ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத குரூப்பை உருவாக்கியது ஒபாமாவும் ஹிலாரி கிளிண்டனும் - டொனால்ட் ட்ரம்ப்
Hillary Clinton and Barack Obama created Isis, says Donald Trump
-theguardian.com
03-01-2016
பல வருடங்களாக நாம் சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பு அரபு நாட்டு பெட்ரோலை கொள்ளையடிக்க இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு என்று. அதனை இன்று அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளரே கூறியிருப்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கார்டியன் பத்திரிக்கையும் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது. எவ்வளவு திறமையாக மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளிப்படவே செய்யும் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.
http://www.theguardian.com/us-news/2016/jan/03/hillary-clinton-and-barack-obama-created-isis-says-donald-trump
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label ISIS. Show all posts
Showing posts with label ISIS. Show all posts
Saturday, January 02, 2016
‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ - மும்பை முஸ்லிம்கள்


புத்தாண்டின் தீர்மானமாக, ‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ என்ற பிரச்சாரத்தை முஸ்லிம் அமைப்புகள் தொடங்கி உள்ளன.
சிரியாவில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இந்திய இளைஞர்கள் சிலரும் சேர்ந்துள்ளதாக தகவல் கள் வெளிவந்துள்ளன. மேலும் இணையதளங்களில் ஆள் சேர்க்க மூளை சலவை செய்வதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், புத்தாண்டின் புதிய தீர்மான மாக மும்பையைச் சேர்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘சஹாஸ் பவுண்டேஷன்’ மற்றும் ‘உருது மார்க்கஸ்’ ஆகியவை இணைந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.
‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின்போது, ஐஎஸ் அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வதைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இணையதளம் மூலம் ஐஎஸ் அமைப்பில் சேர முயற்சிப்பதாக சந்தேகப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கும்.
தெற்கு மும்பை பெஹண்டி பஜார் அருகில் உள்ள இமாம்வாடா முனிசிபல் உருது பள்ளியில் இந்த பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைக் கப்பட்டது. இதுகுறித்து சஹாஸ் பவுண்டேஷன் தலைவரும் பிரச்சாரத்தை தொடங்கிய முக்கிய காரண கர்த்தாவுமான சயத் பர்கான் கூறும்போது, “இந்த புத்தாண்டில் ஐஎஸ் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதை விட வேறு சிறந்த தீர்மானம் எதுவும் இருக்க முடியாது. ஐஎஸ் அமைப்பின் பொய்யான வார்த்தைகளில் மயங்கி விடாதீர்கள் என்று முஸ்லிம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்றார்.
உருது மார்க்கஸ் அமைப்பின் தலைவர் ஜுபைர் ஆஸ்மி கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகள் முக்கிய இணையதளம் மூலம்தான் ஆட்களை தேடுகின்றனர். இணைய தளத்தை பயன்படுத்தும் போது இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். இஸ்லாம் என்ற பெயரில் அப்பாவி மக்களை படுகொலை செய்யத் தூண்டுவதை நம்ப வேண்டாம். ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்கள் இஸ்லாத்துக்கு எதிரானது, மனிதநேயமற்றது என்று பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளோம்” என்றார்.
மேலும் 500 பேர் கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் 'குடித்து விட்டு பைக் ஓட்டாதீர்கள்' 'புது வருடத்தை அமைதியாக கொண்டாடுங்கள்' என்ற பதாகைகளோடு மும்பையில் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தனர். பொது மக்களால் இந்த விழிப்புணர்வு பேரணி மிகுந்த வரவேற்பை பெற்றது.
Mumbai : "Sahas Foundation President Sayed Furqan Ahmed & Team Org.500 People Silent Human Chain & Bike Rally " for The Don't Drink and Drive.
It will also involve taking preventative steps to prevent Muslim youths from becoming radicalised.
The campaign is a joint initiative of Mumbai-based NGO Sahas Foundation and think-tank Urdu Markaz.
Through the campaign, a volunteer task-force has been created; these volunteers will identify and counsel potential recruits of ISIS, or Islamic State (IS), who may have fallen for the terror group’s online propaganda and its “fake jihad”.
http://www.thebetterindia.com/41579/mumbai-muslims-against-isis-campaign/
http://timesofindia.indiatimes.com/city/mumbai/Muslim-group-ushers-in-2016-by-launching-campaign-against-ISIS/articleshow/50410022.cms
http://tamil.thehindu.com/india/2016-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/article8061053.ece?homepage=true&relartwiz=true
http://tamil.thehindu.com/india/2016-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/article8061053.ece?homepage=true&relartwiz=true
Tuesday, December 29, 2015
ஏனெனில் இஸ்ரேல் அவர்களின் தாய் நாடல்லவா!

'அமெரிக்கா பிரிட்டன் படைகளை சமாளிப்பது எங்களுக்கு அவ்வளவு சிரமம் இல்லை. ஆனால் இஸ்ரேல் படைகளை எதிர் கொள்வதுதான் எங்களுக்கு பிரச்னை. அவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள்'
ஐஎஸ்ஐ அறிவிப்பு
விகடன்
29-12-2015
இதோ சொல்லியாச்சுல்ல..... ஈராக்கில் நுழைவார்கள், சிரியாவில் நுழைவார்கள், துருக்கியில் நுழைவார்கள்... அங்குள்ள மக்களை கொல்வார்கள். அப்பாவிகளான பத்திரிக்கையாளர்களின் தலையை கொய்து அதனை வீடியோவாக்கி பரப்புவார்கள். அதற்கு 'ஜிஹாத்' என்றும் பெயரிடுவார்கள்.
ஆனால் மறந்தும் கூட இஸ்ரேல் பக்கம் செல்ல மாட்டார்கள். ஏனெனில் அது அவர்களின் தாய் நாடல்லவா
Saturday, November 28, 2015
ஐஎஸ்ஐஎஸ் திருடிய பெட்ரோல் இஸ்ரேலுக்கு செல்வதெப்படி?

சிரிய எண்ணெய் கிணறுகளிலிருந்து ஐஎஸ்ஐஎஸ்ஸால் திருடப்பட்ட பெட்ரோல் துருக்கி வழியாக இஸ்ரேலுக்கு எப்படி யாரால் கடத்தப்படுகிறது என்பதை விளக்கும் அரிய படம். ஒரு லேப்டாப்பையும் இணைய வசதியையும் வைத்திருக்கும் நமக்கு தெரிந்த செய்தி அமெரிக்காவின் நாசாவுக்கு தெரியவில்லையாம்...
நம்புங்கண்ணே நம்புங்க.....
Wednesday, November 25, 2015
சாமீ.... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ......
Tuesday, November 24, 2015
'நான் செத்து பொழச்சவன்டா!' - மொராக்கோ யுவதி

ஃப்ரான்ஸில் வசித்து வரும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபீலா தனது புகைப்படத்தை பெரும்பாலான பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 'பாரிஸ் குண்டு வெடிப்பில் தற்கொலை குண்டுதாரி' என்ற தலைப்பில் இவரது புகைப்படம் உலகெங்கும் வலம் வந்து கொண்டுள்ளது. இது பற்றி அவர் கூறும் போது...
'எனக்கும் தீவிரவாத கும்பலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில நாட்களுக்கு முன் நானும் எனது தோழியும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். அதில் ஒன்றை எனது தோழி பத்திரிக்கையாளருக்கு காசுக்கு விற்றுள்ளார். அந்த பத்திரிக்கையாளர் தானும் காசு பார்க்க எனது பெயரை 'தற்கொலை குண்டுதாரியாக' மாற்றியுள்ளார். உயிரோடு நான் இருக்கும் போது இறந்தது யார்?
நான் சிறுமியாக இருக்கும் போது மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்தது எனது குடும்பம். சந்தோஷமாக சென்று கொண்டிருந்த எனது வாழ்வு இப்போது கேள்விக் குறியாகி உள்ளது. பயத்தில் சில நாட்களாக நான் வேலைக்கும் செல்லவில்லை' என்கிறார் நபீலா!
அட விபசார ஊடகங்களா? காசு பண்ணுவதுதான் உங்களின் குறிக்கோள் என்றால் அப்பாவி பெண்ணின் வாழ்வோடு ஏனடா விளையாடுகிறீர்கள்? உலக மீடியாக்கள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்துக்கு எதிராக திரும்பியுள்ளன. ஆனால் இதையும் கண்டிப்பாக கடந்து செல்லும் இஸ்லாம்.
தகவல் உதவி
என்டிடிவி
24-11-2015
ஏக இறைவனை மறுப்போரே! நீங்கள் தீர்ப்பைத் தேடுவீர்களானால் இதோ தீர்ப்பு உங்களிடம் வந்து விட்டது. நீங்கள் விலகிக் கொண்டீர்களானால் அது உங்களுக்குச் சிறந்தது. நீங்கள் மீண்டும் போரிட வந்தால் நாமும் வருவோம். உங்கள் கூட்டம் அதிகமாக இருந்த போதும் அது உங்களுக்குச் சிறிதளவும் உதவாது. அல்லாஹ், நம்பிக்கை கொண்டோருடன் இருக்கிறான்.
குர்ஆன்: 8:19
Sunday, November 22, 2015
மலேசியா இந்தோனேஷியாவுக்கு ஒபாமா பாராட்டு!
