மனிதனின் படைப்பின் ரகசியம் - ஓர் ஆய்வு
'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
- குர்ஆன் 23 : 12 , 13 , 14
முதல் மனிதனை களிமண்ணால் படைத்தேன் என்று இறைவன் கூறுகிறான். இதன் மூலம் டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று விளங்குகிறது. அறிவியல் ரீதியாகவும் டார்வின் கொள்கை நிரூபிக்கப் படவில்லை என்று முந்தைய பதிவுகளிலும் விளக்கியிருக்கிறேன்.
மேலே உள்ள குர்ஆன் வசனத்துக்கு திரு பி.ஜெய்னுல்லாபுதீனும், புரபஸர் எமிரிடஸ் கெய்த் மூரும் விளக்கங்களை அளித்துள்ளார்கள். முதலில் நாம் பி.ஜெய்னுல்லாபுதீனின் விளக்கத்தை எடுத்துக் கொள்வோம்.
இவ்வசனங்களின் மூலத்தில் 'அலக்' எனும் சொல் இடம் பெற்றுள்ளது. இச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இரத்தக்கட்டி, தொங்கிக் கொண்டிருக்கும் நிலை,ஒன்றடன் ஒன்று கோர்த்துக் கொண்டது என்றெல்லாம் பொருள் உண்டு.
இந்த இடத்தில் இரத்தக் கட்டி என்று பொருள் கொள்ள முடியாது. கருவில் இரத்தக்கட்டி என்று ஒரு நிலை இல்லை.தொங்கிக் கொண்டிருக்கும் நிலை எனவும் பொருள் கொள்ள முடியாது.ஏனெனில் மனிதனின் மூலத்தைக் கூறும்போதுஅது ஒரு பொருளாகத்தான் இருக்க முடியும்.தொங்கும் நிலை என்பது ஒரு பொருள் அல்ல.
மனிதன் உருவாவதற்கு ஆணிண் உயிரணு, பெண்ணின் சினை முட்டையுடன் சேர்ந்து கருவுற்ற சினை முட்டையாக வேண்டும்.இது தான் மனிதப் படைப்பின் முதல் நிலை. ஆணின் உயிரணு மட்டுமோ, பெண்ணின் சினை முட்டை மட்டுமோ மனிதனின் முதல் நிலை அல்ல. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக் கொள்வதால் உருவாகும் பொருளிலிருந்து தான் மனிதன் படைக்கப் பட்டான். இதனால்தான் சுருக்கமாக கருவுற்ற சினை முட்டை என்ற தமிழ்ப் படுத்தியுள்ளோம்.இரண்டு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பது என்பது இதன் நேரடிப் பொருள். இதன் கருத்து தான் கருவுற்ற சினை முட்டை.
அடுத்து புரபஸர் எமிரெடஸ் கெய்த் மூரின் கருத்துக்களை படிப்பதற்கு முன் இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.
டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை ஆங்கிலத்திலேயே பார்ப்போம்.
In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:
“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14
literally, the Arabic word alaqah has three meanings : 1) leech 2)suspended thing 3)blood clot.
1) In comparing a leech to an embryo in the alaqah stage, we find similarity between the two as we can see in figure 1. also the embryo at this stage obtains nourishment from the blood of the mother, similar to the leech ,which feeds on the blood of others.
Figure 1 : Drawing illustrating the similarities in appearance between a leech and a human embryo at the alaqah stage. (leech drawing from Human development as Described in the Quran and sunnah. Moore and others page 37, modified from integrated principles of zoology, Hickman and others.Embbroyo drawing from The developing Human, Moore and persaud,page 73)
2)The second meaning of the word alaqah is “suspended thing.” This is what we can see in figures 2 and 3 the suspension of the embryo, during the alaqah stage, in the womb of the mother.
Figure 2 : We can see in this diagram the suspension of an embryo during the alaqah stage in the womb (uterus) of the mother. ( The developing Human, Moore and persaud, 5th edition page 66
3) The third meaning of the word alaqah is “blood clot.” We find that the external appearance of the embryo and its sacs during the alaqah stage is similar to that of a blood clot. This is due to presence of relatively large amounts of blood present in the embryo during the stage.(see figure 4). Also during the stage, the blood in the embryo does not circulate until the end of the third week. Thus the embryo at this stage is like a clot of blood.
Figure 3 : In this photomicrograph, we can see the suspension of an embryo (marked b) during the alaqah stage (about 15 days old) in the womb of the mother. The actual size of the embryo is about 0.6 mm. (The developing Human,Moore,3rd edition page 66,from Histology, Leeson and Leeson.)
Figure 4 : Diagram of the primitive cardiovascular system in an embryo during the alaqah stage. The external appearance of the embryo and its sacs is similar to that of a blood clot, due to the presence of relatively large amounts of blood present in the embryo. (The developing Human, Moore 5th edition, page 65.)
ஆக 'அலக்' எனும் அரபி சொல்லுக்கு வரும் மூன்று விளக்கங்களும் கரு வளர்வின் ஆரம்பத்தில் உள்ள அடுத்தடுத்த நிலைகளை மிகத் துல்லியமாக விளக்குகிறது.
