தேவாரத்தில் திருஞான சம்பந்தரின் சமண வெறுப்பு!
மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கௌசிகம் என்னும் தலைப்பில் 3 ஆவது பாட்டு.
'மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ணகத்திரு வாலவா யாய்அருள்
பெண்ணக கத்தெழில் சாக்கியப் பேய்அமண்
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே'
மேலே உள்ள வரிக்கு விளக்கம் தரத் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன். சமண சமயத்தின் மேல் உள்ள வெறியின் காரணமாக சமணம் மற்றும் புத்தப் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று வேண்டுகின்றார் சம்பந்தர்.
"அன்பே சிவம்" என்று சைவம் கூறிக் கொண்டு இருக்க அக்கூற்றுக்கு மாறாக ஞானசம்பந்தர் பாடி இருப்பது எவ்வாறு சைவத்தினை வளர்த்திருக்கும்.
தமிழக்த்தில் சீர்காழி எனும் தளத்தில் ஆண்டு தோறும் நிகழும் திருமுலைபால் உற்சவம் எனும் நிகழ்வில் சம்பந்தர் பல்லகின் முன்னால் தலை மொட்டையடிக்கபட்டு இடையில் காவி உடை அணிந்து கையில் மயிற்பீலியுடன்(சமணரை உருவகபடுத்தி) நிற்க வைக்கபடுவார்களாம் அப்போது ஓதுவார்கள் பெருங்குரலெடுத்து சம்பந்தர் சமணபெண்களை என்ன செய்ய சொன்னார் என்று கேட்பார்களாம் மற்ற ஓதுவார்களும் சிவாச்சாரியார்கள் கற்பழிக்க சொன்னார் என்று உரக்க பாடுவார்களாம்..அது மட்டுமல்லாமல் சமணபெண்களை பற்றி இழிவாக விமர்சிப்பார்களாம்...
அந்த காலத்தில் சமண மதத்தையும் பவுத்த மதத்தையும் எவ்வாறு இந்து மதம் அழித்தது என்பதற்கு இந்த பாடலும் ஒரு சான்று!
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts
Sunday, August 21, 2016
Monday, May 04, 2015
திரு அகரன் அவர்களின் சந்தேகங்களுக்கான பதில்கள்!
திரு அகரன்!
நீங்கள் மாற்று மதத்தவராக இருப்பதால் சற்று விளக்கமாகவே இதற்கு பதிலளிக்கிறேன்.
//இந்தியாவில் உள்ள தர்காக்கள் எல்லாம் ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டு தொன்மையான கட்டிடங்கள், இவைகளில் பெரும்பாலும் முகலாயர்களும் இன்னபிற இந்து மன்னர்களும் ஏற்படுத்தியது.
இத்தனை வருடங்கள் வாழ்ந்து சென்ற இசுலாமியர்கள் எவரும் இதற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை. அவர்கள் உங்கள் மத கோட்பாடுகளை சரிவர பின்பற்றாதவர்கள் என்பது உங்கள் கண்ணோட்டமா?//
அது அவர்களின் தவறல்ல.... குர்ஆன் முஸ்லிம்களிடம் என்ன பேசுகிறது? நபிகள் நாயகம் என்ன கட்டளையை இஸ்லாமியருக்கு கொடுத்துள்ளார் என்ற புரிதல் அவர்களுக்கு இல்லாமல் இருந்ததே! அதற்கு காரணம் தாய் மொழியில் குர்ஆனையும் நபிகளின் வாழ்க்கையையும் மொழி பெயர்க்காததே! அந்நிய மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தல் பாவம் என்ற தவறான புரிதலே அதற்கு காரணம்.
இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று தனியாக எதுவும் கிடையாது. தமிழ், ஆங்கிலம் போன்று அரபியும் ஒரு மொழி. முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபியில் இறங்கியது. முகமது நபி தமிழராக பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறக்கப்பட்டிருக்கும். உலக மொழிகள் யாவும் இறைவனால் படைக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. உலக மொழிகள் அனைத்திற்கும் வேதங்கள் வந்ததாகவும் குர்ஆன் கூறுகிறது. இந்த உண்மைகளை தற்போது இஸ்லாமியர் உணர்ந்து கொண்டனர்.
தமிழில் முதலில் குர்ஆனை மொழி பெயர்த்த அப்துல் ஹமீதை (அப்துல் சமதின் தந்தை) இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாக சகட்டு மேனிக்கு அன்று ஃபத்வா கொடுத்தனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள். :-) இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து 1000 ஆண்டுகளுக்கு மேலாகியும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது 120 ஆண்டுகளுக்கு முன்புதான். மொழி பெயர்ப்புகளின் மூலம் உண்மையை இன்று தமிழக முஸ்லிம்கள் சரியாக விளங்கியதாலேயே பல மாற்றங்களை தற்போது காண்கிறீர்கள்.
//அல்லது ஆயிரமாண்டு கால இந்திய முசுலிம்கள் வரலாற்றில் இப்பொழுது சுமார் முப்பதாண்டுகளாக இருக்கின்ற தவ்கீத் ஜமாத் ஏற்படுத்திய தர்கா ஒழிப்புதான் சரியா?//
தர்ஹாவை வழிபடுபவர்கள் சொல்வது சரியா? அல்லது தவ்ஹீத் ஜமாத் சொல்வது சரியா என்பதை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படித்துப் பாருங்கள். யார் சொல்வது உண்மை என்ற விபரம் தானாகவே உங்களுக்கு விளங்க ஆரம்பிக்கும்.
//தவ்கீத் ஜமாத் ஏற்படுத்திய கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற கொள்கை சரியானால் இதற்கு முன்னர் வாழ்ந்த முசுலிம்கள் யாவரும் நரகத்திற்கு தான் செல்வார்களா?//
யார் சொர்க்கத்துக்கு செல்வார்கள்: யார் நரகத்துக்கு செல்வார்கள் என்பது இறைவனின் கையில் உள்ளது. வாழும் காலங்களில் இஸ்லாம் எதனை கட்டளையிடுகிறதோ அதன்படி செயல்படுபவர்களே முஸ்லிம்கள். குர்ஆனின் கட்டளைகளும் நபி அவர்களின் அறிவுரைகளும்தான் ஒரு இஸ்லாமியனுக்கு ஆதாரமாக முடியும். தனி மனிதர்களின் அபிலாஷைகள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கமாக முடியாது.
//இன்று வாழ்பவர்களை விட மிகப்பெரும் அறிவு ஜீவிகள், மத தலைவர்கள் , இந்திய அரசியலை தன் உள்ளங்கைகளில் வைத்திருந்த இசுலாமிய தலைவர்கள் எவரும் வரலாற்றில் இது போன்ற விசயங்களை பதியவில்லை.//
இன்று தவ்ஹீத் ஜமாத் சொல்லும் அனைத்து விஷயங்களையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே மவுலானா அபுல் கலாம் ஆசாத் மிக விரிவாக எழுதியும் பேசியும் இருக்கிறார். ஆனால் அவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் தர்காவை வணங்கிய முஸ்லிம்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இணையம் போன்ற நவீன சாதனங்கள் அன்று இல்லாததும் ஒரு காரணம்.
//அவர்களின் வாழ்க்கை முறைகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது, அன்றுதான் இந்திய முசுலிம்களுக்கு அதிகாரம், மரியாதை உலக அரங்கில் இருந்தது,//
மொகலாயர் ஆட்சியிலும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் முஸ்லிம்கள் படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் கணிசமாக இருந்தனர். பார்பனர்களோடு போட்டியிட்டனர். விடுதலை போர் ஆரம்பித்தவுடன் காந்தியின் கட்டளையை ஏற்று ஆங்கில கல்வியையும், அரசு வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் துறந்தனர். ஆனால் கிருத்தவர்களும் பார்பனர்களும் அன்று காந்தியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து பதவியில் இருந்தனர். அதன் பலனை இன்று வரை அனுபவிக்கின்றனர். தேச பக்தி முற்றி போய் வேலையையும் படிப்பையும் துறந்த முஸ்லிம்கள் இன்று தாழ்த்தப்பட்டவர்களை விட கீழாக இருப்பதாக சச்சார் கமிட்டி கூறுகிறது.
ஆனால் தமிழகத்திலும் கேரளத்திலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் முஸ்லிம்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் மிகப் பெரும் மாற்றத்தை முஸ்லிம்களிடம் காண்பீர்கள். ஆனால் வட மாநில முஸ்லிம்களிடம் இத்தகைய மறுமலர்ச்சியை காண முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் இன்னும் குர்ஆனை முழுமையாக நெருங்காததே!
நீங்கள் மாற்று மதத்தவராக இருப்பதால் சற்று விளக்கமாகவே இதற்கு பதிலளிக்கிறேன்.
//இந்தியாவில் உள்ள தர்காக்கள் எல்லாம் ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டு தொன்மையான கட்டிடங்கள், இவைகளில் பெரும்பாலும் முகலாயர்களும் இன்னபிற இந்து மன்னர்களும் ஏற்படுத்தியது.
இத்தனை வருடங்கள் வாழ்ந்து சென்ற இசுலாமியர்கள் எவரும் இதற்கு மறுப்பு தெரிவிக்க வில்லை. அவர்கள் உங்கள் மத கோட்பாடுகளை சரிவர பின்பற்றாதவர்கள் என்பது உங்கள் கண்ணோட்டமா?//
அது அவர்களின் தவறல்ல.... குர்ஆன் முஸ்லிம்களிடம் என்ன பேசுகிறது? நபிகள் நாயகம் என்ன கட்டளையை இஸ்லாமியருக்கு கொடுத்துள்ளார் என்ற புரிதல் அவர்களுக்கு இல்லாமல் இருந்ததே! அதற்கு காரணம் தாய் மொழியில் குர்ஆனையும் நபிகளின் வாழ்க்கையையும் மொழி பெயர்க்காததே! அந்நிய மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தல் பாவம் என்ற தவறான புரிதலே அதற்கு காரணம்.
இஸ்லாமிய பார்வையில் தேவ மொழி என்று தனியாக எதுவும் கிடையாது. தமிழ், ஆங்கிலம் போன்று அரபியும் ஒரு மொழி. முகமது நபி அரபியராக இருந்ததால் குர்ஆன் அரபியில் இறங்கியது. முகமது நபி தமிழராக பிறந்திருந்தால் குர்ஆன் தமிழிலேயே இறக்கப்பட்டிருக்கும். உலக மொழிகள் யாவும் இறைவனால் படைக்கப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது. உலக மொழிகள் அனைத்திற்கும் வேதங்கள் வந்ததாகவும் குர்ஆன் கூறுகிறது. இந்த உண்மைகளை தற்போது இஸ்லாமியர் உணர்ந்து கொண்டனர்.
தமிழில் முதலில் குர்ஆனை மொழி பெயர்த்த அப்துல் ஹமீதை (அப்துல் சமதின் தந்தை) இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டதாக சகட்டு மேனிக்கு அன்று ஃபத்வா கொடுத்தனர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள். :-) இஸ்லாம் தமிழகத்துக்கு வந்து 1000 ஆண்டுகளுக்கு மேலாகியும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது 120 ஆண்டுகளுக்கு முன்புதான். மொழி பெயர்ப்புகளின் மூலம் உண்மையை இன்று தமிழக முஸ்லிம்கள் சரியாக விளங்கியதாலேயே பல மாற்றங்களை தற்போது காண்கிறீர்கள்.
//அல்லது ஆயிரமாண்டு கால இந்திய முசுலிம்கள் வரலாற்றில் இப்பொழுது சுமார் முப்பதாண்டுகளாக இருக்கின்ற தவ்கீத் ஜமாத் ஏற்படுத்திய தர்கா ஒழிப்புதான் சரியா?//
தர்ஹாவை வழிபடுபவர்கள் சொல்வது சரியா? அல்லது தவ்ஹீத் ஜமாத் சொல்வது சரியா என்பதை குர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்பை படித்துப் பாருங்கள். யார் சொல்வது உண்மை என்ற விபரம் தானாகவே உங்களுக்கு விளங்க ஆரம்பிக்கும்.
//தவ்கீத் ஜமாத் ஏற்படுத்திய கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற கொள்கை சரியானால் இதற்கு முன்னர் வாழ்ந்த முசுலிம்கள் யாவரும் நரகத்திற்கு தான் செல்வார்களா?//
யார் சொர்க்கத்துக்கு செல்வார்கள்: யார் நரகத்துக்கு செல்வார்கள் என்பது இறைவனின் கையில் உள்ளது. வாழும் காலங்களில் இஸ்லாம் எதனை கட்டளையிடுகிறதோ அதன்படி செயல்படுபவர்களே முஸ்லிம்கள். குர்ஆனின் கட்டளைகளும் நபி அவர்களின் அறிவுரைகளும்தான் ஒரு இஸ்லாமியனுக்கு ஆதாரமாக முடியும். தனி மனிதர்களின் அபிலாஷைகள் எல்லாம் இஸ்லாமிய மார்க்கமாக முடியாது.
//இன்று வாழ்பவர்களை விட மிகப்பெரும் அறிவு ஜீவிகள், மத தலைவர்கள் , இந்திய அரசியலை தன் உள்ளங்கைகளில் வைத்திருந்த இசுலாமிய தலைவர்கள் எவரும் வரலாற்றில் இது போன்ற விசயங்களை பதியவில்லை.//
இன்று தவ்ஹீத் ஜமாத் சொல்லும் அனைத்து விஷயங்களையும் 80 ஆண்டுகளுக்கு முன்பே மவுலானா அபுல் கலாம் ஆசாத் மிக விரிவாக எழுதியும் பேசியும் இருக்கிறார். ஆனால் அவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் தர்காவை வணங்கிய முஸ்லிம்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன. இணையம் போன்ற நவீன சாதனங்கள் அன்று இல்லாததும் ஒரு காரணம்.
//அவர்களின் வாழ்க்கை முறைகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது, அன்றுதான் இந்திய முசுலிம்களுக்கு அதிகாரம், மரியாதை உலக அரங்கில் இருந்தது,//
மொகலாயர் ஆட்சியிலும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் முஸ்லிம்கள் படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் கணிசமாக இருந்தனர். பார்பனர்களோடு போட்டியிட்டனர். விடுதலை போர் ஆரம்பித்தவுடன் காந்தியின் கட்டளையை ஏற்று ஆங்கில கல்வியையும், அரசு வேலை வாய்ப்பையும் முஸ்லிம்கள் துறந்தனர். ஆனால் கிருத்தவர்களும் பார்பனர்களும் அன்று காந்தியின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து பதவியில் இருந்தனர். அதன் பலனை இன்று வரை அனுபவிக்கின்றனர். தேச பக்தி முற்றி போய் வேலையையும் படிப்பையும் துறந்த முஸ்லிம்கள் இன்று தாழ்த்தப்பட்டவர்களை விட கீழாக இருப்பதாக சச்சார் கமிட்டி கூறுகிறது.
ஆனால் தமிழகத்திலும் கேரளத்திலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் முஸ்லிம்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது படிப்பிலும் அரசு வேலை வாய்ப்பிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் மிகப் பெரும் மாற்றத்தை முஸ்லிம்களிடம் காண்பீர்கள். ஆனால் வட மாநில முஸ்லிம்களிடம் இத்தகைய மறுமலர்ச்சியை காண முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் இன்னும் குர்ஆனை முழுமையாக நெருங்காததே!
Monday, February 16, 2015
இந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா?
இந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா?

நமது வரலாற்று நூல்களை பாடப்புத்தகங்களில் ஒரு செய்தியை படிக்காத இந்தியர்களே இல்லை எனலாம். கஜினி முகம்மது 17 முறை படையெடுத்து வந்து சோமநாத புர ஆலயத்தை கொள்ளையடித்து சென்றான். தமிழகத்தில் மாலிக்காபூர் பல கோவில்களை கொள்ளையடித்து பலரை மதம் மாற்றினான் என்று பல ஆண்டுகளாக படித்து வந்திருப்போம்.
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை பொருத்த வரை கோவில்கள் இறைவனை வணங்கக் கூடிய இடமாக மாத்திரம் இல்லை. அரசாங்கத்தின் கஜானாவாகவும் செயல்பட்டுள்ளது. அரசர்கள் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளும் புகலிடமாகவும் அன்றைய கோவில்கள் இருந்துள்ளன. இதனால்தான் கோவில்களை சுற்றி மிகப் பெரிய அகழிகள் வெட்டப்பட்டுள்ளதை இன்றும் பார்கலாம். தஞ்சை பெரிய கோவிலின் அகழிகளை நாம் இன்றும் காணக் கூடியதாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில்களிலும் இதே போன்ற அகழிகளை பார்கலாம். இந்த அகழியில் முதலைகளை வளர்பார்களாம். இதே கோவிலில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுரங்கங்களை தோண்டி வைத்துள்ளார்கள். அந்த சுரங்கங்களின் மறுமுனை அருகில் உள்ள கடற்கரைகளை சென்று அடையுமாம். எதிரிகள் அரசர்களை கொல்ல வந்தால் கடல் மார்கமாக தப்பிப்பதற்கு இந்த குகைகளை அந்த காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
கேரள பத்மநாத சுவாமி கோவிலின் ஆறு அறைகளில் மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ரங்க நாதர் கோவிலிலும் இது போன்ற புதையல்கள் உண்டு என்ற கருத்து பரவலாக உள்ளது. இதிலிருந்து நமக்கு தெரிய வருவது கோவில்கள் வணங்குவதற்காக மட்டும் அல்ல அது அரசர்களின் புகலிடமாகவும் அரசின் கஜானாவாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் பல இந்து அரசர்களே கோவில்களை தாக்கி அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்போம்.
1791 ல் மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றது. அப்போது பரசுராம பாவே என்ற மராட்டிய தளபதி கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தைத் தாக்கினான். 6000000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றான். சாரதா தேவி சிலையை பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து உடைத்தெறிந்தான்.
-(தமிழகத்தில் மாலிக்காபூர் ஓர் ஆய்வு பக்கம் 71, SARDESI J.S.THE HISTORY OF MARATHAS VOLUME 3 PAGE 189)
--------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் இருந்த சமணக் குகைக் கொயில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் பதினென்பூமி வின்னகரம் என்ற வைணவக் கோவிலாக மாற்றப்பட்டது.
பல்லவ மன்னனாகிய மகேந்திர வர்மன் சைவ சமயத்தைப் பின்பற்றினான். பாடலிபுத்திரத்தில் இருந்த சமணப் பள்ளியை இடித்து விட்டு அவற்றின் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணரத ஈச்சரம் என்று தன் பெயரில் கோவிலைக் கட்டிக் கொண்டான்.
-(பல்லவர் வரலாறு பக்கம் 275, வரலாற்று வெளிச்சத்தில் ஒளரங்க ஜேப் விகடன் பிரசுரம் பக்கம் 318, புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை. ப.இராம நாத பிள்ளை க.அ.இராமசாமிப் புலவர் குறிப்புகளுடன் சென்னை 1977)
---------------------------------------
கி.பி எட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டின் ஆலியை ஆண்ட குறுநில மன்னன் திருமங்கையாழ்வார். வைணவ சமயத்தை சேர்ந்த இம்மன்னன் நாகப்பட்டினம் பவுத்தக் கோவிலை கொள்ளையடித்தான். அங்கிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கொண்டு வந்து தங்கத்தை உருக்கி ஸ்ரீரங்கக் கொவிலின் விமான மண்டப கோபுரம் உள்ளிட்ட பல பணிகளை செய்து முடித்தான்.
-(நாலாயிர திவ்விய பிரபந்தம் பக்கம் 207, பாலசரஸ்வதி பி.கிருஷ்ணமாச்சாரிய ஸ்வாமிகள் பரிசோதித்து வெளியிட்டது)
---------------------------------------
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் மன்னன் வரகுண பாண்டியனின் மகன் சடைய மாறன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றான். பல நகரங்களையும் புத்த விகாரங்களையும் கொள்ளையிட்டான். அங்குள்ள விலையுயர்ந்த புத்தர் சிலைகளையும் மற்ற பொருட்களையும் கைப்பற்றி வந்தான்.
-(வரலாற்று வெளிச்சத்தில் ஒளரங்க ஜேப் விகடன் பிரசுரம் (வ.வெ.ஒள.வி.பி) - பக்கம் 345 இது இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சத்தில் இடம் பெற்றுள்ள செய்தி.)
--------------------------------------
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் இலங்கையின் மீது படையெடுத்தான். அனுராதபுரம், பொலனருவ ஆகிய இடங்களில் இருந்த புத்த கோவில்களை இடித்து தரை மட்டமாக்கினான். அந்த ஊர்களின் பெயர்களை மாற்றி ஜனநாத மங்கலம் என தன் பெயரைச் சூட்டினான்.
-(இழப்பதற்கு ஏதுமில்லை - பக்கம் 66 (வ.வெ.ஒள.வி.பி)- பக்கம் 349 கே.கே.பிள்ளை, சோழர் வரலாறு 1977 சென்னை பக்கம் 191)
--------------------------------------
இது போன்ற எண்ணற்ற ஆதாரங்கள் வரலாறு நெடுக கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இதனை எல்லாம் சொல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் வந்து போரிட்டதையும் பொருட்களை கொள்ளையடித்ததையும் வரலாறு நெடுக எழுதி வைத்து அதனை மாணவர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைத்துள்ளார்கள்.
இதனால்தான் ஒரு சில இந்து நண்பர்கள் முஸ்லிம்கள் என்றாலே முகத்தை சுழிக்கின்றனர். இது அவர்களின் தவறு அல்ல. திட்டமிட்டு இஸ்லாமிய எதிர்ப்பை விதைப்பதற்காக பாட புத்தகங்களில் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்களின் தவறாகும்.
மாலிக்காபூரைப் பற்றி ஒரு செய்தியையும் பார்போம்.
மாலிக்காபூர் தேவகிரியைக் கைப்பற்றினான். மக்களை மிக அன்பாக நடத்தினான். மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தினான். கொலை கைது என எந்த விதமான கொடுஞ்செயலிலும் அவனது படைகள் ஈடுபடவில்லை. இந்த நடவடிக்கைள் மூலம் மக்களின் மனதில் அமைதியை விதைத்தான். புதிய முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் பயப்படுவதற்கு ஏதும் இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது.
-(THE EARLY MUSLIM EXPANSION IN SOUTH INDIA PAGE 73 மாலிக்காபூர் செ.திவான் விகடன் வெளியீடு பக்கம் 83.)
இதை எல்லாம் படித்து முடித்தவுடன் நமக்கு தோன்றுவது என்னவென்றால் நமது வரலாறுகள் முற்றிலுமாக திருத்தி எழுதப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் உள்ள ஆறாத வடுக்கள் மாற இடமுண்டு. வருங்கால கல்வியாளர்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

நமது வரலாற்று நூல்களை பாடப்புத்தகங்களில் ஒரு செய்தியை படிக்காத இந்தியர்களே இல்லை எனலாம். கஜினி முகம்மது 17 முறை படையெடுத்து வந்து சோமநாத புர ஆலயத்தை கொள்ளையடித்து சென்றான். தமிழகத்தில் மாலிக்காபூர் பல கோவில்களை கொள்ளையடித்து பலரை மதம் மாற்றினான் என்று பல ஆண்டுகளாக படித்து வந்திருப்போம்.
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை பொருத்த வரை கோவில்கள் இறைவனை வணங்கக் கூடிய இடமாக மாத்திரம் இல்லை. அரசாங்கத்தின் கஜானாவாகவும் செயல்பட்டுள்ளது. அரசர்கள் எதிரிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளும் புகலிடமாகவும் அன்றைய கோவில்கள் இருந்துள்ளன. இதனால்தான் கோவில்களை சுற்றி மிகப் பெரிய அகழிகள் வெட்டப்பட்டுள்ளதை இன்றும் பார்கலாம். தஞ்சை பெரிய கோவிலின் அகழிகளை நாம் இன்றும் காணக் கூடியதாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில்களிலும் இதே போன்ற அகழிகளை பார்கலாம். இந்த அகழியில் முதலைகளை வளர்பார்களாம். இதே கோவிலில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுரங்கங்களை தோண்டி வைத்துள்ளார்கள். அந்த சுரங்கங்களின் மறுமுனை அருகில் உள்ள கடற்கரைகளை சென்று அடையுமாம். எதிரிகள் அரசர்களை கொல்ல வந்தால் கடல் மார்கமாக தப்பிப்பதற்கு இந்த குகைகளை அந்த காலத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
கேரள பத்மநாத சுவாமி கோவிலின் ஆறு அறைகளில் மட்டும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் பெருமானமுள்ள தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. திருவரங்கம் ரங்க நாதர் கோவிலிலும் இது போன்ற புதையல்கள் உண்டு என்ற கருத்து பரவலாக உள்ளது. இதிலிருந்து நமக்கு தெரிய வருவது கோவில்கள் வணங்குவதற்காக மட்டும் அல்ல அது அரசர்களின் புகலிடமாகவும் அரசின் கஜானாவாகவும் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதனால் தான் பல இந்து அரசர்களே கோவில்களை தாக்கி அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்போம்.
1791 ல் மூன்றாம் மைசூர் போர் நடைபெற்றது. அப்போது பரசுராம பாவே என்ற மராட்டிய தளபதி கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தைத் தாக்கினான். 6000000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை அங்கிருந்து கொள்ளையடித்துச் சென்றான். சாரதா தேவி சிலையை பீடத்திலிருந்து பெயர்த்தெடுத்து உடைத்தெறிந்தான்.
-(தமிழகத்தில் மாலிக்காபூர் ஓர் ஆய்வு பக்கம் 71, SARDESI J.S.THE HISTORY OF MARATHAS VOLUME 3 PAGE 189)
--------------------------------------
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் இருந்த சமணக் குகைக் கொயில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் பதினென்பூமி வின்னகரம் என்ற வைணவக் கோவிலாக மாற்றப்பட்டது.
பல்லவ மன்னனாகிய மகேந்திர வர்மன் சைவ சமயத்தைப் பின்பற்றினான். பாடலிபுத்திரத்தில் இருந்த சமணப் பள்ளியை இடித்து விட்டு அவற்றின் சிதைவுகளைக் கொண்டு திருவதிகையில் குணரத ஈச்சரம் என்று தன் பெயரில் கோவிலைக் கட்டிக் கொண்டான்.
-(பல்லவர் வரலாறு பக்கம் 275, வரலாற்று வெளிச்சத்தில் ஒளரங்க ஜேப் விகடன் பிரசுரம் பக்கம் 318, புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை. ப.இராம நாத பிள்ளை க.அ.இராமசாமிப் புலவர் குறிப்புகளுடன் சென்னை 1977)
---------------------------------------
கி.பி எட்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டின் ஆலியை ஆண்ட குறுநில மன்னன் திருமங்கையாழ்வார். வைணவ சமயத்தை சேர்ந்த இம்மன்னன் நாகப்பட்டினம் பவுத்தக் கோவிலை கொள்ளையடித்தான். அங்கிருந்த பொன்னாலான புத்தர் சிலையைக் கொண்டு வந்து தங்கத்தை உருக்கி ஸ்ரீரங்கக் கொவிலின் விமான மண்டப கோபுரம் உள்ளிட்ட பல பணிகளை செய்து முடித்தான்.
-(நாலாயிர திவ்விய பிரபந்தம் பக்கம் 207, பாலசரஸ்வதி பி.கிருஷ்ணமாச்சாரிய ஸ்வாமிகள் பரிசோதித்து வெளியிட்டது)
---------------------------------------
கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் மன்னன் வரகுண பாண்டியனின் மகன் சடைய மாறன் இலங்கையின் மீது படையெடுத்துச் சென்றான். பல நகரங்களையும் புத்த விகாரங்களையும் கொள்ளையிட்டான். அங்குள்ள விலையுயர்ந்த புத்தர் சிலைகளையும் மற்ற பொருட்களையும் கைப்பற்றி வந்தான்.
-(வரலாற்று வெளிச்சத்தில் ஒளரங்க ஜேப் விகடன் பிரசுரம் (வ.வெ.ஒள.வி.பி) - பக்கம் 345 இது இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சத்தில் இடம் பெற்றுள்ள செய்தி.)
--------------------------------------
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் இலங்கையின் மீது படையெடுத்தான். அனுராதபுரம், பொலனருவ ஆகிய இடங்களில் இருந்த புத்த கோவில்களை இடித்து தரை மட்டமாக்கினான். அந்த ஊர்களின் பெயர்களை மாற்றி ஜனநாத மங்கலம் என தன் பெயரைச் சூட்டினான்.
-(இழப்பதற்கு ஏதுமில்லை - பக்கம் 66 (வ.வெ.ஒள.வி.பி)- பக்கம் 349 கே.கே.பிள்ளை, சோழர் வரலாறு 1977 சென்னை பக்கம் 191)
--------------------------------------
இது போன்ற எண்ணற்ற ஆதாரங்கள் வரலாறு நெடுக கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இதனை எல்லாம் சொல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் வந்து போரிட்டதையும் பொருட்களை கொள்ளையடித்ததையும் வரலாறு நெடுக எழுதி வைத்து அதனை மாணவர்கள் மத்தியில் ஆழமாக பதிய வைத்துள்ளார்கள்.
இதனால்தான் ஒரு சில இந்து நண்பர்கள் முஸ்லிம்கள் என்றாலே முகத்தை சுழிக்கின்றனர். இது அவர்களின் தவறு அல்ல. திட்டமிட்டு இஸ்லாமிய எதிர்ப்பை விதைப்பதற்காக பாட புத்தகங்களில் வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியர்களின் தவறாகும்.
மாலிக்காபூரைப் பற்றி ஒரு செய்தியையும் பார்போம்.
மாலிக்காபூர் தேவகிரியைக் கைப்பற்றினான். மக்களை மிக அன்பாக நடத்தினான். மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தினான். கொலை கைது என எந்த விதமான கொடுஞ்செயலிலும் அவனது படைகள் ஈடுபடவில்லை. இந்த நடவடிக்கைள் மூலம் மக்களின் மனதில் அமைதியை விதைத்தான். புதிய முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் பயப்படுவதற்கு ஏதும் இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது.
-(THE EARLY MUSLIM EXPANSION IN SOUTH INDIA PAGE 73 மாலிக்காபூர் செ.திவான் விகடன் வெளியீடு பக்கம் 83.)
இதை எல்லாம் படித்து முடித்தவுடன் நமக்கு தோன்றுவது என்னவென்றால் நமது வரலாறுகள் முற்றிலுமாக திருத்தி எழுதப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் உள்ள ஆறாத வடுக்கள் மாற இடமுண்டு. வருங்கால கல்வியாளர்கள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
Sunday, August 17, 2014
ஆரிய அயோக்கியதனத்திற்கு அளவில்லையா!

(அன்றே வடிவமைக்கப்பட்டு வெள்ளையர்களை விரண்டோடச் செய்த திப்புவின் பீரங்கி)
"திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இசுலாத்தில் இணைய பலாத்காரம் செய்தபோது அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டனர்." என்ற வரிகளை அன்று ராஜஸ்தான் மத்திய பிரதேசம் உத்திரபிரதேசம் ஒரிசா பீஹார்,மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் உயர்நிலை கல்வி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு நூலை படித்து அதிர்ந்தார் பி.என் பாண்டே.
ஒரிசா மாநிலத்தின் முன்னாள் கவர்னரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ,வரலாற்று ஆய்வாளருமான பி.என் பாண்டே அவர்கள் 1928 இல் அலகாபாத்தில் மாவீரன் மைசூர் வேங்கை திப்பு சுல்தான் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்த போது ஆங்கிலோ -பெங்காலி கல்லூரியின் மாணவர் மன்றத்தின் வரலாற்று கழகத்தை தொடக்கி வைக்க அழைக்கபட்டிருந்தார் .அந்நிகழ்வில் உரையாற்ற ஆயத்தம் செய்தபோதுதான் மேற்கண்ட வரிகளை ,வரலாற்று புரட்டை கண்டு அதிர்ந்திருக்கிறார்.
கல்கத்தா பல்கலைகழகத்தின் சம்ஸ்கிருததுறை தலைவர் டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி பிராமணர் எழுதிய நூல் அது என்பதை அறிந்த பாண்டே எந்த ஆதாரத்தை கொண்டு இந்த தகவலை எழுதுனீர்கள் என விளக்கம் கேட்டு சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார். பல கடிதங்களுக்கு பிறகு டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதில் கடிதத்தில் "மைசூர் கெசட்டில் இருந்து இதற்கான ஆதாரம் எடுக்கப்பட்டது " என தெரிவிக்கிறார். உடனே மைசூர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் சர்.பிஜெந்திர நாத்சீல் அவர்களுக்கு " டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரி அவர்கள் மைசூர் கெசட்டில் எடுத்ததாக கூறப்படும் செய்தி உண்மைதானா என உறுதிபடுத்த கோரி கடிதம் அனுப்புகிறார்.
துணைவேந்தர் அக்கடிதத்தை மைசூர் கெசட்டின் புதுபதிப்பினை தயார் செய்து கொண்டிருந்த பேராசிரியர் ஸ்ரீஹன்டையா அவர்களுக்கு அனுப்பி பதில் தர கோருகிறார். அவர் மைசூர் கெசட்டினை ஆராய்ந்து இதுமாதிரியான சம்பவம் எதுவும் மைசூர் கெசட்டில் இடம்பெறவில்லை என பதிலளிக்கிறார். அதுமட்டுமின்றி திப்புசுல்தானின் பிரதம மந்திரி புரணாயா என்பவர் பிராமணர் என்பதையும், சேனைதலைவர் கிருஷ்ணராவ் என்பதையும் தெரிவித்ததோடு, திப்பு சுல்தான் 156 இந்து கோவில்களுக்கு வருடாந்திர செலவுகளுக்கு மான்யம் வழங்கிய பட்டியலையும், சிருங்கேரி மடத்தின் ஜகத்குரு சங்கராச்சாரிக்கும் திப்புவுக்கும் இருந்த நேச உறவினை வெளிபடுத்தும் ஆதாரங்களாக சிருங்கேரி மடத்திற்கு திப்பு எழுதிய 30 கடிந்தங்களின் புகைப்பட நகல்களை பி.என். பாண்டே அவர்களுக்கு அனுப்புகிறார்.
பேராசிரியர் ஸ்ரீஹண்டையாவிடமிருந்து பெற்ற ஆதாரங்களை கொண்டு அன்று பாடதிட்டதிற்கான நூல்களை தேர்வு செய்யும் கல்கத்தா பல்கலைகழகத்தின் துணைவேந்தருக்கு "பொய்யும் புனைந்துரையுமாக அமைந்துள்ள டாக்டர் .ஹரிபிரசாத் சாஸ்திரியின் நூலை பாடதிட்டதிலிருந்து நீக்கவேண்டும். அந்நூலை தடை செய்யவேண்டும்" என எழுதுகிறார்.
அப்பல்கலைகழகத்தின் துணைவேந்தர் அஷ்டோஸ் முகர்ஜி உடனே நடவடிக்கை எடுத்து விஷம் விதைத்த அந்நூலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி தடை செய்தார்.
இப்போது சொல்லுங்கள் மனிதநேயமும் மத நல்லிணக்கமும் பேணிய மைசூர் வேங்கை திப்புவின் வரலாற்றை திரித்த காவி கயவர்கள் செய்தது நியாயமா... துரோகமா ? தர்மமா ..அநீதியா ?.
- B.N.Pande, 'Distortion of Medival Indian History' , Islam and Indian Culture page no 37 -39.

திப்பு, ஹைதர் அலி இந்த இருவரின் அடக்கத்தலத்துக்கு குழந்தைகள் மனைவியோடு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். உள்ளே நுழைந்தவுடன் என்னையறியாமல் எனது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அந்த வீர மகனை நினைத்து என்னையறியாமல் எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.
Labels:
இந்தியா,
இந்துத்வா,
இஸ்லாம்,
காப்பி பேஸ்ட் :-),
திப்பு சுல்தான்,
வரலாறு
Tuesday, June 03, 2014
கழிப்பறைகள் இல்லாததே கற்பழிப்புக்கு காரணம்!
'வீட்டில் கழிவறையோடு கட்டுவது மொகலாயர்களின் வழக்கம். பாரத தேசத்தில் வீட்டோடு கழிவறைகளை கட்டுவது நமது கலசாரமன்று' என்று தங்கமணி ஒருமுறை என்னோடு விவாதித்தார். அதாவது மொகலாயர்கள் திறந்த வெளி கழிப்பிடங்களை குறைத்து வசிக்கும் இடங்களில் சுகாதாரமாக கழிவறைகளை கட்டியது பிற்போக்கு தனமாம். சிறுமிகளும், பெண்களும் கூச்சப்பட்டுக் கொண்டு திறந்த வெளி கழிப்பிடங்களுக்கு மறைவான இடத்தை தேடுகின்றனர். இது சில கயவர்களுக்கு வசதியாக போய் விடுகிறது.
அதாவது சுகாதாரத்தை பேணவும் தெரியாது மொகலாயர்கள் அந்த சுகாதாரத்தை அறிமுகப்படுத்தினால் அதனையும் குறை காணுவது என்னவொரு மன நிலையோ தெரியவில்லை. இது சம்பந்தமாக தமிழ் இந்து நாளிதழில் வந்த செய்தியை தருகிறேன். படித்துப் பாருங்கள்.
----------------------------------------------------------------------
உ.பி.யின் பதாயூவில் நிகழ்ந்த பலாத்கார சம்பவத்துக்கு அங்கு கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் கழிப்பறைகள் கட்டித்தர, சமூக நல அமைப்பான சுலப் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது.
பதாயூவின் கட்ரா சஹாதத்கன்ச் கிராமத்தில் கடந்த மே 27-ம் தேதி 14 மற்றும் 15 வயதான, இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அவர்கள் வீட்டில் கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அந்த கிராம மக்கள் கூறுகையில், “உ.பி.யில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது. குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது. இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலி களமாகிவிடுகிறது” என்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பொதுக் கழிவறைகள் கட்டி சமூகப்பணி செய்துவரும் சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு, கட்ரா கிராமத்தில் உள்ள சுமார் 100 வீடுகளில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வந்துள்ளது.
இது குறித்து அதன் நிறுவனர் பிந்தேஷ்வர் பாதக் கூறுகையில், “காலைக்கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது. இதை அரசுகள் தங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். “முதலில் கழிப்பறை, பிறகுதான் கோயில்” என பிரதமர் மோடி குரல் கொடுத்ததன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இதற்காக அரசுடன் இணைந்து நாங்கள் முன்மாதிரியாக கட்ரா கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டித்தர தயாராக இருக்கிறோம்” என்றார்.
கழிப்பிடம் செல்லும் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவது நாட்டில் இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரலில் ஹரியாணாவின் பகானா கிராமத்தில் 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து மணமாகி அருகிலுள்ள பிகா பலோத் கிராமத்துக்கு மாமியார் வீடு சென்ற புதுமணப் பெண், அங்கு கழிப்பறை இல்லாததால் தம்மால் வாழ முடியாது எனவும், அதை கட்டினால் திரும்பி வருவதாகவும் கூறி தாய் வீடு வந்து விட்டார்.
பாராட்டு விழா
இந்தச் செய்தியை பார்த்து அங்கு சுலப் இன்டர்நேஷனல் கழிப்பறை கட்டித் தந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் நடந்தது.
2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, நாட்டில் 53 சதவீத மக்களின் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.
இது இந்திய கிராமங்களில் 62.9 சதவீதம் எனவும், வட மாநிலங்களான பிஹார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் ஆகியவற்றில் 78 சதவீதம் எனவும் வெளியானது.
கழிப்பறைகள் எண்ணிக்கை, உ.பி.யில் 2014 வரை 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் :
உ.பி.யின் பரெய்லி மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, ‘ஆசிட்’டை குடிக்கச் செய்து, பின் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இப்பெண்ணின் உடல் அயித்புரா என்ற கிராமத்தின் வயல்வெளியில் இருந்து கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதுபற்றி போலீஸார் கூறுகையில், “அப்பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுந்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் வயிற்றில் ஆசிட் காணப்பட்டது. கொல்லப்படுவதற்கு முன் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கச் செய்திருக்கலாம். கொலைக்குப் பின் ஆசிட் மற்றும் பெட்ரோல் மூலம் முகம் சிதைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
03-06-2014
அதாவது சுகாதாரத்தை பேணவும் தெரியாது மொகலாயர்கள் அந்த சுகாதாரத்தை அறிமுகப்படுத்தினால் அதனையும் குறை காணுவது என்னவொரு மன நிலையோ தெரியவில்லை. இது சம்பந்தமாக தமிழ் இந்து நாளிதழில் வந்த செய்தியை தருகிறேன். படித்துப் பாருங்கள்.
----------------------------------------------------------------------
உ.பி.யின் பதாயூவில் நிகழ்ந்த பலாத்கார சம்பவத்துக்கு அங்கு கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் கழிப்பறைகள் கட்டித்தர, சமூக நல அமைப்பான சுலப் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது.
பதாயூவின் கட்ரா சஹாதத்கன்ச் கிராமத்தில் கடந்த மே 27-ம் தேதி 14 மற்றும் 15 வயதான, இரு சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு அவர்கள் வீட்டில் கழிப்பறைகள் இல்லாததே காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அந்த கிராம மக்கள் கூறுகையில், “உ.பி.யில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் கழிப்பறைகள் கிடையாது. குறிப்பாக தலித் மக்களின் வீடுகளில் அறவே கிடையாது. இதனால் காலைக்கடன்களை பல பெண்கள் இரவில் கழிக்கவேண்டி உள்ளது. இதற்காக, அவர்கள் தேடிச் செல்லும் இருட்டு மற்றும் ஒதுக்குப்புறங்கள் அவர்களின் பலி களமாகிவிடுகிறது” என்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பொதுக் கழிவறைகள் கட்டி சமூகப்பணி செய்துவரும் சுலப் இன்டர்நேஷனல் அமைப்பு, கட்ரா கிராமத்தில் உள்ள சுமார் 100 வீடுகளில் கழிப்பறைகள் கட்டித்தர முன்வந்துள்ளது.
இது குறித்து அதன் நிறுவனர் பிந்தேஷ்வர் பாதக் கூறுகையில், “காலைக்கடன்களுக்கு பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியிருப்பது மிகவும் கொடுமையானது. இதை அரசுகள் தங்கள் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். “முதலில் கழிப்பறை, பிறகுதான் கோயில்” என பிரதமர் மோடி குரல் கொடுத்ததன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இதற்காக அரசுடன் இணைந்து நாங்கள் முன்மாதிரியாக கட்ரா கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள் கட்டித்தர தயாராக இருக்கிறோம்” என்றார்.
கழிப்பிடம் செல்லும் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாவது நாட்டில் இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரலில் ஹரியாணாவின் பகானா கிராமத்தில் 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
பிஹாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து மணமாகி அருகிலுள்ள பிகா பலோத் கிராமத்துக்கு மாமியார் வீடு சென்ற புதுமணப் பெண், அங்கு கழிப்பறை இல்லாததால் தம்மால் வாழ முடியாது எனவும், அதை கட்டினால் திரும்பி வருவதாகவும் கூறி தாய் வீடு வந்து விட்டார்.
பாராட்டு விழா
இந்தச் செய்தியை பார்த்து அங்கு சுலப் இன்டர்நேஷனல் கழிப்பறை கட்டித் தந்தது. அந்தப் பெண்ணுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவும் நடந்தது.
2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, நாட்டில் 53 சதவீத மக்களின் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை.
இது இந்திய கிராமங்களில் 62.9 சதவீதம் எனவும், வட மாநிலங்களான பிஹார், ஜார்க்கண்ட், உ.பி., ராஜஸ்தான் ஆகியவற்றில் 78 சதவீதம் எனவும் வெளியானது.
கழிப்பறைகள் எண்ணிக்கை, உ.பி.யில் 2014 வரை 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் :
உ.பி.யின் பரெய்லி மாவட்டத்தில் 22 வயது இளம் பெண் ஒருவர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, ‘ஆசிட்’டை குடிக்கச் செய்து, பின் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார்.
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இப்பெண்ணின் உடல் அயித்புரா என்ற கிராமத்தின் வயல்வெளியில் இருந்து கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதுபற்றி போலீஸார் கூறுகையில், “அப்பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுந்து நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் வயிற்றில் ஆசிட் காணப்பட்டது. கொல்லப்படுவதற்கு முன் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்கச் செய்திருக்கலாம். கொலைக்குப் பின் ஆசிட் மற்றும் பெட்ரோல் மூலம் முகம் சிதைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
03-06-2014
Sunday, August 04, 2013
பாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்!- பாகம் இரண்டு
மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பேட்டி தொடர்கிறது......
கேள்வி:
முஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, ஒரு முஸ்லிம் மாகாணத்தின் பிரஜையாக நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற கேள்வியும் எழுகிறதே?
பதில்:
இது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கற்பனையான பேச்சுக்களின் மூலம் உண்மையான நடைமுறைகளை நாம் மறைத்து விட முடியாது. இந்த விஷயத்தில் பல கருத்துக்களை திரித்து நம் மக்கள் முன் சிலர் வைக்கின்றனர். சமூக அடையாளங்கள் என்று எதனைக் கூறுகிறீர்கள்? பிரிட்டிஷ் ஆட்சியில் நாடே அடிமைப் பட்டுக் கிடந்தபோது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களை தயார் படுத்தியது எந்த சமூக அடையாளங்கள்? இஸ்லாமிய மாகாணங்களில் எதனை நீங்கள் புகட்டப் போகிறீர்கள்? நமது நாட்டின் சுதந்திர தாகத்தையும் நம்பிக்கையையும் முஸ்லிம்களுக்கு உண்டாக்கியது எது? 90 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளை எதற்கும் உபயோகமற்ற ஒரு இஸ்லாமிய மாகாணம் தந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்களா? நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியில் எவருடைய மத உணர்வுகளுக்கும் தடை போடப்பட்டதா? ஹிந்துக்கள் தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற இதுவரை சிக்கல் எதனையும் சந்தித்திருக்கிறார்களா? இதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையே!
இது போன்ற அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி மக்களை குழப்புவது மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம்களே ஆவர். இவை எல்லாம் அரசியல் சார்ந்த பேச்சுக்கள். சமூக நலன் சார்ந்த பேச்சுக்கள் அல்ல.
இஸ்லாமிய வரலாறு என்பது இந்திய வரலாற்றின் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. இத்தனை காலம் ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாத்துக்காக இந்த மன்னில் குறிப்பிடுமபடியாக எதையும் செய்யவில்லை. பெயரளவு முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து மறைந்தார்கள். இஸலாத்தை பரப்புவது அவர்களின் கொள்கையாகவும் இருக்கவில்லை. இஸ்லாமிய சமூகம் சில மார்க்க அறிஞர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இதே முஸ்லிம் ஆட்சியாளர்களால் பல மார்க்க அறிஞர்கள் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதிகமான மன்னர்கள் தங்களுக்கு துதி பாடும் பல கள்ள மௌலவிகளையும் உருவாக்கி வைத்திருந்தனர். இவர்களின் பணியே உண்மையான இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதுதான். இஸ்லாத்தின் பழைய வரலாறுகளைப் பார்க்கும் போது முதல் நூற்றாண்டில் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை வென்றெடுத்தது. ஆனால் இந்தியாவுக்குள் இஸ்லாம் பரவியதே வேறொரு அடிப்படையில். இஸ்லாத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அரபுகள் அல்ல. தென் நாடுகளில் ஒரு சில இடங்களில் வியாபார நிமித்தமாக அரபுகள் வந்து இஸ்லாத்தை பரப்பியும் இருக்கிறார்கள். ஆனால் அதிகமான பேர் அரபுகளிடமிருந்து நேரிடையாக இஸ்லாத்தை பெறவில்லையாதலால் அதன் உண்மை முகத்தை பலரும் அறியாமலேயே இன்றும் உள்ளனர். இன்றும் கூட இந்திய முஸ்லிம்களின் வரலாறு என்று பார்த்தோமானால், மியூசிக், ஆர்ட், கட்டிடங்கள், சமாதிகள், போன்ற பின்னணியிலேயே செல்வதைப் பார்க்கலாம். இஸ்லாம் இந்திய முஸ்லிம்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அந்த எதிர்பார்ப்பை விளங்காதவர்களாகவே அநேக முஸ்லிம்கள் இன்றும் உள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாக நடத்தப்படுவர் என்ற எண்ணம் இன்னும் முஸ்லிம்களுக்கு இருக்குமானால் அவர்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மனிதன் தனது வாழ்வை உறுதியோடு எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் தங்களின் மனோ திடததை ஏனோ இழந்து நிற்கின்றனர். இந்திய முஸ்லிம்களில் பலர் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்டிருப்பதை உணர்கின்றேன். முதலில் அசைக்க முடியாத இறை நம்பிக்கை இவர்களுக்கு முதலில் வர வேண்டும். மனிதர்களை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்? இது போன்ற கற்பனையான கோழைத்தனமான சிந்தனைகளிலிருந்து முதலில் நாம் மீண்டு வர வேண்டும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷாரின் பல உதவிகளை ஏனோ முஸ்லிம்கள் ஏற்கவில்லை. வெள்ளையர்களின் ஆட்சியில்தான் முன்பை விட இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இஸ்லாத்தின் சிறந்த கலாசாரம் மதிப்பானது அதனை பின் பற்றும் இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது. இந்தியாவானது முஸ்லிம் நாடுகளின் எல்லைகளை தனது மூன்று புறமும் கொண்டுள்ளது. எல்லகைள் இவ்வாறு பரந்து கிடக்க முஸ்லிம்களை ஒழித்து விட வேண்டும் என்று ஹிந்துக்கள் எப்படி நினைப்பர். அது நடக்கின்ற காரியமா? இது எவ்வாறு நிகழ சாத்தியம் உள்ளது? 90 மில்லியன் முஸ்லிம்களை அழித்தல் என்பது அவ்வளவு லேசான காரியமா? கண்டிப்பாக சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகமதிகம் உருவாவார்கள் எனபது எனது எண்ணம்.
