Followers

Thursday, April 27, 2023

கழிவுநீர் மேலாண்மை வசதியோட வாழ்ந்தவனுக்கு

 

//ஆக பாலைவனத்துல கழுவ தண்ணி கிடைக்காம அறுத்துகிட்டு சுத்துன காலகட்டத்துலேயே இங்குன இருக்குறவன் கழிவுநீர் மேலாண்மை வசதியோட வாழ்ந்தவனுக்கு சுகாதாரம் பற்றி பாடம் எடுக்குற// -Raman

 

ஹா...ஹா... பண்டைய தமிழரின் வரலாறு சரியாக உனக்கு தெரியவில்லை ராமன்...

 

முலை வரி கட்டச் சொல்லி அழகு பார்த்தது பண்டைய தமிழகம்...

 

கோவில்களில் பார்பனரல்லாத பெண்களை தேவரடியாராக மாற்றி அவர்களின் கற்பை சூறையாடியது பண்டைய தமிழகம்.

 

மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வளமான நிலங்களை எங்கிருந்தோ வந்த பார்பனர்களுக்கு தாரை வார்த்து கொடுத்தது தமிழகம்.

 

அடிமை முறையை ஊக்குவித்து பார்பனர்களுக்கு தமிழர்களை விற்றது பண்டைய தமிழகம்.

 

அனல்வாது புனல்வாது என்று கூறி எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றியது பண்டைய தமிழகம்

 

பார்பனரல்லாத பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்றும் ஆண்கள் செருப்பு அணியக் கூடாது என்றும் சட்டமியற்றியது பண்டைய தமிழகம்.

 

பொது குளத்தில் தலித்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று சட்டமியற்றி மீறியோரை தண்டித்தது பண்டைய தமிழகம்...

 

பார்பனரல்லாதவன் கல்வி கற்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லி எழுதி வைத்தது பண்டைய தமிழகம்.

 

தவம் புரிந்த சம்புகனை கோழைத்தனமாக தலையை சீவி சாதி பெருமையை பறை சாற்றியது பண்டைய தமிழகம்.  இப்படி வரிசையாக பண்டைய தமிழனின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

இவை எல்லாம் பார்பனர் ஊடுருவலுக்கு பின்பு   நடந்தவை. பார்பனர் வருகைக்கு முன்பு தமிழகம் மிக செழிப்பாகவும் அறிவியலில் முதிர்ச்சி பெற்றும் இருந்தது. கீழடி ஆய்வுகள் அதனை மெய்ப்பிக்கின்றன. ஆனால் இந்துத்வா முகமூடி அணிந்து பார்க்கும் உனக்கு இதெல்லாம் அவ்வளவு எளிதில் ஏறாது ராமா!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments: