Followers

Wednesday, February 12, 2014

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!

யுவன் சங்கர் ராஜாவின் மாற்றமும் ஒரு அன்பரின் எதிர் வினையும்!

யுவனின் மாற்றத்தைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு ஒரு இந்து நண்பர் எனக்கு பின்னூட்டம் இட்டிருந்தார். பதில் நீண்டு விட்டதால் அதனை தனி பதிவாக இட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

//தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்து, தமிழ் கலாச்சாரத்தின் மூலம் செம்மையடைந்து இன்று அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுவது என்பது இவனை போன்ற துரோகி, பரதேசி, அயோகியம், முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது.....//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

இதன் அடிப்படையில்தானே இஸ்லாமே கட்டப்பட்டுள்ளது. இந்த பழமொழிகள் 2000 வருடங்களாக நமது தாயகத்தில் உலவி வருகின்றன. ஆனால் இதனை பின்பற்றும் தமிழ் இந்துக்கள் எத்தனை பேர்?

இதன்படி உங்கள் வாழ்க்கையை அமைத்திருந்தால் யுவனின் இந்த மாற்றம் நடந்தே இருக்காது. தமிழர்களாகிய நீங்கள் உங்கள் வேர்களை மறந்தீர்கள். யுவன் அந்த ஆணி வேரினை தேடி தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

அவர் இஸ்லாத்தை ஏற்ற ஒரு காரணத்திற்காக இவ்வாறு அவரை திட்டுவதுதான் உங்கள் மதத்தின் கொள்கையா? இன்றும் கூட சிரட்டையில் டீ தரும் தேநீர் கடைகளை மதுரையில் பார்க்கவில்லையா? இன்னும் கூட சில கிராமங்களில் செருப்பை கையில் பிடித்து பரிதாபமாக செல்லும் தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்ததில்லையா? சாதி மாறி காதலித்த குற்றத்திற்காக இளவரசனை இந்த இள வயதில் கொன்றது இந்த தமிழ் கலாசாரம் இல்லையா? சாமி கும்பிடக் கூட சாதி பார்த்து அனுமதிக்கும் கேவலம் இன்றும் நடைமுறையில் உள்ளதை மறுக்கப் போகிறீர்களா? எந்த முகத்தை வைத்துக் கொண்டு யுவனின் மன மாற்றத்தை குறை காண வந்து விட்டீர்?

//நாம் பிறப்பில் இருந்தே எம் அடையாளங்களை அழிக்க முடியாது .. அழிக்க முயன்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் ..//

இந்த வெற்று மிரட்டல்கள் கதைக்கு ஆகாது நண்பரே! இதனால் மேலும் அழிவுப் பாதைக்குத்தான் உங்களை இட்டுச் செல்கிறீர்கள். யுவன் ஏன் இந்த மாற்றத்தை அடைய வேண்டும்? அதற்கான நிர்பந்தம் என்ன என்பதை சிந்தித்து பாருங்கள்.

//. புலம் பெயர்ந்தாலும் இடம் பெயர்ந்தாலும் .. எங்க குழந்தைகள் இங்கு பிறந்தாலும் அன்னிய மொழி மட்டுமே பேசக்கற்ருக்கொண்டாலும் ...அடையாளம் மாருமா??குணமும் + முகமும் +நிறமும் +முடியும் காட்டிக்கொடுக்கும். அதேபோல் பிறப்பில் இருந்தே தமிழர்கள் நாங்கள் எங்கமொழி தமிழ் எங்க கடவுள்...!!!//

இதை இஸ்லாமும் மறுக்கவில்லையே! தாய் மொழிக்கு உரிய அந்தஸ்தை கொடுக்கச் சொல்கிறது இஸ்லாம். இளையராஜா இந்துவாக இருந்தாலும் அவருக்கு உரிய மரியாதையை யுவன் செய்ய வேண்டும்: அவரை கடைசி வரை காப்பாற்ற வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இந்த உலகில் தோன்றிய மூல மொழிகள் அனைத்தையும் மனிதர்களுக்கு கற்றுக் கொடுத்தது இறைவனே! இதனை குர்ஆனில் அழகாக எடுத்துக்காட்டுகிறான் இறைவன். தொன்மையான மொழியான தமிழ் இறைவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மொழி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் உங்கள் மதத்தில்தான் சமஸ்கிரதம் தேவ மொழி என்றும், தமிழ் நீச மொழி என்றும் அவமானப்படுத்தப்படுகிறது. அந்த பஞ்சாயத்துதான் இன்னும் சிதம்பரம் கோவிலில் தீர்க்கப்படாமல் இருக்கிறது. தமிழ் ஆர்வலரான நீங்கள் அதற்கு முயற்சிக்கலாமே! அப்படி தமிழை நீச மொழி என்று அவமானப் படுத்துபவர்களைத்தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறீர்கள்.