அடுத்த நிலையான 'முத்கா' என்ற நிலையை குர்ஆன் விளக்குகிறது. 'முத்கா' என்றால் நாம் ஒரு சூயிங்கம்மை வாயில் போட்டு நன்றாக மென்றவுடன் வரும் நிலை இருக்கிறதல்லவா அந்த நிலைதான் 'முத்கா' என்று அரபியில் சொல்லப்படும்.ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் “chewed like substance” என்று சொல்லலாம். இதைப்பற்றி திரு கெய்த் மூர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:
The next stage mentioned in the verse is the Mudghah stage. The Arabic word mudghah means “chewed like substance.” If one were to take a piece of gum and chew it in his mouth and then compare it with an embryo at the mudghah stage, we would conclude that the embryo at the mudghah stage acquires the appearance of a chewed like substance. This is because of the somites at the back of the embryo that “somewhat resemble teethmarks in a chewed substance.” (see figures 5 and 6)
Figure 5 : photograph of an embryo at the mudghah stage (28 days old). The embryo at this stage acquires the appearance of a chewed-like substance, because the at the back of the embryo somewhat resemble teeth marks in a chewed substance. The actual size of the embryo is 4 mm. (The developing Human Moore and persaud, 5th edition, page 82, from professor hideo nishimura, Kyoto university, Kyoto,Japan)
Figure 6 : When comparing the appearance of an embryo at the mudghah stage with a piece of gum that has been chewed , we find similarity between the two.
a) Drawing of an embryo at the mudghah stage. We can see here the somites at the back of the embryo that look like teeth marks. (The developing Human, Moore and persaud,5th edition, page 79)
b) Photograph of a piece of gum that has been chewed
How could Mohammad have possibly known all this 1400 years ago, when scientists have only recently discovered this using advanced equipment and powerful microscopes which did not exist at that time? Hamm and Leeuwenhoek were the first scientists to observe human sperm cells (spermatozoa) using an improved microscope in 1677 (more than 1000 years after Mohammad. They mistakenly thought that the sperm cell contained a miniature preformed human being that grew when it was deposited in the female genital tract.
1981 ஆம் வருடம் புரபஸர் கெய்த் மூர் சவூதி அரேபியா தம்மாம் நகரில் நடந்த ஏழாவது மருத்துவ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் தமது அறிக்கையை பின் வருமாறு சமர்ப்பித்தார் : 'எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது குர்ஆனின் மேற் சொன்ன வரிகள். மனிதனின் கருவில் நிகழும் அடுத்தடுத்த நிலைகளை குர்ஆன் மிகவும் துல்லியமாக பட்டியலிடுகிறது.ஏழாவது நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்தார்.ஆனால் அதன் பிறகு தொடர்ந்து வரும் நிலைகளின் மாற்றங்களை அறியும் வாய்ப்பும் வசதியும் அரிஸ்டாட்டிலுக்கு அன்று கிடைக்கவில்லை. அவர் கோழி முட்டையின் கரு வளர்ச்சியின் அடிப்படையைத்தான் விளக்கி விட்டுப் போனார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை கருவியலைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கு அறிவியல் வரவில்லை. தற்போதுதான் கருவியல் ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான சாதனங்களும் வாய்ப்புகளும் தற்போதுதான் இலகுவாக கிடைக்கின்றன.
மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.
இக் கட்டுரையில் வரும் அனைத்து விபரங்களுக்கும் உதவிய புத்தகங்கள் :
1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38
3) The reference for this saying is “This is the Truth” (Video Tape) . For copy of this video tape please contact one of the organizations listed .
A) Islamic Foundation Of America
p.o. box – 3415, Merrifield,VA 22116,USA,
Tel : (703) 914-4982, Fax – (703) 914-4984
Mail – ifam@erols.com
B)Bader Islamic Association of Toronto
474 Roncesvalles Avenue, Toronto, Ontario M6R 2N5, Canada
Email : islam@badercenter.com
c) Al- Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green, London , SW6 4HW, UK
Mail : muntada@almuntada-alislami.org
mail@jimas.org
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Friday, June 16, 2006
Tuesday, June 06, 2006
ஜிஹாத் - புனிதப் போர் ஓர் விளக்கம்!
ஜிஹாத் - புனிதப் போர் ஓர் விளக்கம்!
இந்த ஜிஹாத் என்ற பதம் ஹிந்துத்துவ வாதிகளால் தவறான பொருள் கொடுத்து பரப்பப்படுகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் ஜிஹாதை தவறாக பொருள் கொள்கிறார்கள். ஜிஹாத் என்பது புனிதப் போர் என்றும் அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் ஜிஹாதிகள் என்றும் பொய்யான பிரச்சாரம் நடந்து வருகிறது.
ஜிஹாத் என்ற அரபி வார்த்தை ஜஹாதா என்ற பதத்திலிருந்து வந்தது. ஜஹாதா என்றால் அரபியில் போராட்டம் என்ற பொருள் வரும். உதாரணத்திற்கு ஒரு மாணவன் பரீட்சையில் தேற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடினால் அது கல்வியின் மீது அந்த மாணவன் தொடுக்கும் ஜிஹாத். அதே போல் தவறான எண்ணங்களிலிருந்து விடுபட அவன் தன்னுடைய மனத்தோடு நடத்தும் போராட்டமும் ஒரு வகை ஜிஹாதே!
முஸ்லிம்களிலேயே பலர் ஜிஹாத் என்றால் புனிதப் போர் என்று அர்த்தம் கொள்கிறார்கள். புனிதப் போர் என்ற வார்த்தைக்கு நேரடி அரபி பதம் "ஹரபுன் முகத்தஸா". இந்த வார்த்தை குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த இடத்திலும் பயன் படுத்தப் படவில்லை.பிறகு எப்படி "புனிதப் போர்" என்ற வார்த்தை முஸ்லிம்களிடம் பிரபல்யமானது?
மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று அதற்கு "சிலுவைப் போர்" என்ற பெயரையும் இட்டனர். அவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம்கள் தரப்பில் படை திரட்டும் போது "புனிதப் போர்" என்ற பெயரிடப்பட்டது. அன்று ஆரம்பித்த இந்த "புனிதப் போர்" என்ற வார்த்தை இன்று வரை முஸ்லிம்களிடத்தில் நிலை பெற்று விட்டது. எனவே இனிமெலாவது ஜிஹாத் என்ற வார்த்தையை சரியான பொருளில் விளங்க முயற்ச்சிப்போம்.
இப்படி நாம் தீமையை எதிர்த்து போரிடும் போது நம்மை அழிக்க வரும் எதிரிகளையும் நாம் எதிர்க்க வேண்டி வரும். தன் வீட்டையும் தன் மனைவி மக்களையும் காப்பாற்றும் பொருட்டு ஒருவன் போராடினால் அதுவும் ஒரு வகை ஜிஹாதாகும். பத்திரிக்கையாளர் அருண்சோரி குர்ஆனின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு இது இந்தியாவில் உள்ள இந்துக்களைத்தான் சொல்கிறது என்று தவறான விளக்கம் அளித்திருந்தார்.
"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்!"
குர்ஆன் 9 : 5
மேற்கண்ட வசனத்தைத்தான் அருண்சோரி எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வசனம் எப்போது இறங்கப் பட்டது அந்த சூழ்நிலை என்ன என்று தெரியாமல் மேலோட்டமாக பார்த்தால் எவருக்குமே வித்தியாசமாகவே தெரியும்.
முகமது நபியும் அவரது தோழர்களும் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து விட்டு மக்காவை விட்டு வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு எத்தி வைத்தது. இவர்கள் அனைவரும் மதினாவில் சென்று குடியேறுகின்றார்கள். அங்கு இஸ்லாத்துக்கு வரவேற்பு கிடைக்கிறது. மதினா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது நபி அங்கு ஒரு இஸ்லாமிய அரசையும் உருவாக்குகிறார்.
மக்காவில் எஞ்சியிருந்த ஒரு சில முஸ்லிம்களும் காபிர்களால் (இணை வைப்பவர்களால்) துன்புறுத்தப் படுகின்றனர். மதினாவாசிகளை அழிக்க மக்காவாசிகள் படை திரட்டிக் கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் போர் செய்யவில்லை என்றால் மதினா முற்றிலுமாக அழிக்கப் படும். இஸ்லாத்திற்கும் பின்னடைவு ஏற்படும். இந்த நேரத்தில் தான் முஸ்லிம்களின் மீது போரை இறைவன் கடமையாக்குகிறான்.
நம்மை ஏற்கெனவே அழித்த மேலும் தற்போது இஸ்லாமியர்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும். தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டும். எதிரிகளை போர்க களத்தில் கொல்ல வேண்டும். சிறை பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் மேலே அருண் ஷோரி சுட்டிக் காட்டிய வசனம் வருகிறது.
"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள்.ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்.அவர்கள் திருந்திக் கொண்டு தொழுகையை நிலை நாட்டி ஏழை வரியையும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.
குர்ஆன் - 9 : 5
இது போன்ற ஒரு சூழ்நிலையில் யாரும் எடுக்கக் கூடிய ஒரு நிலைப் பாட்டைத்தான் குர்ஆனும் முஸ்லிம்களுக்கு கட்டளையாக இடுகிறது. இனி போர் சம்பந்தமாக வரும் வேறு வசனங்களையும் பார்ப்போம்.
"தமது உடன்படிக்ககைளை முறித்து இத்தூதரை (முகம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் யுத்தத்தைத் துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?" -குர்ஆன் 9 :13
உடன்படிக்ககைளையும் முறித்து அவர்களாகவே போரைத் துவக்கியுள்ள நிலையில் முஸ்லிம்களை போர்டச் சொல்லி குர்ஆன் கட்டளை இடுகிறது.
"உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" - குர்ஆன் 2 :190
போரில் வரம்பு மீறக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டனர் மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திரா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாக துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்." - குர்ஆன் 22 :40
இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றுகின்றனர். அந்த அநியாயக் காரர்களை எதிர்க்க சொல்கிறது குர்ஆன். அடுத்து பள்ளிவாசல்களும் கோவில்களும் சர்ச்களும் பாதுகாப்போடு இருக்க பலப் பிரயோகமும் அவசியம் என்று சுட்டிக் காட்டப் படுகிறது.
"போரிலிருந்து விலகிக் கொள்வார்களானால் இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்:" குர்ஆன் - 2 :192
போரிலிருந்து விலகிக் கொண்டவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் இதிலிருந்து விளங்குகிறது.
'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொருப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவினமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இறைவனின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?" - குர்ஆன் 4 : 75
முதியோர்கள் பெண்கள் சிறுவர் போன்றவர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப் படக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் முஸ்லிம்களின் மீது போரை கடமையாக்கினான் இறைவன். அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.
