Followers

Showing posts with label AFSALGURU. Show all posts
Showing posts with label AFSALGURU. Show all posts

Sunday, March 06, 2016

அஃப்சல் குருவை தூக்கில் போட்டது அரசியலமைப்புக்கு எதிரானது!



"வெறுப்பு காரணமாகத்தான் அரசு, அன்று அப்சல் குருவை அவசர அவசரமாய் அரசியலமைப்புச் சட்ட பண்பாட்டுக்கு எதிராய் தூக்கில்போட்டது..!"

- உச்ச நீதி மன்ற முன்னால் நீதிபதி கங்குலி

நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் மன ஓட்டத்துக்கு பாதகம் ஏற்படக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக அஃப்சலை தூக்கில் இட்டது மத்திய அரசு. இதனை நாம் சொல்லவில்லை. உச்ச நீதி மன்ற முன்னால் நீதிபதி சொல்கிறார். அஃப்சல் உண்மையிலேயே நிரபராதி என்றால் சொர்க்கத்தில் இன்று எந்த கவலையும் இன்றி இருப்பார்.

ஆனால் அஃப்சல் தூக்கில் தொங்க காரணமாயிருந்த அன்றைய பாஜக அரசினரும், தூக்கில் இடும் போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசினரும் நியாய தீர்ப்பு நாளில் உலக மக்களுக்கு முன்னால் இறைவன் முன்னிலையில் தண்டிக்கப் படுவர். அந்த மகத்தான நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.

Monday, January 11, 2016

அஃப்ஸல் குருவின் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் 95 சதவீதம்!





பாராளுமன்றத்தை தாக்கினார் என்று முந்தய அரசால் குற்றம் சாட்டப்பட்டு 2013 ஆம் ஆண்டு மத்திய அரசால் தூக்கிலிடப்பட்டது ஞாபகம் இருக்கலாம். பெரும்பான்மை கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்கிலிடப்பட்டார். அதோடு பல உண்மைகளும் புதைக்கப்பட்டது.

இவரது குடும்பம் காஷ்மீரில் அவந்திபுரா கிராமத்தில் வாழ்ந்து வருகிறது. அப்ஸல் குருவின் மகன் கலிப் குரு இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் நேற்று வெளியாயின. அந்த தேர்வுகளில் கலிப் குரு 95 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதல் தரத்தில் தேர்வாகியுள்ளார். 500 க்கு 474 மார்க்குகள் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

'சிறையில் என் தந்தையை நான் பார்க்கச் செல்லும் போதெல்லாம் 'நீ படித்து டாக்டராக வர வேண்டும்' என்பார். அவரது ஆசையை நிறைவேற்றுவேன்' என்கிறார் பத்திரிக்கையாளர்களிடம்

கலிப் குரு!

உன் தந்தை பாராளுமன்றத்தை உண்மையிலேயே தாக்கியிருந்தால் அதற்கான தண்டனை சரியே...

ஆனால் உனது தந்தை வஞ்சகமாக இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அவர் சொர்க்கத்தில் மகிழ்ச்சியோடு இருப்பார். உனது தந்தை மருத்துவராக விருப்பப்பட்டார். அது நிறைவேறவில்லை. நன்றாக படித்து அவரது ஆசையை நீ நிறைவேற்று. உனது தாய் நாடான இந்தியாவுக்கு சேவை செய்து உன் தந்தையின் ஆசையை நிறைவேற்று.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
11-01-2016

என்னவோ தெரியவில்லை... இந்த பதிவை மொழி மாற்றம் செய்து எழுதிக் கொண்டிருக்கும் போதே என்னையறியாமல் எனது கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.

இந்த சிறுவனின் வாழ்வை இறைவா சீராக்குவாயாக! கணவனை இழந்து தவிக்கும் அந்த தாய்க்கு இவன் மூலம் மகிழ்ச்சியை தந்தருள்வாயாக!