Followers

Wednesday, November 11, 2020

உவைஸியின் அரசியல் நிலைப்பாடு பற்றி!

 

உவைஸியின் அரசியல் நிலைப்பாடு பற்றி!

 

சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து அரசியல் கட்சிகளால் முஸ்லிம்கள் ஏதேனும் பலன் அடைந்துள்ளார்களா? கேரளாவில் சாத்தியப்படுகிறது. காரணம் அங்கு இயற்கையாகவே அமைந்த தொகுதிகள் முஸ்லிம் லீக் தனித்தே நின்று வரக் காரணமாயிருந்துள்ளன. ஆனால் இந்தியாவின் மற்ற பகுதிகள் அவ்வாறு துரதிஷ்டவசமாக அமையவில்லை. அனைத்து தொகுதிகளிலும் நாம் இந்துக்களை சார்ந்தே உள்ளோம். தமிழகத்தில் அரசியலில் தேர்தலில் நிற்கும் கட்சிகளான முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ ஆல் நாம் பெற்ற பலன் என்ன? ஏதும் இல்லை. நமது குடும்பத்தை நாம்தான் கஷ்டப்பட்டு முன்னேற்றுகிறோம். நாம் தான் கஷ்டப்பட்டு நமது பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். நாம் தான் கஷ்டப்பட்டு அவர்களுக்கு உள்ளூரிலோ அல்லது வளைகுடாவிலோ வேலைகளை வாங்கித் தருகிறோம். இதில் எங்குமே எந்த அரசியல் கட்சிகளும் தலையிடுவதில்லை. 

 

நமது இந்தியாவில் நாம் சிறுபான்மை சமூகமாக உள்ளோம். பெரும்பான்மை மக்களான இந்துக்கள் இந்துத்வாவை ஆதரிக்கவில்லை. மோடியையும் அமித்ஷாவையும் ஆதரிப்பவர்கள் 25 சதம் கூட தேர மாட்டார்கள். ஆனால் ஊடகங்களால் அவர்களுக்கு பெரும் ஆதரவு இருப்பது போல் கட்டமைக்கப்படுகிறது. இந்துத்வா வளர்ந்தால் அதனால் பாதிக்கப்படப் போவது அதிகம் இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களே. எனவே இந்துக்கள் மோடியையும் அமித்ஷாவையும் சற்று தூரத்திலேயே வைத்துள்ளார்கள். நமது முதல் வேலை என்பது இந்துத்வா பேசித்திரியும் மூடர்களை இந்துக்களிடமிருந்து அந்நியப்படுத்த வேண்டும். அவர்கள் அரசியல் அதிகாரம் பெற்று விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து மோடியை வீழ்த்த வியூகம் அமைக்க வேண்டும். மோடியையும் அமித்ஷாவையும் வீழ்த்தி விட்டு அதன் பிறகு உவைஷி தனது கட்சியை பலப்படுத்திக் கொள்ளட்டும்.

 

இப்போது பீகாரில் ஐந்து சீட்டை பெற்றுள்ளார்.  5 சீட் கிடைத்த நப்பாசையில் மேற்கு வங்கம், உபியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பீகாரில் நடந்தது போலவே இரண்டு மூன்று சீட்டுக்களை பெற்று மோடி ஆட்சிக் கட்டிலில் அமர இவரே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பார். 250, 300 எம்எல்ஏக்கள் உள்ள இடத்தில் உவைஷின் இரண்டு மூன்று எம்எல்ஏக்களால் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது. காங்கிரஸ் நமக்கு பல துரோகங்களை செய்துள்ளதை மறுப்பதற்கில்லை. ஆனால் சிஏஏ, என்ஆர்சி போன்ற திட்டங்களை கொண்டுவரத் துடிக்கும் பிஜேபியை விட குறைந்த ஆபத்தானவர்கள் காங்கிரஸார். உங்களின் வாக்குரிமைக்கும், உங்களின் சொத்துக்களுக்குமே ஆபத்தை கொண்டு வரத் துடிக்கின்றனர் பிஜேபியினர். இந்த நேரத்தில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் முஸ்லிம்கள்.

 

மோடி அமித்ஷாக்கள் முஸ்லிம்களைப் பார்த்து ஏன் இந்த அளவு பயம் கொள்ள வேண்டும். காரணம் வர்ணாசிர கொடுமையிலிருந்து விடுபட இஸ்லாமே தீர்வு என்ற வகையில் இந்தியாவெங்கும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் வரைதான் வர்ணாசிரமம் இம்மண்ணில் இருக்கும். முஸலிம்கள் பெரும்பான்மையாகி விட்டால் பார்பனர்கள் தங்களின் உரிமைகளை இழப்பர். ஆண்டாண்டு காலமாக இந்துக்களை சுரண்டி வாழ்ந்த வாழ்வு காணாமல் போகும். அது நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் தேர்தலில் பல தில்லு முல்லுகளை செய்து இன்று வரை வென்று வருகிறார்கள்.  இஸ்லாமியர்களுக்கு பல இன்னல்களையும் கொடுத்து வருகின்றனர்.

 

நாம் ஒரேயடியாக உவைஸியின் பக்கம் சாய்ந்தால் இந்துக்களில் பெரும்பாலானோர் மோடியின் பக்கம் சாயும் ஆபத்தும் உள்ளது. எனவெ முஸ்லிம்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட வேண்டிய காலமிது. மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து பிஜேபியை வீழ்த்துவதுதான் நமது ஒற்றைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். அது அல்லாமல் உவைஸி ஒரு பக்கம், எஸ்டிபிஐ ஒரு பக்கம், முஸ்லிம் லீக் ஒரு பக்கம், தமுமுக ஒரு பக்கம் நின்று வாக்குகளைப் பிரித்தால் நமது சந்ததிகளுக்கு நாம் செய்யும் பெருந் துரோகமாக அமையும். சில நாட்களில் வாக்குரிமையும் போகும், சொத்துக்களும் வாங்க முடியாமல் அமித்ஷா அமைக்கப் போகும் கேம்ப்களில் காலம் தள்ள வேண்டி வரும். அப்படி ஒரு சூழலை இங்கு ஏற்படுத்தாமல் இறைவன் காப்பானாக!




 

 

 

 

 

 

 

1 comment:

Dr.Anburaj said...

அரசியலில் முஸ்லீம்கள் முஸ்லீம்களைத்தான் ஆதரிப்போம் என்று முடிவு செய்து மேற்படி நபரை 5 இடங்களில்வெற்றி பெற வைத்துள்ளாா்கள்.பச்சை மதவெறி.ஓவைசிக்கும் பிகாருக்கும் என்ன சம்பந்தம் ? எதாவது நனமை பெற்று கொடுத்தானா ? முஸ்லீம்களுக்கு தோ்தலுக்கு முன்பு வரை அவன் செய்தது என்ன நன்மை ?

முஸ்லீம்களுக்கு வழக்கம் போல் அனைத்து கட்சிகளும் ஜால்ரா அடித்து வெண்சாமரம் வீசி செய்த பல நன்மைகளை பட்டியல் போட்டு ஒட்டு கேட்டார்கள். முஸ்லீம்கள் பிற கட்சிக்காரன் வாயில் மண்ணை அள்ளி போட்டு விட்டு மதவெறி காரணமாக ஒவைசிக்கு ஒட்டு போட்டுள்ளார்கள். ஒரு முஸ்லீம் மற்றொரு முஸ்லீமின் சகோதரன்தான்.மற்றவர்கள் காபீர்கள் இதுதான் இசுலாம். இதுதான் முஸ்லீம்களின் நிஜ உருவம்.