ஜெர்மன் வேதியல் தொழிற்சாலையில் விபத்து!
மக்கள் பாதிப்படைந்து விடக் கூடாது என்பதற்காக 1400 பேரை உடனடியாக அவர்களின் வீடுகளில் இருந்து வெளியாக்கியுள்ளது நிர்வாகம். நேற்று அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சோடியம் ஹைட்ராக்சைடால் கெமிகல் ரியாக்ஷன் ஏற்பட்டு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. வட ஜெர்மனியின் சிறிய நகரமான பேட் பாலிங் போஸ்டலில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிகழ்வின் எதிரொலியால் பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் கவனமாக நடந்து கொண்டுள்ளனர் நிர்வாகிகள்.
700 தீயணைப்பு வீரர்கள் கொதிகலனை குளிர்விக்க தொடர்ந்து தற்போதும் போராடி வருகின்றனர். வெப்ப நிலை அதிகரித்து கொதிகலன் வெடிக்கும அபாயம் உள்ளதால் நிலைமை சற்று அபாயத்தில்தான் உள்ளது.
இதனால் குறிப்பிடும்படியான பாதிப்பு இல்லை என்றாலும் இந்த செய்தியை படித்தவுடன் எனது சிந்தையில் கூடங்குளமே முதலில் பளிச்சிட்டது. மிக பாதுகாப்பான குறைந்த மக்கள் தொகை உடைய ஜெர்மனிக்கே அவ்வப் போது இது போன்ற சிக்கல்கள்.
ஆனால் நம் கூடங்குளத்தில் சிலரது புண்ணியத்தால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் அணுஉலை கணிசமாக சம்பாதித்துள்ளது. அண்டை நாடுகளின் உறவும் குறிப்பிடும்படியாக இல்லை. எனவே நமது அரசு இந்த அணு உலையை செயல்படுத்தினால் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்து விட்டே உற்பத்தியை துவங்க வேண்டும்..
-----------------------------------------------
“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன! இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”
டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.
ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன. அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.
1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.
அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் மட்டுமே சற்று பாதுகாப்பற்றவையாக கருதப்படுகின்றன.
இவை எல்லாம் கொஞ்சம் ஆறுதல் அளித்தாலும் இவ்வளவு பயத்தோடு இந்த விளையாட்டு தேவைதானா? என்று உள் மனது கூறுகிறது. திட்டம் ஆரம்பிக்கும் போது மக்களுக்கு அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. தற்போது மில்லியன் கணக்கில் பணத்தை உட்கொண்டு விட்டதற்கு பிறகு இது வேண்டாம் என்று சொல்வதும் ஒரு முரண்நகையாகவே படுகிறது.
ஆம்...எதில்தான் ஆபத்தில்லை. எதையும் துணிவோடு எதிர் கொள்வோம். வேறு வழியில்லை......
----------------------------------------------
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label அணு உலை. Show all posts
Showing posts with label அணு உலை. Show all posts
Wednesday, October 17, 2012
Subscribe to:
Posts (Atom)