இந்த உலகம் அமைதிக்காகவும் அழகிய வாழ்வு முறைக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஹிந்துக்கள் கம்யூனிசத்தைப் படிக்கின்றனர். மேற்குலக நாகரிகத்தையும் படிக்கின்றனர். அதே போல் இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பை தூரமாக வைத்துவிட்டு அதனை அன்போடு நோக்கினால் பல நன்மைகளையும் பல சட்டதிட்டங்களையும் இங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த புரிதலானது இஸ்லாத்தின் மேலும் முஸ்லிம்களின் மேலும் உள்ள வெறுப்பு பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. இஸ்லாம் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு அதற்குள் முஸ்லிம்களை அடக்கி ஆளவில்லை. அது உலக மக்களுக்கு பல அழைப்புகளை விடுக்கிறது. அதிகமான வசனங்கள் 'ஓ..மனிதர்களே!' என்று தான் ஆரம்பிக்கிறது. சில வசனங்கள்தான் முஸ்லிம்களை நோக்கி பேசுகிறது. மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்க பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இஸ்லாம் இறைவனைத்தான் வணங்க சொல்கிறதேயன்றி முகமது நபியை வணங்கச் சொல்லவில்லை என்பதும் ஹிந்துக்களுக்கு நன்றாக தெரியும். ஏக இறைவனை வணங்கச் சொல்வது என்பது இந்து மக்களுக்கு புதிய கொள்கையும் அல்ல. ஓரிறைக் கோட்பாடு, ஏழைகளுக்கு உதவுதல், நீதி தவறாத ஆட்சி, பகுத்தறியும் சிறந்த அறிவு போன்ற பல அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது இஸ்லாம். ஒரு சில முஸ்லிம்களின் தீவிரவாதப் போக்கினால் இந்து மக்கள் இஸ்லாத்தை வெறுக்கும் சூழலை உண்டாக்கி விடும். நம்முடைய சுய லாபத்துக்காக இஸ்லாத்தின் கொள்கைகளை சிதைக்க அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிவினை என்பதானது எந்த விதத்திலும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த முடியாத ஒன்று. ஒரு அரசியல் ஏற்பாட்டின்படி முஸ்லிம் லீக் என்ற கட்சியால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. இதற்கும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களின் பிரச்னைகளை தீர்க்க பாகிஸ்தான் ஒரு சிறந்த தீர்வாக ஆக முடியாது என்பது எனது எண்ணம். இந்த பிரிவினையானது இந்து முஸ்லிம் சிக்கல்களை மேலும் அதிகமாக்கவே செய்யும்.
நபிகள் நாயகம் 'இந்த உலகம் முழுவதுமே எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று சொன்னார்கள். தற்போது அந்த தொழும் இடங்களை பிரித்துக் கொடுக்கும்படி என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். ஒன்பது கோடி முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பரந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சில மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதால் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கப்படுகிறது. மீண்டும் இஸ்லாமிய பார்வையில் இவர்கள் பிரிவினையைக் கோரவில்லை என்பதைக் கவனியுங்கள். 'சில மாகாணங்களில் அதிகமாக இருக்கிறோம். அந்த பகுதிகளை பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்' என்பதே அவர்களின் கோரிக்கை. பல மாநிலங்களில் மிக சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. எல்லையோரங்களில் பக்கத்து நாடுகளோடு தொடர்புகளோடும் பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மக்களின் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதை எனக்குச் சொல்லுங்கள். முஸ்லிம் லீக்கின் கருத்துப்படி இங்குள்ள 30 மில்லியன் முஸ்லிம் குடும்பங்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தனி நாடு கேட்டு போகப் போகிறீர்களா? இந்து முஸ்லிம் பிரச்னையானது காங்கிரஸூக்குள்ளும் முஸ்லிம் லீக்குக்குள்ளும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இன்று தனி நாடு கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. இந்த பிரிவினை நிறைவேறினால் உலக வல்லரசுகளின் பார்வை இந்த பிராந்தியத்தில் விழுந்து காலாகாலத்துக்கும் இரு நாடுகளுக்குமிடையே தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
முஸ்லிம்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. ஆனால் நாட்டைப் பிரித்துத்தான் அந்த பாதுகாப்பு கிடைக்ககும் என்ற பிரசாரத்தையே நாம் விமரிசிக்கிறோம். இதில் தவறாக முஸ்லிம்கள் வழி நடத்தப் படுகிறார்கள். இந்த தேச பிரிவினையானது காலத்துக்கும் இந்து முஸ்லிம் பிரிவினையை அதிகப் படுத்திக் கொண்டேயிருக்கும். பிரச்னைகள் தீருவதற்கு தேசப் பிரிவினை ஒரு மார்க்கம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியா பிற்காலங்களில் சாதிப் பிரச்னைகளினால் மிகப் பெரும் சவால்களை சந்திக்கும். அரசியல் பகிர்வு என்பது இரண்டாம் பட்சமாகி ஆதிக்க சாதிகளின் தலையீடுகள் அதிகமாகவே இருக்கும். கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ இந்த தலையீடுகளை தடுக்க இயலாது. கீழ் மட்டங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடும் இயக்கங்களாகவே அவை இருந்து வரும். ஆனால் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.
தற்போது முஸ்லிம் செல்வந்தர்களும், பிரச்னை எழுப்பும் சில குழுக்களும் ஒரு வித அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தற்போது இவை அனைத்தும் மதம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் கொண்டு சாமர்த்தியமாக திசை திருப்பப்படுகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளை மதப் பிரச்னையாக்கி விட்டனர். இதற்கு முஸ்லிம்கள் மட்டுமே காரணமல்ல. இதற்கு பலரும் பொருப்பேற்க வேண்டும். முதலில் வெள்ளையர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பிரிவினைவாதம் பின்னர் அலிகரால் தொடரப்பட்டது. அதன் பிறகு குறுகிய மனம் கொண்ட ஒரு சில இந்துக்களால் இந்த கருத்து ஆழமாக பலர் மனதிலும் வேரூன்றி விட்டது. இதனால் இந்திய சுதந்திரம் என்பது இரு நாட்டு பிரிவினையில் கொண்டு போய் நம்மை நிறுத்தியுள்ளது.
ஜின்னா ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதுவராகவே முன்பு இருந்துள்ளார். சரோஜினி நாயுடுவும் இவரின் செயல்களை பலமுறை பாராட்டியுள்ளார். ஜின்னா தாதாபாய் நவ்ரோஜியின் மாணவனும் ஆவார். 1906 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கென ஒரு தனி அமைப்பு தொடங்கப்படுவதையும் எதிர்த்தார். 1919 வரையிலும் நாட்டின் பிரிவினைக்கு எதிராகவே இருந்தார்.
1928 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சைமன் கமிஷனை காங்கிரஸோடு சேர்ந்து எதிர்க்கவும் செய்தார். 1937 வரை பாகிஸ்தான் பிரிவினைக்கு எந்த ஆதரவும் தராதவராகவே இருந்து வந்தார். மாணவர்கள் மத்தியில் கூட இந்து முஸ்லிம் ஒற்றுமை நமது நாட்டுக்கு எந்த அளவு அவசியம் என்பதைப் பற்றி பல முறை கலந்துரையாடியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஏழு மாநிலங்களில் அரசு அமைத்து அதில் முஸ்லிம் லீக்கை முற்றாக புறக்கணித்தது. இதன் பிறகு தான் 1940 ல் வேறு வழியின்றி பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்க முன் வந்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 3ல் 'காங்கிரஸ் இந்துக்களின் கூடாரமாகி விட்டது' என்ற தகவலை முதன் முதலில் பதித்தார். 1925 ஆம் ஆண்டில் கூட தான் ஒரு நேஷனலிஸ்ட் என்பதை பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். சுருக்கமாக சொன்னால் ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினை என்பதானது அவரது அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் நடந்தது. என்னைப் பற்றி எதையும் சொல்ல ஜின்னாவுக்கு முழு உரிமை உண்டு. இதுவரை அவரது அறிவுத் திறனில் எந்த குறையும் நான் கண்டதில்லை. ஒரு அரசியல்வாதியாக பாகிஸ்தான் பிரிவினைக்காக மிக அதிக அளவில் உழைத்துள்ளார். தற்போது இந்த பிரிவினை சமாசாரமானது ஜின்னாவின் கௌரவப் பிரச்னையாக மாறி விட்டது. எதை இழந்தாவது பாகிஸ்தானை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.
கேள்வி: முஸ்லிம்கள் பாகிஸ்தான் பிரிவினை வாதத்தை கைவிட மாட்டார்கள் என்று தெளிவாக தெரிகிறது. பிறகு எதற்கு பிரிவினைக்கு எதிராக தேவையற்ற இத்தனை வாக்கு வாதங்கள்?
பதில்: இது மிகவும் கடினமான கேள்வி. கலகக்கார கூட்டம் ஒன்றின் மிகைப்படுத்தப்பட்ட ஆர்வத்தை அடக்குவதென்பது தற்போது இயலாத காரியம். ஒருவரின் உணர்வுகளை அடக்குவதென்பது அவரை கொன்று விடுவதை விட மோசமானது. இன்று முஸ்லிம்கள் நடந்து செல்லவில்லை. ஓடுகிறார்கள். வலுவான ஸ்திரமான நடையை அவர்கள் பயிலவில்லை. கடல் அலைகளைப் போல அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரும் கூட்டமானது தனது நம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்து விட்டால் அவர்களை சுற்றி வீணாண கற்பனைகளும் தங்களைப் பற்றிய எதிர்கால பயமும் சூழ்ந்து கொள்ளும். இதனால் சரி எது? தவறு எது? என்று தீர்மானிக்கும் திறனை இழந்து விடுவர். அதுதான் தற்போது நடந்து வருகிறது.
ஒரு கூட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் எண்ணிக்கையை பொருத்து அமைவது அல்ல. அந்த மக்கள் தங்களின் நம்பிக்கை, நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொண்டு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வதே அவர்களின் உண்மையான வெற்றிக்கு அடிகோலியதாகும்.
பிரிட்டிஷாரின் அரசியல் சூழ்ச்சிகளானது பல்வேறு விதமான பயத்தையும் அவ நம்பிக்கையையும் முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்து விட்டது. வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டுப் போவதற்குள் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற மோசமான எண்ணத்துக்கு பலர் வந்து விட்டனர். இந்த பிரிவினையானது தங்களின் பயத்தையும், தங்கள் மத்தையும், பொருளாதாரத்தையும் காத்து விடும் என்று நம்புகின்றனர். இது தேவையற்ற பயம் என்பதை பின்னர் உணருவார்கள்.
கேள்வி: ஆனால் இந்துக்களும், முஸலிம்களும் வழிபாடு, கலாசாரம், மொழி என்று முற்றிலும் வேறுபட்டிருக்க இந்த இரு குழுக்களும் ஒற்றுமையாக இருந்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: இது முன்பே விவாதித்த ஒரு கேள்வி. இது சம்பந்தமாக அல்லாமா இக்பாலும், மவுலானா ஹுசைன் அகமது மதனியும் ஏற்கெனவே நிறைய பேசியிருக்கிறார்கள். குர்ஆனில் 'கௌம்' என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை முஸ்லிம்களை மாத்திரம் குறிப்பதாகாது. உலக மக்கள் அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகத்தான் இறைவன் குர்ஆனில் பயன்படுத்துகிறான். மில்லத்(COMMUNITY), கௌம்(NATION), உம்மத்(GROUP) என்ற குர்ஆன் பயன்படுத்தும் வார்த்தைகளை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குள் உள்ள பல வேறுபாடுகளை களைய முடியும்.
இந்தியா பல மதங்களை தன்னகத்தே கொண்ட சிறந்த வீடாக உள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பாரஸிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் என்று அனைத்து மதத்தவரும் இம்மண்ணை நேசிக்கின்றனர். இந்து மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதை நான் மறுக்கவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது இயலாத காரியம் ஒன்றும் அல்ல. இந்த வேற்றுமையானது நமது நாட்டை பிளந்து விடாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். சுதந்திர தேசம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. அந்த அருமையான சுதந்திரத்தை மதத்தின் பெயரால் பிளவு படுத்திவிட வேண்டாம் என்பதே எனது வாதம்.
முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்த உலகுக்கு மிகச் சிறந்த செய்தியை கொண்டு செல்லும் மகத்தான பணியை இறைவன் தந்திருக்கிறான். குறுகிய மனப்பான்மையில் தங்களுக்குள் இந்த அரிய பொக்கிஷத்தை வைத்துக் கொள்ள அவர்கள் அனுப்பப்படவில்லை. மேலும் இந்திய முஸ்லிம்கள் பல பிரிவுகளாக மொழியாலும், பொருளாதாரத்தாலும், பார்க்கும் வேலைகளாலும் பலவாறாக பிரிந்து கிடக்கின்றார்கள். இவர்களை ஒற்றுமைப் படுத்த இந்துக்களைக் காட்டி பயமுறுத்தல் தற்போது நடத்தப்படுகிறது. இது நிரந்த தீர்வைத் தராது. ஒற்றுமை என்பது குர்ஆனைக் கொண்டு முன் எடுக்கப்பட வேண்டும். அதுதான் முஸ்லிம்களை நிரந்தர ஒற்றுமைக்கு கொண்டு செல்லும்.
வஹ்ஹாபி, சுன்னி, ஷியா, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று பலவாறாக முஸ்லிம்கள் சிதறுண்டுக் கிடக்கின்றனர். இங்கு சாதாரண செயல்கள் கூட பெரிதுபடுத்தப்படுகின்றது. தொழுகையில் கைகளை உயர்த்துவது, ஆமீன் சப்தமிட்டு சொல்வதில் கூட ஒரு முடிவுக்கு நம்மால் இன்றும் வர முடியவில்லை. சில உலமாக்கள் தங்களின் சொந்த கருத்துக்களை இஸ்லாமாக்கப் பார்க்கிறார்கள். சில இடங்களில் முஸ்லிம்களை காஃபிர்கள் என்று கூறும் போக்கும் நடந்து வருகிறது. இவை எல்லாம் உண்மையான இஸ்லாத்தை விளங்காததினால் வந்த கேடுகள் ஆகும்.
தற்போது நிலைமை முன்பை விட மோசமாக உள்ளது. இஸ்லாமிய மதத்தையும், இந்திய அரசியலையும் ஒன்றாக்கி பல குழப்பங்களை விதைக்கின்றனர். வரலாற்றை நோக்கும் போது உண்மையான இஸ்லாத்தை பின்பற்றியவர்களை மற்றவர்கள் கேலி செய்தே வந்துள்ளனர். தன்னலமற்ற சேவை செய்து இந்த இஸ்லாத்தை தழைத்தோங்கச் செய்த பல மகான்களின் வரலாறு இன்றும் நம் முன் உள்ளது. பல இறைத் தூதர்களாலேயே அவர்களின் மக்களை முழுவதும் நேர்வழியின்பால் கொண்டு வர முடியாத போது நம்மை போன்ற சாமான்யர்களால் முழுவதுமான மக்களையும் சீர் திருத்தம் செய்து விட முடியுமா? நாம் நமது சீர்திருத்தங்களை மக்கள் முன் வைத்துக் கொண்டிருப்போம். மாற்றம் கொண்டு வர வேண்டியது இறைவன் புறத்திலிருந்து என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் மனத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.
கேள்வி: 'அல் ஹிலால்' என்ற உங்களின் பத்திரிக்கையை நிறுத்தி நீண்ட காலமாகிறதே? என்ன காரணம்? இஸ்லாமியர்களின் மீது நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா? அல்லது பலனலிக்காத ஒரு பாலைவனத்தில் அழைப்பு பணி செய்வது வீண் என்று முடிவு கட்டி விட்டீர்களா?
பதில்: உண்மையைச் சொல்வதில் தோற்று விட்டதால் நான் அந்த பத்திரிக்கையை நிறுத்தவில்லை. இந்த பத்திரிக்கையானது துடிப்புள்ள பல ஆர்வமுடைய நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பலர் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டனர். எனது சொந்த வாழ்வில் இந்த ஈடுபாடானது பல மாற்றங்களை என்னுள் தந்தது. இறைத் தூதர் வழிகாட்டுதலின்படி எமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த துறை மிகவும் உறுதுணையாக இருந்தது.
என் சொந்த விருப்பங்கள் என் மனத்துள் எழும் போதெல்லாம் போனிக்ஸ் பறவையைப் போல அந்த எண்ணங்களை எரித்து விடுவேன். அல் ஹிலால் பத்திரிக்கையானது அத்தகைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. இஸ்லாத்தின் அடிப்படையைக் கொண்டும், எனது தேசத்தின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டதாலேயே இது சாத்தியமானது. என் மனம் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களின் விடுதலைக்காக ஏங்கியது. இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்றும் விரும்பியது.
முதல் உலகப் போருக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் என்றுதான் நினைத்தேன். அதை தடுத்து விடும் சக்தி எந்த நாட்டுக்கும் இல்லை என்றே நம்பியிருந்தேன். அதே நேரம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திர இந்தியாவில் ஒற்றுமையாக கைகோர்த்து நடந்து செல்வார்கள் என்றே எண்ணியிருந்தேன். இந்திய சுதந்திரத்திற்காக அந்த நாட்டு மக்களே ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தினர் என்ற அவப்பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அத்தகைய சூழல் வராதிருப்பதற்காக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டேன்.
-முற்றும்.
கேள்வி:
முஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, ஒரு முஸ்லிம் மாகாணத்தின் பிரஜையாக நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற கேள்வியும் எழுகிறதே?
பதில்:
இது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கற்பனையான பேச்சுக்களின் மூலம் உண்மையான நடைமுறைகளை நாம் மறைத்து விட முடியாது. இந்த விஷயத்தில் பல கருத்துக்களை திரித்து நம் மக்கள் முன் சிலர் வைக்கின்றனர். சமூக அடையாளங்கள் என்று எதனைக் கூறுகிறீர்கள்? பிரிட்டிஷ் ஆட்சியில் நாடே அடிமைப் பட்டுக் கிடந்தபோது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களை தயார் படுத்தியது எந்த சமூக அடையாளங்கள்? இஸ்லாமிய மாகாணங்களில் எதனை நீங்கள் புகட்டப் போகிறீர்கள்? நமது நாட்டின் சுதந்திர தாகத்தையும் நம்பிக்கையையும் முஸ்லிம்களுக்கு உண்டாக்கியது எது? 90 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளை எதற்கும் உபயோகமற்ற ஒரு இஸ்லாமிய மாகாணம் தந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்களா? நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியில் எவருடைய மத உணர்வுகளுக்கும் தடை போடப்பட்டதா? ஹிந்துக்கள் தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற இதுவரை சிக்கல் எதனையும் சந்தித்திருக்கிறார்களா? இதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையே!
இது போன்ற அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி மக்களை குழப்புவது மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம்களே ஆவர். இவை எல்லாம் அரசியல் சார்ந்த பேச்சுக்கள். சமூக நலன் சார்ந்த பேச்சுக்கள் அல்ல.
இஸ்லாமிய வரலாறு என்பது இந்திய வரலாற்றின் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. இத்தனை காலம் ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாத்துக்காக இந்த மன்னில் குறிப்பிடுமபடியாக எதையும் செய்யவில்லை. பெயரளவு முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து மறைந்தார்கள். இஸலாத்தை பரப்புவது அவர்களின் கொள்கையாகவும் இருக்கவில்லை. இஸ்லாமிய சமூகம் சில மார்க்க அறிஞர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இதே முஸ்லிம் ஆட்சியாளர்களால் பல மார்க்க அறிஞர்கள் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதிகமான மன்னர்கள் தங்களுக்கு துதி பாடும் பல கள்ள மௌலவிகளையும் உருவாக்கி வைத்திருந்தனர். இவர்களின் பணியே உண்மையான இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதுதான். இஸ்லாத்தின் பழைய வரலாறுகளைப் பார்க்கும் போது முதல் நூற்றாண்டில் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை வென்றெடுத்தது. ஆனால் இந்தியாவுக்குள் இஸ்லாம் பரவியதே வேறொரு அடிப்படையில். இஸ்லாத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அரபுகள் அல்ல. தென் நாடுகளில் ஒரு சில இடங்களில் வியாபார நிமித்தமாக அரபுகள் வந்து இஸ்லாத்தை பரப்பியும் இருக்கிறார்கள். ஆனால் அதிகமான பேர் அரபுகளிடமிருந்து நேரிடையாக இஸ்லாத்தை பெறவில்லையாதலால் அதன் உண்மை முகத்தை பலரும் அறியாமலேயே இன்றும் உள்ளனர். இன்றும் கூட இந்திய முஸ்லிம்களின் வரலாறு என்று பார்த்தோமானால், மியூசிக், ஆர்ட், கட்டிடங்கள், சமாதிகள், போன்ற பின்னணியிலேயே செல்வதைப் பார்க்கலாம். இஸ்லாம் இந்திய முஸ்லிம்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அந்த எதிர்பார்ப்பை விளங்காதவர்களாகவே அநேக முஸ்லிம்கள் இன்றும் உள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாக நடத்தப்படுவர் என்ற எண்ணம் இன்னும் முஸ்லிம்களுக்கு இருக்குமானால் அவர்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மனிதன் தனது வாழ்வை உறுதியோடு எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் தங்களின் மனோ திடததை ஏனோ இழந்து நிற்கின்றனர். இந்திய முஸ்லிம்களில் பலர் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்டிருப்பதை உணர்கின்றேன். முதலில் அசைக்க முடியாத இறை நம்பிக்கை இவர்களுக்கு முதலில் வர வேண்டும். மனிதர்களை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்? இது போன்ற கற்பனையான கோழைத்தனமான சிந்தனைகளிலிருந்து முதலில் நாம் மீண்டு வர வேண்டும்.
பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷாரின் பல உதவிகளை ஏனோ முஸ்லிம்கள் ஏற்கவில்லை. வெள்ளையர்களின் ஆட்சியில்தான் முன்பை விட இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இஸ்லாத்தின் சிறந்த கலாசாரம் மதிப்பானது அதனை பின் பற்றும் இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது. இந்தியாவானது முஸ்லிம் நாடுகளின் எல்லைகளை தனது மூன்று புறமும் கொண்டுள்ளது. எல்லகைள் இவ்வாறு பரந்து கிடக்க முஸ்லிம்களை ஒழித்து விட வேண்டும் என்று ஹிந்துக்கள் எப்படி நினைப்பர். அது நடக்கின்ற காரியமா? இது எவ்வாறு நிகழ சாத்தியம் உள்ளது? 90 மில்லியன் முஸ்லிம்களை அழித்தல் என்பது அவ்வளவு லேசான காரியமா? கண்டிப்பாக சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகமதிகம் உருவாவார்கள் எனபது எனது எண்ணம்.
இந்த உலகம் அமைதிக்காகவும் அழகிய வாழ்வு முறைக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஹிந்துக்கள் கம்யூனிசத்தைப் படிக்கின்றனர். மேற்குலக நாகரிகத்தையும் படிக்கின்றனர். அதே போல் இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பை தூரமாக வைத்துவிட்டு அதனை அன்போடு நோக்கினால் பல நன்மைகளையும் பல சட்டதிட்டங்களையும் இங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த புரிதலானது இஸ்லாத்தின் மேலும் முஸ்லிம்களின் மேலும் உள்ள வெறுப்பு பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. இஸ்லாம் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு அதற்குள் முஸ்லிம்களை அடக்கி ஆளவில்லை. அது உலக மக்களுக்கு பல அழைப்புகளை விடுக்கிறது. அதிகமான வசனங்கள் 'ஓ..மனிதர்களே!' என்று தான் ஆரம்பிக்கிறது. சில வசனங்கள்தான் முஸ்லிம்களை நோக்கி பேசுகிறது. மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்க பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இஸ்லாம் இறைவனைத்தான் வணங்க சொல்கிறதேயன்றி முகமது நபியை வணங்கச் சொல்லவில்லை என்பதும் ஹிந்துக்களுக்கு நன்றாக தெரியும். ஏக இறைவனை வணங்கச் சொல்வது என்பது இந்து மக்களுக்கு புதிய கொள்கையும் அல்ல. ஓரிறைக் கோட்பாடு, ஏழைகளுக்கு உதவுதல், நீதி தவறாத ஆட்சி, பகுத்தறியும் சிறந்த அறிவு போன்ற பல அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது இஸ்லாம். ஒரு சில முஸ்லிம்களின் தீவிரவாதப் போக்கினால் இந்து மக்கள் இஸ்லாத்தை வெறுக்கும் சூழலை உண்டாக்கி விடும். நம்முடைய சுய லாபத்துக்காக இஸ்லாத்தின் கொள்கைகளை சிதைக்க அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிவினை என்பதானது எந்த விதத்திலும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த முடியாத ஒன்று. ஒரு அரசியல் ஏற்பாட்டின்படி முஸ்லிம் லீக் என்ற கட்சியால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. இதற்கும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களின் பிரச்னைகளை தீர்க்க பாகிஸ்தான் ஒரு சிறந்த தீர்வாக ஆக முடியாது என்பது எனது எண்ணம். இந்த பிரிவினையானது இந்து முஸ்லிம் சிக்கல்களை மேலும் அதிகமாக்கவே செய்யும்.
நபிகள் நாயகம் 'இந்த உலகம் முழுவதுமே எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று சொன்னார்கள். தற்போது அந்த தொழும் இடங்களை பிரித்துக் கொடுக்கும்படி என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். ஒன்பது கோடி முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பரந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சில மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதால் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கப்படுகிறது. மீண்டும் இஸ்லாமிய பார்வையில் இவர்கள் பிரிவினையைக் கோரவில்லை என்பதைக் கவனியுங்கள். 'சில மாகாணங்களில் அதிகமாக இருக்கிறோம். அந்த பகுதிகளை பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்' என்பதே அவர்களின் கோரிக்கை. பல மாநிலங்களில் மிக சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. எல்லையோரங்களில் பக்கத்து நாடுகளோடு தொடர்புகளோடும் பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மக்களின் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதை எனக்குச் சொல்லுங்கள். முஸ்லிம் லீக்கின் கருத்துப்படி இங்குள்ள 30 மில்லியன் முஸ்லிம் குடும்பங்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தனி நாடு கேட்டு போகப் போகிறீர்களா? இந்து முஸ்லிம் பிரச்னையானது காங்கிரஸூக்குள்ளும் முஸ்லிம் லீக்குக்குள்ளும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இன்று தனி நாடு கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. இந்த பிரிவினை நிறைவேறினால் உலக வல்லரசுகளின் பார்வை இந்த பிராந்தியத்தில் விழுந்து காலாகாலத்துக்கும் இரு நாடுகளுக்குமிடையே தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.
முஸ்லிம்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. ஆனால் நாட்டைப் பிரித்துத்தான் அந்த பாதுகாப்பு கிடைக்ககும் என்ற பிரசாரத்தையே நாம் விமரிசிக்கிறோம். இதில் தவறாக முஸ்லிம்கள் வழி நடத்தப் படுகிறார்கள். இந்த தேச பிரிவினையானது காலத்துக்கும் இந்து முஸ்லிம் பிரிவினையை அதிகப் படுத்திக் கொண்டேயிருக்கும். பிரச்னைகள் தீருவதற்கு தேசப் பிரிவினை ஒரு மார்க்கம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இந்தியா பிற்காலங்களில் சாதிப் பிரச்னைகளினால் மிகப் பெரும் சவால்களை சந்திக்கும். அரசியல் பகிர்வு என்பது இரண்டாம் பட்சமாகி ஆதிக்க சாதிகளின் தலையீடுகள் அதிகமாகவே இருக்கும். கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ இந்த தலையீடுகளை தடுக்க இயலாது. கீழ் மட்டங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடும் இயக்கங்களாகவே அவை இருந்து வரும். ஆனால் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.
தற்போது முஸ்லிம் செல்வந்தர்களும், பிரச்னை எழுப்பும் சில குழுக்களும் ஒரு வித அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தற்போது இவை அனைத்தும் மதம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் கொண்டு சாமர்த்தியமாக திசை திருப்பப்படுகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளை மதப் பிரச்னையாக்கி விட்டனர். இதற்கு முஸ்லிம்கள் மட்டுமே காரணமல்ல. இதற்கு பலரும் பொருப்பேற்க வேண்டும். முதலில் வெள்ளையர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பிரிவினைவாதம் பின்னர் அலிகரால் தொடரப்பட்டது. அதன் பிறகு குறுகிய மனம் கொண்ட ஒரு சில இந்துக்களால் இந்த கருத்து ஆழமாக பலர் மனதிலும் வேரூன்றி விட்டது. இதனால் இந்திய சுதந்திரம் என்பது இரு நாட்டு பிரிவினையில் கொண்டு போய் நம்மை நிறுத்தியுள்ளது.
ஜின்னா ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதுவராகவே முன்பு இருந்துள்ளார். சரோஜினி நாயுடுவும் இவரின் செயல்களை பலமுறை பாராட்டியுள்ளார். ஜின்னா தாதாபாய் நவ்ரோஜியின் மாணவனும் ஆவார். 1906 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கென ஒரு தனி அமைப்பு தொடங்கப்படுவதையும் எதிர்த்தார். 1919 வரையிலும் நாட்டின் பிரிவினைக்கு எதிராகவே இருந்தார்.
1928 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சைமன் கமிஷனை காங்கிரஸோடு சேர்ந்து எதிர்க்கவும் செய்தார். 1937 வரை பாகிஸ்தான் பிரிவினைக்கு எந்த ஆதரவும் தராதவராகவே இருந்து வந்தார். மாணவர்கள் மத்தியில் கூட இந்து முஸ்லிம் ஒற்றுமை நமது நாட்டுக்கு எந்த அளவு அவசியம் என்பதைப் பற்றி பல முறை கலந்துரையாடியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஏழு மாநிலங்களில் அரசு அமைத்து அதில் முஸ்லிம் லீக்கை முற்றாக புறக்கணித்தது. இதன் பிறகு தான் 1940 ல் வேறு வழியின்றி பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்க முன் வந்தார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 3ல் 'காங்கிரஸ் இந்துக்களின் கூடாரமாகி விட்டது' என்ற தகவலை முதன் முதலில் பதித்தார். 1925 ஆம் ஆண்டில் கூட தான் ஒரு நேஷனலிஸ்ட் என்பதை பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். சுருக்கமாக சொன்னால் ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினை என்பதானது அவரது அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் நடந்தது. என்னைப் பற்றி எதையும் சொல்ல ஜின்னாவுக்கு முழு உரிமை உண்டு. இதுவரை அவரது அறிவுத் திறனில் எந்த குறையும் நான் கண்டதில்லை. ஒரு அரசியல்வாதியாக பாகிஸ்தான் பிரிவினைக்காக மிக அதிக அளவில் உழைத்துள்ளார். தற்போது இந்த பிரிவினை சமாசாரமானது ஜின்னாவின் கௌரவப் பிரச்னையாக மாறி விட்டது. எதை இழந்தாவது பாகிஸ்தானை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.
கேள்வி: முஸ்லிம்கள் பாகிஸ்தான் பிரிவினை வாதத்தை கைவிட மாட்டார்கள் என்று தெளிவாக தெரிகிறது. பிறகு எதற்கு பிரிவினைக்கு எதிராக தேவையற்ற இத்தனை வாக்கு வாதங்கள்?
பதில்: இது மிகவும் கடினமான கேள்வி. கலகக்கார கூட்டம் ஒன்றின் மிகைப்படுத்தப்பட்ட ஆர்வத்தை அடக்குவதென்பது தற்போது இயலாத காரியம். ஒருவரின் உணர்வுகளை அடக்குவதென்பது அவரை கொன்று விடுவதை விட மோசமானது. இன்று முஸ்லிம்கள் நடந்து செல்லவில்லை. ஓடுகிறார்கள். வலுவான ஸ்திரமான நடையை அவர்கள் பயிலவில்லை. கடல் அலைகளைப் போல அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரும் கூட்டமானது தனது நம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்து விட்டால் அவர்களை சுற்றி வீணாண கற்பனைகளும் தங்களைப் பற்றிய எதிர்கால பயமும் சூழ்ந்து கொள்ளும். இதனால் சரி எது? தவறு எது? என்று தீர்மானிக்கும் திறனை இழந்து விடுவர். அதுதான் தற்போது நடந்து வருகிறது.
ஒரு கூட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் எண்ணிக்கையை பொருத்து அமைவது அல்ல. அந்த மக்கள் தங்களின் நம்பிக்கை, நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொண்டு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வதே அவர்களின் உண்மையான வெற்றிக்கு அடிகோலியதாகும்.
பிரிட்டிஷாரின் அரசியல் சூழ்ச்சிகளானது பல்வேறு விதமான பயத்தையும் அவ நம்பிக்கையையும் முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்து விட்டது. வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டுப் போவதற்குள் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற மோசமான எண்ணத்துக்கு பலர் வந்து விட்டனர். இந்த பிரிவினையானது தங்களின் பயத்தையும், தங்கள் மத்தையும், பொருளாதாரத்தையும் காத்து விடும் என்று நம்புகின்றனர். இது தேவையற்ற பயம் என்பதை பின்னர் உணருவார்கள்.
கேள்வி: ஆனால் இந்துக்களும், முஸலிம்களும் வழிபாடு, கலாசாரம், மொழி என்று முற்றிலும் வேறுபட்டிருக்க இந்த இரு குழுக்களும் ஒற்றுமையாக இருந்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: இது முன்பே விவாதித்த ஒரு கேள்வி. இது சம்பந்தமாக அல்லாமா இக்பாலும், மவுலானா ஹுசைன் அகமது மதனியும் ஏற்கெனவே நிறைய பேசியிருக்கிறார்கள். குர்ஆனில் 'கௌம்' என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை முஸ்லிம்களை மாத்திரம் குறிப்பதாகாது. உலக மக்கள் அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகத்தான் இறைவன் குர்ஆனில் பயன்படுத்துகிறான். மில்லத்(COMMUNITY), கௌம்(NATION), உம்மத்(GROUP) என்ற குர்ஆன் பயன்படுத்தும் வார்த்தைகளை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குள் உள்ள பல வேறுபாடுகளை களைய முடியும்.
இந்தியா பல மதங்களை தன்னகத்தே கொண்ட சிறந்த வீடாக உள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பாரஸிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் என்று அனைத்து மதத்தவரும் இம்மண்ணை நேசிக்கின்றனர். இந்து மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதை நான் மறுக்கவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது இயலாத காரியம் ஒன்றும் அல்ல. இந்த வேற்றுமையானது நமது நாட்டை பிளந்து விடாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். சுதந்திர தேசம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. அந்த அருமையான சுதந்திரத்தை மதத்தின் பெயரால் பிளவு படுத்திவிட வேண்டாம் என்பதே எனது வாதம்.
முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்த உலகுக்கு மிகச் சிறந்த செய்தியை கொண்டு செல்லும் மகத்தான பணியை இறைவன் தந்திருக்கிறான். குறுகிய மனப்பான்மையில் தங்களுக்குள் இந்த அரிய பொக்கிஷத்தை வைத்துக் கொள்ள அவர்கள் அனுப்பப்படவில்லை. மேலும் இந்திய முஸ்லிம்கள் பல பிரிவுகளாக மொழியாலும், பொருளாதாரத்தாலும், பார்க்கும் வேலைகளாலும் பலவாறாக பிரிந்து கிடக்கின்றார்கள். இவர்களை ஒற்றுமைப் படுத்த இந்துக்களைக் காட்டி பயமுறுத்தல் தற்போது நடத்தப்படுகிறது. இது நிரந்த தீர்வைத் தராது. ஒற்றுமை என்பது குர்ஆனைக் கொண்டு முன் எடுக்கப்பட வேண்டும். அதுதான் முஸ்லிம்களை நிரந்தர ஒற்றுமைக்கு கொண்டு செல்லும்.
வஹ்ஹாபி, சுன்னி, ஷியா, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று பலவாறாக முஸ்லிம்கள் சிதறுண்டுக் கிடக்கின்றனர். இங்கு சாதாரண செயல்கள் கூட பெரிதுபடுத்தப்படுகின்றது. தொழுகையில் கைகளை உயர்த்துவது, ஆமீன் சப்தமிட்டு சொல்வதில் கூட ஒரு முடிவுக்கு நம்மால் இன்றும் வர முடியவில்லை. சில உலமாக்கள் தங்களின் சொந்த கருத்துக்களை இஸ்லாமாக்கப் பார்க்கிறார்கள். சில இடங்களில் முஸ்லிம்களை காஃபிர்கள் என்று கூறும் போக்கும் நடந்து வருகிறது. இவை எல்லாம் உண்மையான இஸ்லாத்தை விளங்காததினால் வந்த கேடுகள் ஆகும்.
தற்போது நிலைமை முன்பை விட மோசமாக உள்ளது. இஸ்லாமிய மதத்தையும், இந்திய அரசியலையும் ஒன்றாக்கி பல குழப்பங்களை விதைக்கின்றனர். வரலாற்றை நோக்கும் போது உண்மையான இஸ்லாத்தை பின்பற்றியவர்களை மற்றவர்கள் கேலி செய்தே வந்துள்ளனர். தன்னலமற்ற சேவை செய்து இந்த இஸ்லாத்தை தழைத்தோங்கச் செய்த பல மகான்களின் வரலாறு இன்றும் நம் முன் உள்ளது. பல இறைத் தூதர்களாலேயே அவர்களின் மக்களை முழுவதும் நேர்வழியின்பால் கொண்டு வர முடியாத போது நம்மை போன்ற சாமான்யர்களால் முழுவதுமான மக்களையும் சீர் திருத்தம் செய்து விட முடியுமா? நாம் நமது சீர்திருத்தங்களை மக்கள் முன் வைத்துக் கொண்டிருப்போம். மாற்றம் கொண்டு வர வேண்டியது இறைவன் புறத்திலிருந்து என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் மனத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.
கேள்வி: 'அல் ஹிலால்' என்ற உங்களின் பத்திரிக்கையை நிறுத்தி நீண்ட காலமாகிறதே? என்ன காரணம்? இஸ்லாமியர்களின் மீது நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா? அல்லது பலனலிக்காத ஒரு பாலைவனத்தில் அழைப்பு பணி செய்வது வீண் என்று முடிவு கட்டி விட்டீர்களா?
பதில்: உண்மையைச் சொல்வதில் தோற்று விட்டதால் நான் அந்த பத்திரிக்கையை நிறுத்தவில்லை. இந்த பத்திரிக்கையானது துடிப்புள்ள பல ஆர்வமுடைய நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பலர் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டனர். எனது சொந்த வாழ்வில் இந்த ஈடுபாடானது பல மாற்றங்களை என்னுள் தந்தது. இறைத் தூதர் வழிகாட்டுதலின்படி எமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த துறை மிகவும் உறுதுணையாக இருந்தது.
என் சொந்த விருப்பங்கள் என் மனத்துள் எழும் போதெல்லாம் போனிக்ஸ் பறவையைப் போல அந்த எண்ணங்களை எரித்து விடுவேன். அல் ஹிலால் பத்திரிக்கையானது அத்தகைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. இஸ்லாத்தின் அடிப்படையைக் கொண்டும், எனது தேசத்தின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டதாலேயே இது சாத்தியமானது. என் மனம் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களின் விடுதலைக்காக ஏங்கியது. இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்றும் விரும்பியது.
முதல் உலகப் போருக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் என்றுதான் நினைத்தேன். அதை தடுத்து விடும் சக்தி எந்த நாட்டுக்கும் இல்லை என்றே நம்பியிருந்தேன். அதே நேரம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திர இந்தியாவில் ஒற்றுமையாக கைகோர்த்து நடந்து செல்வார்கள் என்றே எண்ணியிருந்தேன். இந்திய சுதந்திரத்திற்காக அந்த நாட்டு மக்களே ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தினர் என்ற அவப்பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அத்தகைய சூழல் வராதிருப்பதற்காக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டேன்.
-முற்றும்.
Monday, November 05, 2012
துருக்கியின் அராரத் மலைக்கு சென்று வருவோமா?
துருக்கியின் அராரத் மலைக்கு சென்று வருவோமா?
"அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.
'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்." என்றனர்.
23 : 24, 25 - குர்ஆன்
என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.
7 : 61
'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'
7 : 62
'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.
7 : 63
மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.
'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.
'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்
11 : 32,33 - குர்ஆன்.
அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.
'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.
11 : 38 - குர்ஆன்
'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.
11 : 39 - குர்ஆன்.
இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது.
"மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்
'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.
11 : 43 - குர்ஆன்
ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.
” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’ என்று இறைவனால் கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ‘அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமாயினர்’ எனவும் கூறப்பட்டது “.
திருக்குர்ஆன் 11:44.
” இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை “.
திருக்குர்ஆன் 26:121.
” அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம் “.
திருக்குர்ஆன் 29:15.
” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய கப்பல் ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது தன் சமுதாயத்தால் மறுக்கப் பட்டவருக்கு நூஹுக்கு உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.
திருக்குர்ஆன் 54:13-15.
இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.
1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் தேதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது. இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.
http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture
http://www.youtube.com/watch?v=X3t8UncLxsA&feature=related
http://www.foxnews.com/scitech/2010/04/27/noahs-ark-found-turkey-ararat/
http://www.noahsarksearch.com/The_Explorers_Of_Ararat_1973-2006_Bob_Stuplich.pdf
http://www.noahsarksearch.com/book/
--------------------------------------------------------
//இஸ்லாமிய புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.// -சார்வாகன்
இப்படி ஒரு விலங்கை முகமது நபி காட்டவில்லை. சிலர் கற்பனையாக வரைந்து கொண்ட உருவமே புறாக் என்ற மனித தலையுடைய இந்த வாகனம்.
-------------------------------------------------------
//குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!
ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!// -சார்வாகன்
நோவா வெள்ளப்பிரளயம் ஏற்பட்டது எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார். ஜூதி மலை என்ற ஒரு க்ளூ போதுமே. நோவா வாழ்ந்த இடம் அராரத் மலை எல்லாம் ஒத்து வருவதால் அந்த இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வுகளின் முடிவில் ஆச்சரியமாக அவர்களுக்கு பெரும் கப்பலின் மரத்துண்டுகள் கிடைத்துள்ளன. அதை ஆய்வு செய்ததில் நோவாவின் காலத்திய பண்டைய மரப் படிமங்கள் என்று அறிவியல் அறிஞர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இதற்கான காணொளிகளே நாம் மேலே பார்ப்பது. இதில் என்ன மோசடி இருக்கிறது? பில்ட் டவுன் மோசடியைப் போல யாராவது எடுத்து ஒட்ட வைத்து கொண்டால் இவர் சொல்வதில் நியாயம் உள்ளது. இதை நிரூபித்தவர்கள் அமெரிக்க ஆய்வாளர்கள் அல்லவா?
நாம் அறிவியல் ரீதியாக ஆய்வுகளின் அடிப்படையில் பரிணாமவியலின் மேல் கேள்விகளை வைக்கிறோம். அதற்கு நேரிடையாக பதில் சொல்வதை விட்டு விட்டு தற்போது நோவா கப்பலை கொண்டு வருகிறார்.அதற்கும் ஆதாரங்களை சமர்ப்பித்தாகி விட்டது. குர்ஆன் குறிப்பிட்டு இந்த இடம் என்று சொல்லா விட்டாலும் படிம சோதனைகள் மூலம் இதனை கண்டு பிடித்தது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
"அவரது சமுதாயத்தில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் 'இவர் உங்களைப் போன்றஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப் பட்டதுமில்லை.' என்றனர்.
'இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம் கொடுங்கள்." என்றனர்.
23 : 24, 25 - குர்ஆன்
என் சமுதாயமே! என்னிடம் எந்த வழி கேடும் இல்லை. மாறாக நான் அகிலத்தின் இறைவனுடைய தூதன்' என்று அவர் கூறினார்.
7 : 61
'என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உங்களுக்கு நலம் நாடுகிறேன். நீங்கள் அறியாதவற்றை இறைவனிடமிருந்து அறிகிறேன்.'
7 : 62
'நீங்கள் இறைவனை அஞ்சவும் உங்களுக்கு அருள் செய்யப் படவும் உங்களை எச்சரிப்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வருவதில் ஆச்சரியம் அடைகிறீர்களா?' என்றும் கூறினார்.
7 : 63
மேற் கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் அந்த மக்கள் நோவாவை நிராகரித்தது நமக்கு விளங்குகிறது.
'நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர். அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர். உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்' என்று அவர்கள் கூறினர்.
'அல்லாஹ் நாடினால் அவன்தான் அதை உங்களிடம் கொண்டு வருவான். நீங்கள் அவனை வெல்ல முடியாது.' என்று அவர் கூறினார்
11 : 32,33 - குர்ஆன்.
அந்த மக்களே வரம்பு மீறி நோவாவிடம் 'இறைவனின் தண்டனையைக் கொண்டு வாரும்' என்றனர். எனவே 'இனி இந்த மக்கள் திருந்த மாட்டார்கள். இவர்கள்அழியும் நேரம் வந்து விட்டது என்று நோவாவிடம் கூறிய இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு கப்பலை தயார்படுத்த சொன்னான்.
'அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கேலி செய்தனர். 'நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்.' என்று அவர் கூறினார்.
11 : 38 - குர்ஆன்
'இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்.' என்றும் கூறினார்.
11 : 39 - குர்ஆன்.
இறைவனின் வேதனை அந்த மக்களை சூழும் நேரமும் வந்தது.
"மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள். ஏக இறைவனை மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார்.
11 : 42 - குர்ஆன்
'ஒரு மலையின் மீது ஏறிக் கொள்வேன். அது என்னை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'இறைவன் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை.' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப் பட்டோரில் ஆகி விட்டான்.
11 : 43 - குர்ஆன்
ஒரு தூதரின் மகனாக இருந்தும் தன் தந்தையை இறைத் தூதர என விசுவாசம் கொள்ளாததால் நஷ்டமடைந்தோரில் ஒருவனாக ஆகி விட்டான். குடும்ப பாரம்பரியத்தால் நான் சிறந்தவன் என்று சொல்லித் திரிபவர்களுக்கு பாடமாக மேற்கண்ட இறை வசனம் அமைந்துள்ளது.
” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!’ என்று இறைவனால் கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. ‘அநீதி இழைத்த கூட்டத்தினர் இறையருளை விட்டும் தூரமாயினர்’ எனவும் கூறப்பட்டது “.
திருக்குர்ஆன் 11:44.
” இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை “.
திருக்குர்ஆன் 26:121.
” அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம் “.
திருக்குர்ஆன் 29:15.
” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய கப்பல் ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது தன் சமுதாயத்தால் மறுக்கப் பட்டவருக்கு நூஹுக்கு உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.
திருக்குர்ஆன் 54:13-15.
இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம்
வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலை தான் ஜூதி மலை என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.
1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் தேதியன்று கிழக்குத்துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது. இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன் 1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.
மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது.
http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture
http://www.youtube.com/watch?v=X3t8UncLxsA&feature=related
http://www.foxnews.com/scitech/2010/04/27/noahs-ark-found-turkey-ararat/
http://www.noahsarksearch.com/The_Explorers_Of_Ararat_1973-2006_Bob_Stuplich.pdf
http://www.noahsarksearch.com/book/
--------------------------------------------------------
//இஸ்லாமிய புராண புர்ராக் (முகமது(சல்) அவர்களை சுவனம் அழைத்து சென்ற விலங்கு.// -சார்வாகன்
இப்படி ஒரு விலங்கை முகமது நபி காட்டவில்லை. சிலர் கற்பனையாக வரைந்து கொண்ட உருவமே புறாக் என்ற மனித தலையுடைய இந்த வாகனம்.
-------------------------------------------------------
//குரான் [வழக்கம் போல்] இந்த விடயத்தையும் தெளிவாக சொல்லவில்லை ஆகவே அந்த இடத்தில் மட்டும் வெள்ளப் பெருக்கு வந்தது எனப் பொருள் கொள்வேன் என்கிறார்.அந்த இடம் என்றால் எங்கே என்று கேட்க கூடாது!!!!!!!!!!
ஆகவே இது மோசடியா இல்லையா என்பதை உங்கள் கவனத்திற்கு விடுகிறேன்!!// -சார்வாகன்
நோவா வெள்ளப்பிரளயம் ஏற்பட்டது எந்த இடம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார். ஜூதி மலை என்ற ஒரு க்ளூ போதுமே. நோவா வாழ்ந்த இடம் அராரத் மலை எல்லாம் ஒத்து வருவதால் அந்த இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வுகளின் முடிவில் ஆச்சரியமாக அவர்களுக்கு பெரும் கப்பலின் மரத்துண்டுகள் கிடைத்துள்ளன. அதை ஆய்வு செய்ததில் நோவாவின் காலத்திய பண்டைய மரப் படிமங்கள் என்று அறிவியல் அறிஞர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர். இதற்கான காணொளிகளே நாம் மேலே பார்ப்பது. இதில் என்ன மோசடி இருக்கிறது? பில்ட் டவுன் மோசடியைப் போல யாராவது எடுத்து ஒட்ட வைத்து கொண்டால் இவர் சொல்வதில் நியாயம் உள்ளது. இதை நிரூபித்தவர்கள் அமெரிக்க ஆய்வாளர்கள் அல்லவா?
நாம் அறிவியல் ரீதியாக ஆய்வுகளின் அடிப்படையில் பரிணாமவியலின் மேல் கேள்விகளை வைக்கிறோம். அதற்கு நேரிடையாக பதில் சொல்வதை விட்டு விட்டு தற்போது நோவா கப்பலை கொண்டு வருகிறார்.அதற்கும் ஆதாரங்களை சமர்ப்பித்தாகி விட்டது. குர்ஆன் குறிப்பிட்டு இந்த இடம் என்று சொல்லா விட்டாலும் படிம சோதனைகள் மூலம் இதனை கண்டு பிடித்தது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Saturday, September 29, 2012
அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!
அஹ்மத் நஜாத் - ஒரு சிறந்த தலைவருக்குரிய இலக்கணம்!
ஐநாவில் அஹ்மத் நஜாதின் அழகிய உரை:
தனது நாட்டை மட்டும் நினைக்காமல் உலக மக்களின் பொருளாதாரத்தையும் அவ்வப்போது தனது பேச்சினுடையே சொல்லி வரும் இந்த தலைவரைப் பற்றியும் இவரது எளிமையைப் பற்றியும் சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவரிடம் உள்ள ஒரே குறை இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். அந்த காலத்தில் தகவல் வசதியற்ற காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷியா, சன்னி என்று இரு பிரிவாக பிரிந்து விட்டார்கள். தற்போது இணைய வசதியினால் யார் தவறு செய்தது? எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது? என்ற உண்மை பலருக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இவர் முயற்சி செய்தால் இவரது காலத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாகி முகமது நபி காலத்தில் எவ்வாறு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தோமோ அது போன்ற நிலையை அடையலாம். அதற்கான முயற்சியை இந்த தலைவர் எடுப்பார் என்று நம்புவோம். இனி அவரது எளிய வாழ்வை சற்று பார்ப்போம்.
அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது
• •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
• •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
• •படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog)
• • இவரது வங்கி நிலுவை 0
• •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்
• • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
• • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.
• •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்
இந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே!
'உன்னை விட மாட்டேன்'
அஹமத் நஜாத் ஹீரோவாக நடிக்க ஒரு படம் எடுக்கலாம் என்ற ஐடியா! படத்தின் பெயர் 'உன்னை விட மாட்டேன்'.
அமெரிக்காவைப் பார்த்து சொல்றது மாதிரி இருக்குல்ல.....:-)
------------------------------------------------
ஐநாவில் அஹ்மத் நஜாதின் அழகிய உரை:
தனது நாட்டை மட்டும் நினைக்காமல் உலக மக்களின் பொருளாதாரத்தையும் அவ்வப்போது தனது பேச்சினுடையே சொல்லி வரும் இந்த தலைவரைப் பற்றியும் இவரது எளிமையைப் பற்றியும் சமீபத்தில் இணையத்தில் படித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். இவரிடம் உள்ள ஒரே குறை இவர் ஷியா பிரிவை சேர்ந்தவர். அந்த காலத்தில் தகவல் வசதியற்ற காலத்தில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஷியா, சன்னி என்று இரு பிரிவாக பிரிந்து விட்டார்கள். தற்போது இணைய வசதியினால் யார் தவறு செய்தது? எங்கு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது? என்ற உண்மை பலருக்கும் தெரிய வருகிறது. இதன் மூலம் கசப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது. இவர் முயற்சி செய்தால் இவரது காலத்தில் இரண்டு பிரிவுகளும் ஒன்றாகி முகமது நபி காலத்தில் எவ்வாறு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தோமோ அது போன்ற நிலையை அடையலாம். அதற்கான முயற்சியை இந்த தலைவர் எடுப்பார் என்று நம்புவோம். இனி அவரது எளிய வாழ்வை சற்று பார்ப்போம்.
அவருடைய மாத வருமானம் 1200 டாலர் இது ஒரு வளர்ச்சியடைந்த நாட்டு தனிநபருடைய வருமானத்தை காட்டிலும் குறைவானது
• •அவர் இன்னமும் வாழ்வது அவரது அப்பா கட்டிய 40 வருடம் பழமையான வீட்டில் தான்
• •இவரது விருப்ப உணவு தன் மனைவியின் கையால் சமைத்தவை மட்டுமே..
• •படிப்பு : அறிவியல் , தொழில்நுட்ப போக்குவரத்து பொறியியல் மற்றும் திட்டமிடல் (Phட in Transportation Engineering and Planning from Iran University of Science and Technolog)
• • இவரது வங்கி நிலுவை 0
• •இவரிடம் இருந்த ஒரே ஒரு வண்டி. தற்போது அதையும் விற்று தன் நாட்டு மக்களுக்கு பங்கிட்டுள்ளார்
• • அவர் ஜனாதிபதி ஆகிய பின் தன் சொந்த ஜெட் விமானத்தையும் தன் நாட்டு விமானப்படைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
• • பெட்ரோலை சேமிக்க வேண்டி எந்தவொரு படைபட்டாளம் இன்றியே தனியொரு வாகனத்தில் பயணம் செய்வார்.
• •நிலத்தில் உறங்க நாட்டமுள்ள இவர் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கினாலும் நிலத்திலேயே உறங்குவாராம்
இந்த எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. உலக தலைவர்கள் இவரைப் போன்று அனைத்து மக்களையும் நேசிக்க ஆரம்பித்தால் உலகம் அமைதியுறும். இன்று உலகுக்கு தேவை அமைதி. அதனை கொண்டு வர இவர் ஒரு தூண்டுகோலாக இருந்தால் நல்லதே!
'உன்னை விட மாட்டேன்'
அஹமத் நஜாத் ஹீரோவாக நடிக்க ஒரு படம் எடுக்கலாம் என்ற ஐடியா! படத்தின் பெயர் 'உன்னை விட மாட்டேன்'.
அமெரிக்காவைப் பார்த்து சொல்றது மாதிரி இருக்குல்ல.....:-)
------------------------------------------------
Thursday, September 20, 2012
அலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு!
//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கும் வழியை கையாண்டீர்கள்.//- வவ்வால்
அலாவுதீன் கில்ஜியைப் பற்றி வவ்வால் சொன்னது இது. என்ன செய்வது? அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு அவ்வளவுதான். மாலிக்காபூர் படையெடுத்து பல கோவில்களை கொள்ளையடித்ததையும் படித்திருப்போம். இந்த மாலிக்காபூர் பிறப்பால் ஒரு இந்து. சில காலத்திற்கு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார் என்ற செய்தியை அழகாக மறைத்து விடுவர். அலாவுதீன் கில்ஜியின் உண்மையான வரலாறு என்ன சொல்கிறது என்பதை இனி பார்ப்போம்.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.
- பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர்,
அரசு கல்லூரி)
"உயர்ந்தவன் யார்?
கிராமவாசி? நகரவாசி?
இல்லை, விலைவாசி!"
-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.
ஜியாவுதீன் பரணி என்பார் முகமது பின் துக்ளக் அரசவையில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மட்டுமல்ல, இவரது முன்னோர்களும் டில்லி சுல்தான்கள் ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டும், தனது நேரடி அனுபவத்திலிருந்தும் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி". அந்தப்பெருநூல் பற்றி எழுதுவது என்றால் பக்கங்கள் போதாது. அலாவுதீன் கில்ஜி காலத்திலும், நூலின் பெயரைத் தாங்கிய ஃபிரோஸ்ஷா துக்ளக் காலத்திலும் எடுக்கப்பட்ட சில பொருளாதார நடவடிக்கைகளை இங்குக் குறிப்பிடுவதே எனது நோக்கம். இது சந்தைப் பொருளாதாரத்தை அதன் போக்கில் விட்டுவிடுவது என்கிற அராஜகச் சிந்தனையை இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரியவைக்கும். பொருளியல் துறையில் அரசின் தலையீடு அவசியம் என்பதை 700 ஆண்டுகளுக்கு முந்தைய டில்லி ராஜாக்களே உணர்ந்திருந்தார்கள் என்பதை உணர வைக்கும். இன்றைய டில்லி ராஜாக்களுக்கு இதிலொரு படிப்பினை இருக்கிறது.
அலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் டில்லி வரை படையெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களை இவன் விரட்டியடித்துவிட்டாலும் அந்த அபாயம் இருந்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர்கள் வந்தால் விரட்டியடிக்க பெரும் படை தேவை என்பதை உணர்ந்திருந்தான். அதை எப்படி உருவாக்குவது என்று யோசனையில் ஆழ்ந்தான். கஜானாவில் பணம் குறைவாகவே இருந்தது. குறைந்த ஊதியத்தில் நிறைய படைவீரர்களைத் திரட்ட முடியுமா? இதற்காகத் தனது ஆலோசகர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டான். அவர்களும் உள்ள நிலைமையைப் பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள்.
"குறைந்த ஊதியத்தில் ஒரு பெரிய நிரந்தரப் படையைப் பராமரிப்பது என்று மேன்மை தாங்கியவரின் மனதில் ஓடும் எண்ணங்கள் சிறிதும் சாத்தியமானவை அல்ல. குதிரைகள், படைக்கலன்களை வாங்கவும், தனது மனைவி குடும்பத்தைப் பராமரிக்கவும் படைவீரனுக்கு இந்தக் குறைந்த ஊதியத்தால் முடியாது. மாறாக அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு கொண்டுவந்து விட்டால் மேன்மைதாங்கியவரின் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியும். மங்கோலியர்களின் பெரும் படை எனும் பயத்தைப்போக்க முடியும்" இப்படி அவர்கள் கூறியதும் தனது அனுபவமிக்க மந்திரிமார்களைக் கலந்தாலோசித்தான் அலாவுதீன்.
அவர்களும் இதை ஏற்றுக்கொண்டதோடு மற்றொரு முக்கிய ஆலோச னையைத் தந்தார்கள். பரணி கூறுகிறார்-"தானியங்களின் விலையை அரசு விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தாத வரை இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாது என்றார்கள் அவர்கள். தானியவிலைக் குறைவு என்பது சகலருக்கும் நன்மை தருவது. எனவே சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை சில ஆண்டுகளுக்கு விலையைக் குறைவாக வைத்திருந்தன"
பொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை அதில் தேர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்பது, அதைத் தனது மந்திரிமார்களிடம் கூறி அவர்களது கருத்தைக் கேட்பது என்கிற ஒரு விரிந்த நடைமுறையை சுல்தான் அலாவுதீன் கொண்டிருந்தது குறிக்கத்தக்கது. படைப்பெருக்கம் என்கிற ராணுவரீதியான நோக்கத்திலிருந்தே இந்தப் பிரச்சனை அலசப்பட்டது என்றாலும், அது முடிவில் உணவு தானிய விலைக் கட்டுப்பாட்டிற்கு இட்டுச்சென்றதை போக்க வேண்டும்.
முடிவில் இதற்காக ஏழு உத்தரவுகளைப் போட்டான் அலாவுதீன். முதல் உத்தரவானது கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான விலைகளைத் தீர்மானித்தது. அந்த விலைப்பட்டியலைத் தந்துவிட்டு பரணி எழுதுகிறார் - "இந்த விலை அளவுகள் அலாவுதீன் உயிரோடு இருந்தவரை அப்படியே இருந்தன. நல்ல மழை பெய்தாலும் சரி, நன்றாகப் பெய்யாவிட்டாலும் சரி தானியவிலை ஒரு டாங்குகூட உயரவில்லை. சந்தைகளில் நிலைத்த தானியவிலை என்பது அந்நாளில் ஓர் அதிசயமாகப் பார்க்கப்பட்டது"
இந்த அதிசயம் எப்படிச் சாதிக்கப்பட்டது என்றால் அடுத்துப்போடப்பட்ட ஆறு உத்தரவுகளாலும், இவை அனைத்தும் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், இரண்டாவது உத்தரவின்படி "சந்தைகளின் கட்டுப்பாட்டாளர்" எனும் ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நிறைய ஆட்கள் தரப்பட்டார்கள், உரிய வசதிகள் தரப்பட்டன. புத்திசாலித்தனமான உளவாளிகளும் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மூன்றாவது உத்தரவின்படி அரசனின் களஞ்சியங்களில் தானியங்கள் சேமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி கூறப்பட்டார்கள். "சரியாக மழை பெய்யாவிட்டாலோ அல்லது தானிய வண்டிகள் வந்து சேராவிட்டாலோ, இவற்றின் காரணமாகச் சந்தைகளில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அரசாங்கக் களஞ்சியங்கள் திறக்கப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப தானியங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டன" என்கிறார் பரணி.
இந்தக் காலத்தில் லாரிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போல அந்தக்காலத்தில் வண்டிகளை எல்லாம் சந்தைக் கட்டுப்பாட்டாளர் வசம் கொண்டு வந்தான் அலாவுதீன். இது நான்காவது உத்தரவு. பதுக்கலைத் தடுக்கப்போடப்பட்ட உத்தரவு ஐந்தாவது. பதுக்கியவருக்கு மட்டுமல்ல, அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் தண்டனை காத்திருந்தது.
விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தானியங்களை வியாபாரிகளுக்கு விற்றாக வேண்டும் என்றது ஆறாவது உத்தரவு. இதிலே சுவையான விஷயம் அடுத்து வருவது- "லாபத்தை ஈட்ட கிராமத்தாருக்கு ஒரு வாய்ப்புத் தரும் வகையில் தங்களது விளைச்சலைத் தாங்களே சந்தைக்குக் கொண்டு சென்று, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது "உழவர் சந்தை" எனும் கருத்தோட்டம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது.
ஏழாவது உத்தரவும் முக்கியமானதே. "சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை நடவடிக்கைகள் பற்றியும் மூன்று இலாக்காக்களிலிருந்து தினசரி சுல்தானுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன" என்கிறார் பரணி. அரசாணை போட்டுவிட்டு பிறகு அதுபற்றி என்ன, ஏது என்றுகேட்காத ஆட்சியாளனாக அலாவுதீன் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமே.
இவை எல்லாம் சேர்ந்துதான் தானிய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பரணிக்கு புளகாங்கிதத்தைத் தடுக்க முடியவில்லை. "இது உண்மையில் இந்தக் காலத்தின் அதிசயமே; எந்தவொரு அரசனும் இதைச் சாதித்ததில்லை" என்று மீண்டும் கூறுகிறார்.
தானிய விலைகளை மட்டுமல்ல வேறு சிலவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைக்க உத்தரவுகள் போட்டான் அலாவுதீன். அது அந்தக் காலத்திய வாழ்வியலையும் அடையாளம் காட்டுகிறது. குதிரைகள், அடிமைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு சகாய விலையைக் கொண்டுவர நான்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் நான்காவது உத்தரவு கூறியது - 'ஒரு பணிப்பெண்ணின் விலை 5 முதல் 12 டங்காக்கள், ஒரு வைப்பாட்டியின் விலை 20, 30 அல்லது 40 டங்காக்கள் என்று நிச்சயிக்கப்பட்டன. ஓர் ஆண் அடிமையின் விலை 100 அல்லது 200 டங்காக்கள் அல்லது அதற்கும் குறைவு." சுல்தான்கள் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வந்துவிட்டது என்றாலும், அடிமைச் சமுதாயத்தின் கூறுகளும் தொடரவே செய்தன.
"சந்தைகளின் கடைகளில் விற்கப்படும தொப்பி முதல் செருப்பு வரையிலான, சீப்பு முதல் ஊசி வரையிலான பொருட்களுக்கும் குறைந்த விலைகளைத் தீர்மானிக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை மிகவும் சாதாரணப் பொருட்கள் என்றாலும் அவற்றுக்கும் விலைகளை நிர்ணயிக்கவும், விற்பனையாளர்களுக்கான லாபத்தை முடிவு செய்யவும் சுல்தான் பெரும் கவனம் செலுத்தினார்" என்கிறார் பரணி.
டில்லி சுல்தான்கள் என்றால் ஏதோ படை நடத்துவதிலும், இந்து ராஜாக்களை வீழ்த்துவதிலும், கோவில்களை இடிப்பதிலும், மசூதிகளைக் கட்டுவதிலும் காலத்தைப் போக்கியவர்கள் என்கிற சித்திரமே நாமக்கெல்லாம் தரப்பட்டு, இப்போதும் அதுவே மனசில் தங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேறொரு முகமும் உண்டு என்பது பரணி போன்ற அந்தக் காலத்திய வரலாற்றாளர்களின் மூல நூல்களைப் படிக்கும் போதுதான் புரிபடுகிறது.
இதன்பொருள் சுல்தான்களின் முரட்டுத் தனத்தையோ, கொடூரத் தண்டனை முறையையோ மூடி மறைப்பதல்ல. இந்த விலைக் கட்டுப்பாட்டைச் சாதிக்கக்கூட அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது உண்மையே. "குறைந்த எடைபோட்டு பொருளை விற்றால் விற்றவருக்கு கசையடி கொடுக்கப்படும் அல்லது தொடையிலிருந்து சதை வெட்டப்படும்" என்கிறார் பரணி. இதுவெல்லாம் நடந்தது. ஆனால் வெகுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டும் என்பதில் அந்த சுல்தான் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டான் என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் வரலாற்றக்கு நியாயம் செய்வதாகும்.
அலாவுதீன் காலத்தில், 'சந்தைக்காரர்கள் நாணயமாக நடந்து கொண்டார்கள்' என்றும், 'அலாவுதீன் மரணமடைந்ததும் சந்தைக்காரர்கள் குதூகலமடைந்து மேளங்கள் முழங்கினார்கள்' என்றும் இரு காட்சிகளையும் சொல்லியிருக்கிறார் பரணி. இதிலிருந்தே விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் அலாவுதீன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி வந்தது. அந்த வம்சத்தைச் சார்ந்தவன் ஃபிரோஸ் ஷா துக்ளக். தனது ஆட்சி பற்றி இவனே தன்வரலாறு எழுதியிருக்கிறான். நூலின் பெயர் "ஃபுது ஹாதி ஃபிரோஷ் ஷாகி" இதிலே தனக்கு முந்திய ஆட்சிகளில் முஸ்லிம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக விதவிதமான வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும், தான்அவற்றை எல்லாம் ரத்து செய்ததாகவும் கூறியுள்ளான். நீக்கப்பட்ட வரிகளை வசூலிக்கிற அதிகாரிகளுக்குத் தண்டனை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.
"கஜானா வற்றினாலும் பரவாயில்லை
மக்களின் வயிறு நிரம்ப வேண்டும்
மார்பு பொறுமையாக இருந்தாலும் பரவாயில்லை
இதயம் பொங்கி வழிய வேண்டும்"
- என்கிற கவிதையை அவன் மேற்கோள் காட்டியிருக்கிறான். பொருளாதார விஷயங்களிலும் கவிதையைக் கையாளும் திறம்படைத்த ஒரு சுல்தான் இருந்தான்.
இவனது ஆட்சி பற்றி வரலாற்று நூல் எழுதிய இன்னொருவர் ஷம்ச சிராஜ் அபிஃப். இவர் எழுதிய நூலின் பெயரும் பரணியுடையது போல "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி." ஆனால் பரணியின் நூலைக்காட்டிலும் இதில்தான் இந்த சுல்தானின் ஆட்சிபற்றி நிறைய விபரங்கள் உள்ளன. பரணியின் நூலில் முகமது பின் துக்ளக் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது.
விலைவாசி நிலைபற்றி அபிஃப்பும் தகவல் தருகிறார். "அலாவுதீனின் காலத்தில் திறமையான நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஆனால் ஃபிரோஸ் ஷாவின் காலத்தில் அவரது முயற்சி ஏதுமில்லாமலேயே கடவுளின் கருணையால் அவை குறைந்த விலையில் கிடைத்தன" என்று சிறிதும் தயக்கமின்றி எழுதி வைத்துள்ளார். இதிலிருந்தும் அலாவுதீன் கில்ஜியின் பெருமை பிடிபடுகிறது.
எனினும், ஃபிரோஸ் ஷா எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அபிஃப் கூறத்தான் செய்துள்ளார். அவை மிக நவீனமானவை. நமது தலைமுறைக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. "நகரத்தில் யாரேனும் வேலையில்லாமலிருந்தால் அவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு சுல்தான் உத்தரவிட்டிருந்தான். கொத்தவால் தனது மாவட்ட அதிகாரிகளை அழைத்து இவர்கள் பற்றி விசாரிப்பான். அத்தகையவர்கள் சுல்தான் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அபிஃப். சுல்தான் வேலைவாய்ப்பு நிலையம் நடத்தியது போலத்தெரிகிறது! இப்படிப்பட்ட சுல்தான்களும் இருந்திருக்கிறார்கள்.
எத்தகைய வேலைகளில் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள்? அபிஃப் தொடர்கிறார்-" எழுதத் தெரிந்தவர்களுக்கு அரசாங்க அமைப்புகளிலும் தொழில் தெரிந்தவர்களுக்கு கானி ஜஹானின் கீழும் வேலைதரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரபுவிடம் அடிமையாக வேலை பார்க்க எவரேனும் விரும்பினால் அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சுல்தானே எழுதி அனுப்பினான். நிலமான்யம் பெற்றுள்ள ஓர் அமீரிடம் ஒருவர் அடிமையாகப் போக விரும்பினால் அது பற்றிய உத்தரவு அந்த அமீருக்கு அனுப்பப்பட்டது. ஆக, ஒரு சிலர்தான் வேலையில்லாமல் இருந்தார்கள்"
சுல்தான்கள் காலத்தில் அடிமை முறையானது பெரிதும் நெகிழ்ச்சி உடையதாக இருந்ததை நோக்க வேண்டும். மனுசாஸ்திரம் காட்டிய வருணாசிரமக் கட்டமைப்பில் அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் இருந்தது. இப்போதோ அது தான் விரும்பிய பிரபுவை ஓர் அடிமைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நெகிழ்ச்சி உடையதாக இருந்தது. "பரிந்துரைக் கடிதம்" அனுப்புகிற முறை அப்போதே இருந்தது. பிரபு என்றால் அப்படிக்கடிதம், அமீர் என்றால் உத்தரவு. அவருக்கு நிலமானியத்தை சுல்தான் தந்திருப்பதால் உத்தரவு. அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் என்பதைவிட வறுமையின் காரணமாக நடைமுறையில் இருந்தது இக்காலத்தில்.
இதன் அர்த்தம் அடிமைகள் எல்லாம் நல்ல வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதில்லை அல்லது அடிமைவேலை கிடைத்ததும் வறுமை காணாமல் போனது என்பதுமில்லை. அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த சுல்தான்கள் காலத்தில் வாழ்வு வாய்க்கும் கைக்குமாகவே இருந்தது. யஜமானர்களின் கோபத்தீயில் அடிமைகளும் ஏழைகளும் கருகித் துடிக்கவே செய்கிறார்கள். விஷயம் என்னவென்றால் ஃபிரோஸ் ஷா போன்றவர்களின் சில கருணை நடவடிக்கைகள் இருந்தன என்பது வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுதான்.
