Followers

Showing posts with label MUSLIMS. Show all posts
Showing posts with label MUSLIMS. Show all posts

Tuesday, January 26, 2016

கோவை புரட்சியில் தூக்கிலிடப்பட்ட 38 முஸ்லிம்கள்!



(படத்தில் உள்ளது இந்திய சுதந்திரத்திற்காக நாடு முழுவதும் பாடுபட்ட இந்திய இஸ்லாமிய தலைவர்கள்)

1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் திண்டுக்கல் காட்டுப் பகுதியிலிருந்து 5 புரட்சிப் படைப்பிரிவினர் ஆங்கில ராணுவ மையங்களைத் தாக்கிட கோவைக்குச் சென்று அதற்காக ஆயத்தமானார்கள். திப்பு சுல்தானின் மறைவுக்குப் பின் துவக்கப்பட்ட புரட்சியின் ஆரம்பக் கட்டம் இதுவாகும். எல்லா புரட்சியாளர்களும் ஆயுதம் தாங்கியிருந்தனர் அவர்களது பயணம் ரகசியமாக இருந்தது. திப்பு சுல்தான் படையில் போர் வீரர்களாகவும் தளபதிகளாகவும் பணியாற்றியவர்களும் விவசாயிகளும் இந்தப் புரட்சிப் படையில் இருந்தனர்.

இந்தப் புரட்சிப் படைக்கு ஹசம், அப்பாச்சிக் கவுண்டர், சாமையா ஆகியோர் தலைமையேற்று கோயம்பத்தூரை நோக்கி வழி நடத்திச் சென்றனர். தீரன் சின்னமலை இந்த வீரர்களுக்கு உரிய ஆணையை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.

அரவாக்குறிச்சியைச் சேர்ந்த கௌரவக் கவுண்டரும், ஓசூரைச் சேர்ந்த புத்தே முஹம்மதுவும் தாராபுரத்தை நோக்கி புரட்சிப் படையை வழி நடத்திச் சென்றனர்.

இச்சப்பட்டியைச் சேர்ந்த ருனவ்னுல்லா கான் தலைமையில் புரட்சிப் படையின் இரண்டாவது அணி காங்கேயத்தை நோக்கிச் சென்றது.

1800, ஜூன் 3ஆம் நாள் கோவை நகரின் முக்கிய இடங்களிலெல்லாம் ஆங்கிலேய எதிரிகளை தாக்குவதற்கு புரட்சிப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.

நன்கு ஆலோசிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த கோயம்புத்தூரின் ராணுவ கோட்டையை முற்றுகையிடும் திட்டம் ஆங்கிலேயருக்கு இரகசிய ஒற்றர்கள் மூலமாக தெரிந்தது. ஒரு சில இடங்களில் புரட்சிப் படைகள் தாக்குதல் நடத்தின. மற்ற பகுதிகளில் புரட்சிப் படையினர் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டனர்.

கோவைப் புரட்சித் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தேசியப் புரட்சிவாதிகளுக்கு உயர்ந்த அளவு தண்டனை வழங்குமாறும் பிடிபட்டவர்கள் அனைவரையும் இராணுவ முறைப்படி ஒரே விசாரணை நடத்தி அதில் எது அதிக அளவு தண்டனை என்று கலெக்டர் கருதுகிறாரோ அந்த தண்டனையையோ அல்லது மரண தண்டனையோ உடனடியாக வழங்கிடுமாறு கவர்னர் எட்வர்ட் கிளைவ் சேலம் கலெக்டருக்கு ஆணை பிறப்பித்தார். கவர்னரின் ஆணைக்கினங்க சேலம் மாவட்டக் கலெக்டர் வில்லியம் மாக்ஸிலியார்டு கோவைப் புரட்சியாளர்கள் 42 பேர்களை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்த 42 பேரில் 38 பேர் முஸ்லிம் வீரர்கள். 4 பேர் இந்து வீரர்கள். அனைவருக்கும் ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது.

பல பகுதி மக்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்பதற்காக தாராபுரத்தில் 8 பேரையும் சத்திய மங்கலத்தில் 7 பேரையும் கோயம்புத்தூரில் 6 பேரையும் மற்றவர்களைப் பல்வேறு புரட்சி மையங்களிலும் பொது இடங்களிலும் வைத்து காட்டுமிராண்டித் தனமாக தூக்கிலிட்டுக் கொன்றனர் ஆங்கிலேயர்கள்.

கோவைப் புரட்சியில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட முஸ்லிம்கள்:

1.ஷம்னஸ்கான்

2.மொஹைதீன் கான்

3.தாராபுரம் சையது இமாம்

4.மான் கான்

5.பீர் சாஹிப்

6.ஷேக் மியான்

7.கோவை கலீஃபா அமீர்தான்

8.ருனா முஸ்டாஹ் கான்

9.குலாம் பாய் ஹைதர் கான்

10.ஜமாஷ் கான் அலி சாஹிப்

11.கொடிக்கால் ஷேக் அலி

12.செவான் கான்

13.அலி சாஹிப்

14.முடா சாஹிப்

15.முஹம்மது சாஹிப்

16.மிர் கமருத்தீன் கான்

17.ஷேக் மொஹைதீன்

18.கமருத்தீன்

19.சோலை மலை ஜமீன்தார்

20.ஃபதே முஹம்மது

21.ஷேக் மதார்

22.ஷேக் புத்தீன்

23.குலாம் உசேன் ஷேக் அலி

24.பீர் முஹம்மது

25.குலாம் அலி

26.சோட்டா அப்துல் காதர்

27.முஹம்மது ஷெரீஃப்

28.ஷேக் மீரா

29.ஷேக் முஹம்மது திவாஹர்

30.பீர் முங்கப்பா அலி

31.சையது மொஹர்தீன்

32.ஹைதர்கான்

33.மொஹிர்தீன் கான்

34.ஷேக் முஹம்மது

35.தீதார் ஷேக் இமாம்

36.பீனா ஷேக் மியான்

37.ஓசூர் புத்தே முஹம்மது

38.ருவைனுல்லா கான்

தகவல் உதவி
விடியல் வெள்ளி
ஆகஸ்ட்-செப்டம்பர்-2008

இத்தனை பேர் விடுதலைப் போரில் பொதுவில் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். நமது வரலாற்று பாடநூல்களில் இந்த செய்தியை நாம் என்றாவது பார்த்திருக்கிறோமா?

'நாங்கள் இனி வெள்ளையருக்கு எதிராக போராட மாட்டோம்' என்று மன்னிப்பு கடிதம்எழுதி கொடுத்தவர்கள் எல்லாம் 'விடுதலை போராட்ட வீரர்கள்' என்று நாட்டில் வலம் வருகின்றனர். உண்மையிலேயே இந்த நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை இழந்த சமுதாயம் துரோகி பட்டம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாக பல ஆண்டுகளாக சிறையில் உள்ளது.

நமது நாட்டின் குடியரசு தினமான இன்றைய தினத்தில் தூக்கிலிடப்பட்ட அந்த வீர புருஷர்களை நினைவு கூர்வோம்.







Saturday, January 02, 2016

‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ - மும்பை முஸ்லிம்கள்





புத்தாண்டின் தீர்மானமாக, ‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ என்ற பிரச்சாரத்தை முஸ்லிம் அமைப்புகள் தொடங்கி உள்ளன.

சிரியாவில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இந்திய இளைஞர்கள் சிலரும் சேர்ந்துள்ளதாக தகவல் கள் வெளிவந்துள்ளன. மேலும் இணையதளங்களில் ஆள் சேர்க்க மூளை சலவை செய்வதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், புத்தாண்டின் புதிய தீர்மான மாக மும்பையைச் சேர்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘சஹாஸ் பவுண்டேஷன்’ மற்றும் ‘உருது மார்க்கஸ்’ ஆகியவை இணைந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின்போது, ஐஎஸ் அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வதைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இணையதளம் மூலம் ஐஎஸ் அமைப்பில் சேர முயற்சிப்பதாக சந்தேகப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கும்.

தெற்கு மும்பை பெஹண்டி பஜார் அருகில் உள்ள இமாம்வாடா முனிசிபல் உருது பள்ளியில் இந்த பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைக் கப்பட்டது. இதுகுறித்து சஹாஸ் பவுண்டேஷன் தலைவரும் பிரச்சாரத்தை தொடங்கிய முக்கிய காரண கர்த்தாவுமான சயத் பர்கான் கூறும்போது, “இந்த புத்தாண்டில் ஐஎஸ் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதை விட வேறு சிறந்த தீர்மானம் எதுவும் இருக்க முடியாது. ஐஎஸ் அமைப்பின் பொய்யான வார்த்தைகளில் மயங்கி விடாதீர்கள் என்று முஸ்லிம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்றார்.

உருது மார்க்கஸ் அமைப்பின் தலைவர் ஜுபைர் ஆஸ்மி கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகள் முக்கிய இணையதளம் மூலம்தான் ஆட்களை தேடுகின்றனர். இணைய தளத்தை பயன்படுத்தும் போது இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். இஸ்லாம் என்ற பெயரில் அப்பாவி மக்களை படுகொலை செய்யத் தூண்டுவதை நம்ப வேண்டாம். ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்கள் இஸ்லாத்துக்கு எதிரானது, மனிதநேயமற்றது என்று பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளோம்” என்றார்.

மேலும் 500 பேர் கொண்ட இஸ்லாமிய இளைஞர்கள் 'குடித்து விட்டு பைக் ஓட்டாதீர்கள்' 'புது வருடத்தை அமைதியாக கொண்டாடுங்கள்' என்ற பதாகைகளோடு மும்பையில் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தனர். பொது மக்களால் இந்த விழிப்புணர்வு பேரணி மிகுந்த வரவேற்பை பெற்றது.

Mumbai : "Sahas Foundation President Sayed Furqan Ahmed & Team Org.500 People Silent Human Chain & Bike Rally " for The Don't Drink and Drive.

It will also involve taking preventative steps to prevent Muslim youths from becoming radicalised.

The campaign is a joint initiative of Mumbai-based NGO Sahas Foundation and think-tank Urdu Markaz.

Through the campaign, a volunteer task-force has been created; these volunteers will identify and counsel potential recruits of ISIS, or Islamic State (IS), who may have fallen for the terror group’s online propaganda and its “fake jihad”.

http://www.thebetterindia.com/41579/mumbai-muslims-against-isis-campaign/

http://timesofindia.indiatimes.com/city/mumbai/Muslim-group-ushers-in-2016-by-launching-campaign-against-ISIS/articleshow/50410022.cms

http://tamil.thehindu.com/india/2016-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/article8061053.ece?homepage=true&relartwiz=true

http://tamil.thehindu.com/india/2016-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9/article8061053.ece?homepage=true&relartwiz=true

Sunday, December 20, 2015

இந்து சகோதரர் விகடனுக்கு அளித்த நெகிழ வைத்த பேட்டி!

இந்து சகோதரர் விகடனுக்கு அளித்த நெகிழ வைத்த பேட்டி!'எங்க ஏரியா சென்னை கொருக்குப் பேட்டைங்க... யாருமே உதவிக்கு வரல... எ...

Posted by Nazeer Ahamed on Sunday, December 20, 2015

இந்து சகோதரர் விகடனுக்கு அளித்த நெகிழ வைத்த பேட்டி!

'எங்க ஏரியா சென்னை கொருக்குப் பேட்டைங்க... யாருமே உதவிக்கு வரல... எல்லா பக்கமும் தண்ணிதான்... நான் ஒரு இந்து... ஆனால் இங்க உதவிக்கு என்று வந்ததில் 99 சதவீதம் இஸ்லாமியர்கள்தான்.... நீங்க ஷூட் பண்ணுன இடத்துல எல்லாம் அந்த காட்சியைத்தான் பார்த்துருப்பீங்க... அந்த கம்யூனிட்டிலேருந்து யாராவது பப்ளிக்கா வந்து நின்னா பாக்க டீஷன்டா இருக்கும்'

ஆனந்த விகடனுக்கு ஒரு இந்து சகோதரர் கொடுத்த பேட்டிதான் இது. உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். நாங்கள் முக்கிய பதவிக்கு வருவதை விட முக்கியத்துவம் வாய்ந்தது தற்போது பேயாட்சி ஆண்டு கொண்டிருக்கும் இந்துத்வாவை மத்தியிலிருந்து தூக்க வேண்டும். அதற்கு பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவை திரட்டுங்கள். அதுதான் தற்போது நம் முன் உள்ள தலையாய கடமை.

இறைவா! உலக முடிவு நாள் வரை இதே போன்ற சகோதரத்துவத்தை எனது நாட்டிலும் உலகமெங்கிலும் தழைத்தோங்கச் செய்வாயாக!

Saturday, April 25, 2015

நபி வழியில் உடலை அடக்கம் செய்ய மறுத்த நிர்வாகம்!













24-04-2015 அன்று இரவு தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள செக்கடித் தெருவில் சகோதரர் அப்பாஸ் அவர்களின் தாயார் மும்தாஜ் அம்மாள் அவர்கள் சுகவீனம் காரணமாக இறந்து விட்டார். மறுநாள் காலையில் உடலை அடக்கம் செய்ய வேண்டும். இறந்தவர் உயிரோடு இருக்கும் போது 'தன்னை நபி வழியில் அடக்கம் செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார். சகோதரர் அப்பாஸ் ஓரிறைக் கொள்கையை (ஏகத்துவம்) ஏற்றுக் கொண்டிருப்பதால் தனது தாயாருக்கு தானே தொழ வைப்பதாக சொல்லியுள்ளார். இதனை ராஜகிரி பெரிய பள்ளி நிர்வாகிகள் ஒத்துக் கொள்ளவில்லை. பள்ளியின் இமாம் தொழ வைத்தால்தான் மையவாடி (கபுர்ஸ்தான்) யில் அடக்கம் செய்ய அனுமதிப்போம் என்பது பள்ளி நிர்வாகிகளின் வாதம்.

தகடு, தாயத்து, மவுலூது, கபுர் வணக்கம், ஃபாத்திஹாக்கள் என்று இணை வைப்பிலும் மூடப்பழக்கத்திலும் மூழ்கி திளைத்துக் கொண்டு அதனை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை பின்பற்றி நான் எப்படி தொழுவது? என்பது சகோ அப்பாஸின் வாதம். எனது தாயாருக்கு கடைசி மரியாதையான பிரார்த்தனை தொழுகையை என்னை தொழ வைக்க அனுமதியுங்கள் என்று அப்பாஸ் அலி பிடிவாதமாக இருக்க பள்ளி நிர்வாகிகளும் அனுமதி தர மாட்டோம் என்று சொல்ல விஷயம் காவல் துறை வரை சென்று விட்டது. பிறகென்ன... ராஜகிரி கடைத் தெரு முழுக்க காவல்துறையினர்தான். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். பிறகு காவல் துறை ஆய்வாளர், அரசு அதிகாரிகள் முன்னிலையில் பள்ளி அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. இரண்டு பக்கத்திலும் ஐந்து ஐந்து பேராக அமர்ந்து காரசாரமான பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதற்கிடையில் நேரமாகிக் கொண்டே செல்வதால் சகோ அப்பாஸ் அவர்களின் வீட்டில் எல்லோரும் குழுமி தொழுகை நடத்த தயாரானோம். இறந்து போன தனது தாயார் யாருக்கும் கடன் பாக்கி வைத்திருந்தால் அதற்கு தான் பொறுப்பேற்பதாக சகோ அப்பாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு தனது தாயாருக்காக பிரார்த்தனை தொழுகையை சகோதரர் அப்பாஸ் அவர்களே நடத்தினார். அதிக எண்ணிக்கையில் மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்தவுடன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு அடக்கம் செய்ய மையவாடியை நோக்கி பயணித்தோம். மையவாடிக்கருகில் உடலை கொண்டு வந்தவுடன் 'பேச்சு வார்த்தை முடியவில்லை. அதற்குள் உடலை ஏன் கொண்டு வந்தீர்கள்' என்று காவல் துறை ஆட்சேபணை தெரிவிக்கவே அனைவரும் உடலை எடுத்துக் கொண்டு ராஜகிரி மெயின் ரோட்டுக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 நிமிடத்துக்கு போக்குவரத்து தடைபட்டது. உடன் காவல் துறையினர் குறுக்கிட்டு 'உடலை அடக்க நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். தயவு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டதற்கினங்க உடலை ஓரமாக வைத்து போக்குவத்துக்கு வழி விட்டனர்.

இதன்பின் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்குப் பிறகு 'மூன்று மாதத்துக்குள் அடக்கத் தளம் உங்களுக்கு தனியாக ஒதுக்கித் தருகிறோம்' என்ற உத்தரவாதத்தின் பேரில் உடலை அடக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தந்தது. அடக்கத்தளத்தின் பூட்டும் திறக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு மணி நேரத்தில் குழி வெட்டி முடிக்கப்பட்டு சகோ அப்பாஸ் விரும்பியபடி நபி வழியில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நின்ற அனைவரும் அவரின் தாயாருக்காக இறைவனிடம் பிரார்த்தித்தவர்களாக களைந்து சென்றோம்.

பள்ளி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகள்...

வட்டி வாங்கி வாழ்வை ஓட்டுபவன், விபசாரம் செய்பவன், பள்ளி வாசல் சொத்தை திருடி தின்பவன், பங்காளிக்கு துரோகம் செய்பவன், சாராயம் குடிப்பவன் என்று இவர்களை அடக்கம் பண்ணுவதற்கு உங்கள் நிர்வாகம் எந்த தடையும் விதிப்பதில்லை. ஆனால் நபி அவர்களும் குர்ஆனும் காட்டித் தந்த வழியில் ஒருவன் வாழ முயற்சித்தால் அவர்களுக்கு உங்களால் முடிந்த தொல்லைகளை தருகிறீர்கள். தாயை இழந்து ஏற்கெனவே சோகத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கையாளனை மேலும் மன உளைச்சலைக் கொடுத்து சந்தோஷப்படுகிறீர்கள். இறைவனுக்கு பயந்து கொள்ளுங்கள். ஒரு நரம்பை இறைவன் பிடித்து இழுத்தான் என்றால் உங்கள் கதி அதோ கதி தான். இறைவனின் கோபம் மிகக் கடுமையானது. சிறிதாவது மார்க்கத்தை விளங்க முயற்சி செய்யுங்கள். இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக!

Wednesday, February 11, 2015

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் சுட்டு கொலை!







அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. பரகத் வயது 23, அவரது மனைவி யூசுர் சாலிஹா வயது 21, தங்கை ரிஜான் அபு சாலிஹா வயது 19 இந்த மூன்று இளம் தளிர்களை வீட்டீன் உள்ளே வந்து தலையில் சுட்டு கொன்றிருக்கிறான் ஒரு கொடியவன். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 46 வயதான ஸ்டிபன் ஹீக்ஸ் என்று போலிஸாரால் அறியப்பட்டுள்ளான்.

இந்த மூன்று பாலஸ்தீனியர்களுமே எப்போதும் சமூக சேவைகளில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இந்த குடும்பம் பொது மக்களுக்கு சாரிட்டி மூலம் உணவு விநியோகத்திலும் அதிகம் ஈடுபடும். பாலஸ்தீனிலும் ஒரு மருத்துவ மனையை நிர்வகிக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பரகத் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார்.அவரது மனைவியும் கல்லூரியில் படித்து வரும் மாணவி. இரண்டு மாதம் முன்பு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. வாழ வேண்டிய இந்த இளம் குருத்துகளை பாவிகள் அழித்து விட்டனர்.

இவர் நடத்தி வரும் சமூக வலை தளம் ட்விட்டரில் ஒரு வாரம் முன்பு அவர் பதிந்த ஒரு செய்தி:

'பாலஸ்தீனியர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் 'யூதர்களை கொல்வோம்' என்று ஒரு சாராரும் அவரவர் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது மிகவும் தவறான அணுகு முறை. இது போன்ற கொலைகளால் எந்த பிரச்னையும் தீரப் போவதில்லை.' என்று ட்விட் செய்துள்ளார்.

இவர்கள் சமூக சேவை செய்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த மூன்று பேரையும் கொல்வதற்கு இது போதும் இஸ்ரேலியர்களுக்கு.

வாழ வேண்டிய இளம் தளிர்கள் இன்று கருகி விட்டன. இவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய நாமும் பிரார்திப்போம்.

தகவல் உதவி
INDEPENDENT.CO/NEWS
11-02-2015

Saturday, January 31, 2015

500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அடக்கமும்!



Nearly 500 Chinese workers in Saudi Arabia converted to Islam at the same time after they were touched by the “simplicity” of the funeral of late King Abdullah bin Abdul Aziz, a newspaper in the Gulf Kingdom reported on Friday.

A YouTube film published by Ajel Arabic language daily showed the 500 men gathering near their company offices in the eastern town of Jubail and receiving instructions from Saudi religious authorities on how to embrace the new religion.

“They all became Muslims after chanted through loudspeakers ‘there is no God but Allah, Mohammed (PBUH) is the messenger of Allah,” it said

போன வாரம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான மன்னர் அப்துல்லா இறந்தவுடன் அவரை மிக எளிமையான மண் தரையில் எந்த கோபுரமும் கட்டாமல் அடக்கம் பண்ணியதை உலகெங்கும் பார்த்து பரவசப்பட்டோம். சவுதியின் ஜூபைல் ஏரியாவில் ஒரு பெரும் கம்பெனியில் வேலை செய்து வரும் 500க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் இந்த நிகழ்வை கண்டு 'இப்படி எளிமையான அடக்கம் இஸ்லாத்திலா? அதனை இந்த காலத்திலும் நடைமுறைபடுத்த முடியுமா?' என்று வியந்தனர். கம்யூனிஸ சீன அரசு பல செய்திகளை அந்த நாட்டு மக்களுக்கு ஒளிபரப்புவதில்லை. ஆனால் சவுதியில் உழைப்பு தேடி வந்த சீனர்கள் இந்த செய்திகளை பார்த்து தாங்கள் அனைவரும் இஸ்லாத்தில் இணைவதாக அறிவிப்பு செய்தனர். அதன்படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒட்டு மொத்தமாக ஐநூறு பேரும் தங்களின் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆஜல் அரபிக் தினசரி (ajel arabic daily) இந்த செய்தியை யுட்யூபிலும் வெளியிட்டுள்ளது. இஸ்லாத்தை ஏற்ற இந்த ஐநூறு பேரும் ஒலி வாங்கி முன்பாக ஒட்டு மொத்த குரலில் 'இறைவன் ஒருவனே! முகமது அந்த இறைவனின் தூதராக உள்ளார்' என்று உரத்த குரலில் கூறினர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
gulf kingdom
ajel arabic daily
31-01-2015

http://www.emirates247.com/videos/news/video-500-chinese-convert-to-islam-after-saudi-king-s-funeral-2015-01-30-1.578735

Saturday, January 24, 2015

பெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்கி.....







2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார். மொராக்கோ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனது பெயரை ஆயிஷா என்றும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். முன்பு அரை குறை ஆடையோடு பல ஃபேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார். இஸ்லாத்தை ஏற்றதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் முழு உடம்பையும் மறைக்கும் வண்ணம் உடைகளை தேர்வு செய்து கலந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தற்குள்ளாக்குகிறது. முன்பு மது அருந்தியவர் இன்று வெறும் சோடாக்களை மட்டுமே குடிக்கிறாராம். பன்றி மாமிசம் சாப்பிடுவதையும் விட்டு விட்டாராம்.

பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர் மொமுத்து டயா வை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு முன்பு தனது கணவர் இஸ்லாமிய பெயர் மட்டும் போதாது அதன்படி வாழவும் வேண்டும் என்று கட்டளையிட்டார். அதையே நானும் பின்பற்றுகிறேன் என்கிறார் ஆயிஷா.

கல்லூரியில் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பை மேலும் தொடர்கிறார். 2016ல் இவரது படிப்பு முடிவுறும். இவரது மன மாற்றத்துக்கு வழக்கம் போல் பெல்ஜிய நிற வெறியர்கள் இவரை தூற்ற ஆரம்பித்துள்ளனர். 'உனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு கண்களின் மஞ்சள் நிறம் மாறிவிடும், முடியின் நிறமும் தோலின் நிறமும் மாறும். இனி ஐரோப்பியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள உன்னால் முடியாது. நீ ஒரு பிசாசு' என்றெல்லாம் அர்ச்சனைகள் தொடங்கி விட்டன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் தனக்கு கிடைத்த அழகிய வாழ்வு முறைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறார் ஆயிஷா. இவரது அழகுக்கு வெள்ளை நிறத்து ஐரோப்பியர்கள் எத்தனையோ பேர் கிடைப்பர். கருப்பராக இருந்தாலும் அவலட்சணமாக இருந்தாலும் இஸ்லாத்தை வாழ்வியலாகக் கொண்ட ஒருவரே தனக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவெடுத்து இன்று இந்த ஆப்ரிக்கரை கைப்பிடித்துள்ளார் இந்த அழகி.

கருப்பும் வெள்ளையும் இன்று இஸ்லாத்தால் ஒன்றாகியுள்ளது. நிற வெறி, மொழி வெறி, கலாசார வெறி அனைத்தும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. இனி இந்த இருவரின் கலாசாரம் முகமது நபி காட்டித் தந்த வழிமுறையாக இருக்கும். இந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.



Friday, January 23, 2015

மன்னர் அப்துல்லாவின் நிரந்தர பயணக் காட்சிகள்!



(இறந்தவரின் பிரார்த்தனை தொழுகைக்காக உடல் பள்ளி வாசலுக்கு எடுத்து வரப்படுகிறது).



(தொழுகை முடிந்தவுடன் அடக்கம் செய்ய உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.)



உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான மன்னர் அப்துல்லாவின் உடல் ரியாத் மன்ஃபுஹா என்ற இடத்தில் உள்ள பொது மையவாடியில் வெறும் கூழாங் கற்களைக் கொண்டும் மண்ணைக் கொண்டும் உடல் மூடப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் மழை காற்றால் இவையும் சென்று விடும். இதுதான் இஸ்லாம் காட்டிய வழிமுறை. இதே நேரத்தில் நமது மெரீனா பீச்சையும், டெல்லி ராஜ்காட்டையும் தலைவர்களின் சமாதிகளால் நிரம்பி வழிவதை நினைத்துப் பார்த்தேன்.

மன்னர் இறந்ததற்கான எந்த துக்க ஊர்வலங்களும் இல்லை. கொடிக் கம்பம் துக்கத்தால் அரைக் கம்பத்தில் பறக்கவில்லை. தொழிற் கூடங்கள் துக்கத்தால் மூடச் சொல்லி அரசால் நிர்பந்திக்கப்படவில்லை. வழக்கம் போல் எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.

மன்னர் அப்துல்லா தனது வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை மன்னித்து இறைவன் அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!

நாகூர் தர்ஹாவும் ஏர்வாடி தர்ஹாவும் கதி என்று அதுதான் இஸ்லாம் என்று பாவங்களை சுமந்து வரும் நமது சகோதரர்கள் இது போன்ற சவ அடக்கங்களை பார்த்து தங்களை திருத்திக் கொள்வார்களாக!

படங்கள் உதவி:
அல்ஜஜீரா
23-01-2015

Wednesday, January 21, 2015

ஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்!



தரீனா ஷகீல் - 25 வயது பிரிட்டிஷ் பிரஜை. கணவனோடு சில பிரச்னைகளால் சில காலம் தாய் வீட்டில் வாழ்ந்துள்ளார். கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன அமைதியிழந்துள்ளார். அந்த நேரத்தில் சில கிறுக்கர்கள் ஜிஹாத்துக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவை செய்து இவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர தூண்டியுள்ளனர். உலகம் அறியாத இந்த பெண் கள்ள முல்லாக்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து சுற்றுலா செல்கிறேன் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு சிரியா சென்றுள்ளார்.

அங்கு சென்றவுடன்தான் போர்களம் எப்படி இருக்கும் என்று தரினாவுக்கு தெரிய வருகிறது. தண்ணீருக்கு ரேஷன், உணவுக்கு ரேஷன், மின்சாரம் கிடையாது: குளிருக்கு சரியான போர்வையும் கிடையாது: திடீர் திடீரென்று துப்பாக்கி தோட்டாக்களின் சப்தம்: வெளியில் எங்கும் பிணக் குவியல்: ரத்த வாடை: கை கால்கள் போன மனிதர்கள் என்று இவரது வாழ்க்கையே மாறிப் போனது. சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை இவருக்கு கசக்க ஆரம்பித்தது.

இனி இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்று எண்ணி பல தடைகளையும் தாண்டி எப்படியோ இந்த கும்பலிடமிருந்து தப்பி துருக்கி வந்து சேர்ந்து விட்டார். அங்கிருந்து அவரது தந்தையை தொடர்பு கொண்டு அழுது கொண்டே 'என்னை எப்படியாவது திரும்பவும் பிரிட்டன் கொண்டு சென்று விடுங்கள்' என்று சொல்லியுள்ளார். தற்போது தந்தையின் வரவுக்காக துருக்கி அகதி முகாமல் தங்கியுள்ளார். தந்தையோடும் கணவனோடும் ஒன்றாகி குழந்தையை சிறந்த முறையில் வளர்த்து சிறந்த இஸ்லாமிய பெண்ணாக இந்த சகோதரி வாழ நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015

இஸ்லாம் இந்த பெண்ணுக்கு ஜிஹாதை கடமையாக்கவில்லை. முதலில் இந்த பெண் தனது கணவனோ அல்லது தந்தையோ, சகோதரனோ இல்லாமல் கைக்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறியதே முதலில் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. அடுத்து போரில் சென்று போரிட ஆண்களுக்குத்தான் கடமையுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் அனைத்து செயல்களும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களே. இவர்கள் அமெரிக்காவாலோ அல்லது இஸ்ரேலின் யூதர்களின் கைப்பாவையாகவோ செயல்படுவதாகத்தான் உலக முஸ்லிம்கள் நம்புகின்றனர். அப்பாவி மக்களை கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்குவதும், தோல்வியடைந்த பகுதிகளில் உள்ள பெண்களை கொடுமைபடுத்துவதும் இஸ்லாம் காட்டித் தந்த வழியா? எங்கிருந்து இதனை படித்தார்கள்? அநியாயத்துக்காக போரிட ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளதே தவிர தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை எங்கிருந்து கற்றார்கள்? தமிழகத்திலும் யாராவது உங்களிடம் வந்து ஜிஹாதுக்கு ஆள் சேர்ப்பதாக சொன்னால் உடன் காவல் துறை வசம் ஒப்படையுங்கள். ஏனெனில் இது போன்ற நபர்கள்தான் இஸ்லாத்தின் முதல் எதிரிகள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க மேற்குலகமும், யூதர்களும் இணைந்து ஏற்படுத்திய அமைப்புகளே ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம். எனவே இந்த தீவிரவாத கும்பல்களிடமிருந்து இஸ்லாமிய இளைஞர்களை மீட்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இதனை தீவிர பிரசாரத்தின் மூலமே நம்மால் சாதிக்க முடியும்.

Tuesday, January 20, 2015

ஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது!



The New York Times: A video posted on Tuesday, purportedly by the Islamic State extremist group, shows a militant threatening to kill two Japanese hostages unless the government paid a ransom of $200 million.

KENJI GOTO, HARUNA YUKAWA என்ற இரண்டு ஜப்பானியர்களை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஜப்பானிய அரசிடம் 200 மில்லியன் டாலர் பணயத் தொகையாக கேட்டுள்ளார்களாம். தரவில்லை என்றால் இவர்களை கொன்று விடுவார்களாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் மொசாத்தின் கட்டளைகளை செயல்படுத்தி வரும் இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

இவ்வாறு பணயத் தொகை கேட்பதற்கோ, அல்லது அப்பாவிகளான இந்த இருவரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் காட்ட முடியுமா இந்த காட்டு மிராண்டிகளால். ஜப்பான் எப்போதுமே நடுநிலை பேணக் கூடிய நாடு. அவர்களையும் இஸ்லாத்துக்கு எதிரான களத்தில் இறக்கி விட மொசாத் தேர்ந்தெடுத்த வழியே இந்த இரண்டு ஜப்பானியர்கள் கைதும். பணத்தை தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்கி ஜப்பானிய மக்களை இஸ்லாத்துக்கு எதிராக திருப்ப முயற்சிப்பார்கள். முன்பு பிரிட்டிஷ், அமெரிக்க கைதிகளையும் இது போலவே கொன்றனர்.

வழக்கம் போல் யூதர்கள் இதிலும் தோல்வியையே அடைவர். பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி

NEWYORK TIMES
20-01-2015

Monday, January 19, 2015

ஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்!



கேண்டிட் கேமரா என்ற நிகழ்ச்சியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மறைவான கேமராவை வைத்து பலரையும் சிரிக்க வைக்க நடத்தப்படும் நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சியை துபாயில் இங்கிலாந்தைச் சேர்ந்த படக் குழுவினர் சமீபத்தில் நடத்தி ஆய்வு செய்தனர். பணத்தோடு கூடிய தனது மணி பர்ஸை வேண்டுமென்றே தவற விட்டு அதற்கு மக்களின் ரியாக்ஷன் எவ்வாறு இருக்கிறது என்று நோட்டமிட்டனர்.

ஆச்சரியமாக.... பர்ஸை பார்த்த அனைவரும் அந்த நபரை கூப்பிட்டு ஒப்படைத்தததை இந்த யுட்யூபில் பார்த்து மகிழுங்கள். இஸ்லாமிய சட்டங்களினால் என்ன நன்மை என்று கேட்பவர்களுக்கு மிக அழகாக இந்த ஆவணப் படம் பதிலளிக்கிறது.

பணக்கார துபாய் ஷேக்குகள் பர்ஸை திருப்பி கொடுப்பது ஆச்சரியமில்லைதான். ஆனால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வரும் பாகிஸ்தானிய கூலிகளும் வழியில் கிடந்த மணி பர்ஸை உரியவரை அழைத்து திருப்பி கொடுத்ததை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியத்தோடு பார்க்கிறார். பர்ஸை எடுத்துக் கொடுத்ததற்காக அன்பளிப்பாக பணம் கொடுக்கிறார். அதனையும் 'நன்றி' என்று சொல்லி விட்டு வாங்காமல் சென்று விடுகின்றனர் ஏழை முஸ்லிம்கள்.

துபாயில் டிரேட் சென்டர் பகுதி, பர் துபாய், டவுன் டவுன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 முறை பர்சை தவற விட்டு சோதனை செய்யப்பட்டு அத்தனை முறையும் அதனை எடுத்தவர்கள் திருப்பி அளித்தனர்.

இது குறித்து பர்சை தவற விடுவதாக நடித்த டேனியல் ஜர்விஸ் கூறியதாவது, எடுத்த பொருளை நேர்மையாக திருப்பி தருவது என்பது அருமையான தருணமாகும். பர்சை எடுத்த அனைவரும் நேர்மையாக நடந்து கொண்டனர். அரபு நாடுகளில் உள்ள மக்களின் நேர்மையை எடுத்துகாட்டுவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.

பணத்துக்கு ஆசைப் படாதவன் எவனுமே இல்லை. எந்த வழியில் வந்தாலும் ஓகே என்று சொல்பவர்கள் தான் உலகில் அதிகம். நமது இறப்புக்குப் பிறகு இந்த பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினோம் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்ற பயம் ஒருவனுக்கு இருந்தால் எத்தனை லட்சம் தவறான வழியில் கிடைத்தாலும் அதனை ஒரு உண்மை முஸ்லிம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இதனையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வளவு கடுமையான சட்டங்கள் போட்டும் திருடியே வாழ்க்கையை ஓட்டுபவர்கள் இந்நாடுகளில் ஒரு சிலர் இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் இவ்வாறு உள்ளவர்கள் மிக சொற்பமே.