'பெரும் பான்மையாக இஸ்லாமியர்களைக் கொண்ட மலேசியாவும் இந்தோனேஷியாவும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு இடம் கொடுக்கவில்லை. இரு நாடுகளையும் நான் பாராட்டுகிறேன்'
இவ்வாறு மலேசியாவில் நடந்து வரும் பொருளாதார மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களையும் பாராட்டி பேசியுள்ளார் ஒபாமா!
அரபு நாடுகளை போல் கருப்பு தங்கமான பெட்ரோல் இந்த இரு நாடுகளிலும் கிடைப்பது ஊர்ஜிதமானால் உடன் ஐஎஸ்ஐஎஸ் கொலைகார கூலிப் படையை அனுப்பி விடுவீர்களே ஒபாமா!
என்னம்மா ஒபாமா! இப்டி பண்றீங்களேம்மா!
Saturday, November 21, 2015
ஐஎஸ்ஐஎஸ் எவ்வாறு உருவானது? விளாடிமிர் புடின் விவரிக்கிறார்!
'ஒபாமா அடிக்கடி ஐஎஸ்ஐஎஸ் பற்றி பேசுகிறார். ஓகே... இந்த உலகில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்?
ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும் கூலிப் படையினர் இவர்கள். கைப்பற்றிய இடங்களில் உள்ள எண்ணெய் வயல்களையும் தனதாக்கிக் கொள்கின்றனர் இந்த கூலிப்படையினர். ஈராக், லிபியா, சிரியா என்று எந்த நாடுகளை எடுத்துக் கொண்டாலும் இதுதான் நிலை. பிறகு கைப்பற்றப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்து பெட்ரோலும் வெளிநாடுகளுக்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு திருட்டுத் தனமாக பெட்ரோலை உலக நாடுகளுக்கு விற்பது யார்? வாங்குவது யார்? என்ற விபரம் அமெரிக்காவுக்கு தெரியாது என்றா நினைக்கிறீர்கள்? எல்லாம் தெரிந்தே நடைபெறுகிறது. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்கும் போது பெயரளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டு மழை பொழிந்து அந்த மக்களை நாசமாக்குவார்கள். அந்த இடங்களில் உள்ள பொது மக்கள் உயிர் பிழைக்க ஐஎஸ்ஐஎஸ் ல் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவர். இவை அனைத்தும் அரசியல் சித்து விளையாட்டுக்கள்'
என்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் விளாடிமிர் புடின்.
Wednesday, November 18, 2015
ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஜி20 உட்பட 40 நாடுகள் உதவி - புடின்

'ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பொருளாதார உதவி 40 நாடுகளிலிருந்து கிடைத்து வருவதை எங்களின் உளவு அமைப்பு கண்டு பிடித்துள்ளது. ஜி20 நாடுகளும் இதில் அடங்கும். வளைகுடா பிராந்தியத்தில் பெட்ரோல் வணிகம் பல காலமாக திருட்டுத்தனமாக நடந்து வருகிறது. இதனை எங்களின் உளவு விமானங்கள் உறுதிபடுத்தியுள்ளன.' என்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.
நாங்க சொன்னா ஒத்துக்க மாட்டீங்க.... இப்போ புடின் சொல்லிட்டாருப்பா... இனிமேலாவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இஸ்லாமியர்கள் அல்ல என்பதை ஒத்துக் கொள்வீர்களா?
தகவல் உதவி
www.rt.com
16-11-2015
Monday, November 16, 2015
பாரிஸ் தாக்குதலையடுத்து உடனடியாக பலனடைந்தவர்கள் யார்?






வெள்ளிக் கிழமை பாரிஸில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. மறு நாள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது போர் பிரகடனம் செய்தன பல நாடுகள். அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக ஆயுத வியாபாரிகளின் ஆயுத விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
பாரிஸ் தாக்குதலால் நேரிடையாக லாபம் அடைந்தது யார் என்பது இப்போது புரிகிறதா?
https://theintercept.com/2015/11/16/stock-prices-of-weapons-manufacturers-soaring-since-paris-attack/
Sunday, September 06, 2015
ஐஎஸ் அமைப்பை உருவாக்கியதே அமெரிக்காதான் - சிரிய தூதர்

சிவில் யுத்தம் காரணமாக இஸ்லாமிக் ஸ்டேட் என்ற சர்வாதிகார தீவிரவாதம் எழுச்சியுற்றது. இந்நிலையில் சிரியா அதிபர் பஷார் அல் அசாத் சார்பாக இந்தியா வந்துள்ள தூதர் ரியாத் கமெல் அப்பாஸ், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிரான போரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
ரியாத் கமல் அப்பாஸ்: அது இந்தியாவின் முடிவைப் பொறுத்தது. ஆனால் பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்க்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
கேள்வி: உங்கள் பார்வையில், ஐ.எஸ். அமைப்பு சக்தி வாய்ந்த பயங்கரவாத அமைப்பாக சில ஆண்டுகளில் உருவெடுத்தது எப்படி?
ரியாத் கமல் அப்பாஸ்: ஆப்கானிஸ்தானில் அல் கய்தாவை உருவாக்கியவர் யார்? ஏன்? என்பதை கூறுங்கள். அமெரிக்காதான் அல்கய்தாவை உருவாக்கியது என்பது தெளிவு. அரபு நாடுகளின் உதவியுடன், ஆப்கனில் சோவியத் யூனியனை முறியடிக்க அல் கய்தாவை உருவாக்கினர். அமெரிக்கர்கள் ஆப்கானில் படையெடுத்த போது நிறைய சவப்பெட்டிகள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தன. பல ஆண்டுகள் போருக்குப் பிறகு ராணுவ வீரரை தரையில் பயன்படுத்துவதன் வியர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். எனவே பிற நாடுகளில் அழிவை ஏற்படுத்தும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு கொடுப்பதே சிறந்தது என்று அமெரிக்கா நினைத்தது. இப்படியாகத்தான் ஐ.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டது. துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
தற்போது ஐ.எஸ். மிகவும் பலமாக உள்ளது. ஏன் அவர்கள் வலுவாக உள்ளனர், புறச்சக்திகள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடைய சொந்தக் கருத்து என்னவெனில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்கா சீரியசாக சண்டையிடவில்லை என்பதே. ஐ.எஸ். அமைப்பை அமெரிக்கா தோற்கடிக்க விரும்பவில்லை. அவர்களை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். இராக்கி குர்திஸ்தானில் உள்ள எர்பிலை ஐ.எஸ். தாக்கியவுடன் அமெரிக்கா உடனே சிகப்பு கோடு இட்டது. அதனை கடக்காதீர்கள் என்று ஐ.எஸ் அமைப்பை எச்சரித்தது. இதனையடுத்து சிரியாவின் மேற்குப் பகுதியிலும் ஐ.எஸ். விரிவு படுத்தியது.
கேள்வி: ஐ.எஸ்.க்கு எதிராக போர் என்ற துருக்கியின் சமீபத்திய அறிவிப்பு பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில்: இது சும்மா ஒரு கேம் பிளான். பொதுமக்களிடத்தில் கருத்தை உருவாக்க செய்யப்படும் தந்திரம். ஐ.எஸ். விரிவாக்கத்தில் துருக்கியின் பங்கு இருப்பதற்கான சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. மொசூலில் துருக்கிய தூதரகத்திலிருந்து ஐ.எஸ். அமைப்பு சிலரை பிடித்தது, ஆனால் உடனடியாக அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால்தான் கூறுகிறேன், துருக்கிக்கும் ஐ.எஸ்.க்கும் நெருங்கிய நட்புறவு உள்ளது என்று. ஐ.எஸ். க்கு எதிராக போர் என்ற பெயரில் அவர்கள் உண்மையில் குர்திஷ் மக்களை எதிர்த்தே போரிடுகிறது துருக்கி.
கேள்வி: சரி இதற்கு தீர்வுதான் என்ன?
பதில்: சிரியா மக்களுக்கு ஒரு புறம் அரசு உள்ளது, மறுபுறம் ஐ.எஸ். மற்றும் அல் நுசுரா பயங்கரவாத அமைப்பு. இந்த இரண்டுதான் மக்களின் தெரிவாக உள்ளது.
ஆனால் தீர்வு எளிதானதே. பயங்கரவாதிகளுக்கு ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும். எல்லைகளை மூடுங்கள், பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அகற்றுங்கள். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் துருக்கி, கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-09-2015
Sunday, April 05, 2015
ஃப்ரான்ஸ் ஆட்சியாளர்களை ஆச்சரியப்படுத்தும் இஸ்லாம்!

சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டவுடன் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தற்போது தலைகீழாக மாறியுள்ளது. முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று இன்று ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ், அல்சபாப், போகோ ஹராம் என்று பல தீவிரவாதக் குழுக்களை இஸ்லாமிய எதிரிகள் ஏற்படுத்தி இஸ்லாத்தை களங்கப்படுத்த நினைத்தனர். ஆனால் மக்களின் நிலையோ வேறு விதமாக இருக்கிறது. நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் இன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் செல்கின்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்கிறது.
ஃபிளாசபி மேகசின் (Philosophie magazine) என்ற பத்திரிக்கையின் டைரக்டர் ஃபேப்ரிக் ஜெர்சல்(fabric gerchel) கூறுகிறார் 'தற்போது ஃப்ரான்ஸில் இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மிக வேகமாக விற்பனையாகின்றன. பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பிறகு இந்த விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதத்தில் குர்ஆனின் மொழி பெயர்ப்பு விற்பனையானது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது'
Mathilde Mahieux, of La Procure chain of bookshops என்ற புத்தக நிறுவனமானது மத சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டுமே அச்சிட்டு விநியோகிக்கும் ஒரு நிறுவனம். இவர்கள் கூறுவதாவது 'ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம் போன்ற அமைப்புகள் எதை செய்தாலும் 'அல்லாஹூ அக்பர்' என்று கூறி பல கொலைகளை செய்கிறார்களே. உண்மையில் குர்ஆன் இதனைத்தான் போதிக்கிறதா? என்று தேடுதலில் பல மக்கள் ஈடுபடுகின்றனர். ஆய்வு செய்வதற்காக நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றையும், குர்ஆனின் மொழி பெயர்ப்புகளையும் ஃப்ரான்ஸ் மக்கள் அதிகமதிகம் வாங்கிச் செல்கின்றனர். இந்த எழுச்சியை முன்பு நாங்கள் கண்டதில்லை' என்கின்றனர்.
'அல்புராக்' என்ற பெயரில் புத்தக பப்ளிசராக பணிபுரியும் இஸ்லாமியரான மன்சூர் கூறுகிறார் 'தற்போது இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு நிலைமை எவ்வாறு இருந்ததோ அது போன்ற நிலையை நான் தற்போது பார்க்கிறேன்' என்கிறார்.
Yvon Gilabert யுவான் கிளாபர்ட் வெஸ்டர்ன் ஃப்ரான்ஸில் புத்தக கடை நடத்தி வருபவர். அவர் கூறுகிறார் 'கத்தோலிக்க பெண் ஒருவர் என்னிடம் வந்து குர்ஆனின் மொழி பெயர்ப்பு கேட்டார். 'நீங்கள் கத்தோலிக்கர் ஆயிற்றே! குர்ஆன் எதற்கு' என்று கேட்டேன். 'குர்ஆன் உண்மையில் வன்முறையைத்தான் போதிக்கிறதா' என்பதை ஆய்வு செய்வதற்காக இதனை வாங்குகிறேன்' என்கிறார்.
சென்ற மார்ச் மாதம் ஃப்ரான்ஸ் புத்தக கண்காட்சியில் அதிகம் விற்பனையான புத்தமாக கருதப்பட்டது “A Christian Reads The Koran,” என்ற புத்தமாகும். இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 1984 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
ஜீன் ராய் சர்போர்ன் பல்கலைக் கழகத்தில் புரபஸராக வெலை செய்து வருகிறார். இவர் தனது அனுபவத்தைப் பகிரும்போது 'ஓரிறைக் கொள்கை என்ற தத்துவமானது பொதுவாக எல்லோரும் ஒத்துக் கொண்ட ஒன்று. தற்போது குர்ஆனை ஆழ்ந்து படித்து வருகிறேன். இனி எனது கல்லூரி பாடங்களில் குர்ஆனும் இடம் பெறும்' என்கிறார்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
04-04-2015
இதை எல்லாம் படித்துப் பார்த்த போது எனக்கு ஒரு குர்ஆன் வசனம்தான் ஞாபகத்துக்கு வந்தது.
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’
(அல்-குர்ஆன் 3:54)
Labels:
FRANCE,
ISIS,
ISLAM,
அழைப்புப் பணி,
இஸ்லாம்
Thursday, April 02, 2015
இந்திய இஸ்லாமியரை ஐஎஸ்ஐஎஸ் வசப்படுத்த முடியாது - டேவிட்

தங்கள் நாட்டில் நிலவும் பன்முக கலாசாரத் தன்மையின் காரணமாக, ஐ.எஸ். தீவிரவாதிகளின் வலையில் சிக்கப்படுவதில் இருந்து இந்திய இளைஞர்கள் தப்பிவிடுகின்றனர் என்று அமெரிக்க பாதுகாப்பு துறை நிபுணர் டேவிட் எப் ஹேமென் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளைப் போல் இந்திய முஸ்லிம் இளைஞர்களை ஐ.எஸ். இயக்கம் வசப்படுத்த முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக கணித்து கூறினார்.
அமெரிக்க பாதுகாப்பு துறை நிபுணரும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை ஆய்வாளருமான டேவிட் ஹேமென், இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அவர், 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியது:
"இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து புதிதாக எழும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக திட்டமிட வேண்டியது அவசியம்.
உலக நாடுகளில் பரவலாக இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல், இளைஞர்களை அத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து இங்கு ஆலோசனை நடத்தினேன்.
பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதன் அப்படையில் எங்களால் பிரச்சினைகளையும் அதற்கான காரணங்களையும் கண்டறிய முடிகிறது.
மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரையில், அங்கு வாழும் முஸ்லிம் இளைஞர்கள் அவர்களது நாட்டிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டது போல கருதுகிறார்கள். அவர்கள் கருதுவது போன்ற நடவடிக்கைகள் நடப்பதும் அதற்கு காரணம். இதனாலே அங்கிருக்கும் இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தால் அதிகளவில் ஈர்க்கப்பட்டு, அதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லை. மனித உரிமைகளை இந்தியர்கள் மதிக்கின்றனர். இங்கு அமைந்திருக்கும் பன்முக கலாசாரம் கொண்ட ஜனநாயகத் தன்மை ஒவ்வொரு தனி மனிதனையும் தன்னை சமுதாயத்தில் ஒருவனாக உணர்ந்து செயல்படுவதற்கான சூழலை அமைத்து தருகிறது. இந்தியாவில் தீவிரவாதம் வேரூன்றாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால், அமெரிக்காவில் இந்த நிலைமை இல்லை. அங்கு உள்நாட்டிலேயே தீவிரவாதம் உருவெடுக்கிறது. இளைஞர்கள் மிக எளிதாக அதற்கு ஈர்க்கப்படுவதால், தீவிரவாதம் வீட்டிலிருந்து வளர்க்கப்படுவதை போல் ஆகிவிட்டது. இந்தியாவில் அந்தச் சுழல் தடுக்கப்படுகிறது" என்றார் டேவிட் எப் ஹேமென்.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
03-04-2015
Labels:
'தி ஹிந்து' பத்திரிக்கை,
ISIS,
இந்தியா,
இஸ்லாம்
Tuesday, March 17, 2015
பொய்யன் ஐஎஸ்ஐஎஸ் பக்தாதியின் அடுத்த பல்டி!
ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அமெரிக்காவின் கைக்கூலி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஐஎஸ்ஐஎஸின் தலைவன் பக்தாதி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளான். அது என்ன அறிக்கை?
'நபிகள் நாயகம் எனது கனவில் தோன்றி 'மசூல் நகரத்திலிருந்து வெளியேறி விடு' என்று சொன்னார். எனவே போராளிகள் தாக்குதலை கைவிட்டு மசூல் நகரத்திலிருந்து வெளியேறவும்' என்ற அறிக்கையே அது.
இவனைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதனை செயல்படுத்தக் கூடியவன். தற்போது ஆயுத வியாபாரம் முடிந்து விட்டது. பெட்ரோல் வளங்களையும் கொள்ளையடித்தாகி விட்டது. இனி ஐஎஸ்ஐஎஸ் அவசியமில்லை என்ற முடீவுக்கு அவர்கள் வந்ததாலேயே திடீரென்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை யாரெல்லாம் நேரில் கண்டார்களோ அவர்கள் தான் கனவிலும் காண முடியும். நபிகள் நாயகத்தின் காலத்திய ஆட்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. நபிகள் நாயகம் எந்த தோற்றத்தில் இருப்பார்கள் என்ற அறிவும் இவனுக்கு கிடையாது. ஆக திட்டமிட்டு பொய் சொல்கிறான். இஸ்லாத்தை நன்கு விளங்கியிவர்கள் இவனது காமெடியை கேட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பொய்களை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது என்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் ஒரு சிறந்த உதாரணம். அதன் தலைவன் பக்தாதியும் ஒரு நல்ல உதாரணம்.
--------------------------------------------------
Mosul- Head of ISIS Abu-Baker Al-Baghdadi has claimed that he dreamt of Prophet Mohammed (pbuh) who asked him to evacuate Mosul, Al-Sharq.com reported yesterday.
He claimed that the Prophet asked him to leave the province with all of his men without fighting.
Local Iraqi sources in Mosul reported that ISIS militias would withdraw from the city upon receiving orders from their leader Al-Baghdadi.
The Kurdish Democratic Party's electronic site reported that "Baghdadi ordered his fighters to withdraw from the city following a dream that he met Prophet Mohammed (pbuh), who ordered him to leave Mosul."
No date was given for the departure.
Courtesy Middle East Moniter
http://nation.com.pk/international/16-Mar-2015/prophet-muhammad-ordered-me-to-leave-mosul-al-baghdadi
'நபிகள் நாயகம் எனது கனவில் தோன்றி 'மசூல் நகரத்திலிருந்து வெளியேறி விடு' என்று சொன்னார். எனவே போராளிகள் தாக்குதலை கைவிட்டு மசூல் நகரத்திலிருந்து வெளியேறவும்' என்ற அறிக்கையே அது.
இவனைப் பொறுத்த வரையில் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் என்ன கட்டளையிடுகிறார்களோ அதனை செயல்படுத்தக் கூடியவன். தற்போது ஆயுத வியாபாரம் முடிந்து விட்டது. பெட்ரோல் வளங்களையும் கொள்ளையடித்தாகி விட்டது. இனி ஐஎஸ்ஐஎஸ் அவசியமில்லை என்ற முடீவுக்கு அவர்கள் வந்ததாலேயே திடீரென்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பார்வையில் நபிகள் நாயகத்தை யாரெல்லாம் நேரில் கண்டார்களோ அவர்கள் தான் கனவிலும் காண முடியும். நபிகள் நாயகத்தின் காலத்திய ஆட்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. நபிகள் நாயகம் எந்த தோற்றத்தில் இருப்பார்கள் என்ற அறிவும் இவனுக்கு கிடையாது. ஆக திட்டமிட்டு பொய் சொல்கிறான். இஸ்லாத்தை நன்கு விளங்கியிவர்கள் இவனது காமெடியை கேட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பொய்களை அதிக நாட்கள் மூடி வைக்க முடியாது என்பதற்கு ஐஎஸ்ஐஎஸ் ஒரு சிறந்த உதாரணம். அதன் தலைவன் பக்தாதியும் ஒரு நல்ல உதாரணம்.
--------------------------------------------------
Mosul- Head of ISIS Abu-Baker Al-Baghdadi has claimed that he dreamt of Prophet Mohammed (pbuh) who asked him to evacuate Mosul, Al-Sharq.com reported yesterday.
He claimed that the Prophet asked him to leave the province with all of his men without fighting.
Local Iraqi sources in Mosul reported that ISIS militias would withdraw from the city upon receiving orders from their leader Al-Baghdadi.
The Kurdish Democratic Party's electronic site reported that "Baghdadi ordered his fighters to withdraw from the city following a dream that he met Prophet Mohammed (pbuh), who ordered him to leave Mosul."
No date was given for the departure.
Courtesy Middle East Moniter
http://nation.com.pk/international/16-Mar-2015/prophet-muhammad-ordered-me-to-leave-mosul-al-baghdadi
Sunday, February 22, 2015
ஐஎஸ்ஐஎஸ் யாருடைய ஆட்கள்? மற்றுமொரு ஆதாரம்!

உலக முஸ்லிம்கள் லட்சக்கணக்கான பேர் இருந்து இறைவனை தொழுதாலும் சேர்ந்து தொழுவார்கள். அடுத்து கஃபா எந்த திசையில்இருக்கிறதோ அந்த திசையை நோக்கித்தான் தொழுவர். நம் முண்டாசுக் கவி பாரதி கூட 'திக்கை வணங்கும் துருக்கர்' என்று பாடினான். பாரதிக்கே தெரிந்த இந்த உண்மை ஐஎஸ்ஐஎஸ்யை தயாரித்த அமெரிக்க சிஐஏக்கும் இஸ்ரேலின் மொஸாத்துக்கும் தெரியவில்லை.
திருடன் எவ்வளவுதான் தடயங்களை அழித்து விட்டு சென்றாலும் ஏதாவது ஒன்றை அவசரத்தில் விட்டு விடுவான் என்று கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல் சிஐஏக்கும மொசாத்துக்கும் தொழுவது எப்படி என்று தெரிந்த அளவுக்கு ஒரே திசையை நோக்கித்தான் தொழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஐரோப்பா, அமெரிக்கா, இஸ்ரேல் என்று கூலிக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு சரியான பயிற்சி இல்லாததால் ஆளுக்கொரு பக்கமாக திரும்பி தொழுது கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் உண்மை முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா இஸ்லாமிய சட்ட திட்டங்கள் சரிவர தெரிந்திருக்கும்? எனவே இது இவர்களின் தவறல்ல. சிஐஏ மொசாத் போன்ற நாசகார உளவு நிறுவனங்களின் தவறு. அவர்களின் அறியாமை இதிலும் வெளிப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் யார் என்பதை உலகுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் கழித்து பல உண்மைகளும் தானாக வெளிவரும். அது வரை பொறுத்திருப்போம்.
Wednesday, January 21, 2015
ஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்!
தரீனா ஷகீல் - 25 வயது பிரிட்டிஷ் பிரஜை. கணவனோடு சில பிரச்னைகளால் சில காலம் தாய் வீட்டில் வாழ்ந்துள்ளார். கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன அமைதியிழந்துள்ளார். அந்த நேரத்தில் சில கிறுக்கர்கள் ஜிஹாத்துக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவை செய்து இவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர தூண்டியுள்ளனர். உலகம் அறியாத இந்த பெண் கள்ள முல்லாக்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து சுற்றுலா செல்கிறேன் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு சிரியா சென்றுள்ளார்.
அங்கு சென்றவுடன்தான் போர்களம் எப்படி இருக்கும் என்று தரினாவுக்கு தெரிய வருகிறது. தண்ணீருக்கு ரேஷன், உணவுக்கு ரேஷன், மின்சாரம் கிடையாது: குளிருக்கு சரியான போர்வையும் கிடையாது: திடீர் திடீரென்று துப்பாக்கி தோட்டாக்களின் சப்தம்: வெளியில் எங்கும் பிணக் குவியல்: ரத்த வாடை: கை கால்கள் போன மனிதர்கள் என்று இவரது வாழ்க்கையே மாறிப் போனது. சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை இவருக்கு கசக்க ஆரம்பித்தது.
இனி இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்று எண்ணி பல தடைகளையும் தாண்டி எப்படியோ இந்த கும்பலிடமிருந்து தப்பி துருக்கி வந்து சேர்ந்து விட்டார். அங்கிருந்து அவரது தந்தையை தொடர்பு கொண்டு அழுது கொண்டே 'என்னை எப்படியாவது திரும்பவும் பிரிட்டன் கொண்டு சென்று விடுங்கள்' என்று சொல்லியுள்ளார். தற்போது தந்தையின் வரவுக்காக துருக்கி அகதி முகாமல் தங்கியுள்ளார். தந்தையோடும் கணவனோடும் ஒன்றாகி குழந்தையை சிறந்த முறையில் வளர்த்து சிறந்த இஸ்லாமிய பெண்ணாக இந்த சகோதரி வாழ நாமும் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015
இஸ்லாம் இந்த பெண்ணுக்கு ஜிஹாதை கடமையாக்கவில்லை. முதலில் இந்த பெண் தனது கணவனோ அல்லது தந்தையோ, சகோதரனோ இல்லாமல் கைக்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறியதே முதலில் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. அடுத்து போரில் சென்று போரிட ஆண்களுக்குத்தான் கடமையுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் அனைத்து செயல்களும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களே. இவர்கள் அமெரிக்காவாலோ அல்லது இஸ்ரேலின் யூதர்களின் கைப்பாவையாகவோ செயல்படுவதாகத்தான் உலக முஸ்லிம்கள் நம்புகின்றனர். அப்பாவி மக்களை கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்குவதும், தோல்வியடைந்த பகுதிகளில் உள்ள பெண்களை கொடுமைபடுத்துவதும் இஸ்லாம் காட்டித் தந்த வழியா? எங்கிருந்து இதனை படித்தார்கள்? அநியாயத்துக்காக போரிட ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளதே தவிர தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை எங்கிருந்து கற்றார்கள்? தமிழகத்திலும் யாராவது உங்களிடம் வந்து ஜிஹாதுக்கு ஆள் சேர்ப்பதாக சொன்னால் உடன் காவல் துறை வசம் ஒப்படையுங்கள். ஏனெனில் இது போன்ற நபர்கள்தான் இஸ்லாத்தின் முதல் எதிரிகள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க மேற்குலகமும், யூதர்களும் இணைந்து ஏற்படுத்திய அமைப்புகளே ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம். எனவே இந்த தீவிரவாத கும்பல்களிடமிருந்து இஸ்லாமிய இளைஞர்களை மீட்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இதனை தீவிர பிரசாரத்தின் மூலமே நம்மால் சாதிக்க முடியும்.
Tuesday, January 20, 2015
ஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது!

The New York Times: A video posted on Tuesday, purportedly by the Islamic State extremist group, shows a militant threatening to kill two Japanese hostages unless the government paid a ransom of $200 million.
KENJI GOTO, HARUNA YUKAWA என்ற இரண்டு ஜப்பானியர்களை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஜப்பானிய அரசிடம் 200 மில்லியன் டாலர் பணயத் தொகையாக கேட்டுள்ளார்களாம். தரவில்லை என்றால் இவர்களை கொன்று விடுவார்களாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் மொசாத்தின் கட்டளைகளை செயல்படுத்தி வரும் இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
இவ்வாறு பணயத் தொகை கேட்பதற்கோ, அல்லது அப்பாவிகளான இந்த இருவரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் காட்ட முடியுமா இந்த காட்டு மிராண்டிகளால். ஜப்பான் எப்போதுமே நடுநிலை பேணக் கூடிய நாடு. அவர்களையும் இஸ்லாத்துக்கு எதிரான களத்தில் இறக்கி விட மொசாத் தேர்ந்தெடுத்த வழியே இந்த இரண்டு ஜப்பானியர்கள் கைதும். பணத்தை தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்கி ஜப்பானிய மக்களை இஸ்லாத்துக்கு எதிராக திருப்ப முயற்சிப்பார்கள். முன்பு பிரிட்டிஷ், அமெரிக்க கைதிகளையும் இது போலவே கொன்றனர்.
வழக்கம் போல் யூதர்கள் இதிலும் தோல்வியையே அடைவர். பொறுத்திருந்து பார்போம்.
தகவல் உதவி
NEWYORK TIMES
20-01-2015
Subscribe to:
Posts (Atom)