வேலையில்லாதாருக்கு வேலை மட்டுமல்ல ஏழைகளுக்காக இலவச மருத்துவமனைகளை உருவாக்கினான் ஃபிரோஸ் ஷா. வரலாற்றாளர் அபிஃப் தரும் அந்தத் தகவல் "பாதிக்கப்பட்ட ஏழைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள், தங்களது நோய்களைச் சொன்னார்கள். மருத்துவர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைத் தந்தார்கள். மருந்து, உணவு மற்றும் பானங்கள் அரசு செலவில் வழங்கப்பட்டன" மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டிய கடமையை இப்போது அரசுகள் கைகழுவி வருகின்றன. அதுவும் தனியார்மயமாகிப்போனது. "ரமணா" படத்தில் வருவதுபோல அங்கே பிணத்திற்கும் வைத்தியம் பார்த்து பில் போடுகிறார்கள். இந்த சுல்தான் காலத்திலோ அரசு செலவில் மருந்தும் உணவும்தரப்பட்டது. சகல ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சரித்திரச் செய்தி சமர்ப்பணம்.
இதனினும் ஆச்சரியமான செய்தி சுல்தான் ஃபிரோஸ் ஷா ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி வழங்கினான் என்பது. நவீன காலத்து நலத்திட்டம் போல உள்ளது. "திருமண வயதுள்ள புதல்வியைக் கொண்டுள்ள எந்த மனிதரும் திவானி கெய்ராத்துக்கு விண்ணப்பம் தரலாம். அந்த நிறுவன அதிகாரிகளிடம் தனது நிலையையும், வறுமையையும் எடுத்துரைக்கலாம். அவர்கள் உரிய விசாரணைக்குப் பிறகு முதல்தர விண்ணப்பதாரருக்கு 50 டங்கா நிதி உதவியும், இரண்டாம் தரத்தவருக்கு 30 டங்காவும், மூன்றாம் தரத்தவருக்கு 25 டங்காவும் தருவார்" என்கிறார் ஆபிஃப், "எந்த மனிதரும்" எனும் சொல்லாட்சி முக்கியமானது. மத வேறுபாடின்றி, மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடின்றி இந்தத் திருமண நிதி உதவி அமலாகியிருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தானம் பெறும் உரிமை பிராமணர்களுக்கே உண்டு, அப்போதுதான் கொடுப்பவருக்கு புண்ணியம் உண்டு என்கிற அந்தக் காலத்தில் தர்மசாஸ்திர விளக்கவுரையாளர்களிடமிருந்து சுல்தான்களின் நடைமுறை பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
புதிய நலத்திட்டங்கள் என்று இந்தக்காலத்து அரசுகள் கூறுகிற சில திட்டங்கள் உண்மையில் மிகப்பழமையானவை என்பதற்கு வரலாற்று ஏடுகளில் ஆதாரம் இருக்கிறது. முஸ்லிம் அரசர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வரலாற்று உணர்வு அதிகம். அதிலும் போற்றத்தக்க விஷயம் பரணி, அபிஃப் போன்ற வரலாற்றாளர்கள் அரசியல் விவகாரங்களோடு இப்படிப் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனமாகப் பதிவு செய்திருப்பது. இத்தகைய சரித்திர உணர்வாளர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவின் பழங்கால வரலாறு போல இடைக்கால வரலாறும் புராணமயமாகிப் போயிருக்கும்.
கடந்த கால வரலாற்றிலிருந்து தற்கால செயல்பாடுகளுக்கு படிப்பனைப் பெறலாம் என்கிற நினைப்பு டில்லி சுல்தான்களுக்கு இருந்தது. இது நடைமுறையில் வெளிப்பட்டது என்பதை பரணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.
முகமது பின் துக்ளக் பற்றி மிக மோசமான கருத்துருவமே நம் மத்தியில் உள்ளது. அவனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதுபற்றி விவரிக்க இங்கே இடம் போதாது. ஒரேயொரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடலாம். அவனது சாம்ராஜியத்தில் அமீர்கள் எனப்பட்ட சிற்றரசர்கள் சிலர் அவ்வப்போது கலகம் செய்து வந்தார்கள். துக்ளக் மிகவும் வெறுத்துப்போனான். வரலாற்றாளர் என்ற முறையில் அதுபற்றி பரணியிடம் கலந்து பேசினான். பரணி எழுதியிருப்பதைப் பாருங்கள்- "கலகக்காரர்களின் வெற்றியும், தியோகிர் கைகழுவிப் போனதும் ராஜாவைப் பெரிதும் பாதித்தது. இப்படி வருந்திய நிலையில் ஒருநாள் இந்த நூலின் ஆசிரியராகிய என்னை கூப்பிட்டுவிட்டான். பிறகு கூறினான்: 'எனது ராஜியத்திற்கு நோய் பீடித்துவிட்டது. எந்த வைத்தியத்தாலோயும் இதைச் சரிசெய்ய முடியவில்லை. தலைவலியைச் சரிசெய்கிறார் வைத்தியர். காய்ச்சல் வந்து விடுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் போது வேறு பிரச்சனை வந்து விடுகிறது. அதுபோல எனது ராஜியத்திலும் ஒழுங்கீனங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. ஓரிடத்தில் ஒடுக்கினால் இன்னொரு இடத்தில் தோன்றுகிறது. ஒரு பகுதியில் சரி செய்தால் இன்னொரு பகுதியில் பிரச்சனை எழுகிறது. இத்தகைய ஒழுங்கீனங்கள் பற்றி முந்தைய ராஜாக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? நான் பதில் சொன்னேன்"
பரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவிட இப்படி கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக் காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள் படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால் தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.
அலாவுதீன் கில்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்த காட்டிய அக்கறையை, ஃபிரோஸ் ஷா துவக்கிய மக்கள் நலத்திட்டங்களை தற்காலத்து ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டால் இத்துறைகளில் அவர்களைக் காட்டிலும் எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற உந்துதல் வரும். அப்படி வந்தால் வரலாற்றாளர்கள் பரணி, அபிஃப் போன்றோரின் நோக்கம் மெய்யாலும் நிறைவேறியதாக அர்த்தம்.
-அருணன்
(செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
இந்திய வரலாற்றில் யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அத்தகைய தகுதி கண்டிப்பாக அலாவுதீன் கில்ஜிக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது. என்ன செய்வது அதிகார வர்க்கத்தில் உள்ளோர் திட்டமிட்ட சதியால் இன்று பொய்யையும் புரட்டையும் வரலாறாக படித்து வருகிறோம். இனி வரும் காலத்திலாவது புதைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வரும் பணியை செய்வதற்கு நல்லோர்கள் முன் வர வேண்டும்.
அலாவுதீன் கில்ஜியைப் பற்றி வவ்வால் சொன்னது இது. என்ன செய்வது? அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு அவ்வளவுதான். மாலிக்காபூர் படையெடுத்து பல கோவில்களை கொள்ளையடித்ததையும் படித்திருப்போம். இந்த மாலிக்காபூர் பிறப்பால் ஒரு இந்து. சில காலத்திற்கு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார் என்ற செய்தியை அழகாக மறைத்து விடுவர். அலாவுதீன் கில்ஜியின் உண்மையான வரலாறு என்ன சொல்கிறது என்பதை இனி பார்ப்போம்.
முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.
ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.
அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.
அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.
- பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர்,
அரசு கல்லூரி)
"உயர்ந்தவன் யார்?
கிராமவாசி? நகரவாசி?
இல்லை, விலைவாசி!"
-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.
ஜியாவுதீன் பரணி என்பார் முகமது பின் துக்ளக் அரசவையில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மட்டுமல்ல, இவரது முன்னோர்களும் டில்லி சுல்தான்கள் ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டும், தனது நேரடி அனுபவத்திலிருந்தும் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி". அந்தப்பெருநூல் பற்றி எழுதுவது என்றால் பக்கங்கள் போதாது. அலாவுதீன் கில்ஜி காலத்திலும், நூலின் பெயரைத் தாங்கிய ஃபிரோஸ்ஷா துக்ளக் காலத்திலும் எடுக்கப்பட்ட சில பொருளாதார நடவடிக்கைகளை இங்குக் குறிப்பிடுவதே எனது நோக்கம். இது சந்தைப் பொருளாதாரத்தை அதன் போக்கில் விட்டுவிடுவது என்கிற அராஜகச் சிந்தனையை இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரியவைக்கும். பொருளியல் துறையில் அரசின் தலையீடு அவசியம் என்பதை 700 ஆண்டுகளுக்கு முந்தைய டில்லி ராஜாக்களே உணர்ந்திருந்தார்கள் என்பதை உணர வைக்கும். இன்றைய டில்லி ராஜாக்களுக்கு இதிலொரு படிப்பினை இருக்கிறது.
அலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் டில்லி வரை படையெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களை இவன் விரட்டியடித்துவிட்டாலும் அந்த அபாயம் இருந்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர்கள் வந்தால் விரட்டியடிக்க பெரும் படை தேவை என்பதை உணர்ந்திருந்தான். அதை எப்படி உருவாக்குவது என்று யோசனையில் ஆழ்ந்தான். கஜானாவில் பணம் குறைவாகவே இருந்தது. குறைந்த ஊதியத்தில் நிறைய படைவீரர்களைத் திரட்ட முடியுமா? இதற்காகத் தனது ஆலோசகர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டான். அவர்களும் உள்ள நிலைமையைப் பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள்.
"குறைந்த ஊதியத்தில் ஒரு பெரிய நிரந்தரப் படையைப் பராமரிப்பது என்று மேன்மை தாங்கியவரின் மனதில் ஓடும் எண்ணங்கள் சிறிதும் சாத்தியமானவை அல்ல. குதிரைகள், படைக்கலன்களை வாங்கவும், தனது மனைவி குடும்பத்தைப் பராமரிக்கவும் படைவீரனுக்கு இந்தக் குறைந்த ஊதியத்தால் முடியாது. மாறாக அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு கொண்டுவந்து விட்டால் மேன்மைதாங்கியவரின் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியும். மங்கோலியர்களின் பெரும் படை எனும் பயத்தைப்போக்க முடியும்" இப்படி அவர்கள் கூறியதும் தனது அனுபவமிக்க மந்திரிமார்களைக் கலந்தாலோசித்தான் அலாவுதீன்.
அவர்களும் இதை ஏற்றுக்கொண்டதோடு மற்றொரு முக்கிய ஆலோச னையைத் தந்தார்கள். பரணி கூறுகிறார்-"தானியங்களின் விலையை அரசு விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தாத வரை இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாது என்றார்கள் அவர்கள். தானியவிலைக் குறைவு என்பது சகலருக்கும் நன்மை தருவது. எனவே சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை சில ஆண்டுகளுக்கு விலையைக் குறைவாக வைத்திருந்தன"
பொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை அதில் தேர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்பது, அதைத் தனது மந்திரிமார்களிடம் கூறி அவர்களது கருத்தைக் கேட்பது என்கிற ஒரு விரிந்த நடைமுறையை சுல்தான் அலாவுதீன் கொண்டிருந்தது குறிக்கத்தக்கது. படைப்பெருக்கம் என்கிற ராணுவரீதியான நோக்கத்திலிருந்தே இந்தப் பிரச்சனை அலசப்பட்டது என்றாலும், அது முடிவில் உணவு தானிய விலைக் கட்டுப்பாட்டிற்கு இட்டுச்சென்றதை போக்க வேண்டும்.
முடிவில் இதற்காக ஏழு உத்தரவுகளைப் போட்டான் அலாவுதீன். முதல் உத்தரவானது கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான விலைகளைத் தீர்மானித்தது. அந்த விலைப்பட்டியலைத் தந்துவிட்டு பரணி எழுதுகிறார் - "இந்த விலை அளவுகள் அலாவுதீன் உயிரோடு இருந்தவரை அப்படியே இருந்தன. நல்ல மழை பெய்தாலும் சரி, நன்றாகப் பெய்யாவிட்டாலும் சரி தானியவிலை ஒரு டாங்குகூட உயரவில்லை. சந்தைகளில் நிலைத்த தானியவிலை என்பது அந்நாளில் ஓர் அதிசயமாகப் பார்க்கப்பட்டது"
இந்த அதிசயம் எப்படிச் சாதிக்கப்பட்டது என்றால் அடுத்துப்போடப்பட்ட ஆறு உத்தரவுகளாலும், இவை அனைத்தும் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், இரண்டாவது உத்தரவின்படி "சந்தைகளின் கட்டுப்பாட்டாளர்" எனும் ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நிறைய ஆட்கள் தரப்பட்டார்கள், உரிய வசதிகள் தரப்பட்டன. புத்திசாலித்தனமான உளவாளிகளும் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மூன்றாவது உத்தரவின்படி அரசனின் களஞ்சியங்களில் தானியங்கள் சேமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி கூறப்பட்டார்கள். "சரியாக மழை பெய்யாவிட்டாலோ அல்லது தானிய வண்டிகள் வந்து சேராவிட்டாலோ, இவற்றின் காரணமாகச் சந்தைகளில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அரசாங்கக் களஞ்சியங்கள் திறக்கப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப தானியங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டன" என்கிறார் பரணி.
இந்தக் காலத்தில் லாரிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போல அந்தக்காலத்தில் வண்டிகளை எல்லாம் சந்தைக் கட்டுப்பாட்டாளர் வசம் கொண்டு வந்தான் அலாவுதீன். இது நான்காவது உத்தரவு. பதுக்கலைத் தடுக்கப்போடப்பட்ட உத்தரவு ஐந்தாவது. பதுக்கியவருக்கு மட்டுமல்ல, அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் தண்டனை காத்திருந்தது.
விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தானியங்களை வியாபாரிகளுக்கு விற்றாக வேண்டும் என்றது ஆறாவது உத்தரவு. இதிலே சுவையான விஷயம் அடுத்து வருவது- "லாபத்தை ஈட்ட கிராமத்தாருக்கு ஒரு வாய்ப்புத் தரும் வகையில் தங்களது விளைச்சலைத் தாங்களே சந்தைக்குக் கொண்டு சென்று, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது "உழவர் சந்தை" எனும் கருத்தோட்டம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது.
ஏழாவது உத்தரவும் முக்கியமானதே. "சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை நடவடிக்கைகள் பற்றியும் மூன்று இலாக்காக்களிலிருந்து தினசரி சுல்தானுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன" என்கிறார் பரணி. அரசாணை போட்டுவிட்டு பிறகு அதுபற்றி என்ன, ஏது என்றுகேட்காத ஆட்சியாளனாக அலாவுதீன் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமே.
இவை எல்லாம் சேர்ந்துதான் தானிய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பரணிக்கு புளகாங்கிதத்தைத் தடுக்க முடியவில்லை. "இது உண்மையில் இந்தக் காலத்தின் அதிசயமே; எந்தவொரு அரசனும் இதைச் சாதித்ததில்லை" என்று மீண்டும் கூறுகிறார்.
தானிய விலைகளை மட்டுமல்ல வேறு சிலவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைக்க உத்தரவுகள் போட்டான் அலாவுதீன். அது அந்தக் காலத்திய வாழ்வியலையும் அடையாளம் காட்டுகிறது. குதிரைகள், அடிமைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு சகாய விலையைக் கொண்டுவர நான்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் நான்காவது உத்தரவு கூறியது - 'ஒரு பணிப்பெண்ணின் விலை 5 முதல் 12 டங்காக்கள், ஒரு வைப்பாட்டியின் விலை 20, 30 அல்லது 40 டங்காக்கள் என்று நிச்சயிக்கப்பட்டன. ஓர் ஆண் அடிமையின் விலை 100 அல்லது 200 டங்காக்கள் அல்லது அதற்கும் குறைவு." சுல்தான்கள் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வந்துவிட்டது என்றாலும், அடிமைச் சமுதாயத்தின் கூறுகளும் தொடரவே செய்தன.
"சந்தைகளின் கடைகளில் விற்கப்படும தொப்பி முதல் செருப்பு வரையிலான, சீப்பு முதல் ஊசி வரையிலான பொருட்களுக்கும் குறைந்த விலைகளைத் தீர்மானிக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை மிகவும் சாதாரணப் பொருட்கள் என்றாலும் அவற்றுக்கும் விலைகளை நிர்ணயிக்கவும், விற்பனையாளர்களுக்கான லாபத்தை முடிவு செய்யவும் சுல்தான் பெரும் கவனம் செலுத்தினார்" என்கிறார் பரணி.
டில்லி சுல்தான்கள் என்றால் ஏதோ படை நடத்துவதிலும், இந்து ராஜாக்களை வீழ்த்துவதிலும், கோவில்களை இடிப்பதிலும், மசூதிகளைக் கட்டுவதிலும் காலத்தைப் போக்கியவர்கள் என்கிற சித்திரமே நாமக்கெல்லாம் தரப்பட்டு, இப்போதும் அதுவே மனசில் தங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேறொரு முகமும் உண்டு என்பது பரணி போன்ற அந்தக் காலத்திய வரலாற்றாளர்களின் மூல நூல்களைப் படிக்கும் போதுதான் புரிபடுகிறது.
இதன்பொருள் சுல்தான்களின் முரட்டுத் தனத்தையோ, கொடூரத் தண்டனை முறையையோ மூடி மறைப்பதல்ல. இந்த விலைக் கட்டுப்பாட்டைச் சாதிக்கக்கூட அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது உண்மையே. "குறைந்த எடைபோட்டு பொருளை விற்றால் விற்றவருக்கு கசையடி கொடுக்கப்படும் அல்லது தொடையிலிருந்து சதை வெட்டப்படும்" என்கிறார் பரணி. இதுவெல்லாம் நடந்தது. ஆனால் வெகுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டும் என்பதில் அந்த சுல்தான் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டான் என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் வரலாற்றக்கு நியாயம் செய்வதாகும்.
அலாவுதீன் காலத்தில், 'சந்தைக்காரர்கள் நாணயமாக நடந்து கொண்டார்கள்' என்றும், 'அலாவுதீன் மரணமடைந்ததும் சந்தைக்காரர்கள் குதூகலமடைந்து மேளங்கள் முழங்கினார்கள்' என்றும் இரு காட்சிகளையும் சொல்லியிருக்கிறார் பரணி. இதிலிருந்தே விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் அலாவுதீன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி வந்தது. அந்த வம்சத்தைச் சார்ந்தவன் ஃபிரோஸ் ஷா துக்ளக். தனது ஆட்சி பற்றி இவனே தன்வரலாறு எழுதியிருக்கிறான். நூலின் பெயர் "ஃபுது ஹாதி ஃபிரோஷ் ஷாகி" இதிலே தனக்கு முந்திய ஆட்சிகளில் முஸ்லிம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக விதவிதமான வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும், தான்அவற்றை எல்லாம் ரத்து செய்ததாகவும் கூறியுள்ளான். நீக்கப்பட்ட வரிகளை வசூலிக்கிற அதிகாரிகளுக்குத் தண்டனை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.
"கஜானா வற்றினாலும் பரவாயில்லை
மக்களின் வயிறு நிரம்ப வேண்டும்
மார்பு பொறுமையாக இருந்தாலும் பரவாயில்லை
இதயம் பொங்கி வழிய வேண்டும்"
- என்கிற கவிதையை அவன் மேற்கோள் காட்டியிருக்கிறான். பொருளாதார விஷயங்களிலும் கவிதையைக் கையாளும் திறம்படைத்த ஒரு சுல்தான் இருந்தான்.
இவனது ஆட்சி பற்றி வரலாற்று நூல் எழுதிய இன்னொருவர் ஷம்ச சிராஜ் அபிஃப். இவர் எழுதிய நூலின் பெயரும் பரணியுடையது போல "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி." ஆனால் பரணியின் நூலைக்காட்டிலும் இதில்தான் இந்த சுல்தானின் ஆட்சிபற்றி நிறைய விபரங்கள் உள்ளன. பரணியின் நூலில் முகமது பின் துக்ளக் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது.
விலைவாசி நிலைபற்றி அபிஃப்பும் தகவல் தருகிறார். "அலாவுதீனின் காலத்தில் திறமையான நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஆனால் ஃபிரோஸ் ஷாவின் காலத்தில் அவரது முயற்சி ஏதுமில்லாமலேயே கடவுளின் கருணையால் அவை குறைந்த விலையில் கிடைத்தன" என்று சிறிதும் தயக்கமின்றி எழுதி வைத்துள்ளார். இதிலிருந்தும் அலாவுதீன் கில்ஜியின் பெருமை பிடிபடுகிறது.
எனினும், ஃபிரோஸ் ஷா எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அபிஃப் கூறத்தான் செய்துள்ளார். அவை மிக நவீனமானவை. நமது தலைமுறைக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. "நகரத்தில் யாரேனும் வேலையில்லாமலிருந்தால் அவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு சுல்தான் உத்தரவிட்டிருந்தான். கொத்தவால் தனது மாவட்ட அதிகாரிகளை அழைத்து இவர்கள் பற்றி விசாரிப்பான். அத்தகையவர்கள் சுல்தான் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அபிஃப். சுல்தான் வேலைவாய்ப்பு நிலையம் நடத்தியது போலத்தெரிகிறது! இப்படிப்பட்ட சுல்தான்களும் இருந்திருக்கிறார்கள்.
எத்தகைய வேலைகளில் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள்? அபிஃப் தொடர்கிறார்-" எழுதத் தெரிந்தவர்களுக்கு அரசாங்க அமைப்புகளிலும் தொழில் தெரிந்தவர்களுக்கு கானி ஜஹானின் கீழும் வேலைதரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரபுவிடம் அடிமையாக வேலை பார்க்க எவரேனும் விரும்பினால் அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சுல்தானே எழுதி அனுப்பினான். நிலமான்யம் பெற்றுள்ள ஓர் அமீரிடம் ஒருவர் அடிமையாகப் போக விரும்பினால் அது பற்றிய உத்தரவு அந்த அமீருக்கு அனுப்பப்பட்டது. ஆக, ஒரு சிலர்தான் வேலையில்லாமல் இருந்தார்கள்"
சுல்தான்கள் காலத்தில் அடிமை முறையானது பெரிதும் நெகிழ்ச்சி உடையதாக இருந்ததை நோக்க வேண்டும். மனுசாஸ்திரம் காட்டிய வருணாசிரமக் கட்டமைப்பில் அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் இருந்தது. இப்போதோ அது தான் விரும்பிய பிரபுவை ஓர் அடிமைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நெகிழ்ச்சி உடையதாக இருந்தது. "பரிந்துரைக் கடிதம்" அனுப்புகிற முறை அப்போதே இருந்தது. பிரபு என்றால் அப்படிக்கடிதம், அமீர் என்றால் உத்தரவு. அவருக்கு நிலமானியத்தை சுல்தான் தந்திருப்பதால் உத்தரவு. அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் என்பதைவிட வறுமையின் காரணமாக நடைமுறையில் இருந்தது இக்காலத்தில்.
இதன் அர்த்தம் அடிமைகள் எல்லாம் நல்ல வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதில்லை அல்லது அடிமைவேலை கிடைத்ததும் வறுமை காணாமல் போனது என்பதுமில்லை. அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த சுல்தான்கள் காலத்தில் வாழ்வு வாய்க்கும் கைக்குமாகவே இருந்தது. யஜமானர்களின் கோபத்தீயில் அடிமைகளும் ஏழைகளும் கருகித் துடிக்கவே செய்கிறார்கள். விஷயம் என்னவென்றால் ஃபிரோஸ் ஷா போன்றவர்களின் சில கருணை நடவடிக்கைகள் இருந்தன என்பது வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுதான்.
வேலையில்லாதாருக்கு வேலை மட்டுமல்ல ஏழைகளுக்காக இலவச மருத்துவமனைகளை உருவாக்கினான் ஃபிரோஸ் ஷா. வரலாற்றாளர் அபிஃப் தரும் அந்தத் தகவல் "பாதிக்கப்பட்ட ஏழைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள், தங்களது நோய்களைச் சொன்னார்கள். மருத்துவர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைத் தந்தார்கள். மருந்து, உணவு மற்றும் பானங்கள் அரசு செலவில் வழங்கப்பட்டன" மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டிய கடமையை இப்போது அரசுகள் கைகழுவி வருகின்றன. அதுவும் தனியார்மயமாகிப்போனது. "ரமணா" படத்தில் வருவதுபோல அங்கே பிணத்திற்கும் வைத்தியம் பார்த்து பில் போடுகிறார்கள். இந்த சுல்தான் காலத்திலோ அரசு செலவில் மருந்தும் உணவும்தரப்பட்டது. சகல ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சரித்திரச் செய்தி சமர்ப்பணம்.
இதனினும் ஆச்சரியமான செய்தி சுல்தான் ஃபிரோஸ் ஷா ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி வழங்கினான் என்பது. நவீன காலத்து நலத்திட்டம் போல உள்ளது. "திருமண வயதுள்ள புதல்வியைக் கொண்டுள்ள எந்த மனிதரும் திவானி கெய்ராத்துக்கு விண்ணப்பம் தரலாம். அந்த நிறுவன அதிகாரிகளிடம் தனது நிலையையும், வறுமையையும் எடுத்துரைக்கலாம். அவர்கள் உரிய விசாரணைக்குப் பிறகு முதல்தர விண்ணப்பதாரருக்கு 50 டங்கா நிதி உதவியும், இரண்டாம் தரத்தவருக்கு 30 டங்காவும், மூன்றாம் தரத்தவருக்கு 25 டங்காவும் தருவார்" என்கிறார் ஆபிஃப், "எந்த மனிதரும்" எனும் சொல்லாட்சி முக்கியமானது. மத வேறுபாடின்றி, மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடின்றி இந்தத் திருமண நிதி உதவி அமலாகியிருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தானம் பெறும் உரிமை பிராமணர்களுக்கே உண்டு, அப்போதுதான் கொடுப்பவருக்கு புண்ணியம் உண்டு என்கிற அந்தக் காலத்தில் தர்மசாஸ்திர விளக்கவுரையாளர்களிடமிருந்து சுல்தான்களின் நடைமுறை பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
புதிய நலத்திட்டங்கள் என்று இந்தக்காலத்து அரசுகள் கூறுகிற சில திட்டங்கள் உண்மையில் மிகப்பழமையானவை என்பதற்கு வரலாற்று ஏடுகளில் ஆதாரம் இருக்கிறது. முஸ்லிம் அரசர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வரலாற்று உணர்வு அதிகம். அதிலும் போற்றத்தக்க விஷயம் பரணி, அபிஃப் போன்ற வரலாற்றாளர்கள் அரசியல் விவகாரங்களோடு இப்படிப் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனமாகப் பதிவு செய்திருப்பது. இத்தகைய சரித்திர உணர்வாளர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவின் பழங்கால வரலாறு போல இடைக்கால வரலாறும் புராணமயமாகிப் போயிருக்கும்.
கடந்த கால வரலாற்றிலிருந்து தற்கால செயல்பாடுகளுக்கு படிப்பனைப் பெறலாம் என்கிற நினைப்பு டில்லி சுல்தான்களுக்கு இருந்தது. இது நடைமுறையில் வெளிப்பட்டது என்பதை பரணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.
முகமது பின் துக்ளக் பற்றி மிக மோசமான கருத்துருவமே நம் மத்தியில் உள்ளது. அவனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதுபற்றி விவரிக்க இங்கே இடம் போதாது. ஒரேயொரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடலாம். அவனது சாம்ராஜியத்தில் அமீர்கள் எனப்பட்ட சிற்றரசர்கள் சிலர் அவ்வப்போது கலகம் செய்து வந்தார்கள். துக்ளக் மிகவும் வெறுத்துப்போனான். வரலாற்றாளர் என்ற முறையில் அதுபற்றி பரணியிடம் கலந்து பேசினான். பரணி எழுதியிருப்பதைப் பாருங்கள்- "கலகக்காரர்களின் வெற்றியும், தியோகிர் கைகழுவிப் போனதும் ராஜாவைப் பெரிதும் பாதித்தது. இப்படி வருந்திய நிலையில் ஒருநாள் இந்த நூலின் ஆசிரியராகிய என்னை கூப்பிட்டுவிட்டான். பிறகு கூறினான்: 'எனது ராஜியத்திற்கு நோய் பீடித்துவிட்டது. எந்த வைத்தியத்தாலோயும் இதைச் சரிசெய்ய முடியவில்லை. தலைவலியைச் சரிசெய்கிறார் வைத்தியர். காய்ச்சல் வந்து விடுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் போது வேறு பிரச்சனை வந்து விடுகிறது. அதுபோல எனது ராஜியத்திலும் ஒழுங்கீனங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. ஓரிடத்தில் ஒடுக்கினால் இன்னொரு இடத்தில் தோன்றுகிறது. ஒரு பகுதியில் சரி செய்தால் இன்னொரு பகுதியில் பிரச்சனை எழுகிறது. இத்தகைய ஒழுங்கீனங்கள் பற்றி முந்தைய ராஜாக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? நான் பதில் சொன்னேன்"
பரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவிட இப்படி கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக் காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள் படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால் தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.
அலாவுதீன் கில்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்த காட்டிய அக்கறையை, ஃபிரோஸ் ஷா துவக்கிய மக்கள் நலத்திட்டங்களை தற்காலத்து ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டால் இத்துறைகளில் அவர்களைக் காட்டிலும் எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற உந்துதல் வரும். அப்படி வந்தால் வரலாற்றாளர்கள் பரணி, அபிஃப் போன்றோரின் நோக்கம் மெய்யாலும் நிறைவேறியதாக அர்த்தம்.
-அருணன்
(செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
இந்திய வரலாற்றில் யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அத்தகைய தகுதி கண்டிப்பாக அலாவுதீன் கில்ஜிக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது. என்ன செய்வது அதிகார வர்க்கத்தில் உள்ளோர் திட்டமிட்ட சதியால் இன்று பொய்யையும் புரட்டையும் வரலாறாக படித்து வருகிறோம். இனி வரும் காலத்திலாவது புதைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வரும் பணியை செய்வதற்கு நல்லோர்கள் முன் வர வேண்டும்.
Wednesday, September 19, 2012
மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?
மன்னர் அக்பர் நல்லவரா? கெட்டவரா?
நமது வரலாற்று பாடங்களில் அக்பரைப் பற்றி மிக சாந்த சொரூபி. மத சார்பற்று நடந்து கொண்டார். அவரைப் போன்ற ஒரு முஸ்லிம் அரசரை நாம் எங்கேயும் பார்க்க முடியாது என்ற கருத்துக்களையே நாம் படித்து வந்திருப்போம்.
'அக்பருடைய சமய கோட்பாடு அவருக்கு அழியாப் புகழை தந்தது' என எட்டாம் வகுப்பு பாடநூலில் 88 ஆம் பக்கத்திலும் பிளஸ் 2 வரலாற்று பாட நூலில் 141-142 ஆம் பக்கங்களிலும் இன்னும் வரலாறு நெடுக அக்பரை பற்றி புகழ்ந்தே நமது வரலாறு புனையப்பட்டிருக்கும். ஆனால் இந்த பாராட்டு மொழிகளுக்கு கொஞ்சமேனும் அருகதை உடையவர்தானா இந்த அக்பர் என்பதை வரலாற்று ஆதாரங்களோடு பார்ப்போம்.
அக்பருடைய அரசவை எழுத்தரான பதௌனி அரசவையில் தான் கண்ட காட்சிகளை 'முன் தகாபு த் தவாரிக் பகுதி 2' ல் விபரமாக குறித்துள்ளார். இனி அவற்றை பார்ப்போம்.
தனது 25 ஆவது ஆண்டின் துவக்க நாளன்று அக்பர் பொது மக்கள் முன்னிலையில் சூரியனுக்கும் தீபத்திற்கும் சாஷ்டாங்கம் செய்தார். மாலையில் தர்பாரின் விளக்குகள் ஏற்றப்படும் போது அனைவரும் மரியாதையுடன் எழுந்து நின்றனர்.
-பக்கம் 262.
இஸ்லாம் பன்றியையும் நாயையும் அசுத்தமான பிராணிகளாகக் கருதுவதற்கு மாற்றமாக அவர் அவற்றை அந்தப் புரத்திலும் கோட்டையிலும் வைத்திருந்தார்.
-பக்கம் 314
காட்டு மிருகங்களான புலி, கரடியின் மாமிசம் உண்பது அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் அவை வீரத் தன்மை வாய்ந்த மிருகங்கள் எனக் கூறப்பட்டது.
-பக்கம் 315
அக்பர் தனது உச்சி முடியை மட்டும் நீக்கி விட்டு தலையைச் சுற்றிலும் முடியை வளர விட்டார். ஏனெனில் மரணத்தின் போது மாசற்ற படைப்பின் ஆன்மா உச்சி வழியாகவே வெளியேறும் என அவர் நம்பினார்.
-பக்கம் 335
அரண்மனையில் சூதாட்ட விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. பேரரசரோ சூதாடுபவர்களுக்கு வட்டிக்குப் பணத்தைக் கடனாக வழங்கினார்.
-பக்கம் 349
ஐந்து நேரத் தொழுகை, நோன்பிருத்தல் மற்றும் முகமது நபிகளுடன் தொடர்புடைய அனைத்து நம்பிக்கைகளும் மூடத்தனங்கள் என்று வர்ணிக்கப்பட்டன. மனிதனின் அறிவே மதத்தின் அடிப்படை ஆதாரமாகக் கருதப்பட வேண்டுமே யொழிய நபியவர்களின் வழிமுறைகளல்ல என எடுத்துரைக்கப்பட்டது.
-பக்கம் 215
அக்பர் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல மாறுதல்களை புகுத்தினார். அரசருக்குரிய மரியாதையுடன் அவரைப் பார்ப்பது சமயக் கட்டளையாகவே கருதப்பட்டது. அவர் தனது முகத்தை 'காஃப இ முரத்தத்' (விருப்பங்களின் மூலம்) 'கிப்லா இ ஹாஜத்' (தேவைகளின் இலக்கு) என்றும் வர்ணித்தார்.
-பக்கம் 266
'ஜமீன் போஸ்' (தரையை முத்தமிடுதல்) எனும் பெயரில் அரசருக்கு 'சஜ்தா' (சாஷ்டாங்கம்)செய்வது கட்டாயமாக்கப்பட்டு அரசரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
-பக்கம் 311
அஹமத், முஹம்மத், முஸ்தஃபா போன்ற பெயர்கள் குற்றத்திற்குரியனவாகக் கருதப்பட்டன. இதன் மூலம் அந்தப்புரத்தில் உள்ள அரசிகளையும் அரண்மனைக்கு வெளியிலுள்ள இறை மறுப்பாளர்களையும் அரசர் திருப்தி படுத்த முயன்றார்.
-பக்கம் 314
கடவுள் வணக்கத்தின் போது தங்க ஆபரணங்கள் ஆண்கள் அணிவதும் பட்டாடை உடுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.
-பக்கம் 316
ஹிஜ்ரா ஆண்டு கைவிடப்பட்டு அக்பர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டை (ஹிஜ்ரி 963) துவக்கமாகக் கொண்டு புதிய ஆணடுக் கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
-பக்கம் 316
அரபு மொழி வாசிப்பதும் பயில்வதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய சட்டங்களும் திருக்குர்ஆன் விரிவுரைகளும் முகமது நபி அவர்களின் நடைமுறைகளும் தவறானவைகளாக போதிக்கப்படடன.
-பக்கம் 316
இரவு நேரங்களில் நடைபெற்ற சமூகக் கூட்டங்களின் போது முகமது நபி அவர்களின் தோழர்களைப் பற்றி பேசப்படும் தகாத வார்த்தைகளை என்னால் இங்கு விவரிக்க இயலாது. அந்த அளவு அருவறுக்கத் தக்கவையாகவும் ஆபாசமாகவும் இருக்கும். அந்நேரங்களில் நான் செவிடனாக இருந்திருக்கக் கூடாதா என எண்ணத் தோன்றும்.
-பக்கம் 318
இவ்வாறு அக்பர் முழுக்க முழுக்க இஸ்லாத்தின் பகைவராக மாறியதற்குக் காரணம் அவர் தன்னை இறைத் தன்மை பொருந்தியவராகக் காட்டிக் கொண்ட போது பிராமணர்கள் அவரை 'இராமன், கிருட்டினன் மற்றும் இன்னும் பல இந்து அவதாரங்களைப் போன்ற ஒரு அதிசய பிறவி என்று புகழ்ந்தனர். உலகை ஆள வந்தவர் என்றும் இவ்வையகத்து மாந்தர்க்கு வழி காட்ட வந்த அவதார புருஷர் எனவும் போற்றி புகழ்ந்தனர்.
-பக்கம் 326
ஆனால் முஸ்லிம்களோ அவரை மனிதனாகவே மதித்தனர். ஒரு முறை என்னை (பதௌனி) அரசருக்கு சாஷ்டாங்கம் செய்யுமாறு காதர் ஜஹான் பல முறை கேட்டுக் கொண்ட போதும் அதற்கு நான் கீழ்படியவில்லை.
-பக்கம் 389
அக்பருடைய பேரரசை நெருப்பு பெருகி வளர்ந்த போது பிராமணர்கள் அதற்கு எண்ணெய் வார்த்தனர். முஸ்லிம்களோ அந்த ஜூவாலையை அணைக்க முயன்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அக்பர் சிறிது சிறிதாக பிராமணியத்தின் வலையில் விழத் துவங்கினார். மக்களுக்கு தரிசனம் அளிக்க அவர் காட்சி மண்டபத்துக்கு வருகையில் அவர் நெற்றியில் ஹிந்துவைப் போன்று திலகமிட்டிருந்தார். பிராமணர்களால் ஆசீர்வதித்து அணிவிக்கப்பட்டிருந்த பொன்னாபரணங்கள் அவரது மணிக் கட்டுகளில் காணப்பட்டன. அத்துடன் அவரை விடவிலலை. பீர்பால் அக்பருக்கு பிராமணர்களின் பூமாலை அணிவிக்க முயலும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு அக்பரின் மேலிருந்தது.
-பக்கம் 262, 268
மறுமையை நம்பாத காரணத்தினால் ‘தீனே இலாஹி’ என்ற மதத்தை உருவாக்கி, இஸ்லாத்தை அவமதித்தார். ‘தீன் இலாஹி’யில் புதிதாக இணைந்தவர்கள், பிரதி ஞாயிறு தோறும் வணக்கம்; புரிவார்கள். இவர்கள் தம் வணக்கச் சடங்கின் போது, கைகளில் தலைப்பாகை ஏந்தியவர்களாக அரசனின் காலில் விழ வேண்டும். அரசன் அவர்களிடம் தன்னுடைய உருவப்படத்தைக் கொடுப்பார். அக்பர் தன் காலில் விழுந்து வணங்குவதையும், தன் புதிய மதச் சடங்காகவே ஆக்கினார்.
பல விதிகளையும் சடங்குகளையும் இவருடைய ‘தீன் இலாஹி’யில் சேர்ந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அவை:
அரசன் காலில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறந்த நாளில் விருந்தளிக்க வேண்டும.;
பிறந்த மாதத்தில் இறைச்சி உண்ணக்கூடாது.
இறந்தவரின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம்.
எரிக்கும்போதோ, புதைக்கும் போதோ தலை கிழக்கு நோக்கி இருக்கவேண்டும்.
இறைச்சிக் கடைக்காரர், மீனவர், பறவைகளைப் பிடிப்போர் ஆகியோரின் பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. (வர்ணாசிரம கோட்பாடு எவ்வாறு புகுத்தப்படுகிறது பாருங்கள்)
இவ்வாறு, பல கோட்பாடுகளை உள்ளடக்கியதாக ‘தீனே இலாஹி’ காணப்பட்டது.
அக்பர் பிராமணர்கள் பக்கமே சாயட்டும். இந்து மதத்துக்கே செல்லட்டும். இதனால் இஸ்லாத்துக்கு எந்த வகையிலும் குறைவு வந்து விடாது. ஆனால் தனக்கு கீழ் உள்ள மற்ற மக்களும் இவர் கொள்கைபடி இஸ்லாத்தை விட வேண்டும். இஸ்லாமிய நம்பிக்கைகளை புறம் தள்ள வேண்டும் என்று சொல்ல இவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நாட்டை ஆளுவதற்குத்தான் அரசனே தவிர அந்த மக்களின் சமய செயல்பாடுகளில் குறிக்கிடுவதை யாரும் விரும்ப மாட்டார். ஆனால் நமது வரலாற்று பாடநூல்களோ இந்த செய்திகள் எதையும் பதியாமல் இவரை பத்தரை மாற்று தங்கம் போல் காட்டுவதுதான் உச்ச கட்ட காமெடி. அதே நேரம் இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட, அகண்ட பாரதத்தை உண்டாக்கிய ஒளரங்கசீப்பை மதவெறியராகவும் இந்து மதத்தின் எதிரியாகவும் காட்டி அன்று முதல் இன்று வரை வெறுப்பு விதைத்து வருகிறார்கள்.
கோவி கண்ணன், சார்வாகன், இக்பால் செல்வன், வவ்வால் போன்றவர்களுக்கு இயல்பிலேயே இஸ்லாமிய எதிர்ப்பு உண்டாகி இருக்க காரணம் நமது நாட்டு வரலாற்று பாட நூல்களில் இது போன்ற வரலாற்று திரிபுகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு வரை படித்ததன் விளைவே! பொதுவாகவே நமது இந்திய நாட்டின் இந்து மக்களில் 80 சதவீதமான மக்கள் நல்ல எண்ணத்தோடும் சகோதர பாசத்தோடும் பழகக் கூடியவர்களே! 20 சதவீதமான மக்களே இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டி தங்களின் தவறை மறைக்க முயற்ச்சித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 20 சதவீதத்தினர் இஸ்லாமியர் மேல் போட்ட அனைத்து அவதூறுகளையும் களைவதில் முன்னணியில் இருப்பது பாக்கி உள்ள 80 சதவீதமான இந்துக்களே! பெரியார், அண்ணாவிலிருந்து சமீபத்தில் இறந்த ஹேமந்த் கர்கரே வரை, மேலும் குஜராத் பெண் அமைச்சர் கம்பி எண்ணும் அளவுக்கு கொண்டு வந்த அந்த இரு பெண்கள் வரை அனைவரும் இந்து சமுதாய மக்களே!
இனி வரும் காலங்களிலும் நமது இந்தியாவில் அந்த 20 சதமான மக்கள் நினைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பை முறியடிக்கும் கருவிகளாக மற்ற 80 சதவீதமான மக்களே இருப்பர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அதே போல் இந்து மத தெய்வங்களை கிண்டலடிப்பது அவர்களை பின்னூட்டத்தில் ஆபாச வார்த்தைகளால் ஏசுவது போன்றதையும் சில இஸ்லாமியர்கள் ஆர்வத்தில் செய்கின்றனர். சமீபத்தில் நடந்த சென்னை ஆர்ப்பாட்டத்தில் கூட சிலர் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர். இதை குர்ஆன் தடை செய்கிறது. அழகிய முறையில் விவாதிக்கவே குர்ஆன் கட்டளையிடுகிறது. அவர்கள் நமக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும் நம்மிடம் உண்மை இருப்பதால் நாம் அழகிய முறையிலேயே கண்ணியமாக பதிலளிப்போம். நமது செயல்களால் இஸ்லாத்தின் பால் அவர்களுக்கு மதிப்பை உண்டு பண்ண செய்வோம்..
நமது நாடு குறுமதியாளர்களின் நயவஞ்சக திட்டங்களில் வீழ்ந்து விடாமல் சாதி இன மத பேதமற்ற அமைதியான சூழலில் இன்னும் பல்லாண்டு சென்று உலக முடிவு நாள் வரை சிறந்தோங்க வேண்டும் என்று அந்த எல்லோருக்கும் பொதுவான ஏக இறையை பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.
Saturday, August 18, 2012
ஹுசைனி பிராமணர்களும் கர்பலா யுத்தமும்!
ஒற்றுமையாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிய மறைக்கப்பட்ட ஒரு இனத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். முதலில் யூதர்களுக்கும் பாரசீக நாட்டில்(தற்போதய ஈரான்) இருந்த நெருப்பு வணங்கிகளுக்கும் பிராமணர்களுக்கும் மூலம் ஒன்றே ஆனதால் இவர்களுக்குள் எழுதப்படாத உடன் பாடுகள் பல இருக்கும். தாங்களே உயர்ந்த குலம். தாங்களே இறைவனுக்கு நெருக்கமானவர்கள் என்ற எண்ணம் இவர்கள் அனைவரின் உள்ளத்திலும் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த நிலையில்தான் ஜனாதிபதி உமருடைய ஆட்சியில் பாரசிகம் வெற்றிக் கொள்ளப்பட்டது. காலா காலமாக ஆட்சி பதவியில் இருந்த பாரசீகர்கள் தாங்கள் தோல்வியுற்றதை கிரகிக்க முடியாமல் அதற்காக பழி வாங்கும் நேரத்தை எதிர்பார்த்து இருந்தனர்.
எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..
அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.
ஷியாக்கள் எவ்வாறு உருவானார்கள் எவ்வாறெல்லாம் குரஆன் ஹதீஸ்களை வளைத்து பொருள் கொண்டார்கள் என்ற நீண்ட வரலாறை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/
ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.
இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.
//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans //
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'
'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'
'No, we are not Muslims,' she exclaimed.
'Then what are you?' I inquired.
'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.
On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'
Then she told me about the ritual carried out on the birth of every child in her family.
She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//
இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.
இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உயர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.
ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..
'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...
கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....
குடியரசு சாய்ந்ததம்மா.....'
என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.
http://www.tamilbrahmins.com/general-discussions/6310-hussaini-brahmins.html
http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm
http://www.imamreza.net/eng/imamreza.php?id=6530
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/
-----------------------------------------------------
மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 24
-----------------------------------------------------
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மன்னர்கள் முக்கியஸ்தர்களுக்கு தங்களின் பெண்களை திருமணம் பண்ணி கொடுத்து அதன் மூலம் உள் நுழைவது இவர்களின் தந்திரம். அதன்படி முகமது நபியின் பேரனான ஹுசைன் அவர்களுக்கு தங்களின் பெண்ணை மணமுடித்துக் கொடுத்தனர். ஷஹர்பானு என்ற பாரசீக பெண் இமாம் ஹுசைனுக்கு மணமகளாகிறார். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் ஜெய்னுல்லாபுதீன். சாசனியர்களான இவர்களின் வாரிசு அலி அவர்களின் குடும்பத்தில் தோன்றியதால் அலியையும் அவரது குடும்பத்தவரையும் தெய்வீக அம்சம் பொருந்தியவர்களாக வழக்கம் போல் கதை கட்ட ஆரம்பித்தனர். ஷஹர்பானு நம் நாட்டை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மனைவியின் தங்கையாகவும் அறியப்படுகிறார். இந்த ஹூசைனி பிராமணர்கள் குழுவில் இருந்து ரஹீப் என்பவரும் இவரது பல மகன்களும் இந்த போரில் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் சொல்லுகின்றன..
அப்துல்லா பின் ஸபா என்ற யூதன் முஸ்லிமாக மாறுவதாக நடித்தான். முஸ்லிம்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணி ஜனாதிபதி உஸ்மானுக்கு எதிராக மக்களை திரட்டினான். அலியை முன்னிலைப்படுத்தி அவருக்கு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து பிரசாரம் செய்தான். ஆனால் இதை அலி அவர்களே கடுமையாக மறுத்திறுக்கிறார்கள். தன் மீது சொல்லப்படும் இதுபோன்ற கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்று மக்களை எச்சரித்தார். ஆனால் அப்துல்லா பின் ஸபாவின் கருத்தை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். முகமது நபியின் பெயரால் பல பொய்யான ஹதீதுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதில் இவனுக்கும் இவனை பின்பற்றிய கள்ள முஸ்லிம்கள்(யூதர்களுக்கும்) மிகப் பெரிய பங்குண்டு.
ஷியாக்கள் எவ்வாறு உருவானார்கள் எவ்வாறெல்லாம் குரஆன் ஹதீஸ்களை வளைத்து பொருள் கொண்டார்கள் என்ற நீண்ட வரலாறை இந்த சுட்டியில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/shiyakal_kolkai_varalaru/
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/
ஜனாதிபதி உஸ்மான் எகிப்திலிருந்து வந்த சில யூதர்களால் (முஸ்லிமாக நடித்த) கொல்லப்பட்டு பிறகு அலி ஆட்சிக்கு வருகிறார். அதன் பிறகு முஆவியாவுக்கு ஆட்சி அதிகாரம் செல்கிறது. அதன் பிறகு அவரது மகன் யஜீதிடம் அதிகாரம் செல்கிறது. இங்குதான் யூதர்கள், நெருப்பு வணங்கிகள், நம் நாட்டு ஹுசைனி பிராமணர்கள் போன்றோர் முகமது நபியின் பேரன் ஹுசைனை தூண்டி விட்டு முஆவியாவுக்கு எதிராக படை திரட்ட ஆலோசனை வழங்குகின்றனர். ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக கலகம் செய்தால் எந்த ஆட்சித் தலைவரும் எதிரிகளை ஒடுக்கவே முயற்ச்சிப்பர். அந்த வகையில் இவ்வாறு ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வேண்டாம் என்று பல நபித் தோழர்களும் தடுக்கின்றனர். ஒரு சில எகிப்தியர்களின் பேச்சை நம்பி கர்பலாவுக்கு வருகிறார் ஹூசைன். ஆனால் போர் துவங்கும் நேரம் எகிப்தியர்களான காரிஜியாக்கள்(முஸ்லிமாக நடித்தவர்கள்) ஹூசைனுக்கு உதவாமல் நயவஞ்சகமாக பின் தங்கி விடுகின்றனர்.
