Followers

Monday, August 18, 2008

கிழக்கு கடற்கரை சாலையில் விடுதலை சிறுத்தைகள் ரகளை

மாமல்லபுரம் : கல்பாக்கம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.ஐ.இ உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது; போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஓட்டல் வைத்துள்ளனர்.

நேற்று சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடலூர் மற்றும் புதுச்சேரியிலிருந்து விடுதலைச் சிறுத்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்னை நோக்கிச் சென்றனர். பகல் 2.30 மணிக்கு புதுப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஓட்டல்களில் இரண்டு வேன்களில் வந்த அவர்கள்இ சாப்பிடச் சென்றனர். சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தனர். பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் பாஷா(45) என்பவரை கத்தியால் குத்தினர். அதை தடுக்க முயன்ற அவரது மகன் நசீர் மற்றும் ஊழியரையும் தாக்கினர். சத்தம் கேட்டுஇ எதிரே குளிர்பானக் கடையில் பணிபுரியும் புதுப் பட்டினத்தைச் சேர்ந்த ஜெய்லானி (22)இ காஜா(19) ஆகியோர் ஓடி வந்தனர். அவர்களையும் உருட்டுக் கட்டையால் தாக்கினர். தலையில் காயமடைந்த இருவரும் சுருண்டு விழுந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து அப்பகுதி முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வந்த வேன்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கடைகள் மூடப்பட்டன. ஓட்டலில் தகராறு செய்தவர்கள்இ தப்பித்தால் போதும் என வாகனங்களை விட்டுவிட்டு ஓடினர். அவ்வழியே வாகனங்களில் வந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிறுத்திஇ தகவலைத் தெரிவித்தனர்.

அவ்வழியே வந்த அரசு பஸ்கள்இ தனியார் வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண் ணாடிகள் நொறுக்கப்பட்டன. மேலும்இ புதுப்பட்டினம் நோக்கி உருட்டுக்கட்டைஇ கத்தி போன்ற ஆயுதங்களுடன் சாலையில் நடந்து சென்றனர். வழியில் தென்படுபவர்களை எல்லாம் தாக்கினர். அதைக் கண்டு மக்கள் தலைதெறிக்க ஓடினர். அதேபோல்இ புதுப்பட்டினம் வரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரைத் தாக்க முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் தயாராக இருந்தனர்.இதனால்இ அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார்இ புதுச்சேரியிலிருந்து வந்த வாகனங்களை காத்தான்கடை சோதனைச் சாவடியிலிருந்து செய்யூர்இ மதுராந்தகம் வழியே திருப்பிவிட்டனர்.

புதுச்சேரியிலிருந்து வந்த விடுதலைச் சிறுத்தைகள்இ காத்தமடை சோதனைச் சாவடி வழியே புதுப் பட்டினம் செல்ல முயன்றனர். அவர்களைத் தடுத்த கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன்இ எஸ்.ஐ.இ ரமேஷ்இ ஏட்டுகள் வேல்முருகன்இ பலராமன்இ மோகன் ஆகியோரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஓர் அணியாகவும்இ விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அணியாகவும் திரண்டனர். போர்க்களத்தில் நிற்பது போல் இரு தரப்பினரும் 300 அடி இடைவெளியில் நேருக்கு நேர் நின்றனர். போலீசார்இ இரு தரப்பினருக்கும் நடுவில் நின்றுஇ மோதலைத் தடுக்க முயன்றனர். குறைந்த அளவிலே போலீசார் இருந்ததால் பதட்டம் நீடித்தது. சிறிது நேரத்தில் செங்கல்பட்டு சரக போலீஸ் டி.ஐ.ஜி.இ துரைராஜ்இ காஞ்சிபுரம் எஸ்.பி.இ பெரியய்யாஇ திருவள்ளூர் எஸ்.பி.இ செந்தாமரைக்கண்ணன்இ விழுப்புரம் எஸ்.பி.இ அமல்ராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். மோதலுக்குத் தயாராக நின்ற இரு தரப்பினரையும் துப்பாக்கியைக் காட்டியபடி விரட்டி அடித்தனர். சிறிது நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலைஇ போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
தப்பியோடிய விடுதலைச் சிறுத்தை அமைப்பினர் வாயலூர் சோதனைச்சாவடி அருகே மயிலாடுதுறையிலிருந்து வந்த அரசு விரைவு பஸ் கண்ணாடியை உடைத்தனர். பின் பஸ்சை கொளுத்த முயன்றனர். போலீசார் வந்துவிட்டதால்இ அங்கிருந்தும் தப்பியோடினர். விடுதலைச் சிறுத்தைகள் மாற்று வழியே கல்பாக்கம் டவுன்ஷிப்பிற்குள் சென்று கடைகளை அடித்து நொறுக்கினர். உடனேஇ கிழக்கு கடற்கரைச் சாலையில் குவிந்திருந்த முஸ்லிம்கள் அங்கு ஓடினர். அதற்குள் அந்த கும்பல் தப்பிச் சென்றது. உடனடியாக கல்பாக்கம் டவுன்ஷிப் கேட் மூடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இச்சம்பவத்தால் நேற்று பகல் 2.30 மணியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் அனைத்தும் செங்கல்பட்டு வழியே திருப்பிவிடப்பட்டன. இரவு வரை கிழக்கு கடற்கரைச் சாலை வழியே வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உளவுத்துறை அலட்சியம்? : கிழக்கு கடற்கரைச் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் நடத்திய வன்முறைக்கு உளவுத்துறை போலீசாரின் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காகஇ வாகனங்களில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியே நேற்று சென்றனர். பெரும்பாலான வாகனங்களில் கத்திஇ கோடரிஇ கற்கள்இ உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்கள் இருந்தன. அரசியல் கட்சி விழாக்களுக்கு அதிக அளவில் தொண்டர்கள் செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால்இ கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் நேற்று ஈடுபடவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதும்இ அதற்கு தொண்டர்கள் திரள்வதும் உளவுத்துறை போலீசாருக்கு முன்கூட்டியே தெரியாதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சித்ரா பவுர்ணமியை ஒட்டி இன்னொரு அமைப்பு வழக்கமாக மாமல்லபுரத்தில் நடத்தும் மாநாட்டுப் பாதையிலும் இதேபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடப்பது வழக்கம். இப்படி முன்னுதாரணங்கள் இருந்தும்இ வழிநெடுக உரிய பாதுகாப்பு போட உளவுத்துறை உயரதிகாரிகள் உத்தரவிடாதது ஏன்? எனஇ கடைசி நேரத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். உள்ளூர் போலீசார்இ சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி ஆயுதங்களைப் பறிமுதல் செய்திருந்தால்இ மோதலை தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

நன்றி : தினமலர்

Saturday, August 16, 2008

மாயாவதி தன் சிலைகளை அகற்றுவாரா?

இறந்தவர்களுக்கு சிலை வைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். உயிரோடு இருக்கும் மாயாவதி தனக்குத் தானே சிலைகளை மாநிலம் முழுவதும் நிறுவி வரும் கொடுமையை என்னவென்று சொல்வது! அம்பேத்கார் சிலைக்கும் தேவர் சிலைக்கும் சிலர் செருப்பு மாலை இட்டதால் எத்தனை அப்பாவி உயிர்களை பறி கொடுத்தோம். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு முதல்வர் இப்படி ஒரு மூடத்தனத்தை செய்வது மடமையல்லவா? இதை பல பேர் சுட்டிக் காட்டியும் எவருக்கும் மதிப்புக் கொடுக்காமல் மேலும் பல சிலைகளை மாநிலம் முழுக்க நிறுவப் போகிறாராம்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முலாயம் சிங் யாதவ் 'மாயாவதி தனக்கு வைத்துள்ள சிலைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 50,60 புல்டோசர்களை வைத்து மாநிலம் முழுவதும் உள்ள மாயாவதியின் அனைத்து சிலைகளையும் ஒரே நேரத்தில் இடித்து தகர்த்து தரைமட்டமாக்குவோம்' என்று அறிவித்துள்ளார். மக்களின் வரிப் பணத்தில் இது போன்ற சிலைகளை நிறுவுவதும் மற்றொரு ஆட்சி வந்து சிலைகளை உடைப்பதும் கேலிக் கூத்தாக இருக்கிறதல்லவா? சாமான்ய மனிதன் உணவுக்கும் உடைக்கும் அன்றாடம் அல்லாடிக் கொண்டிருக்கிறான். இந்த திமிர் பிடித்த அரசியல் வாதிகள் தங்களின் செல்வாக்குக்காக மக்களின் உயிரோடு விளையாடுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க காரைக்குடியைச் சேர்ந்த சிவலிங்கம், இராமன் என்ற இரு பி.ஜே.பி தொண்டர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலையை உடைத்து கலவர நெருப்பை பற்ற வைத்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது போல் நகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புலனாய்வு செய்து பி.ஜே.பி யைச் சேர்ந்த சதிகாரர்கள் இருவரையும் கைது செய்து கலவர நெருப்பை அணைத்து விட்டனர். சதிகாரர்களுக்கு பின்னணியில் பி.ஜே.பி யின் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா இருப்பதாக சொல்லப்படுகிறது.

கருத்தோடு மோதலாம், கொள்கையோடு மோதலாம்! அதை விடுத்து சிலைகளை உடைத்து கலவரம் ஏற்ப்படுத்தி அதில் கட்சியை வளர்ப்பதுதான் நியாயவான்களின் செயலா? இது போன்ற தகிடுதத்தங்கள் வட நாட்டில் வேண்டுமானால் போனியாகலாம். தென்னாட்டு மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளார்கள் என்று ராஜாக்கள் உணர்ந்து கொண்டால் சரி!

Monday, August 11, 2008

தாரே ஜமீன்பர் - பட விமர்சனம்

நேரம் கிடைக்கும் போது எப்போதாவது திரைப் படம் பார்ப்பதுண்டு. சில மாதம் முன்பு வெளியான அமீர்கானின் தாரே ஜமீன்பர் படம் சமீபத்தில் பார்த்தேன். மன வளர்ச்சி குன்றிய ஒரு மாணவன் எப்படி பாதிக்கப்படுகிறான்? அதற்க்கான காரணம் என்ன என்பதை அமீர்கான் அழகாக விளக்கியுள்ளார்.

தந்தைக்கோ 'இவன் பெரியவனாகி இவனுக்கு நாம் சம்பாதித்து போட வேண்டுமோ?' என்ற கவலை.

தாய்க்கோ 'தன் மூத்த மகனைப் போல் புத்திசாலியாக இளைய மகன் இல்லையே' என்ற கவலை.

தமயனுக்கோ 'தன்னைப் போல் தன் சகோதரன் புத்திசாலியாக இல்லையே' என்ற ஏக்கம்.

ஆசிரியரான அமீர்கானுக்கோ 'இவனுள் புதைந்துள்ள திறமைகளை எப்படி வெளியுலகுக்கு கொண்டு வருவது' என்ற அக்கறை.

இவை அனைத்தையும் ஒன்றாக்கி சிக்கலில்லாமல் ஒரு அழகிய திரைப்படத்தை கொடுத்துள்ளார் அமீர்கான்.

இப்படத்தில் சிறுவனாக வேடமேற்றிருக்கும் பொடியனை ஷாருக்கானோடு ஒப்பிட்டு சகாரா சானலில் ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார்கள். நம் ஊரில் ஒரு கமலஹாசனைப் போல் பாலிவுட்டில் ஒரு திறமை மிக்க அமீர்கான். இது போன்ற பயனுள்ள படங்கள் இன்னும் அதிகம் எடுத்து ஆஸ்கார் விருதையும் தட்டிச் செல்ல அமீர்கானை வாழ்த்துவோம்

Saturday, August 09, 2008

கிருஸ்ணரின் கோவர்த்தன மலையை இடிக்கும் பி.ஜே.பி அரசு!

சேது சமுத்திர திட்டம் தமிழகத்தை வளர்ச்சி அடையச் செய்யும் ஒரு திட்டம். இந்தத் திட்டத்தை முடக்குவதற்க்காக இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக சொலலி பி.ஜே.பி அரசியல் செய்து வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை பி.ஜே.பி அரசியல் ஆதாயத்திற்க்காக கெடுத்து வருகின்றது என்று சொன்னால் சில பேர் இதை நம்ப மறுத்தனர். இவர்களை நம்பச் செய்யும் வகையில் பி.ஜே.பி இப்போது நடந்து கொண்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலை என்று ஒரு மலை உள்ளது. இந்த மலையை கிருஷணர் தனது விரலால் தூக்கி நிறுத்தியதாக இந்துக்கள் நம்புகின்றனர். சில புராணங்களிலும் இந்தச் செய்தி பதிவு செய்யபபட்டுள்ளது. இந்துக்களால் மதிக்கப்படும் இந்த மலையைத்தான் பி.ஜே.பி அரசு இப்போது தகர்த்து வருகிறது. இராமர் எப்படி அவதாரமோ அது போன்ற ஒரு அவதாரம்தான் கிருஷணர். இராமர் பாலத்தை காப்பதற்க்காக பி.ஜே.பி போராடுகிறது என்றால் அதே அக்கறையை கோவர்த்தன மலையைக் காப்பதிலும் காட்ட வேண்டும். ஆனால் பி.ஜே.பி அரசு காட்டவில்லை. கனிம வளம் நிறைந்த அந்த மலையை தகர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று ராஷட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பினால் அதற்க்கு பி.ஜே.பி யினர் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள். கோவர்த்தன மலையை தகர்த்தால் பி.ஜே.பிக்கு பணம் கிடைக்கும். இராமர் பாலம் பிரச்னையைக் கிளப்பினால் அரசியல் ஆதாயம் கிடைக்கும்.

அதனால்தான் பி.ஜே.பி இதைச் செய்து வருகிறதே தவிர பக்தியோ நல்லெண்ணமோ இதில் பி.ஜே.பி க்கு இல்லை என்பதுதான் யதார்த்த உண்மை. அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது பாலம் விவகாரத்தை கிளப்பி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தாலும் சரி, எதிலுமே பி.ஜே.பி க்கு சொந்த ஆதாயம் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் பி.ஜே.பி அதில் தலையிடும். இல்லையென்றால் நழுவிக் கொள்ளும். இதை தனது ஒவ்வொரு நடவடிக்கையின் மூலம் பி.ஜே.பி நிரூபித்திருக்கிறது. அதற்க்கு ஒரு சான்றுதான் கோவர்த்தன மலையை இடிக்கும் பி.ஜே.பி அரசின் செயல். இதை எல்லோரும் உணர்ந்தால் நாடு நலம் பெறும்.

நன்றி - உணர்வு

Monday, August 04, 2008

துனீசிய நாட்டவருடன் ஒரு நேர்காணல்!

துனீசிய நாட்டவருடன் ஒரு நேர்காணல்!

ராசிதுல் கனூசி - துனிசியாவின் இஸ்லாமிய இயக்கமான 'ஹர்கத்துந் நஹ்தா' வின் தலைவர் ஆவார். இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர். அடக்குமுறை ஆட்சியாளர்களால் துனீசியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டவர். தற்போது இலண்டனில் வசித்து வரும் அவர் அண்மையில் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்காக கேரளா வந்திருந்த போது அளித்த நேர்காணல்.

கேள்வி : துனீசியாவில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள்? சிறைக்காலத்தில் துன்புறுத்தப்பட்டீர்களா?

ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன். குறிப்பிடத்தக்க அளவிலான கொடுமைகள் எதனையும் அனுபவிக்கவில்லை. ஆனால் பக்கத்தில் இருந்த அறைகளில் எனது சகோதரர்கள் துன்புறுத்தப்படுகின்ற அலறலைக் கேட்டுள்ளேன். எங்களின் இரு ஊழியர்களைத் தூக்கில் தொங்கவிட்டுக் கொன்றனர். அதிபர் புர்கீபாவின் காலத்தில் இது நடைபெற்றது. முழுமையான இஸ்லாமிய விரோதியாக இருந்தார் அதிபர் புர்கீபா. புனித ரமளானில் வெளிப்படையாக மது அருந்திவிட்டு, நோன்பு நோற்பது நாட்டின் பொருளாதார பின்னடைவுக்குக் காரணமாகும் எனக் கூறிய தான்தோன்றி அவர். அரபி மொழியையும் ஹிஜாப் முதலான இஸ்லாமிய அடையாளச் சின்னங்கள் அனைத்தையும் தடை செய்த சர்வாதிகாரி.

ஆனாலும் கூட அக்காலத்தில் சிறையில் தொழுவதற்க்கும் வாசிப்பதற்க்கும் சுதந்திரம் இருந்தது. 'இஸ்லாமிய அரசில் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகள்' எனும் நூலை நான் சிறையில் இருந்தபோதுதான் எழுதினேன். ஆனால் இன்று சிறையில் அந்த சுதந்திரம் கூட இஸ்லாமிய இயக்கத்தினருக்கு மறுக்கப் பட்டுள்ளது. முப்பதாயிரம் இஸ்லாமிய இயக்கத்தினர் இன்றும் சிறையில் உள்ளனர். அவர்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதும் கொல்லப்பட்டு ஷஹீதாவதும் சாதாரண நிகழ்வுகளாக மாறிப் போயுள்ளன.

கேள்வி: இப்போது உங்கள் மீதான துனீசிய அதிகாரிகளின் அணுகுமுறை எப்படி உள்ளது?

எனக்கு எதிராக உலகம் முழுவதும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால்தான் அமெரிக்காவுக்கும் பெரும்பான்மையான அரபு ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.

கேள்வி: பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ள உங்களுக்கு அங்கு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா?

பிரிட்டன் சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது. சியோனிஸ்டுகளும் டெய்லி டெலிகிராஃப் போன்ற நாளிதழ்களும் சில சமயங்களில் எனக்கு எதிராக திரும்புவதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் பிரிட்டன் நீதிமன்றத்தை அனுகுவது என்னுடைய வழக்கம். நீதிமன்றம் எனக்கு ஆதரவாக தீர்ப்பளித்து குற்றம் சாட்டியவர்களிடம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

கேள்வி: அண்மையில் காண்டர்பரி ஆர்ச் பிஷப் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் பிரிட்டனில் இஸ்லாமிய ஷரீஅத்தின் சில சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

பிரிட்டன் போன்ற ஒரு நவீன நாட்டிற்க்குத் தேவையான சட்டங்கள் இஸ்லாமிய ஷரீஅத்தில் உள்ளன எனும் எண்ணத்தை ஏற்ப்படுத்த, அதுவும் முஸ்லிம் அல்லாத ஒருவரால் கூட புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தைப் பரவலாக்க அவரது அறிக்கை உதவியுள்ளது. இதற்க்காக தேவாலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் எதிர்ப்பை அவர் எதிர்க் கொள்ள நேரிட்டது. ஆனாலும் அதனை அவர் திரும்பப் பெறவில்லை. சபையிலிருந்து அவரை வெளியேற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதிலும் 160 பேரில் 62 பேர் மட்டுமே அதனை ஆதரித்தனர்.

இப்போது கூட சில இஸ்லாமிய சட்டங்களை பிரிட்டன் ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய வங்கிகளை பிரிட்டன் நடைமுறைப்படுத்தி வருகிறது. வட்டி இல்லா இஸ்லாமியப் பொருளாதார முறையை அந்த நாடு ஏற்றுக் கொண்டுள்ளது என்பதற்க்கான ஆதாரம் தானே இது.

கேள்வி: அண்மைக் காலமாக முஸ்லிம் உலகில் வளர்ந்து வருகின்ற தீவிரவாத - பயங்கரவாத செயல்களைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள்? பிரிட்டனில் 7-07 தாக்குதல், செப்டம்பர் 11 தாக்குதல் ஆகியன சில உதாரணங்கள். செப்டம்பர் 11 தாக்குதலில் அல்காயிதா இல்லை எனும் வாதத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பிரிட்டனில் நடைபெற்ற 7-07 தாக்குதல் ஒரு துயரம்தான். அல்காயிதாதான் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நடவடிக்கை மிகவும் முட்டாள்தனமாக இருந்தது. இஸ்லாத்திற்க்கும் முஸ்லிம்களுக்கும் அதன் மூலம் பெரிய இழப்புகள்தான் ஏற்பட்டன.

செப்டம்பர் 11 நிகழ்வும் வேறுபட்டதல்ல. இஸ்லாத்தின் நன்மதிப்பைக் களங்கப்படுத்துவதில் அந்த நிகழ்வு முக்கிய பங்கை வகித்துள்ளது.

கேள்வி: பாலஸ்தீன பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல் ஹமாஸின் எதிர்காலம் குறித்து...?

ஹமாஸ் காஸாவைக் கைப்பற்றிய நிகழ்வு பாராட்டத்தக்கது. அவர்கள் முன் வேறு வழிகள் இருக்கவில்லை. நிலை பெறத் தகுதியானவர்கள் அவர்கள். ஃபத்ஹின் கதை முடிந்து விட்டது. அவர்களின் தலைவர் தஹ்லான் அரண்மனையிலும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாஅகதி முகாமிலும் வாழ்கின்றனர். அதுதான் ஹமாஸின் அந்தஸ்து.

உடலில் சில வைரஸ் கிருமிகள் புகுந்தால் உடலை உசுப்பி விடும் என்பதைப் போல இஸ்லாமிய சமூகத்தை உத்வேகம் பெறச் செய்யக் கூடிய வைரஸ்தான் இஸ்ரேல். இஸ்ரேலின் பிறப்பும் அந்த நாடு நடத்திக் கொண்டிருக்கிற அடக்கு முறைகளும் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குக் காரணமாய் அமைந்துள்ளன. முஸ்லிம் உலகில் இஸ்லாமிஸ்டுகளையும் மதசார்பற்றவாதிகளையும் ஒருங்கினைத்த விஷயம்தான் பாலஸ்தீன பிரச்னை. இஸ்ரேல் இப்போது மரணப்படுக்கையில் கிடக்கிறது. மேற்குலகத்தால் அதனை அதிக காலம் தாங்கிக் கொண்டிருக்க முடியாது.

கேள்வி: இந்தியாவில் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும்?

எட்டு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிறகும் இதர மதங்களைச் சேர்ந்த மக்களிடையே தேவையான விதத்தில் தங்களின் இலட்சியக் கொள்கையை எடுத்துரைக்க இயலாமல் போனது என்னை ஆச்சரியப் படுத்துகிறது. இது குறித்து மஸ்ஊத் ஆலம் நத்வி விளக்கமாக எழுதியதை நான் படித்துள்ளேன். பன்மைச் சமூகத்தில் வாழ்கின்றபோது இதர மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்ப்படுத்த முஸ்லிம் சமூகத்தால் இயல வேண்டும்.

கேள்வி: பாசிச சக்திகள் இந்திய முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றபோது பதிலுக்கு பதிலாக அதே போன்று எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அத்தகைய எதிர்த்தாக்குதல்கள் பாதிப்பையே ஏற்படுத்தும். முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால அதை அரசை நிர்பந்தம் செய்து அரசின் மூலமே சாதிக்க முயல வேண்டும். சுயமாகச் செய்யக் கூடாது. இந்தியா போன்ற வலிமையான ஜனநாயக நாட்டில் அந்த ஜனநாயத்தைப் பயன்படுத்தியே நம்மை நாம் தற்க்காத்துக் கொள்ள வேண்டும்.

சந்திப்பு : டாக்டர் அப்துல் சலாம்.