Followers

Thursday, March 25, 2021

பல முக்கிய தகவல்களை தருகிறது இந்த கட்டுரை!

பல முக்கிய தகவல்களை தருகிறது இந்த கட்டுரை!

 

 

காஷ்மீரை இரண்டாகப் பிரித்து காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்த போது கண்டு கொள்ளாமல் கடந்து போனார்கள் மோடியின் பல அடிவருடிகள்..

பாண்டிச்சேரியில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை செயல்பட. விடாமல் தொடர்ந்து துணைநிலை ஆளுநரான கிரண்பேடி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு வந்த போது நாராயணசாமி படும்பாட்டைப் பார்த்து குதூகலப்பட்டனர் காகபட்டரின் பல கையாட்கள்...

 

டெல்லி யூனியன் பிரதேசத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசை விட நியமிக்கப்பட்ட துணை ஆளுநருக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் சட்டத்தை மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு இயற்றிய போது அந்த நகர்வினால் ஏற்படப் போகும் அபாயத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் சீமான் போன்ற பல அரசியல்வாதிகள் அதைப் பற்றி வாயைத் திறக்காமல் தமிழநாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று வக்கணையாய் பேசிக் கொண்டு திரிந்தார்கள்.

 

இந்தியாவில் உள்ள டெல்லி, கல்கத்தா, மும்பை, சென்னை, ஹைதராபாத் போன்ற 5. பெருநகரங்களும் பிஜேபி வசம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே..

இந்தப் பெருநகரங்களை பாண்டிச்சேரியை கிரண்பேடியை வைத்து பிஜேபி ஆண்டது போல பிஜேபியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சென்னை உட்பட இந்தப் பெருநகரங்களை அந்தந்த மாநிலத்தில் இருந்து தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்து பிஜேபி நியமிக்கும் கிரண்பேடி போன்ற வடவர்கள் மூலம் ஆட்சி நடத்தவே யூனியன் பிரதேசத்தில் துணை ஆளுநருக்கு பிஜேபி அதிக அதிகாரம் தரும் சட்டத் திருத்தததை மோடி இயற்றியுள்ளார்..

 

அதன் விளைவு தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று தமிழ்தேசியம் பேசும் மோடியின் கைக் கூலிகள் சென்னை யூனியன் பிரதேசமான பின்பு தேர்தலில் வெற்றி பெற்று சென்னை யூனியன் பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் உண்மையாக சென்னை யூனியன் பிரதேசத்தை தங்கள் ஆளான துணைநிலை ஆளுநரின் மூலம் ஆள்வது தான் பிஜேபியின் மத்திய அரசின் திட்டம் அதனால் வட இந்திய கிரண்பேடிகளும் பன்வாரிலால் புரோகித்துகளுமே சென்னை போன்ற யூனியன் பிரதேசங்களின் உண்மையான ஆட்சியாளர்களாக இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை..

 

கிரண்பேடியினால் நாய் படாத பாடுபட்டார் நாராயணசாமி.

மத்திய. அரசை கையில் வைத்து இருக்கும் பிஜேபியின் இந்த அரசியல் நகர்வு தமிழ் தேசியவாதம் பேசும் சீமான் போன்றோருக்கு நாக்பூர் கொடுத்த மரணஅடி ஆகும்.

யூனியன் பி.ரதேசமாகப் போகும் சென்னையை இனி தேர்தலில்வெற்றி பெற்றாலும் தமிழனால் ஆள முடியாது என்பதும் 5 பெருநகரங்களும் இனி துணை ஆளுநர்கள் மூலம் வடவர்களால் ஆளப்படும் நிலை ஏற்பட்டு விடும் என்ற அபாயத்தையும் சீமான் போன்றவர்களால் இன்னும் விளங்கிக் கொள்ள முடியவில்லை...

தமிழ்தேசியம் என்ற கருத்தியலை மோடி ஒரே சொடுக்கில் கொன்று புதைத்து விட்டார் என்பது கூட இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்பது தான் பெருந்துயரம்..

 

இந்த அரசியல் நுட்பத்தைப் புரிந்து கொள்ளத் திராணி இல்லாத LOWLEVEL கோமாளிகள் தங்களை சரித்திரம் படைக்க முப்பாட்டன்களாலும் சித்தப்பன்களாலும் அனுப்பி வைக்கப்பட்ட தேவதூதர்கள் (CHOSEN ONE) என்று தங்களைத் தாங்களே பீற்றிப் பேசும் கொடுமைக்கு மோடியும் நாக்பூரும் நிரந்தரமாய் மரணஅடி கொடுத்து விட்டார்கள்.

 

இனி சென்னையைப் பொறுத்தவரை தமிழன் தான் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதெல்லாம் அர்த்தமற்ற வெற்றுக் கூச்சல் தான்..

 

சென்னையை தமிழ்தேசியம் இல்லாத சென்னையாக்கி விட்டார் மோடி..

இரண்டாவதாக,

 

சென்னை நீங்கலாக உள்ள தமிழ்நாட்டை தஷிணபிரதேசம் என்று பெயர் மாற்றப் போவதாக பிஜேபி தேர்தல் அறிக்கையில் அறிவித்ததோடு தஷிண பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள் இருக்கும் என்று கூறிப்பிட்டுள்ளது..

 

தப்பும் தவறுமாக திருக்குறளையும் அவ்வையின் பாடலையும் மேடையில் பேசி தமிழ் பற்றாளர் போல காட்டிக் கொண்ட மோடி தமிழ்நாடு என்ற பெயருக்கே ஆப்படிக்க வாய்ப்பிற்காகக் காத்து இருக்கிறார் என்பதையும் தமிழை ஒழித்து விட்டு ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியைத் திணிக்கும் பிஜேபியின் நாசகாரத் திட்டத்தின் விளைவு தான் இந்திப் பெயரை தமிழ்நாட்டிற்கு சூட்டுகிற சதிச் செயல் என்பதையும் விளங்கிக் கொள்வது சிரமமான காரியம் அல்ல..

 

தமிழ்நாட்டை  3 மாநிலங்களாக பிரித்து லடாக்கைப் போல டெல்லியின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ள பிராந்தியங்களாக மாற்றுவது தான் பிஜேபியின் தொலை நோக்கு பத்திரம் சொல்லும் படுபயங்கரமான செய்தி..

 

அந்த குழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் ( சாரி..தஷிணபிரதேசத்தின்) 3 பிராந்தியங்களும் நிரந்தரமாக டெல்லி அரசைக் கையில் வைத்து இருக்கும் வடவர்களின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் தான் எப்போதும் இருக்கும்...

 

அது தமிழ்தேசியத்தை அது பிறக்கும் முன்பே கருக்கலைப்பு செய்து விடும் என்பதைப் புரிந்து கொள்ளாத ஜென்மங்களின் அரசியல் அறியாமை மற்றும் நேர்மையின்மையையும் புரிந்து கொள்ளாமல கண்மூடித்தனமாய் நம்பும் துடிப்பும் லட்சியப் பிடிப்பும் உள்ள இளைஞர்கள் உண்மை தெரிந்ததும் அரசியலுக்கு முழுக்கு போட்டு விலகிக் கொண்டு விடுவார்கள் என்பது தான் கவலை தரும் விஷயம்..

நாளை தஷிண பிரதேஷின் மக்கள் தங்கள் தாய்மொழியையும் பண்பாட்டையும் தேசிய இன அடையாளங்களையும் மீட்க போராடினால் இங்கேயும் பல முள்ளிவாய்க்கால் நடக்கும். அதனால் தான் முள்ளிவாய்க்கலில் இனப்படுகொலை செய்த போர் குற்றவாளிகளை மோடி ஆதரிக்கிறார்... ஐநா பின் ஒரு நாளில் தங்களையும் போர்க் குற்றவாளிகள் என்று குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டித்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை தான் அதற்குக் காரணம்!

 

எது எப்படியோ .... பிஜேபிஆட்சி தொடர்ந்தால் இன்று நாம் காணும் தமிழகமாக ஆறு மாதம் கழித்து நாம் காணப் போகும் தமிழகம் இருக்காது என்பது மட்டும் உறுதி...

 

Gnanabharathi Chinnasamy

 

  

1 comment:

Dr.Anburaj said...

பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.பச்சை பொய்.

லடாக் பகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் சற்று பொருங்கள். லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து தருகின்றோம் என்று பாராளுமன்றத்தில் உறுதி அளித்துள்ளாா் நமது பிரதமா் அவர்கள்.