிகளோ இப்படி ஒரு போதும் சொன்னதில்லை.. அனைத்து சிறுபான்மை தமிழர்களாலும் ஏற்கப்பட்ட ஒரேத் தலைவர் செல்வநாயகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ..

உங்கள் ஒருவருக்காக உண்மைகள் பொய்கள் ஆகிவிடுமா ?

//மதத்திற்காக பொய்களை எந்த முஸ்லிமும் எழுதுவதில்லை, சுவனப்பிரியன் உள்பட!//

உண்மைகளை எழுதினால் தான் முஸ்லிம் இல்லை என்று வெளியேற்றிவிடுவீர்களே !!! என்ன செய்ய ?

Anonymous said...

///இஸ்மத் அவர்களே ! சிங்கள மொழியறிவு எனக்கு பூரணமாக இல்லை தான். ///

பூரணமாக சிங்கள மொழியறிவு இல்லையென்று ஒத்துக்கொண்ட பிறகும் ரணகல என்ற பெயர் பௌத்த பெயர் இல்லை என்று உளறும் வீண் விதாண்டாவாதம் ஏனோ!

///அதாவது ஒரு விடயத்தை பற்றி முழுமையாக தெரியாத நிலையில் அவற்றைப் பற்றி தெரிந்தவர் போலக் காட்டிக் கொள்வது முறையான ஒன்றல்ல. அதே போல ஒன்றும் தெரியாமல் தெரிந்தவை போல பேச வருபவன் நானில்லை..///

இப்படியான தங்களின் பிதற்றலுக்கும் குறைச்சலில்லை.

///எங்கோ உட்கார்ந்து கொண்டு மியன்மாரை பற்றி சுவனப்பிரியன் எழுதும் போது, சிங்களவர்களோடு பழகிய என்னால் இலங்கையை பற்றி எழுத முடியாத என்ன ?!!///

குரோதம், இனமுறுகல், முஸ்லிம்களைப் பற்றிய வக்கிர எண்ணங்கள் போன்ற குணாதிசயங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் தங்களின் அழுகல் எழுத்து நடைகள், இலங்கையைப் பற்றியென்ன நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ள நிகழ்வுகளை கிறுக்கித் தள்ளினாலும் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரிதான்!

தங்களின் எழுத்துக்களே வறண்டு இருக்கும்போது, பிறரின் சத்தான பதிவுகளை எப்படி உங்களுடன் ஒப்பிடுவது?

///இலங்கை முஸ்லிம் காங்கிரசோ, அஷ்ரபின் மனைவியாரின் கட்சிகளோ இப்படி ஒரு போதும் சொன்னதில்லை.. அனைத்து சிறுபான்மை தமிழர்களாலும் ஏற்கப்பட்ட ஒரேத் தலைவர் செல்வநாயகம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ..///

இதற்குத்தான் ஏற்கனவே பதில் தந்தேனே!

அரசியல்வாதிகள் தமது நலனுக்கு ஏற்றபடி தங்களுக்குள் விரோதம் பாராட்டுவதும் இணைந்து கொள்வதும் இயல்பு. அதுபோல்தான், அஷ்ரபின் ஏற்றுக்கொள்தலும்!



///உண்மைகளை எழுதினால் தான் முஸ்லிம் இல்லை என்று வெளியேற்றிவிடுவீர்களே !!! என்ன செய்ய ?///


நீங்கள் என்னமோ உண்மைகளை எழுதுவதினால்தான் போலும், உங்களின் வறண்ட தளத்திலிருந்து உங்களையறியாமலே வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

Nizam said...
This comment has been removed by the author.