Followers

Saturday, November 07, 2020

அரபில மட்டுந்தான் பெயர் இருக்கா???




 இஸ்லாம் மார்க்கமானது அரபு மொழி தெரிந்தவர்களுக்கானது என்ற தவறான புரிதல் பலருக்கு உள்ளது. இந்த மார்க்கமானது அகில உலக அனைத்து மக்களுக்கும் சொந்தமானது. எனவே தான் இறைவனின் திருநாமங்களை இறைவனின் பண்புகளை இந்த சகோதரி மிக அழகிய முறையில் விளக்குகிறார். நீங்களும் கேளுங்கள்.


-------------------------------------------------------------


//முனுசாமி மாடசாமியெல்லாம் லிஸ்ட்ல இல்லீங்களா???


அரபில மட்டுந்தான் பெயர் இருக்கா???// Ram Nivas

நமது இந்து நண்பர்கள் 'அல்லாஹ்' என்ற பெயர் அரபுகளுக்கு மட்டும் சொந்தமானது என்ற எண்ணத்தில் உள்ளனர். முஹமது நபி அரபியராக இருந்ததால் 'அல்லாஹ்' என்ற பெயர் முஸ்லிம்களிடத்தில் அதிகம் புழக்கத்தில் உள்ள பெயராக இருக்கிறது. அதனையே இறைவன் என்றோ கடவுள் என்றோ நாம் கூறினாலும் அகிலம் அனைத்தையும் பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனையே குறிக்கும். குர்ஆன் கூறும் அதே இறைவனை குறிப்பதாகவே இருக்கும். முகமது நபி தமிழராக பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறங்கியிருக்கும். எனவே இங்கு மொழிக்கு முக்கியத்துவம் இல்லை. அது கொடுக்கும் பொருளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

'இறைவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்.'
-குர்ஆன் 7:180

'அல்லாஹ் என்று அழையுங்கள். ரஹ்மான் என்று அழையுங்கள். நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.' என்று முஹம்மதே! கூறுவீராக!'
-குர்ஆன் 17:110

'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம 1:164:46


இறைவன் எத்தகைய ஆற்றலுடையவன் அவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை அந்த தன்மைகளை குர்ஆன் ஆங்காங்கே எடுத்துச் சொல்கிறது. அது போன்ற இறைவனின் ஆற்றல் 99 இடங்களில் குர்ஆனில் வருகிறது. அந்த பட்டியலை நாம் கீழே பார்போம்.

01 யா ஸபூர்--பொறுமையாளனே.............
02 யா ரஹ்மான் _அளவற்ற அருளாளனே.......
03 யா ரஹீம்-நிகரற்ற அன்புடையோனே........
04 யா மலிக் – மன்னன் ஆனவனே............
05 யா குத்தூஸ் - பரிசுத்தமானவனே...........
06 யா ஸலாம் – சாந்தி அளிப்பவனே........
07 யா முஃமின் – அபயம் அளிப்பவனே.........
08 யா முஹைமினு – பாதுகாவலனே..............
09 யா அஜீஸ் – யாவற்றையும் மிகைத்தவனே.........
10 யா ஜப்பார் – அதிகாரம் மிக்கவனே.......
11 யா முத்தகப்பிர் - பெருமையுள்ளவனே..........
12 யா காலிக் – சிருஷ்டியாளனே..............
13 யா Bபாரிவு – ஆத்மாவை அமைப்போனே...............
14 யா முஸவ்விரு – உருவமைப்பவனே........
15 யா Gகஃப்பார் – பிழை பொறுப்பவனே.....
16 யா கஹ்ஹார் – அடக்கி ஆள்பவனே..........
17 யா வஹ்ஹாப் - பெருங்கொடையாளனே..........
18 யா ரஜ்ஜாக் – ரிஜ்க் அளிப்பவனே.......
19 யா ஃபத்தாஹ் – வெற்றி அளிப்பவனே...........
20 யா அளீம் – யாவும் அறிந்தவனே...........
21 யா காபிள் – கைவசப்படுத்துபவனே................
22 யா பாஸித் – தாராளமாக கொடுப்பவனே................
23 யா ஹாfபிள் – தாழச் செய்பவனே...................
24 யா ராஃபிஉ – உயர்த்துபவனே.................
25 யா முஇஸ்ஸு – மேன்மையடைய செய்பவனே...............
26 யா முதில்லு – இழிவடைய செய்பவனே.............
27 யா ஸமீஉ – யாவையும் கேட்பவனே................
28 யா பஸீர் – யாவையும் பார்ப்பவனே......................
29 யா ஹகம் – தீர்ப்பு செய்வோனே................
30 யா அத்ல் – நீதி செய்வோனே.............
31 யா லத்தீப் - இரக்கமுடையோனே............
32 யா ஃகபீர் – யாவற்றையும் உணர்ந்தவனே...............
33 யா ஹலீம் - அமைதியானவனே.................
34 யா அழீம் – மகத்துவமுள்ளவனே...............
35 யா Gகஃபூர் – பாவம் தீர்ப்பவனே...............
36 யா ஷக்கூர் – நன்றி பாராட்டுபவனே..............
37 யா அலிய்யு – உன்னதமானவனே...............
38 யா கபீர் – பெரியவனே...............
39 யா ஹfஈலு - பேணிக்காப்பவனே..............
40 யா முகீத்து – பழிப்போனே.................
41 யா ஹஸீபு – கணக்கு கேட்பவன்..................
42 யா ஜலீல் – மாண்பு மிக்கவனே...................
43 யா கரீம் – கொடை கொடுப்பவனே...................
44 யா ரக்கீப் – கண்காணிப்பவனே.................
45 யா முஜீப் – முறையீட்டை ஏற்பவனே......................
46 யா வாஸிவு – எங்கும் நிலவுபவனே...............
47 யா ஹக்கீம் - நுண்ணறிவுடையோனே................
48 யா வதூத் – உள்ளன்பு மிக்கவனே................
49 யா மஜீத் – தலைமை தாங்குபவனே..................
50 யா பாஇத் – தட்டி எழுப்புபவனே....................
51 யா ஷஹீத் - சாட்சியுடையோனே...............
52 யா ஹக் – சத்தியமானவனே..........................
53 யா வக்கீல் – பொறுப்பு ஏற்பவனே...................
54 யா கவிய்யு – வல்லமை மிக்கவனே...............
55 யா மத்தீன் – உறுதியானவனே...............
56 யா வலிய்யு – கிருபை செய்பவனே.................
57 யா ஹமீத் – புகழுக்கு உரியவனே...............
58 யா முஹ்ஸி – தீர்க்கமாய் தெரிந்தவனே.....................
59 யா முப்திவு – ஆதியில் அறிந்தவனே................
60 யா முஈத் – இறுதியில் மீட்டுக் கொள்பவனே..................
61 யா முஹ்யி - உயிர்ப்பிப்பவனே......................
62 யா முமீத் – மரணிக்கச் செய்வோனே..............
63 யா ஹய்யு – நித்திய ஜீவியானவனே................
64 யா கையூம் – என்றும் நிலைத்தவனே................
65 யா வாஜித் - கண்டுபிடிப்பவனே.................
66 யா மாஜித் – தலைமை வகிப்பவனே...............
67 யா வாஹித் - தனித்தவனே......................
68 யா அஹத் – ஒருமைக்குரியவனே.....................
69 யா ஸமத் - தேவைகளற்றவனே.................
70 யா காதிர் – ஆற்றல் உள்ளவனே........................
71 யா முக்ததிர் – ஆற்றல் பெறச் செய்பவனே.....................
72 யா முகத்திமு – முன்னேற செய்பவனே.....................
73 யா முஅக்கிர் – பின் தங்கச் செய்பவனே.........................
74 யா அவ்வல் – ஆரம்பமானவனே..................
75 யா ஆகிர் – இறுதியானவனே.......................
76 யா ழாஹிர் – ஆரம்பமானவனே..................
77 யா பாத்தின் - முடிவற்றவனே............
78 யா வாலிய் – அதிகாரப் பொறுப்புள்ளவனே................
79 யா முத்தஆலி – உயர் பதவியுள்ளவனே.................
80 யா பர்ரு – நன்றியளிப்பவனே.............
81 யா தவ்வாப் – பச்சாதாபிகளை மீட்பவனே.................
82 யா முன்தகிம் – பழிவாங்குபவனே...............
83 யா அஃபுவ்வு - சகிப்பவனே..............
84 யா ரவூஃபு – இரக்க சிந்தையுள்ளவனே..............
85 யா மாலிக்கில் முல்க் – அரசாட்சிக்கு உரியவனே................
86 துல்ஜலாலி வல் இக்ராம் – புகழ்,சிறப்பு உள்ளவனே...............
87 யா முக்ஸித் – நியாயம் செய்பவனே................
88 யா ஜாமிஉ – சகலமும் பொதிந்தவனே........................
89 யா Gகனிய்யு - தேவைகளற்றவனே................
90 யா முஃனிய் – தேவையற்றவனாக ஆக்குவோனே...................
91 யா மானிஉ – துன்பம் தடுப்பவனே...............
92 யா ளார்ரு – துன்பம் அடைய செய்பவனே.................
93 யா நாஃபிஉ - பயனளிப்பவனே....................
94 யா நூரு – ஒளி மயமானவனே.................
95 யா ஹாதீ – நேர்வழி செலுத்துபவனே.............
96 யா பதீஉ – புதுமை செய்வோனே................
97 யா பாக்கீ – நிலையாக இருப்பவனே.............
98 யா வாரிஸ் – உரிமையாளனே.....................
99 யா ரஷீத் – நேர்வழிலிருப்பவனே............ ...

ஏக இறைவனின் இந்த தன்மைகளை தவறாக புரிந்து கொண்ட நமது இந்து மக்கள் ஒவ்வொரு தன்மையையும் ஒரு கடவுளாக மாற்றி விட்டனர். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற அந்த ஏக இறைவனின் தன்மைக்கு பல உருவங்களை கொடுத்து தனி கடவுள்களாகவே ஆக்கி விட்டனர். அந்த கடவுள்களை வணங்கியவர்களையும் தனித் தனி சாதிகளாகவும் பிரித்து விட்டனர். ஆனால் பழந்தமிழர்களில் பலர் ஏக இறைவனின் அந்த தன்மைகளை விளங்கியே வைத்திருந்தனர். அவற்றையும் நாம் கீழே பார்போம். குர்ஆன் கூறக் கூடிய இறைவனின் தன்மைகளை நமது தமிழ் நூல்களும் பட்டியலிடுவதை இனி காண்போம்.

"என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி" !!!

ஓம் அப்பா போற்றி
ஓம் அரனே போற்றி
ஓம் அரசே போற்றி
ஓம் அமுதே போற்றி
ஓம் அழகே போற்றி
ஓம் அத்தா போற்றி
ஓம் அற்புதா போற்றி
ஓம் அறிவா போற்றி
ஓம் அம்பலா போற்றி
ஓம் அரியோய் போற்றி

ஓம் அருந்தவா போற்றி
ஓம் அணுவே போற்றி
ஓம் அண்டா போற்றி
ஓம் ஆதியே போற்றி
ஓம் ஆறங்கா போற்றி
ஓம் ஆரமுதே போற்றி
ஓம் ஆரணா போற்றி
ஓம் ஆண்டவா போற்றி
ஓம் ஆலவாயா போற்றி
ஓம் ஆரூரா போற்றி

ஓம் இறைவா போற்றி
ஓம் இடபா போற்றி
ஓம் இன்பா போற்றி
ஓம் ஈசா போற்றி
ஓம் உடையாப் போற்றி
ஓம் உணர்வே போற்றி
ஓம் உயிரே போற்றி
ஓம் ஊழியே போற்றி
ஓம் எண்ணே போற்றி
ஓம் எழுத்தே போற்றி

ஓம் எண்குணா போற்றி
ஓம் எழிலா போற்றி
ஓம் எளியா போற்றி
ஓம் ஏகா போற்றி
ஓம் ஏழிசையே போற்றி
ஓம் ஏறூர்ந்தா போற்றி
ஓம் ஐயா போற்றி
ஓம் ஒருவா போற்றி
ஓம் ஒப்பிலா போற்றி
ஓம் ஒளியே போற்றி

ஓம் ஒலியே போற்றி
ஓம் ஓங்காரா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிரே போற்றி
ஓம் கதியே போற்றி
ஓம் கனியே போற்றி
ஓம் கலையே போற்றி
ஓம் காருண்யா போற்றி
ஓம் குறியே போற்றி
ஓம் குருவே போற்றி

ஓம் குணமே போற்றி
ஓம் கூத்தா போற்றி
ஓம் சடையா போற்றி
ஓம் சங்கரா போற்றி
ஓம் சதுரா போற்றி
ஓம் சதாசிவா போற்றி
ஓம் சிவமே போற்றி
ஓம் சிறமே போற்றி
ஓம் சித்தா போற்றி
ஓம் சீரா போற்றி

ஓம் சுடரே போற்றி
ஓம் சுந்தரா போற்றி
ஓம் செல்வா போற்றி
ஓம் செங்கணா போற்றி
ஓம் செம்பொனா போற்றி
ஓம் சொல்லே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் தமிழே போற்றி
ஓம் தத்துவா போற்றி
ஓம் தலைவா போற்றி

ஓம் தந்தையே போற்றி
ஓம் தாயுமானாய் போற்றி
ஓம் தாண்டவா போற்றி
ஓம் திங்களே போற்றி
ஓம் திசையே போற்றி
ஓம் திரிசூலா போற்றி
ஓம் துணையே போற்றி
ஓம் தெளிவே போற்றி
ஓம் தேவதேவே போற்றி
ஓம் தோழா போற்றி

ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நண்பா போற்றி
ஓம் நஞ்சுண்டா போற்றி
ஓம் நான்மறையா போற்றி
ஓம் நிறைவே போற்றி
ஓம் நினைவே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி
ஓம் நெறியே போற்றி
ஓம் பண்ணே போற்றி
ஓம் பித்தா போற்றி

ஓம் புனிதா போற்றி
ஓம் புராணா போற்றி
ஓம் பெரியோய் போற்றி
ஓம் பொருளே போற்றி
ஓம் பொங்கரவா போற்றி
ஓம் மணியே போற்றி
ஓம் மதிசூடியே போற்றி
ஓம் மருந்தே போற்றி
ஓம் மலையே போற்றி
ஓம் மஞ்சா போற்றி

ஓம் மணாளா போற்றி
ஓம் மெய்யே போற்றி
ஓம் முகிலே போற்றி
ஓம் முத்தா போற்றி
ஓம் முதல்வா போற்றி
ஓம் வாழ்வே போற்றி
ஓம் வைப்பே போற்றி
ஓம் நீலகண்டா போற்றி


'ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்'
-ரிக்வேதம 1:164:46


No comments: