Followers

Tuesday, August 14, 2012

பொய் கூறிய முன் நெற்றி - ஓர் விளக்கம்!

'இறைவன் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக் கொள்ள வில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி.'

-குர்ஆன் 96 : 14,15,16


இந்த வசனத்தில் முஸ்லிம்களை எந்த நேரமும் எதிர்த்துக் கொண்டும், அவர்கள் இறைவனை வணங்காமல் தடுத்துக் கொண்டும், பொய் பேசி திரிந்து கொண்டும் இருக்கும் நபர்களைப் பற்றி கூறப்படுகிறது.



குர்ஆன் இங்கு பொய் சொல்பவர்கள், தவறான நடத்தையில் ஈடுபடுபவர்கள் போன்றோரின் முன் நெற்றியைப் பிடிப்போம் என்று கூறுகிறது. பொய் சொல்வதற்கும்,தவறான நடத்தை நடப்பவருக்கும் அந்த நபரின் முன் நெற்றிக்கும் என்ன சம்பந்தம் ?


ஒரு மனிதனின் மூளையின் அமைப்பையும் அதன் முன் பக்கத்தையும் ஆராய்ந்து பாருங்கள். அங்கு நமது தலையின் முன் பகுதியில் பெரு மூளை அமைந்துள்ளதைக் காணலாம். இதைப் பற்றி உயிரியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? Essential of Anatomy & Physiology என்ற புத்தகம் மூளையின் செயல்பாடுகளை விரிவாக விவரிக்கிறது. மனிதன் அதிகம் உணர்ச்சி வசப்படுதல், பொய்,கோபம், முதலான உணர்வு சம்பந்தப் பட்டவைகள் அதிகம் நிகழ்வது மூளையின் முன் பக்கத்தில். இந்த முன் பக்கம் என்பது காதுகளின் ஓரத்துக்கும், தலையின் முன் பக்கத்திற்கும் அதாவது நெற்றியில் அமைந்துள்ள நரம்புகளால் இந்த செயல்கள் செயல் படுத்தப் படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நெற்றிப் பகுதியின் நரம்புகள் மனிதனின் அநேக செயல்களுக்கு காரணமாக அமைகிறது. இந்த இடமே ஒரு மனிதன் பொய் பேசுவதற்கும் உண்மை பேசுவதற்கும் தூண'டுகோலாய் இருக்கிறது.

இந்த உண்மை கண்டறியப்பட்டது சுமார் எழுபது வருடங்களுக்கு முன்புதான். இந்த உண்மையைத் தான் குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பே உண்மைப் படுத்துகிறது. எனவே தான் 'பொய் பேசிய அந்த முன் நெற்றியை நாம் பிடிப்போம்' என்று இறைவன் கூறுகிறான். இந்த குர்ஆன் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டு.

மற்றொரு அறிவியலாரின் அழகிய விளக்கம் The Deen Show The Quran on the Cerebrum | The Deen Show with Eddie

If we look into the skull at the front of the head, we will find the prefrontal area of the cerebrum (see figure 12). What does physiology tell us about the function of this area? A book entitled Essentials of Anatomy & Physiology says about this area, “The motivation and the foresight to plan and initiate movements occur in the anterior portion of the frontal lobes, the prefrontal area. This is a region of association cortex...”1 Also the book says, “In relation to its involvement in motivation, the prefrontal area is also thought to be the functional center for aggression....”2

So, this area of the cerebrum is responsible for planning, motivating, and initiating good and sinful behavior and is responsible for the telling of lies and the speaking of truth. Thus, it is proper to describe the front of the head as lying and sinful when someone lies or commits a sin, as the Quran has said, “...A lying, sinful naseyah (front of the head)!”

Scientists have only discovered these functions of the prefrontal area in the last sixty years, according to Professor Keith L. Moore.3

Footnotes:
(1) Essentials of Anatomy & Physiology, Seeley and others, p. 211. Also see The Human Nervous System, Noback and others, pp. 410-411.
(2) Essentials of Anatomy & Physiology, Seeley and others, p. 211.
(3) Al-E’jaz al-Elmy fee al-Naseyah (The Scientific Miracles in the Front of the Head), Moore and others, p. 41.

Evidence from
1)This is the Truth (video tape)
2)Essential of Anatomy & Physiology, seeley and others, page 211. Also see The Human Nervous System, Noback and others, page 410,411 This is the Truth
Figure 12 : Functional regions of the left hemisphere of the cerebral cortex. The prefrontal area is located at the front of the cerebral cortex. (Essentials of Anatomy & Physiology, Seelay and others, page 210.

---------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 21

அதீத காதல் என்பது ஒரு மன நோயே!





21 comments:

Vijaiy from colombo said...

oh??????????????? wow suban allaa

Vijaiy from colombo said...

HEEEEEEEEEE HEEEEEEEEE SUPER COMEDY

Anonymous said...

குதிரையைக் கூட விடாத 'கொடுங்கோலர்'!

Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 14, 2012, 15:31 [IST]
Posted by: Sudha

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு நபர், பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.

தான் செய்தது தப்புதான் என்று இப்போது கன்னத்தில் அடித்துக் கொள்ளாத குறையாக கூறியுள்ளார் அந்த நபர்.

விலங்குகளிடம் மனிதர்கள் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது இயற்கைக்குப் புறம்பான ஒன்று.

சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் ஒரு வட இந்திய வாலிபர் பசு மாட்டிடம் உறவு வைத்துக் கொண்ட செயல் அனைவரையும் பதறச் செய்தது.

அதேபோல அமெரிக்காவில் ஒரு பெண் குதிரையிடம் ஓரல் செக்ஸ் வைத்து சிக்கியுள்ளார் ஆண் ஒருவர்.

இந்த விபரீத மனிதருக்கு பென்சில்வேனியா கோர்ட் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்துள்ளது.

அத்துமீறி குதிரை லாயத்திற்குள் நுழைந்தது, குதிரையிடம் செக்ஸ் வைத்துக் கொண்டது என இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டன.

அந்த நபரின் பெயர் ஜெரீமி ஜான்சன். 20 வயதாகிறது.

பெர்ரி கன்ட்ரி என்ற இடத்தில் உள்ள குதிரைப் பண்ணைக்குள் கடந்த மே 2ம் தேதி அதிகாலையில் அத்துமீறி நுழைந்தார் ஜான்சன்.

அவர் உள்ளே புகுந்ததைப் பார்த்த பண்ணை உரிமையாளர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர்.

அப்போது பெண் குதிரை ஒன்றிடம் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் ஜான்சன்.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இதற்கு முன்பும் கூட ஜான்சன் இதேபோல ஒரு குதிரையிடம் சேட்டை செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

http://tamil.oneindia.in/news/2012/08/14/world-man-performs-oral-on-horse-159638.html

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//நம்ம சுவனப்பிரியனை எடுத்துக் கொள்ளுங்கள் 'அல்ஜிமர்ஸ் நோயை விரட்டுகிறது தொழுகை' என்று ஒரு கட்டுரையை எழுதி இஸ்லாமின் அற்புதம் பாரீர் என்று புழகாங்கிதத்துடன் கடைவிரித்துள்ளார்( Suvanapriyan version of அற்புத சுகம்) , அவரே சில நாள்களுக்கு முன்பு 'சூரிய நமஸ்காரமும் அதனால் எழுந்த சர்ச்சையும்' இந்திய யோகா குறித்த தனது ஒவ்வாமையை பதிவு வாந்தியாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது,//

இரண்டு பதிவுகளுமே எனது சொந்த கருத்து அல்ல. மேற்குலக ஆராய்ச்சியாளர்கள் பலரிடம் எடுத்த ஆராய்ச்சியின் முடிவைத்தான் நான் பதிவாக்கியிருந்தேன். அது வாந்தியாக உங்களுக்கு தெரிந்தால் முதலில் அந்த மேல் நாட்டு அறிஞர்களிடமே உங்களின் கேள்வியை வைத்திருக்க வேண்டும். என்ன எழுதினாலும் கண்களையும் காதையும் மூடிக் கொள்பவர்களிடம் ஒன்றும் செய்ய இயலாது. :-)


சிராஜ் said...

சலாம் அண்ணன்,

நான் அறியாத புதிய தகவல்.... மார்க்கத்தை தெரிந்து கொள்வதில் நீங்கள் காட்டும் ஆர்வம்.. மாஷா அல்லாஹ்...

எங்களையும் இறைவன் அவ்வாறே ஆக்கி வைப்பானாக...

suvanappiriyan said...

சலாம் சகோ சிராஜ்!

//நான் அறியாத புதிய தகவல்.... மார்க்கத்தை தெரிந்து கொள்வதில் நீங்கள் காட்டும் ஆர்வம்.. மாஷா அல்லாஹ்...

எங்களையும் இறைவன் அவ்வாறே ஆக்கி வைப்பானாக...//

இறைவன் நம் அனைவரையும் சொர்க்கத்தில் நுழையும் நன் மக்களாக ஆக்கியருள் புரிவானாக!

VANJOOR said...

இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று. PART 1

”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்;

இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”

- இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.

இந்தியாவில் முசுலீம்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உரிமைகள், சலுகைகள் என்பவை ஏதோ பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டவை போல ஆர்.எஸ்.எஸ். சித்தரிக்கிறது.

முசுலீம் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்ற உண்மைக்குப் புறம்பான அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை முதலில் முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக முசுலீம் மக்கள் வாழந்து வருகின்றனர்.

காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில முசுலீம்களும் பல நூற்றாண்டுகளாய் இம்மண்ணில் வாழ்பவர்கள்தான்.

இன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், பணக்கார பா.ஜ.க. தலைவர்கள் பலரும்தான் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த அகதிகள்!

பிரிவினைக் காலத்தில் கலவரங்கள் ஏதும் தென்னிந்தியாவில் நடக்கவில்லை.

அதனால் இங்கிருக்கும் வசதி படைத்த முசுலீம்களும் இடம் பெயரவில்லை.

மேலும் அவர்கள் இதுதான் தமது மண் எனக் கருதியதாலும், பிற மக்களுடன் கொண்டிருந்த நேச உறவினாலும், பாகிஸ்தான் போவது பற்றிச் சிந்திக்கவில்லை.

1947-க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்ட்ட காசுமீர் மற்றும் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்தோரும் இடம் பெயரவில்லை.

எனவே கலவரம் தூண்டிவிடப்பட்ட வட மேற்கு, வட இந்திய, வங்காள மாநிலங்களில்தான் இடம் பெயர்தல் நடைபெற்றது.

இந்தியாவில் 12 கோடி முசுலீம் மக்கள் பல மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றனர்.

மதத்தைத் தாண்டிய மொழி, இன, பண்பாடு, பொருளாதாரக் காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர்.

முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ போக முடியாது.

அங்கே பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் குறிப்பாக லாகூரைச் சுற்றிய பகுதிகளில் சுமார் 13 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர்.

அதிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர்.

இப்படி ஏழ்மையில் உழலும் இத்தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அங்கே தாக்கப்படுவதற்கு ஆதாரமும் கிடையாது; அடிப்படையும் கிடையாது.

இந்தியாவைப் போல அங்கும் பெரும் கலவரங்கள் நடந்ததாகப் பார்ப்பனப் புளுகுணி தினமலரில் கூட செய்தி வந்ததில்லை.


கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது..

முழு கட்டுரை: http://www.vinavu.com/2012/08/14/conversion-20/

நன்றி : வினவு

VANJOOR said...

இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று. PART 2

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் எதிர்விளைவாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின.

இருந்தபோதும் அப்படிக் கலவரம் செய்தமைக்காக இரு நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய வெறியர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

ஆனால், இங்கே மசூதியை இடித்த கரசேவகர்கள் யாரும் சுடப்படவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.


பாகிஸ்தானில் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்காக பா.ஜ.க. கும்பல் முதலைக் கண்ணீர் விட வேண்டாம்.

ஏனெனில் இங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் – இந்திய இந்துக்களால் தாக்கப்படுவதைவிட பாகிஸ்தான் இந்துக்களின் நிலைமை பரவாயில்லை.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முசுலீம்கள் ‘முஜாகிர்கள்’, வந்தேறிகள் என்றழைக்கப்படுகின்றனர்.

அதன்படி அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகின்றன.

அவர்களும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஆயுத மோதலை நடத்தி வருகிறார்கள்.

பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை.

அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான்.