"முகம்மதே! அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! இறைவனையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்: அறிந்தவன்:" - குர்ஆன் 8 : 54
எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போரை நிறுத்தி சமாதானத்தின் பக்கம் வர வேண்டும். தேவையற்ற உயிர்ப் பலிகள் தடுக்கப் பட வேண்டும் என்று இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான்.
"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்" - குர்ஆன் 2 : 256
"இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக!பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்." - குர்ஆன் 9 : 6
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6
மேற் கண்ட மூன்று வசனங்களும் கட்டாய மத மாற்றத்தை தடை செய்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் பாதுகாப்பு கோரினால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் விளங்குகிறோம்.மத மாற்றத்துக்காக போர்கள் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.
'நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!இல்லையேல் நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்.' -குர்ஆன் 49 :6
இந்த வசனம் மூலம் விளங்குவது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினாலும் உடன் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்று விளங்குகிறோம். முதலில் செய்தி உண்மைதானா அல்லது வதந்தியா என்று முதலில் ஆராய வேண்டும். அரசு மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டும் தான் ஆயுதத்தை நாம் எடுக்கலாம்.
'அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமினறி செய்யாதீர்கள்.' -குர்ஆன் 17 :33
தக்க காரணமின்றி அநியாயமாக அப்பாவிகளைக் கொல்வதை மேற்கண்ட வசனம் தடுக்கிறது.
காபிர்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் வருகிறதே?
காபிர் என்ற வார்த்தை குப்ர் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. குப்ர் என்ற வார்த்தைக்கு ஏற்க மறுத்தல் என்று தமிழில் பொருள் வரும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காத அனைவரும் காபிர்கள் என்று அழைக்கப் படுவர். இது எதும் அவமானகரமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றும் அல்ல.காபிர் என்ற வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இணை வைப்பவர் அதாவது இறைவனுக்கு இணை வைப்பவர் என்ற பொருளில் வரும்.எனவே இதை ஒரு வித்தியாசமாக பார்க்கத் தேவையில்லை. மேலும் பல விபரங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்.
இந்த ஜிஹாத் என்ற பதம் ஹிந்துத்துவ வாதிகளால் தவறான பொருள் கொடுத்து பரப்பப்படுகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் ஜிஹாதை தவறாக பொருள் கொள்கிறார்கள். ஜிஹாத் என்பது புனிதப் போர் என்றும் அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் ஜிஹாதிகள் என்றும் பொய்யான பிரச்சாரம் நடந்து வருகிறது.
ஜிஹாத் என்ற அரபி வார்த்தை ஜஹாதா என்ற பதத்திலிருந்து வந்தது. ஜஹாதா என்றால் அரபியில் போராட்டம் என்ற பொருள் வரும். உதாரணத்திற்கு ஒரு மாணவன் பரீட்சையில் தேற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடினால் அது கல்வியின் மீது அந்த மாணவன் தொடுக்கும் ஜிஹாத். அதே போல் தவறான எண்ணங்களிலிருந்து விடுபட அவன் தன்னுடைய மனத்தோடு நடத்தும் போராட்டமும் ஒரு வகை ஜிஹாதே!
முஸ்லிம்களிலேயே பலர் ஜிஹாத் என்றால் புனிதப் போர் என்று அர்த்தம் கொள்கிறார்கள். புனிதப் போர் என்ற வார்த்தைக்கு நேரடி அரபி பதம் "ஹரபுன் முகத்தஸா". இந்த வார்த்தை குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த இடத்திலும் பயன் படுத்தப் படவில்லை.பிறகு எப்படி "புனிதப் போர்" என்ற வார்த்தை முஸ்லிம்களிடம் பிரபல்யமானது?
மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று அதற்கு "சிலுவைப் போர்" என்ற பெயரையும் இட்டனர். அவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம்கள் தரப்பில் படை திரட்டும் போது "புனிதப் போர்" என்ற பெயரிடப்பட்டது. அன்று ஆரம்பித்த இந்த "புனிதப் போர்" என்ற வார்த்தை இன்று வரை முஸ்லிம்களிடத்தில் நிலை பெற்று விட்டது. எனவே இனிமெலாவது ஜிஹாத் என்ற வார்த்தையை சரியான பொருளில் விளங்க முயற்ச்சிப்போம்.
இப்படி நாம் தீமையை எதிர்த்து போரிடும் போது நம்மை அழிக்க வரும் எதிரிகளையும் நாம் எதிர்க்க வேண்டி வரும். தன் வீட்டையும் தன் மனைவி மக்களையும் காப்பாற்றும் பொருட்டு ஒருவன் போராடினால் அதுவும் ஒரு வகை ஜிஹாதாகும். பத்திரிக்கையாளர் அருண்சோரி குர்ஆனின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு இது இந்தியாவில் உள்ள இந்துக்களைத்தான் சொல்கிறது என்று தவறான விளக்கம் அளித்திருந்தார்.
"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்!"
குர்ஆன் 9 : 5
மேற்கண்ட வசனத்தைத்தான் அருண்சோரி எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வசனம் எப்போது இறங்கப் பட்டது அந்த சூழ்நிலை என்ன என்று தெரியாமல் மேலோட்டமாக பார்த்தால் எவருக்குமே வித்தியாசமாகவே தெரியும்.
முகமது நபியும் அவரது தோழர்களும் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து விட்டு மக்காவை விட்டு வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு எத்தி வைத்தது. இவர்கள் அனைவரும் மதினாவில் சென்று குடியேறுகின்றார்கள். அங்கு இஸ்லாத்துக்கு வரவேற்பு கிடைக்கிறது. மதினா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது நபி அங்கு ஒரு இஸ்லாமிய அரசையும் உருவாக்குகிறார்.
மக்காவில் எஞ்சியிருந்த ஒரு சில முஸ்லிம்களும் காபிர்களால் (இணை வைப்பவர்களால்) துன்புறுத்தப் படுகின்றனர். மதினாவாசிகளை அழிக்க மக்காவாசிகள் படை திரட்டிக் கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் போர் செய்யவில்லை என்றால் மதினா முற்றிலுமாக அழிக்கப் படும். இஸ்லாத்திற்கும் பின்னடைவு ஏற்படும். இந்த நேரத்தில் தான் முஸ்லிம்களின் மீது போரை இறைவன் கடமையாக்குகிறான்.
நம்மை ஏற்கெனவே அழித்த மேலும் தற்போது இஸ்லாமியர்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும். தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டும். எதிரிகளை போர்க களத்தில் கொல்ல வேண்டும். சிறை பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் மேலே அருண் ஷோரி சுட்டிக் காட்டிய வசனம் வருகிறது.
"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள்.ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்.அவர்கள் திருந்திக் கொண்டு தொழுகையை நிலை நாட்டி ஏழை வரியையும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.
குர்ஆன் - 9 : 5
இது போன்ற ஒரு சூழ்நிலையில் யாரும் எடுக்கக் கூடிய ஒரு நிலைப் பாட்டைத்தான் குர்ஆனும் முஸ்லிம்களுக்கு கட்டளையாக இடுகிறது. இனி போர் சம்பந்தமாக வரும் வேறு வசனங்களையும் பார்ப்போம்.
"தமது உடன்படிக்ககைளை முறித்து இத்தூதரை (முகம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் யுத்தத்தைத் துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?" -குர்ஆன் 9 :13
உடன்படிக்ககைளையும் முறித்து அவர்களாகவே போரைத் துவக்கியுள்ள நிலையில் முஸ்லிம்களை போர்டச் சொல்லி குர்ஆன் கட்டளை இடுகிறது.
"உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" - குர்ஆன் 2 :190
போரில் வரம்பு மீறக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டனர் மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திரா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாக துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்." - குர்ஆன் 22 :40
இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றுகின்றனர். அந்த அநியாயக் காரர்களை எதிர்க்க சொல்கிறது குர்ஆன். அடுத்து பள்ளிவாசல்களும் கோவில்களும் சர்ச்களும் பாதுகாப்போடு இருக்க பலப் பிரயோகமும் அவசியம் என்று சுட்டிக் காட்டப் படுகிறது.
"போரிலிருந்து விலகிக் கொள்வார்களானால் இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்:" குர்ஆன் - 2 :192
போரிலிருந்து விலகிக் கொண்டவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் இதிலிருந்து விளங்குகிறது.
'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொருப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவினமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இறைவனின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?" - குர்ஆன் 4 : 75
முதியோர்கள் பெண்கள் சிறுவர் போன்றவர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப் படக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் முஸ்லிம்களின் மீது போரை கடமையாக்கினான் இறைவன். அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.
"முகம்மதே! அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! இறைவனையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்: அறிந்தவன்:" - குர்ஆன் 8 : 54
எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போரை நிறுத்தி சமாதானத்தின் பக்கம் வர வேண்டும். தேவையற்ற உயிர்ப் பலிகள் தடுக்கப் பட வேண்டும் என்று இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான்.
"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்" - குர்ஆன் 2 : 256
"இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக!பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்." - குர்ஆன் 9 : 6
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6
மேற் கண்ட மூன்று வசனங்களும் கட்டாய மத மாற்றத்தை தடை செய்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் பாதுகாப்பு கோரினால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் விளங்குகிறோம்.மத மாற்றத்துக்காக போர்கள் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.
'நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!இல்லையேல் நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்.' -குர்ஆன் 49 :6
இந்த வசனம் மூலம் விளங்குவது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினாலும் உடன் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்று விளங்குகிறோம். முதலில் செய்தி உண்மைதானா அல்லது வதந்தியா என்று முதலில் ஆராய வேண்டும். அரசு மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டும் தான் ஆயுதத்தை நாம் எடுக்கலாம்.
'அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமினறி செய்யாதீர்கள்.' -குர்ஆன் 17 :33
தக்க காரணமின்றி அநியாயமாக அப்பாவிகளைக் கொல்வதை மேற்கண்ட வசனம் தடுக்கிறது.
காபிர்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் வருகிறதே?
காபிர் என்ற வார்த்தை குப்ர் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. குப்ர் என்ற வார்த்தைக்கு ஏற்க மறுத்தல் என்று தமிழில் பொருள் வரும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காத அனைவரும் காபிர்கள் என்று அழைக்கப் படுவர். இது எதும் அவமானகரமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றும் அல்ல.காபிர் என்ற வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இணை வைப்பவர் அதாவது இறைவனுக்கு இணை வைப்பவர் என்ற பொருளில் வரும்.எனவே இதை ஒரு வித்தியாசமாக பார்க்கத் தேவையில்லை. மேலும் பல விபரங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்.
Wednesday, May 31, 2006
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - மூன்று
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - மூன்று
ஒரே இறைவனை வணங்கச் சொல்லும் வேறு சில வசனங்களையும் இந்து மத வேதங்களிலிருந்து பார்ப்போம்.
ரிக் வேதம்
'மா சிதான்யாத்வி சன்ஷதா'
'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'
ரிக் வேதம் 8 : 1: 1
'யா எகா இத்தாமுஸ்துதி'
'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'
ரிக் வேதம் 6 : 45 : 16
'உங்கள் இறைவன் ஒரே இறைவனே!' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா?' என்று முகம்மதே கேட்பீராக'
குர்ஆன் 21 : 108
மேற் கண்ட இரண்டு வசனங்களையும் சொன்னது ஒருவன்தான் என்று மேலும் உறுதியாகிறது.இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு இறைவன் தான் என்று இந்து மத வேதங்கள் சொல்லியிருக்க இத்தனை தெய்வங்களை எப்படி உண்டாக்கினர்? இதை மதக் குருக்களும் எப்படி அனுமதித்தனர் என்று நாம் வியந்து போகிறோம்.
ஒருவன் முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் ஒரு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அது என்ன? 'லா இலாஹா இல்லல்வாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்ற இந்த கொள்கையில் உறுதியாக இருப்பது அவசியம். இதில் முதல் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை ஹிந்து மத வேதங்களிலிருந்தே முந்தய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன. அடுத்த கொள்கை முகமது நபியை நம்ப வேண்டும். இவரைப் பற்றி ஹிந்து மத வேதங்கள் என்ன சொல்கிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இந்து மதக் கோட்பாடுகளின் படி இறைவன் பல அவதாரங்களை எடுத்து இந்த பூமிக்கு வருவதாக சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் பூமியில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அந்த நாட்களில் இறைவன் மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவான் என்று போதிக்கப் படுகிறது.
'மனித ரூபத்தில் வருவது இறைவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது நடக்கக் கூடியதே' என்று பலரும் வாதிடுகின்றனர். முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள் வேண்டும்: மனிதனுக்கு உள்ள தன்மைகள் வேறு. நம்மைப் படைத்த இறைவனுக்குள்ள தன்மைகள் வேறு.
'அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன் அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது' - குர்ஆன் 2 :255
'உனது இறைவன் மறதி உடையவனாக இல்லை' - குர்ஆன் 19 :64
'அவனே உணவளிக்கிறான். அவனுக்கு உணவளிக்கப் படுவதில்லை' -குர்ஆன் 6 :14
'நான் மனிதர்களிடத்தில் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் உடையவன். -குர்அன் 51 : 57,58
'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று முகம்மதே கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக' - குர்ஆன் 17 :111
மேற்கண்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல தன்மைகள் மாறுபடுகிறது. தூக்கம்,மறதி,அசதி,துன்பம்,பிறப்பு,இறப்பு போன்ற பலகினங்களுக்கெல்லாம் அப்பாற்ப் பட்டவனே இறைவன். இதைத்தான் அனைத்து மத வேதங்களும் சொல்கிறது. இத்தனை தன்மைகள் மாறி இருக்க இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் அது இறை சக்திக்கு இழுக்கல்லவா?
எனவே இறைவன் அவ்வப்போது அனுப்பிய இறைத் தூதர்களையே கடவுளின் அவதாரம் என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது தான் சரியான வாதமாக படுகிறது. இதைத்தான் பல ஹிந்து வேதங்களும் உறுதிப் படுத்துகின்றன. யுக முடிவு நாள் சமீபத்தில் ஒரு தூதர் வருவார் அவர் அரபு நாட்டில் தோன்றுவார். அவர் பெயர் அகமது அல்லது முகமது என்பதாகும் என்றெல்லாம் பல வேதங்களில் சொல்லப் பட்டுள்ளன.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரும் வேதமும் வந்திருக்கிறது என்பதை அறியலாம். தமிழ் மொழியிலும் வேதமும் தூதரும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய தெளிவான சான்றுகள் நம்மிடம் இல்லை.
'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயில இஸ்ஹாக் யஃகூப் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப் பட்டதையும் மூஸா ஈஸா(ஏசு) மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் நாங்கள் அவனுக்கே கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுவீராக! - குர்ஆன் 3 : 84
மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைத் தூதர்களுக்கிடையில் 'அவர் உயர்ந்தவர்' 'இவர் தாழ்ந்தவர்' என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளங்குகிறது. இனி இந்து மதத்தில் முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லப் பட்டிருப்பதை வரிசையாக காண்போம்.
பவிஷ்ய புராணா
வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.
- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.
மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.
'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.
முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.
'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146
முகமது நபி மக்காவிலிருந்து விரட்டப் பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிபது பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.முகமது நபி வரும் போதுஅவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முகமது நபி வந்த போது அவர்களை இறைத் தூதர்என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்கு போய்விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.
பவிஸ்ய புராணம்
'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.
பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.
அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.
'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. - குர்ஆன் 10 :61
இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.
மேலும் பல விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்!
என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்.
ஒரே இறைவனை வணங்கச் சொல்லும் வேறு சில வசனங்களையும் இந்து மத வேதங்களிலிருந்து பார்ப்போம்.
ரிக் வேதம்
'மா சிதான்யாத்வி சன்ஷதா'
'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'
ரிக் வேதம் 8 : 1: 1
'யா எகா இத்தாமுஸ்துதி'
'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'
ரிக் வேதம் 6 : 45 : 16
'உங்கள் இறைவன் ஒரே இறைவனே!' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா?' என்று முகம்மதே கேட்பீராக'
குர்ஆன் 21 : 108
மேற் கண்ட இரண்டு வசனங்களையும் சொன்னது ஒருவன்தான் என்று மேலும் உறுதியாகிறது.இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு இறைவன் தான் என்று இந்து மத வேதங்கள் சொல்லியிருக்க இத்தனை தெய்வங்களை எப்படி உண்டாக்கினர்? இதை மதக் குருக்களும் எப்படி அனுமதித்தனர் என்று நாம் வியந்து போகிறோம்.
ஒருவன் முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் ஒரு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அது என்ன? 'லா இலாஹா இல்லல்வாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்ற இந்த கொள்கையில் உறுதியாக இருப்பது அவசியம். இதில் முதல் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை ஹிந்து மத வேதங்களிலிருந்தே முந்தய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன. அடுத்த கொள்கை முகமது நபியை நம்ப வேண்டும். இவரைப் பற்றி ஹிந்து மத வேதங்கள் என்ன சொல்கிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இந்து மதக் கோட்பாடுகளின் படி இறைவன் பல அவதாரங்களை எடுத்து இந்த பூமிக்கு வருவதாக சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் பூமியில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அந்த நாட்களில் இறைவன் மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவான் என்று போதிக்கப் படுகிறது.
'மனித ரூபத்தில் வருவது இறைவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது நடக்கக் கூடியதே' என்று பலரும் வாதிடுகின்றனர். முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள் வேண்டும்: மனிதனுக்கு உள்ள தன்மைகள் வேறு. நம்மைப் படைத்த இறைவனுக்குள்ள தன்மைகள் வேறு.
'அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன் அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது' - குர்ஆன் 2 :255
'உனது இறைவன் மறதி உடையவனாக இல்லை' - குர்ஆன் 19 :64
'அவனே உணவளிக்கிறான். அவனுக்கு உணவளிக்கப் படுவதில்லை' -குர்ஆன் 6 :14
'நான் மனிதர்களிடத்தில் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் உடையவன். -குர்அன் 51 : 57,58
'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று முகம்மதே கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக' - குர்ஆன் 17 :111
மேற்கண்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல தன்மைகள் மாறுபடுகிறது. தூக்கம்,மறதி,அசதி,துன்பம்,பிறப்பு,இறப்பு போன்ற பலகினங்களுக்கெல்லாம் அப்பாற்ப் பட்டவனே இறைவன். இதைத்தான் அனைத்து மத வேதங்களும் சொல்கிறது. இத்தனை தன்மைகள் மாறி இருக்க இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் அது இறை சக்திக்கு இழுக்கல்லவா?
எனவே இறைவன் அவ்வப்போது அனுப்பிய இறைத் தூதர்களையே கடவுளின் அவதாரம் என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது தான் சரியான வாதமாக படுகிறது. இதைத்தான் பல ஹிந்து வேதங்களும் உறுதிப் படுத்துகின்றன. யுக முடிவு நாள் சமீபத்தில் ஒரு தூதர் வருவார் அவர் அரபு நாட்டில் தோன்றுவார். அவர் பெயர் அகமது அல்லது முகமது என்பதாகும் என்றெல்லாம் பல வேதங்களில் சொல்லப் பட்டுள்ளன.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரும் வேதமும் வந்திருக்கிறது என்பதை அறியலாம். தமிழ் மொழியிலும் வேதமும் தூதரும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய தெளிவான சான்றுகள் நம்மிடம் இல்லை.
'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயில இஸ்ஹாக் யஃகூப் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப் பட்டதையும் மூஸா ஈஸா(ஏசு) மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் நாங்கள் அவனுக்கே கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுவீராக! - குர்ஆன் 3 : 84
மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைத் தூதர்களுக்கிடையில் 'அவர் உயர்ந்தவர்' 'இவர் தாழ்ந்தவர்' என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளங்குகிறது. இனி இந்து மதத்தில் முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லப் பட்டிருப்பதை வரிசையாக காண்போம்.
பவிஷ்ய புராணா
வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.
- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.
மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.
'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.
முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.
'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146
முகமது நபி மக்காவிலிருந்து விரட்டப் பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிபது பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.முகமது நபி வரும் போதுஅவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முகமது நபி வந்த போது அவர்களை இறைத் தூதர்என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்கு போய்விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.
பவிஸ்ய புராணம்
'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.
பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.
அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.
'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. - குர்ஆன் 10 :61
இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.
மேலும் பல விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்!
என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்.
Friday, May 26, 2006
குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்!
குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்!
'முகம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?'
குர்ஆன் 18 : 9
இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்
1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.
அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.
இடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.
1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.
அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.
அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
மேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.
ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
ஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.
பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
-நன்றி திரு பி.ஜெய்னுல்லாபுதீன்.
இந்த ஏடுகள் சம்பந்தமாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் எனக்கு அனுப்பித் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். அமெரிக்காவிலோ அல்லது ஜோர்டானிலோ வசித்து வரும் தமிழ் மக்கள் இது பற்றிய விபரங்களைச் சேகரிக்கலாமே! பிபிசியில் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அல்லது இந்த ஏடுகள் சம்பந்தமான வெப் சைட்டுகளைத் தெரிந்தவர்கள், அறிஞர் அய்ஸ்மேன் வெளியிட்ட புத்தகத்தைப் படித்தவர்கள் போன்ற அதன் அனைத்து விபரங்களையும் எனக்கு அனுப்பி தந்தால் அனைத்தையும் வெளியிடுகிறேன். இதனால் மற்றவர்களுக்கும் உங்கள் மூலம் பல உண்மைகள் சென்றடையுமே!
