Followers

Showing posts with label AMERICA. Show all posts
Showing posts with label AMERICA. Show all posts

Saturday, November 28, 2015

ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?



சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...

நம்புங்கண்ணே நம்புங்க.....

Sunday, November 22, 2015

மலேசியா இந்தோனேஷியாவுக்கு ஒபாமா பாராட்டு!



'பெரும் பான்மையாக இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியாவும் இந்தோனேஷியாவும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு இடம் கொடுக்கவில்லை. இரு நாடுகளையும் நான் பாராட்டுகிறேன்'

இவ்வாறு மலேசியாவில் நடந்து வரும் பொருளாதார மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களையும் பாராட்டி பேசியுள்ளார் ஒபாமா!

அரபு நாடுகளை போல் கருப்பு தங்கமான பெட்ரோல் இந்த இரு நாடுகளிலும் கிடைப்பது ஊர்ஜிதமானால் உடன் ஐஎஸ்ஐஎஸ் கொலைகார கூலிப் படையை அனுப்பி விடுவீர்களே ஒபாமா!

என்னம்மா ஒபாமா! இப்டி பண்றீங்களேம்மா!

Saturday, November 21, 2015

ஐஎஸ்ஐஎஸ் எவ்வாறு உருவானது? விளாடிமிர் புடின் விவரிக்கிறார்!



'ஒபாமா அடிக்கடி ஐஎஸ்ஐஎஸ் பற்றி பேசுகிறார். ஓகே... இந்த உலகில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்?

ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும் கூலிப் படையினர் இவர்கள். கைப்பற்றிய இடங்களில் உள்ள எண்ணெய் வயல்களையும் தனதாக்கிக் கொள்கின்றனர் இந்த கூலிப்படையினர். ஈராக், லிபியா, சிரியா என்று எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிலை. பிறகு கைப்பற்றப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்து பெட்ரோலும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு திருட்டுத் தனமாக பெட்ரோலை உலக நாடுகளுக்கு விற்பது யார்? வாங்குவது யார்? என்ற விபரம் அமெரிக்காவுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? எல்லாம் தெரிந்தே நடைபெறுகிறது. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் போது பெயரளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு மழை பொழிந்து அந்த மக்களை நாசமாக்குவார்கள். அந்த இடங்களில் உள்ள பொது மக்கள் உயிர் பிழைக்க ஐஎஸ்ஐஎஸ் ல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவர். இவை அனைத்தும் அரசியல் சித்து விளையாட்டுக்கள்'

என்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் விளாடிமிர் புடின்.