இதற்கு வந்த சில பின்னூட்டங்களைப் பார்போம். அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்களே....

Nick Ronaldo
1 week ago

In Muslim Religion, if they caught you stealing they cut your hands. Allah Akbar!

-----------------------------

dzY_Scorpio
1 week ago

I'm a white english male and I have been exposed to the medias misconceptions of Muslims and I would like to say Islam and Muslims are the most kind hearted people in the world.

-----------------------------

Alex
1 week ago (edited)

Dubai has one of the lowest crime rates anywhere in the world.
You can leave your keys in the ignition and go away for like an hour, and no-one would steal your car.
Then you get all these retarded racist English scumbags who claim 'Islam is bad'. Yet, I guarantee you if he had have dropped his wallet in front of one of those racist cunts they would have stolen it.

----------------------------
·
sasoattia
1 week ago

And people say arabs/muslims are terrorists.....

------------------------------
·
Jo C
1 week ago

The same people that claim all muslims are "terrorist" are the same people that label all blacks as crooks and thieves. They let the media paint an image for them and follow it blindly. Judging their fellow man simply by how they look. How pathetic.

.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வேலையே!



ஜேக் லிண்ட்ப்ளாட் (jack lindblad) கலிபோர்னியா செனட் சபையின் போட்டியாளர். க்ரீன் பார்ட்டியைச் சேர்ந்தவர். இவர் ப்ரஸ் டிவிக்கு சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதல் சம்பந்தமாக கொடுத்த பேட்டியைப் பார்போம்.

'இது மதம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வே அல்ல. அமெரிக்காவும் மொசாத்தும் சேர்ந்து செய்த திட்டமிட்ட படுகொலை. பெஞ்சமின் நெதன்யாஹூ தனது பலத்தை ஐரோப்பாவில் நிலை நிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகளில் ஒன்றே இந்த திட்டமிட்ட படுகொலைகள். நெதன்யாஹூவின் கைப்பிடிக்குள் முழு ஐரோப்பாவும் வர வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே இந்த படுகொலைகள்.

துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் உடன் மொசாத் ஏஜண்ட் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி அந்த அலுவலகத்தின் இரண்டாவது கேட் வழியாக கச்சிதமாக திட்டமிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஒரு தடயத்தையும் விடாது எடுத்துச் சென்ற மொசாத் குறிப்பிட்ட நபரின் பாஸ் போர்டை மட்டும் தவற விடுமா? அது வேண்டுமென்றே முஸ்லிம்களின் மேல் பழி போட தவற விடப்பட்டது.' என்று பொரிந்து தள்ளியுள்ளார். இவர் உயிருக்கும் ஆபத்து வரலாம்.

மொசாத் யூதர்களை இவ்வாறு கொல்லுமா? என்று கேட்கலாம். தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள இவர்கள் யூதர்களையும் பலியிட தயங்க மாட்டார்கள். முனிச் ஒலிம்பிக்கிலும் இதே போல் மொசாத் நடந்து கொண்டதை நாம் மறந்து விட முடியாது. சார்லி ஹெப்டோ கொலையாளிகளை கண்டு பிடித்து உண்மையை வெளிக் கொண்டு வந்த விசாரணை அதிகாரியையும் கொன்று விட்டு அது தற்கொலை என்று உலகுக்கு அறிவித்ததை சில நாள் முன்பு பார்த்தோம்.

இந்த நாசகார கும்பல் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ?

தகவல் உதவி
ப்ரஸ்டிவி (presstv.ir)
இண்டிபென்டன்ட் (independent.co)

-------------------------------------------------------

Lindbald, of Green Party of LA County Council, told Press TV on Tuesday that the militants, carrying out the deadly attack against the Charlie Hebdo Satirical weekly and a supermarket, are “not from the religion… (but) from US and the Mossad” and the deadly attacks were meant to keep Israeli Prime Minister Benjamin Netanyahu “in power” .

“It’s meant to keep Europe under Netanyahu’s thumb.”

Lindblad referred to a getaway car “left there by a Mossad agent ready for the shooters at the cartoonist office to get a second getaway car” with one of the terrorist’s passport left “intentionally… just like 9/11.”

------------------------------------------------------

Jack Lindblad is the 2014 Green Party Candidate for California Senate, 18th District. An award-winning Architect, Urban Planner, Community Organizer, Political Economist, North Hollywood Northeast Neighborhood Councilmember, Green Party of Los Angeles County Councilmember, Lindblad campaigns on a Green-values platform for a carbon-neutral, relocalized, 100% renewable energy, steady state economy, basing development on bio-regional determinism, by forming public policy on accepted science, not developers.

http://www.independent.co.uk/news/world/europe/paris-attacks-us-politician-jack-lindblad-claims-charlie-hebdo-killings-were-by-us-and-mossad-to-keep-israels-netanyahu-in-power-9979696.html

http://www.presstv.ir/Detail/2015/01/13/392974/All-markings-of-false-flag-op-in-Paris

THE INNOCENT WORLD MUSLIMS - அப்பாவிகளான உலக முஸ்லிம்கள்!