Followers

Thursday, April 06, 2023

லலித் மோடியை பாஜக எப்படி எல்லாம் காப்பாற்றியது?

 

 லலித் மோடியை பாஜக எப்படி எல்லாம் காப்பாற்றியது?

 

நமது வரிப்பணம் எப்படி எல்லாம் கொள்ளை போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

1985ல் போதைமருந்து கடத்தியதற்காக தண்டிக்கப்பட்ட லலித் மோடி, பிஜேபியின் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே உதவியால், மாபெரும் பெட்டிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, சீனிவாசன்-சசி தரூர் - சுனந்தா கும்பலால் வீழ்த்தப்பட்டு 2010ல் நாட்டை விட்டு ஓடி போனார்.

 

மனைவி மினல் குடும்பம் வசித்த லண்டனில் இருந்து கிரிக்கெட் கிளப் தலைவர் ஆதித்ய வர்மா மூலம் சீனிவாசனுக்கு எதிரான காய்களை நகரத்தினார் லலித் மோடி. ஏற்கனவே இருந்த நிதி மோசடியுடன் இந்திய அமலாக்கத் துறை பங்கிற்கு 1டஜன் வழக்குகளை புனைந்தது

 

1) ₹ 890 மில்லியன் அளவுக்கு மீறுதல்

2) UK- தளமாகக் கொண்ட ஊடகத்திலிருந்து (IPL) ₹ 200 மில்லியன் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டது.

 3) ஐபிஎல் 2009 க்காக கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவுக்கு ₹ 2.43 பில்லியன் செலுத்தப்பட்டது .

4) Multi Screen Media மூலம் ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான வசதிக் கட்டணமாக World Sports Group $80 மில்லியன் பெற்றது

5) MSM-WSG ஒப்பந்தத்தில் இருந்து 25 மில்லியன் டாலர் லலித் மோடி, அவரது கூட்டாளிகள் அரசியல் பயனாளிகளின் சட்டவிரோத கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது.

6)2008 இல் ipl ஏல முறைகேடு

 7)கேமான் ஐலன்ட் கம்பெனி மூலம் ஹவாலா பணம் கொண்டு விமானம் வாங்க முயன்றது

8) மனைவி பெயரில் இந்தியன் ஹெரிதேஜ் ஹோட்டலில் முதலீடு

9) சட்டத்திற்கு புறம்பாக ipl உரிமைகள் பெற்றது தாவூத் இப்ராஹிம் மிரட்டுவதால் இந்தியா வர மறுத்தார்

அருண் ஜெட்லி தலைமையிலான BCCI தன் பங்குக்கு 16 குற்றச்சாட்டுகள் கூறி 2013இல் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது RCA மோடிக்கு ஆதரவாக இருக்க, BCCI அதனை தடை செய்தது அதனால் ராஜஸ்தான் கிரிக்கெட் கிளப்பில் இருந்து நீக்கப்பட்டார்

 

லலித் மோடி இங்கிலாந்தில் தங்கி இருக்க உதவியாக முன்னாள் தோழி வசுந்தரராஜே தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து போட்டு கொடுத்திருந்தார் காங்கிரசின் நடவடிக்கையை அரசியல் ழிவாங்கல் என விமர்சித்தும் இருந்தார்

 

தேடப்படும் குற்றவாளியாக இன்டர்போல் லிஸ்டில் இருந்த லலித் மோடி 2015 இல் முந்தைய இன்டர்போல் தலைவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு என் சகோதரன் என பதிவிட்டார் Ronald Noble அதனை மறுத்தாலும் இருவருக்குமான தொடர்புகளை ஊடகங்கள் வெளியிட்டன

 

ஒரு கஞ்சா வியாபாரி பிஜேபி தலைவர் ஆதரவில், இந்திய அரசியல் விளையாட்டு துறையை சீரழித்து ஆயிரக்கணக்கான கோடி மோசடி செய்து இங்கிலாந்து உன்கிட்ட பல நாடுகளிலும் குழப்பத்தை உண்டாக்கியது தான் மோடி கேட் ஊழல் எனப்படுகிறது. நாட்டை விட்டு தப்பி செல்ல உதவி, பாதுகாத்து வருபவர் யார் முன் கதை சுருக்கத்தை தவறவிட்டவர்கள் இதனை படித்து புரிந்து கொள்ளுங்கள்..

 

ராமனின் பெயரைக் கூறி நாட்டில் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் வாக்கு வங்கியை தக்க வைக்க போராடும் பாஜகவின் உண்மை முகம் இதுதான்.









No comments: