Followers

Friday, May 28, 2021

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழகிய உரை!

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அழகிய உரை!

 

'ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்..... ஏக இறைவனான அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானவல்ல.... உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானவன்.  நபிகள் நாயகம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானவரல்ல.... அகில உலக மக்களுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள்.'

 

'நமது நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை காக்க வேண்டியது பெரும்பான்மை மக்களின் கடமையாகும். அவர்களின் அச்சத்தை போக்கி சமூகத்தில் இரண்டற கலக்க வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.'

 

'எனக்கு ஒரு விஷயம் கவலை அளிக்கிறது. சில இடங்களில் ஹிந்து பெண்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்தை ஏற்கச் சொல்லி வற்புறுத்தப்படுவதாக கேள்விப்படுகிறேன். இது யார் கற்றுக் கொடுத்த இஸ்லாம்? குர்ஆனில் இறைவன் 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு: மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என்று கூறுகிறான். 

 

'மற்றொரு இடத்தில் 'நபியே! உனது வேலை மார்க்கத்தை சொல்வதுதான். அவர்களுக்கு நேர் வழி காட்டுவதும் காட்டாமல் இருப்பதும் எனது வேலை. அதற்காக நீர் சிரமப்படவோ கவலைப் படவோ வேண்டாம்' என்கிறான். இறைத் தூதருக்கே அந்த நிலை என்கிறபோது நாமெல்லாம் எங்கே?'

 

'அனைத்து பாகிஸ்தானிகளுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நம் நாட்டில் வசிக்கும் ஹிந்து, கிருத்தவ, சீக்கிய, பவுத்த மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது முஸ்லிம்களாகிய நமது கடமை. இதனை மறந்து விட வேண்டாம்'

 

என்ன ஒரு அழகிய பேச்சு! பல மதத்தவர்கள் வாழும் நாட்டில் தவறாக ஒரு சிலர் வழி நடத்தப்பட்டால் அந்த மக்களை தலைவன் கண்டிக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற நாடு என்று பெருமை பேசும் நமது நாட்டின் நிலை என்ன? பிரதமரும் உள்துறை மந்திரியும் திட்டமிட்டு கலவரங்களை தூண்டி விடுவதும், முஸ்லிம்களின் சொத்துக்களை சூரையாடுவதும், முஸ்லிம் இளைஞர்களை கும்பலாக கோழைத்தனமாக தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்தாவது சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்ளட்டும்.




 

 

7 comments:

Dr.Anburaj said...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

Dr.Anburaj said...

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!
-------------------------------------------------------------------------------
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
தொழுத கையுள்ளும் கொலைக்கருவி மறைந்து இருக்கும்; பகைவர் கண்ணீர்விட்டு அழுதிடுவதும் அத்தகையதே என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

தொழுவதையும் அழுவதையும் தம் உள்நோக்கம் மறைப்பதற்காகப் பயன்படுத்துவர் பகை நெஞ்சம் கொண்டோர்.

தம்மை தொழுவது போன்று காட்டிக்கொள்ளும் பகைவரின் கைகளின் உள்ளேயும் கொலைக் கருவி மறைந்திருத்தல் கூடும்; அவர் அழுவது போன்று விடும் கண்ணீரும் அத்தன்மையதே.
மனதில் வஞ்சத்தையும் பகையையும் வைத்துக்கொண்டு நட்புறவாடுபவர்கள் நண்பரைக் கொலைசெய்யவும் அஞ்சமாட்டார்கள். உள்ளத்தில் வெறுப்பை வளர்த்து வைத்து முகத்தில் புன்னகையுடன் நடமாடும் அவர்கள் கும்பிடுவதற்குக் கூப்புகின்ற கைக்குள்ளேயும் கொலைக் கருவி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோல் வஞ்சகமனம் கொண்ட அக் கூடாநட்பினர் பாசாங்கு செய்து அழும் கண்ணீருக்குப் பின்னால் உயிர்க்கு இறுதி செய்யும் எண்ணமும் இருக்கும். அக்கண்ணீரை நம்பி விடக்கூடாது; அதில் கொலைக்கருத்து மறைந்திருக்கும். உயிர் நீப்பதற்காகப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம், முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும், மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' எனப்பட்டது.
வழிபடு வோரை வல்லறி தீயே (புறநானூறு 10 பொருள்: நின்னை வழிபட்டொழுகுவோரை விரைய அறிவை) என்று வழிபடுவோரை அறிந்துகொள் என இச்சங்கப்பாடலும் அறிவுறுத்துகிறது.

Dr.Anburaj said...

இதை நம்பும்முட்டாளா சுவனப்பிரியன்.

பாக்கிஸ்தான் பிரஜை.பொருளாதார மேதை.பல நாடுகளுக்கு நிதிதுறை ஆலோசகா்.பெயா் திரு.மியான்கான். பிரதமருக்கு ஆலோசனை அளிக்கும் குழு உறுப்பினராக நியமனம். பின்தான் தெரியவந்தது அண்ணன் அஹமதியா முஸ்லீம் என்று. முல்லாக்களும் ஜமாத்தளும் கொடி பிடித்தன. அஹமதியா காரனை விரட்ட போா் களம் புகுந்தன. பயந்த இம்ராம்கான் மியாகானை கமிட்டியில் இருந்து நீக்கினாா். உலகப் புகழ் பெற்ற பாக்.பிரஜைக“கு இந்த கதி யெனில் இந்துக்கள் . . . . காபீர்கள் . . . பாக்கிஸ்தானில் வாழ முடியுமா?
முஹம்மது சாகும் தருவாயில் அளித்த உபதேசம்

கிறிஸ்தவர்களையும் .. .யுதர்களையும் . . . . முஷ்ரிக்குகளையும் . . . . நாட்டை விட்டு விரட்டி விடுங்கள்.

அதைத்தான் பாக் அரசு செய்து வருகின்றது. இந்தியாவிலும் இந்துக்கள் ஓடி ஒழிய வேண்டிய காலம் விரைவில் வரலாம். திரு.மோடி அவர்கள் இந்துக்களை காப்பாற்ற ஆவன செய்து வருகின்றாா்.

Dr.Anburaj said...

Bowing to far-right pressure, Pakistan removes Ahmadi adviser
Government says decision to relieve leading academic from economic advisory council was made to ‘maintain unity’.

Pakistan’s government has asked a leading academic to step down as an economic adviser, the ruling Pakistan Tehreek-e-Insaf party (PTI) has announced after far-right groups objected to his appointment based on his faith.

Atif Mian, an economist who belongs to the Ahmadiyya sect of Islam, had been appointed to the Economic Advisory Council (EAC) last week and has now agreed to resign, PTI senator Faisal Javed Khan announced on Friday. Fawad Chaudhry, the country’s information minister, confirmed the decision, saying it was taken because the government wished to maintain unity.

“The government wishes to move forward together with all religious scholars and social classes,” he said. “If one appointment creates a different impression, then that is not appropriate.”

Several hours after his resignation, Mian confirmed the news on Twitter, issuing four tweets in which he expanded on the decision.
---------------------------------------------------------------------------------

நாலுமுழம் கயிற்றில் தொங்கலாம்.

Dr.Anburaj said...

ஆப்பானிஸ்தானில் பாதுகாப்பு ஆலோசகா் ” விபச்சார நாடு ” என்று பாக்கிஸ்தானை வசைபாடியுள்ளாா்.
Pakistan Stops Official Contact with Afghan National Security Chief
By Ayaz Gul
Updated May 29, 2021 07:45 AMSLAMABAD - Pakistan has conveyed to the leadership in Afghanistan it will no longer conduct official business with Kabul’s top national security chief because of his recent “abusive outburst” against Islamabad, highly placed officials and diplomatic sources confirmed to VOA on Friday.

The controversy has again highlighted political tensions and historic mistrust plaguing relations between the South Asian neighbors, which share a nearly 2,600-kilometer border.

The latest trigger came from Afghan President Ashraf Ghani’s national security adviser, Hamdullah Mohib, who routinely accuses Pakistan and its spy agency of supporting and directing the Taliban’s insurgency in Afghanistan, charges Islamabad rejects.

In a public speech earlier this month in eastern Nangarhar province, next to the Pakistani border, Mohib not only repeated his allegations

but called Pakistan a “brothel house.”

His remarks outraged leaders in Islamabad, who denounced them, saying they “debased all norms of interstate communication.”

A senior Pakistani official privy to the matter told VOA on condition of anonymity his government lodged a strong protest with the Afghan side and conveyed “deep resentment” in Pakistan over Mohib’s “undignified” remarks.

The official said Kabul has been told Islamabad, henceforth, would not hold bilateral engagements with the Afghan national security adviser. It has also been conveyed “by our side that Afghan side is not serious in engaging with Pakistan, but only in the blame game and degrading Pakistan’s sincere efforts,” the official added.
ஆப்பானிஸ்தானில் பொது அதைியை பாழாக்கும் காடையர்களுக்கு பயிற்சி ஆயுதங்கள் ஆதரவு கொடுத்து வளா்த்து விடும் பாக்கிஸ்தானை விபச்சார வீடு என்று வர்ணனை செய்துள்ளாா்.
இந்த நீசன் ஏதோ வெளிநாட்டு அரசுகளின் நிா்பந்தத்தை ஏமாற்ற இப்படி பேசுகிறான்.

anban said...

எல்லாம் இருக்கட்டும் டைப்பிஸ்ட் அன்பு. முதலில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுக்க பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் ஒருவரை நேரில் வந்து பேச சொல்லுங்கள் அன்பு. மத்தத அப்புறம் பேசுவோம்

Dr.Anburaj said...

நீ முதலில் எனது பதிவுகளுக்கு பதில் சொல்.சுண்டெலிக்கு பதில் சொல்ல இயலாத பேடி யானையை வரச் சொல்லுவது ஏதற்கு. தகுதி உனக்கு இல்லை. வா சவால் விடுகிறேன். எனது பதிவுகளுக்கு மறுப்புரை எழுது. உண்மை உலகிற்கு தெரியட்டும். பாக்கிஸ்தான் பிரதமா் உன்ற காடையன் உனக்கு பெரிய ஆளாகிப்போனான். அவன் சொன்ன பொய்கள் ஏதோ வேத வசனம் போல் பதிவிட்டுள்ளாா்.