Followers

Wednesday, December 18, 2019

விகடன் பத்திரிக்கையில் சாவர்க்கர் பற்றி!

விகடன் பத்திரிக்கையில் சாவர்க்கர் பற்றி!
அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்' அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.
ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே, இப்போது பேசுவதுதான் சரி!
அவர் சிந்தனைவாதிதான்! ஆனால், அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்... `எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல’. ஒரு தேசியத்துக்கு கொடுக்கப்படும் `Motherland, Fatherland' என்ற கருத்துரு வாக்கங்களைத் தாண்டி, `Holy land' என்ற கருத்துரு வாக்கத்தை கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர். அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம். இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக்கூட அவர் இறங்கியிருக்கிறார். மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்கு கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.
போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். காந்தி 'Power to people' என்று சொன்னார். சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு `Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது. பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’
இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர்தான்! விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம் (Hinduism)’ என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர். இந்துயிஸத்தை, இந்துமதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றி பேசுவது, அதன் தத்துவங்களை பரப்புவது என்று வரையறுக்கலாம். ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது. இதை நோக்கியே, அந்த 'Holy land' என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.
இந்தியாவை முழுவதுமாக `இந்துமயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர். `Hinduise all politics, Militarize Hinduism' என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலை செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others' என்று அழைத்து, `Self' எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார். அவருடைய, 'Hindutva : Who is a Hindu' புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் 'Mein kampf' புத்தகத்துக்கு இணையானது!
சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான். Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர். அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே இந்து மக்களை ஒருங்கிணைக்கும்’ என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார். கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டுமானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்! இந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு இந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.
சாவர்க்கரின் இந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அது இருக்கும். ஏனென்றால், இந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடு’ இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல் கிறார் சாவர்க்கர். அந்த இந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும்கூட இந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே. `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தை துறந்துவிட்டு, ராமவழிபாட்டுக்கு மாற வேண்டும்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் சாவர்க்கர். `வறண்டு கிடந்த இந்து மதத்தை, சாதிதான் செழிப்பாக்கியது’ என்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர். அவரது தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே. ஆங்கிலத்தில் `Escapism' என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல்வாதம்! இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது. இந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர்களின் கடமை அடுப்பங்கறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுதல் மட்டுமே’ என்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம். இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
விகடன்
18-12-2019
சாவர்க்கரின் கனவு திட்டத்தை செயல்படுத்தத்தான் தற்போது CAB, NRC போன்ற சட்டங்களை அமித்ஷா செயல்படுத்த துடிக்கிறார்.
இதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சியையும் தடுக்கலாம் என்று பார்க்கிறார். அதாவது குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக பெருந் தொகையான இஸ்லாமியர்கள் தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார் அமித்ஷா! முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக இஸ்லாத்தை நினைக்கின்றனர். குடியுரிமைக்காக தங்களின் நம்பிக்கையை ஒருக்காலும் விட்டுத் தர மாட்டார்கள்.
எப்படி பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, முத்தலாக், ராம ஜென்ம பூமி என்று வரிசையாக இந்துத்வா தோல்வியை தழுவியதோ அது போல் குடியமர்வு சட்டத்திலும் தோல்வியை தழுவும். இதனை நாம் பார்க்கத்தான் போகிறோம்.


1 comment:

Dr.Anburaj said...

அன்புள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்,
உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு வயது இல்லை என எண்ணி இருந்தேன்.. ஆனால் 86+9 கூட்டினால் 95 வரும் என எனக்கு நன்றாக தெரியும்.. எனவே 97 என கூறிய உங்களுக்கு கடிதம் எழுதுவதில் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன்..

நான் இப்போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியார் பள்ளியில் பயின்று வருகிறேன்.. என்னுடைய ஊரில் இருந்து மட்டும் எங்கள் பள்ளியில் 14மாணவர்கள் பயின்று வருகிறோம்.. அனைவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் வருடத்திற்கு எங்கள் பெற்றோர்கள் 30ஆயிரம் செலவு செய்து எங்களை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். எனது தந்தை இதே பள்ளியில் வாகன ஓட்டுநராக பணி புரிகிறார்.. எனவே எனக்கு மட்டும் 5000ரூபாய் குறைவு போக வருடம் 25ஆயிரம் ரூபாய்.. சரி..உங்களிடம் கேட்பது ஒன்று தான், ஆனால் மற்றவர்களை போல விவரம் தெரியாமல் கேட்கவில்லை.. மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் நவோதயா பள்ளிகளை ஏன்..?? வரவிடாமல் தடுக்கிறீர்கள்?? பக்கத்து தமிழர் மாநிலமான புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள் இருக்கிறது?? அண்டை மாநிலங்கள் அனைத்திலும் இருக்கிறது.. ஏன் தமிழகத்தில் மட்டும் இல்லை.. நவோதயா பள்ளிகளால் பயன் பெற போவது உங்களை போன்ற கோடீஸ்வர குடும்பங்கள் இல்லை.. எங்களை போன்ற ஏழை, நடுத்தர கிராமபுற மாணவர்களே.. உங்களுக்கு மட்டும் அல்ல நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் அனைத்து அரசியல்வாதிகளையும் கேட்கிறேன்.. புதுச்சேரி நவோதயா பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்து விட்டார்கள்.. ஆனால் தமிழக அரசு பள்ளிகளில் பயின்ற எத்தனை மாணவர்கள் தேர்வானார்கள் சொல்ல முடியுமா..??

ஹிந்தி பயின்றால் தமிழ் அழியும் என்று சொல்லி எங்களை இன்னும் ஏமாற்றாதீர்கள்.. இந்தி படித்தால் உங்கள் குடும்பம் அழியும் ன்னு சொல்லுங்க அதுதான் சரியாக இருக்கும்.. தமிழர்களை வாழ விடுங்கள் யார்..? என்ன படிக்க வேண்டும் என்பது அவர்களது உரிமை.. தயவு செய்து மாணவர்கள் எங்களது வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.. நாளை நானும், எனது தம்பியும் என்னை போன்றவர்களும் நவோதயா பள்ளியில் பயிலும் வாய்ப்பை கெடுத்து உதயநிதி மகனும், மகளும் மட்டுமே முன்னேறும் வாய்ப்பை ஏற்படுத்தாதீர்கள்..

நன்றி..!! வணக்கம்..!!

. இப்படிக்கு
B. சாதனாஸ்ரீ

நல்லா எதையோ கழற்றி அடிச்சமாதிரி. இல்லே.. இந்த மாணவி கேட்ட கேள்வி..

Share பண்ணுங்க அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்..