Followers

Monday, December 16, 2019

இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தலை சாய்ப்போம்!

இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தலை சாய்ப்போம்!
டெல்லி ஜாமியா மில்லியாவில் காவல் துறையை துணிவுடன் எதிர்த்து நின்று போராடிய இரண்டு மாணவிகளை நாம் பார்த்திருப்போம். அந்த கேரள மாணவிகளை பர்கா தத் பேட்டி காணும் போது 'காவல் துறையை துணிவுடன் ஒரு பெண்ணாக எப்படி எதிர் கொண்டீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு அந்த இரண்டு இளம் பெண்களும்...
'நாங்கள் நேர்மையின் பக்கம் இருக்கிறோம். காவல்துறையை கண்டு ஏன் பயப்பட வேண்டும்? நாங்கள் பயப்படுவது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே. எங்கள் தலை இறைவன் முன் மட்டுமே சாயும்' என்று எந்த சஞசலமும் இன்றி பதிலுரைக்கின்றனர். இத்தகைய உறுதியை கொடுத்தது குர்ஆன் என்றால் மிகையாகாது.
தங்களின் சக மாணவரை காப்பாற்றிய ஃபர்ஜானா, ஆயிஷா என்ற இந்த இரு இளம் மாணவிகளுக்கு வாழ்வில் சிறந்த இடத்தை இறைவன் தந்தருள்வானாக!


1 comment:

Dr.Anburaj said...

1000 பேர்கள் ஒரு குழுவாக இருந்து காவல்துறையை மிரட்டுவதுபோல் நடந்து கொள்வது வீரம் அல்ல. பல பெண்கள் கரப்பான் புச்சியை அடிக்கும் திராணி இல்லாதவர்களாக உள்ளார்கள். சிறுபாம்பை கொல்வார்களா ?

நரேந்திர மோடியும் திரு.அமித்ஷா ஆகிய இருவரும் கொள்கைபிடிப்பு கொண்ட வைர நெஞ்சங்கள் கொண்டவர்கள். சலசலப் பிற்கெல்லாம் அஞ்ச மாட்டார்கள்.குடியுரிமை சட்டம் செயல்படுத்தப்படும்.