Followers

Wednesday, August 19, 2020

"பாசிசத்தின் நீதி படுகொலை"

 "பாசிசத்தின் நீதி படுகொலை"


கொடுமை.


ஆளும் BJP அரசு கொண்டு வந்த சுற்றுசூழல் EIA 2020 சட்டத்தை விளக்கம் கேட்டு பதிவு செய்த ஒரே காரணத்திற்காக , சங்கிகளால் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட பெண்.


ஏன் BJP / RSS / சங்பரிவாரக் கும்பல்களை இந்திய குடிமக்கள் எதிர்க்க வேண்டும் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத்திரும்ப சாட்சியாக உள்ளன.


கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத கோழைகள்.


அன்று இந்தப் பெண்ணை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து அவர்கள் இன்று அய்யோ என்ற பதிவோடு அமைதி காத்து அடுத்த வேலைக்கு சென்று விடுவார்கள், ஆனால் இந்த பெண்ணிற்கு நீதி என்று ஒன்று இருந்தால், அதை யார் பெற்று தருவது.


சங்கிகளின் டார்கெட் : ஆண்களாக இருந்தால் தேசதுரோகி பட்டம், மாவோயிஸ்டு, பாகிஸ்தான் ஆதரவாளன் கடைசில் படுகொலை.


பெண்களாக இருந்தால் பலாத்கார மிரட்டல்,  கூட்டுகற்பழிப்பு, முகத்தில் ஆசிட் அடிப்பது, துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது.


ஆனால் இந்த சங்கிகளையும் ஆதரிப்பதற்கு என்று சில கும்பல்கள் உலாவிக் கொண்டு தான் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டுப் பெண்ணிற்கு எவ்வாறு அநியாயம் நடந்தால் ஏற்றுக் கொள்வார்களா ? மாட்டார்கள் தானே.


நடுநிலையாளர்கள் சிந்திக்கவும்.


இந்தியா ஒரு ஜனநாயக நாடு தானே அரசாங்கம் கொண்டுவரும் சட்டங்களை கேள்வி கேட்கக் கூடாதா ?அதற்கு கூட குடிமக்களுக்கு குறைந்தபட்சம் உரிமை இல்லையா?


அன்று கல்புர்கிகளையும், கௌரிலங்கேஷ்களையும், 

ஆசிபாவையும், 

அனிதாவையும் 


அசால்டாக விட்டதன் விளைவு இன்று தொடர்ந்துகொண்டிருக்கிறது.


இந்திய நடுநிலை பொதுமக்களே இதற்கு முடிவு கட்ட வேண்டும்.


பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை உடலளவிலும் மனதளவிலும் அத்துமீறி கொடுமைபடுத்துபவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை என்பதே தீர்வாக இருக்கும்.



1 comment:

Dr.Anburaj said...

அம்மணியின் பெயா் விலாசம் விபரங்கள் இன்றி ஒரு பதிவு ? அல்தக்கியா.