Followers

Thursday, February 27, 2020

வாஹா அகதிகள் முகாமுக்-கு மகாத்மா வருகிறார்....

வாஹா அகதிகள் முகாமுக்-கு மகாத்மா வருகிறார்....
அங்கிருக்கும் ஆர்எஸ்எஸ் சங்கிகள் இவரை சூழ்ந்து கொள்கிறார்கள்... தங்கள் கூட்டத்திற்கு வரச்சொல்லி அழைக்கிறார்கள்...
வரும் வழியில் ஆர்எஸ்எஸ்காரர்களின் துணிவு, கட்டுப்பாடு குறித்து சிலர் மகாத்மாவின் காதில் ஓதுகிறார்கள்...
அவர்களைக் கூர்ந்து பார்த்த மகாத்மா "ஹிட்லரின் நாஜிப்படையினரும் அப்படித்தான் இருப்பார்கள்" என்று சற்று கோபமாகவே சொல்கிறார்...
பேச்சை முடித்துக் கொள்கிறார்கள்...
அரங்கிற்கு வரும் தருவாயில் அவரை கூல் படுத்த வேண்டும் என்று நினைத்து "இந்துயிசம் பிறப்பித்த மாமனிதர்" என்று முழங்குகிறார்கள்...
"உண்மைதான்... ஆனால் நான் பின்பற்றும் இந்துயிசம் பிற மதவெறுப்பையோ சசிப்புத் தன்மை அற்றதோ அல்ல" என்கிறார்...
சங்கிகளுக்கு கோபம் வந்து விடுகிறது... "தீயவர்களைக் கொல்ல இந்துயிசம் அனுமதிக்கிறதா இல்லையா? கீதையில் பகவான் கிருஷ்ணர் கவுரவர்களை கொல்ல வில்லையா?" என்று கேட்கிறார்கள்...
சரியான இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்று நினைத்த மகாத்மா "தீயவர் யார் என்பதில் முதலில் தெளிவு இருக்க வேண்டும். நீதிபதியாக தன்னை நினைத்துக் கொள்பவரும் தீயவராக இல்லாமல் இருக்க வேண்டும். பாவி ஒருவனுக்கு இன்னொரு பாவியை தண்டிக்கும் உரிமை கிடையாது.
தீயவரை தண்டிக்கும் உரிமையை கீதை அங்கீகரித்திருப்பது உண்மை. ஆனால் அது சட்டபூர்வமாக அமைந்த ஓர் அரசுக்கே உண்டு.
நீங்களே நீதிபதியாகவும் தண்டனை நிறைவேற்றுபவர்களாகவும் ஆனால் சர்தாருக்கும் பண்டித நேருவும் அதிகாரம் அற்றவர்களாக ஆகிப்போவார்கள்" என்றார்...
சங்கிகள் தலையை தொங்கப்போட்டுக் கொண்டார்கள்...
ஒரே மாதத்தில் அஹிம்சா மூர்த்தி படுகொலை செய்யப்பட்டார்....


1 comment:

Dr.Anburaj said...


இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.
இந்து குழந்தைகளுக்கு விவேகானந்தரை படிக்க கொடுக்க வேண்டும்.