இந்து மதவெறியர்கள் – கிறித்துவ, உழைக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது எப்படி உண்மையோ அப்படி ஒரு இசுலாமியக் குடியரசு, அந்நாட்டு முசுலீம் உழைக்கும் மக்களுக்கும் விரோதியாகத்தான் இருக்கிறது.

பாகிஸ்தான் – வங்க தேசத்தில் சட்டப்படியும், இந்தியாவில் சட்டமின்றியும் பெரும்பான்மையினரின் மதவாதம் இருந்து வருகிறது. ஆயினும்

இந்தியாவில் ஆயிரமாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்ட போதும், மசூதி இடிக்கப்பட்ட போதும் வளைகுடாவில் பிழைக்கப் போன இந்துக்களைக் கேட்பார் இல்லாமல் தாக்கியிருக்கலாமே? ஏன் அப்படி நடக்கவில்லை?

‘பம்பாய்’க் கலவரத்துக்குக் காரணம் பால் தாக்கரேதான் என்று பத்திரிகைகளும், நீத மன்றமும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன.

ஆனால், பம்பாய்க் கலவரம் நடந்த புழுதி மறைவதற்குள் ‘பம்பாய்’ திரைப்படத்தின்மூலம் வரலாற்றை மாற்றி, முசுலீம்கள்தான் காரணம் என்று கதை சொல்லி, பால் தாக்கரேவிடம் ஆசியும், அனுமதியும் வாங்கினார் மணிரத்தினம்.

மாநில, தேசிய விருதுகள், த.மு.எ.ச. உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ அறிஞர்களின் பாராட்டு, தொலைக்காட்சிகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பு என ‘பம்பாய்’ படத்துக்குக் கிடைத்த சீராட்டும், பாராட்டும் பட்டியலிட்டு மாளாது.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் ஒரு மணிரத்தினத்துக்காக நாம் வெட்கப்படவே இயலும்.

கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது

முழு கட்டுரை : http://www.vinavu.com/2012/08/14/conversion-20/

நன்றி : வினவு

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மாஷாஅல்லாஹ். உங்கள் கல்வி ஞானத்தை அல்லாஹ் மென்மேலும் அதிகரிக்கச்செய்வானாக..! சுபஹானல்லாஹ். இறைவனின் வேதம் எனபதற்கு அதன் வரிகளே சாட்சியம் கூறும்..!

(ஏற்கனவே இது பற்றி முன்பு ஒரு பெரிய கட்டுரை எழதி இருந்தீர்கள் சகோ. அந்த லிங்கையும் இந்த பதிவில் சேர்த்து விடுங்களேன்..!)

suvanappiriyan said...

சார்வாகன்

//கோவேறு கழுதையை படைத்தேன் என்று அல்லாஹ் குரானில் கூறுவது தவறில்லையா!!!!!! பார்க்கலாம்.//

இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். அல்குர்ஆன் 16:8

கோவேறு கழுதை என்பது குதிரையும் கழுதையும் இணைந்து உருவாக்கிய ஒரு உயிரினம். இவை பல இடங்களில் இன்றும் பயணத்திற்கு பயன்படுகிறது. குதிரையையும் கழுதையையும் படைத்தது யார்? இறைவன்தானே! அந்த இரண்டு உயிரினமும் இணைய அதற்கு உள்ளுணர்வை அளித்ததும் அந்த இறைவன் இல்லையா? பிறகு இறைவன் படைத்த மூலத்திலிருந்து வெளியாகும் அனைத்துக்குமே இறைவன் தானே உரிமையாளன். ஒரு குழந்தை தாய் தந்தை இணைந்து பிறந்தால் இதுவும் இறைவனின் படைப்புதானே! இதில் என்ன உங்களுக்கு பெருத்த சந்தேகம்?

//பி.ஜே காணொளியில் பேசுவதை தட்டச்சு செய்து கொடுங்கள் என்றால் ஓடுகிறார் ஜெயதேவ் தாஸ்.சரி நீங்கள் அதன் அடிப்படையில் ஒரு பதிவு இடுங்கள்.வரிக்கு வரி மறுப்பு இடுகிறேன்.டீல் ஓ கே//

உலகம் முழுக்க பல ஆண்டுகளாக தேடியும் இன்று வரை ஒரு குறறத்தையும் அறியல் அறிஞர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்களோ தெரியவில்லை. உங்களுக்கு குர்ஆன் வசனங்களில் எங்கு சந்தேகம் என்று கேளுங்கள். பெரிய அறிஞர் எல்லம் தேவையில்லை. உங்கள் கேள்விகளுக்கு சாமான்யனான நானே பதிலளித்து விட முடியும்.

ரெடியா?

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//(ஏற்கனவே இது பற்றி முன்பு ஒரு பெரிய கட்டுரை எழதி இருந்தீர்கள் சகோ. அந்த லிங்கையும் இந்த பதிவில் சேர்த்து விடுங்களேன்..!)//

ஏற்கெனவே நான் எழுதிய பதிவை சில புதிய காணொளிகளை இணைத்து இன்று அதே பதிவை வெளியிட்டேன். இக்பால் செல்வன் பரப்பி வரும் நாத்திக மற்றும் ஆபாச பதிவுகளுக்கு முடிந்த வரை அவ்வப்போது பதிலளிக்கவே இந்த மீள் பதிவு. :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
…….
“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
“ஆம் ஐயா..”
“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”
“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”
“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.
“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”
(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”
“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”
“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)
“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”
“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”
இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

Basheer Ahamed

Nizam said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரே மற்றும் ஒர் அருமையான பதிவு. ஜெஸக்கல்லா ஹைர்.

சிராஜ் said...

//இக்பால் செல்வன் பரப்பி வரும் நாத்திக மற்றும் ஆபாச பதிவுகளுக்கு முடிந்த வரை அவ்வப்போது பதிலளிக்கவே இந்த மீள் பதிவு.//

அது என்ன மாயம்னே தெரியல... நாத்திகவாதிகள்ல பல பேர் ஆபாசத்தையும் சேர்த்து தான் சொல்றாங்க... ஒரு வேள ஆபாசமா பேச நாத்திகம் வசதியா இருக்குன்னு நாத்திகத்த ஆதரிக்கிறார்களோ???

Anonymous said...

Nizam said...

//Blogger VANJOOR said...//

அஸ்ஸலாமு அலைக்கும் VANJOOR பாய் அறியாத தகவல் தந்துள்ளீர்.

நீங்கள் தந்த செய்தியில் உள்ள போல் கூடிய விரைவில் இயற்கைக்குப் புறம்பான கருத்துக்களை பரப்பும் நபர்களையும் கனடாவிலும் கைது செய்யவுள்ளனர்.

suvanappiriyan said...

சலாம் வாஞ்சூர் பாய்!

//கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது

முழு கட்டுரை : http://www.vinavu.com/2012/08/14/conversion-20/

நன்றி : வினவு //

சிறந்த கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி!

VANJOOR said...

காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட? PART 1.

ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினம் சொக்கபானைனு கொண்டாடுறோம் . நாம அடுத்தவங்களுக்கு சுதந்திரம் கொடுக்கோமா?

காஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர் சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று அறீவிர்களா?

கூடங்குளத்தில் 144..நமக்காக போராடும் அவங்க சுதந்திரத்தை யோசித்தோமா?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது.

ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.

அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.

அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?

மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.

காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?

ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை. அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?

அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே?

வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது. எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.

நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும். ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம்.

ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.

வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.

நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார். அது அவர் சுதந்திரமாம்.


இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்? அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?

continued ...

VANJOOR said...

காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட? PART 2.

காஷ்மீர் மட்டும் இல்லை மணிப்பூர் சத்தீஷ்கர், இப்படி அநேக இடங்களில் இந்தியாவில் சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில் அவர்களை கொடி பிடித்து கொண்டாடுங்கள் என்பது எப்படி?

இன்று கூடங்குளமும் கருப்பு கொடி ஏந்தியுள்ளது.

கூடங்குள மக்களும் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள்.

அவர்கள் வேறு யாருக்கோ போராடவில்லை.நம் எதிர்கால சந்ததிகளுக்காக அமைதியான முறையில் போராடும் அவர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசு என்ன பதில் கொடுக்கிறது?144ம் காவதுறை குவிப்புமா?

மணிப்பூரில் சர்மிளாக்கு என்ன பதில் தருகிறது இந்தியா? ஆயுத போராட்டம் ,அகிம்சை போராட்டம் எதுவுமே இந்திய செவிட்டு காதுகளுக்கு கேட்காத போது என்ன செய்வான் சாதாரண மனிதன்?

புறக்கணிப்பை விட பெரிய ஆயுதம் எதுவுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அன்று காந்திக்கும் தோன்றியது போல...ஒத்துழையாமை இயக்கம்.

இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குதான் இன்று தமிழகத்திலும் கருப்பு கொடி ஏற்ற வைக்கிறது. காவேரி தண்ணீர் ,முல்லை பெரியாறு,கூடங்குளம், இலங்கையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் அநியாயம், ஈழப் படுகொலைகள் என்று அனைத்து பக்கமும் தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய அரசுக்கு எப்படித்தான் நமது எதிர்ப்பை தெரிவிப்பது?

அதன் ஆரம்பம்தான் கூடங்குளத்தில் ஆகஸ்ட் 15ல் கருப்புக்கொடி ஏற்றப்படும்.

அதற்காக இந்தியாவை உடைப்பதா? அது எப்படி என்று பொறுக்க முடியும்? இதற்கான அருந்ததி ராயின் அழகான பதில் படிக்க இங்கே சிரமம் பார்க்காமல் சுட்டவும்

சக மனிதர்களின் உரிமைகளின் மேல் கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.

கீழே காணும் கொண்டாட்டத்திற்கும் நாளை தொலைக்காட்சி சகிதம் நாம் கொண்டாடப்போகும் கொண்டாட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?

கார்ப்பரேட் உலகின் ஆட்சியில் மறைமுக அடிமையாய் இருக்கும் இந்திய அரசை நாம் இந்த கொண்டாட்டத்தின் மூலம் ஆதரிக்கிறோம் நண்பர்களே.

நான் கூடன்குளத்து போராட்டத்தை, காஷ்மீர் தேசத்து அடிமை மக்களின் உரிமை போராட்டத்தை, சட்டீஸ்க்கரில் போராடும் பழங்குடி இனத்தின் போராட்டத்தை,
சர்மிளாவின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

இவர்களை ராணுவம் மற்றும் காவல் துறை கொண்டு அடக்கி ஒடுக்கும் இந்திய அரசுக்கு இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் நான் எனது எதிர்ப்பை அறிவிக்க விரும்புகிறேன்.

வரும் காலங்களில் ஓட்டு மொத்த தமிழகமும் தேர்தல்களை, சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிப்பதன் மூலம் காவேரி நீர் முல்லை பெரியாறு, ராமேஸ்வரம் மீனவர்கள் படுகொலைகளுக்கு , கூடங்குளத்திற்க்கு நீதி பெற முடியும் என நம்புகிறேன்.

ஓட்டு மொத்த தமிழகமும் இணைந்தால் மட்டுமே இது முடியும்.

கூண்டுக்குள் அடைத்து வைத்து பாட சொல்லி ஆட சொல்லி கேப்பது போலத்தான் காஷ்மீர் மக்களிடம் நாம் எதிர்பார்ப்பது.

காஷ்மீராகட்டும்,சட்டீஷ்கராகட்டும் இறப்பது என்னவோ ஏழை மக்களும் ஏழை சிப்பாயும்தான்.

உங்களுக்கென்ன நீங்கள் கொண்டாடுங்கள்.

மனதில் தோன்றியது எழுதி விட்டேன்.

இதோ எனது தோழன் இதை படித்துவிட்டு திட்டி செல்கிறான். என் மனைவி எனக்கு ஏதோ நோய் இருப்பதாய் சொல்கிறார் .எனது உடன் பிறந்த அண்ணன் நாட்டை அவமானப்படுத்துகிரவன் தன் தாயை அவமானபடுத்துகிறான் என்று கமென்ட் செய்கிறான்.

அளவுக்கு மீறிய தேச பற்று நமக்கும் சக மனிதனுக்கும் இழைக்கும் கொடுமைகளை மறைக்க கூடாது.என்னை துரோகி என்று அழைப்பீர்கள் என்றால் எவ்வித சங்கடமும் இல்லாமல் வரவேற்பேன்.

டிஸ்கி;ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்கள் போராட்டங்களின் வலியை புரிந்து கொள்வது கஷ்டமே.சுதந்திர போராட்ட வீரர்களின் ஆன்மா ஒரு நாளும் கார்ப்பரேட் அடிமை அரசுகளை மன்னிக்காது. - சதீஷ் செல்லதுரை

SOURCE: http://tamilmottu.blogspot.sg/2012/08/blog-post_14.html

suvanappiriyan said...

சார்வாகன்!

//குதிரை கழுதை இணைந்து கோவேறு கழுதை உருவாக‌ படைத்தான் என்கிறீர்களே!!!!!!!!!!!!!!!!

அப்புறம் இது மட்டும் ஏன் தவறு???//

விலங்குகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. மனித இனத்துக்குத்தான் இத்தகைய கட்டுப்பாடுகள். உங்களுக்கு இது தவறு இது சரி என்று பிரித்தறிவித்த பிறகு இயற்கைக்கு விரோதமாக உறவு கொள்வதை எப்படி அனுமதிப்பீர்கள். அவ்வாறு சிலருக்கு மனதளவில் பாதிப்பு இருந்தால் அதற்கு மருத்துவ முறைகளும் தற்போது வந்து விட்டது.

அடுத்து ஒருவனை தவறான செயல்களை தூண்டச செய்வது 90 சதவீதம் சுற்றுப் புறமும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே! மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் ஒருவனோ அல்லது ஒருத்தியோ தொடர்ந்து பேசி தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் போது காலப் போக்கில் மூன்றாம் பாலினத்தவராக மாறி விடுகிறான்(ள்). எனவே இவர்களை பிரபல்யப் படுத்தாமல் மன நல மருத்துவர்களின் உதவி கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க ஆரம்பித்தால் சமூக கட்டுக் கோப்பே சீர்குலைந்து விடும்.

Anonymous said...

Samurai says:
August 14, 2012 at 6:47 pm

மலர் மன்னன் அய்யா,

அர்ச்சகர் சாதியினர் மட்டுமே ஆகம விதிகளின் படி பூசை செய்ய முடியும் என்று வெளிப்படையாக் சொன்னதற்கு பாராட்டுக்க்ள்!!!.

ஆனால் இது தவறு!!!!!!!!!.

ஆகம விதிகளை வழிவழியாக் பின்பற்றும் சாதியினர் மட்டுமே புது கோயில்களைக் கட்டி அதில் பூசை செய்யுங்கள் !!!!!

மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கோயில்கள் அனைத்து மக்களுக்குமே சொந்தம்& உரிமை !!!!!!!!!!!!!!

அர்ச்சகர் பணி என்பது ஒன்றும் அனைவரும் விரும்பும் பணி அல்ல!!

ஆயினும் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்பது பெரும்பானமை மக்களை இழிவு படுத்துவது போல் உள்ளது!!!!!!.

இந்தக் காலத்திலேயே இப்படி இருக்கிறீர்களே!!!!!!!!!

அனைவரும் இந்து எனில் சாதி பேதமற்ற கல‌ப்புத் திருமணமே சரி!!!

அதை விட்டு சாதி இருக்கனும்,ஏற்றத் தாழ்வு கூடாது என்பது சிரிப்பு வருகிறது!!!!!!!

உங்கள் போன்ற மனிதர்களினால்தான் இப்படிப்பட்ட இழிவு கண்டு பலர் மதம் மாறினார் என் குற்றம் சாட்டுகிறேன்!!!!!!!!!

கடும் கண்டனம்!!!!!!!!!!!

நன்றி

Anonymous said...

//தமிழானவன் 15 August 2012 01:52 Said………

இகபால்,
அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாத நாடுகளை எதிர்ப்பது என்பதில் ஒன்றுபடுகிறேன்.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற இஸ்லாமோபோபியா அரசியல் - இதனுடன் மாறுபடுகிறேன்.

இந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்த்து விட்டதே அமெரிக்கா.

சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்ரமித்திருந்த போது, கம்யூனிச நாத்திகர்கள் என்ற எதிரிகளை குறித்து இஸ்லாமை ஆதாரமாகக் கொண்டு தாலிபான்கள் உருவாக்கப்பட்டார்கள்.

ரஸ்யா வெளியேறி சோவியத் யூனியன் என்ற எதிரி இல்லாமல் போனது.

பின்பு அமெரிக்கா, மேற்குலக வல்லரசுகள் தனது ஆக்ரமிப்பை நியாயப்படுத்த ஒரு எதிரியை உண்டாக்க வேண்டிய கட்டாயத்தினால்தான் இஸ்லாமோஃபோபியாவை உண்டாக்கினார்கள்.

இஸ்லாம், அடிப்படைவாதம் என்பதை எல்லோருக்கும் எதிரி என்று கற்பித்தார்கள்.

ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாத சவூதியைப் பங்காளியைப் போல நடத்துகிறார்கள்.

இங்கு நான் சொல்ல வருவது, பாகிஸ்தான், ஈராக், சிரியா இசுலாமியர் நாடுகளில் உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன.

இங்கு வெவ்வேறு பிரிவு முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தங்களுக்குள்ளேதானே மோதிக் கொள்கின்றனர்.

இதில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லப்படுவதில்லை.

இஸ்லாமியர் பல பிரிவுகளாக மோதிக்கொள்ளும் இதில் குறிப்பாக சிரியா, முன்பு லிபியாவில், ஈராக்கில் முக்கியக் காரணிகளாக இருந்தவர்கள் அமெரிக்கா, நேட்டோ இதில் மதவாதிகளாக இராத இந்நாடுகளின் அதிபர்களை சர்வாதிகாரிகள் என்றும் இவர்களை எதிர்த்துப் போராடிய மதத் தீவிரவாத குழுக்களை புரட்சிப் படையினர், ரெபெல் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ் ஊடகங்கள் உட்பட.

அதே அமெரிக்கா ஆக்ரமிப்பிலிருக்கும் ஆப்கானில் அரசுக்கு எதிராக குண்டு வைப்பதை இவர்கள் தீவிரவாதம் என்று அழைக்கின்றனர்.

இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்புதான் பல குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன.

இதனை இந்துத்தீவிரவாதத்தின் எதிர்த் தீவிரவாதமாகத்தான் கருத முடியும். மசூதி இடிக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் கலவரத்தில் கொல்லப்பட்டனர்.

அதே போல் குஜராத்தில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டு பல பத்தாயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டனர்.

இதை நடத்திய இந்துத் தீவிரவாத அமைப்புக்கள் இன்று வரை தடை செய்யப்பட வில்லை, தண்டிக்கப்பட வில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக வளர்த்து விடப்பட்ட காலிஸ்தானிகள் இந்தியாவிற்கெதிராக திரும்பும் வரை அவர்கள் தீவிரவாதிகள் என்றழைக்கப்படவில்லை.

3000 சீக்கியர்களை டெல்லியில் கொலை செய்த காங்கிரஸ்காரர்களைத் தீவிரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.

அதே போல 3 வருடங்களுக்கு முன்பு ஒரிஸ்ஸாவின் கந்தமால் மாவட்டத்தில் கிறித்தவர்கள் மீது மாதக்கணக்கில் தாக்குதல் நடத்தப்பட்டது.
சில பேர் கொல்லப்பட்டனர்.

ஆனாலும் அந்த இயக்கங்களைத் தீவிரவாதமாக யாரும் சித்தரிக்கவில்லை.

காஷ்மீர் என்றாலே தீவிரவாதம் அல்லது இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்தான் பொதுப்புத்தியில் இருக்கிறது.

இந்திய இராணுவத்தால் பல பத்தாயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளதை யாரும் நம்பக்கூடத் தயாரில்லை.

ஐரோப்பிய நாடுகளில் வந்தேறிகளால் பிரச்சனைகளாகப் பேசப்படுகிறது.

அதே நேரம் ஐரோப்பியர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலிய கண்டங்களில் மண்ணின் மைந்தர்களை மிகப்பெரும் இன அழிப்பை நடத்தித்தான அதைக் கைப்பற்றினர்.

ஆனால் அது கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டே வருகிறது.

அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் கொடுஞ்செயலைக் காட்டிலும் 9/11 அதிகமாக விளம்பரப்படுத்தப் பட்டும் வருகிறது.

இந்தத் தீவிரவாத லேபிள் குறிப்பிட்ட அரசியல் காரணங்களுக்காக சிலர் மீது மட்டும், சில இஸ்லாமியர் மீது மட்டும் திணிக்கப்படுகிறது என்பது என்வாதம். //