Followers

Wednesday, December 11, 2019

நம்மை நோக்கியே பாயும் தோட்டாக்கள் எதனால்?

நம்மை நோக்கியே பாயும் தோட்டாக்கள் எதனால்?
...........................................
அச.உமர் பாரூக்
..,........................
இந்தியாவில் எல்லா சிறு மதங்களையும் இந்துத்துவம் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது...
இஸ்லாத்தை மட்டும் அவர்களால் நெருங்கவோ நசுக்கவோ முடியவில்லை
ஏன் தெரியுமா?
சனாதான பாசிச கோட்பாடுகளை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தும் சக்தி இஸ்லாமுக்கு இருப்பதை பாசிசம் பதை பதைப்போடு பார்க்கிறது
நூறு ஆண்டு காலமாக இஸ்லாத்தை வீழ்த்த போராடி போராடி தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்...
சமத்துவம்,சகோதரத்துவம்,சமூக நீதி இங்கே கொட்டிக் கிடக்கிறது.....
பாசிசத்தால்...
"ஏய்" என்று அழைக்கப்பட்ட என் தொப்புள் கொடி உறவுகளான ஒடுக்கப்பட்ட சகோதரன் இஸ்லாத்தை ஏற்றவுடன் "பாய்" என்று அழைக்க வைப்பது இந்துத்துவத்தின் உறக்கத்தைக் கலைக்கிறது....
எப்படியோ வாழ்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றவுடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நியதிக்குள் வந்துவிடுகிறான்
இஸ்லாம் அல்லாத பிற மதங்களை ஏற்பவர்கள் இத்துனை கட்டுப்பாட்டிக்குள் செல்வதில்லை என்பது பாசிசத்திற்கு சற்று ஆறுதலானவை... அதனால்தான் முதல் இலக்காய் முஸ்லிமை குறி வைக்கிறார்கள்
தன்மானம்,சுயமரியாதை பேணுவதில் முஸ்லிம் முந்துகிறான்... இதுதானே அவனுக்குப் பிடிக்காதவை... அதனால்தான் சித்தாந்த எதிரியாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பார்க்கிறான்
அரசியல் அதிகாரம் என்பதைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஓரளவிற்கு சுயமரியாதையோடே வாழ்வதாலும்
அடிமைத்தனம் என்பது முஸ்லிகளின் ரத்தத்திலேயே கலக்காத ஒன்று என்பதாலும் அவனுக்கு ரத்தம் கொதிக்கிறது
இந்துத்துவத்தின் எதிர்மறை சித்தாந்தம் இஸ்லாம் என்பதால் அவனால் அதை ஜீரணிக்கமுடியவில்லை
உயர் அந்தஸ்தில் உள்ள சாதி இந்துவைக்கூட சமமாக அமர வைக்க சனாதனம் இடம் தருவதில்லை...
ஆனால் அது ஒரு நல்ல முஸ்லிமிடம் நடக்காது என்பது நிகழ்கால சாட்சியங்கள்
உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்பதெல்லாம் இஸ்லாத்தில் இல்லை இருக்கவும் கூடாது....
பாசிசம் "பாய்"களை மட்டும் குறிவைத்து பாய்ந்து பிராண்டுவது இதனால்தான்
மற்றபடி தேச விடுதலையிலும்,தேச நலனிலும்,விடுதலைப்போராட்ட களத்திலும் முஸ்லிம்களின் கால் தூசு அளவில்கூட அவர்களின் பங்களிப்பு இல்லை
வரலாறு முழுக்க அவர்களின் துரோகமும் முஸ்லிகளின் தியாகமும் நிரம்பிக்கிடக்கிறது..
அதை மறைக்கவும்,மாற்றவுமே இப்போது வெறியோடு பயணிக்கிறார்கள்
இதையெல்லாம் கண்டு பயந்து நடுங்கி ஒடுங்க நாங்கள் ஒன்று வந்தேறிகளும் இல்லை
எதிர் கொள்ள முடியாத கோழைகளும் இல்லை
இது எங்கள் முப்பாட்டன் உதிரம் சிந்தி உருவாக்கிய நாடு...
தேசத்திற்காக எங்கள் முன்னோர்கள் தங்கள் உடல்,பொருள்,ஆவி அனைத்தையும் தந்து உருவாக்கி இருக்கிறார்கள்
நீ வீசும் ஒவ்வொரு தோட்டாக்களும்
எங்கள் மார்புகளில் பட்டு தெரித்தோடுமே ஒழிய
அச்சப்பட்டு அடங்கிவிடாது... எச்சரிக்கை!




1 comment:

Dr.Anburaj said...

சமத்துவம்,சகோதரத்துவம்,சமூக நீதி இங்கே கொட்டிக் கிடக்கிறது.....

ஆம்.அரேபியாவில் கொட்டித்தான்கிடக்கின்றது.முஹம்மது 60 போர்களை நடத்தினாா்இஅனைத்தும் சகோதரத்துவம்தான். ஒட்டகப்போரை முஹம்மதுவின் மருமகனுக்கு எதிராக முஹம்மதுவின் மனைவி-சின்ன மாமி - ஆயிசா நடத்தினாா்.அன்பு சமத்துவம் சகோதரத்துவம் காப்பாற்றப்பட்டது ???? .முஸ்லீம்களும் முஸ்லீம்களும் போரிட்டு செத்தது 5000-10000 முஸ்லீம்கள்.அலி ஆட்சி அலங்கோலம். கா்்பாலாவில் முஹம்மதுவின் குடும்பம் அழிக்கப்பட்டது.
இசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்று ஓங்கி கூவுங்கள்.. யாராவது ஏமாந்தவன் நம்பட்டும்.