Followers

Thursday, September 06, 2018

ஓரினச் சேர்க்கை

பல ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக சட்டமே இயற்றியுள்ளனர். பிரான்சில் அரசு ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் செயலைக் கண்டித்து பெரும் போராட்டமே நடந்துள்ளது. அங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்க முன் வர வேண்டும். நியுசிலாந்து உருகுவே போன்ற நாடுகளில் சட்ட பூர்வ அந்தஸ்து தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஏன் இப்படி என்று நாம் கேட்டால் 'தனி மனித சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்' என்ற பதில் வரும்.


ஒரு மனிதன் பலரோடு சேர்ந்து சிரித்தும் பேசிக் கொண்டும் இருந்தால் அது இயற்கை! அதே மனிதன் தனிமையில் செல்லும் போது சிரித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் சென்றால் அவனை எங்கு கொண்டு போய் விடுகிறோம்? அதே போல் இறைவன் (அல்லது உங்கள் பார்வையில் இயற்கை)மனிதனைப் படைத்து அவன் இன்பம் அடைவதற்கு ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் படைத்திருக்கிறான். இதனால் அந்த மனிதனுக்கு மன அமைதியும் சந்ததி பெருக்கமும் ஏற்படுகிறது. இது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கடை பிடித்து வரும் வழக்கம். இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு நம் முன்னோர்கள் ஓரினப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தால் இன்று நானும் நீங்களும் கணிணியின் முன்னால் உட்கார்ந்திருக்க மாட்டோம். மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஹார்மோன்களின் மாற்றங்களினாலும் இயற்கைக்கு மாற்றமாக உறவு வைத்துக் கொள்ளும் அந்த பரிதாபத்திற்குரிய மனிதர்களை திருத்துவது மருத்துவர்களின், சமூக ஆர்வலர்களின் கடமை அல்லவா?

தவறிழைக்கும் தன் குழந்தைகளை கண்டிக்கும் பெற்றோரைப் பார்த்து 'ஏன் அவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கிறீர்கள்?' என்று நாம் கேட்பதில்லை. கண்டிப்பதன் காரணம் தன் மக்களை நேர்வழிப் படுத்த வேண்டும் என்ற விருப்பம் தான். அதே போல் தன் மக்கள் தவறிழைக்கும் போது கண்டிக்க வேண்டியதும் ஒரு அரசின் கடமையல்லவா?

இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தனி மனித சுதந்திரம் என்று ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்க நாடுகளிலும் இந்த ஓரினச் சேர்க்கையை அனுமதிக்கும் கொடுமையை நாம் பார்த்து வருகிறோம். மனிதனின் மனம் என்றுமே தவறை நோக்கியே இழுத்துச் செல்லும். அந்த வகையில்தான் மனிதனும் படைக்கப்பட்டுள்ளான். சூழ்நிலைகள் சிலரை ஓரினச் சேர்க்கையாளர்களாக மாற்றி விடுகின்றனது. அநத பரிதாபத்திற்குரிய அன்பர்களை கவுன்சிலிங் கொடுத்து, முற்றியவர்களை மன நல மருத்துவ மனையிலும் சேர்ப்பித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

இஸ்லாமிய நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு மிகக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படுகிறது. சட்டம் தளர்த்தப்பட்டால் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளைப் போன்றே அரபு நாடுகளும் மாறி விடும் ஆபத்து உண்டு.

எங்கள் கிராமத்தில் ஒரு வறிய குடும்பத்தில் ஒரு இளைஞனுக்கு இது போன்ற ஒரு பிரச்னை. அவர்கள் வீட்டில் ஆரம்பத்திலேயே சரியாக கவனிக்காததால் பம்பாய் நகருக்கு ஓடி விட்டான். வயதுக்கு வந்த இரண்டு சகோதரிகள். கஷ்டப் பட்டு அந்த பெண்களை உறவினர்கள் நல்ல இடத்தில் திருமணம் செய்வித்தார்கள். பம்பாய் ஓடியவன் அங்கு அரவாணிகளோடு சேர்ந்து கொண்டான். விபரம் தெரிந்து யாரும் அழைக்க பம்பாய் சென்றால் நம்மவர்களைப் பார்த்து விட்டு ஓடி விடுவான். இப்படியே இருபதுவருடம் ஓடியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனாகவே திரும்பி எங்கள் ஊருக்குவந்தான். பம்பாயிலிருந்து அவன் கூடவே கொண்டு வந்தது எய்ட்ஸையும் சேர்த்துதான். அவனது சகோதரிகள் ஒரு வாரம் மருத்துவ சிகிச்சைக் கொடுத்தார்கள். நோய்முற்றி விட்டதால் ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் நாற்பது வயதிலேயே மரணமடைந்து விட்டான். வாழ வேண்டிய வயதில் இன்றுஅவன் நம்மிடம் இல்லை. 

ஓரினச் சேர்க்கையைப் பற்றி ஜூனியர் விகடனில் வந்த செய்தியை பார்ப்போம்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது பாவம், மாபெரும் தவறு என்ற மத ரீதியான பார்வைக்கு அழுத்தம் சேர்ப்பது போல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவ உலகமும் ஓரினச் சேர்க்கை தவறானது என்று சொன்னதுடன் இது ஒரு நோய் என்றும் சொல்லத் துவங்கியது. உதாரணமாக 'கிராஃப்ட் எபிங்' என்னும் செக்ஸூவாலஜிஸ்ட் 1886-ல் மருத்துவ பாட நூல் ஒன்றை எழுதினார். இதில் 'ஓரினச் சேர்க்கை என்பது பிறவிக் கோளாறு (ஜீன் குறைபாடு) என்றும் இத்தகைய புணர்ச்சியில் ஈடுபடுவது நரம்புத் தளர்ச்சிக்கு வழிகோலும் என்றும் எழுதியிருந்தார். அப்போது இவரது கருத்தை ஒட்டி மருத்துவ உலகம் ஓரினச் சேர்க்கையை ஒரு மன நோயாகவே கருதியது.

டாக்டர் நாராயண ரெட்டி
ஜீனியர் விகடன்
26-03-2006

------------------------------------------

இந்த ஓரினச் சேர்க்கையைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போம்.

'உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றீர்களா? இல்லை. நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கின்றீர்கள்.' என்றும் கூறினார்.

'லூத்தே! நீர் விலகிக் கொள்ளா விட்டால் வெளியேற்றப் படுவோரில் நீரும் ஒருவர்!'என்று அவர்கள் கூறினார்கள்.

'உங்கள் செயலை நான் வெறுப்பவனே!' என்று அவர் கூறினார்.

'என் இறைவா! என்னையும் என் குடும்பத்தினரையும் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக என்றும் கூறினார்.

26 : 165,166,167,168,169 - குர்ஆன்.


தன் சமுதாயத்து மக்களிடம் ஓரினச் சேர்க்கையான இந்த பெரும் பாவத்தை விட்டுவிடும்படி பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்துவதாக இல்லை. 'இந்த பிரச்சாரத்தை விட வில்லை என்றால் உம்மை ஊரை விட்டு வெளியாக்குவோம்' என்றும் அந்த மக்கள் கூறினர்.

'உங்கள் விஷயத்தில் எனக்கு சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'என்று அவர் கூறினார்.

'லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்.அந்த மக்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக் கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக் கெடு வைகறைப் பொழுது.வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'என்றனர்.

11 : 80,81 - குர்ஆன்.


லோத்தின் பிரார்த்தனையை ஏற்ற இறைவன் அந்த ஊரை அழிப்பதற்காக இரண்டு வானவரை அனுப்பினான்.

'அவர்கள் மீது சூடேற்றப்பட்ட கல மழை பொழிந்து அவ்வூரின் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக்கினோம். சிந்திப்போருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அவ்வூர் நீங்கள் சென்று வரும் நிலையான சாலையில்தான் உள்ளது. '15 : 74,75,76 - குர்ஆன்

இறைவனின் கோபத்திற்க்குள்ளான அந்த ஊர் இன்றும் ஜோர்டானில் சபிக்கப் பட்டதற்கான அடையாளங்களோடு செத்த கடல் என்று சொல்லப் படும் (Dead Sea) யை ஒட்டி அமைந்திருப்பதைக் காணலாம். இந்த கடல் பிரசேத்தை அரபியில் 'பஹ்ரல் மௌத்' என்று சொல்வார்கள்

8 comments:

ASHAK SJ said...

பார்ப்பன இந்துமதம் (உண்மையான இந்துமதமல்ல) அதாவது எந்த பார்ப்பன மதம் அன்புராஜ் போன்றோரை சூத்திரன் என்கிறது அந்த இந்துமதம் ஊரினை சேர்க்கையை ஆதரிக்கிறது, அதற்க்கு உதாரணம் கல்யாண ராமன் என்ற ஆர் எஸ் எஸ் சூத்திரன், மேலும் நாம் அறிந்தவரை ஐயப்பன் என்ற கற்பனை கடவுள். இந்த தீர்ப்பை ஆர் எஸ் எஸ் ம் வரவேற்கிறது, ஆர் எஸ் எஸ் காரர்கள் பலர் கல்யாணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?

Dr.Anburaj said...

ஆஷிக், உன் முட்டாள்தனத்திற்கு உன் தாயாரை இழிவு படுத்த விரும்பவில்லை.
பிரம்மச்சரியம்பிரதி பன்னம் வீரிய லாப -பிரம்மச்சரியம் காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆன்மாவிற்கும் வீரியம் வாய்க்கும் என்கிறது யோகசுத்திரம்.
வாழ்க்கையின் முதல் படி பிரம்மச்சரியம் ஆகும். திருமணம் ஆகும் முன் பிரம்மச்சரியம் காக்க வேண்டும்.ஒரு இளைஞன் தனது விந்துவை வீணாக்க கூடாது.தானாக வெளியேறுவதைக் கூட தடுக்க வேண்டும். விந்துவை வெளியிடாமல் காக்க வேண்டும் என்பது அதன் நோக்கம். பிரமச்சரிய ஆஸ்ரமம் அழிந்ததால்தான் இந்துஸ்தான் வீழ்ச்சியுற்றது என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.யோக பயிற்சி முறையாக சமய பயிற்சி கலாச்சார சுழ்நிலை நிலவும் போது எல்லா இளைஞா்களாலும் கற்பு நெறி யோடு வாழ முடியும் என்கிறது இந்து சமயம்.தன் தாய் மனைவி பெரியம்மா சித்தி பாட்டி ஆகியோா் கற்பு நெறி தவறால் வாழ்கின்றார்கள் என நம்பும் ஒரு இளைஞன் தான் கற்பு நெறியோடு வாழ முடியாது.வாழத்தேவையில்லை என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு .

இப்படி இருக்கும் போது ஒர்பால் உறவு என்றால் என்ன எனக்கு தெரியவில்லை. மனைவியோடு அல்லாமல் வேறு ஒரு வழியில் காம இச்சைக்கு வடிகால் தேடுகின்றாா்கள்.
இந்து சமயம் இதை ஆதரிக்கின்றது என்பதை எப்படி சொல்கின்றீா்கள்.
புராணக்கதைகளை சற்று பெரிது படுத்த வேண்டாம்.சுவாமி ஜயப்பன் கூட சிவன் ஆணாக விஷ்ணு பெண்ணாக மாறி பிறந்ததான் கதை உள்ளது. இவைகள் கற்பனைக்கதைகள் கலந்த உண்மை வரலாறு.வரிக்கு வரி உண்மை என எடுக்க இயலாது.
பிரம்மச்சரியம் ஒழுக்கத்தை அனைவருக்கும் விதிக்கும் இந்து சமயத்தில் விபச்சாரத்திற்கோ இயற்கைக்கு விரோதமான பாலியல்உ றவிற்கோ ஆதரவு கிடையாது.கிடையாது.
வாய் கொழுத்தவன் கைகொழுத்தவன் எதோ எழுதுவான்.அதுபோல் தாங்களும் தாய் நாட்டின் பண்பாட்டை மலினப்படுத்துவது எதற்காக ? எத்தனை குமுஸ் பெண்களை வேண்டுமானாலும் வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ளுங்கள் என்று விபச்சாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ள குரான் எங்கே! பிரம்மச்சரியம் ஆண் பெண் பேதமில்லாது அனைவரும்கடை பிடிக்க வேண்டும் என்று சொல்லும் இந்து பண்பாடு எங்கே. அரேபிய பண்பாடு ஒரு அசிங்கம்இ அதை குப்பையில் போடு.

Dr.Anburaj said...

இளைஞா் சக்தி -எழுதியவா் சுவாமி புருஷோத்தமனந்தா் - என்ற புத்தகம் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்படித்து அப்படியே பக்கம் பக்கமாக வெளியிடலாம். அதில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகளில் இறுதி வரி

பிரம்மச்சரியம் தவறா வரம் அருள்வாய்

என்ற பிராத்திதனையை அதில் நீங்கள் காணலாம். இதுதான் இந்து சமயம்.காலத்திற்கு ஒவ்வாதது என்று நாங்கள் கழித்ததை நீங்களும் ஆஷிக்கும் சமய வெறிபிடித்தவர்களும் இந்துமதத்தின் எதிரிகளும் -என் மேற்கோள்காட்டுகின்றீா்கள்?
இந்தியாவில் எற்பட்டுள்ள கலாச்சார சமய பரிணாமத்தில் தங்களுக்கு சாதகமான ஒரு பின்னேக்கிய நிலையை ஏன் எடுத்து காட்டுவது ஏன் ? அந்த விசயத்தில் நவீன மான சிந்தனை என்ன ?பரிணாமத்தின் இன்றைய நிலை என்ன என்பதை ஏன் பதிவு செய்வதில்லை.

பழைய காலத்தில் நடந்த தவறுகள் அனைத்தும் திருத்தப்பட வேண்டும்.
முஸ்லீம்ஆக மதம் மாறாமல்- என்பதுதான் மிக முக்கியமானது.

Dr.Anburaj said...

சுவாமி ஐயப்பன் ஒரு நைஷ்டிக பிரம்மச்சரியம் காப்பவா் என்பதுதான் புராண வரலாறு.

இவரது சபரிமலைக்கு செல்பவர்களுக்கு முழுமையான

பிரம்மச்சரியம்

கட்டாயம். அவசியம்.விரதமகாராத்களுக்கு மாதவிலக்கு வராத முடிந்த பெண்கள்தான் சமையல் செய்ய வேண்டும். தாயாருக்கு விதிவிலக்கு.

போதுமா ஆஷிக். சபரி மலைக்குச் சென்றேன் அங்கு ஒருபால்உறவு குறித்து பயிற்சி பெற்றேன் என்று யாராவது சொல்ல கேள்விப்பட்டதுண்டா ?

ASHAK SJ said...

உன் முட்டாள் தனத்தால் நீ தான் உன் தாயாரை இழிவுபடுத்துகிறாய், உன்னை சூத்திரன் என்று சொல்லும் (சூத்திரனுக்கு அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன்) பார்ப்பன ஹிந்து மதத்தை தூக்கிப்பிடிக்கிறாய்.

உன் பார்ப்பன ஹிந்துமதத்தின் வரலாறுகள் கற்பனை கலந்த பொய் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி

பார்ப்பன இந்துமதத்தில் குமுஸ் பற்றி உண்டு, தேவர்களுக்கு அடியாராக பெண்களை போட்டுக்கட்டி என்ன செய்தார்கள் என்று சொல்லமுடியுமா?

இஸ்லாம் க்கு கலாச்சாரம் இல்லை, எந்த நாட்டின் கலாச்சாரத்தையும் அது தூக்கிப்பிடிக்கவில்லை. பார்ப்பன மத கலாச்சாரத்தில் உன் பாட்டிக்கு மேலாடை இல்லை, இப்ப சொல்லு எது குப்பையில் போடவேண்டிய கலாச்சாரம்,

உன் பாட்டிக்கு மேலாடை தந்த இஸ்லாம் சிறந்ததா? இல்லை மேலாடை அவிழ்த்து ரசித்த பார்ப்பன ஹிந்துமதம் சிறந்ததா? சூத்திரனே பதில் சொல்

Dr.Anburaj said...

ஐயா சுவனப்பிரியன்

ஆஷிக் சற்று எல்லை மீறுவதாகத் தெரிகின்றது. அவரது பதிவுகளை திருத்தி வெளியிட வேண்டியது அவசியம்.

Dr.Anburaj said...

இளைஞா் சக்தி -எழுதியவா் சுவாமி புருஷோத்தமனந்தா் - என்ற புத்தகம் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதைப்படித்து அப்படியே பக்கம் பக்கமாக வெளியிடலாம்
-------------------------
வௌியிடுங்கள்.முஸ்லீம்களுக்கு கூட நன்மைதான்.

ASHAK SJ said...

நான் எல்லைமீறவில்லை, நான் இங்கே பதிவிடுவது நிதர்சனமான உண்மை, உன் மூதாதையருக்கு மேலாடையை தந்தது இஸ்லாம் தான், நீ நம்பும் பார்ப்பன மதம் தேவர்களுக்கு அடியாள் என்றது , மேலாடையை அணியக்கூடாது என்றது , முலைக்கு வரி இட்டது, இதெல்லாம் வரலாறு, நீ உண்மையிலேயே சூடு மானம் ரோசம் உள்ளவன் என்றால் உன்னை சூத்திரன் என்று சொல்லும் மதத்தை விட்டு வெளியேறி இருப்பாய் அல்லது குறைந்த பட்சம் மனிதனை மனிதனாக மதிக்கும் இஸ்லாத்தை கண்ணியப்படுத்தி இருப்பாய், இது ரெண்டு நீ செய்யாத போது விமர்சனங்களை தாங்கித்தான் ஆகவேண்டும்

நஷீர் பாய் இதை கட்டாயம் வெளியிடவேண்டும்