Followers

Sunday, August 19, 2018

நம் பாரத நாடு எங்கு செல்கிறது?

நம் பாரத நாடு எங்கு செல்கிறது?
20 அதி பயங்கர வெடி குண்டுகள், 22 டெடனேடர்கள், 2 லிட்டர் விஷம் , இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப் பட்டன எங்கு? ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான சனாதன் ஹிந்து ஆர்கனைசேஷனிடமிருந்து. இந்த அமைப்பின் தலைவரையும் காவல் துறை கைது செய்தது?
இந்த நாட்டை சுதந்திர தினத்தன்று வெடி குண்டுகளால் துளைக்க நினைத்த ஒரு அதி பயங்கர இந்துத்வாவாதியை விடுவியுங்கள் என்று ஆர்எஸ்எஸ் அபிமானிகளால் போராட்டம் நடத்தப்படுகிறது? இது இந்த நாட்டை எங்கு கொண்டு விடும்? இவர்கள்தான் தேச பக்தர்களா? 'வந்தே மாதரம்' என்று கோஷமிட்'டுச் செல்கின்றனர். நாட்டை அழிப்பவன்தான் இது போன்ற கோஷத்தை அடிக்கடி முழங்குகிறான்.
கேரள வெள்ளத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தமிழகத்திலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் சாரை சாரையாக செல்கின்றனர்.
ஆனால் இந்துத்வாவாதிகளோ இந்த நாட்டை வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து அதில் இன்பம் காண்கிறார்கள். இங்கு யார் தேச பக்தர்கள் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


உயிர்களிடம் அன்பு வைப்போம்.

உயிர்களிடம் அன்பு வைப்போம்.
சில நாட்களுக்கு முன்பு நான் தங்கியுள்ள அறையில் வெளிக் காற்று வரட்டும் என்று ஜன்னலை திறந்தேன். என்ன அச்சர்யம்? ஒரு புறா தனது முட்டையை இட்டு ஜன்னலின் இடுக்கில் ஒரு குஞ்சை பொறித்துள்ளது. என்னை பார்த்தவுடன் அந்த குஞ்சு முதலில் மிரண்டது. தாய் புறாவானது ஜன்னலை திறந்தவுடன் பறந்து போய் விட்டது. குஞ்சானது இவன் நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று சர்வ சாதாரணமாக ஒரு அலட்சிய பார்வை என்னை நோக்கி பார்த்தது. ஜன்னலின் சிறிய இடுக்கின் மூலமாக வரும் ஏசி காற்றின் சுகத்தில் மூழ்கிப் போயிருந்தது அந்த குஞ்சு.
உடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை வெட்டி அது குடிக்க தண்ணீர் வைத்தேன். வேறொரு பிளாஸ்டிக் டப்பாவில் வயர்களை கொண்டு கம்பியில் கட்டி அதனுள் சில நுணுக்கிய கோதுமை துகள்களை போட்டு வைத்தேன். தற்போது வெளியில் உணவு கிடைக்காத போது தாயும் குஞ்சும் நான் வைத்த கோதுமையையும் தண்ணீரையும் குடித்துக் கொள்வார்கள்.
பாலைவன தேசமான சவுதியில் எங்கு பார்த்தாலும் மரங்களை வளர்த்ததால் குருவிகள் தற்போது நிறைய தென்படுகின்றன. சிட்டுக் குருவிகளும் ஆங்காங்கே பார்க்கிறேன். ஆனால் நமது தமிழகத்தில் தற்போது சிட்டுக் குருவிகளின் வாசத்தையே பார்க்க முடிவதில்லை.
இங்கு பாலைவனம் சோலை வனமாகிறது: நாமோ சோலைவனத்தை பாலைவனமாக்கி வருகிறோம்.
-----------------------------------------
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (71)
விளக்கம்:
அன்பை தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியுமா? அன்புள்ளம் கொண்டவர்களின் சிறு கண்ணீரே அவர்களது அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.




Saturday, August 18, 2018

துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்

'துபாயின் முன்னேற்றத்தில் கேரள மக்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஹஜ் பெருநாள் வேறு நெருங்குகிறது. இந்த நேரத்தில் கேரள மக்கள் அளவிலா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை. துபாய் மக்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை தந்துதவுங்கள். துபாய் அரசும் பொருளாதார உதவிகளை அனுப்பி வைக்கும்.'
இவ்வாறு துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ட்விட்டரில் கேரள முதல்வர் பினராய் விஜயன் 'காலத்தினால் செய்த இந்த அளவிட முடியாத உதவியை வாழ்நாளில் நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம். இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-08-2018
கேரள பத்திரிக்கை மாத்யமமில் வந்த செய்தி
The UAE Prime Minister and ruler of the Emirate of Dubai Mohammed bin Rashid Al Maktoum has made a request to the people through social media. The Indian state of Kerala is witnessing huge flood, the most devastating of a century. Ahead of Eid Al Adha, do not forget to extend a helping hand to our brothers, he tweeted.
To help the flood victims, UAE and Indian national will work unitedly. To provide immediate help, a committee has been formed. He has requested everyone to contribute generously to the initiative.
People of Kerala have been with UAE for its progress always and UAE is liable to help and support the flood-affected people, said the PM in his post.
The request has been made in Arabic, English and Malayalam through Facebook and Twitter. Thousands of people have thanked the leaders' generosity in the social media platform


கத்தார் 35 கோடி...

கத்தார் 35 கோடி...
கேரள அரசின் வெள்ள நிவாரண நிதிக்காக கத்தார் அரசு சார்பில் 50 லட்சம் டாலர் (ரூபாய் 34.89 கோடி) அனுப்புவதாக கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்தானி அறிவிப்பு.. மேலும் கத்தார் சாரிட்டி மூலம் 40 லட்சம் ரியால் (7.6 கோடி) மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும் வழங்கவும் கத்தர் அரசு சார்பில் அனுப்பவும் அறிவுறுத்தல் செய்துள்ளார்..


ஜஹாங்கிர் பாபா

நம்மில் எத்தனை பேருக்கு இந்தியாவின் விஞ்ஞானிகளின் முன்னோடியான ஜஹாங்கிர் பாபாவைப் பற்றித் தெரியும்?
இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப் படுகிறாரென்பதும் மறக்கடிக்கப் படுகிறாரென்பதும் வேதனைக்குரியது.
========================
அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
========================
அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மாணித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909-ல் பிறந்தவர்.
குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது.
----------------------------
எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.
----------------------------
1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதியCascade Theory of Electron Showersஎன்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது.
----------------------------
Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன.
------------------------------
பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.
------------------------------
31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.
------------------------------
Atomic Explosion, Production of Isotopes, Purification of Uraniumமுதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தைஇவர்.
------------------------------
நாடு சுதந்திரமடைந்ததும்Atomic Research Centreஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.
------------------------------
மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார்.
இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது.
1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.
------------------------------
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின.
------------------------------
இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
------------------------------
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
------------------------------
18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.
------------------------------
அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா.
------------------------------
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா.
இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' (Bhabha Atomic Research Centre )எனப் பெயரிடப்பட்டது.
------------------------------
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்தது. என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே!
நன்றி :இனிய திசைகள் மாத இதழ் ஜனவரி 2009