'முகம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?'
குர்ஆன் 18 : 9
இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்
1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.
அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.
இடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.
1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.
அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.
1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.
அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
மேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.
ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
ஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.
பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.
-நன்றி திரு பி.ஜெய்னுல்லாபுதீன்.
இந்த ஏடுகள் சம்பந்தமாக மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் எனக்கு அனுப்பித் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். அமெரிக்காவிலோ அல்லது ஜோர்டானிலோ வசித்து வரும் தமிழ் மக்கள் இது பற்றிய விபரங்களைச் சேகரிக்கலாமே! பிபிசியில் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள், அல்லது இந்த ஏடுகள் சம்பந்தமான வெப் சைட்டுகளைத் தெரிந்தவர்கள், அறிஞர் அய்ஸ்மேன் வெளியிட்ட புத்தகத்தைப் படித்தவர்கள் போன்ற அதன் அனைத்து விபரங்களையும் எனக்கு அனுப்பி தந்தால் அனைத்தையும் வெளியிடுகிறேன். இதனால் மற்றவர்களுக்கும் உங்கள் மூலம் பல உண்மைகள் சென்றடையுமே!
Monday, May 15, 2006
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான! - 2
இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான! - 2
முந்தைய பதிவில் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டோம். இது போல் இரண்டு வேதங்களிலும் வரக் கூடிய வேறு சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்.
இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :
'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'
-ரிக் வேதம் 1:164:46
'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'
உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.
அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.
-ரிக் வேதம் 2 : 1
இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.
இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.
'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :
ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)
- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.
'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'
குர்ஆன் 7 : 180
இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.
இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.
அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.
இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.
அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.
எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.
ரஜ்னீஷைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். அமெரிக்காவில் 'ரஜ்னீஷ்புரம்' என்று அமைத்து அமெரிக்க அரசாங்கத்தாலேயே ஒரு கணம் திரும்பிப் பார்க்கப் பட்டவர்.இந்தியாவிலும் புனேயில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ஓர் வாசகம் எழுதப் பட்டிருக்கும்.
“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”
மனிதர்களால் எழுதப் பட்ட தன்னிலை விளக்கங்கள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு மேலே உள்ள வாக்கியங்களை படித்தாலே நமக்கு நன்கு விளங்கும். நம்மைப் போன்ற ஒரு மனிதர். நோய்களுக்கு ஆட்பட்டார்.நம்மைப் போலவே மரணத்தையும் சுவைத்தார்.இருந்தாலும் மனித மனம் அவரை கடவுளாக்க முயற்ச்சிக்கிறது.
எனவே எந்த சமூகத்தவரும் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வேதத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால ஈருலகிலும் வெற்றியடையலாம். எங்கெல்லாம் மனிதர்கள் தாமாக வழிமுறைகளை அமைத்துக் கொண்டு 'இறைவனை நாங்களும் அடைகிறோம' என்று புதிது புதிதாக மார்க்கங்களை உண்டு பண்ணுகிறார்களோ அவர்கள்ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிறார்கள். இறைவன் மிக அறிந்தவன்.
முந்தைய பதிவில் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டோம். இது போல் இரண்டு வேதங்களிலும் வரக் கூடிய வேறு சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்.
இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :
'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'
-ரிக் வேதம் 1:164:46
'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'
உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.
அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.
-ரிக் வேதம் 2 : 1
இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.
இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.
'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'
குர்ஆன் 17 :110
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :
ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)
- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.
'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'
குர்ஆன் 7 : 180
இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.
இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.
அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.
இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.
அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.
எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.
ரஜ்னீஷைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். அமெரிக்காவில் 'ரஜ்னீஷ்புரம்' என்று அமைத்து அமெரிக்க அரசாங்கத்தாலேயே ஒரு கணம் திரும்பிப் பார்க்கப் பட்டவர்.இந்தியாவிலும் புனேயில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ஓர் வாசகம் எழுதப் பட்டிருக்கும்.
“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”
மனிதர்களால் எழுதப் பட்ட தன்னிலை விளக்கங்கள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு மேலே உள்ள வாக்கியங்களை படித்தாலே நமக்கு நன்கு விளங்கும். நம்மைப் போன்ற ஒரு மனிதர். நோய்களுக்கு ஆட்பட்டார்.நம்மைப் போலவே மரணத்தையும் சுவைத்தார்.இருந்தாலும் மனித மனம் அவரை கடவுளாக்க முயற்ச்சிக்கிறது.
எனவே எந்த சமூகத்தவரும் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வேதத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால ஈருலகிலும் வெற்றியடையலாம். எங்கெல்லாம் மனிதர்கள் தாமாக வழிமுறைகளை அமைத்துக் கொண்டு 'இறைவனை நாங்களும் அடைகிறோம' என்று புதிது புதிதாக மார்க்கங்களை உண்டு பண்ணுகிறார்களோ அவர்கள்ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிறார்கள். இறைவன் மிக அறிந்தவன்.
Subscribe to:
Posts (Atom)