Followers

Sunday, November 29, 2020

பூர்வகுடி இந்தியர்களே.. சிந்தியுங்கள்.. (படித்ததில் பிடித்தது)


 


பூர்வகுடி இந்தியர்களே.. சிந்தியுங்கள்.. (படித்ததில் பிடித்தது)


இன்னும் எத்தனை ஆண்டுகள் பிராமணர்களை குறை  சொல்லியே வாழப் போகிறோம்?


நாட்டில்  வெறும் மூன்றுசதவீதமே உள்ள பிராமணர்களையும்  ஏன் எதிர்க்க வேண்டும்?


உண்மையில் தவறு யார் மீது?


கேட்டால் பிரித்தாலும் சூழ்ச்சி , மந்திரம், தந்திரம் என்று சொல்லுகிறோம், 


எந்த பிராமணர்கள் கூட்டமாவது 1000 ரூபாய் கிடையாது ஒரு நூறு ரூபாய் டிக்கெட் எடுத்து எந்த சினிமா தியேட்டரிலாவது படம் பார்த்ததுண்டா  ? 


எந்த பிராமண கூட்டமாவது சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைத்து, அந்த நடிகரின் படங்களுக்கு பாலபிஷேகம், கட்அவுட், சுவர் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற கண்றாவிகளை செய்து தங்கள் சொந்த பணத்தை யாராவது செலவு செய்து பார்த்திருக்கிறோமா ?


எந்த பிராமண கூட்டமாவது அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், தெரு மின்விளகு, இலவச மனைப்பட்டா, இலவச வீடுகள் கேட்டு எந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்போ, வட்டாட்சியர் அலுவலகம் முன்போ போராடியதை பார்த்திருக்கிறோமா ?


எந்த பிராமண கூட்டமாவது சொந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒயின் ஷாப்பில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானம் குடித்து குடும்பத்தை நடுத்தெருவுக்கு வந்ததை பார்த்திருக்கிறோமா  ? 


எந்த பிராமண கூட்டமாவது அவர்களுக்கு சம்பந்தம்இல்லாத கட்சியிலாவது கூட்டாக சேர்ந்து மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம்,  பேரணி , சாலை மறியல், ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முற்றுகை, சிறை போன்றவற்றை சந்தித்ததை பார்த்திருக்கிறோமா  ?


எந்த பிராமண கூட்டமாவது, தேர்தல் நேரங்களில் எந்த கட்சியாவது ஓட்டுக்கு பணம் கொடுக்காதா என்று வீட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு, வீட்டு வாசலில் இரவு முழுவதும் கண் விழித்து காத்திருக்கும் அவலத்தை பார்த்திருக்கிறோமா ? 


எந்த பிராமண கூட்டமாவது அரசு அலுவலகங்களிளோ , தனியார் நிறுவனங்களிளோ கடை நிலை ஊழியர்களாக பணி செய்வதை பார்த்திருக்கிறோமா? 


எந்த பிராமண கூட்டமாவது,  உடலழைப்பு செய்தோ, விவசாயம் செய்தோ, சாக்கடை அள்ளும் வேலையிலோ, துப்புரவு பணிகளிளோ, இயற்க்கை பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளிளோ ஈடுபட்டதை பார்த்திருக்கிறோமா? 


எந்த பிராமண கூட்டமாவது சொந்த பணத்தை போட்டு கோயில் கட்டி, கூழ் ஊத்தி, முதுகில் அலுக்கு குத்தி தேர் இழுத்தோ, காவடி எடுத்தோ, வேலை தாடையில் மற்றும் உடல் முழுவதும் குத்திக்கொண்டோ, காலில் ஆணி செருப்பு போட்டுக்கொண்டோ, சாமி வந்து மிரண்டோ பார்த்திருக்கிறோமா, ?


இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், 


மேற்கண்ட எதுவுமே செய்யாத 3 சதவீத பிராமண மக்களுக்கு எல்லாம் எப்படி கிடைக்கிறது?


நாட்டில் 97 சதவீதம் BC மக்களான SC /ST,  MBC/OBC Religious minorities, போன்ற சாதியமுறையால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் ஏன் இன்னும் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்தும் அடிப்படை வசதிகளான குடிநீர், மருத்துவம், இலவச மனை பட்டா, தெருவிளக்கு, சாலைவசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலைந்து, திரிந்து காத்துக்கிடக்கிறோம், , 


உண்மையில் 3 சதவீத பிராமணர்கள் 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான SC /ST,  MBC/OBC மக்களை ஏமாற்றி அதிகாரத்தில் இருக்கிறார்களா? 


இல்ல 97 சதவீத நாட்டின் பெரும்பான்மை மக்களான நாம் வெறும் 3 சதவீத பிராமணர்களிடம் ஏமாந்து போகிறோமா? 


உண்மையில் பிராமணர்கள் நம்மை ஏமாற்றவில்லை, நாம்தான் கடந்த  மூவாயிரம் ஆண்டுகளாக பிராமணர்களிடம் ஏமாந்து நிற்கிறோம், 


காலணாவுக்கு பொறாத பூணூல் கும்பலுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்தையும் நாம் தான் அவர்களுக்கு கொடுக்கிறோம்..


கல்யாணம் தொடங்கி கருமாதி , நினைவு நாள் போன்ற வீட்டில் நடக்கும் அத்தனை சுக துக்க நிகழ்வுகளுக்கும் பிராமணர்களை வரவழைத்து வேட்டி, துண்டு உட்பட, பச்சரிசி, பழம், தேங்காய், நெய் போன்ற பொருட்களை கொடுத்து தட்சணையாக 2000, 3000 கொடுத்து போய்ட்டு வாங்க சாமி என்று அனுப்புவதும் நாம்தான், 


அரசியல் அதிகாரம்,நிர்வாக அதிகாரம், சினிமா, விளையாட்டு, பத்திரிக்கைகள், ஊடகங்கள் இவைகளில் கோலோச்சுவது பிராமணர்களே, ஆனால் இவை அனைத்திற்கும் பணத்தை மட்டுமே விரயம் செய்துகொண்டிருக்கும் கூட்டம் வேறு யாருமல்ல நாம்தான், 


சினிமா, ஊடகம், பத்திரிக்கைகள், விளையாட்டை நாம் புறக்கணித்து விட்டாலே 1, 1/2சதவீத பிராமண கூட்டம் துண்டை தலையில் போட்டுக்கொள்வார்கள், 


BC-(SC /ST, MBC/ OBC மத சிறுபான்மையினர்) மக்கள் தங்கள் புத்தியை தீட்டி அரசியல் ஆட்சி அதிகாரத்தை நாமே கைப்பற்ற வேண்டும்..


இதற்கு தடையாக இருக்கும் சாதிய, மத, இன, மொழி வாத பிரிவினைகளான பார்ப்பனிய  சனாதனத்தை (Brahminism) தூக்கி எறிந்துவிட்டு,


 சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற ஜனநாயக( Democracy) ஒற்றை முழக்கத்தோடு ஓரணியில் திரண்டு  விட்டால்..


மீதி 1,1/2 சதவீத பிராமண கூட்டம்  கைபர் போலன் கணவாய் வழியாக  இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் சாதிய ஏற்றத்தாழ்வு அடிமை முறைக்கு முடிவுகட்டமுடியும்..

     

இதையெல்லாம் விட்டுவிட்டு ..

 சுய சாதி பெருமை, மதவாத பிரச்சினைகள், நான் பெரியவன், நீ பெரியவன் என பார்ப்பனிய சாதிய அடிமை சிந்தனையோடு நமக்குள்ளே அரைவேட்காட்டுதனமாக சண்டை போட்டுக்கொண்டு , ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு செத்து போவோமானால்,  


அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் தற்போது 3 சதவீதமாக உள்ள பிராமணர்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள், 


ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில், ஏமாற்றும் கும்பல் இருந்து கொண்டே இருக்கும்..


 மாறுவது நாம்தானே தவிர, பிராமணர்கள் அல்ல, 


முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்வோம்,  "நம்முடைய அனைத்து துன்ப பூட்டுகளுக்கும் "ஆட்சி அதிகாரமே திற வு கோல்", 


ஆட்சியை மாற்றுவது நமது இலக்கல்ல..


ஆட்சியாளராக மாறுவதே நம்முடைய இலக்கு..

                                        எதிர்த்து அழித்து ஒழிக்க வேண்டியது பார்ப்பனர்களை( Brahmins) அல்ல..


பார்ப்பனியத்தை (Brahminism).  


பார்ப்பனிய கொள்கைகளான சாதி மதத்தை தாங்கி வாழும் பார்ப்பனிஸ்ட்களாகிய ( Brahminists) நம்மால் ஒரு போதும் அதைச்செய்ய முடியாது. 


நாம் பார்ப்பனிஸ்டில் இருந்து  ( brahminists) விடுபட வேண்டும்.


அப்போது தான் இந்தியாவும்..

இந்தியர்களும்..

உயர்வடைவார்கள்..👍💐

1 comment:

Dr.Anburaj said...

நல்ல பதிவு.படித்தேன் ரசித்தேன். உண்மைதான்.

பிறாமணர்களின் பண்பாடு தவம் அவர்களைக் காக்கின்றது.

1.நாட்டின் பெரும் பணக்காரா்கள் பட்டியலில் பிறாமணர்கள் இல்லை.
2. கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்குகளில் பிறாமணர்கள் பெயா்கள் ....இல்லை.விதிவிலக்காக ஏதும் இருக்கலாம்.
3.சாராயக்கடையில் தவம் இருபபவர்கள் பிறாமணர்கள் அல்லாத வகுப்பினா்தாம்.
4.அறுவாள் கத்தி வேல்கம்பு சகிதம் கண்டதைத்தின்று உணா்ச்சிகள் அடங்காத நிலையில் ஆத்திரமும் ஆவேசமும் கொண்டு அடாவடிகளில் ஈடுபட்டு தானும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் சிறைக் கூடங்களை நிரப்புவது BC/MBC/SC/ST தான்.

திராவிட ஆட்சியில் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட திருக்கோவில்கள் பலவற்றிற்கு பிறாமணர்கள் தாம் தங்களது சொந்த செலவில் பராமரித்து வருகின்றனா்கள்.அவர்கள் இல்லையெனில் திருக்கோவில்கள் நாசம் ஆகி விடும். ஆகவேதான் அரேபிய மத வெறியனான சுவனப்பிரியன் சதா பிறாமணர்களை ஏசி பதிவுகள் போடடு வருகின்றாா். பிறாமணர்களை அழித்து விட்டால் இந்து மதத்தை சுலபமாக அழித்து விடலாம் என்பது திராவிட சண்டாளர்கள் மற்றும் ஔரங்கசீப் தொண்டர்களின் கணக்கு.
- -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பிறமதத்தவர்களுக்கு முறையான சமய கல்வியை அளியுங்கள்.ஸ்ரீநாராயணகுரு அளித்தது போல். பிரச்சனை தானாக தீர்நது விடும். எதையும் யாரும் ஒழிக்கத்தேவையில்லை. ஸ்ரீநாராயணகுரு கிருஷ்ணா என்ற புலையனை அந்தணனாக -நமபுதிரியாக பரிணமிக்கவைத்து திருவல்லா சிவன் கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளது சாதனை எற்கனவே பதிவிடப்பட்டுள்ளது.முறையாக பாடம் படிக்க யாருக்கும் மனம் இல்லை.
--------------------------------------------------------------------------------------
காயல்பட்டனம் பஞ்சாயத்தில் துப்புறவு தொழில் செய்யும் முஸ்லீம்கள் எத்தனை போ்?

தமிழ்நாட்டில் துப்புறவு தொழில் செய்யும் முஸ்லீம்கள் எத்தனை போ் ?

முஸலீம்களின் ஜனத்தொகைக்கு பொருத்தமான எண்ணிக்கையில் இருக்கின்றதா ?

வயலில் களை பறிப்பவர்கள் நாற்று நடும் பெண்களில் ஆ்ண்களில் முஸ்லீம்கள் எத்தனை போ் ?
விவசாயக் கூலியாக பணியாற்றும் முஸ்லீம்கள் எத்தனை போ் கள் ?