இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - ஆறு
இஸ்லாத்தின் அய்ந்து முக்கிய கடமைகளில் ஒன்று தொழுகை. இதைப் பற்றி குர்ஆன் பின் வருமாறு கூறுகிறது :
'முகம்மதே! வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக!தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். இறைவனை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை இறைவன் அறிவான்.' - குர.ஆன் 29 : 45
தொழுகை மனிதர்களை தவறான வழியிலிருந்து மீட்கும் என்று இறைவன் கூறுகிறான். மனிதனை படைத்ததன் நோக்கமே இறைவனை வணங்குவதற்காக என்று வேறொரு இடத்தில் இறைவன் கூறுகிறான். இந்த தொழுகை விஷயத்தில் இஸ்லாம்,இந்து என்ற இந்த இரண்டு மதங்களுக்கிடையேயான ஒற்றுமைகளைப் பார்ப்போம்.
முஸ்லிம்களின் தொழுகையில் 'ஸூஜூது' என்ற நிலை உள்ளது. அதாவது மண்டியிட்டுதலையை பூமியில் வைக்கும் நிலை தொழுகையில் உண்டு. இந்த நிலையில் தன்னையே மனிதன் இறைவனிடம் அர்ப்பணிப்பதால் அந்த நேரத்தில் கேட்கப் படும் பிரார்த்தனைகளை இறைவன் உடன் அங்கீகரிக்கிறான் என்று முகமது நபியின் போதனை நமக்கு விளக்குகிறது. இந்த நிலையில்தான் பணக்காரனின் தலை ஏழையின் கால்களில் உரசும். இஸ்லாத்துக்கு வந்த ஒரு பிராமணின் தலை அவருக்கு முன் நிற்கும் இஸ்லாமான தலித்தின் கால்களில் உரசும். அதேபோல் வெள்ளையனின் தலையும் ஆப்ரிக்காவிலிருந்து வந்த கருப்பரின் கால்களில் உரசும். ஹஜ்ஜூக்கு வரும் ஒவ்வொரு நபரும் இதை கண் கூடாக பார்க்கலாம். சவூதி தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு நாளும் ஒளி பரப்புவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல வாழ்நாள் முழுவதும் இந்த பயிற்ச்சியை ஒவ்வொரு நாளும் அய்ந்து வேளை முஸ்லிம்கள் எடுக்கின்றனர். எனவே தான் முஸ்லிம்களிடத்தில் தீண்டாமை அறவே ஒழிக்கப் பட்டிருக்கிறது.
இதே நிலை இந்து மதத்திலும் உண்டு. இறைவனுக்கு செய்யப்படும் வணக்கம் இந்து மதத்தில் பல நிலைகளில் அனுஷ்டிக்கப் படுகிறது. அதில் ஒன்று 'சாஷ்டாங்கம்'. இந்த வார்த்தையை பிரித்து பொருள் பார்ப்போம். சாஸ்த் - அங்க் என்று பிரித்துபொருள் பார்த்தால் சாஸ்த் - எட்டு அங்க் - உடல் என்ற பொருளில் வரும். அதாவது உடலில் உள்ள நெற்றி, மூக்கு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால்,இரண்டு பாதம் ஆகிய எட்டு அவயங்களை பூமியில் படுமாறு இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குவதால் இதை சாஷடாங்கம் என்று கூறுகிறோம்.
இதே நிலையைத்தான் சற்று மாறுதலாக முஸ்லிம்கள் செய்யும் போதும் உடலின் எட்டு பாகங்கள் பூமியில் படும். வித்தியாசம் என்ன என்றால் முஸ்லிம்கள் ஒரே இறைவனை வணங்குகிறார்கள். இந்துக்கள் பல தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆனால் இந்து மதத்தில் பல தெய்வ வணக்கத்திற்கு உள்ள தடைகளையும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.
'எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.'
- பகவத் கீதை - அதிதியாயம் 7 - வசனம் 20
'நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது'
-ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 - 19
-யஜூர் வேதம் 32 - 3
'இயற்கையை வணங்குபவர் இருளில் நுழைந்து விட்டனர்'
-யஜீர் வேதம் 40 : 9
மேற்கண்ட வசனங்களின் மூலம் நம் விருப்பத்திற்கு கடவுள்களின் உருவங்களை உருவாக்கி வணங்குவது கூடாது என்று விளங்குகிறோம்.
ஜகாத் (ஏழை வரி)
இஸ்லாத்தின் மற்றொரு முக்கிய கடமைகளில் ஒன்று ஜகாத் என்பது. 'ஜகாத்' என்ற அரபிச் சொல்லுக்கு தூய்மைப் படுத்துதல், வளருதல் என்ற பொருள் வரும். மனிதன் தான் சம்பாதித்த பொருள்களை இறைவன் சொன்னான் என்பதற்காக குறிப்பிட்ட சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பது ஜகாத் எனப்படும்.இப்படி செல்வந்தன் கொடுப்பதால் அவனின் செல்வம் தூய்மையடைகிறது. இறைவன் அருளால் மேலும் மேலும் பெருகுகிறது. இந்த முறை மட்டும் இஸ்லாமியரிடத்தில் சரி வர செயல் பட்டால் ஏழைகளையே இல்லாத சமுதாயமாக முஸ்லிம் சமூகம் மாறி விடும். நானும் தர்மம் செய்கிறேன் பேர்வழி என்று 50 பைசா, ஒரு ரூபாய் சில்லரைகளை மாற்றி வைத்துக் கொண்டு தினமும் வீட்டுக்கு வரும் பிச்சைக் காரர்களுக்கு போடுவதல்ல இறைவன் சொல்லும் தர்மம்.இது பிச்சைக் காரர்களை மேலும் ஊக்கப் படுத்தும். சோம்பேறிகளை அதிகம் உருவாக்கும்.
ஊர் நாட்டாண்மை, அல்லது நேர்மையான ஊர் பெரியவர் ஒவ்வொரு செல்வந்தனிடமும் வருமானத்தைக் கணக்கிட்டு வசூலிக்க வேண்டும். பிறகு அவை குர்ஆனில் இறைவன் கூறும் எட்டு நபர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். தையல் மிஷின், கறவைமாடு, போன்றவை இலவசமாக வாங்கிக் கொடுத்தால் அடுத்த வருடம் அவன் தர்மம் கொடுக்க தயாராகி விடுவான். இது போன்ற அமைப்பு தமிழகத்தில் தற்போதுதான் தொடங்கப் பட்டிருக்கிறது. இது தொடர வேண்டும். இப்படி ஒரு அமைப்பு எதற்காக என்ற காரணத்தையும் குர்ஆன் சொல்கிறது.
'உங்களில் செல்வந்தர்களிடையே செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக இறைவன் இவ்வாறு பங்கிடுகிறான்.'
-குர்ஆன் 59 : 7
அனைவருக்கும் பொருளாதாரம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இறைவன் இத்தகைய ஏற்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறான்.
இதே கருத்தில் இந்து மத வேதங்களில் வரும் ஒரு சில வசனங்களைப் பார்ப்போம்.
'வறியவனைப் பார்த்து செல்வம் உள்ளவன் நிம்மதி அடைகிறான். இன்று பணம் உள்ளவன் நாளை ஏழையாகிறான். ஒரு வண்டியின் சக்கரம் சுழல்வது போல் இவர்களின் வாழ்க்கை சுழல்கிறது.'
-ரிக் வேதம் புத்தகம் 10 - துதிப் பாட்டு 117 - வசனம் 5
குர்ஆனின் கருத்தும் ரிக் வேதத்தின் கருத்தும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.
பகவத் கீதையிலும் பல இடங்களில் தர்மத்தைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. அவை
-பகவத் கீதை - அதிகாரம் 17 - வசனம் 20
-பகவத் கீதை - அதிகாரம் 16 - வசனம் 3
நோன்பு
இஸ்லாத்தின் அய்ந்து கடமைகளில் ஒன்றாக நோன்பும் வருகிறது. இதைப் பற்றி குர்ஆன் சொல்வதாவது :
'இந்த குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப் பட்டது. அது மனிதர்களுக்கு நேர் வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாக கூறும்.பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். இறைவன் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான்.' -குர்ஆன் 2 : 185
ஒரு மனிதன் தனது நாவின் ருசியை கட்டுப் படுத்த பழகிக் கொண்டால் மற்ற பல இச்சைகளை தனது கட்டுப் பாட்டில் கொண்டு வருவது மிக எளிதானது. எனவே தான் மனிதர்களுக்கு ஒரு ஆன்மீகப் பயிற்சியாகவும், ஏழைகளின் பசியை உணர்த்துவதற்காகவும் இறைவன் நோன்பை கடமையாக்கினான். சிகரெட், மது போன்ற பழக்கத்திற்கு அடிமையான ஒரு சில முஸ்லிம்கள் கூட இந்த மாதத்தில் அந்த தீய பழக்கங்களை விட்டு விடுவதை நாம் பார்க்கிறோம்.
இந்த நோன்பைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். இந்து மத்தில் பல வழிகளில் விரதம் அனுஷ்டிக்கப் படுகிறது.
-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 6 - வசனம் 24
-மனு ஸ்ருமிதி - அத்தியாயம் 11 - வசனம் 204
ஹஜ்
இஸ்லாத்தில் அய்ந்தாவது கட்டாய கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி உள்ளவர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ் புனிதப் பயணம் செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. வருடா வருடம் அமெரிக்கா,பிரிட்டன்,சைனா,அய்ரோப்பா,மலேசியா,இந்தியா,ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலிருந்து 2;5 மில்லியன் மக்கள் ஒரே இடத்தில் குழுமுகின்றனர். உடம்பின் மேலே ஒன்றும் கீழே ஒன்றும் இரண்டு துண்டுகள் மட்டுமே அதுவும் தைக்கப் படாததை உடுத்திக் கொள்ள வேண்டும். அது வெள்ளை நிறமாகவும் இருக்க வேண்டும். ஏழை, பணக்காரன்,வெள்ளையன்,கறுப்பன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் 'இறைவா! உன்னையே அடி பணிந்தோம்' என்று ஒரு மித்த குரலில் சொல்வது காண கண் கொள்ளாக் காட்சியாகும்.
இந்து மத்திலும் புண்ணியத் தலங்கள் என்று பலவும் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் 'லாஸ்பாட்' என்று சொல்லப் படும் ஒரு புண்ணியத் தலத்தைப் பற்றி சிறிது பார்ப்போம்.
'லாஸ்பாட்' இந்த புண்ணிய தலம் நபா பிரிதிவியில் அமைந்திருக்கும்'
-ரிக் வேதம் -புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 4
லாஸ்பாட் என்ற சமஸ்கிரத வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இறைவனின் இடம் அல்லது இறைவனின் இல்லம் என்ற பொருள் வரும். பிரதிவி என்பதன் பொருள் பூமி. நபா என்பதன் பொருள் நடு மையம். இவை அனைத்தையும் ஒன்று சேருங்கள். 'பூமியின் மையத்தில் அமைந்த இறைவனின் இடம்' என்ற பொருள் வரும். பூமியின் மையத்தில் அமைந்துள்ளது கஅபா என்பது நமக்கு முன்பே தெரியும். எனவே மேலே உள்ள வரிகள் மக்காவில் உள்ள கஅபாவையே குறிக்கிறது.
'அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும் பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்கு அமைக்கப் பட்ட முதல் ஆலயம் பக்கா எனும் மக்காவில் உள்ளதாகும்.' - குர்ஆன் 3 : 96
'லாஸ்பாட்' என்ற வார்த்தை ரிக் வேதத்தில் மற்றோர் இடத்திலும் வருகிறது.
-ரிக் வேதம் - புத்தகம் 1 - துதிப்பாட்டு 128 - வசனம் 1
அடுத்து ரிக் வேதம் புத்தகம் 3 - துதிப்பாட்டு 29 - வசனம் 11 ல் நரசன்ஸா என்ற நபரைப் பற்றி சொல்லப்படுகிறது. நரசன்ஸா என்பது முகமது நபி என்று முன்பே பார்த்தோம்.இதற்கு முன்னால் அதே ரிக் வேதத்தில் லாஸ்பாட்டைப் பற்றியும் குறிப்பிடப் படுகிறது. எனவே லாஸ்பாட் என்பது மக்காவில் உள்ள கஅபா என்பது மேலும் உறுதியாகிறது.
மேலும் பல அரிய தகவல்களை அடுத்த பதிவுகளில் பார்ப்போம் இறைவன் நாடினால்.
இறைவனே மிக அறிந்தவன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Sunday, July 02, 2006
முஸ்லிம்கள் கல்வியில் பின்னடைவு - ஓர் ஆய்வு
முஸ்லிம்கள் கல்வியில் பின்னடைவு - ஓர் ஆய்வு
முஸ்லிம்கள் கல்வியறிவு, அரசாங்க உத்தியோகம் போன்றவற்றில் மற்ற சமூகத்தவரை விட மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள். சமூகத்தோடு ஒட்டாமல் எதிலும் தனித்து இயங்கி வருகிறார்கள். இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாமா? கணடிப்பாக இல்லை.
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்ப்பதில் முஸ்லிம்கள் தங்களின் சதவீதத்துக்கு அதிகமாகவே தியாகங்கள் செய்தனர்.சுதந்திர தாகம் முற்றி ஒரு படி மேலே போய் 'வெள்ளைக்காரன் தரும் பதவியும் வேண்டாம். அவன் தரும் படிப்பும் வேண்டாம். ஆங்கிலம் படிப்பது ஹராம் (தடுக்கப் பட்டது)' என்று மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினர். மொழிகளின் மூலங்களை உருவாக்கியவன் இறைவன். அப்படி இருக்க ஒரு மொழியை படிப்பது தடுக்கப் பட்டது என்று எப்படி இந்த மௌலானாக்கள் சொல்லலாம்? அன்று அவர்கள் எடுத்த தவறான முடிவால் பாதிக்கப் பட்டது என்னவோ முழு முஸ்லிம் சமுதாயமும்.
அடுத்து தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க ஊருக்கு ஊர் தோன்றியிருக்கும் மத்ரஸாக்களும் ஒரு காரணம். இந்த மத்ரஸாக்களை உருவாக்கிய செல்வந்தர்களின் நோக்கம் முஸ்லிம்களுக்கு கல்வியறிவும் மார்க்க அறிவும் ஒருங்கே பெற்று சிறந்த சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நல் எண்ணமே! எங்கள் ஊரை எடுத்துக் கொண்டால் ஊரைச் சுற்றி அய்ந்து மத்ரஸாக்கள் உள்ளது. இங்கு ஏழு வருடம் படித்தால் அவருக்கு 'ஆலிம்'(மார்க்கஅறிஞர்) என்ற பட்டத்தை கொடுப்பார்கள். இந்த மத்ரஸாக்களில் மதுரை, தென்காசி,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து நிறைய மாணவர்கள் எங்கள் ஊருக்கு படிக்க வருகிறார்கள். நல்ல வேளையாக உள்ளூர் மாணவர்கள் எவரும் இந்த மத்ரஸாக்களில் படிப்பதில்லை. உள்ளூர் மாணவர்களுக்கென்றே இருக்கவே இருக்கிறது ஆங்கில வழிக் கல்வி.
வெளியூர் மாணவர்கள் இந்த மத்ரஸாக்களில் படிப்பது எதனை? உலகக் கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் மார்க்க கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டான் நிலையைத்தான் மத்ரஸாக்கள் பாடத் திட்டங்களாக வைத்திருக்கின்றன. இது போன்ற பாடங்களைப் படித்து விட்டு வரும் மத்ரஸா மாணவன் வெளி உலகில் வந்து எந்த வேலையைப் பார்ப்பது? இன்றைய கணிணி யுகத்தில் மற்ற பள்ளிகளில் பாடத் திட்டங்கள் வருடா வருடம் மாற்றப் பட்டு மாணவர்களும் மாணவியரும் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள். மத்ரஸாக்களின் நிலை என்ன?
மொகலாயர்களின் ஆட்சியில் எழுதப்பபட்ட ஒரு சில புத்தகங்கள், மற்றும் ஒரு சில மார்க்க அறிஞர்களின் தனிப் பட்ட விளக்கங்கள் போன்றவையே பாடங்களாக போதிக்கப் படுகிறது. இவற்றைத்தான் இந்த மாணவர்கள் ஏழு வருடம் மத்ரஸாக்களில் ஓதி வருகிறார்கள். இது போன்ற பாடத் திட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸீக்கும் ஒத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குர்ஆன் ஒரு சட்டத்தை சொன்னால் துர்ருல் முக்தார் என்ற பாடப் புத்தகம் வேறொரு சட்டத்தைச் சொல்லும். முகமது நபி ஒரு சட்டத்தை போதித்தால் ஹிதாயா என்ற பாடப் புத்தகம் அதற்கு மாறான சட்டத்தைச் சொல்லும். இப்படி மார்க்க சட்டங்களைச் சொல்லுவதிலேயே குளறுபடிகள். இதில் இஸ்லாம் சொல்லித் தராத ஹனபி, ஷாபி,ஹம்பலி,மாலிக்கி போன்றோருக்கு தனித்தனியான சட்டங்கள். இப்படி இஸ்லாத்துக்கு சம்பந்தம் இல்லாதவைகளையெல்லாம் படித்து விட்டு 'இஸ்லாமிய அறிஞன்' என்ற பெயரில் மத்ரஸாவிலிருந்து வெளியேறுகிறான் அந்த மாணவன்.
சரி! ஆலிம் ஆனதற்குப் பிறகு அந்த மாணவனின் வருமானத்துக்கு என்ன வழி? இருக்கவே இருக்கிறது இஸ்லாம் காட்டித் தராத பாத்திஹாக்கள்(பிரார்த்தனைகள்). இறந்து போனால் மூன்றாம் நாள், ஏழாம் நாள்,நாற்பதாம் நாள், என்று முறை வைத்து பாத்திஹாக்கள். இவை அனைத்தும் முகமது நபி காட்டித் தராத நூதன பழக்கங்கள். அதிலும் பிறப்பு, இறப்பு,வீடு புது மனைபுகுவிழா,கல்யாணம் என்று அனைத்திற்கும் இந்த மௌலானா வந்துதான் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பிறகு நூறோ, நூற்றைம்பதோ அவருக்கு காணிக்கைத் தர வேண்டும். மார்க்க சொற்பொழிவுக்கு என்று வந்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பேசிக் கொண்டு வருவார்கள். அல்லது பள்ளி வாசல்களில் தொழுகை நடத்துவதற்காக இமாமாக பணியாற்றுவார்கள். இது தான் இவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் வேலைகள். இந்த ஆலிம்கள் செய்வது போன்ற வேலைகளைத்தான் முகமது நபியும் அவரின் தோழர்களும் செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. தற்போது உள்ள நடைமுறைக்கு எதிராகத்தான் முகமது நபியின் போதனையும் குர்ஆனிய வசனங்களும் அமைந்துள்ளது.
'இறைவனின் வசனங்களைஅற்ப விலைக்கு விற்க மாட்டார்கள்.அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு.இறைவன் விரைவாக கணக்கெடுப்பவன்.' - குர்ஆன் 3 : 199
''அவர்கள் இறைவனின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர்.அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்' -குர்ஆன் 9 : 9
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை.' - குர்ஆன் 2 : 174
மேலே கூறப்பட்ட வசனங்கள் மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துவது எந்த அளவு தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்குகிறது. அப்படியானால் முகமது நபி தன் வருமானத்திற்கு என்ன செய்தார்? என்ற கேள்வி வரும். முகமது நபியிடம் 100 எண்ணிக்கை கொண்ட ஆட்டுப் பண்ணை இருந்தது. இந்த பண்ணையில் ஆடுகள் குட்டி ஈனும் போது அதை விற்று தன் குடும்பத்து தேவைகளை சரியாக்கிக் கொள்வார். நபியாவதற்கு முன்பே ஹத்தீஜா அம்மையாரோடு சேர்ந்து மிகப் பெரும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்தார்.
அதே போல் பள்ளியில் இமாமாக இருந்ததற்கும் முகமது நபியோ அவரின் தோழர்களோ சம்பளம் வாங்கியது இல்லை. என் அலுவலகத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால் நான் இமாமாக நின்று தொழுகை நடத்துகிறேன். எனக்கு பின்னால் என் சவூதி முதலாளியும்,அவரின் மகன்,எகிபது, பாகிஸ்தான்,மொராக்கோ நாட்டு முஸ்லிம்களும் அணிவகுத்து தொழுகிறார்கள். நான் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டால் என் முதலாளி தொழுகை நடத்துவார். இது தான் இஸ்லாம் காட்டும் வழியும் கூட. இதையெல்லாம் நாம் ஆதாரத்தோடு எடுத்து சொன்னால் நம்மைப் பார்த்து ஏசுவது,மிரட்டுவது,ஊர்விலக்கம் செய்வது என்ற ரீதியில் பொது மக்களை தூண்டி விடுகின்றனர் இந்த ஆலிம்கள்.
ஒரு முறை எங்கள் ஊரில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' இளைஞர்களாக சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்தோம்.பாதுகாப்புக்கு போலீசாரும் வந்திருந்தனர்.எங்கள் ஊர் ஆலிம் (பள்ளியில் தொழுகை நடத்துபவர்)பெரிய கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு நூறு பேரையும் திரட்டிக் கொண்டு ட்யூப் லைட்டுகளை உடைப்பது, மேடையை சேதப்படுத்துவது போன்ற ரௌடிகள் செய்யும் செயலை செய்ய ஆரம்பித்தார். இதற்கு அவர் வைத்த பெயர் 'ஜிஹாத்'. இதில் அந்த ஆலிமை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. மத்ரஸா கல்வி அவரை அப்படி மாற்றி இருக்கிறது. குர்ஆனையும், முகமது நபியின் வாழ்க்கையையும் மத்ரஸாவில் போதித்து ஒரு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்திருந்தால் இது போன்ற அராஜகங்களை அவர் அரங்கேற்றியிருக்க மாட்டார். காவலுக்கு நின்ற இந்து போலீஸ்காரர் 'ஏன்ய்யா! நிங்களெல்லாம் இந்தக் கூட்டத்தை இவ்வளவு எதிர்க்கிறீர்களே! அப்படீன்னா நீங்களெல்லாம் வரதட்சணை வாங்கக் கூடியவர்களா?' என்று அப்பாவியாக கேட்டது இன்றும் என் மனதில் நிற்கிறது. இது போன்ற அமைப்புகளில் அதிக அங்கத்தினர்கள் சேர்ந்தால் மௌலானாக்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படும். இது தான் முக்கிய காரணம். இதை மாற்றுவதற்கு என்ன வழி?
மதராஸாக்களின் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும். வேலை நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரை. பிறகு 4 மணி முதல் இரவு 7 மணி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் தமிழ், ஆங்கிலம்,அரபி,கணிணி,குர்ஆன், ஹதீஸ்,போன்றவை கட்டாயப் பாடங்களாக்கப் பட வேண்டும். பாக்கி இரண்டு மணி நேரம் தொழிற் கல்வியில் எலக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பெண்டர், மெஷின் ஆபரேட்டர், போன்ற சிறு தொழில்கள் கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மாதம் ஒரு முறை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவர்களோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்படுத்த வேண்டும்.
அடுத்து மத்ரஸா மாணவர்களுக்கென்றுபிரத்யேக அடையாளங்கள் இருக்கும். தலையை மொட்டை அடித்தல், நீண்ட ஜிப்பா, மொட்டையை மறைக்க தலையில் தொப்பி.
தலையை மறைக்க வேண்டும், தொப்பி அணிய வேண்டும் என்று குர்ஆனிலோ முகமது நபியின் போதனைகளிலோ நமக்கு காணக் கிடைக்கவில்லை. இங்கு சவூதியில் பள்ளியில் தொழுபவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு தலையில் தொப்பி இருக்காது.தொப்பி அணிவது என்பது துருக்கி நாட்டவரின் பழக்கம். அந்த பழக்கம் இந்திய முஸ்லிம்களிடத்திலும் தொற்றிக் கொண்டது. சவூதிகள் தங்கள் தலைகளை மறைப்பதன் காரணம் இங்குள்ள பாலைவனப் புழுதிக் காற்று. காற்று வேகமாக அடித்தால் தலையில் இருக்கும் துண்டைக் கொண்டு முகத்தையும் மூடிக் கொள்வார்கள். எனவே தலையை மறைத்து துண்டு அணிவது சவூதிகளுக்கு வசதி. நமக்கு எந்த வகையில் வசதியைத் தரும். ஆனால் கட்டாயப் படுத்தாமல் தாங்களாகவே விரும்பி யாரும் தொப்பி அணிந்து கொண்டால் அதை தடுக்கக் கூடாது. அதே போல் யாரும் தொப்பி அணியாமல் தொழுதால் அதை ஒரு பிரச்னையாகவும் ஆக்கக் கூடாது.
2) அடுத்து ஜிப்பா! இதுவும் இஸ்லாமியரின் ஆடை என்று பலரும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று முகமது நபி எந்தக் கட்டளையும் இடவில்லை. ஒரு மாணவன் பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு மத்ரஸாவுக்கு வந்தால் அவனை வித்தியாசமாக பார்க்கும் மனப்பாங்கு நம்மவர்களிடமிருந்து மாற வேண்டும்.
அடுத்து மொட்டை அடிப்பது. முகமது நபி தன் வாழ்நாளில் ஹஜ்,உம்ரா போன்ற நேரங்களில் தான் தலையை முழுவதுமாக மழித்து இருக்கிறார்கள். முகமதுநபிக்கு அழகிய சுருள் முடி என்றும் நடு வகிடெடுத்து அழகாக அதனை சீவியும் இருப்பார்கள் என்று ஹதீதுகளில் நாம் பார்க்கிறோம். மத்ரஸாக்களிலோ சிறு வயது பையன்களுக்கெல்லாம் கட்டாயமாக மொட்டையடிக்கச் சொல்வார்கள். இது போன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் மத்ரஸாக்கள் தளர்த்தவேண்டும்.
முஸ்லிம் பெண்களுக்கும் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். எங்கள் ஊரில் செயல்படும் பெண்கள் மத்ரஸாவின் பணி ஓரளவு பாராட்டத் தக்கதாக இருக்கிறது. இங்கு அரசு கல்வியையும், மார்க்க கல்வியையும் இணைத்து கொண்டு செல்கிறார்கள். பெண்களுக்கு ஏற்ற தொழில்களான தையல் , கணிணி, கேடரிங் போன்ற பாடங்களையும் கூடுதலாக சேர்த்தால் பெண்களின் முன்னேற்றம் சிறப்படையும். இதனால் டிவி சீரியல்களின் முன்னால் உட்கார்ந்து மூக்கை சிந்திக் கொண்டிருக்கும் நம் பெண்களின் வாழ்க்கையும் ஒளி பெறும்.
போனமுறை விடுமுறையில் ஊருக்கு சென்றபோது எங்கள் ஊரில் மாலை நேரத் தொழுகைக்கு பள்ளிக்குச் சென்றேன். நான் சிறிது தாமதமாக சென்றதால் கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. என்னைப் போல் தாமதமாக வந்த ஒருவர் தனியாக தொழுது கொண்டிருந்தார். அவருக்கு சைகை செய்து அவரைத்தலைவராக ஏற்று அவருக்கு பின்னால் தொழுகைக்கு நான் நின்றேன்.இதே போல் சவூதியில் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் இரண்டு முன்று ஜமாத்துகள் (கூட்டுத் தொழுகை) சர்வ சாதாரணமாக நடக்கும். எனக்குப் பின்னால் தாமதமாக வந்த இன்னும் மூன்று பேர் எங்களோடு சேர்ந்து தொழுதனர். ஒரு வழியாக அந்த கூட்டுத் தொழுகையை முடித்தோம்.
தொழுகையை முடித்தவுடன் அந்த பள்ளியின் இமாமும், அங்கு செயல்படும் மத்ரஸாவின் முதல்வருமான மார்க்க அறிஞர் என்னைப் பார்த்து, 'தனியாக இரண்டாவது கூட்டுத் தொழுகை நடத்துவது ஹனபி சட்டத்தின் படி தடுக்கப் பட்டுள்ளது' என்று உரத்த குரலுடன் சப்தமிட்டார். தொழுக வந்தவர்கள் அனைவரும் எங்கள் இருவரையும் பார்க்க ஆரம்பித்தனர்.
'இப்படி கூட்டாக தொழக் கூடாது என்று குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ எனக்கு நீங்கள் ஆதாரம் தர முடியுமா?' - சுவனப்பிரியன்
'லால்பேட்டை மத்ரஸாவின் 'பத்வா' (மார்க்க தீர்ப்பு) இரண்டாவது ஜமாத் தடுக்கப் பட்டது என்று கூறுகிறது' - மௌலானா
'முகமது நபி 'தனியாக தொழுவதை விட கூட்டாக தொழுவது 25 மடங்கு நன்மையைத் தரும்' என்று சொல்லியிருக்கிறார்களே! அதை நீங்கள் படிக்கவில்லையா மௌலானா?' - அமைதியுடன் சுவனப்பிரியன்.
'இதோ பார் தம்பி! விதண்டா வாதம் எல்லாம் பண்ணாதே! எனக்கு லால்பேட்டை 'பத்வா' தான் முக்கியம்' - மௌலானா
'முகமது நபிக்கு மாற்றமாக லால் பேட்டை 'பத்வா' இருந்தால் அதைத் தூக்கி குப்பையில் போடுங்கள்' -சற்று சூடாக சுவனப்பிரியன்.
பிரச்னை முற்றுவதைப் பார்த்த அனைவரும் 'பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று என்னை அழைத்து வந்து விட்டனர். 40 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு மத்ரஸாவின் முதல்வர் இந்த அளவு மார்க்கம் அறியாமல் இருந்தால், இவரிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் எந்த அளவில் இருக்கும். இப்படியே எல்லோரும் தொழுகை நடத்த ஆரம்பித்தால் அவரின் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயம்தான் முதல் காரணம். புரோகித்தை விட்டால் தனக்கு உள்ள மதிப்பு போய் விடுமே என்ற பயம் மற்றொரு காரணம். இஸ்லாமிய இணைய தளங்களின் மூலம் நான் கற்றுக் கொண்ட அளவுக்குக் கூட இந்த முதல்வருக்கு ஞானம் இல்லை என்றால் இந்த மத்ரஸாக்களினால் என்ன பயன்? இது தான் இன்றைய மத்ரஸாக்களின், மார்க்க அறிஞர்களின் நிலை.
மேலும் திண்ணமாக அறிஞர்கள் இறைத் தூதரின் வாரிசுகளாவர்.அவர்கள் அறிவைத் தான் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைய பாக்கியம் பெற்றவராவார். கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்குச் சுவர்க்கத்துக்குச் செல்லும் வழியை அல்லாஹ் இலகுவாக்குகிறான். அல்லாஹ் சொல்கிறான் : 'நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தாம்' - (35 :28 ) மேலும் அல்லாஹ் கூறுகிறான் 'அதனை அறிஞர்கள் தவிர வேறெவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.' -(29 : 43)மேலும் சொல்கிறான் 'அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' -(39 : 9)
-புகாரி முதல் பாகம் பாடம் 10
மேற் கண்ட ஹதீஸின் மூலம் ஒரு முஸ்லிமுக்கு கல்வி கற்பது எந்த அளவு முக்கியம் என்று விளங்கும்.ஆனால் கல்வி விஷயத்தில் இன்னும் நாம் அதிக சிரத்தை எடுக்காமல் இருந்து வருகிறோம்.
என் மனத்தில் பல நாள் உழன்று கொண்டே இருந்த எண்ணங்களை அப்படியே எழுதி விட்டேன். நான் சொல்வது தான் சரி என்றும் சொல்லவில்லை. என் கருத்தில் உடன் படாதவர்கள் பின்னூட்டமிட்டால் அதையும் பிரசுரிக்கிறேன். இனியும் நாம் மத்ரஸாக்களின் பாடங்களை மாற்றுவதில் மெத்தனமாக இருந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.
இறைவனே மிக அறிந்தவன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
முஸ்லிம்கள் கல்வியறிவு, அரசாங்க உத்தியோகம் போன்றவற்றில் மற்ற சமூகத்தவரை விட மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள். சமூகத்தோடு ஒட்டாமல் எதிலும் தனித்து இயங்கி வருகிறார்கள். இதற்க்கெல்லாம் காரணம் இஸ்லாமா? கணடிப்பாக இல்லை.
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனை எதிர்ப்பதில் முஸ்லிம்கள் தங்களின் சதவீதத்துக்கு அதிகமாகவே தியாகங்கள் செய்தனர்.சுதந்திர தாகம் முற்றி ஒரு படி மேலே போய் 'வெள்ளைக்காரன் தரும் பதவியும் வேண்டாம். அவன் தரும் படிப்பும் வேண்டாம். ஆங்கிலம் படிப்பது ஹராம் (தடுக்கப் பட்டது)' என்று மார்க்க அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினர். மொழிகளின் மூலங்களை உருவாக்கியவன் இறைவன். அப்படி இருக்க ஒரு மொழியை படிப்பது தடுக்கப் பட்டது என்று எப்படி இந்த மௌலானாக்கள் சொல்லலாம்? அன்று அவர்கள் எடுத்த தவறான முடிவால் பாதிக்கப் பட்டது என்னவோ முழு முஸ்லிம் சமுதாயமும்.
அடுத்து தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க ஊருக்கு ஊர் தோன்றியிருக்கும் மத்ரஸாக்களும் ஒரு காரணம். இந்த மத்ரஸாக்களை உருவாக்கிய செல்வந்தர்களின் நோக்கம் முஸ்லிம்களுக்கு கல்வியறிவும் மார்க்க அறிவும் ஒருங்கே பெற்று சிறந்த சமுதாயமாக வாழ வேண்டும் என்ற நல் எண்ணமே! எங்கள் ஊரை எடுத்துக் கொண்டால் ஊரைச் சுற்றி அய்ந்து மத்ரஸாக்கள் உள்ளது. இங்கு ஏழு வருடம் படித்தால் அவருக்கு 'ஆலிம்'(மார்க்கஅறிஞர்) என்ற பட்டத்தை கொடுப்பார்கள். இந்த மத்ரஸாக்களில் மதுரை, தென்காசி,ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து நிறைய மாணவர்கள் எங்கள் ஊருக்கு படிக்க வருகிறார்கள். நல்ல வேளையாக உள்ளூர் மாணவர்கள் எவரும் இந்த மத்ரஸாக்களில் படிப்பதில்லை. உள்ளூர் மாணவர்களுக்கென்றே இருக்கவே இருக்கிறது ஆங்கில வழிக் கல்வி.
வெளியூர் மாணவர்கள் இந்த மத்ரஸாக்களில் படிப்பது எதனை? உலகக் கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் மார்க்க கல்விக்கும் சம்பந்தம் இல்லாமல் ஒரு ரெண்டும் கெட்டான் நிலையைத்தான் மத்ரஸாக்கள் பாடத் திட்டங்களாக வைத்திருக்கின்றன. இது போன்ற பாடங்களைப் படித்து விட்டு வரும் மத்ரஸா மாணவன் வெளி உலகில் வந்து எந்த வேலையைப் பார்ப்பது? இன்றைய கணிணி யுகத்தில் மற்ற பள்ளிகளில் பாடத் திட்டங்கள் வருடா வருடம் மாற்றப் பட்டு மாணவர்களும் மாணவியரும் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள். மத்ரஸாக்களின் நிலை என்ன?
மொகலாயர்களின் ஆட்சியில் எழுதப்பபட்ட ஒரு சில புத்தகங்கள், மற்றும் ஒரு சில மார்க்க அறிஞர்களின் தனிப் பட்ட விளக்கங்கள் போன்றவையே பாடங்களாக போதிக்கப் படுகிறது. இவற்றைத்தான் இந்த மாணவர்கள் ஏழு வருடம் மத்ரஸாக்களில் ஓதி வருகிறார்கள். இது போன்ற பாடத் திட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸீக்கும் ஒத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. குர்ஆன் ஒரு சட்டத்தை சொன்னால் துர்ருல் முக்தார் என்ற பாடப் புத்தகம் வேறொரு சட்டத்தைச் சொல்லும். முகமது நபி ஒரு சட்டத்தை போதித்தால் ஹிதாயா என்ற பாடப் புத்தகம் அதற்கு மாறான சட்டத்தைச் சொல்லும். இப்படி மார்க்க சட்டங்களைச் சொல்லுவதிலேயே குளறுபடிகள். இதில் இஸ்லாம் சொல்லித் தராத ஹனபி, ஷாபி,ஹம்பலி,மாலிக்கி போன்றோருக்கு தனித்தனியான சட்டங்கள். இப்படி இஸ்லாத்துக்கு சம்பந்தம் இல்லாதவைகளையெல்லாம் படித்து விட்டு 'இஸ்லாமிய அறிஞன்' என்ற பெயரில் மத்ரஸாவிலிருந்து வெளியேறுகிறான் அந்த மாணவன்.
சரி! ஆலிம் ஆனதற்குப் பிறகு அந்த மாணவனின் வருமானத்துக்கு என்ன வழி? இருக்கவே இருக்கிறது இஸ்லாம் காட்டித் தராத பாத்திஹாக்கள்(பிரார்த்தனைகள்). இறந்து போனால் மூன்றாம் நாள், ஏழாம் நாள்,நாற்பதாம் நாள், என்று முறை வைத்து பாத்திஹாக்கள். இவை அனைத்தும் முகமது நபி காட்டித் தராத நூதன பழக்கங்கள். அதிலும் பிறப்பு, இறப்பு,வீடு புது மனைபுகுவிழா,கல்யாணம் என்று அனைத்திற்கும் இந்த மௌலானா வந்துதான் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பிறகு நூறோ, நூற்றைம்பதோ அவருக்கு காணிக்கைத் தர வேண்டும். மார்க்க சொற்பொழிவுக்கு என்று வந்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று பேசிக் கொண்டு வருவார்கள். அல்லது பள்ளி வாசல்களில் தொழுகை நடத்துவதற்காக இமாமாக பணியாற்றுவார்கள். இது தான் இவர்களுக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் வேலைகள். இந்த ஆலிம்கள் செய்வது போன்ற வேலைகளைத்தான் முகமது நபியும் அவரின் தோழர்களும் செய்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை. தற்போது உள்ள நடைமுறைக்கு எதிராகத்தான் முகமது நபியின் போதனையும் குர்ஆனிய வசனங்களும் அமைந்துள்ளது.
'இறைவனின் வசனங்களைஅற்ப விலைக்கு விற்க மாட்டார்கள்.அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு.இறைவன் விரைவாக கணக்கெடுப்பவன்.' - குர்ஆன் 3 : 199
''அவர்கள் இறைவனின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கின்றனர். அவனது பாதையை விட்டும் தடுக்கின்றனர்.அவர்கள் செய்து கொண்டிருப்பவை கெட்டவையாகும்' -குர்ஆன் 9 : 9
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை.' - குர்ஆன் 2 : 174
மேலே கூறப்பட்ட வசனங்கள் மார்க்கத்தை வைத்து பிழைப்பு நடத்துவது எந்த அளவு தடுக்கப் பட்டுள்ளது என்று விளங்குகிறது. அப்படியானால் முகமது நபி தன் வருமானத்திற்கு என்ன செய்தார்? என்ற கேள்வி வரும். முகமது நபியிடம் 100 எண்ணிக்கை கொண்ட ஆட்டுப் பண்ணை இருந்தது. இந்த பண்ணையில் ஆடுகள் குட்டி ஈனும் போது அதை விற்று தன் குடும்பத்து தேவைகளை சரியாக்கிக் கொள்வார். நபியாவதற்கு முன்பே ஹத்தீஜா அம்மையாரோடு சேர்ந்து மிகப் பெரும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்தார்.
அதே போல் பள்ளியில் இமாமாக இருந்ததற்கும் முகமது நபியோ அவரின் தோழர்களோ சம்பளம் வாங்கியது இல்லை. என் அலுவலகத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால் நான் இமாமாக நின்று தொழுகை நடத்துகிறேன். எனக்கு பின்னால் என் சவூதி முதலாளியும்,அவரின் மகன்,எகிபது, பாகிஸ்தான்,மொராக்கோ நாட்டு முஸ்லிம்களும் அணிவகுத்து தொழுகிறார்கள். நான் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டால் என் முதலாளி தொழுகை நடத்துவார். இது தான் இஸ்லாம் காட்டும் வழியும் கூட. இதையெல்லாம் நாம் ஆதாரத்தோடு எடுத்து சொன்னால் நம்மைப் பார்த்து ஏசுவது,மிரட்டுவது,ஊர்விலக்கம் செய்வது என்ற ரீதியில் பொது மக்களை தூண்டி விடுகின்றனர் இந்த ஆலிம்கள்.
ஒரு முறை எங்கள் ஊரில் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' இளைஞர்களாக சேர்ந்து நடத்த ஏற்பாடு செய்தோம்.பாதுகாப்புக்கு போலீசாரும் வந்திருந்தனர்.எங்கள் ஊர் ஆலிம் (பள்ளியில் தொழுகை நடத்துபவர்)பெரிய கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு நூறு பேரையும் திரட்டிக் கொண்டு ட்யூப் லைட்டுகளை உடைப்பது, மேடையை சேதப்படுத்துவது போன்ற ரௌடிகள் செய்யும் செயலை செய்ய ஆரம்பித்தார். இதற்கு அவர் வைத்த பெயர் 'ஜிஹாத்'. இதில் அந்த ஆலிமை குறை சொல்லி பிரயோசனம் இல்லை. மத்ரஸா கல்வி அவரை அப்படி மாற்றி இருக்கிறது. குர்ஆனையும், முகமது நபியின் வாழ்க்கையையும் மத்ரஸாவில் போதித்து ஒரு தொழில் கல்வியும் கற்றுக் கொடுத்திருந்தால் இது போன்ற அராஜகங்களை அவர் அரங்கேற்றியிருக்க மாட்டார். காவலுக்கு நின்ற இந்து போலீஸ்காரர் 'ஏன்ய்யா! நிங்களெல்லாம் இந்தக் கூட்டத்தை இவ்வளவு எதிர்க்கிறீர்களே! அப்படீன்னா நீங்களெல்லாம் வரதட்சணை வாங்கக் கூடியவர்களா?' என்று அப்பாவியாக கேட்டது இன்றும் என் மனதில் நிற்கிறது. இது போன்ற அமைப்புகளில் அதிக அங்கத்தினர்கள் சேர்ந்தால் மௌலானாக்களின் வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படும். இது தான் முக்கிய காரணம். இதை மாற்றுவதற்கு என்ன வழி?
மதராஸாக்களின் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்ற வேண்டும். வேலை நேரம் காலை 7 மணி முதல் 12 மணி வரை. பிறகு 4 மணி முதல் இரவு 7 மணி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் தமிழ், ஆங்கிலம்,அரபி,கணிணி,குர்ஆன், ஹதீஸ்,போன்றவை கட்டாயப் பாடங்களாக்கப் பட வேண்டும். பாக்கி இரண்டு மணி நேரம் தொழிற் கல்வியில் எலக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பெண்டர், மெஷின் ஆபரேட்டர், போன்ற சிறு தொழில்கள் கட்டாயமாக கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். மாதம் ஒரு முறை அரசுப் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று அந்த மாணவர்களோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்படுத்த வேண்டும்.
அடுத்து மத்ரஸா மாணவர்களுக்கென்றுபிரத்யேக அடையாளங்கள் இருக்கும். தலையை மொட்டை அடித்தல், நீண்ட ஜிப்பா, மொட்டையை மறைக்க தலையில் தொப்பி.
தலையை மறைக்க வேண்டும், தொப்பி அணிய வேண்டும் என்று குர்ஆனிலோ முகமது நபியின் போதனைகளிலோ நமக்கு காணக் கிடைக்கவில்லை. இங்கு சவூதியில் பள்ளியில் தொழுபவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு தலையில் தொப்பி இருக்காது.தொப்பி அணிவது என்பது துருக்கி நாட்டவரின் பழக்கம். அந்த பழக்கம் இந்திய முஸ்லிம்களிடத்திலும் தொற்றிக் கொண்டது. சவூதிகள் தங்கள் தலைகளை மறைப்பதன் காரணம் இங்குள்ள பாலைவனப் புழுதிக் காற்று. காற்று வேகமாக அடித்தால் தலையில் இருக்கும் துண்டைக் கொண்டு முகத்தையும் மூடிக் கொள்வார்கள். எனவே தலையை மறைத்து துண்டு அணிவது சவூதிகளுக்கு வசதி. நமக்கு எந்த வகையில் வசதியைத் தரும். ஆனால் கட்டாயப் படுத்தாமல் தாங்களாகவே விரும்பி யாரும் தொப்பி அணிந்து கொண்டால் அதை தடுக்கக் கூடாது. அதே போல் யாரும் தொப்பி அணியாமல் தொழுதால் அதை ஒரு பிரச்னையாகவும் ஆக்கக் கூடாது.
2) அடுத்து ஜிப்பா! இதுவும் இஸ்லாமியரின் ஆடை என்று பலரும் தவறாக விளங்கி வைத்திருக்கிறோம். இந்த உடைதான் உடுத்த வேண்டும் என்று முகமது நபி எந்தக் கட்டளையும் இடவில்லை. ஒரு மாணவன் பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு மத்ரஸாவுக்கு வந்தால் அவனை வித்தியாசமாக பார்க்கும் மனப்பாங்கு நம்மவர்களிடமிருந்து மாற வேண்டும்.
அடுத்து மொட்டை அடிப்பது. முகமது நபி தன் வாழ்நாளில் ஹஜ்,உம்ரா போன்ற நேரங்களில் தான் தலையை முழுவதுமாக மழித்து இருக்கிறார்கள். முகமதுநபிக்கு அழகிய சுருள் முடி என்றும் நடு வகிடெடுத்து அழகாக அதனை சீவியும் இருப்பார்கள் என்று ஹதீதுகளில் நாம் பார்க்கிறோம். மத்ரஸாக்களிலோ சிறு வயது பையன்களுக்கெல்லாம் கட்டாயமாக மொட்டையடிக்கச் சொல்வார்கள். இது போன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் மத்ரஸாக்கள் தளர்த்தவேண்டும்.
முஸ்லிம் பெண்களுக்கும் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். எங்கள் ஊரில் செயல்படும் பெண்கள் மத்ரஸாவின் பணி ஓரளவு பாராட்டத் தக்கதாக இருக்கிறது. இங்கு அரசு கல்வியையும், மார்க்க கல்வியையும் இணைத்து கொண்டு செல்கிறார்கள். பெண்களுக்கு ஏற்ற தொழில்களான தையல் , கணிணி, கேடரிங் போன்ற பாடங்களையும் கூடுதலாக சேர்த்தால் பெண்களின் முன்னேற்றம் சிறப்படையும். இதனால் டிவி சீரியல்களின் முன்னால் உட்கார்ந்து மூக்கை சிந்திக் கொண்டிருக்கும் நம் பெண்களின் வாழ்க்கையும் ஒளி பெறும்.
போனமுறை விடுமுறையில் ஊருக்கு சென்றபோது எங்கள் ஊரில் மாலை நேரத் தொழுகைக்கு பள்ளிக்குச் சென்றேன். நான் சிறிது தாமதமாக சென்றதால் கூட்டுத் தொழுகை முடிந்து விட்டது. என்னைப் போல் தாமதமாக வந்த ஒருவர் தனியாக தொழுது கொண்டிருந்தார். அவருக்கு சைகை செய்து அவரைத்தலைவராக ஏற்று அவருக்கு பின்னால் தொழுகைக்கு நான் நின்றேன்.இதே போல் சவூதியில் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் இரண்டு முன்று ஜமாத்துகள் (கூட்டுத் தொழுகை) சர்வ சாதாரணமாக நடக்கும். எனக்குப் பின்னால் தாமதமாக வந்த இன்னும் மூன்று பேர் எங்களோடு சேர்ந்து தொழுதனர். ஒரு வழியாக அந்த கூட்டுத் தொழுகையை முடித்தோம்.
தொழுகையை முடித்தவுடன் அந்த பள்ளியின் இமாமும், அங்கு செயல்படும் மத்ரஸாவின் முதல்வருமான மார்க்க அறிஞர் என்னைப் பார்த்து, 'தனியாக இரண்டாவது கூட்டுத் தொழுகை நடத்துவது ஹனபி சட்டத்தின் படி தடுக்கப் பட்டுள்ளது' என்று உரத்த குரலுடன் சப்தமிட்டார். தொழுக வந்தவர்கள் அனைவரும் எங்கள் இருவரையும் பார்க்க ஆரம்பித்தனர்.
'இப்படி கூட்டாக தொழக் கூடாது என்று குர்ஆனிலிருந்தோ நபி மொழிகளிலிருந்தோ எனக்கு நீங்கள் ஆதாரம் தர முடியுமா?' - சுவனப்பிரியன்
'லால்பேட்டை மத்ரஸாவின் 'பத்வா' (மார்க்க தீர்ப்பு) இரண்டாவது ஜமாத் தடுக்கப் பட்டது என்று கூறுகிறது' - மௌலானா
'முகமது நபி 'தனியாக தொழுவதை விட கூட்டாக தொழுவது 25 மடங்கு நன்மையைத் தரும்' என்று சொல்லியிருக்கிறார்களே! அதை நீங்கள் படிக்கவில்லையா மௌலானா?' - அமைதியுடன் சுவனப்பிரியன்.
'இதோ பார் தம்பி! விதண்டா வாதம் எல்லாம் பண்ணாதே! எனக்கு லால்பேட்டை 'பத்வா' தான் முக்கியம்' - மௌலானா
'முகமது நபிக்கு மாற்றமாக லால் பேட்டை 'பத்வா' இருந்தால் அதைத் தூக்கி குப்பையில் போடுங்கள்' -சற்று சூடாக சுவனப்பிரியன்.
பிரச்னை முற்றுவதைப் பார்த்த அனைவரும் 'பிறகு பேசிக் கொள்ளலாம்' என்று என்னை அழைத்து வந்து விட்டனர். 40 மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு மத்ரஸாவின் முதல்வர் இந்த அளவு மார்க்கம் அறியாமல் இருந்தால், இவரிடம் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் எந்த அளவில் இருக்கும். இப்படியே எல்லோரும் தொழுகை நடத்த ஆரம்பித்தால் அவரின் வேலைக்கு ஆபத்து வந்து விடும் என்ற பயம்தான் முதல் காரணம். புரோகித்தை விட்டால் தனக்கு உள்ள மதிப்பு போய் விடுமே என்ற பயம் மற்றொரு காரணம். இஸ்லாமிய இணைய தளங்களின் மூலம் நான் கற்றுக் கொண்ட அளவுக்குக் கூட இந்த முதல்வருக்கு ஞானம் இல்லை என்றால் இந்த மத்ரஸாக்களினால் என்ன பயன்? இது தான் இன்றைய மத்ரஸாக்களின், மார்க்க அறிஞர்களின் நிலை.
மேலும் திண்ணமாக அறிஞர்கள் இறைத் தூதரின் வாரிசுகளாவர்.அவர்கள் அறிவைத் தான் விட்டுச் சென்றுள்ளார்கள். இந்த அறிவைப் பெற்றவரே நிறைய பாக்கியம் பெற்றவராவார். கல்வியைத் தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்குச் சுவர்க்கத்துக்குச் செல்லும் வழியை அல்லாஹ் இலகுவாக்குகிறான். அல்லாஹ் சொல்கிறான் : 'நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தாம்' - (35 :28 ) மேலும் அல்லாஹ் கூறுகிறான் 'அதனை அறிஞர்கள் தவிர வேறெவரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.' -(29 : 43)மேலும் சொல்கிறான் 'அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' -(39 : 9)
-புகாரி முதல் பாகம் பாடம் 10
மேற் கண்ட ஹதீஸின் மூலம் ஒரு முஸ்லிமுக்கு கல்வி கற்பது எந்த அளவு முக்கியம் என்று விளங்கும்.ஆனால் கல்வி விஷயத்தில் இன்னும் நாம் அதிக சிரத்தை எடுக்காமல் இருந்து வருகிறோம்.
என் மனத்தில் பல நாள் உழன்று கொண்டே இருந்த எண்ணங்களை அப்படியே எழுதி விட்டேன். நான் சொல்வது தான் சரி என்றும் சொல்லவில்லை. என் கருத்தில் உடன் படாதவர்கள் பின்னூட்டமிட்டால் அதையும் பிரசுரிக்கிறேன். இனியும் நாம் மத்ரஸாக்களின் பாடங்களை மாற்றுவதில் மெத்தனமாக இருந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும்.
இறைவனே மிக அறிந்தவன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
Wednesday, June 28, 2006
மொழி வெறி நமக்கு தேவைதானா?
மொழி வெறி நமக்கு தேவைதானா?
'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22
மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.
குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.
உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.
பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?
ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.
முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?
இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.
உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.
இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம். அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.
முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.
என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.
'மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்
'ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி
'உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.
'மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி
'அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்
'அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி
'ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்
இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.
'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.
மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
'வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' - குர்ஆன் 30 :22
மேற்கண்ட வசனத்தின் மூலம் மொழிகள் வேறுபட்டிருப்பதையும், மனிதனின் நிறங்கள் வேறுபட்டிருப்பதையும் தன்னுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நிறங்களை வைத்து மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிப்பதும், மொழிகளை வைத்து ஏற்றத் தாழ்வு கற்ப்பிப்பதும் கூடாது என்பது விளங்குகிறது.
குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. எனவே அது தேவ பாஷை என்ற அந்தஸ்த்தைப் பெறுமா? கண்டிப்பாக இல்லை. முகமது நபி அரபுகள் மத்தியில் தோன்றுகிறார். அவருக்கு தெரிந்த ஒரே மொழி அரபு மட்டுமே! எனவே குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. முகமது நபி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழ் மொழியிலேயே அருளப் பட்டிருக்கும்.உலக மக்களுக்கு இறை செய்தியை சொல்லுவதற்கு உலக வழக்கில் உள்ள ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தாக வேண்டும்.
உதாரணத்துக்கு நமது தேசிய கீதத்தை எடுத்துக் கொள்வோம். ஜன கன மன என்றவுடன் ஒரு வித மரியாதையில் எழுந்து நின்று நாட்டுப் பற்றை எடுத்துக் காட்ட மரியாதை செய்கிறோம். இதனால் வங்காள மொழி சிறந்தது என்றாகி விடுமா? பல மொழிகள் பேசும் நம் நாட்டில், ஏதோ ஒரு மொழியில் தேசிய கீதம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறோம். அதே போல் இறைவனின் கட்டளைகளை சொல்வதற்கு கடைசியாக பயன் படுத்தப் பட்டது அரபி மொழி. எனவே தான் குர்ஆன் அரபு மொழியில் இறங்கியது. இதனால் அரபு மோழி மற்ற மொழிகளையெல்லாம் விட சிறந்த மொழி என்று நினைப்தே இஸ்லாத்துக்கு மாற்றமானது.
பள்ளிவாசல்களில் தொழுகைக்கான அழைப்பு ஏன் தமிழில் கொடுப்பதில்லை?
ஒவ்வொரு நாளும் அரபு மொழியில் 'அல்லாஹீ அக்பர்'(இறைவனே பெரியவன்) என்று அரபியில் 'அதான்' அழைப்பு விடப் படுவதை நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். இதை ஏன் தமிழில் மொழி பெயர்த்து சொல்லக் கூடாது? என்று கேட்பதும் நியாயமாகத்தான் படுகிறது. முதலில் இஸ்லாம் என்பது உலகம் தழுவிய மார்க்கம் எனபதை நாம் அறிவோம்.ஆப்ரிக்காவிலிருந்து ஒரு முஸ்லிம் தமிழகத்தை சுற்றிப் பார்க்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். தொழுகை நேரம் வந்தவுடன் பள்ளிவாசலில் இருந்து வரும் அழைப்போசையைக் கேட்டவுடன் 'இங்கு ஒரு பள்ளிவாசல் இருக்கிறது' என்று தொழுக சென்று விடுவார்.உலக நாடுகளில் அது கம்யூனிஷ நாடாகட்டும், அல்லது சோஷலிஷ நாடாகட்டும் எங்கு சென்றாலும் நீங்கள் கேட்கும் ஒரே ஒலி இந்த பாங்கோசைதான். இதுவும் நமது தேசிய கீதம் போல் உலக ஒருமைப் பாட்டிற்க்குத் தானே யொழிய அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல.
முஸ்லிம்கள் அரபியில் மட்டுமே தங்கள் பெயர்களை வைக்கிறார்களே ஏன்?
இஸ்லாத்தில் அரபியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. சாந்தி, அன்பு, அறிவழகன், முத்து போன்ற அழகிய பெயர்களை முஸ்லிம்கள் தங்களுக்கு வைத்துக் கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் முருகன், ராமன், கணபதி என்று உருவம் வைத்து வணங்கும் தெய்வங்களின் பெயர்களை வைக்க இஸ்லாம் தடை செய்கிறது.
உதாரணத்திற்கு குமார் என்ற நண்பர் பழைய பெயரிலேயே முஸ்லிம் ஆகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை முதலில் சந்திப்பவர்கள் 'குமார் சௌகரியமா?' என்று விசாரித்தவுடன் மனதுக்குள் இவர் செட்டியாரா, கவுண்டரா, தேவரா, நாடாரா, தலித்தா, பிராமணரா? என்ற எண்ணம் ஓடும். சாதி நம் சமூகத்தில் அந்த அளவு புரையோடிப் போய் இருக்கிறது. அதே குமார் தனது பெயரை ரஹீம் என்று மாற்றி விட்டால் ஒரு நொடியில் சாதி எங்கோ சென்று விடுகிறது. எனவே தான் நமது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அரபியிலேயே பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.
இப்றாகிம், மூஸா போன்ற பெயர்கள் அரபு பெயர்கள் அல்ல. இதை இன்றும் முஸ்லிம்கள் வைப்பதன் மூலம் அரபி அல்லாத பெயர்களை வைப்பதற்கு தடை இல்லை என்று அறியலாம். அரபியில் வைக்கும் பெயர்களில் கூட முஸ்லிம்களில் சிலர் பொருள் புரியாமல் வைத்து விடுகிறார்கள். அப்துல் முனாப், அப்துல் முத்தலிப், அப்துல் முகமது போன்ற பெயர்கள் வைப்பதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.
முனாப், முத்தலீப் போன்றவை அன்றைய அரபிகள் வணங்கி வந்த தெய்வங்களின் பெயர்கள். அப்துல் முனாப் என்றால் முனாபின் அடிமை என்று தமிழில் பொருள் வரும். 'அப்துல் முகமது' என்றால் முகமதின் அடிமை என்று பொருள் வரும் முகமது நபி இறைவனின் தூதர் தானே ஒழிய நாம் அவருக்கு அடிமைகள் அல்ல. அதே போல் அல்லாபிச்சை, மைதீன்பிச்சை என்று தன்னை இழிவு படுத்திக் கொள்வது போல் தோற்றமளிக்கும் பெயர்களையும் வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னை இழிவுபடுத்தும்படி வைக்கும் பெயர்களை மாற்றிக் கொள்ளும் படி முகமது நபி கட்டளை இட்டுள்ளார்.
என்னோடு ஒன்றாக வேலை பார்க்கும் ஹைதராபாத்தியுடன் ஒரு முறை மொழி சம்பந்தமாக சர்ச்சை வந்தது. 'இந்துக்களின் மொழி தமிழ் மொழி. நாங்கள் பேசும் உருது மொழி இஸ்லாமியருக்கு சொந்தமான மொழி' என்று ஏதோ மிகப் பெரிய தத்துவத்தை உதிர்ப்பது போல் பேசினான்.
'மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரையும் வேதங்களையும் அனுப்பியிருக்கிறேன் என்று குர்ஆனில் இறைவன் கூறுவது உனக்குத் தெரியுமா?' - சுவனப்பிரியன்
'ஆமாம். நானும் படித்திருக்கிறேன்' - ஹைதராபாதி
'உருது மொழி எப்போது உருவானது?' - சுவனப்பிரியன்.
'மொகலாயர்கள் காலத்தில்' - ஹைதராபாதி
'அப்படியானால் உருது மொழிக்கு வேதமோ தூதரோ வந்திருக்கிறார்களா?' -சுவனப்பிரியன்
'அதெப்படி! முகமது நபிதான் கடைசி நபியாயிற்றே! அவருக்கு பிறகுநபி வர முடியாதே!' - ஹைதராபாதி
'ஆதி மொழியான தமிழுக்கு வேதமும், தூதரும் இறைவனிடமிருந்து வந்திருக்கிறார்கள். உன் மொழியான உருதுக்கு அத்தகைய சிறப்பு ஏதும் இல்லை. அப்படியானால் நாம் இருவர் பேசும் தாய் மொழிகளில் யாருடைய மொழி சிறந்த மொழி?' - சுவனப்பிரியன்
இந்த கேள்விக்கு இன்று வரை அவனிடமிருந்து பதில் வரவில்லை. மொழிகளையும் நிறங்களையும் வைத்து உயர்வு தாழ்வு கற்ப்பிக்கும் மனப் பாங்கு என்று மாறுமோ தெரியவில்லை.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
மேலும் முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.
'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.
மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.
இறைவனே மிக அறிந்தவன்
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
Sunday, June 25, 2006
இறைவனைக் காண முடியுமா?
இறைவனைக் காண முடியுமா?
இறைவனை நேரில் பார்க்க முடியுமா? என்றால் 'முடியாது' என்று இஸ்லாம் பதிலளிக்கிறது. இந்து மதத்திலும் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.
'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.
'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.
குர்ஆன் 4 :153
இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.
ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
குர்ஆன் 2 :174
போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.
அடுத்து நாத்திக வாதத்தை எடுத்துக் கொள்வோம்.நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் நாத்திகத்தை பின் பற்றக் கூடியவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மதத்தின் பலஹீனமான கொள்கைகளினால் வெறுப்புற்று நாத்திகத்தை நாடுகிறார்கள்.இறைவனை நேரில் காட்டினால்தான் இவர்கள் ஒத்துக் கொள்வார்களாம். உதாரணத்திற்கு காற்றை எடுத்துக் கொள்வோம். காற்றை நாம் கண்ணால் பார்த்ததில்லை. அந்த காற்று மரங்களை லேசாக அசைத்தால் தென்றல் காற்று என்கிறோம்.அதே காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப் பட்டால் புயல் என்கிறோம்.காற்றை நாம் பார்க்கா விட்டாலும் அதன் சக்தியை நாம் உணருகிறோம்.
கேள்வி: அரைகுறையாக சமைக்கப் பட்ட மாமிச உணவைக் கூட இரைப்பை ஜீரணித்து விடுகிறது.மாமிசத்தால் ஆன இரைப்பை மட்டும் தன்னைத் தானே ஜீரணிப்பதில்லை. இந்த அதிசயத்தின் உண்மை என்ன?
சுஜாதா பதில் : இதை விளக்க நம் உணவுப் பாதையில் நடக்கும் அதிசயங்களைப் பற்றி ஒர கட்டுரையே எழுதலாம். இந்த ஜீரணம் இரைப் பையில் ஏற்படும் சுரப்பிகளால் நிகழ்வது. அதன் அமில சக்தி கல்லையும் ஜீரணிக்கும் அல்லது கொல்லைப் பக்கம் அனுப்பி வைக்கும்.இரைப் பையை பாதுகாப்பதற்குஅதில் முலாம் போல் உள் சுவர் பூச்சு உள்ளது.அதன் எதிரி சாராயம். ம்யூகோஸா என்னும் இந்த சளி போன்ற பூச்சிலிருந்து தான் ஜீரணத்துக்கான அமிலங்கள் சுரக்கின்றன. ஆனால் வயிற்றைக் கரைப்பதில்லை.இது எப்படி என்பது இயற்கையின் இதுவரை தீர்க்கப் படாத மர்மம்.
'விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது' என்று பல இடங்களில் இறைவன் குறிப்பிடுவது இது போன்று அறிவியலால் விளக்க முடியாத உண்மைகளைத்தான்.இறைவன் மேலும் கூறுகிறான் :
'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான்.செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.'
குர்ஆன் : 16 : 65
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.அருந்துவோருக்கு அது இனிமையானது.'
குர்ஆன் 16 :66 - உண்மையில் இரத்தம் பாலாக மாறுவதில்லை.அறைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும்,இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற இன்றைய அறிவியல் உண்மையை அன்றே குர்ஆன் சொல்லியிருக்கிறது.
'தேனிக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயதத்திற்கு இதில் சான்று உள்ளது.'
குர்ஆன் 16 : 69 - பெரும்பான்மையானோர் பூக்களிலிருந்து தேனை எடுத்து தனது கூட்டில் தேனிக்கள் வாய் வழியாக சேமிக்கின்றன.என்று தான் பலரும் நம்பியிருந்தோம். ஆனால் தேனை உறிஞ்சிய தேனீக்கள் அவற்றை உட்கொண்டு ஜீரணித்து பிறக வெளியாக்கும் கழிவுதான் நாம் ருசித்து சாப்பிடும் தேன் என்று இன்றைய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பை அன்றே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.
'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.
குர்அன் 13 :3
அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவை பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
குர்ஆன் 13 :3
நான் எடுத்து எழுதியிருக்கும் அறிவியல் உண்மைகள் மிகச் சிலவே! இது போல் பல நூற்றுக் கணக்கான அறிவியல் உண்மைகளை குர்ஆனிலிருந்து எடுக்க முடியும். எவ்வளவு தான் முகமது நபி திறமையாக தன் சொந்த கற்பனையில் இந்த குர்அனை சொல்லியிருந்தாலும் மனிதன் என்ற நிலையில் ஒரு சில இடங்களிலாவது கண்டிப்பாக தவறுகள் வந்திருக்கும்.
'இந்த குர்ஆன் இறைவன் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப் படடதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும் தெளிவு படுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்த சந்தேகமும் இல்லை.இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.'
குர.ஆன் 10 :37
'இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.' என்று முகம்மதே கூறுவீராக!
குர்ஆன் 10 :38
தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.
இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.
முத்து தமிழினி ஒரு பதிவில் 'சுவனப்பிரியன் இறைவனை நம்புவது எதன் அடிப்படையில்?' என்ற ஒரு கேள்வியை வைத்திருந்தார். அந்த நேரத்தில் பதில் தருவதற்கு நேரம் இல்லாமல் இருந்தது. முத்து தமிழினியின் கேள்விக்கு இந்த பதிவே பதிலாக அமைந்திருக்கிறது.
இறைவனை நேரில் பார்க்க முடியுமா? என்றால் 'முடியாது' என்று இஸ்லாம் பதிலளிக்கிறது. இந்து மதத்திலும் ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத்தில் 'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது.அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை' என்று வருகிறது.
'அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'
குர்ஆன் 6 : 103
இறைவனை எந்த மனிதனோ இறைவனின் தூதர்களோ பார்த்ததில்லை என்பது மேற்கண்ட வசனத்திலிருந்து நாம் அறிகிறோம்.
'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.
ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380
மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.
மோசே(மூஸா)யின் சமூகத்தார் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மோசேயிடம் கேட்டபோது கோபமுற்ற இறைவன் அவர்களை இடியோசையால் தாக்கினான் என்று குர்ஆன் கூறுகிறது.
'முகம்மதே! 'வானத்திலிருந்து அவர்களுக்கு வேதத்தை நீர் இறக்க வேண்டும் ' என்று வேதமுடையோர் உம்மிடம் கேட்கின்றனர். இதை விடப் பெரியதை அவர்கள் மோசேயிடம் கேட்டுள்ளனர்..'இறைவனைக் கண் முன்னே எங்களுக்குக் காட்டு' என்று அவர்கள் கேட்டனர். அவர்கள் அநீதி இழைத்ததால் இடி முழக்கம் அவர்களைத் தாக்கியது.
குர்ஆன் 4 :153
இந்த வரலாறுகளின் மூலம் நமக்குத் தெரிய வருவது இறைவனை யாராலும் நேரில் பார்க்க முடியாது என்பதே! 'நான் இறைவனைப் பார்த்தேன்' என்று எந்த ஆன்மீகவாதியாவது சொன்னால் மக்களை ஏமாற்றுவதற்காக பொய் சொல்கிறார் என்று தான் நாம் முடிவுக்கு வர முடியும். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும். இன்று இந்து,இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த மார்க்கத்தையும் இந்த போலி ஆன்மீகவாதிகள் விட்டு வைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் நம்மை விட இந்த ஆன்மீகவாதிகள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற போலி நம்பிக்கைதான்.
ஒரு முறை எங்கள் கிராமத்தில் ஒரு மௌலானா(ஆன்மீக குரு) என்ற பெயரில் ஒரு பெரியவர் வெளியூர்க்காரர் அனைவருக்கும் ஓதி விடுவதாகவும் மறைவான விஷயங்கள் பலவற்றை சொல்வதாகவும் நிறைய காணிக்கைகள் சேர்வதாகவும் கேள்விப் பட்டோம்.எங்கள் நண்பர்கள் குழு அவரை சந்திக்க சென்றோம். பெரிய தாடி. பெரிய தலைப்பாகை.கையில் மணிகள் என்று பார்த்தவுடன் மரியாதை வந்து விடும். அவரிடம் கேட்டோம் 'மௌலானா! 'உங்களை தொழுகைக்கு பள்ளிவாசலில் பார்க்க முடிவதில்லையே!' என்று கேட்டோம். அதற்கு அவர்,'நாங்கள் அத்தகைய வணக்கத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.கேள்விகள் கேட்காதீர்கள்.' என்று சிடுசிடுத்தார். 'அடப்பாவி!நெஞ்சார பொய்தன்னை சொல்கிறானே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினோம். அடுத்த இரண்டு நாளில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் பண்ணினான் என்று ஊர்க்காரர்களே அடித்து விரட்டி விட்டனர். இது போல் பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் பத்திரிக்கைகளில் படித்தும் மக்கள் திருந்துவதாக இல்லை.
'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர்,தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. மறுமையில் இறைவன் அவர்களுடன் பேசமாட்டான்.அவர்களைத் தூய்மைபடுத்தவும் மாட்டான்.அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'
குர்ஆன் 2 :174
போலி ஆன்மீக வாதிகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது மேற்கண்ட வசனம்.
அடுத்து நாத்திக வாதத்தை எடுத்துக் கொள்வோம்.நம் நாட்டிலும் மேலை நாடுகளிலும் நாத்திகத்தை பின் பற்றக் கூடியவர்கள் கணிசமான அளவு இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மதத்தின் பலஹீனமான கொள்கைகளினால் வெறுப்புற்று நாத்திகத்தை நாடுகிறார்கள்.இறைவனை நேரில் காட்டினால்தான் இவர்கள் ஒத்துக் கொள்வார்களாம். உதாரணத்திற்கு காற்றை எடுத்துக் கொள்வோம். காற்றை நாம் கண்ணால் பார்த்ததில்லை. அந்த காற்று மரங்களை லேசாக அசைத்தால் தென்றல் காற்று என்கிறோம்.அதே காற்றினால் மரங்கள் வேரோடு சாய்க்கப் பட்டால் புயல் என்கிறோம்.காற்றை நாம் பார்க்கா விட்டாலும் அதன் சக்தியை நாம் உணருகிறோம்.
கேள்வி: அரைகுறையாக சமைக்கப் பட்ட மாமிச உணவைக் கூட இரைப்பை ஜீரணித்து விடுகிறது.மாமிசத்தால் ஆன இரைப்பை மட்டும் தன்னைத் தானே ஜீரணிப்பதில்லை. இந்த அதிசயத்தின் உண்மை என்ன?
சுஜாதா பதில் : இதை விளக்க நம் உணவுப் பாதையில் நடக்கும் அதிசயங்களைப் பற்றி ஒர கட்டுரையே எழுதலாம். இந்த ஜீரணம் இரைப் பையில் ஏற்படும் சுரப்பிகளால் நிகழ்வது. அதன் அமில சக்தி கல்லையும் ஜீரணிக்கும் அல்லது கொல்லைப் பக்கம் அனுப்பி வைக்கும்.இரைப் பையை பாதுகாப்பதற்குஅதில் முலாம் போல் உள் சுவர் பூச்சு உள்ளது.அதன் எதிரி சாராயம். ம்யூகோஸா என்னும் இந்த சளி போன்ற பூச்சிலிருந்து தான் ஜீரணத்துக்கான அமிலங்கள் சுரக்கின்றன. ஆனால் வயிற்றைக் கரைப்பதில்லை.இது எப்படி என்பது இயற்கையின் இதுவரை தீர்க்கப் படாத மர்மம்.
'விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது' என்று பல இடங்களில் இறைவன் குறிப்பிடுவது இது போன்று அறிவியலால் விளக்க முடியாத உண்மைகளைத்தான்.இறைவன் மேலும் கூறுகிறான் :
'இறைவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான்.செவியுறும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.'
குர்ஆன் : 16 : 65
கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது.அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப் பட்ட உணவுக்கும், இரத்தத்துக்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.அருந்துவோருக்கு அது இனிமையானது.'
குர்ஆன் 16 :66 - உண்மையில் இரத்தம் பாலாக மாறுவதில்லை.அறைக்கப் பட்ட உணவுக் கூழுக்கும்,இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்துதான் பால் உற்பத்தியாகிறது என்ற இன்றைய அறிவியல் உண்மையை அன்றே குர்ஆன் சொல்லியிருக்கிறது.
'தேனிக்களின் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயதத்திற்கு இதில் சான்று உள்ளது.'
குர்ஆன் 16 : 69 - பெரும்பான்மையானோர் பூக்களிலிருந்து தேனை எடுத்து தனது கூட்டில் தேனிக்கள் வாய் வழியாக சேமிக்கின்றன.என்று தான் பலரும் நம்பியிருந்தோம். ஆனால் தேனை உறிஞ்சிய தேனீக்கள் அவற்றை உட்கொண்டு ஜீரணித்து பிறக வெளியாக்கும் கழிவுதான் நாம் ருசித்து சாப்பிடும் தேன் என்று இன்றைய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பை அன்றே இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.
'நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை இறைவனே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறான்.ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவு படுத்துகிறான்.
குர்அன் 13 :3
அவனே பூமியை விரித்தான். மலைகளையும் நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவை பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
குர்ஆன் 13 :3
நான் எடுத்து எழுதியிருக்கும் அறிவியல் உண்மைகள் மிகச் சிலவே! இது போல் பல நூற்றுக் கணக்கான அறிவியல் உண்மைகளை குர்ஆனிலிருந்து எடுக்க முடியும். எவ்வளவு தான் முகமது நபி திறமையாக தன் சொந்த கற்பனையில் இந்த குர்அனை சொல்லியிருந்தாலும் மனிதன் என்ற நிலையில் ஒரு சில இடங்களிலாவது கண்டிப்பாக தவறுகள் வந்திருக்கும்.
'இந்த குர்ஆன் இறைவன் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப் படடதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும் தெளிவு படுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்த சந்தேகமும் இல்லை.இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.'
குர.ஆன் 10 :37
'இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா?'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.' என்று முகம்மதே கூறுவீராக!
குர்ஆன் 10 :38
தின மலர். அறிவியல் ஆயிரம்!கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.
இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?தினமலர்க் காரருக்கு வேண்டுமானால் யார் என்பதில் இன்னும் குழப்பம் இருக்கலாம். சுவனப் பிரியனான எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அல்லாஹ், இறைவன், கர்த்தர், கடவுள் என்ற பெயர்களுடைய அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடிய ஒருவன்.
முத்து தமிழினி ஒரு பதிவில் 'சுவனப்பிரியன் இறைவனை நம்புவது எதன் அடிப்படையில்?' என்ற ஒரு கேள்வியை வைத்திருந்தார். அந்த நேரத்தில் பதில் தருவதற்கு நேரம் இல்லாமல் இருந்தது. முத்து தமிழினியின் கேள்விக்கு இந்த பதிவே பதிலாக அமைந்திருக்கிறது.
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - அய்ந்து
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - அய்ந்து
'நரசங்சா'
நரசங்சா என்ற பெயர் இந்து மத வேதங்களில் பல இடங்களில் வரும். இதை முறையே பிரித்தோமானால் 'நர' - 'அசஙசா' என்று வரும். நர என்றால் மனிதன் அசங்சா என்றால் புகழப்பட்டவர். ஆக நரசங்சா என்பதன் பொருள் புகழப்பட்டவர். புகழப்பட்டவர் என்ற பதத்தைத்தான் நாம் அரபியில் முஹம்மது என்கிறோம். இனி நரசங்சா என்று இந்து மத வேதங்களில் வரக் கூடிய இடங்களைப் பார்ப்போம்.
1) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 13 - செய்யுள் 3
2) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 18 - செய்யுள் 9
3) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 106 - செய்யுள் 4
4) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 142 - செய்யுள் 3
5) ரிக் வேதம் - புத்தகம் 2 - பாட்டு 3 - செய்யுள் 2
6) ரிக் வேதம் - புத்தகம் 3 - பாட்டு 29 - செய்யுள் 11
7) ரிக் வேதம் - புத்தகம் 5 - பாட்டு 5 - செய்யுள் 2
8) ரிக் வேதம் - புத்தகம் 7 - பாட்டு 2 - செய்யுள் 2
9) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 64 - செய்யுள் 3
10) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 182 - செய்யுள் 2
11) சாம வேதம் - உத்தராசிக் - மந்த்ரா 1349
12) யஜீர் வேதம் - அதிகாரம் 29 - செய்யுள் 27
13) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரட் 6 - செய்யுள் 4
14) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரம் 7 - செய்யுள் 4
15) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 37
16) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 57
17) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 31
18) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 55
19) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 2
20) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 19
21) யஜீர் வேதம் - அதிகாரம் 26 - செய்யுள் 42
ராமாயணமும் மகாபாரதமும் நம் அனைவருக்கும் மிகவும் பiரிச்சயமானது. இதன் கதாபாத்திரங்கள் இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த இரண்டு காவியங்களும் பிரபல்யமானதுபோல் இந்து மதத்தின் வேதங்களான ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்கள் மக்களிடையே கொண்டு செல்லப் படவில்லை. மக்களிடையே கொண்டு சென்றால் பல உண்மைகள் மக்களிடம் விளக்க வேண்டுமே என்ற தயக்கத்தின் காரணமாகத்தான் இந்து மத அறிஞர்கள் மறைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கல்கி அவதாரம்!
கலகி என்ற இவரைப் பற்றி பல வதந்திகள் நம் நாட்டில் உலா வருகின்றன. ஆந்திராவில் விஜயகுமார் என்ற பட்டதாரி தன்னை கல்கி அவதாரம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்து விட்டார். இதை படித்தவர் முதல் பாமரர் வரை நம்பிக் கொண்டிருப்பதுதான் விஷேஷம். இது போன்ற போலிகள் அவ்வப்போது தலை எடுப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் மதத்தைப் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமையே! இந்து மதத்தை சேர்ந்தவர்களிலேயே அவர்களின் மதத்தின் வேதங்களைப் படித்தவர்கள் எத்தனை பேர் என்று கேளுங்கள். மிகக் குறைவாகவே பதில் வரும். அந்த வேதத்தின் மூல மொழியான சமஸ்கிரத பாஷையை கற்றவர்கள் எத்தனை பேர? ராஜ கோபாலச்சாரியார், சோ ராமசாமி,சங்கராச்சாரியார் போன்ற ஒரு சில பேரைத்தான் காண முடியும். தெரிந்த இந்த ஒரு சிலரும் வேதங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்ச்சிக்கவும் இல்லை.
இனி இந்த வேதங்களில் கல்கி என்ற அவதாரத்தைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று சிறிது ஆராய்வோம்.
"சிலை வணக்கம் புரியப்படும் தலைவரின் குடும்பத்தில் அவர்களின் நகரான சம்பாலாவில் விஷ்ணுயாஸூடைய வீட்டில் கல்கி தோன்றுவார்"
"உலகத்தின் ரட்ஷகன் அவருக்கு எட்டு போற்றுதற்குரிய தகுதிகளைக் கொடுத்து அபரிமிதமான வெற்றியையும் மகிமையையும் பிரகாசத்தையும் கொடுத்து கெளரவிப்பார். குதிரை வாகனம் அவருக்கு தேவர்களால் கொடுக்கப் படும். அவருடைய கையில் வாள் இருக்கும். இரட்ஷகனின் துணை கொண்டு அனைத்து தீய காரியங்களையும் துரோகிகளையும் வென்றெடுப்பார்.மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்."
பாகவதா புராணம் -காண்டம் 12 - அத்தியாயம் 2 - சுலோகம் 18 லிருந்து 20 வரை
"அறியாமைக் காலமான அந்த நாளில் கல்கி அவதரிப்பார்.அந்நாளில் அரசர்கள் மிகப் பெரிய கொள்ளயைர்களாக இருப்பர். உலகத்தை நேர்வழிப் படுத்த வந்த அவரின் தந்தை விஷ்ணுயாத் ஆவார். கல்கி என்ற பெயரிலும் அறியப் படுவார்."
பாகவத புராணம் - காண்டம் 1 - அத்தியாயம் 3 - சுலோகம் 25
விளக்கங்கள் :
1) கல்கியின் தந்தை பெயர் விஷ்ணுயாத் என்று சொல்லப் படுகிறது. இதைத் தமிழ்ப் படுத்தினால் விஷ்ணுவின் அடிமை என்று வரும். அதாவது இறைவனின் அடிமை. இதே வார்த்தையை நாம் அரபியில் சொன்னால் அப்து+அல்லா இறைவனின் அடிமை அப்துல்லா என்று வரும். ஆக விஷணுயாத் அப்துல்லா இறைவனின் அடிமை ஆகிய இம்மூன்றும் ஒன்றே. முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா. எனவே விஷ்ணுயாத் என்பது அப்துல்லா என்று விளங்குகிறது.
2) சம்பாலா என்ற நகரத்தில் பிறப்பார்
சம்பாலா என்ற பதத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தால் "அமைதியும் பாதுகாப்பும் கொண்ட இடம்" என்ற பொருள் வரும்.
"அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக" -குர்ஆன் 2 :125
கஅபா அமைந்திருக்கும் மக்கா நகர் அபய பூமி என்று அறிவிக்கப் பட்டு பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் அது இன்றளவும்; எந்த படையெடுப்புக்கும் ஆளாகாமல் அபய பூமியாகவும் பாதுகாப்பு கொண்ட ஊராகவும் அமைந்துள்ளது. மேலே உள்ள சம்பாலா என்ற ஊர் மக்காவையே குறிக்கும் . முகமது நபியும் மக்காவில் தான் பிறக்கிறார்.
4) கல்கி கடைசி அவதாரம்
வேதங்களில் கல்கி அவதாரம் தான் கடைசி அவதாரம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதையேதான் குர்ஆனும் உறுதி செய்கிறது.
"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்." - குர்ஆன் - 5 :3
"முகமது இறைவனின் தூதராகவும் நபி மார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்." - குர்ஆன் 33 :40
முகமது நபிக்கு பிறகு இனி வேதங்களும் வரப் போவதில்லை. இறைத் தூதர்களும் வரப் போவதில்லை.தூதுத்துவத்திற்கு சீல் வைத்தாகி விட்டது. இனி நபி வரப் போவதில்லை என இதன் மூலம் விளங்குகிறது. இந்து மத வேதங்களும் இதைத்தான் சொல்கின்றன.
5) "மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்"
முகமது நபி மலைகளுக்கு நடுவே உள்ள ஹீரா குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டிருந்த போது வானவர் கேப்ரியேல் வந்து குர்ஆனின் முதல் வசனத்தை ஓதச் சொல்கிறார். அன்றிலிருந்து தான் சிறுக சிறுக குர்ஆன் இறங்க ஆரம்பிக்கிறது.
மக்காவாசிகளால் துரத்தப்படும் முகமது நபி வடக்கில் இருக்கும் மதீனா நகருக்கு தன் தோழருடன் பயணமாகிறார். மதினாவில் இவருக்கு ஆதரவு கிடைக்கிறது. சில காலத்துக்குப் பிறகு தான் பிறந்த மக்காவுக்கே திரும்பவும் வருகிறார்.
6) நன் நடத்தையில் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.
"முகம்மதே! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." -குர்ஆன் 68 :4
7) எட்டு போற்றத்தக்க தகுதிகள் கொடுக்கப் படுவார்.
அந்த எட்டு தகுதிகள் : 1) wisdom - அறிவுடைமை 2)Respectable lineage - மரியாதைக்குரிய பரம்பரை 3) Self control - தன்னடக்கம் 5) Revealed knowledge - அறிவை வெளிப்படுத்தும் திறமை 5)Valour - வீரம் தைரியம் 6)Measured speech - அளவான பேச்சு 7) Utmost charity - மிக உயர்ந்த ஈகை குணம் 8) Gratefulness - நனறி மறக்காத தன்மை.
1) அறிவுடைமை :
மிகச் சிறந்த அறிவு முகமது நபிக்கு கொடுக்கப் பட்டிருந்தது. நபியாக ஆவதற்கு முன்பே இவருக்கு இருக்கும் ஞானத்தைப் பற்றி அம் மக்கள் அறிந்திருந்தனர்.
2) மரியாதைக்குரிய பரம்பரை :
அந்த காலத்தில் மிகவும் உயர்ந்த குலமாக கருதப்பட்ட குறைஷி குலத்தில் முகமது நபி பிறக்கிறார்.
3) தன்னடக்கம் :
தன்னடக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக முகமது நபி திகழ்ந்தார். அவரை எதிரிகள் பல தடவை கோபப்படுத்தும் போதெல்லாம் அமைதியும் பொறுமையும் காத்து வந்ததை அவரின் வாழ்க்கையில் பல தடவை நாம் பார்க்க முடிகிறது.
4) அறிவை வெளிப் படுத்தும் :
படித்தவரும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் விதமாக அவர் மனிதர்களுக்கு அளித்த போதனைகள் படித்தவர்களையே வியப்பில் ஆழ்த்தியது.
5) வீரம் தைரியம் :
மிகச் சிறந்த உடல் வலிமையை முகமது நபி பெற்றிருந்தார். பல போர்களில் இவரே தலைமையேற்று சென்று வெற்றியும் பெற்று வந்திருக்கிறார். மற்ற நாட்டு தலைவர்களைப் போல் அரண்மனையில் அமர்ந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கவில்லை.
6) அளவான பேச்சு :
தேவைக்கு அதிகமான பேச்சு இவரிடம் இருக்காது. கேள்வி கேட்பவருக்கு அதற்குரிய பதில் மட்டுமே வரும். பதில்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்ததால் அவரின் தொழர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.
7) ஈகை குணம் :
தேவை என்று வந்தவர்க்கு இல்லை என்று எந்த நேரத்திலும் எவரையும் திருப்பி அனுப்பியதில்லை. இவர் பொருளாதாரத்தில் சிரமப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட பல வறிய குடும்பங்களை தன்னுடைய பொறுப்பில் பராமரித்து வந்தார்.
8) மதினாவில் அன்சாரிகள் இவருக்கும் இவரது தோழர்களுக்கும் சிரமமான நேரத்தில் செய்த உதவிகளை கடைசி காலம் வரை மறக்காமல் ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தார்.
8) கல்கி உலகை நேர்வழிப் படுத்த வந்த ஆசான் :
கல்கியானவர் உலக மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்.உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
இதையேதான் குர்ஆனும் முகமது நபி அரபு மக்களுக்கு மட்டும் வழி காட்டியல்ல.உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்டியாக அனுப்பப் பட்டவர் என்று கூறுகிறது.
"முகம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்." - குர்ஆன் 34 : 28
9)குதிரை வாகனம் அவருக்கு கொடுக்கப் படும். கையில் வாள் வைத்திருப்பார்.
முகமது நபியின் வாகனம் அதிகமாக குதிரையாகவே இருந்தது. அவர் தன்னிடம் எப்போதும் பாதுகாப்புக்காக வாள் ஒன்றையும் வைத்திருந்தார்.
10) கல்கி தீய காரியங்களை வென்றெடுப்பார்.
முகமது நபி அவதரித்த அந்த காலம் "அய்யாமுல் ஜாஹிலிய்யா" அதாவது "அறியாமைக் காலம்" என்று வரலாறுகளில் சொல்லப் படுகிறது. குடி கொள்ளை ஓயாத போர் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல் - பெண் குழந்தை பிறந்தால் சமூகத்தில் முகம் காட்ட கூச்சப் பட்டுக் கொண்டுபல நாட்கள் வீட்டை விட்டே வெளியேறி விடுதல் போன்ற பல அரக்க குணங்கள் நிறைந்த அந்த அரபுகள் மத்தியில் முகமது நபி தோன்றுகிறார். நபியானதற்கு பிறகு சில வருடங்களிலேயே அதிசயத் தக்க மாற்றங்களை அரபுக்கள் மத்தியில் உண்டாக்குகிறார். அனைத்து தீய பழக்கங்களும் அவர்களிடமிருந்து நீங்குகிறது.
11) கல்கி நான்கு தோழர்களின் துணை கொண்டு தீமைகளை வென்றெடுப்பார்.
முகமது நபிக்கு ஆரம்ப காலம் முதல் இறப்பு வரை தீமைகளை எதிர்த்து போரிடுவதில் நான்கு பேர் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் முறையே அபுபக்கர்- உமர் - அலி- உஸ்மான் ஆவர். இவர்கள் முகமது நபியின் மறைவுக்குப் பிறகுஇஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதியாக இருந்து திறம்பட நிர்வாகம் செய்து வந்தனர். இந்த நால்வரையே மேலே சுட்டிக் காட்டப் படுகிறது.
12) கல்கி தேவர்களால் உதவி செய்யப்படுவார்
முகமது நபி பத்ர் என்ற போர்க் களத்தில் போரிடும் போதுசிரமமான நேரத்தில் வானவர்களை இறைவன் துணைக்கு அனுப்பினான். இதை குர்ஆனில் பின் வருமாறு கூறப்படுகிறது.
"நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது உங்களுக்கு பின்னால் அணி வகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதபுபவன்" என்று உங்களுக்குப் பதிலளித்தான்." - குர்ஆன் 8 : 9
"நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ர் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவனை அஞ்சுங்கள்." - குர்ஆன் 3 : 123
கல்கி என்று சொல்லப் பட்டது முகமது நபிதான் என்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். கல்கி என்பவர் முகமது நபி அல்ல என்று வாதிடுபவர்கள் அதற்கான விளக்கத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்கள். என் கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
இறைவனே மிக அறிந்தவன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
'நரசங்சா'
நரசங்சா என்ற பெயர் இந்து மத வேதங்களில் பல இடங்களில் வரும். இதை முறையே பிரித்தோமானால் 'நர' - 'அசஙசா' என்று வரும். நர என்றால் மனிதன் அசங்சா என்றால் புகழப்பட்டவர். ஆக நரசங்சா என்பதன் பொருள் புகழப்பட்டவர். புகழப்பட்டவர் என்ற பதத்தைத்தான் நாம் அரபியில் முஹம்மது என்கிறோம். இனி நரசங்சா என்று இந்து மத வேதங்களில் வரக் கூடிய இடங்களைப் பார்ப்போம்.
1) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 13 - செய்யுள் 3
2) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 18 - செய்யுள் 9
3) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 106 - செய்யுள் 4
4) ரிக் வேதம் - புத்தகம் 1 - பாட்டு 142 - செய்யுள் 3
5) ரிக் வேதம் - புத்தகம் 2 - பாட்டு 3 - செய்யுள் 2
6) ரிக் வேதம் - புத்தகம் 3 - பாட்டு 29 - செய்யுள் 11
7) ரிக் வேதம் - புத்தகம் 5 - பாட்டு 5 - செய்யுள் 2
8) ரிக் வேதம் - புத்தகம் 7 - பாட்டு 2 - செய்யுள் 2
9) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 64 - செய்யுள் 3
10) ரிக் வேதம் - புத்தகம் 10 - பாட்டு 182 - செய்யுள் 2
11) சாம வேதம் - உத்தராசிக் - மந்த்ரா 1349
12) யஜீர் வேதம் - அதிகாரம் 29 - செய்யுள் 27
13) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரட் 6 - செய்யுள் 4
14) யஜீர் வேதம் - புத்தகம் 1 - அதிகாரம் 7 - செய்யுள் 4
15) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 37
16) யஜீர் வேதம் - அதிகாரம் 20 - செய்யுள் 57
17) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 31
18) யஜீர் வேதம் - அதிகாரம் 21 - செய்யுள் 55
19) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 2
20) யஜீர் வேதம் - அதிகாரம் 28 - செய்யுள் 19
21) யஜீர் வேதம் - அதிகாரம் 26 - செய்யுள் 42
ராமாயணமும் மகாபாரதமும் நம் அனைவருக்கும் மிகவும் பiரிச்சயமானது. இதன் கதாபாத்திரங்கள் இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு அத்துப்படி. ஆனால் இந்த இரண்டு காவியங்களும் பிரபல்யமானதுபோல் இந்து மதத்தின் வேதங்களான ரிக் யஜீர் சாம அதர்வண வேதங்கள் மக்களிடையே கொண்டு செல்லப் படவில்லை. மக்களிடையே கொண்டு சென்றால் பல உண்மைகள் மக்களிடம் விளக்க வேண்டுமே என்ற தயக்கத்தின் காரணமாகத்தான் இந்து மத அறிஞர்கள் மறைத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கல்கி அவதாரம்!
கலகி என்ற இவரைப் பற்றி பல வதந்திகள் நம் நாட்டில் உலா வருகின்றன. ஆந்திராவில் விஜயகுமார் என்ற பட்டதாரி தன்னை கல்கி அவதாரம் என்று கூறிக் கொண்டு ஒரு கூட்டத்தையும் சேர்த்து விட்டார். இதை படித்தவர் முதல் பாமரர் வரை நம்பிக் கொண்டிருப்பதுதான் விஷேஷம். இது போன்ற போலிகள் அவ்வப்போது தலை எடுப்பதற்கு முக்கிய காரணம் அவரவர் மதத்தைப் பற்றிய உண்மையான புரிதல் இல்லாமையே! இந்து மதத்தை சேர்ந்தவர்களிலேயே அவர்களின் மதத்தின் வேதங்களைப் படித்தவர்கள் எத்தனை பேர் என்று கேளுங்கள். மிகக் குறைவாகவே பதில் வரும். அந்த வேதத்தின் மூல மொழியான சமஸ்கிரத பாஷையை கற்றவர்கள் எத்தனை பேர? ராஜ கோபாலச்சாரியார், சோ ராமசாமி,சங்கராச்சாரியார் போன்ற ஒரு சில பேரைத்தான் காண முடியும். தெரிந்த இந்த ஒரு சிலரும் வேதங்களை மக்களிடம் கொண்டு செல்ல முயற்ச்சிக்கவும் இல்லை.
இனி இந்த வேதங்களில் கல்கி என்ற அவதாரத்தைப் பற்றி என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று சிறிது ஆராய்வோம்.
"சிலை வணக்கம் புரியப்படும் தலைவரின் குடும்பத்தில் அவர்களின் நகரான சம்பாலாவில் விஷ்ணுயாஸூடைய வீட்டில் கல்கி தோன்றுவார்"
"உலகத்தின் ரட்ஷகன் அவருக்கு எட்டு போற்றுதற்குரிய தகுதிகளைக் கொடுத்து அபரிமிதமான வெற்றியையும் மகிமையையும் பிரகாசத்தையும் கொடுத்து கெளரவிப்பார். குதிரை வாகனம் அவருக்கு தேவர்களால் கொடுக்கப் படும். அவருடைய கையில் வாள் இருக்கும். இரட்ஷகனின் துணை கொண்டு அனைத்து தீய காரியங்களையும் துரோகிகளையும் வென்றெடுப்பார்.மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்."
பாகவதா புராணம் -காண்டம் 12 - அத்தியாயம் 2 - சுலோகம் 18 லிருந்து 20 வரை
"அறியாமைக் காலமான அந்த நாளில் கல்கி அவதரிப்பார்.அந்நாளில் அரசர்கள் மிகப் பெரிய கொள்ளயைர்களாக இருப்பர். உலகத்தை நேர்வழிப் படுத்த வந்த அவரின் தந்தை விஷ்ணுயாத் ஆவார். கல்கி என்ற பெயரிலும் அறியப் படுவார்."
பாகவத புராணம் - காண்டம் 1 - அத்தியாயம் 3 - சுலோகம் 25
விளக்கங்கள் :
1) கல்கியின் தந்தை பெயர் விஷ்ணுயாத் என்று சொல்லப் படுகிறது. இதைத் தமிழ்ப் படுத்தினால் விஷ்ணுவின் அடிமை என்று வரும். அதாவது இறைவனின் அடிமை. இதே வார்த்தையை நாம் அரபியில் சொன்னால் அப்து+அல்லா இறைவனின் அடிமை அப்துல்லா என்று வரும். ஆக விஷணுயாத் அப்துல்லா இறைவனின் அடிமை ஆகிய இம்மூன்றும் ஒன்றே. முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா. எனவே விஷ்ணுயாத் என்பது அப்துல்லா என்று விளங்குகிறது.
2) சம்பாலா என்ற நகரத்தில் பிறப்பார்
சம்பாலா என்ற பதத்திற்கு தமிழில் மொழி பெயர்த்தால் "அமைதியும் பாதுகாப்பும் கொண்ட இடம்" என்ற பொருள் வரும்.
"அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடும் இடமாகவும் பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக" -குர்ஆன் 2 :125
கஅபா அமைந்திருக்கும் மக்கா நகர் அபய பூமி என்று அறிவிக்கப் பட்டு பதினான்கு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த பின்பும் அது இன்றளவும்; எந்த படையெடுப்புக்கும் ஆளாகாமல் அபய பூமியாகவும் பாதுகாப்பு கொண்ட ஊராகவும் அமைந்துள்ளது. மேலே உள்ள சம்பாலா என்ற ஊர் மக்காவையே குறிக்கும் . முகமது நபியும் மக்காவில் தான் பிறக்கிறார்.
4) கல்கி கடைசி அவதாரம்
வேதங்களில் கல்கி அவதாரம் தான் கடைசி அவதாரம் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதையேதான் குர்ஆனும் உறுதி செய்கிறது.
"இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்." - குர்ஆன் - 5 :3
"முகமது இறைவனின் தூதராகவும் நபி மார்களில் முத்திரையாகவும் இருக்கிறார்." - குர்ஆன் 33 :40
முகமது நபிக்கு பிறகு இனி வேதங்களும் வரப் போவதில்லை. இறைத் தூதர்களும் வரப் போவதில்லை.தூதுத்துவத்திற்கு சீல் வைத்தாகி விட்டது. இனி நபி வரப் போவதில்லை என இதன் மூலம் விளங்குகிறது. இந்து மத வேதங்களும் இதைத்தான் சொல்கின்றன.
5) "மலையின் குகையில் இறைவனிடமிருந்து செய்திகளைப் பெறுவார். பிறகு வடக்கு நோக்கி சென்று திரும்பவும் தான் பிறந்த இடத்திற்கு திரும்புவார்"
முகமது நபி மலைகளுக்கு நடுவே உள்ள ஹீரா குகையில் தங்கி தியானத்தில் ஈடுபட்டிருந்த போது வானவர் கேப்ரியேல் வந்து குர்ஆனின் முதல் வசனத்தை ஓதச் சொல்கிறார். அன்றிலிருந்து தான் சிறுக சிறுக குர்ஆன் இறங்க ஆரம்பிக்கிறது.
மக்காவாசிகளால் துரத்தப்படும் முகமது நபி வடக்கில் இருக்கும் மதீனா நகருக்கு தன் தோழருடன் பயணமாகிறார். மதினாவில் இவருக்கு ஆதரவு கிடைக்கிறது. சில காலத்துக்குப் பிறகு தான் பிறந்த மக்காவுக்கே திரும்பவும் வருகிறார்.
6) நன் நடத்தையில் மிகவும் போற்றுதலுக்குரியவராக இருப்பார்.
"முகம்மதே! நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்." -குர்ஆன் 68 :4
7) எட்டு போற்றத்தக்க தகுதிகள் கொடுக்கப் படுவார்.
அந்த எட்டு தகுதிகள் : 1) wisdom - அறிவுடைமை 2)Respectable lineage - மரியாதைக்குரிய பரம்பரை 3) Self control - தன்னடக்கம் 5) Revealed knowledge - அறிவை வெளிப்படுத்தும் திறமை 5)Valour - வீரம் தைரியம் 6)Measured speech - அளவான பேச்சு 7) Utmost charity - மிக உயர்ந்த ஈகை குணம் 8) Gratefulness - நனறி மறக்காத தன்மை.
1) அறிவுடைமை :
மிகச் சிறந்த அறிவு முகமது நபிக்கு கொடுக்கப் பட்டிருந்தது. நபியாக ஆவதற்கு முன்பே இவருக்கு இருக்கும் ஞானத்தைப் பற்றி அம் மக்கள் அறிந்திருந்தனர்.
2) மரியாதைக்குரிய பரம்பரை :
அந்த காலத்தில் மிகவும் உயர்ந்த குலமாக கருதப்பட்ட குறைஷி குலத்தில் முகமது நபி பிறக்கிறார்.
3) தன்னடக்கம் :
தன்னடக்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக முகமது நபி திகழ்ந்தார். அவரை எதிரிகள் பல தடவை கோபப்படுத்தும் போதெல்லாம் அமைதியும் பொறுமையும் காத்து வந்ததை அவரின் வாழ்க்கையில் பல தடவை நாம் பார்க்க முடிகிறது.
4) அறிவை வெளிப் படுத்தும் :
படித்தவரும் பாமரரும் விளங்கிக் கொள்ளும் விதமாக அவர் மனிதர்களுக்கு அளித்த போதனைகள் படித்தவர்களையே வியப்பில் ஆழ்த்தியது.
5) வீரம் தைரியம் :
மிகச் சிறந்த உடல் வலிமையை முகமது நபி பெற்றிருந்தார். பல போர்களில் இவரே தலைமையேற்று சென்று வெற்றியும் பெற்று வந்திருக்கிறார். மற்ற நாட்டு தலைவர்களைப் போல் அரண்மனையில் அமர்ந்து உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கவில்லை.
6) அளவான பேச்சு :
தேவைக்கு அதிகமான பேச்சு இவரிடம் இருக்காது. கேள்வி கேட்பவருக்கு அதற்குரிய பதில் மட்டுமே வரும். பதில்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்ததால் அவரின் தொழர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.
7) ஈகை குணம் :
தேவை என்று வந்தவர்க்கு இல்லை என்று எந்த நேரத்திலும் எவரையும் திருப்பி அனுப்பியதில்லை. இவர் பொருளாதாரத்தில் சிரமப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட பல வறிய குடும்பங்களை தன்னுடைய பொறுப்பில் பராமரித்து வந்தார்.
8) மதினாவில் அன்சாரிகள் இவருக்கும் இவரது தோழர்களுக்கும் சிரமமான நேரத்தில் செய்த உதவிகளை கடைசி காலம் வரை மறக்காமல் ஞாபகப் படுத்திக் கொண்டே இருந்தார்.
8) கல்கி உலகை நேர்வழிப் படுத்த வந்த ஆசான் :
கல்கியானவர் உலக மக்களை பாவங்களிலிருந்து மீட்பார்.உலக மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.
இதையேதான் குர்ஆனும் முகமது நபி அரபு மக்களுக்கு மட்டும் வழி காட்டியல்ல.உலக மக்கள் அனைவருக்கும் வழி காட்டியாக அனுப்பப் பட்டவர் என்று கூறுகிறது.
"முகம்மதே! நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்." - குர்ஆன் 34 : 28
9)குதிரை வாகனம் அவருக்கு கொடுக்கப் படும். கையில் வாள் வைத்திருப்பார்.
முகமது நபியின் வாகனம் அதிகமாக குதிரையாகவே இருந்தது. அவர் தன்னிடம் எப்போதும் பாதுகாப்புக்காக வாள் ஒன்றையும் வைத்திருந்தார்.
10) கல்கி தீய காரியங்களை வென்றெடுப்பார்.
முகமது நபி அவதரித்த அந்த காலம் "அய்யாமுல் ஜாஹிலிய்யா" அதாவது "அறியாமைக் காலம்" என்று வரலாறுகளில் சொல்லப் படுகிறது. குடி கொள்ளை ஓயாத போர் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல் - பெண் குழந்தை பிறந்தால் சமூகத்தில் முகம் காட்ட கூச்சப் பட்டுக் கொண்டுபல நாட்கள் வீட்டை விட்டே வெளியேறி விடுதல் போன்ற பல அரக்க குணங்கள் நிறைந்த அந்த அரபுகள் மத்தியில் முகமது நபி தோன்றுகிறார். நபியானதற்கு பிறகு சில வருடங்களிலேயே அதிசயத் தக்க மாற்றங்களை அரபுக்கள் மத்தியில் உண்டாக்குகிறார். அனைத்து தீய பழக்கங்களும் அவர்களிடமிருந்து நீங்குகிறது.
11) கல்கி நான்கு தோழர்களின் துணை கொண்டு தீமைகளை வென்றெடுப்பார்.
முகமது நபிக்கு ஆரம்ப காலம் முதல் இறப்பு வரை தீமைகளை எதிர்த்து போரிடுவதில் நான்கு பேர் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் முறையே அபுபக்கர்- உமர் - அலி- உஸ்மான் ஆவர். இவர்கள் முகமது நபியின் மறைவுக்குப் பிறகுஇஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு ஜனாதிபதியாக இருந்து திறம்பட நிர்வாகம் செய்து வந்தனர். இந்த நால்வரையே மேலே சுட்டிக் காட்டப் படுகிறது.
12) கல்கி தேவர்களால் உதவி செய்யப்படுவார்
முகமது நபி பத்ர் என்ற போர்க் களத்தில் போரிடும் போதுசிரமமான நேரத்தில் வானவர்களை இறைவன் துணைக்கு அனுப்பினான். இதை குர்ஆனில் பின் வருமாறு கூறப்படுகிறது.
"நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது உங்களுக்கு பின்னால் அணி வகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதபுபவன்" என்று உங்களுக்குப் பதிலளித்தான்." - குர்ஆன் 8 : 9
"நீங்கள் தாழ்ந்த நிலையில் இருந்த போது அல்லாஹ் பத்ர் களத்தில் உங்களுக்கு உதவி செய்தான். எனவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவனை அஞ்சுங்கள்." - குர்ஆன் 3 : 123
கல்கி என்று சொல்லப் பட்டது முகமது நபிதான் என்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளேன். கல்கி என்பவர் முகமது நபி அல்ல என்று வாதிடுபவர்கள் அதற்கான விளக்கத்தைத் தர கடமைப் பட்டுள்ளார்கள். என் கருத்தில் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
இறைவனே மிக அறிந்தவன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.
Subscribe to:
Posts (Atom)