Followers

Sunday, January 08, 2023

சாதியை எப்படி நியாயப் படுத்துகிறார் பாருங்கள்.....

 சாதியை எப்படி நியாயப் படுத்துகிறார் பாருங்கள்.....


நாடார், தேவர், பார்ப்பான், தலித் என்று விறகு கட்டுகளாக கட்டி அதனை இந்து என்று பெரும் கட்டாக கட்டி வைத்துள்ளார்களாம். இதற்கு கைத் தட்டல் வேறு... இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிகளே இல்லாமல் இன்று உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் சிறப்பாக பரவி வருகிறதே... அரபுலகில் இவர் சொல்லும் விறகு கட்டைகள் இதை விட நிறையவே இருந்தது. அத்தனை சாதி என்ற விறகு கட்டைகளையும் தனது வாழ்நாளிலேயே எரித்து விட்டு (குர்ஆனின் துணை கொண்டு) சென்றுள்ளார்கள் நபிகள் நாயகம். இங்கு மட்டும் சாத்தியப்படுகிறதே அது எப்படி?


அந்த விறகு கட்டைகளை பிராமண், சத்ரியன், வைஷ்யன், சூத்திரன் என்று வகைப்படுத்தி சூத்திரன் மந்திரம் ஓதினால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி  ஊற்று என்று எழுதி வைத்துள்ளீர்களே... அந்த சாதிப் பற்றால் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்து அதனை பெருமையாக பேசித் திரிகிறீர்களே... சாதிப் பற்றால் ஆணவக் கொலைகளை தினமும் அரங்கேற்றுகிறீர்களே... அதே சாதிப் பற்றால் மண்ணின் மைந்தர்கள் அவர்களின் கோவிலுக்குள் விடாமல் எங்கிருந்தோ வந்த வந்தேறிகள் கோவில்களை ஆக்கிரமித்துள்ளனரே... சிதம்பரம் கோவிலில் தமிழில் பாடக் கூட அனுமதிப்பதில்லையே... இந்த கொடுமை இன்று வரை தொடர்கிறதே.... இதற்கெல்லாம் ஸ்ரீனிவாசன் பதில் சொல்வாரா? 


ஆக்கம் 

சுவனப்பிரியன்




No comments: