Followers

Monday, April 30, 2018

யோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்!


யோகி ஆதித்யநாத் உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்!

'யோகி ஆதித்யநாத்! நீயும் உனது வசம் உள்ள காவல் துறையும் சிறுமியை பலாத்காரம் செய்தவர்களை பாதுகாக்கிறது. அந்த சிறுமியின் தந்தையை காவல்துறை அடித்து துன்புறுத்துகிறது. இதனை கண்டு கொள்ளாத உன்னை தாயாகிய நான் சபிக்கிறேன். உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.

எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்.அவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்வு முறையை கற்றுக் கொடுத்துள்ளேன். சகோதரியை தாயை அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை எத்தனை மரியாதையோடு பார்க்க வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக் கொடுத்துள்ளேன். உனது கூட்டத்தினரைப் போல அவன் பலாத்காரத்தில் இறங்கியிருந்தால் அந்த நிமிடமே அவனை வெட்டி போட்டிருப்பேன்.

உனக்கும் மோடிக்கும் திருமணம் என்ற பந்தத்தை இறைவன் ஏற்படுத்தவில்லை. உங்கள் இருவருக்கும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர்களையும் காப்பாற்ற வக்கில்லாமல் பதவியை காப்பாற்றிக் கொள்ள குற்றவாளிகளை தப்ப விட்டிருப்பீர்கள்.

யோகி ஆதித்யநாத்! உனது முகத்தில் காறி உமிழ்கிறேன்.



No comments: