Followers

Saturday, February 29, 2020

சங்கிகளோடு விவாதம் செய்யாதீர்கள்.

படித்ததில்_பிடித்தது....

சங்கிகளோடு விவாதம் செய்யாதீர்கள்.

டெல்லியில் கலவரம் தொடங்கிய பிறகு நடந்த உயிரிழப்புகளும் அதை தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களும், நியாய உள்ளம் கொண்டோர் அனைவரையும் பாதித்து உள்ளன.  ஆனால் சங்கிகள் இதற்கும் முட்டுக் கொடுக்கிறார்கள்.  கொடுப்பார்கள்.   

கலவரத்தை தூண்டியது இஸ்லாமியர்கள்தான் என்பார்கள்.. அவர்கள்தான் அதிக அளவில் இறந்திருக்கிறார்கள் என்றால், ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப் பட்டிருக்கிறார் என்பார்கள்.  இதேபோல உத்தரபிரதேசத்தில் RSS பசு காவலர்களால் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அடித்துக் கொல்லப்பட்டார் அதைப் பற்றி பேசமாட்டார்கள்..

பலத்த உயிர் மற்றும் பொருட்சேதம் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றால், சிறு சம்பவம் பெரிது படுத்தப்படுகிறது என்பார்கள். 

ஒரு மசூதி இடிக்கப்பட்டு, அதில் அனுமன் கொடி கட்டப்பட்டுள்ளது என்றால், அது போலி வீடியோ என்பார்கள்.  டெல்லி கலவரம், உயிர்சேதம், பொருட்சேதம் பற்றிய கட்டுரைகளை பகிர்ந்தால், பாகிஸ்தானில் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் தெரியுமா என்பார்கள். 

டெல்லியில் நடந்த கலவரம் தவறே அல்ல.  இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏவை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம் நடத்துவது தவறு.  சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.  அதனால்தான் பிரச்சினை என்பார்கள்.   

மோடி – அமித் ஷா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு முட்டுக் கொடுப்பதுதான் இந்த முரட்டு சங்கிகளின் வேலையே.   இவர்களோடு விவாதம் செய்து, இவர்களுக்கு புரிய வைப்பது சாத்தியமே அல்ல. இவர்கள் தலையை மண்ணில் புதைத்த நெருப்புக் கோழிகள். 

நாளை அனைவரும் கோமியம் குடிப்பது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டால், கொஞ்சம் கூட கூசாமல் அதை நியாயப்படுத்துவார்கள். 

இவர்களோடு விவாதிப்பதோ, பதில் சொல்லுவதோ நேர விரயம்.  இவர்களை உங்கள் நட்பு வட்டத்தில் இருந்து விலக்குங்கள்.   இவர்களிடமிருந்து நீங்களும் விலகி இருங்கள். 

நீங்கள் இஸ்லாமிய ஆதரவாளர்.  இந்து மத விரோதி என்பார்கள். 

ஆமாண்டா  @ நியாயவானே என்று பதில் சொல்லுங்கள்.

By Sankar A
Jp Prakash

No comments: