Followers

Wednesday, February 18, 2026

ஜக்கி வாசுதேவின் பல தில்லுமுல்லுகளை துகிலுரிக்கிறார் ஆன்மீகவாதியான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


 



ஜக்கி வாசுதேவின் பல தில்லுமுல்லுகளை துகிலுரிக்கிறார் ஆன்மீகவாதியான அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 

ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் உள்ள பேராசிரியரின் 2 மகள்களுக்கு “மன நல சோதனை” நடத்தி அறிக்கை தர தமிழ்நாடு அரசு மன நல இயக்குனரகம் உத்தரவு.

கோயமுத்தூரைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜர். இவர் வேளாண் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவரது இரண்டு மகள்களை ஜக்கி வாசுதேவ் கட்டாயமாகத் தமது சீடர்களாக்கி அவர்களை மன வசியம் செய்து பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் புகார், வழக்குகள் எனத் தொடர்ந்து போராடி வருகிறார் காமராஜ்.

இந்திலையில் இவரது மகள்கள் மன வசியம் – ஹிப்நாடிசம் – செய்யப்பட்டு சுய தன்மை இழந்து ஜக்கியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உள்ளதாகவும் அதை அறிவியல் மருத்துவப் பரிசோதனை நடத்தி உறுதி செய்து அவர்களை மீட்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் மன நல இயக்குநரகத்தில் The Tamil Nadu State Mental Health Authority (TNSMHA), அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

தொடர்புடைய இருவரையும் கோயமுத்தூர் மையத்தில் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய The Tamil Nadu State Mental Health Authority (TNSMHA) பணித்துள்ளது.

இதுகுறித்து கோயமுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு. காமராஜ், கருவூரார் அறக்கட்டளை நிறுவனர் சத்தியபாமா, புதிய தலைமுறை கட்சி நிறுவனர் கோபால கிருஷ்ணன், தமிழர் முன்னணி நிறுவனர் இமயம் சரவணன் ஆகியோர் இத்தகவலைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய திரு.காமராஜ், ஜக்கி வாசுதேவ் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அமெரிக்காவைச் சேர்ந்த நீதா எனும் பெண் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர் மீது ஜக்கி தொடுத்த அவதூறு வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.எனவே அந்த வழக்கில் அவர் தண்டிக்கப்பட வாய்ப்பு உண்டு.

அதே போல இங்கும் பல வழக்குகளில் ஜக்கி சிக்குவார். அதன் ஒரு படியாக தம் இரண்டு மகள்களைப் போலவே பல இளையோர்களை சட்டவிரோத ஹிப்நாடிசம் அல்லது போதை உள்ளிட்ட வசியம் செய்து மயக்கி வைத்த குற்றத்திலும் அவர் உறுதியாகப் பிடிபடுவார் என்றார்.

அடுத்துப் பேசிய சத்தியபாமா, சட்டவிரோதமாகவும், ஆன்மீகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாதும் வணிக ரீதியாக மதவாதத்தை பயன்படுத்தி வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோக மையம் அரசுடைமையாக்கப்பட வேண்டும், அங்கு மனவசியம் செய்து மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ள சன்னியாசி இளையோர்களை மீட்க வேண்டும். அவர்களுக்கு முறையாக மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய தமிழர் முன்னணி இமயம் சரவணன், அமெரிக்காவில் எப்ஸ்டீன் என்பவர் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியது போல ஜக்கி வாசுதேவன் செய்திருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அந்தக் குழந்தைகளை – இளையவர்களை எல்லாம் மீட்டு மனநல சிகிச்சை அளிக்க வேண்டும், ஜக்கி வாசுதேவ் நடத்தும் தகன எரி மேடைகளை தடை செய்ய வேண்டும் என்றும் கூறினார். தனி ஒரு மனிதர் இயற்கையாக இறந்தாலே தகனம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் தேவைப்படும் நிலையில் யாருடைய அனுமதியின் பேரில் ஈஷா யோக மையத்திற்குள் உடல்கள் எரிக்கப்படுகின்றன என்பது குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் இமயம் சரவணன் கேட்டுக் கொண்டார். தமது மகளை சொகுசாக வாழவிட்டு ஊரார் மகன் – மகள்களை மொட்டையடித்து சன்னியாசிகளாக்கி தமிழர் இனவழிப்பு செய்து உலகத்தை ஏமாற்றி வருகிறார் ஜக்கி என்றும் சரவணன் குற்றம் சாட்டினார்.

 

No comments: