Followers

Monday, December 02, 2019

இந்திய பொருளாதாரம் இனி அரபு நாடுகளை நோக்கி!

இந்திய பொருளாதாரம் இனி அரபு நாடுகளை நோக்கி!
அமீத்ஷா, மோடி கும்பல்கள் இந்தியாவிலிருந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் சுத்தமாக துடைத்தெறிய அரும்பாடு பட்டு வருகின்றனர். ஆனால் இந்திய பொருளாதாரமோ இனி சவுதி அரேபியா, அமீரகம், போன்ற அரபு நாடுகளை நம்பியே காய் நகர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரபு நாடுகளிலிருந்து நாம் ஒவ்வொரு மாதமும் அனுப்பும் பணத்தில் கிடைக்கும் கமிஷனை வைத்துதான் இனி மோடி அமீத்ஷாக்களுக்கு மாத சம்பளமே போட முடியும். அந்த நிலைமையை நோக்கித்தான் நமது நாடு சென்று கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் க்ரீன் கார்டு வாங்கிக் கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகி விட்ட அம்பிகள் மாதா மாதம் இந்தியாவுக்கு பணம் அனுப்பப் போவதில்லை. ஏனெனில் குடும்பம் குழந்தைகள் அனைத்தையும் சமாளிப்பதற்கே அவர்களின் சம்பளம் சென்று விடும். ஆனால் அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்களோ தங்கள் செலவுக்கு சொற்ப தொகையை வைத்துக் கொண்டு மீதியுள்ள பணம் முழுவதையும் தாயகத்துக்கு அனுப்பி விடுகின்றனர்.
உலகிலேயே வெளி நாட்டு பணம் அதிக அளவில் கொட்டக் கூடிய முதல் நாடாக இந்தியா உள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பெறுகிறது. அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு மாதம் பணம் அனுப்பாமல் நிறுத்தி விட்டோம் என்றால் இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும். யாரை விரட்ட மோடியும், அமீத்ஷாவும் திட்டமிடுகிறார்களோ அவர்கள் மூலமாக இந்திய நாட்டை இறைவன் அபிவிருத்தி அடையச் செய்கிறான். இத்தனை பொருளாதார நெருக்கடியிலும் பல மில்லியன் டாலர்களுடன் தொழில் தொடங்க அரம்கோ(சவுதி அரேபியாவுக்கு சொந்தமானது) முன் வந்துள்ளது. இதன் மூலம் சரியும் பொருளாதாரம் ஓரளவு தூக்கி நிறுத்தப்படலாம். இந்துத்வாவை ஆதரிக்கும் சொற்ப இந்துக்களுக்கும் (அன்பு ராஜ் போன்றவர்களுக்கு) இந்த உண்மைகள் எல்லாம்  புரிய வரும் காலத்தில் மோடியும் அமீத்ஷாவும் செல்லாக்காசாகிப் போவார்கள். அதனை நம் காலத்திலேயே காணலாம்.
ஹிந்தி தெரிந்தவர்கள் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். பல உண்மைகளை புரிந்து கொள்வீர்கள்.
ஆக்கம்: சுவனப்பிரியன்


1 comment:

Dr.Anburaj said...

அரபு நாடுகளில் பணி புரியும் இந்தியர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு மாதம் பணம் அனுப்பாமல் நிறுத்தி விட்டோம் என்றால் இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு விடும்.
-------------------------
நிறுத்தினால் உங்கள் குடும்பம்தான் ஆட்டம் போடும்.பிச்சை எடுக்கும். அரசு அல்ல.ரொப்பவும் பிற்ற வேண்டாம்.அரபு நாட்டான் பணத்தையும் பெட்ரோலையும் பாலைவனத்து மண்ணையும் வைத்து என்ன செய்வான் ? ஒட்டகத்து சிறுநீரைக்குடித்து கொலைகள் செய்து வாழ்ந்த காட்டுமிராண்டிகள் கூட்டத்தினருக்கு தன் மண்ணில் இருக்கும் பெட்ரோலை எடுக்கும் அறிவு உண்டா ? அத்தனையும் வெளிநாட்டு கம்பெனிகள்.அனைவரையும் வெளியேற்றிட அரபிக்காரனுக்க துணிச்சல் உண்டா ? மீண்டும் ஓட்டக நீா் கிடைக்கும்.குடித்து காலம்ஓட்டுவான்.
அந்நியர்களின் உழைப்பில் கொடி கட்டிவாழும் முட்டாள் கூட்டம்.தின்பது பெண்களோடு சல்லாபிப்பது தவிர வேறு என்ன தெரியும் இந்த அரபிகளுக்கு.

பெட்ரோல் வளம் அதிககாலம் ஓடாது என்று உணா்ந்து விஞ்ஞானம் பக்கம் சற்று தலை வைத்து படுத்து மேலை நாடுகளின் உதவியோடு சிறிய முயற்றிகளில் ஈடுபட்டு வருகின்றனா். விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

வாழ்க. அரபியர்கள் யாரும் தங்களின் சாதனை குறித்து சுவனப்பிரியன் போல் பிற்றிக் கொள்ள மாட்டார்கள்.ஒருவருக்கொருவா் உதவுவதுதான் பொருளாதரம்.
முஸ்லீம்கள் இந்துக்களை அழித்து இருப்பதுதான் அதிகம்.இன்றும் பாக்கிஸ்தானில் பங்களாதேஷ்யில் இந்துக்கள் படுகொலை தொடா்கதை. யாராவது தட்டிக் கேட்பார்களா ?

திரு.மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவரும் அநீதியை தட்டிக் கேட்பார்கள்.ஆயிரம் வந்தாலும் இந்துக்களுக்கு அநீதி ஏற்பட்டால் எதிர்த்து நிற்போம். சவால் சந்திக்க தயாா்.