Followers

Thursday, April 19, 2018

35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை;


35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை; 


உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் போலீஸ் பாலியல் பலாத்கார புகார் தொடர்பாக தந்தை மற்றும் அவரது 2 நண்பர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

35 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை அவரது 2 நண்பர்களையும் அழைத்த அதிர்ச்சிச் சம்பவம் உ.பி.மாநிலம் சீதாப்பூரில் நடந்துள்ளது.

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மார்தண்ட் பிரகாஷ், ஏப்ரல் 15-ம் தேதி தன்னை பலாத்காரம் செய்ததாக மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தந்தை, அவரது நண்பர்கள் இருவர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், தந்தை மற்றும் இன்னொரு நண்பர் தலைமறைவாகியுள்ளனர், அவர்களை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணுக்கு 20 ஆண்டுகள் முன்னால் திருமணம் நடந்துள்ளது, ஒரு மகனும் உள்ளார். கணவரைப் பிரிந்து வாழும் இந்தப் பெண் தந்தையுடன் வசித்து வந்தார்” என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 15-ம் தேதி கமால்பூரில் உள்ள நிகழ்ச்சிக்கு மகளை, தந்தை அழைத்துச் சென்றுள்ளார். கமால்பூர் லக்னோவிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது, அங்கு தந்தை தன் நண்பர் மான்சிங் என்பவரை தங்களுடன் இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஏற்கெனவே குற்றங்கள் இழைத்ததாக தந்தை மீதும் இந்த மான்சிங் மீதும் வழக்குகள் இருந்திருக்கின்றன.

அன்றைய தினம் மான்சிங்கும், தந்தையும் பெண்ணை வண்டியில் அருகில் இருக்கும் நண்பர் மீரஜ் வீட்டுக்குச் செல்ல அழைத்துள்ளனர். அங்கு மகளென்றும் பாராமல் அறை ஒன்றில் 18 மணி நேரம் அடைத்து வைத்து மூவரும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று காவலதிகாரி தெரிவித்தார்.

எப்படியோ அங்கிருந்து தப்பிய பெண் வீடு வந்து சேர்ந்துள்ளார். தன் தாயிடம் நடந்தது குறித்து கதறி அழுத பெண் பிறகு புகார் அளித்துள்ளார்.

ஏற்கெனவே கிராமப் பஞ்சாயத்தாரிட கள்ள உறவுக்காகச் சிக்கிய தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-04-2018


No comments: