Followers

Thursday, October 01, 2020

இதுதான் மரணித்த, மன்னரின் மண் அறை...

 குவைத் நாட்டின் மன்னரின் நல் அடக்கம் முடிந்தது....


இதுதான் மரணித்த, மன்னரின் மண் அறை...

பூக்களை கொட்டவில்லை...

கட்டடம் கட்டவில்லை...

மண் அறையில் யாரும் தங்களின் தலையை தாழத்தி கீழே விழவில்லை....

மன்னன் ஆனாலும் சாதாரண மனிதன் ஆனாலும் மய்யவாடியும் ஒன்றுதான்...

மண் (குழி)அறையும் ஒன்றுதான்.

நம் நாட்டில் ஐந்து வருடம் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாம் பண்ணும் அளப்பறையை இங்கு ஒப்பிட்டுப் பார்போம்.....







1 comment:

Dr.Anburaj said...

பாராட்டுக்குரியதுதான். வியந்தேன்.பாராட்டுகிறேன். மெ்ச்சுகிறேன்.

நாட்டுக்கு நாடு கலாச்சாரம் மாறுபட்டே ஆக வேண்டும். அரபு நாடுகளில் விவசாய நிலங்கள் குறைவு. ஜனத்தொகையும் குறைவு. பணம் அதிகம் உள்ளது.

இந்தியாவைப் போல் மலா்கள் உற்பத்தி செய்யப்படவில்லை.

சில சம்பிராதயங்கள் குறிப்பாக மலா்களை பயன்படுத்துவது கட்டாயச் சட்டம் இல்லை. விவசாயம் செய்யும் நாடு 120 கோடி மக்கள் வாழும் நாடு. விவசாய பொருட்கள் செலவாவது விவசாயிகளின் பொருளாதாரம் மே்பாடு அடைய தேவை. மலா்கள் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் போது அதற்கு சந்தையும் தேவைப்படுகிறது.மலா்களை மாலையாக கட்டுவது கூலி வேலை செய்யும் மக்கள் பலரின் தொழில்.
இ்நது கலாச்சாரம் இந்தியாவின் பொருளாதாரத்தோடு தொடா்படையது. ரம்சான் வந்தால் இறைச்சிக்கு ஆடுகள் விற்பனை ஆவதால் ஆடு வளா்ப்பவர்கள் இறைச்சி கடை நடத்துபவர்களுக்கு வருமானம் என்று கருத்து சு..ன் பதிவு செய்யப்படுகிிறது.
அதுபோல் ஒரு பெரிய மனிதன் இறந்தால் மலா்கள் உற்பத்தி செய்யும் விவசாயி முதல் மலா்களை மாலையாக தொடுப்பவர்கள் உட்பட பலபேருக்கு வயிற்றுக்கு பிழைப்பு கிடைக்கிறது.
சும்மா ஹரால் ஹலால் என்று அரேபிய மக்களின் பழக்க வழக்கங்களை சிலாகித்து இருப்பது முட்டாள்தனமானது.

விரயம் என்பது உண்மைான். ஆனாலும் தன்னை நிதானித்து கொள்ள வேண்டியது தனி மனிதனின் பொறுப்பு.இந்து பண்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் பொருளாதார நடவடிக்கையிருக்கும்.

தசரா விழா குறித்து எனக்கும் பல அதிருப்தி உண்டு. ஆனால் காட்டு நாயக்கர்கள் மிராட்டியர்கள் மக்கள் செய்யும் பாசி மாலை போன்றவற்றை விற்கும் பெரிய சந்தை தசரா பண்டிகை.
இன்று பலபேரும் போட்டிக்கு வந்து விட்டார்கள். இரு்ப்பினும் காட்டு நாயக்கர்கள் பாசி மாலைகள் விற்பதன் மூலம் தங்கள் வயிற்றுக்கு வழி தேடிக் கொள்கின்றார்கள். கலை படைப்புகள் .... என்று எல்லாமே பொருளாதார காரியங்கள்தான். நிரந்தர பலன் அற்றவைதான். வாழ்வின் சகித்துக் கொள்ள வேண்டிய சில அம்சங்கள். ஆனால் ஏதுவும் இந்த சமூகத்தில் கட்டாயம் அல்ல. தசரா வை அவனவன் விரும்பும் வண்ணம் கொண்டாடலாம்.

சீர்திருத்தம் என்பதற்கு அரேபியர்கள் முன்உதாரணம் அல்ல.
ஒவ்வொரு சமூகமும் தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ள வேண்டும்.