//இஸ்லாம் என்பது நம்மை அண்டி பிழைக்க வந்த, பிறகு நமது பலவீனத்தை பயன்படுத்தி நம்மையே ஆண்ட, மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் அரபியர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் ஒரு முறை தான் இஸ்லாம் என்ற மதம்..//

தவறான புரிதல் தோழரே! உலக மொழிகள் அனைத்திற்கும் தூதர்களை அனுப்பி இறை வேதத்தையும் கொடுத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. அதன்படி நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கும் வேதமும் தூதரும் வந்துள்ளனர்.

//இந்த மதத்திற்கு ஒரு பலமான வரலாறோ, இலக்கியமோ, கலாச்சாரமோ,கல்வி அறிவோ, பண்பாடோ, வளமையோ கிடையாது....//

இலக்கியம் என்று நீங்கள் தமிழில் காட்டும் எந்த ஒன்றும் நமது அறிவை விரிவுபடுத்துவதாக இல்லை. அதிக இலக்கியங்கள் சிலை வழிபாட்டையும், பெண் அடிமையையும், வர்ணாசிரம கோட்பாடுகளையும் தாங்கி நிற்கிறது. இந்த கணிணி யுகத்திலும் தீண்டாமை இந்த அளவு நமது தமிழகத்தில் வேரூன்றியிருக்க மூல காரணமே நீங்கள் குறிப்பிடும் தமிழ் இலக்கியங்கள்தான்.

கலை என்ற பெயரில் பெண்களை கோவில்களில் ஆட விட்டு ரசித்தீர்கள். ஆட்டம் முடிந்தவுடன் அந்த பெண்களை அந்தப்புரத்துக்கு கொண்டு சென்று அனுபவித்தீர்கள். முடிவில் அந்த பெண்களை 'தேவரடியார்கள்' என்ற பெயரையும் சூட்டினீர்கள். கடைசியில் அந்த பெண்கள் வாழ்வை இழந்து விலை மாதுகளாக மாற்றப்பட்ட கொடுமை தெரியுமா உங்களுக்கு? அவர்களையும் ஒரு சாதியாக பாவித்து இன்று வரை அந்த குடும்பத்து வாரிசுகள் கூனி குறுகி நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? தஞ்சையில் ராஜ ராஜ சோழனுக்கு வைப்புகளாக இருந்தவர்களின் ஒரு தெருவே இன்றும் சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இன்றும் நேபாளில் இவ்வாறு கோவிலுக்கு தேவரடியாராக நேர்ந்து விட்டு பெண்களை போகப் பொருளாக்கும் கூத்து நடந்து வருகிறது. இந்த பெருமையைத்தான் தமிழனின் கலாசாரம் என்று சொல்கிறீர்களா?

//மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பாடகர் கோடி சொத்து ஆனால் ,, தன் இனத்த்தின் நிறத்தை அவமானமாகக்கருதி வெருத்து வெள்லைத்தோலுக்கு ஆசைப்பட்டு கடைசியில் .. தோல்புற்ருநோயால் அவதிப்பட்டு வேதனையை மறக்க போதைக்கு அடிமையாகி .. மாண்டு போனார் ..//

ஆனால் மைக்கேல் ஜாக்ஸனின் அண்ணன் ஜெராமைக் ஜாக்ஸன் 'அப்துல் அஜீஸ்' ஆக முஸ்லிமாக மாறி அழைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது வாழ்க்கை இன்றும் சந்தோஷமாகவே சென்று கொண்டுள்ளது. இதை கடைசி காலத்தில் உணர்ந்து மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாத்தை தழுவினார். ஆனால் அதற்குள் அவரது உடல் இறப்பை எட்டியது. தவறு மைக்கேல் ஜாக்ஸனிடம் தான்.

முகமது நபி ஒரு அரேபியர். அதிலும் இங்கு பார்பனர்களைப் போல அங்கு குரைஷிகள் உயர்ந்த குலம். அந்த குலத்தில் வந்த முகமது நபி 'குலப் பெருமையை எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன். அரபியன் அரபி அல்லாதவனை விட சிறந்தவன் இல்லை. ஒரு கருப்பு அடிமை உங்களுக்கு தலைவராக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி செல்வதுதான் உண்மை முஸ்லிமுக்கு அழகு' என்று சொன்ன அந்த வார்த்தை இன்றும் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறதே! கருப்புத் தோலுக்கும் வெள்ளைத் தோளுக்கும் இஸ்லாத்தில் இடமில்லை. தூய இறை பக்தி ஒன்றுதான் இறைவனிடம் உங்களை நெருக்கமாக்கும் என்று சொல்லி அதனை நடைமுறைபடுத்திக் காட்டியும் வருகிறது இஸ்லாம்.

//எம்மதமும் நல்வழியைத்தானே போதிக்கிது அப்புறம் சைவத்தில் இல்லாது இஷ்லாத்தில் என்ன இருக்கிது?? ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யலாம் .//

இஸ்லாத்துக்கும் சைவத்துக்கும் என்ன வித்தியாசம் என்பதை மேலே பட்டியலிட்டுள்ளேன். அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்கள் கடவுள் முருகனுக்கு இரண்டு மனைவிகள். கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள். ராமனின் தந்தை தசரதனுக்கு 60000 மனைவிகள் இருந்ததாக ராமாயணம் சொல்கிறது. நமது முன்னால் முதலமைச்சர் எம் ஜி ஆர் பலதார மணம் செய்தவர். அதே போல் தற்போது வாழ்ந்து வரும் கலைஞர் பல திருமணம் செய்து அனைத்து மனைவிகளோடும் சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறார். எனவே பலதார மணம் செய்ய இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கு இந்து மதத்திலேயே இருந்திருக்கலாம். தான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன் என்பதை யுவனே தனது பேட்டியில் கூறியுள்ளார். நானும் அதனை பதிவாக்கியுள்ளேன். படித்து தெளிவு பெறுங்கள்.

http://suvanappiriyan.blogspot.com/2014/02/blog-post_10.html

//இஸ்லாத்தில் சொல்லப்படும் அணைத்தும் அரேபியர்களை குறித்ததுதான், இதில் இந்தியாவையோ குறிப்பாக தமிழகத்தையோ, இந்திய முஸ்லிம்களை பற்றியோ அல்லது தமிழக முஸ்லிம்களை பற்றியோ எங்கும் ஒரு சிறு குறிப்பும் கிடையாது.//


'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையைப் பிரித்துக் காட்டும்'

-குர்ஆன் 2:185

இங்கு மனிதர்கள் என்று உலக மக்களைப் பார்த்து குர்ஆன் பேசுகிறது. இது போன்று அனேக இடங்களில் 'மனிதர்களே!' என்று இந்த மனித குலத்தில் உள்ள தமிழர்களாகிய நம்மையும் பார்த்துதான் பேசுகிறது. எனவே தான் தமிழனாகிய யுவனின் மனதை இந்த குர்ஆன் மாற்றியது. கடவுள் மறுப்பை வாழ்நாள் முழுக்க சொன்ன தந்தை பெரியாரும் 'இன இழிவு நீங்க இஸ்லாமே சிறந்த வழி' என்றார். நாத்திகனின் மனதையும் புரட்டிப் போடும் சக்தி இந்த குர்ஆனுக்கு உண்டு.

பார்பனியத்தை நமது நாட்டிலிருந்து விரட்ட பெரியார் எவ்வளவு முயன்றும் தோல்வியையே கண்டார். அவரது தம்பிகளும் கடைசியில் பார்பனியத்தின் கால்களிலேயே வீழ்ந்து விட்டனர். சுய மரியாதையை கொடுத்து உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச் செய்யும் ஆற்றல் இஸ்லாத்துக்கு உண்டு. அதனை சரியாக தேர்வு செய்த முஹம்மது ஹாலிக் யுவனை வாழ்த்தா விட்டாலும் தூற்றாமலாவது இருப்போம்.

7 comments:

SNR.தேவதாஸ் said...

தங்களது மதத்தைப் பற்றி எழுதிய உடன் என்னமோ பெரிய உத்தமராக அறிவுரை கூறி ஒரு பதிவு தருகிறீர்களே
இதே போல தாங்களும் தங்களது மற்ற சகாக்களும் எத்துனை முறை இந்துக்களை,இந்து மதத்தை எவ்வளவு காழ்ப்புணா்ச்சி உடன் எழுதி எங்களை வேதனைப்பட வைத்திருக்கிறீர்கள் என்பது தெரியுமா?

அடுத்து யுவன் இஸ்லாமிய மதத்தை தழுவியது தவறில்லை.

ஆனால் அவர் எந்தக் காரணத்துக்காக
மதம் மாறினார் என்பது தங்களுக்குத் தெரியுமா?
அது பற்றிய விபரங்களை 13-02-2014 அன்று சவுக்கு இணையதளத்தில் வெளிவந்த ஒரு பதிவை ஒரு முறை பார்த்து,படித்த பிறகு தங்களது நிலையை மறுபடியும் சுய பரிசோதனை செய்யுங்கள்.

யுவன் இஸ்லாதிய மதத்தை மதத்தின் புனிதத்துக்காகவோ,அதன் உயரிய கோட்பாடுகளுக்காகவோ மாறவில்லையாம்.
மூன்றாவது திருமணம் செய்ய வேண்டி ஒரு பெண்ணுக்காக மாறி உள்ளார் எனக் குறிப்பிப்பட்டுள்ளது.

தற்சமயம் அந்த பெண்ணும்
திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் திரிசங்கு நிலையில் இருக்கிறாராம்.
வாழ்க வளமுடன் பாரத பிரதமர் திரு.மோடி.
கொச்சிக் தேவதாஸ்

suvanappiriyan said...

//யுவன் இஸ்லாதிய மதத்தை மதத்தின் புனிதத்துக்காகவோ,அதன் உயரிய கோட்பாடுகளுக்காகவோ மாறவில்லையாம்.
மூன்றாவது திருமணம் செய்ய வேண்டி ஒரு பெண்ணுக்காக மாறி உள்ளார் எனக் குறிப்பிப்பட்டுள்ளது.//

யுவன் சங்கர்: திடீரென்று எடுத்த முடிவாக இதனை நான் சொல்ல மாட்டேன். கடந்த ஒரு வருடமாக இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களை அதிகம் படித்து இஸ்லாம் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டேன். இதன் பின் பல சிறந்த கனவுகள் எனக்கு வர ஆரம்பித்தது. இதற்கு முன் எனக்கு அவ்வாறு நிகழ்ந்ததில்லை. பலமுறை இது எனக்குள் நிகழ ஆரம்பித்தது. எனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை என்னால் விவரித்து சொல்ல இயலாது. ஏதோ ஒரு இறை சக்தி என்னை ஆட்கொள்கிறது என்பதை மட்டும் விளங்கிக் கொண்டேன். ஆனால் அது என்னவென்று சரியாக விளங்காமல் இருந்தது. அதன் பிறகு புனித குர்ஆனை படிக்க ஆரம்பித்தேன். எனக்குள் இருந்த சந்தேகங்கள், கனவுகளுக்கான விடைகளை குர்ஆனில் நான் கண்டு கொண்டேன். வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்க முழு காரணமாக இருந்தது. இறைவன் என்னை தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்றே நினைக்கிறேன்.

அனுபமா சுப்ரமணியம்: நீங்கள் மூன்றாம் முறையாக ஒரு திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், அதுவும் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்திருப்பதாகவும் ஒரு செய்தி உலவுகிறதே?

யுவன் சங்கர்: இந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றி நான் தெளிவுபடுத்தி விடுகின்றேன். எனது நண்பர் கிருஷ்ணாவின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது மீடியாக்களால் இந்த செய்தி பரப்பப்பட்டது. எனது இஸ்லாமிய நண்பரும் அவரது மனைவியும் நானும் அந்த போட்டோவில் ஒன்றாக இருப்பதை பார்த்து இந்த வதந்தி பரப்பப்பட்டது. உடனே சிலர் அந்த போட்டோவை பத்திரிக்கையில் போட்டு நான் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதாக பொய்களை பரப்பி வந்தனர். இதனை பலமுறை மறுத்தும் உள்ளேன். தற்போதும் அதே மறுப்பை பதிய செய்கிறேன்.

Anonymous said...

/// அவர் எந்தக் காரணத்துக்காக
மதம் மாறினார் என்பது தங்களுக்குத் தெரியுமா? --- devadass snr ///

சரி போனது போகட்டும். அடுத்து இளையராஜா குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பாக, அவருக்கு தேவர், கவுண்டர், கள்ளரென்றூ ஏதாவது ஒரு பவர்புல் ஜாதிய கொடு ராசா.

இல்லாட்டி தமிழ்நாடு முகமது பட்டினமாக மாறிவிடும். உங்கள் இசை ஞானி இளையராஜா, அண்ணாசலை பள்ளியில் நோன்பு கஞ்சி குடித்துக் கொண்டிருப்பார்.

Anonymous said...

/// யுவன் இஸ்லாதிய மதத்தை மதத்தின் புனிதத்துக்காகவோ,அதன் உயரிய கோட்பாடுகளுக்காகவோ மாறவில்லையாம். ///

எதை வேண்டுமானாலும் ஹிந்து மதத்தில் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், தேவரின் தாசியாகவும் கோயில்களில் வாழலாம்.

ஆனால், ஜாதி மட்டும் மாறமுடியாது, நீங்கள் பறையனாக இருந்து வன்னியராக மாற நினைத்தாலோ அல்லது ஒரு வன்னியப் பெண்ணை திருமணம் செய்ய முற்சித்தாலோ, இந்நேரம் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக கிடப்பீர்.

நல்ல வேளை, சகோதரர் யுவனை அல்லாஹ் காப்பாற்றினான்.

Anonymous said...

/// மூன்றாவது திருமணம் செய்ய வேண்டி ஒரு பெண்ணுக்காக மாறி உள்ளார் எனக் குறிப்பிப்பட்டுள்ளது.///

பெண்ணுக்காக இஸ்லாத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. ஹிந்து திருமண சட்டப்படி ஒருவனுக்கு ஒருத்தியென்றாலும், எவ்வளவு வப்பாட்டி, ஆசைநாயகிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். வப்பாட்டிக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும், ஹிந்து திருமண சட்டப்படி சொத்தில் சல்லிக்காசு பங்கு கிடையாது.

இஸ்லாத்தில் வப்பாட்டிகள் ஹராம். ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ளலாம்.

அனைத்து மணைவிகளுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு. திருமணத்துக்கு முன்னரே மஹர் எனும் வரதட்சனை மூலம் தேவையான வீடு வாசல்களை நீ மணக்கப் போகும் ஆணிடமிருந்து பெற்றுக்கொள் என ஷரியா சட்டம் அறிவுறுத்துகிறது.

தலாக் ஆகிவிட்டால், மஹரை சட்டப்படி திருப்பித்தர வேண்டியதில்லை. மஹரை திருப்பி வாங்குவது ஹராம்.

இந்த ரகசியம் தெரிந்தால், ஹிந்து சகோதரிகள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு வந்து விடுவர்.

பாலா said...

//ஒரு வன்னியப் பெண்ணை திருமணம் செய்ய முற்சித்தாலோ, இந்நேரம் தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக கிடப்பீர்.

இசுலாமிய பெண்ணை மணக்க முயன்றால் எத்தனை துண்டுகளாக கிடப்போம் என்று சொல்லி இருக்கலாம்.

Anonymous said...

ஒரு தலித் ஆணும் வன்னியப் பெண்ணும் அப்துல்லாஹ் ஆமினாவாக மாறி நிக்காஹ் செய்தால், உங்களுக்கெல்லாம் சுவையான பிரியாணி கிடைக்கும். உடைந்த இரு சமுதாயங்கள் ஒன்று சேரும்.

இன்று முஸ்லிமாக இருப்பவரெல்லாம் ஒரு காலத்தில் தேவர், வன்னியர், கள்ளர், முதலியார், தலித், பார்ப்பனராக இருந்தவர்தான். இஸ்லாத்தை தழுவிய பின், ஜாதி காணாமல் போய்விட்டது.

அடிமை ஹிந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாத்தை தழுவ என்ன தயக்கம்?