Followers

Tuesday, April 04, 2023

நாகரிகமாக வாழ்ந்த தமிழன் படிப்பறிவில்லாமல் சரிந்தது எப்போது?


 

நாகரிகமாக வாழ்ந்த தமிழன் படிப்பறிவில்லாமல் சரிந்தது எப்போது?

 

நாகரிகமாக வாழ்ந்த தமிழன் படிப்பறிவில்லாமல் சரிந்தது எப்போது?

 

2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுதப், படிக்க தெரிந்து கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்... அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற ஒரு இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்..! அப்படிக் கல்வியறிவுடன் முன்னேறியிருந்தநம் தமிழ் இனம் 19 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்... எப்படி...?!

 

மூட நம்பிக்கை இறை நம்பிக்கை மத நம்பிக்கை இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடிக் குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கும்  மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது. அன்றைய மன்னர்களிடமிருந்த நாடு பிடிக்கும் பேராசையைப் பயன்படுத்திக் கொண்டு

 

1. இந்தத் திசையில் சென்றால் வெல்லலாம்.

 

2. இந்தக் குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியைத் தோற்கடிக்கலாம்.

 

3. இத்தனைப் பெண்களை. மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்.

 

4. இந்த இறைவனுக்குக் கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்.

 

5. ராஜாவின் மனைவி அந்தப் புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்.

 

6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோசம் தீரும்.

 

என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்களை கல்விக்கூடங்களை, மருத்துவக் கூடங்களை அமைக்கவிடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் யாவரும்  கல்விச்சாலைகள் , மருத்துவ வசதிகள், ஆய்வுக் கூடங்கள் திறக்காமல் ...., இரண்டு கிலோ மீட்டர் இடை வெளியில் கோவில்களை மட்டுமே கட்டி, அந்தக் கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாசை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு கும்பலிடம் ஒப்படைத்து விட்டனர்.

 

எவன் ஒருவன், 

 

‘’...!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்குத் தலைமை தாங்கலாம்’’ என்று மதத்தைத் தூக்கிக் கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தப் போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள். இப்படி ஒரு பொய்சொல்லும் கூட்டத்தை உலகத்தில் எங்கும் காண முடியாது.  2000 yrs வருடமாக பொய் பித்தலாட்டம்   என்றே காலத்தை ஓட்டுகிறார்கள்.

 

70 களில் பார்ப்பனர்கள் வீட்டில் வேலை செய்ய நிறைய பேர் சென்று விடுவர்.. காலை மாலை வீட்டுவேலை செய்ய பெண்கள். மாடு பராமரிக்க தோட்டம் பார்க்க ஆண்கள். எல்லோரும் பத்து முதல் இருபது வயது. இதுல பள்ளிக்கூடம் நினைப்பே வராது. பெற்றோர்கள் அக்ரஹாரத்துக்கே முக்கியத்துவம் தருவார்கள்.

 

-சிந்தனை பக்கத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.


No comments: