Followers

Showing posts with label சங்க இலக்கியங்கள். Show all posts
Showing posts with label சங்க இலக்கியங்கள். Show all posts

Sunday, October 19, 2014

தங்கமணிக்கு மேலும் சில விளக்கங்கள்!

தங்கமணி!

//ஷாலி, ஐஐஎம் கணபதி ராமெனல்லாம் இப்போது எப்படி பரிணாமவியல் தப்பு, குரான் சொல்லும் creationதான் சரி என்று சுபியை தாங்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.//

பரிணாமவியல் டார்வினின் ஒரு கற்பனை கோட்பாடே. நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை அல்ல. ஐரோப்பிய நாடுகளில் பல கல்லூரிகளில் பரிணாமவியல் பாடங்களை எடுத்து விட்டார்கள் என்ற செய்தி தங்கமணிக்கு தெரியுமா?

பரிணாமவியலை நிரூபிக்க அதன் அறிஞர்கள் எத்தகைய மோசடிகளில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பதற்கு 10க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன். அதை படித்து விட்டு அதன் பிறகு பரிணாவியலுக்கு வக்காலத்து வாங்க வரவும்.

suvanappiriyan.blogspot.com/2012/10/blog-post_18.html

//ஒரு இடத்தில் கூட உலகம் உருண்டை என்று நேரடியாக வரி குரானிலிருக்காது. அதே போல எந்த இடத்திலும் சூரியனைத்தான் பூமி சுற்றுகிறது. சூரியன் பூமியை சுற்றவில்லை என்று இருக்காது.//

'அவன் இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன்'
-குர்ஆன் 55:17

'கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்'
-குர்ஆன் 70:40

ஒரு பொருள் உருண்டையாக இருந்து சுழலும் போதுதான் இரண்டு கிழக்குகளும் இரண்டு மேற்குகளும் உருவாக சாத்தியம் உள்ளது.

'அவனே பூமியை பயன்படுத்த எளிதானதாக உங்களுக்கு அமைத்தான்.எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்.'
-குர்ஆன் 67:15

பூமி தட்டையாக இருந்தால் ஒரே பகுதியில்(மேற்பரப்பில்) மட்டுமே மனிதர்கள் செல்ல முடியும். இந்த பூமி உருண்டையாக இருந்தால்தான் மேல்,கீழ்,பக்கவாட்டு என்று 'பல பகுதிகளிலும்' மனிதர்கள் செல்ல முடியும்.

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

இது போன்ற மெகா அறிவியல் உண்மைகளை முகமது நபியால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இது போன்று நூற்றுக்கணக்கான அறிவியல் வசனங்களை என்னால் காட்ட முடியும்.

suvanappiriyan.blogspot.com/2009/03/blog-post_13.html

நாம் வாழும் பூமி கோள வடிவமாகவே உள்ளது என்பதை இந்த பதிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள்.

Wednesday, September 03, 2014

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?



(வட மாநிலங்களில் தலித் பெண்களை கற்பழிப்பதும் அதன் பிறகு அவர்களை தூக்கில் மாட்டி தொங்க விடுவதும் ஆதிக்க சாதிகளுக்குரிய இலக்கணம் என்ற பொது புத்தி அந்த மக்களிடம் வேருன்றி இருப்பதற்கு வட மொழியில் இயற்றப்பட்ட மனு ஸ்ருமிதியே காரணம் எனலாம்)

'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்பு?

செப்டம்பர் 5ம் தேதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள், ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த தினத்தில் “குரு உத்சவ்” கொண்டாடப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு மத்திய மனித வள ஆற்றல் துறை அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. இந்த சுற்றறிக்கையானது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மட்டும் அல்ல. கல்கத்தாவில் நிலைமை எப்படி என்பதையும் பார்போம்.

கோல்கட்டா: 'குரு உத்சவ்' எனும் ஆசிரியர் தினத்தன்று, பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மோடியின் உரையை கேட்க எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கு வங்க அரசு இதுவரை செய்யவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மோடியின் உரையை புறக்கணிக்க உள்ளன. இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மோடியின் உரையை கேட்க தேவையான உள்கட்டமைப்புகள் இங்கு இல்லை. ஆசிரியர் தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மம்தா ஆசிரியர்களை கவுரவிக்க உள்ளார் என கூறினார்.

இந்தியா என்பது தங்களுக்கு என தனியான கலாச்சாரம், மொழி, சமுக அமைப்பு ஆகியவற்றை கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்ற ஒரு துணைகண்டம். இந்த துணைகண்டம் ஒரே நாடாக உருவானதற்கு மொகலாயர்களும் ஆங்கிலேயர்கள்தான் முக்கிய காரணம். சுதந்திரத்திற்கு பிறகு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் எல்லா தேசிய இனங்களும் வாழ்ந்து வருகின்ற இந்தியாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் இந்தியா என்பது இந்தி அல்லது சமஸ்கிருதம் பேசுகின்றவர்களுக்கு மட்டுமே உரியது போல நினைத்து மற்ற தேசிய இனங்கள் அவர்களை சார்ந்து வாழ வேண்டும் அல்லது அவர்களது ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இதை மறுப்பவர்கள் தேசிய விரோதிகள் என நினைத்து செயல்படுகிறார்கள். இது பல இனங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நமது இந்தியாவை கூறு போடும் நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.

பல மொழிகளை கற்றுக் கொண்டால் நன்மைதானே? இதில் என்ன பிரச்னை என்று கேட்பவர்களுக்கு சில விளக்கத்தை தர முயற்சிக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஆங்கில மொழி, அரபு மொழி, உருது மொழி, கன்னட மொழி, தெலுங்கு மொழி போன்ற பல தரப்பட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் பல கல்வி சாலைகள் சிறப்பாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதனை யாரும் எதிர்க்கவில்லை. அந்த மொழி பேசுபவர்களோடு அண்ணன் தம்பிகளாக தமிழர்கள் பழகியே வருகின்றனர். இந்து மதத்தின் ஒரு அங்கமாக பார்க்கப்படும் வட மொழியான சமஸ்கிரதத்தை மட்டும் ஏன் தமிழர்கள் வெறுக்க வேண்டும்? அதற்கான காரணம் என்ன?

ஆங்கில மொழியோ, அரபு மொழியோ அல்லது உருது மொழியோ தமிழனின் வாழ்வோடு சம்பந்தப்படாத ஒன்று. வருமானத்திற்காகவும், வேலைக்காகவும் விரும்பியவர் படித்துக் கொள்ளலாம். விரும்பாதவர் விட்டு விடலாம். ஆனால் வட மொழியின் வரலாறு அப்படியா?

கண்டிப்பாக இல்லை. ஆரிய படையெடுப்பினால் தமிழன் எழுதிய எத்தனையோ லட்சக்கணக்கான ஓலைச் சுவடிகள் பொக்கிஷங்கள் சூறையாடப்பட்டன: பல நெருப்பில் இட்டு கொளுத்தப்பட்டன: மேலும் பல ஆறுகளில் கொட்டி தண்ணீரோடு தமிழனின் கலாசாரத்தையும் விரட்டியது ஆரியம். அதன் காரணமாக கோவில்களில் இருந்த தமிழ் வழிபாடு துடைக்கப்பட்டு சமஸ்கிரத மந்திரங்கள் வலிந்து புகுத்தப்பட்டன.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்றும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றும் பரந்த மனப்பான்யோடு வாழ்ந்த தமிழனின் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட்டு மனிதர்களை பிளவு படுத்தும் வர்ணாசிரம கோட்பாடுகளை இறக்குமதி செய்தது ஆரியம். தலையில் பிறந்தவன் பார்பான்: காலில் பிறந்தவன் சூத்திரன் என்று போதிக்கப்பட்டு தீண்டாமை வலிந்து புகுத்தப்பட்டது. வெற்றி பெற்ற ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தனை விலங்குகளை விடக் கேவலமாக நடத்தி அதனை சரியென்று மனு தர்மத்தை கொண்டு போதிக்கவும் செய்தனர். எத்தனையோ பெரியார்கள் முயற்சித்தும் இந்த ஆரிய மாயையை ஒழிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்ததனால் இன்று ஓரளவு பார்பனர் அல்லாதவர்கள் சில முக்கிய பொறுப்புகளில் அரசு வேலைகளில் அமர்த்தப்பட்டனர். இருந்தும் அவர்களையும் இயக்கும் முக்கிய பொறுப்புகளில் பார்பனியம் அமர்ந்து தங்களின் காரியத்தை தயக்கமின்றி நிறைவேற்றி வருகிறது.

அதன் வெளிப்பாடுதான் 'சமஸ்கிரத வாரம்' என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் அவ்வப்போது தமது அரிப்பைக் காட்டிக் கொண்டு பிறகு குட்டுப்பட்டவுடன் அதற்கு ஏதாவதொரு விளக்கத்தை கொடுத்து சமாளிக்கப் பார்க்கிறது பார்பனியம். எனவேதான் மற்ற மொழிகளை ஆதரிக்கும் தமிழர்கள் சமஸ்கிரதம் என்றால் காத தூரம் ஓடுகிறார்கள். இஸ்லாமியனான எனக்கு சமஸ்கிரதம் என்பது இறைவன் படைத்த பல மொழிகளில் ஒன்று என்று கருதி அதனையும் மதிக்கிறேன். ஆனால் இந்த சமஸ்கிரதத்தால் பாதிப்படைந்த கோடிக்கணக்கான திராவிடர்கள் நஞ்சாக இந்த மொழியை வெறுப்பது அவர்களை பொறுத்த வரை நியாயமான ஒன்றே. பாதிப்படைந்தவனுக்குத்தானே அதன் வலி தெரியும்.

எனவே மோடி ஆட்சியானது சரிந்து வரும் பொருளாதாரத்தை சரிகட்ட என்ன முயற்சியோ அதை எடுக்கட்டும். அதை விடுத்து கொலைகாரி சாது பிரக்யாசிங், கொலைகாரன் அசீமானந்தா, போன்றவர்களை பிணையில் விடுவிப்பதும் சமஸ்கிரத வாரம் என்றும் 'குரு உத்ஸவ்' என்றும் இந்துத்வா கொள்கைகளை மறைமுகமாக புகுத்த நினைத்தால் அது இந்து மதத்தை மேலும் பலவீனமாக்கும். தலித்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாத்தில் இணைவது அதிகரிக்கும். நமது இந்திய பொருளாதாரம் சாதி, இன, மொழி சண்டைகளால் மேலும் பலவீனமடையும்.

இந்தியாவை ஆண்ட மிக மோசமானவர்களில் ஒருவராக மோடி குஜராத் கலவரத்தின் மூலம் பெயர் எடுத்துள்ளார். அந்த பெயரை தனது சிறந்த ஆட்சியின் மூலம் மாற்ற மோடி முயற்சிக்கட்டும். அதை விடுத்து இது போன்ற முயற்சிகள் தொடருமானால் வரும் ஐந்தாண்டுகளில் திரும்பவும் காங்கிரஸ் அரியணை ஏறும். பிஜேபி என்ற ஒரு கட்சியே சுத்தமாக துடைத்தெறியப்படும். பிஜேபிக்கு சவக் குழி தோண்டும் இது போன்ற காரியங்களை இனியாவது இவர்கள் செய்யாதிருப்பார்களாக!

-------------------------------------------------

கற்பழிப்புகளில் விரைவில் இந்தியா முதலிடத்தை நோக்கி நகரும் அபாயம் – அதிர்ச்சி தகவல் :

தேசிய குற்ற ஆவண காப்பகம் National Crime Record Archive வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 3,425 பெண்கள் கற்பழிக்கப்பட்டு மத்திய பிரதேசம் முதலிட்டதிலும், 2,049 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும், 737 பெண்கள் கற்பழிக்கப்பட்டு தமிழகம் நான்காம் இடத்திலும் உள்ளன.

பெண்கள் தனித்து நடமாடுவதற்கு மிகவும் அச்சத்திற்குள்ளான நகரங்களாக டெல்லியும், பம்பாயும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏதோ பெரியார் போன்றவர்கள் இந்துத்வாவுக்கு தமிழகத்தில் முடிந்த வரை கடிவாளம் போட்டு வைத்திருந்ததனால் தமிழகம் முதல் இடத்தை பிடிக்காமல் தப்பித்தது.

Tuesday, January 28, 2014

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே


ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது

நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.

இவ்வளவு அழகாக ஓரிறைக் கொள்கையை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று பெரும்பான்மை தமிழர்களின் இறை வணக்கங்களை திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவு முரண்பட்டு உள்ளோம் என்பது தெரிகிறதல்லவா?



Tuesday, January 21, 2014

ஒன்பது வாய் தோல் பைக்கு - சித்தர் பாடல்

ஒன்பது வாய் தோல் பைக்கு ஒரு நாளைப் போலவே

அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே - வன் கழுக்கள்

தத்தி தத்தி சட்டை தட்டி கட்டி பிட்டுக்

கத்திக் குத்தி தின்னக் கண்டு



ஒன்பது வாய் = ஒன்பது வாசல் கொண்ட
தோல் பைக்கு = தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல்
ஒரு நாளைப் போலவே = ஒரு நாளைப் போலவே எல்லா நாளும்
அன்பு வைத்து = அன்பு வைத்து
நெஞ்சே அலைந்தாயே = அலைந்தாயே என் மனமே
வன் கழுக்கள் = வன்மையான கழுகுகள்
தத்தி தத்தி = தத்தி தத்தி கிட்ட வந்து
சட்டை தட்டி = சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து
கட்டி பிட்டுக் = ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு
கத்திக் = கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு
குத்தி = இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து
தின்னக் கண்டு = தின்ன கண்டும்

ஒன்பது வாசல் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல் ஒரு நாளைப் போலவே எல்லா நாளும் அன்பு வைத்து அலைந்தாயே என் மனமே! வன்மையான கழுகுகள் தத்தி தத்தி கிட்ட வந்து சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து தின்ன கண்டும்

இவ்வாறு அழுகி நாற்றமெடுக்கும் இந்த உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாவங்களை செய்கிறாயே என்று கண்டிக்கிறார்.

'வீடு வரை உறவு... வீதி வரை மனைவி.....

காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ....

என்று கண்ணதாசனும் பாடி விட்டுச் சென்றுள்ளார்.

கடைசி வரை வருவது நாம் உலகில் செய்த நன்மைகளும் தீமைகளும் என்ற உண்மையை உணராமலேயே கவிஞர் போய் சேர்ந்து விட்டார்.

Friday, January 17, 2014

திரு அருட்பா - கடவுளின் சுவை

இறைவன் எப்படி இருப்பான்? அவனை எப்படி அடைவது? என்று மனிதன் சிந்திக்காத நாளே இல்லை. நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய ஒரு தெளிவு இல்லாததால் அந்த இறைச் சுவை எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையில் விளைந்த பாடலை இப்போது பார்ப்போம்.

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
---------------------------------------------------

தனித்தனிமுக் கனிபிழிந்து = தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து

வடித்தொன்றாக் கூட்டிச் = அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து

சருக்கரையும் = கொஞ்சம் சர்க்கரை

கற்கண்டின் பொடியு = கொஞ்சம் கற்கண்டின் பொடி

மிகக் கலந்தே = நன்றாக கலந்து.

தனித்தநறுந் தேன்பெய்து = சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து

பசும்பாலும் = அதோடு கூட கொஞ்சம் பசும் பால்

தெங்கின் தனிப்பாலும் = மற்றும் தேங்காய்ப் பால்

சேர்த் = சேர்த்து

தொருதீம் பருப்பிடியும் விரவி = அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி

இனித்தநறு நெய்யளைந்தே = அது மேல நல்ல நெய் விட்டு

இளஞ்சூட்டின் இறக்கி = லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....

எடுத்தசுவைக் கட்டியினும் = அந்த கட்டி எப்படி சுவையாக இருக்கும்? அதை விட

இனித்திடுந்தெள் ளமுதே = இனிப்பாக இருக்கும் தெளிய அமுதே

அனித்தமறத் = அநித்தம் + அற. உண்மை நித்தியமானது. பொய் அநித்தியமானது. அந்த அநித்தியம் அற (விட்டுப் போக)

திருப்பொதுவில் விளங்குநடத் தரசே ! = பொதுவாக நடமிடும் அரசே

அடிமலர்க்கென் சொல்லணியாம் = உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த

அலங்கலணிந் தருளே = அணிகலனை அணிந்தருளே

------------------------------------------------------

தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் சர்க்கரை கொஞ்சம் கற்கண்டின் பொடி நன்றாக கலந்து சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து அதோடு கூட கொஞ்சம் பசும் பால் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி அது மேல நல்ல நெய் விட்டு லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....

அந்த கட்டி எப்படி சுவையாக இருக்குமோ? அதை விட உண்மையான இறைவன் நித்தியமானவன்: பொய்யான கடவுள்கள் அநித்யமானது:. அந்த அநித்தியம் என்னிடமிருந்து அகல பொதுவாக நடமிடும் அரசே! இறைவனே! உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த அணிகலனை அணிந்தருளே!

என்று திருவருட்பாவில் கடவுளைப் பற்றி பாடுகிறார்.

குர்ஆன் கூறுவதையும் பார்ப்போம்:

'இறைவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை: அவனுடன் எந்த கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் தனியாகப் பொயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இறைவன் தூயவன்'

-குர்ஆன் 23:91




Thursday, January 16, 2014

அற்புத திருவந்தாதி - இறைவனை காணாமலே காதல்

காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’


மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது.

அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.

இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன்.

என்னிடம், "உன்னுடைய இறைவன் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.

(பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்)

இறைவனை உளப்பூர்வமாக வணங்குவதற்கு நமக்கு முன்னால் இறைவனின் உருவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐந்து வேளையும் உருவம் இல்லாமலேயே இறைவனை உளப் பூர்வமாக வழிபடுவதை தினமும் பார்க்கலாம்.

1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு தமிழ் பாடல் இன்று எழுதியது போல் உள்ளதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். தமிழ் மொழியானது அந்த அளவு சிதையாதது இன்று வரை வாழ்ந்து வருகிறது.

------------------------------------------------------

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103


இந்த வசனத்தின் மூலம் இறைவனை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று அறிகிறோம். இறைவனை நான் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று உடன் சொல்லி விடலாம்.

நபி மொழியில் ஒரு இடத்தில் 'ஏழைகளுக்கு உணவளித்தால் அது இறைவனுக்கு உணவளித்தது போல் ஆகும்: ஏழைக்கு உடையளித்தால் அது இறைவனுக்கு அளித்ததாகும் அதாவது 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற தத்துவத்தை அழகாக சொல்கிறது. எனவே இஸ்லாமிய நம்பிக்கைபடி உலகிலேயே இறைவனை காண வேண்டுமானால் ஏழைகளுக்கு உதவிட விட வேண்டும் என்று இஸ்லர்ம் கட்டளையிடுகிறது. நற் கருமங்கள் செய்து நல் அடியார்களாக மரணித்தவர்களுக்கு மறு உலகில் இறைவன் தனது முகத்தை காட்டுவான். அந்த நல்ல நாளுக்காக நாம் அதிகமதிகம் நன்மைகளை செய்ய முயற்சிப்போமாக!

Tuesday, January 14, 2014

ஏக இறைவனை பறை சாற்றும் திருநாவுக்கரசரின் தேவாரம் !

திருநாவுக்கரசரின் தேவாரம் 3051.


என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்


இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை


சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்


சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்


ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே


உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்


பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்


புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.


5. பொ-ரை: சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலை விட்டு ஓடிப்போயின.

கு-ரை: இடைதல் - பின்வாங்குதல். எதிராவார் - இணையாவார்; உம்மை, 'உயர்வாவாரும் இல்லை' என, எதிரது தழுவிற்று. இனி, 'எதிராக ஆரும்' இல்லை என்றலுமாம். 'சேர்வோம் அல்லோமாய்' என, எச்ச மாக்குக. அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே. உறுபிணி - மிக்கநோய். செறல் - வருத்துதல். "பிணியார்" எனவும், "ஓடிப்போனார்" எனவும் உயர்திணையாக்கியருளியது, அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு. பொன்றினார் - இறந்தவர். நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன். "சேரப்பெற்றோம், புண்ணியத்துளோம்" என்பவற்றை முதற்கண் வைத்து, 'அதனால்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின.

இந்த உலகத்தில் எவருக்கும் நாம் சளைத்தவரில்லை: இந்த உலகில் நமக்கு எதிரிகள் எவரும் இல்லை: சிறு தெய்வ வணக்கங்களை விட்டொழிப்போம்: பரம் பொருளாகிய சிவபெருமானின் திருவடிகளையே பூஜிப்போம்: எந்த குறையும் எம்மை அண்டாது: இவ்வாறு சிவ பெருமானை மட்டுமே வணங்கியதால் எமக்கு வந்த துன்பங்கள் எம்மை விட்டு விரண்டோடின:

ஏக தெய்வ வணக்கத்தை மிக அழகிய முறையில் இந்த பாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சிவ பெருமானின் உருவத்தை பின்னால் வந்தவர்கள் தங்களின் கற்பனையால் உருவாக்கிக் கொண்டனர். ஒரு சிலர் உருவமில்லாத வெறும் லிங்கதத்தை மட்டுமே வைத்து வழிபடுவர். சிறு தெய்வங்களாக கருதப்படும் முருகன், பிள்ளையார், சரஸ்வதி, நாகூர் ஆண்டவர், வெங்கடாஜலபதி, ஐயப்பன் போன்றவைகளை வணங்குவது வெற்றியைத் தராது என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.


பெருமபாலான மக்கள் இது போன்ற சிறு தெய்வ வணக்கங்களில் ஈடுபடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்? எந்த ஆதாரத்தில் செல்கிறீர்கள்? முருகன் கடவுள் என்று யார் சொன்னது? அந்த உருவில்தான் கடவுள் உள்ளார் என்பதை எது உனக்கு தெரிவித்தது" என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. இது பற்றிய ஒரு குர்ஆன் வசனத்தை பார்ப்போம.

'பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு முஹம்மதே நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின் பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.'

-குர்ஆன் 6:116


அன்றைய அரபு மக்களிடம் 'உங்களை படைத்தது யார்?' என்றால் 'அல்லாஹ்' என்று அழகாக பதில் சொல்வார்கள். ஆனால் சிலைகளை செய்து வைத்து அதை பூஜித்து சிறு தெய்வ வணக்கங்களையும் செய்து வந்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் 'இந்த சிறு தெய்வங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்' என்ற பதிலை சொல்வார்கள். இதை கண்டிக்கும் முகமாகத்தான் முஹமது நபியைப் பார்த்து இந்த வசனத்தில் இறைவன் அழகிய கேள்வியைக் கெட்கிறான். இன்றும் கூட 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்?' என்று நாம் கேட்டால் 'இறைவனிடம் எங்களுக்காக இங்கு அடங்கி இருப்பவர் பரிந்து பேசுவார்' என்ற பதிலை சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் எதனையும் அவர்கள் சமர்ப்பிப்பதில்லை. அன்று இறங்கிய வசனம் இன்றும் நமது தமிழகத்துக்கும் பொருந்துவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

Sunday, January 12, 2014

இறப்பு ஒன்றுதான் நிரந்தர சுகம்! - திருவருட்பா

உலகில் இருக்கும் காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் துன்பம் நம்மை வந்தடைகிறது. இன்பமும் வந்தடைகிறது. சில ஆண்டுகளில் இந்த உயிர் பிரிந்து மற்றுமொரு உலகத்துக்கு நாம் செல்லும் போதுதான் இந்த இன்ப துன்பமற்ற நிலையை நாம் அடைய முடியும் என்று பல சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இறப்புக்கு பிறகுதான் ஒருவனின் உண்மையான நிரந்தர வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்கிறது இஸ்லாம்.

பத்ரகிரியார் இறப்பின் சுகத்தைப் பற்றி பாடும் போது....

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்

என்று முடிக்கிறார். அந்த இறப்பு என்பது தூக்கத்தைப் போன்றதுதான். அதாவது நிரந்தர தூக்கம். அந்த தூக்கமானது தூங்காமல் தூங்கிய நிலையை அடைகிறது. தூங்குவது போல் நமக்கு தோற்றம் அளித்தாலும் உண்மையில் அந்த மனிதனின் உயிர் இறைவன் வசத்தில் என்றும் உயிர்ப்புடனே இருக்கும் என்று இந்த பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.

இதே கருத்தை வள்ளலார் திருவருட்பாவில் பாடும் போது

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

சீர் பிரித்த பின்

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்

பொருள்:

இன்று வருமோ = இன்று வருமோ

நாளைக்கே வருமோ = நாளைக்கே வருமோ

அல்லது = அல்லது

மற்று என்று வருமோ அறியேன் = அது என்று வருமோ, நான் அறியேன்

என் கோவே = என் தலைவனே

துன்று மல வெம் மாயை அற்று = காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி

வெளிக்குள் வெளி கடந்து = வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதை தாண்டி

சும்மா இருக்கும் சுகம் = சும்மா இருக்கும் சுகம்

இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே! காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.

வள்ளலார் விரும்பும் இத்தகைய நிலை வாழும் நாளில் மனித உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இறைவன் சொன்னபடி அவனை வணங்கி வாழ்ந்து இறந்த நல்லவர்களுக்கே கிடைக்கும். அநியாய உயிர்க் கொலைகள் செய்து இறைவன் சொன்ன கட்டளைகளை மீறிய தீயவர்களுக்கு இந்த உலகை விட மிகப் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருப்பதாக அதே இறைவன் கூறுகிறான்.

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. கேள்விகள் கேட்கப்படும் அந்த தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'

'அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தை சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது'

-குர்ஆன் 2:174,175


'நம்பிக்கை கொண்டேரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

-குர்ஆன் 13:28


"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"

-குர்ஆன் 5:32


இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..