Followers

Wednesday, January 11, 2023

திண்ணை தளத்தில் சங்கி சகோதரி ஸ்மிதாவுடன்

 

திண்ணை தளத்தில் சங்கி சகோதரி ஸ்மிதாவுடன் பல ஆண்டுகள் முன்பு நடந்த விவாதம்....

 

SUVANAPPIRIYAN

 8:38 pmAugust 24, 2012

சகோ ஸ்மிதா!

//Suvanappiriyan.... Pls get the facts right. Majority of the muslims were in favour of a separate state. Many muslims who went to pakistan were driven abck to India & it was Nehru who allowed them back.//

அவ்வாறு இரு தரப்பிலும் மக்கள் சென்று வந்தனர். அவர்கள் அனைவரும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட மாநிலங்களை சேர்ந்த மக்கள். தமிழகத்திலிருந்தோ, மற்ற தென் மாநிலங்களிலிருந்தோ எவரும் செல்லவில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பிரிவினை முஸ்லிம்களை இந்தியாவில் சிறுபான்மையினராக மாற்ற ஜின்னாவை வைத்து மேலும் சில முஸ்லிம்களை வைத்து இந்துத்வ வாதிகளால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் வரலாறு மாற்றி எழுதப்பட்டது.


உங்கள் தலைவர் அத்வானியின் பூர்வீகமே பாகிஸ்தான்தான்.


//Also, Rajaji warned Gandhi as early as in 1942 that partition is inevitable. Gandhi did not agree. Rajaji was branded anti national & he kept away from active politics.//

பிரச்னை என்றவுடன் ராஜாஜியை அம்போ என்று கழட்டி விடுகிறீர்களே பார்த்தீர்களா?

//3 lakh kashmiri pundits have been mercilessly driven out of Jammu & they live in camps in delhi.//

அவர்கள் காஷ்மீரில் இருந்ததை விட சகல சௌகரியங்களோடு வாழ்ந்து வருகின்றனர் அரசு உதவியோடு. எனவே தான் நிலைமை சீராகியும் அங்கு செல்ல அவர்கள் பிரியப்படவில்லை. ஆனால் அவர்கள் திரும்பவும் அங்கு குடியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

//In assam today, hindus are being tortured, killed & driven away because of illegal muslim bangladesh immigrants.//

கலவரத்தில் பாதிக்கப்பட்டது முஸ்லிம்கள். அந்நியர்கள் யாராக இருந்தாலும் அனைவரையும் வெளியேற்றுவதுதான் நேர்மையான செயல். ஆனால் பிஜேபி யோ இந்துக்களுக்கு குடியுரிமை கொடுத்து முஸ்லிம்களை மட்டும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அங்கு குழப்பத்தையே உண்டு பண்ணுகிறது.

சமீபத்தில் அங்கிருந்து அனுப்பிய அனைத்து எஸ்எம்எஸ்களும் இந்துத்வா வாதிகளுடையது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் கொடுத்த செய்தியை பார்க்கவில்லையா?

//Please face the facts & do not rub salt into the wounds of the hindus.//

வெள்ளைக்காரன் முஸ்லிம்களை அரசு உத்தியோகம் கொடுத்து சிறப்பாகவே வைத்திருந்தான். எங்களின் முன்னோர்களுக்கு தேசபக்தி முற்றிபோய் அரசு வேலைகளை உதறினார்கள். ஆங்கில மொழியை வெறுத்தார்கள். அதன் பலனை இன்று வரை அனுபவித்து வருகிறோம். நாங்களும் பிராமணர்களைப் போல வெள்ளையனுக்கு சேவகம் செய்திருந்தால் இன்று பிராமணர்களை விட முன்னேறிய சமூகமாக முஸ்லிம்கள் இருந்திருப்பர்.

So please face the fact & do not rub salt and chilly in the wounds of the Muslims..

 


No comments: