உலக மக்கள் அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள்...
ஒன்றே குலம் ஒருவனே தேவன் - யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவு இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.
கருப்பன், வெள்ளையன், அரபியன் ஆசியன், ஐரோப்பியன், என்று உலகின் எந்த மூலையிலும் இன்று ஒலிக்கும் ஒரே குரல் 'அல்லாஹூ அக்பர்' 'இறைவன் பெரியவன்'. ஆம் நம்மை படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவன் கொடுத்த பல கட்டளைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பை நோற்க இஸ்லாமியர்கள் தயாராகிவிட்டனர்.
கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே பாலஸ்தீன காஸா மக்களும் ரமலானை வரவேற்க தயாராகி விட்டனர். இந்த வருடமாவது அவர்களின் துயர் நிரந்தரமாக நீங்கி அமைதியான வாழ்வை எதிர்கொள்வார்களாக....
No comments:
Post a Comment