இந்த நாளில் நமது நாட்டில் சந்திரகுப்தர் என்ற அரசரின் ஆட்சி நடைபெற்றதாகவும் அவரிடம் ஹூசைன் அவர்கள் உதவி கேட்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. பஞ்சாப், பீஹார், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் இன்றும் சிறு சிறு குழுக்களாக ஹூசைனி பிராமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். முன்பு ஈராக்கின் கூபாவுக்கு பக்கத்தில் கூட்டமாக தங்கியிருந்த இவர்கள் போரில் ஹூசைன் அவர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியாவை நோக்கி வந்தனர். பிறகு இங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் தற்போதும் கர்பலா தினத்தன்று இமாம் ஹூசைனுக்காக ஷியாக்களோடு சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதை பரவலாக பார்க்கலாம்.
//'I,' she said, 'told my mother about your comments regarding Husaini Brahamans //
and how I introduced myself as one. To that she said, did you tell him that we don't
perform the rituals the Brahmans are obliged to perform. That we don't go to the temples?'
'Should I presume from this,' I asked, 'that you have turned Muslim.'
'No, we are not Muslims,' she exclaimed.
'Then what are you?' I inquired.
'We are Husaini Brahmans,' she said with a certain sense of pride and added,
'Now, I will tell you about a sign each and every Husaini Brahman carries with him/her.
On his/her throat s/he bears a line of cutting, which is indicative of the fact that s/he is the descendant of those Brahmans whose throats were cut in the battle of Karbala.'
Then she told me about the ritual carried out on the birth of every child in her family.
She said, 'Among Brahmans, after child birth, the ritual of Moondan is performed.
In our family this ritual is performed in the name of Imam Husain.'//
இங்கு ஒரு ஹூசைனி பிராமணரின் பேட்டியைத்தான் பார்க்கிறோம். கோவிலுக்கு இவர்கள் செல்ல மாட்டார்களாம். இஸ்லாத்திலும் இவர்கள் இல்லையாம். ஆனால் இஸ்லாத்தை இரு கூறாக பிரித்து இன்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிகழ்வுக்கு காரணமாக மாத்திரம் இருப்பார்களாம். உண்மையிலேயே இவர்களின் ராஜதந்திரம் பாராட்டப்பட வேண்டியதே. ஆனால் இந்த திறமையை ஆக்க சக்திக்கு பயனபடுத்தாமல் அழிவு வேலைகளுக்கும் சாம்ராஜ்ஜியங்களை கீழிறக்கும் வேலைகளுக்கும் பயன் படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். பகவத் கீதையில் இமாம் ஹூசைன் கொல்லப்படுவதை கிருஷ்ணர் சொல்லியிருப்பதாகவும் சில பிராமணர்கள் நம்புகின்றனர். கலங்கி புராணா, மற்றும் அதர்வண வேதங்களிலும் இமாம் ஹூசைன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதாக சில பிராமணர்கள் நம்பிக் கொண்டுள்ளனர். இந்தி நடிகர்கள் சுனில்தத், சஞ்சய் தத் போன்றோர் ஹூசைனி பிராமணர்கள் பிரிவிலேயே வரக் கூடியவர்கள். ஷியாக்களுக்கு நெருக்கமானவர்கள்.
இதே போல் தமிழகத்திலும் இந்தியாவிலும் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் மொகலாயர்களின் ஆட்சியில் பலர் முஸ்லிம்களாக மாறினர். (மாறுவதாக நடித்துள்ளனர்) இவர்களில் பலர் அரபி மொழிகளில் நல்ல பாண்டித்தியம் பெற்று வர்ணாசிரமக் கோட்பாட்டை ஆதரிக்கும் முகமாக பல புத்தகங்களை எழுதினர். அது போன்ற இஸ்லாமிய புத்தகங்களை படித்தால் நமக்கு மனு ஸ்மிருதியை படிப்பது போன்ற உயர்வே ஏற்படும். அந்த அளவு சாதி வெறி ஏற்றப்பட்டுள்ளது. அவற்றை தற்போதுதான் மொழி பெயர்த்து அதன் உண்மை நிலையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. சமீப காலம் வரை மத்ரஸாக்களில் இது போன்ற புத்தகங்கள் பாடமாகவும் வைக்கப்பட்டிருந்தது. சில புத்தகங்கள் மிகுந்த ஆபாசமாகவும் இருக்கும். தவ்ஹீத் எழுச்சி தமிழகத்தில் உண்டான பிறகு குர்ஆனுக்கு மாற்றமாக எழுதப்பட்ட அந்த புத்தகங்கள் இன்று குப்பைக் கூடைக்கு சென்று விட்டன. 'துர்ருல் முக்தார்' என்ற புத்தகம் இதற்கு சான்றாக இன்றும் இருந்து வருகிறது.
ஏதோ சில தவறான புரிதல்களால் இன்று ஷியாக்கள் என்றும் சன்னிகள் என்றும் இரு கூறாக சில நயவஞ்சகர்களால் பிரிக்கப்பட்டு விட்டோம். அதை இன்று நாம் விளங்கும் முகமாக பல தகவல்களும் நமக்கு கிடைக்கின்றது. ஆனால் இன்றும் அந்த கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு முஹர்ரம் 10 அன்று என்னுடைய உடலை கீரிக் கொள்வேன் என்று அடம் பிடிப்பது சரிதானா என்று ஷியாக்கள் சிந்திக்க வேண்டும். இது நபி அவர்களின் போதனைக்கும் குர்ஆனின் கட்டளைக்கு நேர் எதிராகவும் உள்ளதை ஷியா சகோதரர்கள் உணர்ந்து நேர் வழியை பெற வேண்டும்..
'கண்டவர் குலை நடுங்கும் சண்டாளன் யஜித் என்போன்...
கொன்றான் இமாம் ஹூசைனை .....குடியரசு சாய்ந்ததம்மா....
குடியரசு சாய்ந்ததம்மா.....'
என்று நம்ம நாகூர் அனீஃபா அண்ணன் கணீரென்ற குரலில் பாடும்போது சின்ன வயதில் நானெல்லாம் அழுதிருக்கிறேன். யார் சண்டாளர்கள் என்பதை இறைவன் முடிவு செய்யட்டும். அது வரை நாம் வாழும் நாட்களில் அமைதியாக வாழ்ந்து ஒற்றுமை எனும் கயிரான குர்ஆனை பிடித்து ஈடேற்றம் பெற முயற்ச்சிப்போம்.
http://www.tamilbrahmins.com/general-discussions/6310-hussaini-brahmins.html
http://www.milligazette.com/Archives/2004/16-31May04-Print-Edition/1605200441.htm
http://www.imamreza.net/eng/imamreza.php?id=6530
http://onlinepj.com/egathuvam/all_articales_in_egathuvam/
-----------------------------------------------------
மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு – 24
-----------------------------------------------------
சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
Sunday, July 15, 2012
பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!
பர்மிய முஸ்லிம்களின் பதற வைக்கும் எதிர்காலம்!
பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.
சுமார் 15 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.
1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள்.
பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.
(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)
கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.
பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.
இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.
மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.
கடல்களில் மீன் பிடிக்க முடியாது.
1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.
அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.
பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.
கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.
(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)
இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.
பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.
(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)
இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.
16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)
12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.
(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட தாய் முஸ்லிம்கள்.)
15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.
(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)
பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.
2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.
கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?
மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.
தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்
எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.
"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.
வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.
பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.
டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்.
மேலும் விபரங்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Rohingya_people
இந்த தளத்திற்கு சென்று உங்களின் கண்டனங்களையும் தெரிவியுங்கள்:
பர்மியர்களோடு நான் தபூக்கில் இருந்த போது நிறைய பழகி இருக்கிறேன். சொந்த தொழில் செய்வதில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். மியான்மரில் இவர்களுக்கு கொடுக்கப்படும் கொடுமைகளை கருத்தில் கொண்டு அகதிகள் அந்தஸ்தில் பல லட்சம் பேர்களை சவுதி அரசு பராமரித்து வருகிறது. அவர்களுக்கு அகதிகள் என்ற தனி அட்டை ஒன்றை கொடுத்து பர்மாவில் பிரச்னைகள் முடியும் வரை சவுதியில் குடும்பத்தோடு தங்க அனுமதிக்கப்பட்டள்ளனர். அந்த வகையில் பல பர்மிய நண்பர்களை பெற்றுள்ளேன்.
சுமார் 15 இலட்சம் முஸ்லி்ம்கள் பர்மாவில் வாழ்கிறார்கள். இதில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பர்மியர்கள். மீதமானவர்கள் வங்காளிகள். இந்தியாவில் இருந்து சென்றவர்கள். தமக்கென தனியான மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள். அராபிய மன்னன் அரகனினால் பலாத்காரமாக நாடுகடத்தப்பட்ட அரபு முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் வணிக கலம் நடுக்கடலில் விபத்துக்கு உள்ளானதனால் பர்மாவின் பக்கம் வந்து சேர்ந்தனர். பர்மிய பெண்களை மணந்து அங்கேயே கீழைத்தேய வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இது நடந்தது 9ம் நுற்றாண்டுகளில். மொகாலாய படைகள் தங்கள் எல்லைகளை விரித்த போது இவர்கள் அவர்களிற்கான வர்த்தக முகவர்களாக செயற்பட்டனர். இதன் பலனாக அதிகாரம் மிக்கவர்களாகவும், பணபலமிக்கவர்களாகவும் திகழ்ந்தனர். இது தான் இன்றைய தினத்தில் பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. பர்மாவை காட்டி கொடுத்தவர்கள். பர்மாவின் செல்வங்களை அரேபியாவிற்கு சுரண்டி விற்றவர்கள், பர்மிய பெண்களை கற்பழித்தவர்கள் பலாத்காரமாக மணந்தவர்கள் போன்ற அரசியல் குற்றச்சாட்டுகளே இன்றைய இனவாத சங்காரத்தின் ஊற்றுவாய்கள்.
1950 களில் ரோகீங்கியா பிரதேசம் தனி பிரதேசமாக இனங்காணப்பட்டது. இதில் இந்திய வங்காள இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து காணப்பட்டனர். அராஜகமான தங்கள் இராணுவ அரசியல் இருப்பினை பேணிக்கொள்ள பர்மிய ஜெனரல்கள் ரோகீங்கிய முஸ்லிம்களிற்கு எதிரான இனவாத அரசியலை அதன் செயல்நெறிகளில் சுயமாக செயற்பட அனுமதியளித்தனர். பிக்குகள் சொல்லும் திசையில் சுடுமாறு போலிஸாரையும் பிக்குகள் காட்டும் பக்கத்தில் குண்டெறியுமாறு இராணுவத்தையும் பணித்தார்கள் இந்த பாசிஷ இராணுவ ஆட்சியாளர்கள்.
பர்மியா மலாய் முஸ்லிம்கள், பர்மிய சீன முஸ்லிம்கள் போன்றவர்கள் கவனமாக தவிர்க்கப்ட்டு இந்த ரோகீங்கிய முஸ்லிம்கள் மட்டும் இலக்கு வைக்கப்பட்டனர்.
(இந்த குழந்தைகள் அந்த பாவிகளை என்ன செய்தது? என்ன குற்றத்திற்காக இவர்கள் கொல்லப்பட்டனர்?)
கூட்டாக பள்ளிவாசலில் தொழ முடியாது. பள்ளிவாசல் கட்ட முடியாது. மதரஸா நடத்த முடியாது.
பெரிய வியாபார முயற்சிகளில் ஈடுபட முடியாது.
இளைஞர்கள் போலிஸில் பதிவு செய்ய வேண்டும்.
மியன்மாரின் இரசாயன கழிவுகள் இவர்கள் பகுதியிலேயே கொட்டப்படுகின்றன.
கடல்களில் மீன் பிடிக்க முடியாது.
1 ஏக்கரிற்கு மேல் விவசாயநிலங்களை வைத்திருக்க முடியாது.
அவசர பந்தோபஸ்து சட்டத்தின் கீழ் 5 வருடங்கள் தடுத்து வைக்க முடியும்.
பெண்கள் அவர்கள் சம்மதம் இன்றி கட்டாய குடும்ப கட்டுப்ப்பாட்டிற்கு உள்ளாக்கப்படுவர்.
கற்பழிக்கப்பட்டாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ வைத்திய சான்றிதழை பெறுவது குற்றம்.
(இந்த கோரத்தை செய்தது மனிதர்கள்தானா? அல்ல மிருகங்கள்)
இராணுவ அதிகாரிகள் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த பெண்களை ட்ரக்குகளில் அள்ளி செல்வர். அது தொடர்பில் பொலிஸில் முறையிட்டால் முறைப்பாட்டாளர் பின்னர் பிணமாக்கபடுவார்.
பல ரோஹியான்கள் மியன்மார் இராணுவத்தில் கூலி வேலை செய்கிறார்கள். இவர்கள் ஆயுட்கால கொத்தடிமைகள்.
(சோகத்திலெல்லாம் பெரிய சோகம் சொந்த மண்ணை பிரியும் சோகமல்லவா?)
இவர்கள் இப்போது கண்ட இடத்தில் நாயை சுடுவது போல சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். வகைதொகையின்றி கற்பழிக்கப்படுகிறார்கள். உலக மீடியாக்கள் செய்தியாக சிலதை சொல்லி பலதை விட்டு விடுகின்றன. இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. அரபு நாடுகள் மௌனிக்கின்றன.
16.March.1997 - மண்டலாயின் முதல் மஸ்ஜித் தாக்கப்படுகிறது. 2000 க்கும் மேற்பட்ட பவுத்த கூட்டம் பள்ளிவாசலினுள் புகுந்து குரான் பிரதிகளை பற்ற வைக்கிறது. மஸ்ஜிதை நெருப்பிடுகிறது. பின்னர் உடனடியாக அந்த கூட்டம் முஸ்லிம் வர்த்தக மையங்களை சூறையாடுகிறது. அகப்பட்ட முஸ்லிம்களை போட்டு தாக்குகிறது. ஏன் கொலையும் செய்கிறது. வீடுகள் சூறையாடப்படுகின்றன. இளஞ்சிறுமியர் கற்பழிக்கப் படுகின்றனர். பெண்கள் தீ வைத்து கொளுத்தப்படுகின்றனர். இந்த அநியாயங்களை செய்தவர்கள் மியன்மாரிய இராணுவத்தினர் அல்ல. அங்குள்ள புத்த பிக்குகள். அவர்களே இந்த கொடூரங்களுக்கு தலைமை தாங்கினர். 100 பிக்குகள் கைது செய்ய்ப்பட்டு தேசிய வீரர்களாக பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர்.
(தொழும் பள்ளி வாசலைக் கூட கொலைகளமாக்கும் பவுத்தர்கள். மற்றுமொரு காத்தான்குடி)
12.February.2001 - இம்முறை கலவரத்திற்கு ஆளான பிரதேசம் சிட்வே, மற்றும் டாவுன்கு. கேக் விற்பனையில் ஈடுபட்ட ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கேக் வாங்கி சாப்பிட்ட புத்த பிக்குகள் கும்பல் பணம் தருவதற்கு மறுக்கிறது. அவளுடன் அங்க சேஷ்டையில் ஈடுபட முனைகிறது. ஆத்திரமடைந்த பெண் அவர்களை தாக்க முற்படுகிறாள். அவள் உறவினர் உதவிக்கு விரைந்து அவர்களை விரட்டியடிக்கிறார். சில மணி நேர இடைவெளியில் தலைமை நாயக்க தேரர் தலைமையில் பிக்குகள் வந்து கலகம் செய்கின்றனர். அவர்கள் பின்னால் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கின்றனர். பற்றி எரிகிறது. நகரம். கொலை. கொள்ளை. சித்திரவதை. கற்பழிப்பு என எதுவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிக்கிறது கும்பல். 200 முஸ்லிம்கள் வெறித்தனமாக கொல்லப்படுகின்றனர்.
(இந்த உடல்களை எல்லாம் கடலில் கலந்தால் கடலின் நிறம் கூட சிகப்பாக மாறி விடுமே!ரமலானில் நோன்பு வைத்த நிலையில் தாக்கப்பட்ட தாய் முஸ்லிம்கள்.)
15.May.2001 - தபூ பிரதேசம் கொளுந்து விட்டு எரிகிறது. முஸ்லிம்களிற்கு எதிரான துவேஷ பரப்புரைகள் பிக்குகளால் பன்சலைகளில் செய்யப்படுகின்றன. பன்சலை மணியை அடித்தவுடன் மக்கள் திரண்டு பிக்குகளை பாதுகாக்க முஸ்லிம்கள் மீது தாக்குதல் செய்யும் நிகழ்ச்சி நிரல் நாடு முழுதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தேவையான பொழுதுகளில் பன்சலை மணி அடிக்கப்படுகிறது. Han Tha மஸ்ஜிதுனுள் புகுந்த பவுத்த கூட்டம் அவர்களை அடித்து விரட்டுகிறது. பின்னர் பிக்குகள் கட்டளையிடுகின்றனர். ”முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்த முடியாது” என. அது சட்ட ரீதியற்ற ஆனால் அதிகாரமிக்க கட்டளையாக பர்மாவில் உருப்பெருகிறது.
(பர்மிர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த அளவு நெருக்கம் என்பதை விவரிக்கும் அந்த கால அராபிய எழுத்துருக்களைக் கொண்ட நாணயங்கள். இஸ்லாத்தின் அடிப்படையான 'ஏக இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முகமது நபி இறைவனின் தூதராக உள்ளார்கள்' என்ற வாசகம் அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது)
பர்மிய ஜீன்டா அரசினுள் ஆதிக்கமிக்க சக்தியாக உள்ளவர்கள் தேசியவாத சிந்தனைகொண்டவர்களும், Theravada Buddhism மதவாதிகளுமாவர். இவர்களே இந்த அநியாயங்களின் பின்னணியில் செயற்படுபவர்கள். மதவாதிகளினதும், தேசியவாதிகளினதும், இராணுவத்தினரினதும் ஒரு கூட்டு தாக்குதலையே ரோகீங்கிய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்.
2012 June. இராணுவ ஒத்துழைப்புடன் முஸ்லி்ம்களி்ற்கு எதிரான அநியாயங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. கூட்டு கொலை, கூட்டு கற்பழிப்பு, கூட்டு சூறையாடல் என ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் குழுக்களாக இவை நிகழ்த்தி முடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் உள்நுழைய முடியாத இரும்பு திரைக்கு பின்னால் பல கொலைகளங்கள் உள்ளன.
கொத்து கொத்தாக இங்கே கொல்லப்படுபவர்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் சகோதரர்கள். முஸ்லிம் சகோதரிகள். பொஸ்னியாவை நினைவிற்கு கொண்டு வரும் கூட்டு கற்பழிப்பிற்கு உள்ளாக்கப்படுபவர்கள் முஸ்லிம் சகோதரிகள். ஆனால் முஸ்லிம் உம்மா வேடிக்கை பார்க்கிறது. எகிப்தின் முர்ஸி பற்றி பெருமிதப்படும் இஹ்வான்கள் ஒரு அறிக்கையுடன் மியன்மாரை மறந்து விட்டனரா? கிலாபா கனவுகானும் ஹிஸ்பு தஹ்ரீர் தோழர்கள் ரத்தத்தினால் நிரம்பும் மியன்மார் பற்றி சிந்திக்க மாட்டார்களா. பேரீத்தம் பழ பெட்டிகளை அனுப்புதாலும், குர்பான் இறைச்சிகளை அனுப்புவதாலும் மியன்மரிற்கு உரியதை செய்து விட்டோம் என அரபு தேசங்கள் நிம்மதியடைய போகின்றனவா?
மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. இங்கு காஷ்மீரின் கண்ணீர், காஸாவின் பஞ்சம், செச்னியாவின் அவலம், ஆப்கானின் இரத்தம், முள்ளி வாய்க்காலின் கொடூரம், ஈராக்கின் சோகம் என எல்லாமே கலந்து நிற்கிறது. எல்லாம் நடந்து முடிந்த பின் “ த கில்லிங் ஃபீல்ட் ஆஃப் பர்மா” என டாக்குமெண்டரி தயாரிக்க பலர் உள்ளனர். ஆனால் கொல்பவர்களை தடுக்கவோ அல்லது கொல்லப்படுபவர்களை காக்கவோ யாரும் இல்லை. அவர்களுக்கு இறைவனைத் தவிர உதவ கூடியவர்கள் எவரும் இல்லை. அவர்களின் மரண ஓலங்கள் இன்றும் பல நாடுகளைக் கடந்தும் . நெடுந் தொலைவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சில வாரங்கள் முன்பு லண்டன் வந்திருந்த பர்மாவைச்சேர்ந்த நோபல் பரிசு பெற்ற ’’ஆங்க் சான் சூசீ ‘’ கூட ’’ரோகிங்னியா முஸ்லிம்கள் பர்மாவின் நிரந்தர பிரஜைகள் அல்ல’’ என்ற ரீதியில் தனது கருத்தை தெரிவித்தார். மேலும் ரோகிங்னியா முஸ்லிம்களின் படுகொலைகளை அவர் கண்டிக்கவுமில்லை,மாறாக நாட்டில் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை உருவாகியுள்ளது.மிகவும் நுணுக்கமாக கையாளா வேண்டும்’’ என்றுமே குறிப்பிட்டார். இந்த மக்களுக்கு ஆதரவு கரம் நீட்ட தற்போது உலகில் எந்த அரசும் தயாராக இல்லை.
தற்போதய பர்மிய முஸ்லிம்கள் எந்த அளவு பர்மாவுக்கு சொந்தக்காரர்கள் என்பதை விவரிக்கும் பர்மாவில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமிய நாணயம்
எனவே தோழர்களே! தோழிகளே! உங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை இந்த மக்களை நோக்கி திருப்பி விடுங்கள். ஜகாத் பணம், ஃபித்ரா பணம், அன்பளிப்பாக கொடுக்க நினைத்த பணம் அனைத்தையும் இந்த ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை போக்குவதாக இருக்கட்டும். பணம் கொழிக்கும் அரபு செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திலேயே மித மிஞ்சிய மயக்கத்தில் உள்ளனர். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நிலைமையை தலைகீழாக மாற்றி விடுவான் என்பதை மறந்து வாழ்கின்றனர்.
"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.
வரும் ரமலானில் இந்த மக்களுக்காக அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். சவுதியில் ஜூம்ஆ பிரசங்கத்தில் சிரிய முஸ்லிம்களுக்காகவும் பர்மிய முஸ்லிம்களுக்காகவும் அதிகமதிகம் பிரார்த்திக்கப்படுகிறது. உங்களின் பிரார்த்தனையில் இவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையான நிறுவனங்களை தொடர்பு கொண்டு அந்த மக்களுக்கு உங்களால் ஆன சிறு உதவிகளையும் செய்ய மறக்காதீர்கள்.
பர்மிய முஸ்லிம்களும், ஈழத்து தமிழர்களும், சிரிய முஸ்லிம்களும் தங்களின் சொந்த நாட்டு பிரச்னைகளை சுமுகமாக முடித்து எல்லா வளமும் பெற்று சுகமாக வாழ எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனிடம் இறைஞ்சி இந்த பதிவை முடிக்கிறேன்.
டிஸ்கி: இப்படி ஒரு பதிவை பதியச் சொல்லி வேண்டுகோள் விடுத்த குவைத்தில் உள்ள முபாரக்குக்கும், உடன் லிங்குகளை அனுப்பித் தந்த வாஞ்சூர் அண்ணனுக்கும், கைபர் தளத்துக்கும், விக்கி பீடியாவுக்கும் நன்றிகள்.
மேலும் விபரங்கள் அறிய
http://en.wikipedia.org/wiki/Rohingya_people
இந்த தளத்திற்கு சென்று உங்களின் கண்டனங்களையும் தெரிவியுங்கள்:
Subscribe to:
Posts (Atom)
















