
ஆயுதங்களற்ற நிராயுதபாணியாக ஆடி ஓடிய சிறுவன் நான்!
பாலஸ்தீனியனாக எனது சொந்த மண்ணில் பிறந்தவன் நான்!
கோழைத் தனமாக என்னை சுட்டு நீ மெடல் வாங்கலாம்!
வந்தேறியான இஸ்ரேலி நீ சந்தோஷத்தில் திளைக்கலாம்!
உன்னை கடைசியாக ஒரு முறை பார்த்துக் கொண்டேன்!
இந்த ஒரு குண்டுக்கு பதிலாக ஓராயிரம் குண்டுகள்
உனது நெஞ்சை பதம் பார்க்கும் அந்த இறுதி நாள்
நியாயத் தீர்ப்பு நாளில் என் இறைவன் முன்னால்
மக்கள் குழுமியிருக்கும் கூட்டத்துக்கு முன்னால்
கண்டிப்பாக உன்னை பழி தீர்ப்பேன்! மறந்து விடாதே!
வீரனான எனக்கு பூமியில் இன்று ஒரு முறைதான் சாவு
கோழையான உனக்கு மறுமையில் பல முறை சாவு!
--------------------------------------------------
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!
நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள் அவனிடமே நாம் திரும்ப வேண்டியுள்ளது
அல் குர்’ஆன் 2:156
















