கம்யூனிஷ சீனாவில் முஸ்லிம்களின் பெருநாள் தொழுகை!
எத்தனை அடக்கு முறை! எவ்வளவு கைதுகள்! அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டு இதோ தொழுகைக்கு வந்து விட்டனர். சீன முஸ்லிம்கள் தங்களின் மார்க்க கடமைகளை எந்நத இடத்திலும் விட்டுக் கொடுப்பதில்லை. கம்யூனிஷ சீன அரசாங்கமும் இந்த மக்களிடம் சற்று அடக்கியே வாசிக்கிறது. இஸ்லாமியருக்கு எதிராக அரசு செயல்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளையும் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இதனால் சீனாவின் ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்படும்.
ஜின்ஜியாங் மாகாணத்தில் காலையிலேயே தொழுகைக்கு முன்பு பாரம்பரிய இனிப்புகளை உண்டு விட்டு சாரை சாரையாக பெருநாள் தொழுகைக்கு வந்து விட்டனர் சீன முஸ்லிம்கள். இவர்களுக்கு மேலும் தைரியத்தை கொடுத்து மார்க்க கடமைகளில் தொடர வல்ல இறைவன் அருள் புரிவானாக!